-தமிழ்நேசன் த.நாகராஜ்

பார் புகழும் பல தமிழர் வாழ்ந்த மண் இது!
அதை நீ அறியாமலே இருந்துவிட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு                                                                tamil kid
யார் சொல்வது ?

மனித மேம்பாடும் பண்பாடும் கொண்ட மொழி இது!
அதை நீ உணராமலே இருந்துவிட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

பல்வேறு திட உணவு முறையைக் கண்டு தந்த இனம் இது!
அதை நீ ருசிக்கவே மறந்துவிட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

இன்று கற்பனையும் காணாத கட்டுமானத்தை அன்றே
நமது பாட்டன் பூட்டன் கட்டியதை
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

வீரத் தீரக் கலை அறிவைக் கற்றுத்தந்த இனம் இது!
அதை நீ பதம் பார்க்கவே நினைக்கா விட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

யார் சொல்வது ?
தமிழா
யார் சொல்வது ?

இன்பத் தமிழ்மொழி  நமது உயிர் மூச்சாகும்
அதை அறியாமல் மடியாதே என
நான் சொல்கிறேன்
தமிழா
நான் சொல்கிறேன்!
வாழ்க தமிழ்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *