Blog

  • எழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்] (2)

    image (1)

    அங்கம் -2 பாகம் -11

    மேலங்கியை மாட்டு! எனக்கு மகுடத்தைச் சூட்டு!
    மேலோங்கி எழுகிற தெனக்குள் தெய்வீக வேட்கை! …

    (கிளியோபாத்ரா)

    கடவுளுக் களிக்கும் சுவைத் தட்டு
    மடந்தை யவள் என்று நானறிவேன்,
    உடல் மீது பிசாசு அவளுக்கு
    ஆடை அணியா விட்டால்!

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

    “ஆத்ம உள்ளுணர்வு கைகளோடு ஒன்றி உழைக்கா விட்டால், உன்னதக் கலைகளைப் படைக்க முடியாது.”

    “மேதையர் சில சமயங்களில் பணிப்பாரம் குறைவாக உள்ள போது மேலானவற்றைச் சாதிப்பார்! அப்போதுதான் அவர் தமதரிய கண்டுபிடிப்புகளைச் சிந்தித்து, ஓர் உன்னதக் கருவை விரிவாக்கி அவரது கைகள் அதனைப் பிறகு ஓவியமாக்கி வெளிப்படுத்து கின்றன.”

    லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519)

    “பளிங்குக் கல்லில் ஒரு தேவதையை (ஞானக் கண்ணில்) நான் பார்த்தேன். அதனைக் கல்லில் செதுக்கி அவளுக்கு விடுதலை அளித்தேன்.”

    “அழகுணர்ச்சியைப் புறக்கணிப்பது போல அல்லது அதைப் பற்றி அறிய மறுப்பது போல, கவர்ச்சியான ஒன்று மாந்தருக்குத் துயர் கொடுப்பது வேறு எதுவு மில்லை!”

    மைக்கேலாஞ்சலோ ரோமானிய ஓவிய மேதை (1475-1564)

    ++++++++++++++++++

    கதைச் சுருக்கம்

     

    கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

    முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

    ++++++++++++++++

    நேரம், இடம்:

    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

     

    நாடகப் பாத்திரங்கள்ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

    காட்சி அமைப்பு

     

    கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள்.

    கிளியோபாத்ரா: [அருகில் நெருங்கி மிக்கக் கனிவுடன்] ஆனாலும் அவன் உங்கள் மகன்! ரோமானிய மாது கல்பூர்ணியா அளிக்க முடியாத ஆண் பரம்பரையை, எகிப்தின் கிளியோபாத்ரா ஆக்கித் தருகிறாள்! மாவீரர் சீஸரே! நீங்கள் ரோமுக்கு மீள்வதைச் சற்று தள்ளிப் போடுங்கள்! எனக்கு உங்கள் கையால் எகிப்து மகாராணி என்று முதலில் மகுடம் சூட வேண்டும்! என் மாளிகையில் எனது சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும்! எனக்குப் பிறக்கப் போகும் ஆண்மகவை உங்கள் ஆசைக் கரங்களில் முத்தமிடக் கொடுத்து நான் ஒப்படைக்க வேண்டும்! அதன் பிஞ்சு வாயில் தவழும் புன்னகையை நீங்கள் மனதில் படமெடுத்துக் கொண்டு ரோமாபுரிக்குச் செல்ல வேண்டும்.

    ஜூலியஸ் சீஸர்: அப்படியே செய்கிறேன். எனக்கு ஆண்பிள்ளை வேண்டுமென்று வெகு நாட்களாக ஆசை யிருப்பது உண்மை. அந்த ஆசையை என் மனைவி கல்பூர்ணியா பூர்த்தி செய்ய முடியவில்லை. அந்த ஆசையை நீ நிறைவேற்றுவாய். ஆனால் என் ஏக மகனை ஆசை நாயகியின் மோகப் பிள்ளை எனப் பலர் ஏசுவதை நான் விரும்பவில்லை.

    கிளியோபாத்ரா: அந்தக் குறையை நிவர்த்தி செய்கிறேன். உங்களை நான் மணந்து நமக்குப் பிறக்கும் பிள்ளை சட்டப்படி உதித்த உங்கள் மகனென்று சரித்திரம் சொல்ல வைப்பேன். கிளியோபாத்ராவுக்கும், சீஸருக்கும் பிறந்த பட்டத் திளவரசன் என்று எகிப்தின் மாந்தர் பாராட்டுவார்! ரோமாபுரியின் எதிர்கால வேந்தன் என்று ரோமானியர் கொண்டாடுவார்! அது மட்டுமல்ல, உங்களை நான் எகிப்தின் மன்னராகவும் அறிவித்து விடுகிறேன்!

    ஜூலியஸ் சீஸர்: [மன மகிழ்ச்சியுடன் ஆனால் சற்று தயக்கமுடன்] கண்ணே கிளியோபாத்ரா! என்னை மணந்து நீ ஓர் ஆண்மகனைப் பரிசாக அளிப்பதே எனக்குப் போதும்! நான் ஒரு ரோமன்! நான் ·பாரோ கடவுள்களின் பரம்பரையில் வந்தவன் அல்லன்! என்னை எப்படி எகிப்துக்கு மன்னன் ஆக்குவாய் நீ! அந்த மதிப்பு எனக்குத் தேவையு மில்லை! எகிப்த் ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! ரோமாபுரிக்கு யார் அதிபதியாயினும் அவரே எகிப்துக்கும் தளபதி! அதை நீ அறிவிக்கத் தேவையில்லை! பிறக்கும் மகனைப் பார்த்த பிறகே நான் ரோமாபுரிக்குப் போக ஏற்பாடு செய்யவேன். அங்கே நிரம்ப வேலை இருக்கிறது எனக்கு!

    கிளியோபாத்ரா:  ஃபெரோ மன்னரின் பரம்பரைப் பாவையான நான், உங்களை எகிப்துக்கு மன்னராக்குவேன், கவலைப்பட வேண்டாம். அலெக்ஸாண்டிரியாவில் சில நாட்கள் ஓய்வெடுங்கள். மாபெரும் வேந்தர் சீஸரின் அருகில் நான் உள்ள போது, நீங்கள் ஒரு வேலையும் செய்யத் தேவை யில்லை! மன்னர்களுக்கு வேலை யில்லை! மன்னர்கள் வேலை செய்யக் கூடாது!

    ஜூலியஸ் சீஸர்: யார் சொல்வது, மன்னருக்கு வேலை யில்லை என்று? வாலிப ராணி கிளியோபாத்ராவுக்கு வேலை யில்லை! அதே போல் வயோதிக சீஸருக்கும் வேலை யில்லை என்பதா? வேடிக்கையாக இருக்கிறதே!

    கிளியோபாத்ரா: எகிப்தில் என் தந்தை சில ஆண்டுகள் மன்னராக இருந்தார்; அவர் என்றைக்கும் வேலை செய்ததில்லை. அவர் மாபெரும் மன்னரே! ஆனால் மிகவும் பொல்லாதவர்! புரட்சி செய்து நாட்டைப் பிடுங்கி அரசாண்ட, என் மூத்த சகோதரியின் கழுத்தை அறுத்தவர்!

    ஜூலியஸ் சீஸர்: அப்படியா? பிறகு நாட்டை மீண்டும் எப்படிக் கைப்பற்றினார், உன் தந்தை?

    கிளியோபாத்ரா: [கண்களில் ஒளிவீசப் புன்னகையுடன்] எப்படி என்று சொல்லவா? பாலை வனத்தைக் கடந்து பராக்கிரமம் மிக்க ஒரு மன்மத வீரன் பல குதிரைப்படை ஆட்களோடு வந்தார்! தமக்கையின் கணவரைக் கொன்றார்! தந்தையை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமரச் செய்தார்! அப்போது எனக்கு வயது பன்னிரண்டு! அந்த வாலிபர் என் கண்ணுக்குள்ளே நின்று காட்சி அளிக்கிறார்! மீண்டும் இப்போது வந்தால் ஆனந்தம் அடைவேன்! நானிப்போது பட்டத்து அரசி! அப்படி வந்தால் அவரை என் கணவராக்கிக் கொள்வேன்!

    ஜூலியஸ் சீஸர்: [ஆர்வமுடன்] அப்படியானால் என்கதி என்னவாகும்? நான் உன்னைத் திருமணம் செய்யப் போகிறேனே! ஆண்மகவு ஒன்றைக் கூட எனக்குப் பரிசாக அளிப்பதாகக் கூறுகிறாய்!

    கிளியோபாத்ரா: அந்த வாலிபர் என் வயதுக் கேற்றவர்! நீங்கள் என் வயதுக்கு மீறிய வயோதிகர்! பிறக்கும் என் ஆண்மகவின் தந்தை நீங்கள்! ஆனால் எனக்குப் பொருத்த மில்லாதவர்! பிறக்கப் போகும் நமது மகனுக்குத் தந்தை சீஸர் என்பதை ரோம சாம்ராஜியத்துக்கு அறிவிக்கவே உங்களைத் திருமணம் செய்ய உடன்படுகிறேன்! ரோமாபுரியில் உங்கள் மனைவி கல்பூர்ணியா, உங்களுக்குக் காத்துக் கொண்டிருக்கிறாள். வயோதிகரா அல்லது வாலிபரா என்று என்னைக் கேட்டால், யாரை நான் கணவனாக தேர்ந்தெடுப்பேன்? ஐயமின்றி ஓர் வாலிபரைத்தான்!

    ஜூலியஸ் சீஸர்: [சட்டென] உன் கற்பனை வாலிபனும் ஏற்கனவே திருமணம் ஆனவன்தான்!

    கிளியோபாத்ரா: அப்படியா? மீன் குஞ்சிக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கத் தேவை யில்லை! அவளுடைய இடத்தைப் பிடிக்க எனக்குத் தெரியும். அந்த வாலிபர் என் கண்வலையில் சிக்கி விட்டால், மீண்டுமவர் தன் மனைவியைக் கண்டு கொள்ள மாட்டார்! என் மந்திரக் கண்களின் தந்திரப் பிடியிலிருந்து அவர் தப்ப முடியாது! விளக்குத் தீயை ஆராதிக்கும் எந்த விட்டிலும் தீபத்திலே எரிந்து சாம்பலாகும்! [மிக்க ஆர்வமுடன்] அவரது உண்மைப் பெயரென்ன? உங்களுக்குத் தெரியுமா? மீண்டும் அவரை அலெக்ஸாண்டிரியாவுக்கு அழைத்து வரச் செய்ய முடியுமா?

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] முடியும், என்னால் முடியும். முதலில் உன் தந்தைக்கு உதவி செய்ய அந்தக் கவர்ச்சி வாலிபனை அனுப்பியவன் நான்தான்!

    கிளியோபாத்ரா: [சீஸரை நெருங்கி] அப்படியா? அந்த வசீகர வாலிபனை உங்களுக்குத் தெரியுமா? அவர் பெயரென்ன கூறுவீரா? உங்களை விட வயதில் சிறியவர்தானே! உங்களுடன் இப்போது வந்திருக்கிறாரா?

    ஜூலியஸ் சீஸர்: இல்லை! என்னுடன் வரவில்லை. ஆம், அவன் என்னை விட வயதில் சிறியவன்தான். அந்த வாலிபன் பெண்களின் வசீகரன்! உன்னைப்போல் அவன்மீது கண்வைத்திருக்கும் பெண்கள் அநேகம்! நீ அவனை மோகிக்கிறாய்! அவனுக்கு உன்னைப் பிடிக்குமா என்பது எனக்குத் தெரியாது! வசீகர வாலிபருக்கு ஒரு வனிதைமேல் மட்டும் வாஞ்சை உண்டாகாது! அவருக்கு ஆயிரம் வனிதைகள் உள்ளார்! ஆயிரத்தில் ஒருத்தியாக நீ யிருக்க விரும்புகிறாயா?

    கிளியோபாத்ரா: நான் ஆயிரத்தில் ஒருத்தியான ஆசைநாயகி யில்லை! ஆயிரத்தில் முதல்வி, அவரது ஆசை மனைவியாக வாழ்வேன்! அவர் என்னைக் காதலித்தால், அவரை என் வசப்படுத்தி மற்ற ஆசை நாயகிகளைக் கொல்லும்படிச் செய்வேன். சொல்லுங்கள் அவர் பெயரை! சொல்லுங்கள் எங்கிருக்கிறார் என்று! நான் அவரை நேசிக்கிறேன். அவர் என்னை விரும்புகிறாரா என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஜூலியஸ் சீஸர்: அவன் ஒரு காப்டன். குதிரைச் சவாரி வீரன்! ரோமாபுரிப் பெண்டிரின் கனவு மைந்தவன் அவன்!

    கிளியோபாத்ரா: [கெஞ்சலுடன்] அவர் உண்மைப் பெயரென்ன கூறுங்கள்! அவர் என் தெய்வம். நான் அவரை அழைப்பது, “ஹோரஸ்” [*1] என்றுதான்! எங்களுடைய கடவுள்களில் ஹோரஸ்தான் மிக்க எழிலான கடவுள். ஆனால் அவரின் உண்மைப் பெயரை அறிய ஆவல்.

    ஜூலியஸ் சீஸர்: அவன் பெயர்தான் மார்க் ஆண்டனி! ரோமின் மாவீரன் மார்க் ஆண்டனி! என் பிரதமச் சீடன், மார்க் ஆண்டனி! எனக்காக உயிரைக் கொடுக்கவும் அஞ்சாத மார்க் ஆண்டனி!

    கிளியோபாத்ரா: [மனம் நெகிழ்ந்து இசையோடு உச்சரித்து] ஆஹா! மார்க் ஆண்டனி! என்ன அழகிய பெயர்! மார்க் ஆண்டனி! உங்களுக்குச் சீடன்! ஆனால் எனக்குத் தேவன்! மார்க் ஆண்டனி! உங்களுக்காக உயிரைக் கொடுப்பவர்! ஆனால் மார்க் ஆண்டனிக்காக நான் உயிரைக் கொடுப்பேன்! எங்கே உள்ளார் மார்க் ஆண்டனி? அழைத்து வாருங்கள் மார்க் ஆண்டனியை! சீஸர், கனல் பற்றி எரியும் நெஞ்சில், பாலை வார்த்தீர்கள்! அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்து என்னைக் காண ஏற்பாடு செய்வீரா?

    ஜூலியஸ் சீஸர்: [சற்று தயக்கமுடன்] மார்க் ஆண்டனி ரோமாபுரியில் உல்லாசமாக இருக்கிறான்! அலெக்ஸாண்டிரியாவுக்கு ஆண்டனியை அழைத்து வருபது எளிய தில்லை! நான் போனால்தான் அவன் வருவான். ரோமாபுரிக்கு நான் போய்த்தான் அவனை அனுப்ப வேண்டும்! நான் ரோமுக்குப் போனால் எகிப்துக்குத் திரும்ப மாட்டேன்! ஆண்டனி எகிப்துக்கு வந்தால், அவன் ரோமுக்கு மீள மாட்டான்!

    *********************

    [*1] “ஹோரஸ்” [Horus is the Sun God of the Egyptians]

    +++++++++++++++++++

    அங்கம் -2 பாகம் -12

    “எனக்கு முன்னால் நடக்காதீர்; உங்களை நான் பின்பற்றப் போவதில்லை! என் பின்னால் வர வேண்டாம்; ஏனெனில் உம்மை நான் வழிநடத்தப் போவதில்லை! வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டும்தான் உள்ளது: நேசிப்பதும், நேசிக்கப் படுவதும்!

    “கலைப் படைப்பாளியின் குறிநோக்கு, மனித உள்ளத்துக்கு ஒளி பாய்ச்சுவது.”

    ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளர் [George Sand (1804-1876)]

    ஆண்டனி மீண்டும் என் தேவன் ஆனதால்,
    நான் கிளியோபாத்ரா மறுபடியும்!….
    வண்ண உடையில் அவர் மாட்டி யிருப்பது,
    வாலிப ரோஜா மலர்! …

    (கிளியோபாத்ரா)

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

    குறுகிய பூமியில் அவர் (சீஸர்),
    பெருநடை போடுகிறார்! ஓ மனிதா!
    கீழான காலாட் படைநாம் அவர் நீள்
    காலிடைப் புகுந்து தலை நீட்டுகிறோம்,
    சுய மதிப்பினை யிழந்து!
    மனிதரே அதிபதி! சில வேளை,
    அவரது ஊழ் விதிக்கு!
    தவறு வானத்துக் கிரகங்களில் அல்ல,
    அருமை புரூட்டஸ்! நம்மிடமே உள்ளது!

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

    நேரம், இடம்:

    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

    நாடகப் பாத்திரங்கள்:

    ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

    காட்சி அமைப்பு:

    கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள்.

    கிளியோபாத்ரா: [மனம் நெகிழ்ந்து இசையோடு உச்சரித்து] ஆஹா! மார்க் ஆண்டனி! என்ன அழகிய பெயர்! மார்க் ஆண்டனி! உங்களுக்குச் சீடர்! ஆனால் எனக்குத் தேவர்! மார்க் ஆண்டனி! உங்களுக்காக உயிரைக் கொடுப்பவர்! மார்க் ஆண்டனிக்காக நான் உயிரைக் கொடுப்பேன்! எங்கே உள்ளார் மார்க் ஆண்டனி? அழைத்து வாருங்கள் மார்க் ஆண்டனியை! சீஸர், கனல் பற்றி எரியும் நெஞ்சில், பாலை வார்த்தீர்கள்! அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்து மார்க் ஆண்டனி என்னைக் காண ஏற்பாடு செய்வீரா?

    ஜூலியஸ் சீஸர்: [சற்று தயக்கமுடன்] மார்க் ஆண்டனி ரோமாபுரியில் உல்லாசமாக இருக்கிறான்! அலெக்ஸாண்டிரியாவுக்கு ஆண்டனியை அழைத்து வருபது எளிய தில்லை! நான் போனால்தான் அவன் வருவான். ரோமாபுரிக்கு நான் போய்த்தான் அவனை அனுப்ப வேண்டும்! நான் ரோமுக்குப் போனால் எகிப்துக்குத் திரும்ப மாட்டேன்! ஆண்டனி எகிப்துக்கு வந்தால், அவன் ரோமுக்கு மீள மாட்டான்! எனக்கு வேலை இருக்கிறது. நான் என் அறைக்குப் போக வேண்டும்.

    கிளியோபாத்ரா: [கெஞ்சிக் கொண்டு] என்னருகில் அமர்ந்து, என்னுள்ளம் குளிரக் கொஞ்சம் மார்க் ஆண்டனியைப் பற்றிப் பேசுங்கள்.

    ஜூலியஸ் சீஸர்: நான் போகாவிட்டால் டாலமியின் படைக் காவலர் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்திலிருது ரோமானியப் படையை வெட்டிவிடுவார்!

    கிளியோபாத்ரா: [விறுவிறுப்புடன் பதறி] டாலமியே செத்த பிறகு அவனுடைய படையாட்கள் எப்படி ரோமானியரைத் தாக்க முடியும்?

    ஜூலியஸ் சீஸர்: [சட்டென வெகுண்டு] டாலமி செத்த பிறகு அவரது மெய்க்காப்பாளி போதினஸ், போர்த் தளபதி அக்கிலஸ் ஆகியோர் தப்பி ஓடிவிட்டதாக அறிந்தேன். அவர்கள் அலெக்ஸாண்டியாவில் ரோமானிய ஆக்கிரமிப்புப் படையினருக்குத் தொல்லை கொடுத்து வருவதாகக் கேள்விப் படுகிறேன். … [வாயில் புறம் பார்த்து] .. அதோ! என் ரோமானியப் படைவீரன் ஒருவன் நொண்டிக் கொண்டு வருகிறான்! முகத்தைப் பார்த்தால் மகிழ்ச்சி ஊட்டும் செய்தியாகத் தெரிய வில்லை. [சீஸர் பதறிக் கொண்டு காவலனைக் கனிவுடன் நோக்குகிறார்]

    படைவீரன்: [காயங்களைக் காட்டி] பிரிட்டானஸ்! பாருங்கள் என்ன நடந்து விட்டதென? இனியென்ன செய்வீர்? [சீஸரைப் பார்த்து] ஜெனரல், பாருங்கள் என் படுகாயத்தை! காயப் பட்டது நான்! தாக்கப் பட்ட படைவீரர் இருவர் மாண்டு போனார் அங்காடி வீதியில்!

    ஜூலியஸ் சீஸர்: [கவனமுடன்] ஏன் அவர்கள் தாக்கப் பட்டார்? எப்படி உனக்குக் காயம் உண்டானது?

    படைவீரன்: அக்கில்லஸ் தலைமையில் படைக்குழு ஒன்று அலெக்ஸாண்டிரியாவில் நுழைந்தது. உடனே எகிப்திய மக்கள் அவருடன் சேர்ந்து, ரோமானியரைத் தாக்க ஆரம்பித்தனர். ரோமானியர் உதைக்கப் பட்டார். எனக்குக் கிடைத்த உதையில் நான் தப்பினேன். மற்ற இருவர் மாண்டு போனார்.

    ஜூலியஸ் சீஸர்: உன்னுயிர் தப்பியதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். … [படைவீரனைப் பார்த்து] உள்ளே சென்று காலுக்கு மருந்து போட்டுக்குள். [படைவீரன் உள்ளே செல்கிறான்.]

    [சீஸரின் படைவீரர் லெஃப்டினென்ட் ரூஃபியோ வேகமாக வருகிறார்]

    ரூஃபியோ: [ஆங்காரமாக] சீஸர்! மகா அவமானம் நமக்கு! நமது ஆக்கிரமிப்புப் படையை எகிப்த் படை அடைத்துச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. யாருமிதை எதிர்பார்க்க வில்லை! உயிர்ச் சேதமும், பொருட் சேதமும் உண்டாகும்!

    ஜூலியஸ் சீஸர்: ரூ·பியோ! நமது கப்பல்கள் சில மேற்குத் துறைமுகத்தில் உள்ளன. அவற்றில் எல்லாம் தீவைத்து விடுங்கள்!

    ரூஃபியோ: [ஆச்சரியமுடன்] என்ன கப்பல்களை எரித்து விடவா?

    ஜூலியஸ் சீஸர்: ஆம் அவற்றை எரித்து விடு! ஆனால் கிழக்குத் துறைமுகத்திலிருக்கும் ஒவ்வொரு கப்பலையும் பயன்படுத்தி ·பரோக்களின் படகுகளைக் கைப்பற்று. அந்த தீவையும் பிடித்து விடு! விடாதே! பாதிப் படையினரை கடற்கரையில் காவல் வை. மீதிப் பேரை வெளியே படகில் நிறுத்து.

    ரூஃபியோ: [முழுவதும் உடன்படாமல்] அலெக்ஸாண்டிரியா நகரை விட்டுவிடச் சொல்கிறீரா?

    ஜூலியஸ் சீஸர்: நாமின்னும் அதைக் கைப்பற்ற வில்லை, ரூ·பியோ! கைவசப்படாத ஒன்றை எப்படி நாமிழக்க நேரிடும்? இந்த மாளிகை நம்முடையது! அடுத்தது அந்த மாளிகை, என்ன பெயர் அதற்கு?

    ரூஃபியோ: நாடக அரங்கம்.

    ஜூலியஸ் சீஸர்: ஆமாம், நாடக அரங்கமும் நமதே! மற்ற எகிப்தின் பகுதிகள் எகிப்தியருக்குச் சொந்தம்.

    ரூஃபியோ: சீஸர்! உங்களுத்தான் எல்லாம் தெரியும்! சரி நான் விடை பெறுகிறேன்.

    ஜூலியஸ் சீஸர்: அந்தக் கப்பல்கள் அனைத்தும் எரிக்கப் பட்டனவா?

    ரூஃபியோ: இதோ போகிறேன்! ஆணைப்படி நிறைவேறும்! கால தாமத மாகாது! [வெளியேறுகிறார்]

    பிரிட்டானஸ்: சீஸர்! டாலமியின் மெய்க்காப்பாளி போதினஸ், உங்களுடன் பேச விரும்புகிறார். அவருடைய போக்கு சரியில்லை! அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.

    ஜூலியஸ் சீஸர்: போதினஸ், எங்கிருக்கிறார்? அனுமதி அளியுங்கள் அவருக்கு! [போதினஸ் நுழைகிறார்] .. ஹலோ போதினஸ்! உமக்கு என்ன வேண்டும்? நண்பனாக வந்திருக்கிறாயா? அல்லது ரோமானியருக்கு நாச காலனாக வந்துள்ளாயா?

    போதினஸ்: உங்களுக்கு முடிவுரை கூற வந்துள்ளேன்! உங்களுக்கு முடிவு காலம் வந்து விட்டது!

    ஜூலியஸ் சீஸர்: [கோபமாக] எங்களுக்கு முடிவு காலமா? சீஸருக்கு முடிவுரையா? கூறுவது யார்? தலையில்லாத முண்டமா? உங்கள் அரசர் டாலமிக்கு என்ன ஆயிற்று தெரியுமா? … நாங்கள் விரட்டிச் சென்ற போது, நைல் நதியில் குதித்து மூழ்கி விட்டார்! ·பரோ பரம்பரைக்காரி கிளியோபாத்ராவைத் தவிர உமக்கு அரசர் யாருமில்லை! அவர்தான் எகிப்தின் ராணி என்று ஒப்புக் கொள்ளுங்கள். கிளியோபாத்ரா எங்கள் பாதுக்காப்பில் இருக்கிறார். நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளா விட்டால். உங்களை அரண்மனையில் தடம் வைக்க விட மாட்டார்!

    போதினஸ்: [ஆங்காரமாக] நாங்கள் கிளியோபாத்ராவை ராணியாக ஏற்றுக் கொள்ள முடியாது! உங்களையும் எகிப்த் ஆக்கிரமிப்புத் தளபதியாக ஒப்புக் கொள்ள முடியாது! டாலமியின் அடுத்த சகோதரி அரச பீடத்தில் அமரத் தயாராக உள்ளார்! அவர்தான் எங்கள் புது ராணி!

    ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] முதலில் நீவீர் எமது போர்க்கைதி! போரை அறிவிக்காமல் போர் தொடுத்து, ரோமானிய வீரர் இருவரைக் கொன்றது உங்கள் குற்றம். பிரிட்டானஸ்! கைது செய் போதினஸ் போர்க் கைதியை!

    ++++++++++++++++

    அங்கம் -2 பாகம் -13

    “எனது உள்ளம் ஒருவரால் கவரப்பட்ட வேளையில், ஒருமாதிரி ஆங்காரப் பூரிப்போடு, நிதானமாக அதன் காரணத்தை வெளியேற்றக் கதவைத் திறந்து வைத்தேன்! தர்க்கமின்றி, போராட்ட மின்றி, பொய் வெட்கமின்றி, மன வேதனை யின்றி, நெஞ்சக் கலக்க மின்றி அனைத்துக்கும் உடன்பட்டேன், அனைத்தையும் நான் நம்பினேன்! முகம் சிவந்து ஒருத்தி வெட்கப் படுவது எப்படி, ஒருவரால் ஈர்க்கப்பட்டு ஆராதிக்கப்படும் போது?”

    ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

    “ஒவ்வொரு பாறைத் துண்டமும் ஒரு சிலையைத் தன்னுள் ஒளித்து கொண்டுள்ளது! சிற்பியின் கலைப்பணி அச்சிலையை அதில் கண்டுபிடிப்பதுதான்!”

    மைக்கேலாஞ்சலோ [1474-1564]

    “என்னைப் பாராட்டுபவன் எவனையும் நான் பாராட்டுவேன்! நாட்டைக் கைப்பற்றப் போர்க் களத்தில் நான் புரிந்த மாவீரச் செயல்களை யாரேனும் மறுக்க முடியுமா?”

    அண்டனி

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

    “சீஸர்! பத்துத் தலைமுறைகளுக்கு [முன்னூறு ஆண்டுகள்] ஒருதரம் உலகத்துக்கு ஓர் உன்னத நூல் கிடைக்கிறது. வரலாறின்றிப் போனால், மரணம் உங்களை மூடப் படைவீரன் அருகிலே புதைத்து விடும்!”

    [தியோடோடஸ், அலெக்ஸாண்டிரியா நூலகம் தீப்பற்றி எரியும் போது]

    பெர்னாட் ஷா [சீஸர் & கிளியோபாத்ரா]

    நேரம், இடம்:

    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

    நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

    காட்சி அமைப்பு:

    கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்!

    ++++++++++++++

    ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] முதலில் நீவீர் எமது போர்க்கைதி! போரை அறிவிக்காமல் போர் தொடுத்து, ரோமானிய வீரர் இருவரைக் கொன்றது உங்கள் குற்றம். பிரிட்டானஸ்! கைது செய் போதினஸ் போர்க் கைதியை!

    போதினஸ்: [கேலியாக] நானா உங்கள் கைதி? வியப்பாக இருக்கிறதே! நீங்கள் தங்கி யிருப்பது எங்கே என்று தெரிகிறதா? அலெக்ஸாண்டிரியாவில்! எகிப்தியர் பூமியில்! டாலமியின் படைவீரர் உங்களை விட மிகையான எண்ணிக்கையில் அலெக்ஸாண்டிரியாவை முற்றுகை செய்துள்ளதைச் சற்றேனும் அறிவீரா?

    ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] நண்பா! வந்த வழியே திரும்பிச் செல், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால்! சீக்கிரம் செல்! தூதன் என்பதால் உன்னைத் தப்பிச் செல்ல விடுகிறேன்! வெளியே உன் படையாட்களிடம் உடனே சொல், ரோமானியரை இனிமேலும் கொல்ல வேண்டாமென்று! அல்லாவிடில் நீ கொல்லப் படுவாய், அறிந்து கொள். என்னைப் போல் பரிவு மிக்கவர், என்படை வீரர் என்று எண்ணாதே! பிரிட்டானஸ், செய்தியைப் பரப்பு; எனது போர்க் கவசத்தை எடுத்து வரச்சொல்! [பிரிட்டானஸ் போகிறான். ரூ·பியோ நுழைகிறான்.]

    ரூஃபியோ: [ஜன்னல் பக்கம் சீஸரை அழைத்துச் சென்று, தூரத்தில் எழுகின்ற புகை மூட்டத்தைக் காட்டி] பாருங்கள் வெடிப் புகையை. [போதினஸ் ஓடி வந்து பார்க்கிறான்]

    ஜூலியஸ் சீஸர்: [கவசத்தை அணிந்து கொண்டே] ஓ, அதற்குள் கலகம் ஆரம்பித்து விட்டதா? எனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது? நம் கண்முன்பாகவே நமது ரோமானியர் கொல்லப் படுவது அவமானம்! அக்கிரமம்! அயோக்கியத்தனம்!

    ரூ·பியோ: நமது ஐம்பெரும் கப்பல்கள் துறைமுகத்தில் தகர்க்கப் பட்டன! கப்பலுக்கான எண்ணைக் கலன்களை ஏந்திச் சென்ற கட்டுமரமும் எரிக்கப் பட்டது! எகிப்தியர் படை மேற்குத் துறைமுகத்தைக் கைப்பற்றி விட்டது உண்மை! அவர்கள் வைத்த தீ வளர்ந்தோங்கி வருகிறது!

    ஜூலியஸ் சீஸர்: [சீற்றமுடன், கவசத்தை சரிசெய்து கொண்டு] அப்படியானால் கிழக்குத் துறைமுகம் யார் கையில் உள்ளது? கலங்கரை விளக்கம் யார் கையில் உள்ளது, ரூ·பியோ?

    ரூ·பியோ: [கோபத்துடன்] சீஸர்! நீங்களே களத்துக்கு வந்து கட்டளை யிடுங்கள்! ஐந்து நிமிடத்தில் என்னால் படை திரட்டித் தாக்க முடியாது! கிளியோபாத்ராவின் பட்டம் சூட்டு விழாவுக்கு நீங்கள் ஒத்திகை பார்த்து வருகிறீர், அலெக்ஸாண்டிரியாவை எகிப்தியர் அபகரிக்கும் போது! நாம் விழித்தெழா விட்டால், நம்மையும் சிறைப் படுத்திக் கொன்று விடுவர் டாலமியின் ஆட்கள்!

    ஜூலியஸ் சீஸர்: [சற்று நிதானமுடன்] எகிப்த் ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! ஜூலியஸ் சீஸர் உள்ள வரை அலெக்ஸாண்டிரியா ஒருபோதும் அவரது கையிக்கு மீளாது, ரூஃபியோ!

    [அப்போது தியோடோடஸ் அலறிக் கொண்டு ஒருபுறம் நுழைகிறார். கிளியோபாத்ரா தீயெரிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்ட பின்பு ஆத்திரப் பட்டு மாளிகைக்குள் நுழைகிறாள்]

    தியோடோடஸ்: [பயங்கரக் குரலுடன்] எகிப்திய மாந்தர்காள்! நமது நகரம் நரக மாகுது! அலெக்ஸாண்டிரியாக் கடற்கரை எங்கெங்கு நோக்கினும் தீ மயம்! நமது உன்னத நூலகம் வெந்து சாம்பலாகுது! நமது எகிப்த் நாகரீகம் மாயுது! நமது கலாச்சாரம் எரிந்து போகுது!

    [எல்லாரும் மாளிகை ஜன்னல் வழியாகத் தூரத்தில் தீ மண்டலங்களைக் காண்கிறார்]

    கிளியோபாத்ரா: [ஆங்காரமாக, கொதிப்புடன்] காட்டுமிராண்டியர், ரோமானியர்! நூலகத்தில் எப்படித் தீ வைக்கலாம்? அலெக்ஸாண்டிரியா நூலகம் வரலாற்றுக் களஞ்சியம்! உலகின் முதல் நூலகம் எரியுது! வான சாஸ்திரம், கணித சாஸ்திரம், அண்ட கோள்களின் நகர்ச்சி விளக்கம், கட்டடக் கலைகள், பிரமிட்களின் அமைப்பு அனைத்தும் எரிந்து புகையாய்ப் போகின்றன! வரலாற்றுப் புகழ் பெற்ற எங்கள் நூலகம் கருஞ் சாம்பலாகுது! பிளாடோவின் உரையாடல் நூல் வெந்து போகுது! அரிஸ்டாடலின் படைப்புகள் கரும் புகையாய் போகுது! அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பு வரலாறுகள் கரிந்த சாம்பலாகின்றன! கிரேக்க, ·பாரோ வரலாறுகள், காவியங்கள், ஹீப்ரூ படைப்புகள் அனைத்தும் நாசமாகின்றன! காட்டுமிராண்டித்தனம் சீஸரே!

    ஜூலியஸ் சீஸர்: [சற்று கனிவோடும், சீற்றத்தோடும்] வருந்துகிறேன், கிளியோபாத்ரா! நூலகத்துக்கு யாரும் திட்டமிட்டுத் தீ வைக்க வில்லை! டாலமியின் படகுகளில் வைத்த தீ காற்றடித்தால் நூலகத்தில், தாவிப் பற்றி யிருக்க வேண்டும், என்பது எனது யூகம்!

    கிளியோபாத்ரா: வருந்துகிறேன் என்று வெறும் வாய் வார்த்தை போதாது! நூலகம் திரும்பவும் மீளுமா? எப்படி அதை மீண்டும் உருவாக்குவது? முதலில் தீயை அணைக்க யாரும் போக வில்லை!

    ஜூலியஸ் சீஸர்: [சற்று குற்ற உணர்வுடன்] டாலமியின் படையினர் எமது கப்பல் மீது முதலில் இட்ட தீ! ரோமானியர் யாரும் அந்தப் போரை ஆரம்பிக்க வில்லை! டாலமியின் ஆட்கள் ரோமானியரைக் கொல்லத் தொடங்கினர். பிறகு என்ன நடக்கும், போரைத் தவிர? ரோமானியரும் வெடிப்புக் குண்டுகளை எகிப்தியர் கப்பல்கள் மீது வீசினர்! அந்தத் தீயைக் காற்று தூக்கிச் சென்று தவறாக நூலகத்தில் விட்டுவிட்டது!

    கிளியோபாத்ரா: [கோபத்துடன்] நூலகத்தின் பெயர் முன்னால் காட்டப் பட்டுள்ளது. அதைப் பார்க்காமல், அதன் அருகே எப்படி வெடிகுண்டை வீசலாம்! காட்டுமிராண்டிகள்தான் சிந்தனை யில்லாமல், கண்ணால் பாராமல் இப்படிச் செய்வார்!

    ஜூலியஸ் சீஸர்: [தன் படையாட்களை வெளியே போகச் சொல்லி, அவர்கள் சென்ற பிறகு, பெருங் கோபத்துடன்] வாயை மூடு! ரோமானியரைக் காட்டுமிராண்டிகள் என்று எப்படி நீ திட்டலாம்? ஒழுக்கமுள்ள ரோமானியப் படைக்கு நிகராக எப்படையும் கிடையாது! நாகரீக மற்றவர் எகிப்தியர்தான்! ரோமானியர் அல்லர்! நான் ஜூலியஸ் சீஸர்! ரோமானியர் தலைவனாய்ப் போற்றுப் படுபவன்!

    கிளியோபாத்ரா: நான் கிளியோபாத்ரா! எகிப்தியர் வணங்கும் மகாராணி! ஐஸிஸ் [1*] கடவுளாக வணங்கப் படுபவள் நான்! ·பாரோ மன்னர் நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உதயமானது! எங்கள் நாகரீகம் எப்படிப் பட்டதென்று நேராகப் பார்க்க வேண்டுமா? அதோ அங்குள்ள எங்கள் பிரமிட் கோபுரத்தில் புதைத்து வைத்துள்ள களஞ்சியங்களைப் பாருங்கள்! அதோ அங்கு படுத்துள்ள மனிதத் தலைச் சிங்கத்தைப் பாருங்கள்! ஈராயிரம் ஆண்டுக்கு முன் விருத்தியான எங்கள் கட்டடக் கலைக்கு நிகராக எந்த நாட்டில் உள்ளது?

    ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! அவை எல்லாம் புராணக் கதைகள்! நீங்கள் இப்போது எங்கள் அடிமை! எகிப்த் நாடு ரோமுக்குக் கீழ் உள்ளது! நீ எப்போது எகிப்தின் அரசி ஆவாய் என்பது என் கையில் உள்ளது! நீ எகிப்தின் தேவதை ஐஸிஸ்தான்! ஆனால் நீ வெறும் ஓர் அழகுப் பதுமை! உன்னை அரசியாக என்றைக்கு நான் ஆசனத்தில் ஏற்றுவேனோ அன்றுதான் நீ எகிப்தின் ராணி! அதுவரை நீ வெறும் கவர்ச்சி மாதுதான்! காட்டுமிராண்டி என்று எங்களைத் திட்டியதற்கு நீ மன்னிப்புக் கேட்க வேண்டும்!

    கிளியோபாத்ரா: சீஸரே! அது மட்டும் நடக்காது! ஐஸிஸ் கடவுளான கிளியோபாத்ரா யாரிடமும் மன்னிப்புக் கேட்க மட்டாள்! எகிப்தியர் நாகரீக மற்றவர் என்று அறிவில்லாமல் ஏளனப் படுத்திய நீங்கள்தான் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை உங்கள் முகத்தில் நான் விழிக்கப் போவதில்லை! நான் போகிறேன்!

    [கிளியோபாத்ரா கோபத்துடன் வெளியேறுகிறாள். சீஸர் பரிதாபமாய் விழித்துக் கொண்டு நிற்கிறார்]

    [1*] ISIS – Egyptian Goddess

    *********************

    அங்கம் -2 பாகம் -14

    “காதல் சம்பந்தப்பட்ட வரையில் பாலுணர்ச்சிகளைப் பொய்யாக எண்ணுவதைப் நானொரு மனிதப் பாபமாகக் கருதுகிறேன். அதே சமயத்தில் காதல் முழுதாயின்றிப் பின்னமாக உள்ள போது ஏற்படும் உணர்ச்சிகளை போலித்தனமானத் தவறென்று நான் மதிப்பீடு செய்கிறேன். நான் நம்புவதையே சொல்கிறேன்: காதலுற்ற போது ஒருவரை ஒருவர் முடிந்தவரை முழுமையாக நேசிக்க வேண்டும். அல்லாவிட்டால் என்ன நேர்ந்தாலும் சரி, ஒருவர் முழுக் கற்புடன் தனிமையாக வாழ வேண்டும்.”

    ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

    “இறைவா! எப்போதும் நான் சாதிக்கக் கூடுவதை விட மிகையாக வேட்கை கொள்வதையே எனக்கு அளித்திடு.”

    மைக்கேலாஞ்சலோ [1474-1564]

    “ஒரு நாளைப் பொழுதில் கடிது உழைத்துக் காலத்தைச் செலவழித்த பிறகு அன்றிரவில் ஆழ்ந்த சுகமான தூக்கம் வருவதைப் போல், நன்னெறியுடன் வாழ்ந்த வாழ்க்கை மகிழ்ச்சியான மரணத்தை அளிக்கிறது!”

    லியானார்டோ டவின்ஸி [1452-1519]

    “என் எகிப்து நாடே! நன்கு அறிவாய் நீ!
    நின் திசைதிருப்பிப் பின்தட்டுடன் கயிற்றால்
    பிணைக்கப் பட்டு துள்ள தென்  இதயம் !
    பிறகு நீதான் இழுத்துச் செல்ல வேண்டும்!”

    [கிளியோபாத்ரா]

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

    நேரம், இடம்

     

    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

     

    நாடகப் பாத்திரங்கள்:

    ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

     

    காட்சி அமைப்பு

     

    கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்! முடிவில் அலெக்ஸாண்டரியா நூலகம் எரிகிறது!

    தியோடோடஸ்: [சீஸரைக் கூர்ந்து நோக்கி] உலகப் புகழ் பெற்ற எங்கள் பெரு நூலகம் தீப்பற்றிக் கரியாகக் காரணமானீர்! உலக வரலாற்றை உருவாக்கும் மாவீரர் நீங்கள் பூர்வீக வரலாற்றை அழிப்பதில் பூரண விருப்பமா? எரிந்து போன நூல்களைப் புதிதாகப் பெற்றுத் தர வேண்டும். அல்லது நீங்கள் நட்ட ஈடு தர வேண்டும் எங்களுக்கு!

    ஜூலியஸ் சீஸர்: [சற்று சீற்றமுடன்] ரோமானியக் கப்பலில் தீவைத்தது யார்? எகிப்தியப் படைகள்! கலகம் உண்டாக்கி நூலகத் தீயை அணைக்க முயலும் ரோமானியப் படைகளைத் தடுப்பது யார்? உங்கள் பரம்பரை! தொட்டில் பிள்ளையைக் கிள்ளி விட்டு, தாலாட்ட தாயைத் தேடுகிறீரா? உன்னத நூலகத்தின் மதிப்பை அறியாதவர் உங்கள் மூட மக்கள்! அறிவு கெட்டதனமாய் ரோமானியர் மீது பழி சுமத்த வேண்டாம்! உமது அறிவும் பழுதாகி விட்டது. ஏனிப்படிச் சும்மா நின்று கொண்டு என்னுடன் வாதாடிக் கொண்டிருக்கிறீர்? மெய்யாகவே நூலகத்தைக் காக்க விரும்பினால், வெளியே போய் தீயை அணைப்பீர்!

    [தியோடோடஸ் பக்கத்தில் நிற்கும் போதினஸைப் பார்த்தவண்ணம் விரைந்து வெளியேறுகிறார்]

    போதினஸ்: தியோடோடஸ், நான் போக முடியாது உன்னுடன்! நானொரு வீட்டுக் கைதி இங்கே! வெளியே எங்கும் உன்னைப் போல் நடமாட முடியாது நான்!

    தியோடோடஸ்: [நடந்து கொண்டே] என்ன நீ ஒரு கைதியா? நூலகத்தை என்னால் முடிந்தவரைக் காக்க வேண்டும்! [போகிறார்]

    ஜூலியஸ் சீஸர்: போதினஸ் நீதான் சொல்ல வேண்டும், உலக வரலாறுகள் எரிந்தழியும் இந்த நேரத்தில்! தியோடோடஸ் மூலம் செய்தி அனுப்பு, இனிமேலும் ரோமானியரைக் கொல்ல வேண்டா மென்று! என் நெஞ்சம் கொதிக்கிறது! போரிடாமல் வாளா நிற்கும் ரோமானியரைக் கொல்லத் துணியாதீர்! உமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது, எமது படையினரைக் காப்பாற்றுவீரா?

    போதினஸ்: [கோபமாக] உமது படையினர் உயிர் உமது கையில் உள்ளது! அவரைக் கப்பலில் ஏற்றி வந்தவன் நானில்லை! ஆனால் எமது உயிரைப் போக்கத் துணிந்தால், அதற்குப் பதிலாக நீவீர் பெருமிழப்பை ஏற்க வேண்டிய திருக்கும்!

    ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] டாலமியும், நீயும் அக்கிலஸ் மூலமாக ஆயுதமற்ற என் மருமகன், ரோமானிய மாவீரன், பாம்ப்பியின் தலையை வெட்டிய பயங்கர வாதிகள்! உங்கள் குற்றத்துக்குத் தக்க தண்டனை கிடைக்கும்! அதில் ஐயமில்லை! நீவீர் நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரையில் முதல்தரக் கொலையாளியாகத்தான் எண்ணப்படுவீர்!

    ரூஃபியோ: [அவசரமாய்க் குறுக்கிட்டு] ஜெனரல் சீஸர்! உங்கள் வருகை தேவைப் படுகிறது! உங்கள் முடிவு வேண்டப் படுகிறது! [துறைமுகம் வழியே எட்டிப் பார்த்து, படை வீரனிடம்] கிழக்கில் நிற்கும் சிறிய படகுகளை வெளியேற்று! நீண்ட படகுகளை என்ன செய்ய வேண்டுமென்று ஆணையிடச் சீஸர் வருவதாகச் சொல்! [சீஸரைப் பார்த்து] எங்கே அந்த எகிப்திய பயங்கர வாதிகளை? கொலைகாரர் அவர்கள்! அவர் மீது உங்களுக்குப் பரிவு மிகுந்து விட்டதா? அவருக்கு விடுதலை அளித்து விட்டீர்களா? பாம்ப்பியைக் கொன்ற அந்த பாதகரைச் சும்மா விடலாமா?

    ஜூலியஸ் சீஸர்: ரூஃபியோ! நூலகத் தீயை அணைக்க தியோடோடஸை அனுப்பி யுள்ளேன்! உலக வரலாறுகளை, காவியங்களைப் பாதுகாக்க வேண்டும். போதினஸ் சிறைக் கைதியாக வைக்கப் பட்டிருக்கிறான்! நினைவில் வைத்துக் கொள் ரூ·பியோ! எத்தனை எகிப்தியனை நாம் சிறைப் படுத்தி வைத்திருக்கிறோம்! அதே சமயத்தில் ஒவ்வோர் எகிப்தியனுக்கும், இரட்டை ரோமானியக் காவலரைச் சிறைப்படுத்தி வைத்துள்ளோம், பாதுகாக்க.

    ரூஃபியோ: சீஸர்! உங்கள் கசப்பான சுவைப் பேச்சில் ஏதோ ஒரு குள்ள நரித்தனம் தெரிகிறது எனக்கு! எகிப்தியர் மீது ஏன் உங்களுக்கு அத்தனை பரிவு? [பலகணி நோக்கிச் சென்று வெளியே எட்டிப் பார்த்து] சொல், என்ன நடக்கிறது துறைமுகத்தில்?

    ஜூலியஸ் சீஸர்: [அங்குமிங்கும் பார்த்து] என்ன? பிரிட்டானஸ் தூங்கி விட்டானா? எனது கவசத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தேன். .. பிரிட்டானஸ்! எங்கே போய் விட்டாய்? கவசத்தைக் கொண்டுவா! காத்துக் கொண்டிருக்கிறேன். … யாரங்கே வருவது?

    [அப்போது கிளியோபாத்ரா வெளியிலிருந்து சீஸரின் வாள், தலை கெல்மெட்டை பிரிட்டானஸிட மிருந்து பறித்துக் கொண்டு, ஆங்காரமாக உள்ளே நுழைகிறாள். அவளைப் பின்பற்றி பிரிட்டானஸ் தொடர்கிறான். சீஸருக்கு இடப்புறம் கிளியோபாத்ராவும், வலப்புறம் பிரிட்டானஸ¤ம் நிற்கிறார்கள்.]

    கிளியோபாத்ரா: [ஆர்வமுடன்] ரோமன் கெல்மெட்டைப் பார்க்கவே வெகு அழகு! அதில் ஆண்மை தெரிகிறது! ஆண்மையின் வல்லமை தெரிகிறது. ஆண்மையின் அதிகாரம் தெரிகிறது. அதைத் தலையில் வைத்தால் ஆடவரின் உயரம் கூடுகிறது! முக லட்சணம் பராக்கிரமத்தைக் காட்டுகிறது! உங்களின் ஆண்மைத் தோன்றத்தைப் பன்மடங்கு அதிகரிக்கிறது! எடுப்பான உங்கள் முகத்தைப் பார்த்தால், பகைவரின் தொடைகள் நடுங்கும்! வயிற்றுக் குடல் வெளியே வந்திடும்! ஆடவருக்கு அப்படி ஓர் அதிகாரக் கெல்மெட் உள்ளது போல, பெண்டிருக்கு ஏன் செய்யப் படவில்லை? எனக்கொன்று அதுபோல் வேண்டும்!

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] எங்கள் ரோமானியப் படையில் பெண் வாசமே அடிப்பதில்லை! மருத்துவக் குழுவில் கூட பெண்டிர் எவரும் கிடையாது! போர்ப்படையில் பெண்டிருக்கு யாம் வேலை தர மாட்டோம்! வீட்டுப் போரில் பங்கெடுப்பவர் எமது பெண்டிர்! வெளிப் போரில் பங்கெடுப்பவர் ஆடவர்! வீட்டுப் போரில் பெண்ணை ஆடவர் வெல்ல முடியாது! வெளிப் போரில் பெண்டிர் எம்மை மிஞ்ச முடியாது! வீராங்கனை உனக்கு ஓர் கெல்மெட் தேவைதான்! தயார் செய்து அனுப்பச் சொல்கிறேன். உன்னைப் போல் ஒரு வீரப் பெண்ணை ரோமில் எங்கும் காண முடியாது!

    கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] ஆடவர் நீங்கள் வீட்டில் பெண்டிரை ஆராதித்துக் கொண்டு, அரவணைத்துக் கொண்டு, அலங்காரப் பொம்மைகளாய் நடத்திக் கொண்டு வருகிறீர்! என்னைப் போல் பெண்டிர் ரோமிலில்லை என்று கூறி மூடி மறைக்காதீர்! கையில் வாளைக் கொடுத்து, கவசத்தை மார்பில் கட்டி, குதிரையில் ஏற வாய்ப்பைக் கொடுத்தால் என்னைப் போன்ற பெண் ஏன் உருவாக மாட்டாள்?

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! அது உண்மைதான்! ரோமானியப் பெண்டிர் உன் வீரக் கண்களைப் பார்த்தவுடனே பக்கத்தில் வாள் உள்ளதா வென்று அவரது கைகள் தேட ஆரம்பித்து விடும்! நான் ரோமுக்குப் போகும் போது நீ அவசியம் என்னுடன் வா! உன்னை ரோமாபுரியின் பிரதான வீதிகளில் அழைத்துச் செல்கிறேன்! யாவரும் வாழ்த்தி வரவேற்பார்!

    கிளியோபாத்ரா: [பூரிப்புடன் அருகி சீஸர் தோளைப் பற்றிக் கொண்டு] என் வயிற்றில் வளரும் உங்கள் ஆண்மகவு பிறந்து நடக்க ஆரம்பித்ததும் ரோமாபுரிக்கு வருகிறேன்! நிச்சயம் வருகிறேன்! ரோமாபுரியின் வருங்கால வாரிசு மன்னனான உங்கள் புதல்வனை, என் கரத்தில் பற்றிக் கொண்டு வருகிறேன்.

    ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன் கிளியோபாட்ராவைத் தழுவி] ஆனந்தம் அடைகிறேன், கிளியோபாத்ரா! நீ தாயா? என் மகவுக்கு அன்னையா? மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்….. ஆனால் அது எப்படி ஆண்மகவு என்று அப்படி உறுதியாகச் சொல்கிறாய்?

    கிளியோபாத்ரா: [சீஸரின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டு] எங்கள் அரண்மனை ஜோதிட நிபுணர் மூவரும் கூறினார், எனக்குப் பிறக்கப் போவது ஆண் மகவென்று! அதை நான் நம்புகிறேன்! அவர் வான சாஸ்திரம் அறிந்தவர். அலெக்ஸாண்டர் இந்தியாவைப் படை யெடுத்து மீண்ட சமயத்தில், அங்கிருந்த வான சாஸ்திர வல்லுநர் மூலம் கிரேக்க ஞானிகள் அறிந்த கலை. வாழையடி வாழையாக அந்த வான சாஸ்திரக் கலை எகிப்திலும் பரவி வளர்ச்சி பெற்றது. [கனிவுடன்] சீஸர்! சீஸர்! சீஸர்! நான் பிறந்ததின் உன்னத பலனைப் பெறுகிறேன். நிச்சயம், நமது முதல் குழந்தை ஆண்மகவு! அந்த எதிர்பார்ப்பில் சிறிதேனும் ஐயமில்லை எனக்கு! அந்த ஆண்மகவு உங்கள் வாரிசு! ரோமாபுரியின் எதிர்கால வேந்தர் வேந்தன்! எகிப்த் நாட்டின் வருங்கால மாமன்னன்!

    ஜூலியஸ் சீஸர்: [ஆனந்தக் கண்ணீர் சொரிய] கிளியோபாத்ரா! என் கனவை நிஜமாக்கியவள் நீ! எனது மனைவி கல்பூர்ணியா பெற முடியாத ஆண்மகவை எனக்கு ஈடிணை யில்லாத அற்புதப் பரிசாக அளிக்கப் போகிறாய்! அரசனாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும், பிரதான பிள்ளைச் செல்வமாய், ரோமாபுரியும் என் குமரனை வரவேற்கும்! நிச்சயம் வரவேற்கும்! எனக்குக் கிடைக்கும் மதிப்பு என் எகிப்திய மகனுக்கும் கிடைக்கும்!

    [கிளியோபாத்ரா சீஸர் மார்பில் சாய்ந்து கொள்கிறாள்]

    ++++++++++++++++++++

    அங்கம் -2 பாகம் -15

    “எவனொருவன் உன்னதக் களிப்பினை கவிதையின் உணர்வுகளிலிருந்து  கவர்ச்சி செய்கின்றானோ,  அவனே உண்மையான கவிஞனாகக் கருதப் படுகிறான், ஒருவரிக் கவிதை எழாதா விட்டாலும் கூட!”

     

    ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

    ஒவ்வொரு பளிங்குப் பாறைத் துண்டிலும் எனக்கு நேர் எதிராகத் தோன்றும் வடிவம் ஒன்று உருவாகி முழுமையுடன் நடமாடுவதைக் காண்கிறேன். வெளிச்சுவரை உடைத்துச் சிறையினில் அடைபட்டிருக்கும் அந்த வடிவத்தை வெளியேற்ற, என் மனக்கண் கண்டு துடிப்பது போல் மற்றவரும் காணும்படிச் செய்வதே எனது படைப்புப் பணியாகும்.

    மைக்கேலாஞ்சலோ [1474-1564]

    இயற்கை படைத்துள்ளதைப் போன்று எளிமையாக, நளினமாக, நேரிடையாக எதிலும் ஒன்று குறையாமலும், ஒன்று கூடாமலும், கூரிய அறிவுள்ள மனிதன் ஒருபோதும் ஆக்க முடியாது!

    லியானார்டோ டவின்ஸி [1452-1519]

    எடுத்து வா எனது அங்கியை!
    சூட்டி விடு எனது கிரீடத்தை!
    தெய்வீக வேட்கை எழுகிறது என்னுள்!
    என் உதடுகளை நனைக்கா தினிமேல்,
    எகிப்தின் இனிய திராட்சைப் பழரசம்!
    அதோ! அதோ! அருமை ஐராஸ், சீக்கிரம்! …
    விடை பெறுகிறேன், நீண்ட விடுமுறைக்கு! …

    (கிளியோபாத்ரா)

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

    நேரம், இடம்

     

    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

    நாடகப் பாத்திரங்கள்

     

    ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர். ரோமனியக் காவலர். அரசியாக அலங்கரிக்கப் பட்டு, ராஜ கிரீடத்தை அணிந்து கம்பீரமாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அருகில் உள்ள ஆசனத்தில் சீஸர் ராணுவத் தளபதி உடுப்பணிந்து அவளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

    காட்சி அமைப்பு

     

    [கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்! முடிவில் அலெக்ஸாண்டரியா நூலகம் எரிந்து, கிளியோபாத்ராவின் கோபத்தைத் தூண்டி விடுகிறது. டாலமியும், அவனது போர் அதிகாரிகளும் கொல்லப் பட்ட பிறகு சீஸரின் பாதுகாப்புடன், கிளியோபாத்ரா எகிப்தின் ஏக போக அரசியாய் முடிசூட்டிக் கொள்கிறாள்.]

    ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவின் வலது கையைப் பற்றி முத்தமிட்டு] கண்மணி கிளியோபாத்ரா! உனது முடிசூட்டு விழா சிறப்பாக முடிந்தது. நீ எகிப்தின் ஏகாந்த, இணையற்ற அரசி! உனக்குப் போட்டியான உன் தனையன் டாலமி நைல் நதியில் மூழ்கிப் போனான்! எதிரிகள் உனக்கில்லை இப்போது! உன்னை அரசியாக்க வேண்டும் என்ற எனது பொறுப்பு முடிந்தது. ரோம சாம்ராஜியத்துக்கு எகிப்து நாடு அடிமை நாடாயினும், ஆண் வாரிசை எனக்கு அளிக்கப் போகும் நீ ஓர் அடிமை அரசி யில்லை! ஜூலியஸ் சீஸரின் மனைவி மதிப்பைப் பெற்றவள் நீ! ஆம் எனது இரண்டாம் மனைவி நீ! கூடிய சீக்கிரம் ரோமுக்குப் போகும் நான் உன்னையும் கூட்டிச் செல்வேன்! எனக்குக் கிடைக்கும் மதிப்பும், சமூக உயர்வு நிலையும் உனக்கும் கிடைக்கும்.

    கிளியோபாத்ரா: [முக மலர்ச்சியுடன்] மாண்புமிகு சீஸர் அவர்களே! கிளியோபாத்ராவின் கனவை நிறைவேற்றினீர்! எகிப்தின் வரலாற்றை மாற்றினீர்! உங்களுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டவள்! உங்கள் எல்லையற்ற அன்புக்கும், ஆதரவுக்கும் கட்டுப் பட்டவள்! ·பாரோ மன்னர்களின் ராஜ பரம்பரைத் தகுதி எனக்குக் கிடைக்க வாய்ப்பளித்து, வல்லமை அளித்து, பக்கத்தில் பாதுகாப்பு அரணாக நிற்பவர். ஒப்பற்ற சீஸரை, எனக்கு உயிரளித்த சீஸரை, ஆட்சி உரிமை தந்த சீஸரை, என்னை ராணியாய் உயர்த்திய சீஸரை என்னுயிர் நீங்கும் வரை மறக்க மாட்டேன்! உங்களை என் உடமை ஆக்கி, என் உறவாளி ஆக்கி, என் ஆண்மகவுக்குத் தந்தை என்னும் வெகுமதி அளிக்கிறேன் என் கைமாறாக!

    ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ரா தோள்களைப் பற்றிக் கொண்டு கனிவுடன்] கிளியோபாத்ரா! உன்னைப் போன்ற அறிவும், வீரமும் கொண்ட பெண்ணை நான் எங்கும் கண்டதில்லை! உன்னைப் போன்ற எழில் மிக்க மங்கையை நான் எங்கும் சந்தித்த தில்லை! நெஞ்சு உறுதியும், எடுப்பான நடையும், மிடுக்கான சொல்லும், நாக்கில் நளினமும் பெற்ற நங்கையை என் கண்கள் எங்கும் கண்ட தில்லை! [கிளியோபாத்ரா சீஸரைப் பாசமுடன் அணைத்துக் கொள்கிறாள்]

    கிளியோபாத்ரா: [சீஸரை ஊன்றி நோக்கி] உங்கள் மார்பு பரந்தது; அதை விட உங்கள் மனம் விரிந்தது! அந்த எ·கு மனத்தை நான் பற்ற முடிந்தது எனக்குப் பூரிப்பளிக்கிறது. உங்கள் தோள் உயர்ந்தது; அதை விட உங்கள் உள்ளம் உன்னத மானது! அந்த உள்ளத்தில் நான் குடியேறியது எனக்குக் குளிர்ச்சி அளிக்கிறது! .. ஆனால் உங்கள் ரோமானிப் போர்த் தளபதிகள் பொல்லாதவர்! எனது முடிசூட்டு விழாவின் போது விஜயம் செய்த எல்லா மன்னர்களும் மண்டி யிட்டபோது, அவர்கள் மட்டும் நின்று விழித்துக் கொண்டு என்னை அவமானப் படுத்தினர்! என்ன அகங்காரம் அவருக்கு? நீங்கள் கூட மண்டியிட்டு எனக்கு மதிப்பளித்தீர்; அது எனக்கு மனம் மகிழ்ச்சி தந்தது! ஆனால், உங்கள் கொடிய தளபதிகள் …!

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] நான் கடைசியில் அவர்களுக்குக் கையசைத்து மண்டியிட வைத்தேன்! ரோமாபுரியில் யாரும் எவருக்கும் மண்டியிட்டு மதிப்பளிப்ப தில்லை! அதுவும் ஒரு பெண்ணரசிக்கு ஆடவர் மண்டி யிடுவதில்லை! எங்கள் நாட்டுக்கு அரசரே கிடையாது! அதுவும் உன்னைப் போலொரு வாலிபப் பெண் அரசியாக முடியாது! அடுப்பூதும் எமது அணங்குகள் உன்னைப்போல் கையில் செங்கோல் ஏந்திக் கம்பீர நடை போடுபவ ரில்லை!

    கிளியோபாத்ரா: [சீஸரைக் கூர்ந்து நோக்கி] ரோமாபுரி சாம்ராஜியத்தின் சர்வாதிகாரியான நீங்கள், ரோமின் சக்கரவர்த்தி அல்லவா? ரோமாபுரியின் வேந்தர் வேந்தன் என்று முடி சூடத்தானே, நீங்கள் சீக்கிரம் போவதாக உள்ளது!

    ஜூலியஸ் சீஸர்: [சற்று வருத்தமுடன்] கிளியோபாத்ரா! ரோமாபுரிக்கு நான் அதிபதியாகச் சென்றாலும், என்னை வேந்தன் என்று ரோமானியர் ஏற்றுக் கொள்ள மாட்டார். ரோமாபுரியின் சக்கரவர்த்தி போல் ரோமானியர் எனக்கு மதிப்பளித்தாலும், என்னை அரசன் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்.

    கிளியோபாத்ரா: [சற்று கவனமாக] அரசராகக் கருதப் படாமல், உங்களுக்கு என்ன விதமான ஆதிக்கமும், அதிகாரமும் உள்ளது? நீங்கள் அரசனில்லை என்றால், நாட்டை ஆட்சி புரிவது யார்? நாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பது யார்? நாட்டைப் பகைவரிடமிருந்து பாதுகாப்பது யார்?

    ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! எகிப்த் ரோமின் அடிமை நாடுகளில் ஒன்று! ஆனால் எகிப்தில் உனக்கிருக்கும் அதிகாரம், உன்னை விட ஆற்றல் மிக்க எனக்கு ரோமில் கிடைக்காது! ரோமாதிபதிக்கு ஆலோசனை கூறி ரோமா புரியை முழுநேரமும் கண்காணித்து வருவது, குடியாட்சி மக்களின் பிரதிநிதிகளான வட்டாரச் செனட்டர்கள்! செனட்டரின் தீர்மானமே குடியாட்சியின் தெய்வ வாக்கு! முடியாட்சியில் நம்பிக்கை யில்லாத ரோமாபுரியில் நானோர் மன்னனாக ஆட்சி செய்ய முடியாது!

    கிளியோபாத்ரா: அப்படி யானால் நீங்கள் வெறும் பொம்மை ராஜாவா? குடியாட்சி என்றால் என்ன? எனக்குப் புதிராக உள்ளது! புரிய வில்லை, குடியாட்சி என்றால்! செனட்டர் குடித்து விட்டு நடத்தும் ஆட்சியா? குடித்து விட்டுக் கொட்ட மடிக்கும் ஆட்சி எப்படிக் கோமாளித்தனமாக இருக்கும்? குடிக்காமல் அறிவோடு நடத்தும் ஆட்சியே குழப்பத்தையும், கொந்தளிப்பையும் தூண்டும் போது, குடியாட்சி மட்டும் எப்படிக் கோணத்தனமாய் இருக்காது என்பதை என்னால் கற்பனை செய்ய முடிய வில்லை!

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] குடிக்கும், குடியாட்சிக்கும் எந்தச் சம்பந்தமு மில்லை! முடியாட்சி என்பது உன்னைப் போன்ற ஒரு மன்னன் ஆட்சி புரிவது! அது ஒற்றை மனிதன் செய்வது! மன்னருக்கு ஓரிரு மந்திரிகள் ஆலோசனை கூற அருகிலிருப்பார். குடியாட்சியில் தலைவன் என்னைப் போலொரு போர்த் தளபதி! ஆனால் அவன் முடிசூடா மன்னன்! அவனுக்கு ஆலோசனை சொல்பவர் ஓரிருவர் மட்டும் அல்லர்! நூறு அல்லது அல்லது இருநூறு செனட்டர்கள். நாட்டு வட்டாரங்களின் அதிபதிகள் அவர். செனட்டர் மூலமாகக் குடியாட்சியில் நாட்டின் மூலை முடுக்கிலுள்ள மக்களின் பிரச்சனைகள் கவனிக்கப் படுகின்றன. முடியாட்சியைக் கண்காணிப்பது இரண்டு கண்கள் என்றால், குடியாட்சியைக் கவனிப்பது ஆயிரம் கண்கள். தளபதி பொம்மை அரசன் அல்லன்! பிரச்சனையின் தீர்வை முடிவு செய்பவன் தளபதி. பிரச்சனையை எப்படி அணுகுவது என்று திசை காட்டுபவன் தளபதி. புரிகிறதா?

    கிளியோபாத்ரா: [சற்று வெறுப்புடன்] என்ன இருந்தாலும் எனக்குள்ள ஆற்றலும், அதிகாரமும் உங்களுக் கில்லை. உலக சாம்ராஜியங்கள் எல்லாம் முடியாட்சியில்தான் உன்னதம் அடைந்தன! குடியாட்சி எதையும் சாதிக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. அங்கே பல தலைகள் ஒரே சமயத்தில் எழுவதால் குழப்பம்தான் உண்டாகும்.

    ஜூலியஸ் சீஸர்: அதை ஒப்புக் கொள்கிறேன். ரோமாபுரி ஆட்சி அரங்கில் இனவாரி ஆதிக்கம் தலைதூக்கி வருகிறது! என் பகைவன் பாம்ப்பியின் சகாக்கள் எண்ணிக்கையில் மிகுதி! அதாவது எனக்கு எதிரிகள் அதிகம். என் ஆணைகள் எதுவும் வாசலைத் தாண்டுமா என்பது ஐயம்தான்! என் கொள்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது ஐயம்தான்! நீண்ட காலம் ஆட்சிப் பீடத்தில் நான் அதிகாரம் செலுத்துவேனா என்பதும் ஐயம்தான்! ரோமாபுரியில் என் ஆணைக்கு மதிப்பில்லை! என் அதிகார மெல்லாம் நான் கைப்பற்றிய அன்னிய நாடுகளில்தான்!

    கிளியோபாத்ரா: [வருத்தமுடன்] அப்படி யானால் உள்ளூரில் பொம்மை ராஜா! வெளி ஊரில் உண்மை ராஜா!

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] அப்படியே வைத்துக்கொள். நான் ரோமுக்குச் சீக்கிரம் புறப்பட வேண்டும்! போனால்தான் என்னிலையே எனக்குத் தெரியும்!

    கிளியோபாத்ரா: [கவலையுடன்] நான் உங்களைப் பிரிந்து எப்படி அரசாளுவேன்? என் மகன் பிறக்கும் போது, நீங்கள் என்னருகில் இருக்க வேண்டும்! ரோமுக்குப் போன பின்பு, எப்போது எகிப்துக்குத் திரும்புவீர்? நீங்களின்றித் தனிமையில் நான் வாழ முடியாது.

    ஜூலியஸ் சீஸர்: ரோம் எனக்கு ஒருபோக்குப் பாதை! நானினி எகிப்துக்கு மீள மாட்டேன்! பாலை வனத்தின் தீக்கனலில் வெந்து நான் பல்லாண்டுக் காலம் பிழைத்திருக்க முடியாது! நீ எகிப்தை விட்டு ரோமுக்கு வந்துவிடு! நிரந்தரமாக வந்துவிடு! என்னோடு நீண்ட காலம் வாழலாம்!

    கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] அதெப்படி முடியும்? நான் எகிப்திய ராணி! நான் ரோமாபுரி ராணி யில்லை! ரோமாபுரிக்கு ஒருமுறை நான் விஜயம் செய்யலாம், என் மகவோடு! அத்துடன் சரி! நிரந்தரமாக அங்கே நான் எப்படித் தங்க முடியும்? ரோமில் தங்கிக் கொண்டு கிளியோபாத்ரா ஒருபோதும் எகிப்தை ஆள முடியாது! ஆனால் அதே சமயம் நான் உங்களைப் பிரிந்து ஒருபோதும் தனியாக வாழ முடியாது!

    ஜூலியஸ் சீஸர்: [வெறுப்புடன்] கிளியோபாத்ரா! அது உன் பிரச்சனை! அதை என்னால் தீர்க்க முடியாது! நான் ரோமன்! எகிப்திலே உன் விருந்தினனாக என் வாழ்நாள் முழுதும் தங்க முடியுமா? சொல் கிளியோபாத்ரா! உன்னை எகிப்துக்கு ராணி ஆக்கியதும் என் கடமை முடிந்து விட்டது! நான் போக வேண்டும். நாமிருவரும் ஒரே நாட்டில் நீண்ட காலம் சேர்ந்து வாழ முடியாது! நீயும் நானும் நிரந்தரமாகப் பிரிந்துதான் வசிக்கப் போகிறோம்! நீயும், நானும் தனித்தனி உலகில் தனியாகத்தான் வாழ வேண்டும்!

    கிளியோபாத்ரா: [ஏக்கமுடன்] அப்படியானால் பிறக்கப் போகும் ஆண்மகவின் கதி? அவன் உங்கள் புத்திரன்! அவன் உங்கள் வாரிசு. அவன் வாழப் போகுமிடம் ரோமாபுரியா? அல்லது எகிப்து நாடா?

    ஜூலியஸ் சீஸர்: [வெறுப்புடன்] எனக்குத் தெரியாது கிளியோபாத்ரா! உன்னிடம் அவன் வாழ்வதுதான் சரியாகத் தெரிகிறது எனக்கு! ரோமாபுரியில் எனக்கு எதிரிகள் மிகுதி! அவரிடம் என் மகன் சிக்கிக் கொண்டால், அவனைக் கொன்று விடவும் அவர் தயங்க மாட்டார்! அவன் ரோமுக்கு வாரிசாக வந்து விடுவான் என்று வாளெடுத்துச் சிறுவன் தலையைச் சீவி விடுவார்! பாதுகாப்பாக என் மகன் உன்னிடம் இருப்பதே மேலானது!

    *********************

    Share
  • எழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்] (1)

    மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா

    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++++++++

    cleo

    வயது ஏறினும் வாடாது அவள் மேனி
    வழக்க மரபுகளால் குலையாதவள் வாலிபம்
    வரையிலா விதவித வனப்பு மாறுபாடு ……!
    படகில் அவள் அமர்ந்துள்ளது பொன்மய ஆசனம்!
    கடல்நீரும் பொன் மயமாகும் அதன் ஒளியால்.
    படகின் மேற்தளப் பரப்பு தங்கத் தகடு மேடை
    மிதப்பிகள் நிறம் பழுப்பு! பரவும் நறுமணத் தெளிப்பு
    காற்றுக்கும் அதனால் காதல் நோய் பீடிக்கும்!
    படகுத் துடுப்புகள் யாவினும் வெள்ளி மினுக்கும்.
    ஊது குழல் முரசு தாளத்துக் கேற்ப உந்தி,
    வேகமாய்த் தள்ளும் காதல் துடிப்பு போல் !
    அவளது மேனி வனப்பை விளக்கப் போனால்,
    எவரும் சொல்லால் வர்ணிக்க இயாலாது !
    வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

    முன்னுரை:

    கிளியோபாத்ராவின் வரலாறு பேராசை, வஞ்சகம், ஏமாற்றம், மோகம், போகம், சோகம், கொலை, மரணம் ஆகிய அனைத்தும் பின்னிய ஒரு காதல் நாடகம்! கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் பிறந்த எகிப்தின் எழிலரசி அவள்! அவளது வாழ்க்கையில் குறுக்கிட்டு அவள் காதலித்து மணந்த ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸர், பிறகு அவரது சீடர் மார்க் அண்டனி ஆகியோரது கோர மரணத்துக்கு ஓரளவு அவளது தொடர்பே காரணமானது!

    ஃபெரோவின் பரம்பரைகளில் வந்த எகிப்திய ராணிகளில் மிக்கப் புகழ் பெற்றவள் கிளியோபாத்ரா. எடுப்பான தோற்றமும், வசீகரக் கவர்ச்சியும், கூரிய ஞானமும், தேசப் பற்றும், போர் வல்லமையும், பேச்சுத் திறமையும் கொண்டவள். ஆனால் அவள் எகிப்திய மாதில்லை! மாஸபடோமியா மன்னர் வழிமுறையில் டாலமியின் வம்சத்தில் ஏழாம் டாலமியின் புதல்வியாக உதித்தவள். கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ரா பிறந்தாள். அப்போது எகிப்தின் தலைநகராக அலெக்ஸாண்டிரியா நிலவியது. கிளியோபாத்ரா என்று பலர் அவள் வம்சத்தில் பெயரைக் கொண்டிருந்தாலும், கடைசியாகப் பட்டத்தரசியாக வாழ்ந்த ஏழாவது கிளியோபாத்ராவே ஜூலியஸ் சீஸரின் காதலியாகவும், மார்க் அண்டனியைக் காதலித்த மாதாகவும் எகிப்த், ரோமானிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுபவள்.

    சீஸர் & கிளியோபாத்ரா

    தந்தை ஏழாம் டாலமி நாடு கடத்தப் பட்ட சமயத்தில் கிளியோபாத்ராவின் மூத்த தமக்கை எகிப்தின் ராணியாகப் பட்டம் சூடினாள். பிறகு அவள் எப்படியோ கொலை செய்யப் பட்டாள். மீட்சியாகி வந்த தந்தை நான்கு ஆண்டுகள் ஆண்டபின் மரணம் எய்தினார். அதன் பிறகு ஏழாம் கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஆண்டார்கள். அப்போது கிளியோபாத்ராவுக்கு 17 வயது. பண்டைக் கால எகிப்திய வழக்கப்படிக் கிளியோபாத்ரா சட்ட விதிகள் ஏற்காதவாறு 12 வயது தம்பியைத் திருமணம் புரிந்து, அவளே தன் விருப்பப்படி நாட்டை ஆண்டு வந்தாள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும் தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்தித் தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, அங்கிருந்து கொண்டு தமையனைப் பலிவாங்கும் சதிகளில் ஈடுபட்டாள். அப்போது ரோமானியத் தளபதி பாம்ப்பியைத் தாக்க அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ஜூலியஸ் சீஸரைக் காணும் வாய்ப்பை எதிர்பார்த்தாள், கிளியோபாத்ரா.
    ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸருக்கும், அவரது ரோமானியப் பழைய நண்பன் பாம்ப்பேயிக்கும் நடந்த போரில், டாலமி சீஸரின் பக்கமிருந்து பாம்ப்பேயின் படுகொலைக்குக் காரணமானான். பாம்ப்பே டாலமி உதவியால் கொல்லப் பட்டதை விரும்பாத சீஸர் கோபப்பட்டு முடிவில் டாலமியைத் தண்டிக்க முற்படுகிறார்! கிளியோபாத்ராவும், டாலமியும் தன் முன் வரவேண்டும் என்று சீஸர் ஆணையிட்டார். சிரியாவிலிருந்து வெளியேறி மறைமுகமாகச் சீஸரைத் தனியாகச் சந்தித்தாள் கிளியோபாத்ரா. சீஸரைத் தன் மேனி அழகால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்திப் பலிவாங்கும் திட்டத்தில் வெற்றியும் பெறுகிறாள். சீஸர் டாலமி செய்த சில தீவிரக் குற்றங்களுக்குக் கொலைத் தண்டனை விதிக்கிறார். முடிவில் கிளியோபத்ரா சீஸரின் உதவியால் எகிப்தின் பட்டத்து ராணியாக மகுடம் சூடுகிறாள்.
    மூன்று ஆண்டுகள் சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. குழந்தைக்கு டாலமி சீஸர் என்று பெயரிடுகிறாள். ரோமாபுரியில் கல்பூர்ணியாவை ஏற்கனவே திருமணம் செய்த சீஸருக்குப் பிள்ளை யில்லாத ஒரு குறையைக் கிளியோபாத்ரா தீர்த்தாலும், அவரது கள்ளத் தனமான தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் பலர் ஏற்று கொள்ள வில்லை! அன்னிய மாதுடன் உறவு கொண்ட சீஸர் மீது ரோமாபுரிச் செனட்டர் பலருக்கு வெறுப்பும், கசப்பும், கோபமும் உண்டானது! முடிசூடிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டார். கிளியோபாத்ரா குழந்தையுடன் கோலகலமாக ரோமுக்குச் சென்று சீஸருடன் தங்கிய சில தினங்களில், செனட்டர்கள் சிலர் மறைமுகமாகச் செய்த சதியில் சீஸர் கொல்லப் பட்டார். உயிருக்குப் பயந்த கிளியோபாத்ரா உடனே சிறுவனுடன் எகிப்துக்குத் திரும்பினாள்.

    சீஸர், கிளியோபாத்ரா, அண்டனி
    சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகிச் சதிகாரர் அனைவரும் மார்க் அண்டனியால் ஒழிக்கப் படுகிறார். மார்க் அண்டனி, அக்டேவியன், லிபிடஸ் ஆகிய மூவரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவுகிறது. கிளியோபாத்ரா ரோமாபுரி விசாரணைக்கு மீள வேண்டும் என்ற மார்க் அண்டனியின் உத்தரவை மீறுகிறாள். பிறகு நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்கு வரும் அண்டனியைத் தன் கவர்ச்சியால் மயக்கித் திறமையுடன் அவனையும் தன் காதல் அடிமையாய் ஆக்குகிறாள் கிளியோபாத்ரா. ஏற்கனவே அக்டேவியான் தமக்கையை மணந்த அண்டனி, எகிப்தில் கிளியோபாத்ராவை மணந்து கொள்கிறான். அண்டனியின் காதல் தேனிலவு நீடித்து கிளியோபாத்ரா இரண்டு குழந்தைகளைப் பெறுகிறாள்.
    சீஸருக்கு ஏற்பட்ட கதி அண்டனிக்கும் உண்டாகுகிறது. ரோமானிய செனட்டர்களின் சினத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை அண்டனியுடன் போர் தொடுக்கிறது! போரிட்டு வெற்றியும் அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன அண்டனி தற்கொலை செய்து கொள்கிறான். அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ரா மகனைத் தப்ப வைத்து, நாகத்தைத் தனது மார்பின் மீது தீண்ட விட்டு முடிவில் தானும் சாகிறாள். . இறக்கும் போது அவளுக்கு வயது 39.

    கிளியோபாத்ரா நாடகப் படைப்பு:

    ஆங்கில நாடக மேதைகள் பெர்னார்ட்ஷா எழுதிய “சீஸர் & கிளியோபாத்ரா”, ஷேக்ஸ்பியர் எழுதிய, “ஜூலியஸ் சீஸர்”, “அண்டனி & கிளியோபாத்ரா” ஆகிய முப்பெரும் நாடகங்களை ஓரளவுச் சுருக்கித் தமிழில் கிளியோபாத்ரா என்னும் ஒற்றை நாடகமாக எழுத விரும்புகிறேன். நான் மதுரைக் கல்லூரியில் படித்த (1950-1952) ஆண்டுகளில் எனக்கு ஷேக்ஸ்பியரின் நாடகம், “ஜூலியஸ் சீஸர்” ஆங்கிலப் பாட நூலாக அமைந்தது. அப்போது அந்த நாடகத்தின் உன்னதப் படைப்பான “அண்டனியின் அரிய சொற்பொழிவைத்” [Antony’s Oration] தமிழாக்கம் செய்தேன். அந்த வேட்கை மிகுதியால் இப்போது கிளியோபாத்ராவின் முழு வரலாற்றை நாடகமாகத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்க முற்படுகிறேன்.

    பெர்னார்ட்ஷா தனது நாடகம் “சீஸர் & கிளியோபாத்ரா” ஆரம்பத்தில் அவரிருவரும் முதன்முதல் சந்திக்கும் தளத்தையும், நிகழ்ச்சியையும் மாற்றி யிருக்கிறார். மனிதத் தலைச் சிங்கத்தின் [Sphinx] அருகில் ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாத போது முதன்முதல் சந்திப்பதாகவும், அப்போது சீஸர் தன்னை யாரென்று சொல்லாமல் நழுவுவதாகவும் காட்டியுள்ளார். மெய்யாக வரலாற்றில் நடந்தது முற்றிலும் வேறானது. மேலும் பெர்னாட்ஷா தன் நாடகத்தில் சீஸரைச் சந்திக்கும் போது, கிளியோபாத்ராவின் வயதை 17 என்று காட்டுகிறார். ஆனால் உண்மையில் அப்போது அவளது வயது 20 அல்லது 21 என்பது தெரிய வருகிறது! மேலும் கிளியோபாத்ராவை வெறும் கவர்ச்சியை மட்டும் பயன்படுத்தித் தானும் காதலில் மயங்கி ஆடவரை வசப்படுத்தும் மங்கை யாகவும், கூரிய மதியில்லாத பெண்ணாகவும், சிறு வயதிலே கெட்ட பழக்கங்களில் ஊறிப் போன மாதாகவும் காட்டுகிறார். ஆனால் மெய்யான கிளியோபாத்ரா மிகவும் கல்வி ஞானம் உள்ளவள்; வனப்பு மிகுந்த வனிதையாக இல்லாவிட்டாலும், அவள் வசீகரம் மிக்கவள். இனிய குரலில் சுவையாகப் பேசிப் பகைவரையும் நண்பராக்கும் வல்லமை கொண்டவள். போர் ஞானம் உள்ளவள். ஏழு மொழிகள் பேசும் திறமை பெற்றவள். நான் எழுதும் நாடகத்தில் கூடியவரை மெய்யாக நிலவி வந்த கிளியோபாத்ரா, ஜூலிய சீஸர், மார்க் அண்டனி, அக்டேவியன் ஆகியோரைத்தான் காட்ட விரும்புகிறேன்.

    +++++++++++++++++++++++++++++

    வயது ஏறினும் வாடாது அவள் மேனி
    வழக்க மரபுகளால் குலையாதவள் எழில்.
    வரம்பிலா விதவித வனப்பு மாறுபாடு!
    அவளது உடல் வனப்பை விளக்கப் போனால்,
    எவரும் சொல்லால் வர்ணிக்க இயாலாது !
    தோரணம் தொங்கும் அலங்காரப் பந்தலில்
    ஆரணங்கு படுத்திருந்தாள், பொன்னிற மேனி !
    இயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பம் அவள்,
    வீனஸ் அணங்கினும் மேம்பட்ட சிலையவள்!
    வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

    பெர்னார்ட் ஷாவின் சீஸர் & கிளியோபாத்ரா நாடகத் துவக்கவுரை

    [மெம்ஃபிஸில் எகிப்தின் தேவாதிபதி கழுகுத் தலையுடைய “ரா” தெய்வத்தின் ஆலயம் [Chief Egyptian Deity “Ra”] இருளடைந்து போயுள்ளது. அங்கிருந்து ஓர் அசரீரிக் குரல் எழுகிறது]
    “அமைதி! அமைதி! கேளுங்கள் நான் கூறப் போவதை! எகிப்த் நாடு ரோமாபுரிச் சாம்ராஜியத்தின் கீழிருந்தது. நான்தான் “ரா” தெய்வ அதிபதி. எகிப்த் நாட்டில் ஃபெரோ வேந்தர்களின் உன்னதப் பராக்கிரமக் கடவுளாக இருந்தவன், ஒரு காலத்தில்! நான் வணங்கப்பட்ட போது ரோம் நகரம் பண்டைய ரோமாபுரி, புதிய ரோமாபுரி என்று துண்டு பட்டிருந்தது! இரண்டிற்கும் இடையே ரோமானிய மாந்தர் நசுக்கப்பட்டுக் குழப்பத்தில் திண்டாடினர்! பண்டைய ரோமாபுரி ஏழ்மையானது, பேராசை பிடித்தது, கொடூரமானது! தீய எண்ணங்கள் மிக்கது! பாழடைந்த அதன் மனது குறுகியது! சிறுமையும், வறுமையும், இல்லாமையும் நிரம்பியது! பிச்சைக்காரன் குதிரையில் ஏறி அமர்ந்தைப் போலிருந்தது! குதிரையில் உட்கார்ந்த பிச்சைக்காரன் நேராக பிசாசுகளை நோக்கிச் செல்வான், என்று ஒரு பழமொழி சொல்கிறது!
    பண்டைய ரோமாபுரி வெறுங்கையில் வாளேந்திச் செல்வம் திரட்டும் வழியும், புகழடையும் முறையும் எதுவென்றால், ஏழ்மை நாடுகள் மீது படை யெடுத்துத் திருடிக் கொள்ளை அடிப்பது, மெலிந்தோரை அடிமையாக்கி மிதிப்பது! ரோமானியர் ஏழை மக்களின் நிலங்களைப் பறித்து ரோமாபுரியோடு சேர்த்துக் கொண்டே வந்தார். எகிப்தில் அவ்விதம் ரோமா புரிக்கு அடிமை ஆனபோது, நான் வேதனையில் குமுறிச் சிரித்தேன். காரணம், ரோமானியர் சாம்ராஜியம் பெருகிக் கொண்டே வருகையில், சிறுத்துப் போன அவரது நெஞ்சங்களின் பரிமாணம் மாறாமல் அப்படியே இருந்தது! அடிக்க அடிக்கத் தலை குனியும் எகிப்துக்கு ஆதரவாக ஜூலியஸ் சீஸர் விஜயம் செய்தார்.
    ரோமானிய மாந்தர் இரண்டுபட்ட ரோமுக்கு இடையே முரண்டு செய்த போது, வல்லமை கொண்ட போர்த் தளபதி பாம்ப்பி என்பவர் ரோமாபுரியில் மேலோங்கி வந்தார். பாம்ப்பி பண்டைய ரோமைக் கட்டுப்படுத்தி ஆண்டுவந்த தளபதி! படையாட்கள் யாவரும் நோக்கிப் போவது மரணத்தை! படைத் தீரர்களே சமூகத்தில் மேலோங்கி வரமுடியும்! பிறகு அதே சமயத்தில் போர்த் தளப்தி ஜூலியஸ் சீஸர் மேலோங்கி வந்தார். ஆனால் அவர் புதிய ரோமாபுரியின் தீரர்! கடவுளாகப் போற்றப்படும் ஃபெரோ மன்னரின் எகிப்தியப் பரம்பரைகள் புதிய ரோமையும், புதிய ரோமா புரியின் வீரர் ஜூலியஸ் சீஸரையும் ஆதரித்து வரவேற்றனர்! பாம்ப்பேயின் நண்பரான ஜூலியஸ் சீஸர் எகிப்திய மன்னர் சார்பில் பண்டைய ரோமின் குறுகிய கட்டுப்பாடுக்கு அப்பால் புதிய வழியில் சென்றார். சீஸர் ஒரு பெரும் பேச்சாளர், சிறந்த அரசியல்வாதி! அண்டை நாடுகளைக் கைப்பற்றிப் பொன்னும், பொருளும் ஏராளமாகச் சேமித்து ரோமில் கொட்டினார்! மேலும் நாடுகளைக் கைப்பற்றிப் போர் வெற்றிகளை அடுத்தடுத்துச் சீஸர் கொண்டு வரவேண்டும் என்று ரோமானியர் எதிர்பார்த்தனர். சீஸர் அந்த வாணிபத்தில் இறங்கி வெற்றிமேல் வெற்றி பெற்றுப் போரில் பலரைக் கொன்றார். கிரேக்க வீரர் மகாஅலெக்சாண்டரைப் போல், வெற்றிப்படைத் தீரனாகப் பேரும் புகழும் பெற்றுத் தன் பெயரை நிலைநாட்டினார்.
    ஆனால் ரோமானியர் சட்டம், கடமை பற்றி எப்போதும் பேசிய பாம்ப்பியின் மீது சலிப்புற்றனர். “பண்டைய ரோமின் கடூரச் சட்டங்களை முறிக்க வேண்டும். அப்போது தான் நான் புதிய ரோம சம்ராஜியத்தை ஆள முடியும்! அவ்விதம் நேராவிட்டால் கடவுள் எனக்களித்த நாடாளும் கொடைப்பரிசு பலன் தராது அழிந்து விடும்,” என்று சீஸர் கலங்கினார். நாளடைவில் நண்பர்கள் பகைவர் ஆயினர்! பாம்ப்பி மறுத்துக் கூறினார்: “சட்டந்தான் எல்லாவற்றும் மேலானது. அதை நீ முறித்தால், நீ உயிரிழக்க வேண்டிய திருக்கும்.” என்று சீஸருக்கு எச்சரிக்கை செய்தார்! சீஸர் நிமிர்ந்து சொன்னார், “சட்டத்தை முறிக்கிறேன் நான்! யார் என்னைக் கொல்ல வருகிறார் என்று பார்க்கிறேன்,” என்று சவால் விட்டு சட்டத்தை முறித்தார்.

    பழைய ரோமின் விதிகளைப் பாதுகாக்கப் பாம்ப்பி பெரும் படை திரட்டிச் சீஸர் மீது போர் தொடுத்தார். சீஸர் ஏட்டிரியாடிக் கடலைத் தாண்டி நழுவி ஓடி விட்டார்! சீஸரைக் கவிழ்த்து, உலகத்தின் முன்பு அவர் முகத்தில் கரியைப் பூச பழைய ரோம் புறப்பட்டது! அதே சமயத்தில் சட்டத்தைப் பின்பற்றும், உன்னத உள்ளம் படைத்த பாம்ப்பியை உயர்த்தினர், பழைய ரோமானியர். பாம்ப்பி சீஸரை விரட்டிக் கொண்டு எகிப்துக்குச் சென்றார். சீஸர் பாம்ப்பியை எதிர்த்து எகிப்தில் போரிட்டார். கடைசியில் இரண்டு ரோமனியப் படைகளும் மோதின! பாருங்கள் பாம்ப்பியின் ரோம் ஒருபுறம்! சீஸரின் ரோம் எதிர்ப்புறம்! இரண்டில் எப்போர் வீரன் மிக்க வலிமை கொண்டவனோ, எகிப்து அவனோடு சேர்ந்து கொண்டு நலிந்தவனை நசுக்க முற்பட்டது. போரின் முடிவில் பாம்ப்பியின் பேராற்றல் நொறுங்கிச் சிதைந்தது. பாம்ப்பியை வஞ்சகமாக வரவேற்ற ரோமானியத் தளபதி லூசியஸ் செப்டிமியஸ் அவனைத் தோற்கடித்தான். முடிவில் பாம்ப்பி கொல்லப் படுகிறான். எகிப்து வெற்றி வீரர் சீஸரை வரவேற்று உபசரித்தது!
    ரோமானியரின் உட்புறச் சண்டைகளைக் கேட்டு சலிப்படைந்தீரா? பாருங்கள், இதோ வருகிறாள், கிளியோபாத்ரா! அந்த ஒழுக்கமற்ற நங்கையின் கதையைக் கேட்க வேண்டுமா? வசீகர மங்கை கிளியோபாத்ராவின் வரலாறைக் கேட்க ஆசைப் படுகிறீரா? அவள் வாலிபம் பெறாத ஓர் வனப்பு மங்கை! ஆயா ஒருத்தி ஆட்டிப் படைக்கும் கைப்பொம்மை அவள்! எமது எகிப்து நாட்டில் சீஸர் இப்போது கால்வைத்திருக்கிறார். இனிமேல் வரும் கதையை நான் சொல்ல மாட்டேன். நீங்களே அதைக் காணப் போகிறீர்! அமைதியாக அமர்ந்து நாடகத்தைப் பாருங்கள். வருகிறேன் நான்! தயவு செய்து எனக்குக் கைதட்டாதீர்!
    ******************************

    அங்கம்: 1 பாகம்: 2
    நாடகப் பாத்திரங்கள்:

    ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
    கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
    டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
    •பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
    போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [40 வயது]
    தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [50 வயது]
    அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [35 வயது]
    பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
    ரூஃபியோ: சீஸரின் லெஃப்டினன்ட் [40 வயது]
    லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]

    அபெல்லோடோரஸ்: ஒரு ஸிசிலியன்
    பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
    பெல் அஃப்பிரிஸ்: மெம்ஃபிஸ் “ரா” தேவாலயத்தின் மதாதிபதி.
    ரோமானியப் படையாளிகள்.
    கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
    எகிப்தின் படையாளிகள்

    நாடகக் காலம், நேரம், இடம்:
    கி.மு. 48. எகிப்தின் நீள நைல் நதிக்கருகில் உள்ள பாலைவனம். ஒளிமிக்க பௌர்ணமி முழுநிலவு பொங்கி எழுகிறது. நீல நிற வானில் காளான்கள் முளைப்பது போல் விண்மீன்கள் விழித்தெழுகின்றன. பிரமிட் பின்னால் நிற்க, முன்னால் பிரம்மாண்டமான மனிதத் தலைச் சிங்கம் படுத்திருக்கிறது!
    நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், அவரது லெஃப்டினன்ட் ரூஃபியோ, ரோமானியக் காவலர் சிலர், கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன், எகிப்திய காவலர் சிலர் சிங்கச் சிற்பத்தின் அருகே நடமாடி வருகிறார்கள். திடகாத்திரமும், உடல் உறுதியும் படைத்த பெல்ஸானர் தூரத்தில் வரும் ரோமானியப் படைவீரர் கூட்டத்தைக் கண்டு வியப்புற்று நிற்கிறான்.
    பெல்ஸானர்: அதோ ரோனியப் படையினர்! யாரது ரோமானியப் படைகள் முன்னே பீடு நடையிட்டு வருவது? எங்கோ பார்த்த முகம் போல் தெரிகிறது. யாராக இருக்க முடியும்? போருடை அணியாத வயதான மனிதராகத் தெரிகிறது! அடே அப்பா! என்ன உயரம்? என்ன கம்பீரமான தோற்றம்? பின்னால் வருவர் யாரென எனக்குத் தெரியும். ராணுவ உடையில் இருப்பவர் ரூஃபியோ. ஜூலியஸ் சீஸரின் ரோமானிய லெஃப்டினென்ட்! ரூஃபியோவுக்கு முன்னால் சிங்கம் போல் நிமிர்ந்து வருபவர் யார்?
    உதவிக் காப்டன்: காப்டன்! பார்த்தால் ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸர் போல் தெரிகிறது. ஆமாம், அவருக்குப் பின்னால் வருபவர் நிச்சயம், லெஃப்டினன்ட் ரூஃபியோதான். ஆனால் சீஸர் எதற்காக போருடை யின்றி, மாறு வேடத்தில் வருவது போல் வர வேண்டும்? … அதோ சீஸர் சிங்கச் சிற்பத்தின் முன்பாக நிற்கிறார். மனிதச் சிங்கத்தை உற்று உற்றுப் பார்க்கிறார் சீஸர்! அதன் கம்பீரத் தோற்றத்தைக் கண்டு பிரமித்து நிற்கிறார்!

    ஜூலியஸ் சீஸர்: [பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச் சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கி] மனிதச் சிங்கமே! கால வெள்ளம் அடித்துச் செல்லாத ஸ்ஃபிங்ஸ் சிற்பமே! பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே! வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாக நிமிர்ந்து கண்ணிமைக்காது படுத்திருக்கிறாய்! முதிய உன் வயதுக்கும், பெருத்த உன் வடிவுக்கும் நான் தலை குனிந்து வணங்குகிறேன். பல நாடுகளைக் கைப்பற்றி நான் இப்போது உன் முன் நிற்கிறேன். உன் நாட்டை எங்கள் ரோமாபுரி அடிமைப் படுத்தினாலும், உன் முன் நான் தவழ்ந்து வரும் ஒரு சிறுவனே! பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டி ஃபெரோ மன்னர் உன்னைப் பாலைவனத்தில் உருவாக்க எத்தனை ஆண்டுகள் எடுத்தனரோ? எத்தனை ஆயிரம் பணியாட்கள் உன்னையும், உன் பின்னால் நிற்கும் பிரமிடையும் எழுப்பினாரோ? எத்தனை பேர் உங்களைப் படைக்கும் போது செத்தனரோ? உன்னை விட வயதில் நான் சின்னவன் ஆயினும், இந்தப் பாலை வனத்தில் உனக்கு நிகரானவன் நான்! சமமான வல்லமை படைத்தவன் நான்! நீ படுத்தே கிடக்கிறாய்! போர் தொடுத்தே நான் வாழ்கிறேன்! பொறுமையாக அமர்ந்து வேடிக்கை பார்க்கிறாய் நீ!
    போராடிக் களைத்து ஓய்வெடுக்க வந்துள்ளேன் நானிங்கு! மகத்தான மனிதச் சிங்கமே! நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! சிறுவனாக உள்ள போது நான் உன்னைப் பற்றி அறிவேன்! உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு! இன்று அக்கனவு மெய்யானது! உங்கள் எகிப்து நாட்டுக்கும் நான் ஓர் அதிபதி! ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளம்! ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு! ரோம் உங்களது நாட்டால் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது! ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று! உன் மகத்துவம், உன்னதம் வாழ்க! உனது நாட்டுக்கு இரண்டு மன்னர்! ஆண் மன்னர் டாலமி! பெண் மன்னர் கிளியோபாத்ரா! அவர்களிருவரும் ஒருவர் முகம் ஒருவர் பாராமல், ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட விழிப்பாக உள்ளார்! யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை! அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு 12 வயதாமே! அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா? விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான்? ஆமாம் கிளியோபாத்ராக்கு 20 வயதாமே! கவர்ச்சி நங்கையை நான் சந்திக்க வேண்டும். எங்கே ஓடிவிட்டாள் உங்கள் ராணி?

    +++++++++++++++++

    அங்கம் -1 பாகம் -3
    அவளது கண்கள் தீவிர சக்தி வாய்ந்தவை!
    அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை!
    வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவை!
    வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்!

    ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love]

    “வாழ்க்கையில் நடந்த தொடர் நிகழ்ச்சிகள் யாவும் தானாக நேர்ந்த விளைவுகள் அல்ல! அவை ஒவ்வொன்றும் உள்ளத் தூண்டலின் தேவையால்தான் ஏற்பட்டது!”
    ஹன்னா ஸெனிஷ், யூதப் பெண் கவிஞர் [Hanna Senesh (1921-1944)]

    நாடகப் பாத்திரங்கள்:
    ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
    கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
    டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
    •பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
    போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [40 வயது]
    தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [50 வயது]
    அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [35 வயது]
    பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
    ரூஃபியோ: சீஸரின் லெ•ப்டினன்ட் [40 வயது]
    லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
    அபெல்லோடோரஸ்: ஸிசிலியன்
    மற்றும்:

    பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
    பெல் அ•ப்பிரிஸ்: மெம்•பிஸ் “ரா” தேவாலயத்தின் மதாதிபதி.
    ரோமானியப் படையாளிகள்.
    கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
    எகிப்தின் படையாளிகள்
    காலம், நேரம், இடம்:
    கி.மு. 48. எகிப்தின் நீள நைல் நதிக்கருகில் உள்ள பாலைவனம். ஒளிமிக்க பௌர்ணமி முழுநிலவு பொங்கி எழுகிறது. நீல நிற வானில் காளான்கள் முளைப்பது போல் விண்மீன்கள் விழித்தெழுகின்றன. பிரமிட் பின்னால் நிற்க, முன்னால் பிரம்மாண்டமான மனிதத் தலைச் சிங்கம் படுத்திருக்கிறது!
    நாடகப் பாத்திரங்கள்:
    ஜூலியஸ் சீஸர், அவரது லெஃப்டினன்ட் ரூஃபியோ, ரோமானியக் காவலர் சிலர், கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன், எகிப்திய காவலர் சிலர் சிங்கச் சிற்பத்தின் அருகே நடமாடி வருகிறார்கள். திடகாத்திரமும், உடல் உறுதியும் படைத்த பெல்ஸானர் தூரத்தில் வரும் ரோமானியப் படைவீரர் கூட்டத்தைக் கண்டு வியப்புற்று நிற்கிறான்.
    ஜூலியஸ் சீஸர்: [பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச் சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கி] மனிதச் சிங்கமே! கால வெள்ளம் அடித்துச் செல்லாத சிற்பமே! பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே! வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாகக் கண்மூடாது நிமிர்ந்து படுத்திருக்கிறாய்! நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! சிறுவனாக உள்ள போது நஉன்னைப் பற்றி அறிவேன்! உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு! அக்கனவு மெய்யானது! உங்கள் எகிப்து நாட்டுக்கும் நான் ஓர் அதிபதி! ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளமாகி விட்டது! ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு! உங்களது நாட்டால் ரோம் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது! ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று! உன் மகத்துவம், உன்னதம் வாழ்க! உனது நாட்டுக்கு இரண்டு மன்னர்! ஆண் மன்னர் டாலமி! பெண் மன்னர் கிளியோபாத்ரா! அவர்களிருவரும் ஒருவர் முகம் ஒருவர் பாராமல், ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்டத் துணிந்து விட்டார்! யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை! அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு பதினைந்து வயதாமே! அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா? விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான்? கிளியோபாத்ராக்கு வாலிப வயதாமே! கவர்ச்சி நங்கையை நான் சந்திக்க வேண்டும். எங்கே ஓடிவிட்டாள் உங்கள் ராணி?
    [கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன் மற்றும் எகிப்த் காவலர் ரோமானியரை நெருங்கி ஜூலியஸ் சீஸருக்கு ராவணுவ முறையில் வணக்கம் செய்கிறார்கள்]
    பெல்ஸானர்: [சீஸர் கையைக் குலுக்கி] வருக, வருக ரோமாபுரித் தளபதி அவர்களே! எகிப்து அரசு உங்களைக் கனிவுடன் வரவேற்கிறது! நான்தான் காப்டன் பெல்ஸானர். அரசி கிளியோபாத்ராவின் காப்டன். இவர்தான் உதவிக் காப்டன்.
    ஜூலியஸ் சீஸர்: [புன்னகையுடன்] கனிந்த வரவேற்புக்கு மகிழ்ச்சி. இவர்தான் ரூஃபியோ, லெஃப்டினென்ட் ரூஃபியோ. அரசி கிளியோபாத்ராவின் காப்டன் என்றால், அரசர் டாலமிக்கு வேறொரு காப்டனா?
    பெல்ஸானர்: ஆமாம் ஜெனரல். அக்கில்லாஸ் என்பவர் டாலமியின் போர்த் தளபதி. அரசர் டாலமிக்கு ஆசிரியர் ஒருவரும் உண்டு. தியோடோடஸ் என்பது அவர் பெயர். டாலமியின் முதல் மந்திரி அவர். அவரே அரசாங்க அதிகாரி. பல மொழிகளைக் கற்றவர். ஆனால் எங்கள் அரசி கிளியோபாத்ராவுக்கு ஏழு மொழிகள் எழுதப் பேசத் தெரியும். எகிப்திய மொழியில் எழுதவும், பேசவும் அறிந்த முதல் கிரேக்க அரசி அவர்.
    ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா எங்கே இருக்கிறார்? நான் அலெக்ஸாண்டிரியா போகிறேன். நான் கண்டு பேச வேண்டும் உங்கள் ராணியை. ஏற்பாடு செய்வீரா?
    பெல்ஸானர்: ஜெனரல் அவர்களே! நீங்கள் தேடிப் போக வேண்டாம். அவரே உங்களைக் காணத்தான் முயன்று கொண்டிருக்கிறார். மன்னர் டாலமி எங்கள் அரசியியை நாடு கடத்தி விட்டார்! சிரியா நாட்டில் வசித்து வருகிறார் தற்போது. ஆனால் அவர் சிரியாவில் எங்கே யிருக்கிறார் என்பதை அறிய முடியாது. அவருக்குச் சேதி அனுப்பவும் முடியாது! டாலமியின் ஒற்றர் அவர் ஒளிந்திருக்கு மிடத்தைக் கண்டால், அவரது உயிருக்கே ஆபத்து! அவரைத் தேடிக் காண்பதும் அத்தனை எளிதன்று. டாலமியின் ஓநாய்கள் எங்கள் அரசியைத் தேடி அலைகின்றன!
    ஜூலியஸ் சீஸர்: ஏனிப்படி உமது ராணியார் ஒளிந்து, ஒளிந்து உயிர் வாழ்கிறார்? யாரிடம் அத்தனை பயம்! டாலமிக்கு கிளியோபாத்ரா மீது ஏனிந்த வெறுப்பு? அவள் டாலமியின் ச்கோதரி அல்லவா?
    பெல்ஸானர்: டாலமியிடம்தான் பயம்! நாடு கடத்திய பிறகும் டாலமி தமக்கையை நசுக்கத்தான் காத்திருக்கிறார். பாலைவனத்தில் அலைய விட்ட பாவை நாளை அவர் உயிரைப் பறிக்க வரலாம் என்று டாலமி அஞ்சுகிறார்.
    ஜூலியஸ் சீஸர்: ஆச்சரியமா யிருக்கிறது. டாலமிக்கு அஞ்சுபவர் அரசி கிளியோபாத்ராவா? கிளியோபாத்ராவுக்கு அஞ்சுபவர் அரசர் டாலமியா? எகிப்தின் பால மன்னர்கள் ஒருவரை ஒருவர் பிடிக்கக் கண்ணாமூச்சி விளையாடுகிறாரா? யார் யாரை பிடித்துக் கவிழ்த்தப் போகிறாரோ? …. நான் எகிப்துக்கு வந்திருப்பதின் காரணம் டாலமி கிளியோபாத்ரா இருவரையும் ஒன்று சேர்ப்பதற்கே! ஒரு தந்தைக்குப் பிறந்த இருவரும் கைகோர்த்து எகிப்தை ஆள வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். அவ்விதமே ரோமா புரியும் ஆசைப் படுகிறது.
    பெல்ஸானர்: மதிப்புக் குரிய தளபதி அவர்களே! இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்தான்! கணவன் மனைவியாக எகிப்தின் விதிப்படித் திருமணம் புரிந்து கொண்டவர்தான்! ஆனால் இது மிகவும் சிக்கலான ஆட்சி! பிரச்சனை மிக்கது! ஆண் அரசர் போடும் ஒரு சட்டத்தைப் பெண்ணரசர் பிடிக்காமல் நிராகரிக்கிறார்! பெண்ணரசி போடும் சட்டத்தை டாலமி ஏற்றுக் கொள்வதில்லை! இருவருக்கும் இடையில் மக்கள் வேதனைப் படுகிறார்! இருவர் ஒரு நாட்டை ஆள முடியாது! ஒருவர் ஆள ஒருவர் மேற்பார்வை யிடலாம்! ஒருவர் ஆள ஒருவர் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்! ஆனால் ஒரு நாட்டுக்கிரு மன்னர் கூட்டாட்சி நடத்த முடியாது! யாராவது ஒருவர் ஆள்வதுதான் மதியுடைமை. வயதில் மூத்த, கல்வி ஞானமுள்ள, கலைப் பேறுள்ள எங்கள் அரசி கிளியோபாத்ராதான் நாட்டை ஆளத் தகுதி பெற்றவர்! டாலமி அடுத்தவர் ஆட்டி வைக்கும் கைப்பொம்மை ஆடி வருகிறார்! அவருக்கு வயது பதினைந்து! முகத்தில் இன்னும் பால் வடிகிறது! கல்வி அறிவு, உலக அனுபவம் டாலமிக்குப் போதாது! அவருக்கு எகிப்தைப் பற்றியும் அறிவு போதாது! ரோமைப் பற்றி எதுவும் அறியதவர்!
    ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ராவும் வாலிப மங்கை என்று கேள்விப் பட்டேன். பெண்ணரசி நாட்டை ஆள முடியுமா? கண்ணுக்கு மையிடும் மாதரசி, கட்டளை யிட்டுப் படைகளை நடத்த முடியுமா? மென்மை மிகுந்த பெண்ணரசி குதிரை ஏறி, வாள் வீசிப் போரிட முடியுமா? ஆயிரம் ஆயிரம் சேனைகளை ஆணையிட்டு நாட்டைப் பிடிக்க ஆசை உள்ளதா?
    பெல்ஸானர்: எமது அரசி மகா வீரர் அலெக்ஸாண்டர் வம்சா வழியில் பிறந்தவர்! மீன் குஞ்சுக்கு நீந்தத் தெரியுமா என்று கேட்கிறீர்! இருபது வயது அரசி கிளியோபாத்ராவுக்கு உள்ள திறமை நாற்பது வயது ரோமானியத் தளபதிக்குக் கூடக் கிடையாது! கணித அறிவு மிக்கவர். விஞ்ஞான அறிவு மிக்கவர். வானியல் ஞானம் உள்ளவர்! தினமும் படிக்கிறார். புதுப்புது மொழிகளைக் கற்கிறார். பூகோள ஞானம் மிக்கவர்! போர் புரியும் வல்லமை உடையவர். அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்துச் சென்று வென்றதைப் படித்தவர்! இந்தியாவுக்குப் பயணம் செய்யும் பாதைகளைக் கூடத் தெளிவாகத் தெரிந்தவர்!
    ஜூலியஸ் சீஸர்: ஆச்சரியப் படுகிறேன்! வாலிபத்தின் வாசலில் கால் வைத்த ஒரு பால்ய மங்கைக்கு இத்தனை ஆழ்ந்த அறிவா? மெச்சுகிறேன்! மகா வீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குப் போன பாதையை அறிந்தவர், நிச்சயம் மகா அறிவாளியாக இருக்க வேண்டும். கிளியோபத்ராவை நான் நேராகக் காண வேண்டும். உடனே ஏற்பாடு செய்வீரா?
    பெல்ஸானர்: ஜெனரல் அவர்களே! கிளியோபாத்ரா எங்கு ஒளிந்துள்ளார் என்று எனக்கே தெரியாது! எங்கள் அரசியைத் தனியாகக் காண்பது அத்தனை எளிய காரிய மில்லை! அவர் ஓரிடத்தில் இரண்டு நாள் தங்குவதில்லை! கொஞ்சம் பொறுங்கள். அவரிடத்தை முதலில் நான் தெரிந்தாக வேண்டும். தெரிந்த பின் உங்களுக்குத் தகவல் அனுப்புவேன்.
    *********************

    அங்கம் -2 பாகம் -4

    “கிளியோபாத்ரா நடை, உடை, பாவனைகளில் தென்படும் அவளது பண்பு நளினம், மாந்தரைச் சந்திக்கும் போது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் மெச்சும்படிப் பிரமிக்க வைக்கும். அவளது பேச ஆரம்பித்தால் பேச்சுக் குரலினிதாகிக் கேட்போரைக் கவர்ந்து விடும்”.

    சிஸெரோ [Cicero, on Cleopatra’s Death, First Century B.C]

    அவளது கண்கள் தீவிரக் கவர்ச்சி வாய்ந்தவை!
    அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை!
    வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவை!
    வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்!
    பேசத் துவங்கின் கேட்போர் எவரும்
    பகலிரவு மாறுவது அறியாமல் போவார்!
    கவர்ச்சி மொழியாள்! காந்த விழியாள்!
    வயது மலரும் அவள் வளமையில் செழித்து!
    பொங்கிடு மிளமை அங்க மனைத்தும்!
    அவள் புன்னகையில், ஆலயப் பட்டரும்
    வைத்தகண் வாங்காது சிலையாய் நிற்பார்!
    ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love]

    நேரம், இடம்:

    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

    நாடகப் பாத்திரங்கள்:

    பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூஃபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர்.

    காட்சி அமைப்பு:

    பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர்.

    போதினஸ்: [எழுந்து நின்று] அமைதி! அமைதி! எகிப்த் மன்னர் உங்களுக்கு ஓர் உரையாற்றப் போகிறார்! அமைதி! அமைதி! அவர் பேசுவதைக் கேளுங்கள். [அமர்கிறார்]
    தியோடோடஸ்: [எழுந்து] அரசர் முக்கியமான செய்தியை அறிவிக்கப் போகிறார். எல்லோரும் கேளுங்கள். [அமர்கிறார். அவையில் அரவம் ஒடுங்குகிறது]
    டாலமி: [எழுந்து நின்றதும், அவையில் பூரண அமைதி நிலவுகிறது] எல்லோரும் கேளுங்கள். நான் அறிவிக்கப் போகும் தகவல் உங்களுக்கு! காது கொடுத்துக் கேளுங்கள். கவனமாகக் கேளுங்கள். நான்தான் உங்கள் மன்னர் ஐயூலெடஸின் முதல் மைந்தன். எனது மூத்த சகோதரி பெரினிஸ் தந்தையைக் காட்டுக்குத் துறத்தி விட்டு நாட்டை ஆண்டு வந்தார். அது மன்னருக் கிழைத்த மாபெரும் அநீதி! … அடுத்து நான் என்ன சொல்ல வேண்டும் …. மறந்து விட்டேனே! [தியோடோஸையும், போதினஸையும் மாறி மாறிப் பார்க்கிறான்]
    போதினஸ்: [துணியில் எழுதப்பட்ட தகவலைப் பார்த்து] ஆனால் கடவுள்கள் வேதனைப்படக் கூடாது!
    டாலமி: ஆமாம். கடவுகள்கள் வேதனைப் படக் கூடாது! … (மெல்லிய குரலில்) எந்தக் கடவுள்? .. என்ன எனக்கே புரியவில்லை! … [போதினஸைப் பார்த்து] எந்தக் கடவுள் வேதனைப் படக் கூடாது? … சொல்லுங்கள். எனக்கே குழப்பம் உண்டாகுது!
    தியோடோடஸ்: அரசரின் பாதுகாவளர் போதினஸ் அரசரின் சார்பாகப் பேசுவார். தொடர்வார்.
    டாலமி: ஆமாம். போதினஸே பேசட்டும். கிளிப்பிள்ளை மாதிரி நான் புரியாமல் பேசக் கூடாது. தொடருங்கள் போதினாஸ். [டாலமி ஆசத்தில் அமர்கிறான்]
    போதினஸ்: [மெதுவாகத் தயக்கமுடன் எழுந்து தகவலைப் பார்த்து] மன்னர் உங்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான். நான் அரசர் கூற்றுக்குச் சற்று விளக்கம் சொல்கிறேன். •பரோ மன்னர் நமக்குக் கடவுள். ஆகவேதான் கடவுள்கள் வேதனைப்படக் கூடாது என்றார் மன்னர். அதாவது தந்தையைக் காட்டுக்கு அனுப்பி வேதனைப்பட விட்டு, தமக்கை நாட்டை ஆண்டதைக் குறிப்பிடுகிறார். தமக்கை தண்டிக்கப் படவேண்டும் என்றும் கருதுகிறார்.
    டாலமி: [சட்டென எழுந்து வேகமாக] இப்போது ஞாபகம் வருகிறது எனக்கு. அறிக்கையை நான் தொடர்கிறேன். … ஆமாம், கடவுள்கள் வேதனைப்படக் கூடாது! அந்த வேதனையைத் தவிர்க்க நமது சூரியக் கடவுள் ரோமிலிருந்து மார்க் அண்டோனியை எகிப்துக்கு அனுப்பி வைக்கிறார்.
    போதினஸ்: [மெதுவாக டாலமி காதுக்குள்] மார்க் அண்டனி யில்லை, ஜூலியஸ் சீஸர் என்று சொல்லுங்கள். எகிப்துக்கு வந்திருப்பது ஜூலியஸ் சீஸர்.
    டாலமி: ஆம்… மார்க் அண்டனி வரவில்லை. .. ரோமிலிருந்து ஜூலியஸ் சீஸர் எகிப்துக்கு அனுப்பப் பட்டிருக்கிறார். ரோமானியர் உதவியால்தான் மீண்டும் என் தந்தை மன்னரானார். தமக்கையின் தலை துண்டிக்கப் பட்டது. தந்தை மரணத்துக்குப் பிறகு மற்றுமோர் தமக்கை, கிளியோபாத்ரா எனக்குப் போட்டியாக வந்தாள். எகிப்தை என்னிடமிருந்து கைப்பற்ற முனைந்தாள்! எப்படி? என்னைக் கவிழ்த்தி விட்டு என் ஆசனத்தில் ஏற முற்பட்டாள்! என்னை யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது! இரவுக்கு இரவே அவள் தூங்கும் போது அவளைச் சிறைப் பிடித்து, நாடு கடத்தி விட்டேன்! நல்லவேளை, அவளைக் கொல்லாது அவிழ்த்து விட்டேன்! பாலைவனத்தை ஆளும்படி ஆணையிட்டேன்! பாவம் கிளியோபாத்ரா! பாம்புகளும், தேள்களும் நடமாடும் பாலைவனத்தில் வாழ வேண்டும்! பருவ மங்கை சாவாளா அல்லது பிழைப்பாளா, யார் அறிவார்? அவளுக்குத் துணையிருக்கக் காவலரை அளித்தேன். பாவம் கிளியோபாத்ரா! என்னருமை மனைவி அல்லவா அவள்? திருமணத்துக்கு முன்பு அவள் என் தமக்கை! திருமணத்துக்குப் பின்பு அவள் என் தாரம்! அவளைக் கொல்ல மனமில்லை.
    போதினஸ்: மகா மன்னரே! உங்களுக்கு பரிவு மிகுதி! கிளியோபாத்ராவை உயிரோடு விட்டது நம் தவறு! மீண்டும் வந்து உங்களைத் தாக்க மாட்டாள் என்பதில் என்ன உறுதி உள்ளது? தமக்கையானாலும் அஞ்சாமல் உங்களைத் தாக்குவாள்! மனைவியானாலும் கணவனைக் கொல்லத் துணிபவள் கிளியோபாத்ரா!
    டாலமி: கவலைப் பாடாதே போதினஸ்! அவள் என்னைக் கொல்ல மாட்டாள். நான் அறிவேன் அவளை. பாலை வனத்தில் எந்தப் பாம்பு தீண்டியதோ? எத்தனைத் தேள்கள் கொட்டினவோ? உறுதியாகச் சொல்கிறேன், அவள் உயிருடன் இல்லை! நம் ஒற்றர் கண்களுக்குத் தப்பி அவள் நடமாட முடியாது! உயிரோடு தப்பிவந்து அவள் எகிப்தில் தடம் வைத்தால், தலையைத் துண்டிக்குமாறு ஆணையிட்டிருக்கிறேன்.
    அக்கில்லஸ்: தெய்வ மன்னரே! கிளியோபாத்ரா உயிரோடிருக்கிறாள். என் காதில் விழுந்த செய்தி இதுதான்! கிளியோபத்ரா பாலைவனத்தில் சாகவில்லை! சிரியாவில் உயிரோடிருப்பதாக நான் அறிகிறேன். மந்திரக்காரி பிதாதீதா திறமையால், கிளியோபாத்ரா ஜூலியஸ் சீஸரைத் தன்வசப் படுத்தி விடுவாள்! ரோமானியப் படை உதவியால் உங்களைக் கவிழ்த்தி, எகிப்தின் ஏகமகா ராணியாகப் பட்டம் சூட்டிக் கொள்வாள்! அப்படிப் பேசியதாகக் கேள்விப் பட்டேன்.
    போதினஸ்: [கோபத்துடன் சட்டென எழுந்து] தேவ மன்னரே! ஓர் அன்னியத் தளபதி உங்கள் ஆசனத்தைப் பறிக்க நாம் விடக் கூடாது! ஜூலியஸ் சீஸரைக் கிளியோபாத்ரா தன்வசப் படுத்துவதற்கு முன்பு, நாம் அவளைப் பிடிக்க வேண்டும்! அவளது மூத்த தமக்கை போன உலகுக்கு அவளையும் அனுப்ப வேண்டும்! அக்கில்லஸ்! சொல்லுங்கள்! எத்தனை ரோமானியப் படை வீரர்கள் எகிப்தில் தங்கி யிருக்கிறார்? எத்தனை ரோமானியக் குதிரைப் படை வீரர்கள் இருக்கிறார்?
    அக்கில்லஸ்: ஜூலியஸ் சீஸருக்குப் பின்னால் மூவாயிரம் காற்படைகளும், ஓராயிரத்துக்கும் குறைவான குதிரைப் படைகளும் உள்ளன.
    [அதிகாரிகள் ஆரவாரம் செய்து கைதட்டுகிறார். திடீரென சங்கநாதம் முழங்க, வாத்தியங்கள் சத்தமிட ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸர் வருகை அறிவிக்கப் படுகிறது! முதலில் ரோமானிய லெ•ப்டினென்ட் ரூ•பியோ கம்பீர நடையில் அரண்மனைக்குள் நுழைகிறார். பின்னால் அணிவகுத்து ரோமனியக் காற்படை
    வீரர்கள் பின் வருகிறார்.]
    ரூஃபியோ: வருகிறார், வருகிறார் ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸர் வருகிறார். [ஓசை அடங்குகிறது]
    [டாலமி மன்னரைத் தவிர அரண்மனையில் யாவரும் எழுந்து ஜூலியஸ் சீஸருக்கு மரியாதை செய்கிறார்.]
    தியோடோடஸ்: [எழுந்து நிமிர்ந்து] மன்னாதி மன்னர் டாலமி ரோமானியத் தளபதியை வரவேற்கிறார்.
    [ராணுவ உடையில் ஜூலியஸ் சீஸர் நிமிர்ந்த நடையுடன் நுழைகிறார். தலை வழுக்கை தெரிவதை மலர் வலையத்தால் சீஸர் மறைத்துள்ளது தெரிகிறது. அவருக்கருகில் நாற்பது வயதுச் செயலாளர் பிரிட்டானஸ் நிற்கிறார். ஜூலியஸ் சீஸர் டாலமியை நெருங்கி, போதினஸை உற்றுப் பார்க்கிறார்.]
    ஜூலியஸ் சீஸர்: [டாலமி, போதினஸை மாறி மாறிப் பார்த்து] யார் மன்னர்? பால்யப் பையனா? அல்லது பக்கத்தில் நிற்கும் மனிதரா?
    போதினஸ்: நான் போதினஸ். என் பிரபுவின் உயிர்க் காவலன். [டால்மியைக் காட்டி] மகா மன்னர் டாலமிக்கு அருகில் நிற்பவன்.
    [டாலமி உட்கார்ந்து கொண்டே சிரிக்கிறான்]
    ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன் டாலமியின் முதுகைத் தட்டி] மெச்சுகிறேன் டாலமி! உலகமறிந்த வீரருக்குக் கிடைக்காத உன்னத பதவி உமக்குக் கிடைத்திருக்கிறது! என் தமையனின் மகன் அக்டேவியன் போல் நீ இருக்கிறாய்! அவனுக்கும் உன்னைப் போல் உலக அனுபவ மில்லை! நீ எகிப்தின் வேந்தன்! அவன் ரோமாபுரியின் வீரன்! ஆனால் பிற்கால வேந்தன்! இல்லை, பிற்காலத் தளபதி! ரோமானியருக்கு ஏனோவேந்தர்களைப் பிடிக்காது!
    டாலமி: எகிப்தின் மன்னர், கடவுளுக்கு நிகரான கடவுளை சீஸருக்குப் பிடிக்குமா?
    ஜூலியஸ் சீஸர்: சீஸருக்குப் பிடிக்காமலா, சீஸர் எகிப்துக்கு வருகிறார்? எனக்கு டாலமியைப் பிடிக்கும். கிளியோபாத்ராவையும் பிடிக்கும்!
    டாலமி: எனக்கு கிளியோபாத்ராவை அறவே பிடிக்காது! சொல்லுங்கள் சீஸரே! நீங்கள்தான் ரோமாபுரியின் மன்னாதி மன்னரா?
    ஜூலியஸ் சீஸர்: டாலமி! சிறிது நேரத்துக்கு முந்திதான் சொன்னேன்! ரோமானியருக்கு மன்னர் என்னும் சொல்லே காதில் படக் கூடாது! நான் ரோமாபுரியின் முதன்மையான போர்த் தளபதி!
    டாலமி: [ஏளனமாய்க் கேலியுடன்] அட! நீங்கள் கோழிச் சண்டைத் தளபதியா? அதோ என் போர்த் தளபதி அக்கில்லஸ்! அவர்தான் உங்களுக்கு நிகரானவர்!
    ஜூலியஸ் சீஸர்: டாலமி! கடவுள் உமக்கு ஆசனம் மட்டும் அளித்து அனுபவத்தை எப்போது கொடுப்பாரே? நான் கோழிச் சண்டைக்குத் தளபதி அல்லன்! ரோமாபுரிச் சாம்ராஜியத்தின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் பராக்கிரமசாலி! நான் ரோமானியச் சக்கிரவர்த்தி!
    டாலமி: [மெதுவாக தியோடோடஸ் காதில்] அதென்ன வர்த்தி? சக்கிர… சக்கிரவர்த்தி?
    தியோடோடஸ்: அதாவது ரோமனியப் பெருமன்னர் என்று அர்த்தம்! சீஸர்தான் ரோமாபுரியின் மகா மன்னர்! அப்படி அழைக்கப்படா விட்டாலும், அவர்தான் மகா வேந்தருக்கு நிகரானவர்!
    டாலமி: அப்படியா [எழுந்து நின்று சீஸரின் கைகளைக் குலுக்குகிறான்] மகாமன்னர் ஜூலியஸ் சீஸருக்கு எகிப்த் நாடு வந்தனம் கூறி வரவேற்கிறது! வாருங்கள், வாருங்கள் வந்து அமருங்கள் ஆசனத்தில்.
    [ஜூலியஸ் சீஸர் டாலமிக்கு அருகில் உள்ள ஆசனத்தில் அமர்கிறார்.]
    *********************

    அங்கம் -2 பாகம் -5
    “அவளது கனிவுக்குரல் மொழிகள் வாத்திய இசைக் கருவியின் பல்வேறு நாண் கம்பிகள் போன்றவை. மாந்தரின் முகப்புகழ்ச்சி மொழிகள் நான்கு தரப்பின; ஆனால் அவளிட மிருந்தவையோ ஆயிரம்!”

    புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.]
    வயது மலரும் அவள் வளமையில் செழித்து!
    பொங்கிடு மிளமை அங்க மனைத்தும்!
    வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவள்!
    வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்!
    நானவளை வெறுப்பேன் ஆயினும் அவள்
    மோக உடலை நோக்குவேன்! கவரும்
    எழிலைச் சபிப்பேன் ஆயினும் அவளைத்
    தழுவக் கைகள் தானாய்த் தாவிடும்!
    ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love]
    வயது ஏறினும் வதங்காது அவள் மேனி!
    வழக்க மரபுகளால் குலையாது அவள் பாணி!
    வரம்பிலா விதங்களில் அவளோர் வனப்பு ராணி!
    வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]
    நேரம், இடம்:
    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.
    நாடகப் பாத்திரங்கள்:
    பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூஃபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகர்.
    காட்சி அமைப்பு: பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர். சிறிது நேரம் கழித்து ஆங்கே ஜூலியஸ் சீஸர், அவரது அரசாங்கச் செயலாளர் பிரிட்டானஸ் மற்றும் ரோமானியக் காவலர் சிலரும் நுழைகிறார்.
    [அகில்லஸ் ஜூலியஸ் சீஸர் முன்வந்து கைகுலுக்கிறான்]
    அக்கிலஸ்: [சிரித்துக் கொண்டு] ஜெனரல்! நான்தான் அக்கிலஸ். பூரிப்பான என்னினிய வரவேற்பு உங்களுக்கு! டாலமி மாவேந்தரின் படைத் தளபதி நான்! எகிப்த் நாட்டின் போர்த் தளபதி! ஏகத் தளபதி!
    ஜூலியஸ் சீஸர்: அப்படியா? உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மிக்க பூரிப்பே. நீங்கள்தான் எகிப்தின் ஏகத் தளபதியா? நேற்று நான் மனிதச் சிங்கத்தின் அருகில் சந்தித்த பெல்ஸானரும் எகிப்தின் படைக் காப்டன் என்று கூறினாரே! அப்படி என்றால் எகிப்துக்கு இணையான இரட்டைத் தளபதிகளா? போரென்று வந்தால் யார் படைகளை நடத்திச் செல்வார், நீங்களா அல்லது பெல்ஸானரா?
    அக்கிலஸ்: [வெடிச் சிரிப்புடன்] ஓ! பெல்ஸானரா? அவர் எனக்கு உதவிப் பதவியில் உள்ளவர்! ஆனால் எனக்கு இப்போது எதிரியாகப் போனார்! அவரது அரசி கிளியோபாத்ராவே தலைமறைவாக எங்கோ ஒளிந்து கொண்டுள்ளார்! பெல்ஸானர் அவளுடைய நிழலாக நடமாடுகிறார்! போர் வந்தால் யார் படைகளை நடத்துவார்? நல்ல கேள்வி! எகிப்தின் ஏகத் தளபதி நான்தான் நடத்திச் செல்வேன். பெல்ஸானர் உயிரும், உடலுமற்ற ஓர் எலும்புக் கூடு!
    ஜூலியஸ் சீஸர்: ஓ! அப்படியா சங்கதி? [தியோடோடஸைப் பார்த்து] .. நீங்கள் …யார்?
    தியோடோடஸ்: [எழுந்து நின்று கைகொடுத்து] நான் தியோடோடஸ்! வேந்தரின் பயிற்சியாளர்.
    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] ஓ! நீங்கள்தான் பாலகன் டாலமிக்கு அறிவூட்டும் அமைச்சரா? அரசாங்க நிர்வாகத்தில் அறிவுரை கூறி நடத்தும் நிபுணரா? நல்ல பணி உமக்கு. நீங்கள்தான் மெய்யாக எகிப்தின் போலி மன்னர்! … [டாலமியைப் பார்த்து] …. நானிங்கு வந்த காரணத்தைச் சொல்ல வேண்டுமே! ….. மாமன்னர் டாலமி அவர்களே! எமக்கு நிதி தேவைப்படுகிறது! ஆண்டாண்டு கப்பம் செலுத்தும் நாளும் கடந்து விட்டது! எத்தனை நாள் கடந்து விட்டது என்பதை விட, எத்தனை மாதம் என்று நான் சொல்வது நல்லது.
    டாலமி: [போதினஸைப் பார்த்து] என்ன தகாத புகாரிது? நாம் கப்பம் கட்டவில்லை என்று சீஸர் நம்மைக் குற்றம் கூறி நிதி கேட்கும் நிலைக்கு வைக்கலாமா? …[சீஸரைப் பார்த்து] சொல்லுங்கள், எத்தனை மாதம் ஆகிறது!
    ஜூலியஸ் சீஸர்: ஆறு மாதங்கள் ஓடி விட்டன! எங்கள் பொக்கிசம் காலி! செலவுக்குப் பணம் அனுப்ப நாங்கள் ரோமுக்குச் செய்தி அனுப்பும் நிர்ப்பந்தம் வந்துவிட்டது!
    போதினஸ்: [வருத்தமுடன்] ஜெனரல் சீஸர் அவர்களே! எங்கள் பொக்கிசமும் காலியாகப் போய்விட்டது! என்ன செய்வது? ஓராண்டு காலம் வரி வாங்கத் தவறி விட்டோம்! ஆறு மாதம் கப்பம் கட்டாமல் உங்கள் பொறுமையை முறித்ததற்கு எங்களை மன்னிக்க வேண்டும்! அடுத்த நைல் நதி அறுவடை வரும்வரை பொறுப்பீரா?
    ஜூலியஸ் சீஸர்: [வெகுண்டு எழுந்து] இந்த சாக்குப் போக்கெல்லாம் எதற்கு? எங்கள் பொறுமை எல்லை கடந்து விட்டது! இனி பொறுப்பதில்லை!
    டாலமி: [கோபமாக எழுந்து] என்ன நமது பொக்கிசமும் காலியா? என்னவாயிற்று நம் நிதி முடிப்புகள்?
    போதினஸ்: மகா மன்னரே! நாம் கிளியோபாத்ராவை நாடு கடத்தும் முன்பே அவள் நமது பொக்கிச நிதியைக் கடத்தி விட்டாள்!
    டாலமி: எனக்குத் தெரியாமல் போனதே! கள்ள ராணி! என் பொக்கிசத்தைக் களவாடிய கொள்ளை ராணி! … [அக்கிலஸப் பார்த்து] கிளியோபத்ரா எங்கு ஒளிந்திருக்கிறாள் என்று கண்டுபிடித்து, அவளைக் கொன்று வா! கொள்ளைப் பணத்தைக் கொண்டுவா! .. போ! .. அவள் எங்கிருந்தாலும் சரி! போய்ப் பிடி! அவள் எகிப்தில் கால் வைக்கக் கூடாது! ஆனால் நம்முடைய முழு நிதியையும் கைப்பற்றிக் கொண்டுவா! …. [சீஸரைப் பார்த்துக் கெஞ்சலுடன்] .. முடிந்தால் இநத முறை கிளியோபாத்ராவிடம் வாங்கிக் கொள்ளுங்கள்! அவளிடம் உள்ளது எங்கள் நிதி! அந்தப் பணம் உங்களைச் சேர்ந்தது! அவளும் எகிப்தின் அரசிதான்! மேலும் உங்களுக்கும் பிடித்தவள் அவள்! … அடுத்த முறை கப்பம் அளிப்பது எனது கடமை! ஒருமுறை டாலமி, ஒருமுறை கிளியோபாத்ரா என்று மாற்றி மாற்றி, நீங்கள் கப்பம் பெற்றுக் கொள்வதே நியாயமானது.
    ஜூலியஸ் சீஸர்: என்ன கேலிக் கூத்தாய்ப் போச்சு? பாலகர் டாலமி நியாயம் பேசுகிறாரா? இந்த பொறுப்பற்ற போக்கு எமக்குப் பிடிக்காது! ஒருவேளை கிளியோபாத்ரா செத்துப் போயிருந்தால்…!
    டாலமி: கப்பத்தை நான் கட்டி விடுகிறேன். கிளியோபாத்ரா செத்துப் போனாளா அல்லது உயிரோடிருக்கிறாளா வென்று உமது ஒற்றர்களை உளவறியச் சொல்வீர்! எமது ஆட்களும் அவளது எலும்புக் கூட்டை பாலை வனத்தில் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்! ஆனால் அவளது அழகிய மேனி உயிரோடு நடமாடி வருவதாகவே நான் கருதுகிறேன். சீக்கிரம் அவளைப் பிடித்தால், நிச்சயம் உங்கள் கப்பத் தொகையைக் கறந்து விடலாம்!
    பிரிட்டானஸ்: [அழுத்தமாக] கிளியோபாத்ரா உயிரோடிருக்கிறாளா, எலும்புக் கூடாய்ப் போனாளா என்பதைப் பற்றி எமக்குக் கவலை யில்லை! எங்கள் கண்ணில் அரசராகத் தெரிபவர் நீங்கள் ஒருவரே! கடத்தப் பட்ட கிளியோபாத்ராவைத் தேடிப் பிடிப்பது எமது பொறுப்பில்லை! அது உமது வேலை! எமக்குத் தேவை கப்பத் தொகை! சட்டப்படி எகிப்த் ரோமாபுரிக்குக் கப்பம் செலுத்த உங்கள் தந்தை மன்னராய் உள்ள போது கையெழுத்திட்டு ஒப்புக் கொண்ட உடன்படிக்கை! அந்த ஒப்பந்தத்தின்படி அப்பணத்தை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்வது சீஸரின் கடமை!
    டாலமி: [சீஸர்ப் பார்த்து] சட்டம் பேசும் இந்த ஞானியை நீங்கள் எமக்கு அறிமுகப் படுத்த வில்லையே!
    ஜூலியஸ் சீஸர்: [சற்று கனிவுடன்] டாலமி, இவர்தான் பிரிட்டானஸ், என் செயலாளர்! அரசாங்கச் செயலாளர்! நீங்கள் சொன்னது போல், ஐயமின்றி அவர் ஓரு சட்ட ஞானிதான்! அதோ அவர் ரூ•பியோ, எனது படைத் தளபதி. …[கோபமாக] அது சரி. இப்போது எனக்குத் தேவை 1600 டாலென்ட் நாணயம் [Talent]. அதுவும் உடனே தேவை! …. டாலமி! எம்முடன் விளையாடாதீர்! உமது பொறுப்பற்ற முறை எமக்குப் பிடிக்காது! பணத்தை வாங்காமல் யாமின்று வெளியேறப் போவதில்லை! …. நீவீர் தர வில்லையானால், எமது படையாட்கள் உமது பொன் ஆபரணங்களைப் பறிக்கும்படி நேரிடும்!
    போதினஸ்: [மனக் கணக்கிட்டு, பெருமூச்சுடன் கலங்கி] 1600 டாலென்ட் நாணயம் என்றால் 40 மில்லியன் ஸெஸ்டர்ஸ் [Sesterces]. ஜெனரல், அத்த¨னைப் பெரிய தொகை எமது பொக்கிசத்தில் இல்லை, நிச்சயம்!
    ஜூலியஸ் சீஸர்: [சற்று தணிவுடன்] கொஞ்சத் தொகைதான்! 1600 டாலென்ட் நாணயம் மட்டுமே! அதை ஏன் ஸெஸ்டர்ஸ் நாணயத்தில் மாற்றிப் பெரிது படுத்த வேண்டும்? டாலமிக்கு அதிர்ச்சி கொடுக்கவா? ஸெஸ்டர்ஸ் நாணயம் ஒன்றில் வெறுமனே ஒற்றைத் துண்டு ரொட்டி வாங்கலாம்!
    போதினஸ்: யார் சொன்னது? அது தப்பு! ஒரு ஸெஸ்டர்ஸ் நாணயத்தில் குதிரை ஒன்றை வாங்கலாமே. உங்கள் மதிப்பீடு மிகவும் கீழானது! தப்பானது! கிளியோபாத்ரா செய்த கலகத்தில் ஓராண்டு வரிகளை வாங்க முடியாமல் தவற விட்டது எங்கள் தப்புதான். எகிப்த் செல்வந்த நாடு! உங்கள் கப்பத்தைச் செலுத்தி விடுவோம், கவலைப் படாதீர்! சற்று பொறுங்கள்.
    ரூஃபியோ: [சற்று கோபமுடன்] போதினஸ்! போதும் உமது சாக்குப் போக்குகள்! எப்படி நாட்டை ஆள வேண்டும், வரி திரட்ட வேண்டும் என்று ஆலோசனை கூறுவது எமது வேலை யில்லை! ஏன் கால தாமதப் படுத்துகிறீர்? சீஸர் கோபத்தைத் தூண்டாதீர்!
    போதினஸ்: [கசப்புடன்] உலகைக் கைப்பற்றிய போர்த்தளபதி சீஸருக்குக் கப்பத் தொகை திரட்டும் சிறிய பணியும் உள்ளதா? கைச் செலவுக்குக் கூடப் பணமில்லாமல், இப்படி திடீரென கையேந்தி வரலாமா?
    ஜூலியஸ் சீஸர்: நண்பனே! உலகைக் கைப்பற்றிய தளபதிக்குக் கப்பத் தொகையைக் கறப்பதைத் தவிர முக்கியப் பணி வேறில்லை! நாமின்று பணம் வாங்காது இங்கிருந்து நகரப் போவதில்லை!
    போதினஸ்: [கவலையுடன்] என்ன செய்வது? கப்பத்தைக் கறக்க ஒற்றைக் காலில் நிற்கிறீர்! நாங்கள் ஆலயத் தங்கத்தைத்தான் உருக்கி நாணயமாக்கித் தர வேண்டும். குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். அதுவரைப் பொறுப்பீர்களா?
    ஜூலியஸ் சீஸர்: அப்படியானால் மூன்று நாட்கள் உங்கள் விருந்தினராய் நாங்களிங்கு தங்க வேண்டும். அத்தனை பேருக்கும் உணவும், மதுவும், படுக்கையும் அளிப்பீர்களா?
    டாலமி: [எழுந்து நின்று] நிச்சயம், நீங்கள் எங்கள் விருந்தாளி! மூன்று நாட்கள் என்ன? முப்பது நாட்கள் கூட எமது அரண்மனையில் அனைவரும் தங்கலாம். உண்டு, உறங்கி, மதுவருந்தி, ஆடிப்பாடி, இன்புற்று எமது அரண்மனை விருந்தினர் அறையில் தங்கலாம்! இப்போதே நாணய அச்சடிப்புக்கு ஆணையிடுகிறேன். [போதினஸ் காதில் ஏதோ சொல்ல அவர் விரைந்து செல்கிறார்]
    ஜூலியஸ் சீஸர்: எமக்குப் பணம் கிடைத்தால் போதும்! உமது அரசியல் பிரச்சனையையும் தீர்த்து வைக்கிறேன். … அதற்கு கிளியோபாத்ராவும் வருவது நல்லது! டாலமியும், கிளியோபாத்ராவும் சேர்ந்து எகிப்தை ஆள்வதையே யாம் விரும்புகிறோம். உமக்குள்ளிருக்கும் பகைமை யாம் அகற்றுவோம்!
    போதினஸ்: கிளியோபாதரா அலெக்ஸாண்டிரியாவில் இல்லை. சிரியாவுக்கு ஓடிவிட்டதாகக் கேள்விப் பட்டோம். உயிருக்கு அஞ்சாது அவள் எகிப்தில் கால் வைக்க மாட்டாள்! வைத்தால் அவள் தலையைக் கொய்ய எங்கள் படையாட்கள் வாளோடு தயாராக உள்ளார்! அவளில்லாமல்தான் நீங்கள் அரசியல் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். கிளியும், பூனையும் ஒன்றாக வாழுமா என்பது சந்தேகம்தான்!
    [அப்போது காவலன் ஒருவன் ஒரு ரத்தினக் கம்பள வணிகனை அழைத்து வருகிறான். வணிகனைத் தொடர்ந்து, மூச்சுத் திணறி அவனது கையாள் கனமான கம்பளத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு வருகிறான். கம்பளத்தை மெதுவாக இறக்கித் தரையில் விரிக்கிறான், கையாள். கம்பளத்திலிருந்து தாமரை மலர் போல ஒரு வனப்பு மங்கை, புன்னகையுடன் எழுகிறாள்.]
    ********************

    அங்கம் -2 பாகம் -6
    தேன்மொழி நாவால் நெகிழ வைப்பவள்!
    மீன்விழிக் கணையால் நெஞ்சைப் பிளப்பவள்!
    சூழ்ந்த கவர்ச்சி காந்த மண்டலம்! அவ்வலையில்
    வீழ்ந்தவர் மீண்டும் உயிர்தெழ மாட்டார்!
    வனப்பினில் மயங்கிக் கனவினில் அணைப்போர்
    மனதினில் நீங்கா ஓவியம் வரைபவள்!

    கிளியோபாத்ராவைப் பற்றி …
    “அவளது கனிவுக்குரல் மொழிகள் வாத்திய இசைக் கருவியின் பல்வேறு நாண் கம்பிகள் போன்றவை. மாந்தரின் முகப்புகழ்ச்சி மொழிகள் நான்கு தரப்பின; ஆனால் அவளிட மிருந்தவையோ ஆயிரம்!”
    புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.]
    நேரம், இடம்:
    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.
    நாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகர்.
    காட்சி அமைப்பு:
    [காவலன் ஒருவன் ஒரு ரத்தினக் கம்பள வணிகனை அழைத்து வருகிறான். வணிகனைத் தொடர்ந்து, மூச்சுத் திணறி அவனது கையாள் கனமான கம்பளத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு வருகிறான்.]
    வாயிற் காவலன்: [வாளை நீட்டி] நில்! யார் நீ? தோளில் எதைத் தூக்கிக் கொண்டு வருகிறீர்?
    கம்பள வணிகன்: நான் கம்பள வணிகன்! சிரியாவிலிருந்து வருகிறேன்! சிரியா மன்னர் விலை மதிப்பில்லா ஒரு கம்பளத்தை ரோமாபுரித் தளபதி சீஸருக்கு அனுப்பி யுள்ளார்! சீஸரிங்கு வந்துள்ளாய் நான் அறிந்தேன்! சிறப்பாக நெய்யப்பட்ட இந்தக் கம்பளத்தை நான் நேராக அவரிடம் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.
    வாயிற் காவலன்: அப்படியா? சற்று பொறு! நாங்கள் சீஸரிடம் வினாவி வருகிறோம். [உள்ளே ஒரு காவலன் செல்கிறான். சிறிது நாழி கழித்து வெளியே வருகிறான்]
    இரண்டாம் காவலன்: ரோபாபுரித் தளபதி கம்பளக் கொடையாளியை அழைத்து வரச் சொல்கிறார். [காவலன் கம்பள வணிகனையும், பணியாளியையும் உள்ளே சீஸர் முன்பாக அழைத்து வருகிறான்]
    கம்பளி வணிகன்: மகாமகா மேன்மை தங்கிய ஜெனரல் சீஸர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். எங்கள் சிரியாவின் மன்னர் விலைமிக்க இந்த கம்பளத்தைத் தங்களுக்கு அளித்துள்ளார்! ஏற்றுக் கொள்வீரா? முதன்முதல் தங்க கம்பிகளைப் பயன்படுத்தி நெய்த கம்பளமிது! ரோம சாம்ராஜியம் காணாத கம்பளமிது!
    ஜூலியஸ் சீஸர்: [கம்பளத்தை உற்று நோக்கி] அப்படியா? ஏற்று கொள்கிறேன். வெகு அழகான வேலைப்பாட்டைக் காண்கிறேன். இறக்கி வைத்துச் செல்! சீஸர் நன்றி கூறியதாக சிரியா மன்னருக்குச் சொல்! [ரூபியோவைப் பார்த்து] ரூபியோ கம்பளத்தை வாங்கி என்னறையில் வை! ரோமுக்கு மீளும் போது, மறக்காமல் படகில் ஏற்றிவிடு!
    கம்பளி வணிகன்: ஜெனரல் அவர்களே! இது ரோமாபுரிக்குப் போகும் கம்பளமில்லை! தங்கள் அலெக்ஸாண்டிரியா அறையை அலங்கரிக்க வேண்டியது! கம்பளத்தின் வெளிப்படைப்பு வேலைப்பாட்டைப் புகழ்ந்தீர்! அதன் உள்ளழகு வெளியழகை மிஞ்சுவது! நான் விரித்துக் காட்டலாமா? பார்த்தால் பூரித்துப் போவீர்!
    ஜூலியஸ் சீஸர்: வேண்டாம்! எனக்கு வேலை உள்ளது! சும்மா வைத்து விட்டுப் போ!
    கம்பளி வணிகன்: [பணியாள் கம்பளத்தைக் கீழிறக்கி வைக்க வணிகன் கவனமாக, மெதுவாகத் தரையில் அதை விரிக்கிறான். கம்பளத்துக் குள்ளிருந்து ஓரிளம் மங்கை புன்னகையுடன் உடலை முறித்துக் கொண்டு எழுகிறாள்! [அனைவரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகிறார்]
    ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] என்ன வேடிக்கையிது? பெண்ணை ஒளித்து வைத்து என்னோடு சிரியா மன்னர் பகடை ஆடுகிறாரா? ஈதென்ன கோமாளித்தனமாக உள்ளது? முதலில் இந்தப் பெண் யாரென்று சொல்ல வேண்டும்! எதற்காக இப்படி ஒளிமறைவில் என்னைக் காண வருகிறாள்? என்னால் இவளுக்கு ஆவதென்ன? அல்லது அவளால் எனக்கு கிடைப்பதென்ன? …யார் நீ? சொல்! கள்ளத்தனமாக கம்பளத்துக்குள்ளே ஏன் ஒளிந்து வந்தாய்? மாயக்காரியா? மந்திரக்காரியா? அல்லது சூனியக்காரியா? யார் நீ?
    கிளியோபாத்ரா: [எழுந்து ஒய்யாரமாக நின்று, புன்சிரிப்புடன்] மகாமகா சீஸர் அவர்களே! என்னை யாரென்று தெரியவில்லையா? அரச வம்சத்தில் பிறந்து அரசை யிழந்துவிட்ட அரசியைத் தெரிய வில்லையா?
    ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரியம் பொங்க] யார்? கிளியோபாத்ராவா? நம்ப முடியவில்லையே!
    டாலமி: [சினத்துடன்] ஜெனரல்! இவளொரு ஜிப்ஸி! நாடோடி! இவள் கிளியோபாத்ரா இல்லை! நிச்சயமாகக் கிளியோபாத்ரா இத்தனைக் கீழ்த்தரமாகக் கம்பளச் சுருளில் ஒளிந்து வரமாட்டாள்! அவள் நேராக வரும் ஒரு வீர மங்கை! இந்தக் கோமாளி வணிகன் யாரையோ பிடித்து வந்து எகிப்தின் அரசி கிளியோபாத்ரா வென்று ஏமாற்றுகிறான்! [அக்கிலஸைப் பார்த்து] வணிகனைச் சவுக்கால் அடி! அயோக்கியன்! [சீஸரைப் பார்த்து] ஜெனரல்! இந்த கூத்தாடிப் பெண்ணை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்! அவளை நான் தண்டிக்கிறேன்! [அக்கிலஸைப் பார்த்து] அக்கிலஸ்! அந்த நாடோடிப் பெண், அவள் கைக்கூலி வணிகன், பணியாள் மூவரையும் கைது செய் உடனே! யாரை ஏமாற்ற இந்த நாடகம்?
    கிளியோபாத்ரா: [எழுந்தோடி சீஸரின் பின்புறம் நின்று கொள்கிறாள்] மேன்மை மிகு சீஸர் அவர்களே! நான் நாடோடி யில்லை! நாடகம் போடவு மில்லை! நான் கிளியோபாத்ரா! அதோ! அந்தப் பாலகன் டாலமி! என் தமையன் அவன்! நான் மணம் புரிந்து கொண்டவன்! என்னைக் கொலை செய்ய எகிப்தியப் படைகளை அனுப்பிய என்னருமைக் கணவன்! நான் யாரென்று குருநாதர் தியோடோஸைக் கேளுங்கள்! அவர் உண்மை பேசுபவர்! நான் யாரென்று பாதுகாப்பாளி போதினஸைக் கேளுங்கள்! படைத் தளபதி அக்கிலஸைக் கேளுங்கள்! எப்போதும் டாலமி பொய் பேசியே ஏமாற்றுபவன்!
    ஜூலியஸ் சீஸர்: [தியோடோடஸைப் பார்த்து] யாரிந்த மங்கை? சொல்! [போதினஸைப் பார்த்து] யாரிந்தக் குமரி? சொல்! [அக்கிலஸைப் பார்த்து] யாரிந்த வாலிப மங்கை? சொல்!
    தியோடோடஸ்: ஜெனரல்! அவர் மகாராணி கிளியோபாத்ரா!
    போதினஸ்: ஆம் ஜெனரல்! அவர் எகிப்தின் அரசி கிளியோபாத்ரா!
    அக்கிலஸ்: மேன்மை மிகு சீஸர் அவர்களே! அவர் எங்கள் டாலமி மன்னரின் மனைவி கிளியோபாத்ரா!
    ஜூலியஸ் சீஸர்: [டாலமியைப் பார்த்து] பாலகனே! உன் கண்ணில் கோளாறா? அல்லது மூளையில் கோளாறா? உன் தமக்கையை நாடோடி என்று ஒதுக்கி விட்டாயே! ஏன் அவளைக் கூத்தாடி என்றுக் கேலி செய்தாய்? தந்தத்தில் செதுக்கிய இந்த அழகுச் சிலையா கூத்தாடி?
    டாலமி: [கெஞ்சலுடன்] கண்ணே கிளியோபாத்ரா! நலமா? சந்தனத் தண்டுபோல் தளதள வென்றிருந்த நீ எப்படித் தளர்ந்துபோய் மெலிவா யிருக்கிறாய்? பாலை வனத்தில் ஈச்சம் பழத்தைத் தின்று, நீரைக் குடித்தே வாழ்ந்தாயா? பாவம், உன்னைப் பாலை வனத்துக்கு அனுப்பாமல், அரண்மனைச் சிறையிலே நான் பூட்டி வைத்திருக்கலாம்! அரச குமாரியை அனாதை போல் திரிய விட்டது எனது தவறுதான்!
    கிளியோபாத்ரா: [சீஸரின் உடை வாளை உருவி, நேரே டாலமியை அருகி அதட்டலுடன்] அடே! அயோக்கியா! போதும் உன் பாசாங்கு! போதும் உன் பரிவு! என்னைக் கண்டு பாகாய் உருகாதே! உன்னைக் கண்டு என் நெஞ்சம் கொதிக்கிறது! இறங்குடா கீழே ஆசனத்தை விட்டு! இந்த தங்க ஆசனம் என் ஆசனம்! நான் அமர்ந்து எகிப்த் ராணியாய் அரசாண்டது! [டாலமி பயந்து நடுங்கி ஆசனத்தை விட்டு எழுகிறான். கிளியோபாத்ரா ஆசனத்தின் முன் நின்று வாளை ஓங்கி விரட்டுகிறாள்] டாலமி! ஓடுடா! உன் கழுத்தைக் காப்பாற்றிக் கொள்! [டாலமி ஓடிப்போய் சீஸரின் பின்னால் ஒளிந்து கொள்கிறான்] … உயிருக்குப் பயந்து ஓடும் ஓணான் நீ! என்னைச் சாகடிக்க நீ அனுப்பிய அதே பாலை வனத்துக்கு நான் உன்னைத் துரத்துகிறேன்! உலக அனுபவம் உண்டாகும் உனக்கு!
    டாலமி: [சீஸர் கையைப் பற்றிக் கொண்டு] தளபதி! என்னைக் காப்பாற்றுங்கள்! நான் பாலகன்! இந்தப் பாதகி என்னைப் பாலை வனத்துக்கு அனுப்புவதைப் பார்த்துக் கொண்டு நிற்காதீர்! ஐயோ! கருந்தேள் என்னைக் கடிக்கும்! கருநாகம் என்னைக் கொட்டிவிடும்! நான் ஆளா விட்டாலும், சாக விரும்பவில்லை! காப்பாற்றுவீர் என்னை!
    ஜூலியஸ் சீஸர்: [முகத்தைத் தடவி] டாலமி! நீ பாலகன்! உன்னைப் பாதுகாப்பது எம்பணி! கிளியோபாத்ராவை நீ பாலைக்கு ஏன் துரத்தினாய்? அவள் உன் உடன்பிறந்த தமக்கை! நீங்கள் இருவரும் கணவன் மனைவி வேறு! எகிப்தை ராஜா ராணியாய் நீங்களிருவரும் ஒன்றாக ஆள்வதையே நான் விரும்புகிறேன். அதற்காகதான் நான் அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்துள்ளேன்!
    கிளியோபாத்ரா: [கோபத்துடன் சீஸரை நோக்கி] தளபதி சீஸர் அவர்களே! உங்கள் ஆசை நிறைவேறாது! டாலமி! பாலகன் வடிவத்தில் காணப்படும் அயோக்கியன்! நாங்கள் இருவரும் ஒரே அரண்மனையில் நிம்மதியாகத் தூங்க முடியாது! எகிப்தை ஈரரசர் ஆள முடியும் என்று கனவு காணாதீர்! எகிப்தியர் இரண்டு அரசருக்குப் பணி புரிய இயலாது! ஒருவர் கழுத்தை ஒருவர் தேடும் இந்தக் கண்ணாமூச்சிப் போராட்டத்தில் யாராவது ஒருவர் கண்மூட வேண்டும்! நிச்சயம் அந்தப் பிறவி நானில்லை!
    ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] கிளியோபாத்ரா! போதும் நிறுத்து உன் பேச்சை! டாலமியைப் பலிவாங்க நீ புறப்பட்டு விட்டாய்! உங்களுக்குள் பிரிவும், போரும் நேர்வதை எகிப்தியர் யாரும் விரும்பார்! உள்நாட்டுக் கலவரம் உங்களால் நிகழ்வதை ரோமாபுரியும் விரும்பாது! நீங்கள் இருவரும் எப்படிச் சேர்ந்து நாடாள்வீர் என்பதைப் பற்றி வாதிப்போம்! முடிவு செய்வோம்! டாலமி! என்ன சொல்கிறாய் அதற்கு?
    டாலமி: இரட்டையர் ஆட்சிக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்! ஆனால் கிளியோபாத்ரா அதற்குத் தயாரில்லை! நாட்டை இரண்டாக வெட்டினால் நாங்கள் தனித்தனியாக அரசாட்சி நடத்தலாம்! நிம்மதியாக இரவில் தூங்கலாம்! ஒரே அரண்மனையில் தலைக்குமேல் கத்தி தொங்கும் போது நாங்கள் எப்படி உறங்க முடியும்?
    கிளியோபாத்ரா: எகிப்தைத் துண்டாட நான் விடமாட்டேன்! எகிப்து ஒரு நாடு! அதை ஆள்பவர் ஒருவரே! அதுவும் கிளியோபாத்ரா ஒருத்திதான்!
    ஜூலியஸ் சீஸர்: தனித்தனி மாளிகையில் குடித்தனம் நடத்துங்கள்! நீங்களிருவரும் சேர்ந்தாண்டால், சைப்பிரஸ் தீவை உங்களுக்குச் சன்மானமாக அளிக்கிறேன்!
    போதினஸ்: சைப்பிரஸ் தீவா? ஒன்றும் விளையாத பன்றித் தீவு சைப்பிரஸா? எமக்கு வேண்டாம் அது!
    கிளியோபாத்ரா: [முகமலர்ச்சியுடன்] நல்ல நன்கொடை சீஸர்! சைப்பிரஸ் தீவில் நூற்றுக் கணக்கானத் திராட்சைத் தோட்டங்கள் உண்டே! ஒயின் உற்பத்தி செய்து எகிப்து ரோமாபுரிக்கு விற்கலாமே!
    ஜூலியஸ் சீஸர்: ஒயினை ஏன் விற்க வேண்டும்? ரோமாபுரி ஆண்டுக் கப்பத்துக்கு ஈடாக அனுப்பலாமே!
    டாலமி: கள்ள ராணி! கப்பம் என்றதும் களவு போன பொக்கிசம் நினைவுக்கு வருகிறது! எங்கே பொக்கிச நிதி? கப்பம் கட்டும் நிதியைக் களவாடிப் போனாயே! கொடு அதைச் சீஸர் கையில்! எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய், சொல்?
    கிளியோபாத்ரா: டாலமி! அது என் நிதி! தந்தையார் சாகும் போது எனக்கு அளித்தது! அது உன் நிதி என்று யார் சொன்னார்? கணக்கு விபரம் தெரியாத அறிவிலி நீ! வரவு செலவு புரியாத அறிவாளி நீ! என்னைத் துரத்திவிட்டு வரிப்பணத்தை வாங்கத் தவறியவன் நீ! அரசனாகக் காலம் கடத்திய நீதான் சீஸருக்குக் கப்பம் செலுத்த வேண்டும்! நாடு கடத்தப்பட்ட நான் ஏன் தர வேண்டும்?
    டாலமி: சீஸர் அவர்களே! உமது கப்பப் பணம் கிளியோபாத்ராவிடம் உள்ளது! அந்தக் கள்ளியிடம் பெற்றுக் கொள்ளுங்கள்! விடாதீர் அந்த வேடக்காரியை! எங்களிடம் பணம் கைவசமில்லை!
    கிளியோபாத்ரா: [கனிவுடன் சீஸரைப் பார்த்து] தளபதி! கப்ப நிதி நான் கட்டத் தயார், ஏகப் பெரும் பட்டத்து ராணியாய் நான் மகுடம் சூட்டப் பட்டால்! டாலமி அகற்றப்பட வேண்டும்! நான் தனி ராணியாக ஆசனத்தில் அமர வேண்டும்! சீஸரே! நாமிருவரும் ஒன்று சேர்ந்தால் உலகையே கைப்பற்றலாம்! எனது பெரியப்பா மகா அலெக்ஸாண்டர் கிழக்கே சென்று இந்தியாவைக் கைப்பற்றினார்! எனக்கு அந்தப் பாதை நன்கு தெரியும்! நாமிருவரும் சேர்ந்தால் நமது பராக்கிரமத்தால் சீனாவைக் கூடப் பிடித்து விடலாம்!
    *********************

    அங்கம் -2 பாகம் -7
    கிளிபாத்ரா ஓர் நாகப் பாம்பு! பார்க்க அழகாக இருக்கிறது! ஆனால் பக்கத்தில் நெருங்கினால் பாம்பு கொட்டி விடும்!”

    டாலமி XIII

    ஓ! உன்னத வாழ்வே!
    விலை மதிப்பிலா ஒளிக்கற்கள்,
    வேண்டாம் எனக்கு!
    நீண்ட நாள் வாழ்ந்திட மட்டும்
    வேண்டி நிற்பவள் நான்!
    சாதாரணச் சமயத்தில் கூட
    இருபது முறை பாவையவள்
    சாவதைப் பார்த்தி ருக்கிறேன்!
    மரணமும் வலையை வீசி
    மாதின் மீது காதல் கொள்கிறது!
    மரணமும் மயங்கிக் கரம் பற்றும் புகழ்மாது!
    வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

    நேரம், இடம்:
    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.
    நாடகப் பாத்திரங்கள்:
    பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகன், பணியாளி.
    கிளியோபாத்ரா: [கனிவுடன் சீஸரைப் பார்த்து] ரோமாபுரித் தளபதியாரே! கப்பநிதி கட்ட நான் தயார்! இரண்டு நிபந்தனைகள் அதற்கு! முதல் நிபந்தனை டாலமி அகற்றப்பட வேண்டும்! இரண்டாவது நான் எகிப்தின் தனி ராணியாக மகுடம் சூடி ஆசனத்தில் அமர வேண்டும்! அருமை நண்பரே! நாமிருவரும் ஒன்று சேர்ந்தால் இந்த உலகையே கைப்பற்றலாம்! எனது பெரியப்பா மகா அலெக்ஸாண்டர் கிழக்கே சென்று இந்தியாவைக் கைப்பற்றினார்! அந்தப் பாதை எனக்குத் தெரியும்! நாமிருவரும் சேர்ந்தால் நமது பராக்கிரமத்தால் சீனாவைக் கூடப் பிடித்து விடலாம்!
    டாலமி: [கோவென அழத் தொடங்குகிறான்] ஜெனரல் சீஸர்! என்னைக் காப்பாற்றுங்கள். எகிப்தை என்னிடமிருந்து பறிக்காதீர். நாடோடி நங்கைக்கு மகுடம் சூட்டாதீர். கிளியோபாத்ரா ஓர் நாகப் பாம்பு! பார்க்க அழகாக இருக்கிறது பாம்பு! ஆனால் பக்கத்தில் நெருங்கினால் பாம்பு கொட்டி விடும்! எச்சரிக்கை செய்கிறேன்! உமது உடைவாளை உருவி, என்னை ஒரு நொடியில் கீழே தள்ளி விட்டாள். அவள் சொல்லைக் கேட்டு என்னை அகற்றி விடாதீர்! எனக்கு நீங்கள்தான் அடைக்கலம் தரவேண்டும்.
    ஜூலியஸ் சீஸர்: [டாலமியைத் தட்டிக் கொடுத்து] கவலைப் படாதே, டாலமி! உன் உயிருக்கு ஒரு கேடும் வராது! உன்னைக் காப்பது என் பொறுப்பு. நீயும், அவளும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது என் ஆசை! அதை நிறைவேற்றி வைப்பது என் கடமை!
    போதினஸ்: [கோபத்துடன்] ஜெனரல் சீஸர் அவர்களே! உண்மையைச் சொல்லுங்கள்! நீங்கள் வற்புறுத்திக் கேட்கும் பெருந்தொகை எங்கள் விடுதலை வாங்க யாம் உமக்கு அளிக்கும் விலைப்பணம்! தருகிறோம் உமக்கு! ஆனால் வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காது செல்ல வேண்டும் நீங்கள்! எங்கள் அரசியல் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம்! எம் தோளிலிலிருந்து இறங்குவீர்! நீங்களும் உங்கள் படைகளும் பணத்தைப் பெற்றுக் கொண்டு உடனே வெளியேறுங்கள்! எகிப்த் நாடு எகிப்தியருக்கு உரிமை யானது!
    ஜூலியஸ் சீஸர்: [வெடித்துச் சிரிக்கிறார்] நல்ல வேண்டுகோள் போதினஸ்! எகிப்து ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! எங்களை யாரும் விரட்ட முடியாது!
    கிளியோபாத்ரா: [கெஞ்சலாக] மேன்மைமிகு ஜெனரல் அவர்களே! நீங்கள் வெளியேறக் கூடாது! ரோமானியப் படை வெளியேறினால் நான் எகிப்தின் ராணியாக முடியாது! டாலமிக் கழுகுகள் என்னை உயிரோடு தின்றுவிடும்! உங்கள் பாதுகாப்பில்தான் நான் எகிப்தை ஆள முடியும்! அரண்மனையை விட்டு உங்கள் படையினர் நீங்கினாலும், நீங்கள் தங்கி யிருக்க வேண்டும்!
    ரூஃபியோ: [கொதிப்புடன்] போதினஸ்! வாயை மூடு! எகிப்த் நாடு எகிப்தியருக்குத்தான்! ஆனால் ரோமாபுரிப் படையன்று எகிப்தில் பல்லாண்டு காலம் உள்ளதை மறந்தீரா? எகிப்த் நாடு ரோமாபுரிக்குக் கீழிருப்பதை மறந்தீரா? யாமிதை விட்டு நீங்க மட்டோம்! மதிப்புடன் உரையாடி மதிப்பைப் பெறாமல் நாக்கு பிறழ்வதைக் காண்கிறோம்! எச்சரிக்கை செய்கிறேன்! அறிவோடு உரையாடுவீர்! சிறிய பாலகன் போல் பேசாதீர்!
    ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன் கிளியோபாத்ராவை அணுகி] கண்ணே, கிளியோபாத்ரா! உன்னை எகிப்துக்குப் பட்டத்து ராணியாக மகுடம் சூட வைப்பது என் பொறுப்பு! டாலமி இன்னும் பாலகனாக இருப்பது எமக்கு வருத்தமாக உள்ளது! நானிதைச் சற்றும் எதிர்பார்க்க வில்லை! மன்னர் டாலமி பொம்மை ராஜாவாக ஆசனத்தில் அமர, அமைச்சர் போதினஸ் உண்மை ராஜாவாக ஆள்வதை நான் விரும்பவில்லை!
    அக்கிலஸ்: [சினத்துடன்] ஜெனரல் அவர்களே! உமது தவறான கூற்றை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்! எமது மன்னர் டாலமியை ஆசனத்திலிருந்து நீக்க உமக்கு எந்த உரிமையுமில்லை! எமது விரோதி கிளியோபாத்ராவை எகிப்துக்கு ராணி ஆக்கவும் உமக்கு உரிமை யில்லை! ஒருதலைப்பட்ட உமது முயற்சி நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும்!
    தியோடோடஸ்: ஜெனரல் சீஸர் அவர்களே! எகிப்த் நாட்டுக்கு வருகை தந்த நீங்கள் எமக்குப் புதியவர்! எங்கள் நாகரீகம் அறியாதவர்! எங்கள் கலாச்சாரம் புரியாதவர்! யார் நாட்டை ஆளத்தகுதி உள்ளவர் என்பது எமக்குத்தான் தெரியும்! உமக்குத் தெரியாது! எகிப்தை ஒரு பெண்ணரசி ஆள்வது எனக்கு அறவே பிடிக்கவில்லை! காலை முதல் மாலை வரை கண்ணாடி முன்னின்று தனது வனப்பை எப்படி மிகையாக்குவது என்பதிலே காலம் களிப்பவர்! நாட்டைக் கவனிக்க பெண்ணரசிக்கு நேரம் ஏது? நினைப்பேது? கிளியோபாத்ராவை உயிரோடு நாடு கடத்தியது எமது தவறே! அவள் தற்போது உமது நிழலில் நின்று கொண்டு மன்னர் டால்மியின் ஆசனத்தைப் பிடுங்கப் பார்க்கிறாள்!
    கிளியோபாத்ரா: [கைவாளை தியோடோடஸ் கழுத்தருகில் நீட்ட, தியோடோடஸ் நடுங்குகிறார்] கிழட்டுக் குருவே! எமது உப்பைத் தின்று உமக்குத் திமிர் மிஞ்சி விட்டது! டாலமிக்கு கூட்டல், கழித்தலைத் தவிர, பெருக்கல், வகுத்தல் தெரியாது. பிரமிடில் ஒளிந்திருக்கும் வான சாஸ்திரம் தெரியாது! வானத்தில் பரிதிக்குப் பக்கம் எந்த கோள் சுற்றுகிறது என்பது தெரியாது. சூரிய கிரகணம் எப்படி வருகுது என்று அறிய மாட்டான்! பிரமிடை அவனுக்காகக் கட்டினாலும், பித்தகோரஸ் கோட்பாடு தெரியாத மடையன்! கிழட்டுக் குருவே! எனக்கு நீவீர் சொல்லிக் கொடுத்த எதுவும் டாலமியின் மண்டை ஒட்டுக்குள் ஏன் நுழைய வில்லை? எனக்குள்ள அறிவும், ஞானமும், திறனும் அவனுக்குக் கிடையாது! அவன் பொம்மை ராஜாவாக இருந்தால், உம்மைப் போன்ற அரசாங்க ஊழியருக்குக் கொண்டாட்டம்தான்!
    ஜூலியஸ் சீஸர்: [மிகவும் ஆச்சரியமடைந்து, கிளியோபாத்ராவின் கூந்தலைத் தடவி] மெச்சுகிறேன் கிளியோபாத்ரா! இருபது வயதுக் குமரிக்கு எத்தனை ஞானம் உள்ளது? பிரமிடின் அமைப்புக்கு வரைகணித மூலமான பித்தகோரஸ் கோட்பாடு உனக்குத் தெரியுமா? எனக்குக் கூடத் தெரியாதே! குருநாதரைப் படபட வென்று வெளுத்துக் காயப் போட்டு விட்டாயே! ஐயமின்றி எகிப்தை ஆளத் தகுதி பெற்ற பெண்ணரசி நீதான்! நீ ஒருத்திதான்! பாராட்டுகிறேன் உன்னை! எகிப்தின் பேரரசியாக வர வேண்டுமென உன்னை நீயே தயார் செய்து கொண்டது, என்னை வியப்பில் தள்ளுகிறது! உன்னைப் போலொரு ஞானப் பெண்ணை நான் எங்கும் கண்டதில்லை! நீயே எகிப்தைத் தனியாக ஆட்சி செய்வதை நான் விரும்புகிறேன்! உன்னை ஆசனத்தில் அமர்த்தி மகாராணியாக மகுடம் சூட்டிய பிறகுதான் நான் ரோமுக்கு மீளுவேன்! இது உறுதி!
    கிளியோபாத்ரா: [புன்னகையோடு சீஸரின் கன்னத்தைத் தடவி] என்னருமைத் தளபதி! நீங்கள்தான் மெய்யான ரோமாபுரித் தீரர்! என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நண்பர்! என்னருமை நண்பர்! நீங்கள் எகிப்தை விட்டு ஏன் ரோமுக்குப் போக வேண்டும்? இங்கே எமது அரண்மனை விருந்தினராகத் தங்கி சில காலம் இருக்க வேண்டும்!
    ஜூலியஸ் சீஸர்: என்னருமைக் கிளியோபாத்ரா! அது முடியாது! நான் ரோமாபுரிக்கு உடனே மீள வேண்டும்! கவலைப் படாதே! உன்னை எகிப்தின் ராணியாக ஆக்கிய பிறகுதான் செல்வேன்.
    கிளியோபாத்ரா: நீங்கள் எகிப்தை விட்டு நீங்கினால், நான் நிரந்தர ராணியாக ஆட்சி செய்ய முடியாது! ஈதோ பாருங்கள் கழுகுகளை! கண்களில் கனல் பறக்கிறது! உங்கள் துணை அருகில் இல்லா விட்டால், என்னைக் கொன்று விடுவார்! நான் உங்களை விட்டுத் தனியாக எப்படி அரசாளுவேன்?
    டாலமி: [கோபத்துடன்] பார்த்தீரா பசப்பியை? குழைந்து, நெளிந்து, மெழுகாய் உருகி விட்ட பாவையை!
    தியோடோடஸ்: [சற்று மெதுவாக] மெழுகாய் உருகியது கிளியோபாத்ரா இல்லை! மகா வீரர் ஜூலியஸ் சீஸர்! சில வினாடிகளுக்கு முன்பு டாலமியும், கிளியோபாத்ராவும் ஒன்றாக ஆளப் போவதைக் கனவு கண்டார். சில வினாடிகளில் டாலமியை மறந்தார்! வாலிப மங்கை மீது வாஞ்சை வந்து விட்டது! சீஸர் சரியான ராஜ தந்திரி! சரியான அரசியில்வாதி! சரியான பச்சோந்தி! பாவையைக் கண்டதும் அவரது மோகக் கண்கள் திறந்து விட்டன! எகிப்த் ரோமா புரிக்கு அடிமை நாடு! ஆனால் சீஸர் கிளியோபாத்ராவின் அடிமை! இனிமேல் சீஸர் கிளியோபாத்ராவின் கைப் பொம்மைதான்!
    அக்கிலஸ்: [போதினஸ் காதுகளில் மெதுவாக] தெரியுமா உனக்கு! சீஸருக்குச் சென்ற விடமெல்லாம் காதலியர் உண்டு! ஆம் இப்ப்போது எகிப்தில் ஓர் ஆசைக் கிளி! இது எத்தனை நாட்களுக்கோ?
    போதினஸ்: [கோபத்துடன்] அக்கிலஸ்! அந்த காதல் பேச்சு உனக்குத் தேவை யில்லை! உனக்கு அறிவிருக்கு மானால், சீக்கிரம் சிறைப்படுத்து கிளியோபாத்ராவை! .. ஏன் தயங்குகிறாய்? போ கைப்பற்று அவளை! [அக்கிலஸ் உருவிய வாளோடு நகர்கிறான்]
    ரூபியோ: [கோபத்துடன் வழிமறைத்து] நில் அக்கிலஸ்! நகராதே! மகாராணி கிளியோபாத்ரா பக்கத்தில் அடிவைத்தால், உமது சிரம் அறுபட்டுக் கீழே உருண்டோடும்! அங்கேயே நில்! எகிப்தின் பெண்ணரசிக்கு ரோமாபுரிப் படையினர் பாதுகாப்பு அளிக்கிறோம்! தள்ளி விலகி நில்! … என்ன மடத்தனமான செயலுக்கு உடன்பட்டிருக்கிறாய்? கூடவே ஜெனரல் சீஸரையும் சிறைப்படுத்தப் போகிறீரா? [வெடித்துச் சிரிக்கிறான்]
    *********************

    அங்கம் -2 பாகம் -8
    தைபர் நதிக்கரை மீதுள்ள
    ரோமாபுரி எரிந்து உருகிடலாம்!
    சாம்ராஜி யத்தின் விரிந்த
    தோரண வளையம் கவிழ்ந்திடலாம்!
    நானாடும் அரங்கவெளி இங்குளது!
    பேரரசுகள் வெறுங் களிமண்! நம்மிருண்ட
    தாரணியும் மண்ணே!
    எதிர்த் திசையில் அதுவும்
    மனித ரெனக் கருதி,
    காட்டு விலங்குக்கு ஊட்டும் உணவு!
    ஆண்பெண் இருவர் சேர்ந்து புரியும்
    வாழ்வின் மகத்துவம் அதுவே!
    வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

    நேரம், இடம்:

    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

    நாடகப் பாத்திரங்கள்:

    பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகன், பணியாளி.

    ரூஃபியோ: [கோபத்துடன் வழிமறைத்து] நில் அக்கிலஸ்! நகராதே! மகாராணி கிளியோபாத்ரா பக்கத்தில் அடிவைத்தால், உமது சிரம் அறுபட்டுக் கீழே உருண்டோடும்! அங்கேயே நில்! எகிப்தின் பெண்ணரசிக்கு ரோமாபுரிப் படையினர் பாதுகாப்பு அளிக்கிறோம்! தள்ளி விலகி நில்! … என்ன மடத்தனமான செயலுக்கு உடன்பட்டிருக்கிறாய்? கூடவே ஜெனரல் சீஸரையும் சிறைப்படுத்தப் போகிறீரா? [வெடித்துச் சிரிக்கிறான்]
    போதினஸ்: [தயக்கத்துடன்] எங்கள் எதிரி கிளியோபாத்ரா மட்டுமே! அவரைக் கைது செய்து சிறையில் அடைப்போம்! ரோமாபுரியின் ஜெனரல் எங்கள் சிறப்பு விருந்தினர்! எங்கள் இனிய நண்பர்! எங்கள் மதிப்பிற்கும், துதிப்பிற்கும் உரிய ரோமாபுரித் தளபதி!
    ரூஃபியோ: [அழுத்தமாக] அதைப் போல கிளியோபாத்ரா ரோமாபுரியின் நண்பர்! ஜெனரல் சீஸர் எகிப்துக்குப் பேரரசியாக மகுடம் சூடப் போகும் மாண்புமிகு மாது! ரோமாபுரியின் மதிப்புக்கும் பாதுகாப்புக்கும் உரியவர்! அவரைச் சிறை செய்வது, சீஸரைச் சிறைப்படுத்தியதற்குச் சமம்!
    போதினஸ்: எங்களுக்கு ரோமானியர் அனைவரும் நண்பர்! ரோமானியருக்கு கிளியோபாத்ரா நண்பர்! ஆனால் கிளியோபாத்ரா எங்களுக்கு நண்பர் அல்லர்! பெரும் பகையாளி! இன்றைக்கு அவர் உங்கள் நேரடிப் பாதுகாப்பில் தப்பி வாழ்கிறார். ஆனால் அவளைக் கைது செய்ய யாம் என்றும் தயங்க மாட்டோம்!
    பிரிட்டானஸ்: நீங்கள் யாவரும் தற்போது சீஸரின் அரசியல் கைதிகள்!
    ஜூலியஸ் சீஸர்: [முகத்தில் முறுவலுடன்] ஓ! இல்லை!இல்லை!இல்லை! நீங்கள் அனைவரும் சீஸரின் விருந்தாளிகள்.
    கிளியோபத்ரா: [ஆத்திரமோடு] ஜெனரல் அவர்களே! பிரிட்டானஸ் சொல்வதுதான் சரி! டாலமி, டாலமியின் குரு, டாலமியின் படை அதிபதி அத்தனை பேரும் மூர்க்கவாதிகள்! அவரைச் சிறையிலிட்டு என்ன செய்வீர்! அறுசுவை உண்டி அளித்து உடலைக் கொழுக்க வைக்கப் போகிறீரா? உங்கள் நிலையில் நானிருந்தால் அத்தனை தலைகளும் இப்போது அறுக்கப்பட்டுத் தரையில் உருண்டோடிக் கொண்டிருக்கும்! அவரை எல்லாம் நீங்கள் சிரச்சேதம் செய்யப் போவதில்லையா?
    ஜூலியஸ் சீஸர்: [சற்று அவளை உற்று நோக்கி] என்ன? உன் தமையன் பாலகன் டாலமியின் தலையைத் துண்டிக்கச் சொல்கிறாயா?
    கிளியோபாத்ரா: ஏன் துண்டிக்கக் கூடாது! வாய்ப்புக் கிடைத்தால் டாலமி என் தலையை வாளால் சீவி எறிய மாட்டானா? கேளுங்கள்! ..[டாலமியைப் பார்த்து] டாலமி! எல்லோர் முன்பாக உண்மையைச் சொல்! என்னைச் சிரச்சேதம் செய்யாமல் பிழைத்து வாழ விட்டுவிடுவாயா?
    டாலமி: [சற்று மிரட்சியுடன்] பாம்பும், பாவையும் என் பக்கத்தே தீண்ட வந்தால், பாம்பை விட்டுவிட்டு நான் பாவையைத்தான் முதலில் அடித்துக் கொல்வேன்! ஏன்! பெரியவனானால் நானே அவள் தலையைத் வாளால் துண்டிக்கவும் தயங்க மாட்டேன்!
    கிளியோபாத்ரா: பார்த்தீரா? ஆல கால விஷம் கக்கும் டாலமிப் பாலகனை!
    ஜூலியஸ் சீஸர்: [தீர்மானமாக] டாலமி! போதினஸ்! தியோடோடஸ்! நீங்கள் யாவரும் போகலாம். விடுதலை உங்களுக்கு! போகும் போது உங்கள் படைகளையும் கூட்டிச் செல்லுங்கள்.
    போதினஸ்: [தயக்கமுடன்] ஏன் நாங்கள் போக வேண்டும்! எங்கள் அரண்மனை யிது! போக வேண்டியது கிளியோபாத்ரா!
    ஜூலியஸ் சீஸர்: [சற்று கடுமையாக] போதினஸ்! கிளியோபாத்ரா எகிப்தின் பேரரசியாகப் போகிறவள்! அவள் கையில் பிடிபட்டு உங்கள் தலையை யிழக்க விரும்புகிறீரா? அல்லது உங்கள் தலையை உடம்பில் ஒட்டியபடித் தூக்கித் தப்பிச் செல்ல விரும்புகிறீரா? உயிர் பிழைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறேன் உமக்கு! ஒப்புக் கொண்டு உடனே வெளியேறுங்கள். அல்லது மறுத்துக் கொண்டு கியோபாத்ராவிடம் மாட்டிக் கொள்ளுங்கள். உங்கள் உண்மைத் தோழர்கள் வெளியே தெருவிலும் உள்ளார்! அதுதான் உங்கள் உலகம்! வெளியேறுவீர் சீக்கிரம்!
    தியோடோடஸ்: மேன்மைமிகு சீஸர் அவர்களே! மறந்து விட்டீரா, உமது ஆருயிரைக் காப்பாற்றியவர் யாமென்று?
    ஜூலியஸ் சீஸர்: என்ன? என்ன? புதிராக உள்ளதே! என்னுயிரைக் காப்பாற்றியவர் நீங்களா? எங்கே எப்போது என்னுயிரைக் காப்பாற்றி யிருக்கிறீர்? அதுவும் எனக்குத் தெரியாமல்! வியப்பாக உள்ளதே!
    தியோடோடஸ்: ஆம், அது உண்மைதான். உங்கள் இனிய உயிருக்குப் பாதுகாப்பு! உங்கள் மகத்தான வெற்றிகளுக்குப் பாதுகாப்பு! உங்கள் பொன்மயமான எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு! அந்த மூன்றையும் நீங்கள் அறியாமலே பாதுகாத்தோம்.
    போதினஸ்: மேன்மைமிகு சீஸர் அவர்களே! அதை நிரூபிக்க நானொரு சாட்சியை வரவழைக்கப் போகிறேன். [எகிப்தியர் படையாட்களில் ஒருவரைச் சுட்டிக் காட்டி] அதோ! அங்கே நிற்கிறார், லூசியஸ் ஸெப்டிமியஸ். அவரது தலைமையில்தான் அப்பணி நிறைவேறியது. [லூசியஸை நோக்கி] லூசியஸ்! நான் அழைப்பது உனக்குக் கேட்கிறதா? சீஸர் முன்வந்து நீ நடந்ததைச் சொல்வாயா?
    [நல்ல உடற்கட்டும், நிமிர்ந்த பார்வையும் கொண்ட 40 வயது வாலிபன், ரோமன் உடை அணிந்தவன் சீஸர் முன் வருகிறான்.]
    போதினஸ்: உண்மையைச் சொல், லூசியஸ்! ஜெனரல் சீஸர் எகிப்துக்கு ஏன் வந்தார்? தன் பகைவன் ரோமாபுரி பாம்ப்பியை தேடிப் பிடிக்க வந்தாரில்லியா? எகிப்தியர் நாம் என்ன செய்தோம்? பாம்ப்பியை எகிப்தில் ஒளித்து வைத்தோமா?
    லூசியஸ்: [அழுத்தமாக] ஜெனரல் சீஸர் அவர்களே! பாம்ப்பியின் காற்தடம் எகிப்தின் கரையில் பட்டவுடன், அவரது தலையை என் வாளால் வெட்டித் துண்டித்து விட்டவன் நான்!
    தியோடோடஸ்: [ஆணித்தரமாக] அவரது மனைவி, பிள்ளை இருவர் முன்னிலையில் சிரச்சேதம் செய்யப் பட்டான் பாம்ப்பி! நினைவிருக்கட்டும் ஜெனரல் சீஸர்! கப்பலை விட்டுக் கரையில் கால் வைக்கும் போது அவரிருவரும் கண்வலிக்கக் கண்ட காட்சி! நீங்கள் பலிவாங்கக் காத்திருந்ததை, நாங்கள் செய்தோம். ரோமாபுரி ஜெனரலுக்காக, எகிப்தியர் செய்த நன்றிக் கொலை! உங்கள் அன்பைக் கவர நாங்கள் செய்வத நல்ல காரியம், பாம்ப்பியைக் கொன்றது!
    ஜூலியஸ் சீஸர்: [மனவேதனை யுற்று, தடுமாறி அங்குமிங்கும் நடந்து] பாவிக் கொலைகாரர்களா! நீவீர் புரிந்தது படுகொலை! நன்றிக் கொலையா அது? நரபலிக் கொலை! ரோமாபுரித் தளபதி பாம்ப்பி வீரத்தில் எனக்கு நேரானவன்! போரிடுவதில் எனக்கு நிகரானவன்! போரிட்டுக் கொல்லாமல் வீரனை படுகொலை செய்த நீவீர் அனைவரும் கொலைகாரர்கள்! குற்றவாளிகள்! உம்மைச் சும்மா விட்டுவிட மாட்டேன்! பகைவனாயினும் ஒரு ரோமனைப் போரிடாமல் கொல்வது, என்னெறிப்படி ஒரு படுகொலை! யாரிந்த சதியைத் திட்டமிட்டது? ஏ! லூசியஸ்! யாருனக்கு ஆணை யிட்டது? யாருன்னை அனுப்பிக் கொலை செய்யத் தூண்டியது? என் மனத்தைத் துடிக்கச் செய்த அந்த பயங்கரவாதி யார்? .. யார்? …யார்?
    போதினஸ்: துணிச்சலான அச்செயல் ஜெனரல் சீஸருக்காகச் செய்யப் பட்டது! அதைத் திட்டமிட்டவன் நான்தான்! நினைத்ததை முடித்த நான் அதற்குப் பெருமைப் படுகிறேன்! பயங்கரத் தளபதி பாம்ப்பியைக் கொன்றதற்குச் சான்றுகள் இன்னும் உள. [அக்கில்லஸைப் பார்த்து] அக்கில்லஸ்! கொண்டுவா அடுத்த குடத்தை! ஜெனரல் சீஸருக்குக் காட்டு அடுத்த சான்றை!
    [அக்கில்லஸ் முன்வர இரண்டு அடிமைகள் மூடிய ஒரு பானையைத் தூக்கிக் கொண்டு வந்து தரையில் வைக்கிறார்கள்.]
    அக்கில்லஸ்: [பானை மூடியைத் திறந்து] ஜெனரல் சீஸர் அவர்களே! இதோ, பாம்ப்பியின் தலை! துண்டிக்கப் பட்ட தலை! பார்க்க விரும்புகிறீரா? உங்கள் பகைவனை ஒழித்து விட்டோம்! [அடிமைகள் மூடியைத் திறந்து தலையை எடுக்க முனைகிறார்கள்]
    ஜூலியஸ் சீஸர்: [மனமுடைந்து, அலறிக் கொண்டு] கொலைகாரரே! நிறுத்துங்கள்! நானதைக் காண விரும்பவில்லை! அயோக்கியர்களே! முரடர்களே! பாம்ப்பி என்னும் ரோமாபுரி வீரன் என் பகையாளி என்று மட்டுமா நினைத்தீர்? அவன் என் மகள் ஜூலியாவை மணந்தவன். என் மருமகன் அவன்! காலமான பாம்ப்பியின் முதல் மனைவி எனது ஒரே மகள் ஜூலியா! அவளும் என்றோ காலமாகி விட்டாள்! கடவுளே! என்ன கொடுமை யிது? ஓ! பாம்ப்பி! நீ இப்படியா இந்த மூர்க்கர் கையில் அறுபட்டுச் சாவாய்?
    அக்கில்லஸ்: [சீஸரை அணுகி, வருத்தமுடன்] இதோ பாம்ப்பியின் அடையாள மோதிரம்!
    ஜூலியஸ் சீஸர்: [சோகத்துடன் கையில் வாங்கிக் கொண்டு அழுகிறார்] இந்த மோதிரத்தைப் பாம்ப்பியின் கைவிரலில் முதன்முதல் போட்டவள் என்னருமைப் புதல்வி ஜூலியா! ரோமாபுரித் தளபதி கை மோதிரமிது! பரிசும், பாராட்டும் பெற வேண்டிய மோதிரமிது! கொலைகாரர் களவாடினாலும் விலை மதிப்பில்லா மோதிரமிது! … யாரங்கே! ரூபியோ! பிரிட்டானஸ்! விலங்கோடு வாருங்கள்! கொலைகாரர் யாவரையும் கைது செய்யுங்கள்! முதலில் போதினஸை இன்றே சிரச்சேதம் செய்ய வேண்டும்! டாலமியைக் கைது செய்து சிறையில் தள்ளுங்கள்! அரண்மனை அனைத்தும் ரோமானியக் காவலரை நிறுத்துங்கள்! கிளியோபாத்ராவுக்கு முழுப் பாதுகாப்பு அளித்திடுங்கள்!
    *********************

    அங்கம் -2 பாகம் -9
    “ஓவ்வோர் அங்கமும் தன்னிடமுள்ள முழுமையற்ற தன்மையை நீக்கிப் பூர்த்தியாகத் தனது முழுமையை நோக்கிப் பிணைந்திட விரைந்து கொண்டு செல்கிறது!”
    லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519)

    “கிளியோபாத்ரா பல்வேறு நாட்டுத் தூதர்களோடு அவரவர் மொழியிலே பேசித்தான் பதிலளிப்பாள். சிறுபான்மையான சில காட்டுமிராண்டி நாட்டு அரசரோடு உறையாற்றும் போது மட்டும், அம்மொழி விளக்குநரின் உதவியை நாடுவாள். எதியோப்பியன், ஹீபுரூஸ், அரேபியன், சிரியன், பார்த்தியன், டிரோகிளோடைட்ஸ், மீடேஸ் [Troglodytes, Medes] மற்றும் சில தேசத்துத் தூதருடன் பேசும் போது அவரவர் சொந்த மொழியில் பேசித் தன் நண்பராக்கிக் கொள்வார். அவளுக்கு முன்னாண்ட எகிப்திய அரசருக்கு எகிப்திய மொழியில் உரையாடும் அறிவு கூட கிடையாது! அவர்களில் பலர் மாஸிடோனியா மொழியைக் கூடப் பேச விருப்பமின்றிப் புறக்கணித்தவர்!
    புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.]

    “சில மாதர் கொண்டுள்ள ஆத்மாவில் சீஸரின் ஆங்கார உணர்ச்சியை நீ காண முடியும்.”
    ஆர்டிமிஸியா ஜென்டிலெஷி ரோமானிய ஓவிய மாது (1593-1653)

    “பேராசைக் குணம் கொண்டவரையே முடிவில் கொல்கிறது!”
    டால்முட் புனிதநூல் [The Talmud: Yomah 86 b]

    “அளவற்ற ஆசை, பேராசை, காமம் அனைத்தும் பைத்தியக் குணத்தின் கார மசாலாக்கள்.”
    பெனிடிக் ஸ்பைனோஸா, ஒழுக்கவியல் (1632-1677)
    “பேராசைத்தனமே ஒரு துர்குணம் ஆயினும், அதுவே நன்னெறிக்கும் தாயாக உள்ளது.”
    குயின்டில்லியன் ரோமானியக் கல்வி மேதை (கி.மு.35-கி.பி.95)

    நேரம், இடம்:
    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.
    நாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகன், பணியாளி.
    காட்சி அமைப்பு:
    பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர். சிறிது நேரம் கழித்து ஆங்கே ஜூலியஸ் சீஸர், அவரது அரசாங்கச் செயலாளர் பிரிட்டானஸ் மற்றும் ரோமானியக் காவலர் சிலரும் நுழைகிறார். டாலமியிடம் சீஸர் கப்ப நிதி பற்றிப் பேசும் போது கம்பள வணிகன் ஒருவன் விலை உயர்ந்த கம்பளத்துடன் அவர் முன்பு வருகிறான். கம்பளச் சுருளிலிருந்து எழுந்த கிளியோபாத்ரா, தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் படுகிறார்.
    அக்கில்லஸ்: [சீஸரை அணுகி வருத்தமுடன்] இதோ பாம்ப்பியின் அடையாள மோதிரம்!
    ஜூலியஸ் சீஸர்: [சோகத்துடன் கையில் வாங்கிக் கொண்டு அழுகிறார்] இந்த மோதிரத்தைப் பாம்ப்பியின் கைவிரலில் முதன்முதல் போட்டவள் என்னருமைப் புதல்வி ஜூலியா! ரோமாபுரித் தளபதி கை மோதிரமிது! பரிசும், பாராட்டும் பெற வேண்டிய மோதிரமிது! கொலைகாரர் களவாடினாலும் விலை மதிப்பில்லா மோதிரமிது! … யாரங்கே! ரூஃபியோ! விலங்கோடு வா! கொலைகாரர் யாவரையும் கைது செய்! முதலில் போதினஸை இன்றே சிரச்சேதம் செய்ய வேண்டும்! டாலமியைக் கைது செய்து சிறையில் தள்ளு! அரண்மனை அனைத்தும் ரோமானியக் காவலரை நிறுத்து! கிளியோபாத்ராவுக்கு மட்டும் முழுப் பாதுகாப்பு அளித்திடு!
    கிளியோபாத்ரா: [மனமுடைந்து சீஸரை அணுகிக் கண்ணீரைத் தன்னுடையால் துடைத்து விட்டு] என்ன அதிர்ச்சியான சேதி! என் நெஞ்சமும் கொதிக்கிறது! உங்கள் மருமகன் ரோமாபுரித் தளபதியைக் கொன்றவர் மூர்க்கவாதிகள்! உங்கள் அருமைப் புதல்வியின் கணவரைக் கொன்றவர் கொடூரவாதிகள்! எப்படித் தாங்கிக் கொள்ளும் உங்கள் நெஞ்சம்? எகிப்திய மாதான என்னால் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை! எப்படி உங்களுக்கு நான் ஆறுதல் சொல்ல முடியும்? உங்களுக்கு அமைதி உண்டாக்க என்னிடம் உருக்கமான வார்த்தைகளில்லை! உங்கள் குடும்பத் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்!
    ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவை அணைத்துக் கொள்கிறார்] நன்றி கிளியோபாத்ரா! என் கண்களில் கொட்ட வேண்டிய கண்ணீர் மழை, அருவிபோல் உன் கண்களில் பெய்கிறது! உன் பாச உணர்ச்சி என்னை நெகிழச் செய்கிறது. [போதினஸைப் பார்த்து சினத்துடன்] மூர்க்கனே! ரோமாபுரிக்கே நீ தீ வைத்து விட்டாய்! முரடனே! ரோமுக்கும், எகிப்துக்கும் தீராப் பகைமையை வளர்த்து விட்டாய்! மூடனே! ரோமாபுரித் தளபதி வீர மரணம் அடையாது, அடிமை நாட்டுப் பொடியன் ஒருவனால் கொல்லப் பட்டான் என்னும் செய்தி ரோமாபுரியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கப் போகிறது! நீங்கள் ரகசியமாய்ப் பாம்ப்பியைக் கொன்றது அவருக்குத் தெரியாது! என் ஆணைப்படி பாம்ப்பியை உங்கள் மூலம் பலிவாங்கிக் கொண்டேன் என்று ரோமானியர் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். என் மருமகனைக் கொன்றது மில்லாமல் என்னைப் பிறர் வெறுப்பதற்குக் காரணமானீர்! என் பகைவர் என்னை ஒழித்துக் கட்ட முனைவதற்கும் வழி வகுத்தீர்!
    போதினஸ்: உங்கள் பகைவரை ஒழித்த எங்களைப் போற்றுவதற்குப் பதிலாக நீங்கள் தூற்றுகிறீர்! செய்நன்றி மறந்தீர்! பலிவாங்கும் பணியை நீங்கள் புரிந்தால் என்ன, நாங்கள் புரிந்தால் என்ன? ஒரே முடிவு தானே நிகழ்ந்தது! பாம்ப்பியின் மரணம்!
    ஜூலியஸ் சீஸர்: ஒரே முடிவென்றாலும் ஆயுதமற்ற ரோமானியனைக் கொன்றது குற்றம்! அதுவும் ஆக்கிரமிப்பு நாட்டான் ஆதிக்க நாட்டானைக் கொன்றது முன்னதை விடப் பெருங்குற்றம்! பாம்ப்பி எனது பூர்வீக நண்பன்! என்மகளை மணந்தவன். என் மருமகன்! ஈருபத்து ஆண்டுகளாய் ரோமாபுரியின் மாவீரன் எனப் பெயரெடுத்தவன் பாம்ப்பி! முப்பது ஆண்டுகளாய் மாபெரும் போர்களில் வெற்றிமாலை சூடியவன் பாம்ப்பி. அவன் பின்னால் நின்று ஒரு கோழை வீழ்த்தியது மாபெரும் கொடூரத்தனம்! [லூசியஸைப் பார்த்து] …. ஒழிந்துபோ! என்முன் நிற்காதே! அனைவரும் வெளியே செல்லுங்கள்.
    [டாலமி, போதினஸ், அக்கிலஸ் அனைவரும் ரோமானியக் காவலர் பின்தொடர வெளியேறுகிறார்]
    ரூஃபியோ: தளபதி அவர்களே! குற்றவாளிகளை எப்படித் தண்டிக்காமல் விடுவது? அப்படியே தப்பிச் செல்ல விட்டுவிட்டால், ரோமாபுரி மாந்தர் உங்கள் மீது வெறுப்புக் கொள்வார்! அதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ரோமாபுரின் சட்டப்படிக் கொலைகாரர் தண்டிக்கப்பட வேண்டும்!
    ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] போதினஸைச் சிரச்சேதம் செய்! அக்கிலஸைச் சிறையிடு! டாலமியை நாடு கடத்து!
    ரூஃபியோ: அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை. யாரையும் நான் சிறைப்படுத்தப் போவதில்லை. அவரைச் சிரச்சேதம் செய்யப் போகிறேன். [சீஸருக்கு வணக்கமிட்டு வெளியே செல்கிறான்]
    கிளியோபாத்ரா: [சீஸரை நெருங்கிக் கனிவுடன் கன்னத்தைத் தடவி] என் கனவு பலித்தது! ஒரு கணத்திலே எகிப்தின் பட்டத்து ராணியாக என்னை ஆக்கி விட்ட உமது திறமையைப் பாராட்டுகிறேன். அதற்கு ஆயிரம் முத்தங்கள் பரிசு! [சீஸரை மீண்டும், மீண்டும் முத்தமிட்டு அணைத்துக் கொள்கிறாள்] … ஆனால் ஒரு வேண்டுகோள். டாலமியை நீங்கள் அவிழ்த்துவிடக் கூடாது! அந்தக் காளங் கன்றை வெளியே அலைய விடக் கூடாது! எனக்கெதிராக படை திரட்டுவான்! டாலமியின் கால்நிழல் எகிப்தில் மீண்டும் ஊர்ந்து செல்லக் கூடாது!
    ஜூலியஸ் சீஸர்: டாலமியை என்ன செய்ய வேண்டும் என்பது பிரிட்டானஸ் ஒருவனுக்குத்தான் தெரியும்! பிரிட்டானஸ்! டாலமியைப் பின்பற்று! [பிரிட்டானஸ் டாலமியைப் பின்தொடர்கிறான்] [பரிவுடன் கிளியோபாத்ராவை நோக்கி] கண்ணே, கிளியோபாத்ரா! உனக்கும் நான் தக்க தண்டனை தர வேண்டும்! சதிகாரன் டாலமியின் மனைவி நீ! கொலைகாரன் டாலமியின் தமக்கை நீ! உன்னை என்ன செய்ய வேண்டுமென்று நீயே சொல்லிவிடு!
    கிளியோபாத்ரா: [சற்று சினத்துடன்] பாலை வனத்துக்கு என்னைத் துரத்திய டாலமி என் கணவன் அல்லன்! கூடப் பிறந்த தமையனும் அல்லன்! எகிப்தை ஆள்பவரும், அவரது மனைவியும் •பாரோ மன்னரின் பரம்பரையாக இருக்க வேண்டும் என்பது பூர்வீக விதி! என்னை விலக்கி வைத்து விரட்டியன் என் கணவன் என்பது என்றோ முறிந்து விட்டது! நானிப்போது மணமாகாத ஒரு தனி மாது! எகிப்தின் ராணியாகிய பிறகு மறுமணம் செய்து கொள்வேன்! டாலமி தமக்கையான எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொள்கிறேன்! [நடந்து போய் டாலமி விட்டுச் சென்ற அரச ஆசனத்தில் அமர்கிறாள்] மகாவீரர் சீஸர் அவர்களே! நீங்கள் ரோமாபுரிக்குப் போகும் முன்பு, நான்தான் எகிப்தின் ஏகபோக ராணி என்று எனக்குப் பட்டம் சூடி உலகுக்கு அறிவிக்க வேண்டும்.
    ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன் நோக்கி] அப்படியே செய்கிறேன், கண்மணி கிளியோபாத்ரா! உனக்கு மகுடம் சூட்டிய பிறகுதான் நான் ரோமாபுரிக்குச் செல்வேன். அது மட்டும் உறுதி! …. ஆமாம், பட்டத்து ராணியாக முடி சூடிய பிறகு, யாரை நீ மணந்து கொள்ளப் போகிறாய்? யாரந்த அதிர்ஷ்டசாலி? நான் தெரிந்து கொள்ளலாமா?
    கிளியோபாத்ரா: [எழுந்து நின்று தன்னைச் சிங்காரித்துக் கொண்டு] நான் வரப் போகும் கணவரைத் தேர்ந்தெடுத்து விட்டேன்! அவரொரு மாவீரர்! யாரென்று உமக்குச் சொல்ல மாட்டேன்! நீங்களே அந்த திருமணத்தில் பங்கெடுத்து எம்மைப் பாராட்டுவீர்! என்னை நீங்கள் ராணி ஆக்கியதற்கு முதலில் நான், உமக்கு மாபெரும் பரிசை அளிக்கப் போகிறேன்!
    ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவின் அருகில் அமர்ந்து] என்ன வெகுமதி எனக்கு அளிக்கப் போகிறாய்? சொல்ல மாட்டாயா கிளியோபாத்ரா? யாரந்த மாவீரன்?
    கிளியோபாத்ரா: உமது வெகுமதி என்ன என்பது ரகசியம். அதை நான் உமக்குச் சொல்லப் போவதில்லை! அவை எல்லாம் சொல்லித் தெரிவதில்லை! நீங்களே கண்டு கொள்வீர்!
    ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன் நெருங்கி] முதலில் நான் கேட்கும் பரிசை நீ கொடுப்பாயா?
    கிளியோபாத்ரா: [சீஸரின் மார்பில் சாய்ந்து காதை வைத்து] மகாவீரர் சீஸரின் நெஞ்சம் ஏனிப்படிப் போர் முரசம் அடிக்கிறது? உமது மார்புத் துடிப்புக்கள் எனது மார்பில் ஏனிப்படித் தாவி வருகின்றன? உங்கள் கைகள் ஏன் நடுங்குகின்றன? மங்கை எவளும் உம்மருகில் அமர்ந்ததில்லையா? என்ன? என்னவாயிற்று? உங்கள் தொடை ஆடுகிறதே! உடம்பு முழுதும் நடுங்கிறதே! கண்ணிமைகள் ஏன் மூடுகின்றன? நில நடுக்கம் போல் உடல் நடுக்க மாகிறதே! [கவலைப் பட்டு சீஸரைப் பிடித்துக் கொள்கிறாள்]
    [கைகள் நழுவ நாற்காலியிலிருந்து சரிந்து சீஸர் தரையில் விழுகிறார்! கண்கள் மூடிப் போய் கைகால்கள் வெட்டி வெட்டி யிழுக்கின்றன. கிளியோபத்ரா எழுந்து மணியை அடித்து சேடிகளை விளிக்கிறாள். சில ரோமானிய வீரர்களும், கிளியோபாத்ராவின் சேடிகளும் ஓடி வருகிறார்கள்.]
    ரோமானியப் பாதுகாவலன்: [தயங்கிக் கொண்டு] மகாராணி! .. சீஸருக்கு .. காக்காய் வலிப்பு! [ஓடிச் சென்று ஒரு பெட்டியிலிருந்து இரும்புத் துண்டை எடுத்து வந்து சீஸரின் வாயைப் பிளந்து பற்களுக்கு இடையே வைக்கிறான். மெதுவாக சீஸரின் உடற்துடிப்பு நிற்கிறது!]
    கிளியோபாத்ரா: [கவலையுடன் கண்ணீர் பொங்க] மகாவீரர் சீஸருக்கு இழுப்பு நோயா? [சூரியக் கடவுளின் முன்னின்று] சூரியக் கடவுளே! உன்னை வணங்குகிறேன்! ஜூலியஸ் சீஸரைக் காப்பாற்று! எனக்காகவும், எகிப்துக்காகவும் அவர் உயிருடன் வாழ வேண்டும். நீண்ட நாள் வாழ வேண்டும். அவருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது. … [ரோமானியரை விளித்து] சீஸரை விருந்தினர் அறைப் படுக்கையில் கிடத்துங்கள். [சேடிகளைப் பார்த்து] அரண்மனை மருத்துவரை அழைத்து வாருங்கள்! [ரோமானியரைப் பார்த்து] உங்கள் இராணுவ மருத்துவரைக் கூட்டி வாருங்கள்! உம், சீக்கிரம்! …
    [ரோமானியர் சீஸரை மெதுவாகத் தூக்கிச் செல்கிறார்கள். சிலர் மருத்துவரை அழைத்துவரச் செல்கிறார்]
    *********************

    அங்கம் -2 பாகம் -10

    “எனது மரணத்துக்கு நான் மணமகன்! காதலியின் மெத்தைக்கு ஆசைப்படுவது போல் நான் மரணத்தை நோக்கி விரைகிறேன்.” …
    (கிளியோபாத்ரா)
    “எல்லாவிதப் பயங்கரமான அதிசயச் சம்பவங்களை வரவேற்கிறோம்! ஆனால் ஆறுதல் மொழிகளை அறவே வெறுப்போம்.”
    வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

    “துக்கமுற நான் எந்த தளத்தையும் விட்டு வைக்க வில்லை! அதற்கென எந்த அறையும் எனக்கில்லை! போகும் பாதையில் வேதனையும், பேரிழப்புகளும் எனக்காகக் காத்திருப்பதை நான் முன்பே எதிர்பார்த்திலேன்.”
    கிளாடிஸ் லாலெர் [Gladys Lawler (Age: 93)]

    “உனது கப்பல் நுழைவதற்கு நீ முதலில் துறைமுகம் ஒன்றைக் கட்ட வேண்டும்.”
    கே அல்லென்பாக் [Kay Allenbaugh, Author of Chocolate for a Woman’s Soul]

    “இடையூறுகள் என்னை ஒருபோதும் நசுக்குவதில்லை. ஒவ்வோர் இடையூறும் தீர்வு காண்பதற்கு சவால் விடுகிறது. எவன் ஒருவன் விண்மீன் ஒன்றின் மீது கண்வைத்து விட்டானோ, அவன் அந்தக் குறிக்கோளிலிருந்து என்றும் விட்டு விலகுவதில்லை.”
    லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519)

    “நம்மில் பலருக்குப் பெருத்த ஏமாற்றமாவது, ஒருவர் குறிக்கோளை உயரத்தில் வைத்து விட்டு, முடிவில் அவர் குறைவாகச் சாதிப்பதிலில்லை! குறிக்கோளைத் தணிவாக வைத்து, அதை ஒருவர் வெற்றிகரமாகச் செய்து காட்டுவதுதான்.”
    மைக்கேலாஞ்சலோ ரோமானிய ஓவிய மேதை (1475-1564)

    நேரம், இடம்:
    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.
    நாடகப் பாத்திரங்கள்:
    ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.
    காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார்.
    கிளியோபாத்ரா: [பக்கத்தில் அமர்ந்து கிளியோபாத்ரா பரிவுடன் சீஸரை நோக்கி] நேற்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை! நான் சூரியக் கடவுளை வேண்டினேன்! உடல்நலம் பெற்று நீங்கள் உயிர்த்தெழ வேண்டுமென்று! நீங்கள் ஆழ்ந்து தூங்கினீர்களா? உங்களுக்குப் பாதகம் ஏதாவது நேர்ந்தால் என் நிலைமை என்னவாகும் என்று சிந்தித்தேன்! தூக்கம் போய் ஏக்கம் பற்றிக் கொண்டது. நீங்கள் என்னைப் பிரிந்து போய்விடுவீரோ என்று அச்சம் உண்டாகிறது! எகிப்தின் அரசியானாலும், தனியாக உள்ள எனக்கு நீங்கள்தான் தக்க துணைவர்! சீஸரின் பராக்கிரமக் கரங்களுக்குள் நான் அரண் கட்டி வாழ விரும்புகிறேன்! கனல்மிக்க உங்கள் மார்பின் மீது, என் கண்கள் தொட்டில் கட்டித் தூங்க வேண்டும்! நான் உங்கள் அடிமை அரசி! உங்கள் துணையில் உயிர் வாழும் எனக்குத் துடிக்குது, உங்களுக்கு எதுவும் நேரக் கூடாது!
    ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] கண்மணி கிளியோபாத்ரா! நான்தான் உன் அடிமைத் தளபதி! ரோமாபுரியை மறக்க வைத்தவள் நீ! மனைவி கல்பூர்ணியாவை மறக்க வைத்தவள் நீ! தீயாய்ச் சுடும் அலெக்ஸாண்டிரியாவைத் தேனாய் ஆக்கியவள் நீ! ரோமாபுரி மாவீரன் உன் விழிகளுக்கு அடிமை! சீஸருக்குப் பாதகமாய் ஏதும் நிகழாது! நானிந்த இழுப்பு நோயிக்கெல்லாம் அஞ்சுபவனில்லை! நீ ஏன் எனக்காகப் பயப்படுகிறாய்? காக்காய் வலிப்பு நோயோடு நான் பல்லாண்டுகள் வாழ்ந்து விட்டேன்! அஞ்சாமல் போரிட்டு, ரோம சாம்ராஜியத்தை எத்தனை பெரிதாக ஆக்கி விட்டேன் தெரியுமா? நான் போய்விட்டால் உனக்கு என்னவாகும் என்று அஞ்சுகிறாய்?
    கிளியோபாத்ரா: என் விஷமத் தமையன் டாலமி உயிரோடிருக்கிறான்! அவன் வாழும் வரையில் என்னுயிர் அங்குமிங்கும் ஊசலாடிக் கொண்டிருக்கும்! அந்த மிருகங்கள் உயிரோடுள்ளவரை எனக்குச் சரியாகத் தூக்கம் வராது!
    ஜூலியஸ் சீஸர்: டாலமியைப் பற்றி உனக்கினிக் கவலை வேண்டாம்! நேற்று மாலையில் அவனை ரோமானியப் படையாளர் விரட்டிச் செல்லும் போது, அவன் நைல் நதியில் குதித்து மூழ்கிப் போனதாகச் செய்தி வந்துள்ளது! அவனது உடம்பு ஒருவேளை கடலுக்குள் சங்கமம் ஆகியிருக்கலாம்! அல்லது முதலைகளின் அடிவயிற்றில் செறிக்கப் பட்டிருக்கலாம்! போதினஸ், தியோடோடஸ், அக்கிலஸ் அனைவரும் கொல்லப் பட்டார். உனக்கோ அல்லது உன் மகுடத்துக்கோ இனி எதிரி யாருமில்லை, கிளியோபாத்ரா!
    கிளியோபாத்ரா: [பெருமூச்சு விட்டு] நன்றி சீஸர் அவர்களே! நன்றி! மிக்க நன்றி! நானார்க்கு மினி அஞ்ச வேண்டியதில்லை! எகிப்தின் ஏகப்பெரும் அரசி கிளியோபாத்ரா வென்னும் போது, என் மெய் சிலிர்க்கிறது! என் பரம்பரையான •பாரோ மன்னரின் கால்தடத்தில் நடக்கிறேன் என்னும் போது, என் மேனி நடுங்குகிறது! என் கனவு நிறைவேறியது, உங்களால்! கிளியோபாத்ரா கட்டுப்பட்டவள் உங்களுக்கு! கடமைப் பட்டவள் உங்களுக்கு! மகாவீரர் சீஸரே, உமக்கு நன்றி! உலகைக் கைக்கொள்ளும் தொடர்க் கனவை நிறைவேற்ற உதவப் போகிறேன் உங்களுக்கு!
    ஜூலியஸ் சீஸர்: [தயக்கமுடன்] கிளியோபாத்ரா! உனக்கு வயது 20! எனக்கு வயது 52! எனது போர்க் கோலப் பராக்கிரம வயது போய் விட்டது! நானினிப் பெரும் போர் புரியப் போவதில்லை!
    கிளியோபாத்ரா: [அரண்மனைப் பீடத்தில், பளிங்குப் பேழையில் வைக்கப்பட்ட காலஞ்சென்ற அலெக்ஸாண்டர் உடலைக் காட்டிச் சீஸரை அழைத்துச் சென்று] பாருங்கள்! மகாவீரர் அலெக்ஸாண்டரை! முப்பதியிரண்டு வயதில் அவர் ஒருவர் சாதித்ததை நாமிருவரும் சமாளிக்கப் போகிறோம்! நமது சராசரி வயது, 36. உங்களால் என் வயது முதிர்ச்சியாகி ஏறுகிறது! என்னால் உங்கள் முதிய வயது இளமையாகிறது! அவரது கனவை முடிக்க வேண்டியது உங்கள் கடமை! என் கடமையும் கூட! அதாவது நம் கடமை! வரலாற்றுப் புகழ் பெற்ற அவரது வாளை உங்களுக்குப் பரிசாகத் தரப் போகிறேன்.
    ஜூலியஸ் சீஸர்: [அலெக்ஸாண்டர் பேழையைத் தொட்டுப் பெருமையுடன் கண்ணீர் சிந்தி] வேண்டாம் கிளியோபாத்ரா! புதைந்து போன அவரது வாளைக் கையில் தொடத் தகுதியற்றவன் நான்! அலெக்ஸாண்டர் அல்லன் நான்! அவர் பற்றிய வாள் எனக்குக் கனமாகத் தெரிகிறது!
    கிளியோபாத்ரா: பேழைக்குள்ளிருக்கும் அலெக்ஸாண்டர் உடலைப் பார்த்து எதற்காகக் கண் கலங்குகிறீர்?
    ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! இந்தியாவின் வடபகுதியை வென்று, வெற்றிமாலை சூடிய மகா வீரர் அலெக்ஸாண்டர் சாகும் போது அவருக்கு வயது 32! இப்போது எனக்கு வயது 52. அலெக்ஸாண்டரின் கனல் பறக்கும் நெஞ்சத்தை நானிழந்து விட்டேன்! எனது கண்கள் வெந்நீரைக் கொட்டுகின்றன, அதனால்! எனக்கு 32 வயதாகிய போது, ஸ்பெயினைக் கைப்பற்றப் போனேன். அப்போதும் அங்கிருந்த அலெக்ஸாண்டர் சிலையைக் கண்டதும், இதேபோல் நான் அழுதேன்! அவரது பராக்கிரம் எனக்கில்லை என்றுதான்! எனது வாழ்நாள் காய்ந்து முற்றிப் போனதென்று நான் அழுதேன்! அவர் உலகைக் கைப்பற்றினார்! ஆனால் உலகு என்னைக் கைப்பற்ற முயல்கிறது என்று நான் அஞ்சுகிறேன்!
    கிளியோபாத்ரா: [சீஸரின் கண்ணீரைத் தனது துணியால் துடைத்து] அலெக்ஸாண்டரின் மறுபிறவி என்று நீங்கள் எண்ணிக் கொள்ளுங்கள்! அவரது கனவுகளை உங்கள் கனவாக்கிக் கொள்ளுங்கள். அவருடைய வாள் உங்களது வெற்றி வாளாகட்டும்! அவர் விட்டுச் சென்ற ஆசிய முனையிலிருந்து தொடரட்டும் உங்கள் படையெடுப்பு! இந்தியாவுக்குச் செல்லும் பாதை எனக்குத் தெரியும்! அலெஸாண்டரின் போர்த்தளப் படம் என்னிடம் உள்ளது!
    ஜூலியஸ் சீஸர்: [சிந்தனையுடன்] ஆச்சரியமாக உள்ளது! கிளியோபாத்ரா! இருபது வயதில் உனக்குத் தெரிந்துள்ள போர் ஞானம் வேறு யாருக்கும் கிடையாது! ஆனால் அலெக்ஸாண்டருடைய வாள் எனக்குக் கனமாய்த் தெரிகிறது! உலகப் பேராசை ஆக்கிரமிப்பில் அலெக்ஸாண்டர் தோல்வி அடைந்தார்!
    கிளியோபாத்ரா: அவர் வயது 32! உங்கள் வயது 52! அவருக்குப் போர்ப் பண்பில் கொளுந்து விட்டெரியும் மனப்போக்கிருந்தது! ஆனால் உங்களுக்கு அவரை விட 20 வருடப் போர் அனுபவம் உள்ளது! அலெக்ஸாண்டர் எப்படி இறந்தார் என்று அறிவீரா? வட இநெதியாவைக் கைப்பற்றிய அலெக்ஸாண்டர் மேற்புறப் பகுதியில் செல்லும் போது, அங்குள்ள விஷக் கொசு கடித்துச் கடும் காய்ச்சலில் திரும்ப வேண்டியதாயிற்று! பிறகுப் போரிடும் பராக்கிரம மிழந்தார். கடும் காய்ச்சலுக்குச் சிகிட்சை யில்லாமல் கடைசியில் செத்து விட்டார். அது ஒருவித மரணக் கொசு என்று கேள்விப் பட்டேன்! அலெக்ஸாண்டரின் அசுர வல்லமை உங்களுக்கு உள்ளது. அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடங்குவீர்! ரோமானியப் படையுடன் எகிப்தின் படையும் ஒன்றிணைந்து போரிடும்! மகாவீரர் சீஸரே! உலகம் நமது கைகளில்! நீங்களும், நானும் ரோமாபுரிக் கடியில் உலகை ஒன்றாக்குவோம்! இந்தப் பூமியில் ஒரே உலகம்! ஒரே நாடு! ஒரே மக்கள்! சமாதானமாக அனைவரும் வாழ்வோம் போரின்றி.
    ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] ஓ! தெரிந்து கொண்டேன். அதுதான் நீ என்னிடம் எதிர்பார்ப்பதா? அதற்குத்தான் நீ என்னை உருவாக்குகிறாயா? பலே கிளியோபாத்ரா! நானொரு ரோமன்! அலெக்ஸாண்டரைப் போலக் கிரேக்கன் அல்லன்! ஒரே உலகம்! ஒரே நாடு! ஒரே மக்கள்! நல்ல சிந்தனைதான்! ஆனால் அது வெறும் கனவு! நடக்காத கனவு! அந்த உலகத்தின் தலைநகர் உனது அலெக்ஸாண்டிரியாவா?
    கிளியோபாத்ரா: [ஆங்காராமாக] அந்த உலகுக்கு எனது அலெக்ஸாண்டிரியா தலநகரில்லை! உங்கள் ரோமாபுரிதான் தலைநகர்! ஒரே உலகை ஆக்கப் போன அலெக்ஸாண்டர் தோல்வி யுற்றார்! ஆனால் நம்மிருவர் முயற்சியில் வெல்வோம், நிச்சயம்! அலெக்ஸாண்டர் கிரேக்கர்! நீங்கள் ரோமானியர்! நான் எகிப்திய மாது! அதனால் என்ன? அலெக்ஸாண்டரின் போர்ப்படை மாஸபடோமியாவிலிருந்து கிளம்பியது! நமது படைகள் ரோமிலிருந்து புறப்படட்டும்! ரோமும், எகிப்தும் இரட்டைக் காளைகள் போல் இரட்டை வலுவுடன், இருமடங்கு படைகளுடன் போரிடும்! அதனால் நமக்கு வெற்றி உறுதி! அலெக்ஸாண்டர் வாளை நாமிருவரும் தூக்கிச் செல்வோம்! [கிளியோபாத்ரா விரைந்து சென்று சீஸரின் தோள்களைப் பற்றிக் கொண்டு பதிலை எதிர்பார்க்கிறாள்]
    ஜூலியஸ் சீஸர்: [கனிந்து போய் கிளியோபாத்ராவை அணைத்துக் கொண்டு] மாபெரும் போர் ஞானி நீ என்பதை அழகாகக் காட்டி விட்டாய், கிளியோபாத்ரா! அரசியலையும், உணர்ச்சியையும் ஒன்றாக்க முயல்கிறாய் நீ! அவை யிரண்டும் ஒன்று சேரா! அரசியல் ஒருபுறம் நுழையும் போது, உணர்ச்சி மறுபுறம் வெளியேறும் என்று உனக்குத் தெரியாதா? என்னுடைய விதியில் கையில் என்னை விட்டுவிடு! எனக்கு வயது 52! அலெக்ஸாண்டருக்கு அப்போது வயது 32! அவரது பாதையைக் காட்டி என் பாதையை மாற்ற முற்படாதே! அவர் போன பாதை தோல்விப் பாதை! தோல்விப் பாதையைப் பின் தொடர்ந்து, நான் எப்படி வெற்றிப் பாதை ஆக்க முடியும்?
    கிளியோபத்ரா: உங்களுடன் நான் ஒன்று சேர்வதால் நமது பாதை வெற்றிப் பாதையாக மாறும்! தோல்வி என்பது என் அகராதியில் இல்லை! வீழ்ச்சி என்பது உங்கள் அகராதியில் இல்லை! என் சிந்தனை முற்போக்கான சிந்தனை! அலெக்ஸாண்டரின் போரங்கி உங்களுக்குப் பொருந்தும்! எகிப்துவரை பரவிய சீஸரின் பெயர் ஆசியா வெங்கும் பரவும்! நீங்கள் ரோமாபுரி, எகிப்த் நாடுகளுக்கு மட்டும் வேந்தர் அல்லர்! அரேபிய நாடுகள், இந்தியா, தாய்லாந்து, சைனா ஆகிய நாடுகளுக்கும் வேந்தராக ஆட்சி செய்வீர்! நீங்களும், நானும் ஆண்ட பிறகு, நமக்குப் பிறக்கும் ஆண்மகன் உலகை அரசாளுவான். மாவீரர் சீஸரே! நிச்சயம் நான் சொல்கிறேன்! நமக்குப் பிறப்பது ஆண்மகவே! அது மட்டும் உறுதி!
    ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன்] ஆண்மகவா? ஆனந்தம் அடைகிறேன்! என் மனைவி கல்பூர்ணியா அளிக்காத ஆண்மகவை நீ பெற்றுத் தருவாயா? எனக்கு மகிழ்ச்சியே! … ஆனால் ரோமாபுரி எப்படி என் ஆண்மகவை ஏற்றுக் கொள்ளுமோ தெரியாது? அவன் பாதி ரோமானியன்! பாதி எகிப்தியன் ஆயிற்றே! நான் ரோமுக்கு விரைவில் திரும்ப வேண்டும், கிளியோபாத்ரா?
    கிளியோபாத்ரா: [அருகில் நெருங்கி மிக்கக் கனிவுடன்] ஆனாலும் அவன் உங்கள் மகன்! ரோமானிய மாது கல்பூர்ணியா அளிக்க முடியாத ஆண் பரம்பரையை, எகிப்தின் கிளியோபாத்ரா ஆக்கித் தருகிறாள்! மாவீரர் சீஸரே! நீங்கள் ரோமுக்கு மீள்வதைச் சற்று தள்ளிப் போடுங்கள்! எனக்கு உங்கள் கையால் எகிப்து மகாராணி என்று முதலில் மகுடம் சூட வேண்டும்! என் மாளிகையில் எனது சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும்! எனக்குப் பிறக்கப் போகும் ஆண்மகவை உங்கள் ஆசைக் கரங்களில் முத்தமிடக் கொடுத்து நான் ஒப்படைக்க வேண்டும்! அதன் பிஞ்சு வாயில் தவழும் புன்னகையை நீங்கள் மனதில் படமெடுத்து ரோமாபுரிக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

    +++++++++++++++++++++++

    தொடரும்

     

    Share
  • வ.சுப.மாணிக்கனாரின் வள்ளுவம் கூறும் விழுமியங்கள் – 1

    -முனைவர் சு.இரமேஷ்

    முன்னுரை

    வளர்ந்துவரும் தமிழ்ஆய்வுக் களத்திற்குத் தமிழ்ப் பேரொளியாக விளங்கியவர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். தமிழ்மரபு சார்ந்த ஆய்வுகளில் புதுமையான நெறிகளை வளர்ந்து வரும் சமூகத்திற்குக் கொடையாக அளித்தவர். தமது ஆய்வு நூல்களில் தமிழின் தனித்துவத்தைப் புலப்படுத்திச் சிந்திக்கச் செய்தவர். மறைமலையின் ஆய்வுத் திறனும்  திரு.வி.க.வின் மொழிநடையும் ஒருங்கே பெற்ற தமிழ்வல்ல மூதறிஞர். இவர், நுண்மாண் நுழைப்புலத்துடன் எழுதிய ‘வள்ளுவம்’ என்னும் நூலானது புதிய சிந்தனைத் தெளிவினை அளிக்க வல்லதாகும். 1953–இல் பாரி நிலையமும், 1987–இல் மணிவாசகர் நூலகமும் வெளியிட்ட இந்நூலை தமிழ்மண் பதிப்பகம் 2017 –இல் வெளியிட்டுள்ளது.

    இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைள் உள்ளன. அவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக அமைந்துள்ளன. ஆனால் அவையாவும் முன்னும் பேசப்பட்டவை அல்ல. வள்ளுவரை முன்வைத்துப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகள். நம்மிடை நேரே நின்று உரையாற்றுவதாய் அமைந்துள்ளன. ஏனெனில் “உங்களுக்கும் எனக்கும் நெஞ்சக்கலப்பும் சுற்றப் பிணைப்பும் உண்டாக்கும்” என்று முகவுரையில் பதிவு செய்கின்றார். இலக்கியநெறி உலகில் இஃது ஓர் புதிய உத்தியாகவே கருதமுடிகிறது. வரையறுத்துக் கொண்டு முரணறுத்து எழுதிய முறைநூலாக வள்ளுவம் என்னும் நூல் திகழ்கின்றது. இந்நூலில் உள்ள 12 தலைப்புகளில் முதல் ஆறு கற்பனை சொற்பொழிவுகளான 1. வள்ளுவர் நெஞ்சம், 2. பலநிலையறம், 3. பொருள் நிலை, 4. பொருட் பயனிலை 5. இன்மை நிலை, 6. அறிவுப் பிறப்பு ஆகிய தலைப்புகளில் அமைந்த கற்பனைச் சொற்பொழிவுகளை மட்டும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

    வள்ளுவர் நெஞ்சம்

    வள்ளுவரின் நெஞ்சத்திற்கும் திருக்குறளுக்கும் தொடர்பு என்னவென்பதை இத்தலைப்பு ஆராய்கிறது. திருக்குறள் வள்ளுவனாரின் அறிவுக்குழவி மட்டுமல்லாது வள்ளுவரின் நெஞ்சோடு நம் நெஞ்சினைப் பிணைக்கும் எண்ணக் கயிறு என்று கருதுமிவர், வள்ளுவரின் நெஞ்சமானது நிலத்தில் இட்ட வித்தாகவும் நெஞ்சம் தந்த அறிவு விதை தோற்றிய மரமாகவும் குறள்கள் மரம் தாங்கிய விதைகளாகவும் இருக்கின்றன என்று கருதுகிறார். பற்பல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல்பெற்ற அறிவின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் திருக்குளை “நவில்தோறும் நூல்நயம் போலும்” (783) என்னும் குறளின்வழி எடுத்துரைக்கின்றார். (வள்ளுவம், ப.8). சொல் ஒருவனின் உள்ளக் கருத்தினை தொடக்கூடியது. அறத்தை ஒளித்துக்காட்டும் பொய்த்திறமும் சொல்லிற்கு உண்டு என்பதை, “வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு” (819), “எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்றன்று” (825) சொல் என்பது மக்களின் நெஞ்சூர்தியல்ல… கருத்தூர்தி என்றுக் கருதுகின்றார்.

    நூலாசிரியரின் சொல்வழி நெஞ்சம்காண அவாவ வேண்டும். நெஞ்சம் காண்பதன் பொருள் என்னவெனில் “சொல்லியான் கருத்தாழமும், உணர்ச்சி நுகர்ச்சிகளையும் சொல்லத்தூண்டிய சூழ்நிலையையும், அவன் எதிர்பார்க்கும் பயனையும் உயிராக் காண்பது, இக்காட்சிக்கு அவன் ஆண்ட சொற்களையும் சொன்னடையும் உடலாகக் கொள்வது என்பதோடு கல்வி, ஒழுக்கம், குடிமை, நாகரிகம் என்றினை வாழ்க்கை நிலைகளையும் காணவொல்லும் அறிவூற்று” என்பதற்கு,

    நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை
    உணரப்படும்” –  (குறள்.826) என்ற குறளைச் சான்றாக்குகின்றார்.

    மன நோக்கு

    நோக்கு என்பது மேலோடான பார்வையன்று அழுந்திக் காண்பதாகும். “பிறன்மனை நோக்காத பேராண்மை” (148) இதில் ‘நோக்காத’ என்பதற்கு பிறருடைய மனைவியை மனத்தில் நினைத்தலே பிழை எனவும், கண்பார்வை பிழையன்று என்றும் குறிப்பிடுகின்றார். இக்குறிப்பறிவை “கூறாமை நோக்கி” (701), “கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கின்” (1100) என்னும் காதற்குறளையும் ஆராய்ந்தால் நோக்கு என்பது கண்பார்வையன்று அது மனப்பார்வை” எனப் பொருள்படும் என்கிறார். – (வள்ளுவம், ப.11)

    திருக்குறள் முழுவதும் ஓடிப் பரந்து அவரின் நெஞ்சம் நிற்கும். இதனை,  தனி நெஞ்சம் என்கிறார். “ஏனெனில் அந்நினைவு வள்ளுவர் ஒருவர் மாட்டே பிறந்ததால். தனி நெஞ்சம் என்பதாவது செயல் செயல் செயல் சொல்வது செயலுக்கு வரவேண்டும்” என்ற கருத்தை நெஞ்சிலே இருத்திக் கொண்டு குறளை எழுதியவர் வள்ளுவர். மனிதன் வாழ்வாங்கு வாழ்தல் என்பதற்கு திருக்குறகத்து மக்கட்பேறு, விருந்தோம்பல், சுற்றந்தழால், ஈகை, நல்குரவு, மருந்து என்று உலக அதிகாரங்களைக் காண்கிறோம். எனவேதான், திருக்குறளை வாழ்க்கை நூல், செயல் நூல், உலக நூல் என்று அழைப்பது பொருந்தும். (வள்ளுவம், ப.21)

    கயமை

    கயமை என்பது கீழ்மை, பொதுமை என்பதாகும். (கௌர தமிழ் அகராதி, ப. 225) ஒழுக்கம் கைவரப் பெறாதவனை இகழ்ந்துரைக்கக் கயமையெனும் அதிகாரமே வைத்துள்ளார். ஏனெனில் வள்ளுவர் நெஞ்சக்கொதிப்பின் வெளிப்பாடே கயமையதிகாரம் என்கிறார். “மக்களே போல்வர் கயவர்” (1071), “தேவர்அனையர் கயவர்” (1073), “அறைபறை அன்னர் கயவர்” (1076), “ஈர்ங்கை விதிரார் கயவர்” (1077) போன்ற குறட்பாக்களை எடுத்தியம்புகிறார். அறம் பொருட்பாக்களின் எல்லையதிகாரமாகிய கயமைத் தலைப்பு ஆசிரியரின் மனக்கொதிப்பிற்கு அறிகுறி கற்பதாகும் என்பதை எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர்.

    புகழ்சான்ற திருக்குறளைப் போற்றுகின்றோம் என்பதோடு புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் (538) என்பது தனி வள்ளுவம். செய்யாது குறள் காட்டும் அச்சமுடிபாக இருக்கின்றது. எனவே, யார்க்கும் செயல் வேண்டும் என்பதுதான் வள்ளுவர் காட்டும் உயிர்நிலை என்பதை இச்சொற்பொழிவு விளக்குகின்றது.

    பலநிலையறம்

    பலநிலையறம் என்னும் தலைப்பானது ஆழ்ந்து விளக்குதற்கு உரியதாகும். வாய்வழி உணவு போலவும் மூக்கு வழி உயிர்போலவும் திருக்குறள் கல்விக்கு இன்றியமையா நேர்வழியாகும்.

    உலக மக்கள் ஈட்டல், காத்தல், துய்த்தல், ஈதல்,  இவறல் (ஈயாமை) என்றின்னோரன்ன பொருள் நிலைகளாலும், கற்கும் நோக்கம் நூல் ஆர்வம் முறைகொள் வன்மை, சுவை நுண்மை, ஆழம், அகலம் என்றின்னோரன்ன கல்வி நிலையாலும், இயற்கையறிவு, நூலறிவு, நுண்ணறிவு, புரட்சியறிவு, தொழிலறிவு, ஆக்க அறிவு, படிப்பறிவு, தன்னறிவு என்றின்னோரன்ன அறிவு நிலையாலும் ஒருத்தர் போல் ஒருத்தரிலர். பொருள், கல்வி, அறிவுண்மைகள் ஒரு பாற்கிடக்க, பொருளிண்மை, அறிவின்மை என்ற இன்மை நிலைகளிலுந் தாம் நம்முன் வேறுபாடு கணிக்கத் தரமோ. இனைய நிலைப்பன்மை வேறுபாடுடெல்லாம் நுணிகித் தெளிந்த ஓராசிரியர் வள்ளுவர் ஆவார் என்கிறார்.

    “அன்பும் அறமும் பசியும் துறந்து ஈட்டுவாரும், வஞ்சகத்தால் பொருள் செய்து மகிழ்வாரும் பழி மலைந்து ஆக்கம் பெறுவாரும், பிறர் செல்வம் வெஃகித் தம்முடைமை விடுவாரும், இரந்தே வாழப் பயில்வோரும் ஆக உலகம் பொருள் வகையால் பல நிலையாளரைக் கொண்டது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இன்மையும் நிலையாச் செல்வம் நிலையிற்று என்னும் மக்கள் மயக்கமும் சிலர் அறவே ஈயாமையும், துய்யாமையும், சிலர் முற்றும் தாமே துய்த்துலும், சிலர் அனைத்தும் பிறர்க்கே வழங்கலும் எனவாங்கு வள்ளுவப் பேராசிரியர் பொருள் பற்றி மக்கள் பால்கண்ட நிலைகள் பலப்பல” என்று பதிவு செய்கிறார். (வள்ளுவம், ப.32)

    ஞானப்பேதைகள்

    “நுழைபுலம் இல்லான் எழில்நலம்” (407) என அழகுப்பேதையும் “மேற்பிறந்தாராயினும் கல்லாதார்” (409) எனச் செல்வப் பேதையும்
    “கல்லாதான் சொற்காமுறுதல்” (402) என வாய்ப் பேதையும் வள்ளுவர் கண்ட ஞானப்பேதைகள். “இணர் ஊழ்த்தும் நாறா மலரனையர்” (650) எனப் பயனில் புலவரையும், அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் (720) என அவையறியாப் புலவரையும் “கற்றறிந்தும் நல்லாரவை அஞ்சுவார்” (729) என அச்சப்புலவரையும், “பலநல்ல கற்றக் கடைத்தும்” (823) என மாணாப் புலவரையும் “கல்லாத மேற்கொண்டொழுகல்” (845) எனப் பிறதுறை விரிக்கும் சிறிய புலவரையும் கண்டவர்.

    செல்வர்முன் வறியவர்போல ஏக்கற்றும் கற்பாரும் அங்ஙன் கற்க நாணிக் கல்லாதொழிவாரும், கல்வியே கண்ணெனப் பெற்றாரும், கண்ணெப் பெயரிய புண்ணுடையாரும், செவிக்குணவாகிய கேள்வி இல்லாத பொழுது பசியாற்றிக் கொள்ளும் செல்வ மக்களும், செவிச்சுவை சிறிதும் அறியா ச்சோற்று மக்களும் வள்ளுவக் காட்சிகள். அறிவுத் தொழுகை செய்வாரும், மக்கள் மனவேட்பக் கலந்து பழகுவாரும், அவையஞ்சா மாற்றம் விடுக்கும் நோக்கொடு நிரம்பிய நூல் பயில்வோரும், பிறரின்பங்கண்டு கல்வி மேன்மேலும் விழைவாரும், கசடறக் கற்று கற்றப்படி நிற்பாரும் எனவாங்கு குறள் முதல்வன் கல்வி பற்றி மக்கற்பால் கண்ட நிலைகள் பற்பல என்று தான் கண்டவற்றைக் குறிப்பிடுகிறார். (வள்ளுவம், ப.33)

    சாதி மதங்கடந்தது

    திருக்குறள் சாதி, மதம், நாடு முதலிய பொதுமைப் பிறப்பிற்கு நிலைக்களமில்லை என்பதை மூதறிஞர் புலப்படுத்துகின்றார். ஒரேகுடி, ஒரே சாதி, ஒரே நெறி, ஒரே மொழி, ஒரே நாடு என்று நினைப்பவருள்ளும், பிறசாதி, பிற சமயம், பிறமொழி என வேற்றுமைப்பட்டாருள்ளும். நாம் பகுத்தறியத் தகும் வள்ளுவர் நுனித்துக் கண்ட வள்ளுவம் என்னை “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” (134) என்பது அப்பெருமகனார் காட்டிய நெறி நாம் அறையும் புறப்பொதுமையன்று. தனி நெஞ்சத்தூய்மை.

    சாதி சமய எண்ணமின்றியே அவற்றை எண்ணுவதும் வேண்டாமலே, உடலறிஞன் ஆள்தோறும் கைந்நாடி பார்த்து மருந்தளித்து உடல் நலம் செய்யுமாப் போலே உள்ளத்தறிஞானாகிய வள்ளுவரும் ஆள்தோறும் மனநாடிப் பார்த்து நிலைக்கேற்ற அறங்கூறி அகத்தூய்மை செய்பவர்.

    வள்ளுவர் பேரறிஞர் நிலைகொண்ட உண்மை என்ன? சாதி சமய நாட்டுப்பூசலனையவெல்லாம் எரிமலைபோலும் உள்ளப் பூசலின் வெளிப்பாடு மூட்டிய நீர்க் கொதிப்பும் போலும் நெஞ்சக் கொதிப்பின் புறப்பாடு. “காலம்பார்த்து உள்வேர்ப்பர்” (487) என்றபடி மனவெதுப்பின் வெளிப்பாடு. உள்ளப் பெரும் பூசல் தன் வெளிப்பாட்டிற்கு மடைவாய்ப் போல குடி, சாதி, சமயம், மொழி, கட்சி, நாடு என வரூஉம் பிரிவுகளை வாயிலாகக் கொள்கிறது என்பதன்றி இப்பிரிவுகள் அடைபடுமேல் வேறுபல புதிய வாயில்களை உண்டாக்கிக் கொண்டு முன்னையினும் வேகமாய்ப் பூசல் விளைவிக்கும் என்பதன்றிப் பொதுமை பறையான் உள்ளப்பூசல் அவிந்துவிடாது காண் (வள்ளுவம், ப.41) என்று குறிப்பிடுகிறார். அதாவது வேற்றுமையைக் காணும் எண்ணம் எழுகின்றபோது எப்படியாது வெவ்வேறு வடிவங்களைப் பிரிவினைவாதிகள்  நவீனத் தீணடாமை வடிவங்கள் போலவும், நீட் என்னும் சமூக அநீதித் தேர்வுப் போலவும் உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள் என்று குறிப்பிடுகின்றார். ஆனால்  உலக மக்கள் யாவரும் மனத்தூய்மையுடன் வாழ்வதற்கு எழுதப்பட்டது குறள் என்பதை அனைவரும் மறக்கின்றோம்.

    “நோய்நாடி நோய் முதல்நாடி” (948) என்ற மருத்துவ முறையைப் பின்பற்றாமல், ஊர், நாடு, அரசு போன்றவைகளால் குழப்பம் ஏற்படுகின்றது. காப்புச் செலவு எல்லாம் மக்கள் பசி தீர்க்கவும், அறியாமை அகற்றவும், மாசொழிக்கவும் பயன்படுத்த வேண்டும்.  மக்கள் நலியப் போர்ச் செலவுப் பெருக்கம், பொதுமைக் குரலால் யாருக்குப் பயன் பிற நாட்டுடன் போர் புரிவதற்கு மக்களின் வரிபணத்தில் பல இலட்சம் கோடிக்கு அணுஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் வாங்கிக் குவிப்பதனால்?  மக்களின் பசிப் பிணி தீராது என்பதை உணர்த்துகின்றார்.

    கல்வி

    “கற்க கசடற கற்பவை” (391)

    “கற்றில னாயினும் கேட்க” (414)

    “எனைத்தானும் நல்லவை கேட்க” (416)

    “என்ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு” (397)

    “கசடற வல்லதூஉம் ஐயந்தரும்” (845)

    எனவரும் கல்வி பற்றிய பல குறள்களும் மக்களின் பல்வேறு நிலைகள் நோக்கிப் பிறந்தன என்பது வெளிப்படை. நீ இழந்து விட்டனை. இனி உனக்கு முன்னேற்றமில்லை, இனிமாள்வதுதான் உன் முடிவு எனத் தள்ளிவிடும் சிறுமை வள்ளுவர் உணர்ச்சியில் இல்லை. நீ பெரிதும் உயர்ந்து விட்டாய், இனிப் பெற வேண்டும் என்று புகழ்ந்துபேசும் அழிக்கும் போக்கு அவரிடம் இல்லை. இழிந்தார்க்கும் உயர்ந்தார்க்கும் எந்நிலையிலும் நல்வாழ்வு உண்டு என்னும் அழிவில் கொள்கையுடைவர் என்பதை வள்ளுவம் கொண்டுள்ளது என கூறுப்பிடுகிறார். – (வள்ளுவம், ப.50)

    பொருள் நிலை

    நம்மைப் பொருள் உடைமைக் காலத்திலும் இல்லாமைக் காலத்திலும் எவ்வாறு வள்ளுவர் வழி நடத்துகிறார் என்பதைக் கூறும்விதமாகப் பொருள் நிலைகுறித்த சொற்பொழிவு அமைகிறது.

    திருக்குறள் சந்தை

    திருவள்ளுவரை மூதறிஞர், வியாபாரி, வணிகர், மருத்துவர், உழவர் என்று குறிப்பிடுகிறார். பணமிருந்தாலும் சில சரக்குகள் விற்றுத் தீர்ந்துவிடும்; பொருள் கிடைக்காது. ஆனால், திருக்குறள் இக்குறைகள் அற்ற பெரும்சந்தை. வள்ளுவர் வணிகர் மட்டுமல்ல; மருந்தும்தானே செய்து மருத்துவமும் பார்க்கின்ற தமிழ் மருத்துவன் போல், குறளும் தானே விளைவித்துக் கொடுப்பதுவும் தானே கொடுக்கும் உழவர் எனக் குறிப்பிடுகின்றார். ஒருவன் எத்துக்கொடுக்க ஒருவன் வாங்கும் விற்பனைப் பண்டம் போல அல்லாமல் குடங்கொண்டு முகக்கும் குளத்து நீர் போலவும் தாமேகிடைப்பது குறட்பண்டம் என்றுரைக்கின்றார் (வள்ளுவம், ப.57).

    பொருளின் ஆற்றல்

    பொருள் செயல்வகை, நன்றியில் செல்வம், நல்குரவு, ஒப்புரவறிதல், ஈகை, ஊழ், ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை என்ற அதிகாரங்களில் பொருட் குறள்கள் பரந்து கிடக்கின்றன. பொருளின் ஆற்றலை முழுதும் உணர்ந்த வள்ளுவர் அது நன்மை தீமைக்கும் கருவியாதலை எக்காலத்தும் மறந்தவரல்லர். இன்றியமையாப் பொருளை ஈட்டுவதற்கும் செலவிடுதலுக்கும் மக்கள் உறும் பல மாசுக்களைக் கண்ட வள்ளுவர்.

    “பொருளில்லது  இல்லை பொருள்”  (751) என்று சிறப்பித்தவர்

    பொருட்செல்வம் பூரியார் கண்ணும்உள”(241) என இழிந்துரைத்தார்.

    பொருள் என்பது ஓர் உலகக் கருவி அது குணம் பெருக்கவும் குறை நிரப்பவும் பயன்படவேண்டும். அது பண்டமாற்றும் பொதுக்கருவி என்ற தெளிவு வேண்டும். புறப்பொருளையெல்லாம் நல்லதற்கு தீயதற்கும் பயன்படுத்துதல் ஆளும் மனிதனின் நல்லதீய மனதைச் சார்ந்தது. குணமும் குற்றமும் பொருள் மேல் சார்ந்தது அல்ல. அதனை, ஆள்வோனைச் சார்ந்துள்ளது என்பதைப் புலப்படுத்துகின்றார். அதே நேரத்தில் பொருளாற்றலுக்கு ஓர் எல்லையுண்டு. பொருளிலும் சிறந்த பல பண்புகள் இன்றியமையாதன. அப்பண்புகள் இருப்பின் பொருள்நலஞ் செய்யும் இல்லையெனில் உடையானை கீழறுக்கும் என்பவற்றுக்கு,

    வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
    தகைமாண்ட
    தக்கார் செறின்” (897) என்ற குறளை அளவீடாகக் காட்டுகின்றார். பொருளின் பண்பற்ற நிலையைக் குறிப்பிடுகையில்,

    நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
    நல்லவாம்  
    செல்வஞ் செயற்கு” (375) என்ற குறளை மேற்கோள் காட்டுகின்றார்.

    “செல்வத்தின் இயல்பு நிலையாமை என்பதால் அதனை நிறுத்தப் பாடுபடுதல் பேதைமைக் கருத்து என்று பொருளீட்டுதல் குற்றம் என்றோ வேண்டாம் என்றோ கருத்தாகாது. உடல் நிலையாது என்றதனால் மக்களைப் பெறுதல் இழிவு இல்லறம் இழிவு என்றும் கொள்ளப்படாது. பழம் அழுகிபோகும், பலகாரம் ஊசிப்போகும் எனத் தெரிவிப்பது தவறல்ல. அழுகுவதன் முன்மை என்பதே இயல்பு என்பதற்கு “அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்” (333) என்று அதன் பயனனைக் குறிப்பிடுகின்றார்.” (வள்ளுவம், பக்.67-68)

    செல்வத்தை எந்த நோக்கத்துக்கு ஈட்டுகின்றனரோ, எதன்பற்றுக் காரணமாக சேர்க்கின்றனரோ அப்பற்று வழியாகவேத் தூய்மையூட்டல் செய்வதை,

    செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
    எச்சத்திற்கு
    ஏமாப்பு உடைத்து” (112)

    என்ற குறளை எடுத்துக்காட்டி நும்பொருள் நும்மக்களைச் சேரவேண்டுமானால் நடுவுநிலைமையோடு பொருளை ஈட்டுமின் என்ற நெறித்தூய்மை விதிப்பர் (வள்ளுவம், ப.74) என்று எடுத்துரைக்கின்றார்.

    [தொடரும்]

    ******

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி (தன்.)
    மன்னன் பந்தல்,  மயிலாடுதுறை.

     

     

    Share
  • தமிழ் யாப்பு எழுத்துக்களும் வடமொழி யாப்பு எழுத்துக்களும் – 1

    ம.பிரபாகரன்

    தமிழ், வடமொழி ஆகிய இரண்டுமொழிகளிலும் உள்ள யாப்பிலக்கணத்தில் எழுத்தெண்ணிக்கை மரபு காணப்படுகின்றது. அடிப்படையில் இந்த எழுத்தெண்ணிசெய்வதைத் தன் நோக்கமாகக் கொள்கிறது.

    முதலில் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபைக் பார்பதற்கு முன் வடமொழி எழுத்துக்களோடும், எழுத்தெண்ணிக்கை மரபோடும் அறிமுகம் ஆகிக் கொள்வது பயனுடையதாயிருக்கும். அங்ஙனம் செய்கையில் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபோடு வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபை ஒப்பிட வசதியாக இருக்கும்.

    வடமொழி யாப்புலகில் குறிலை இலகுவென்றும் நெடிலைக் குருவென்றும் வழங்குவர். அதுபோல் குறில் ஒற்றையும் நெடில் என்றே வழங்குவர் அதாவது க- இலகு, கக்- குரு.  விருத்தமஞ்சரி என்னும் மலையாள யாப்புநூல் இது குறித்து விரிவாக கூறுவதைக் கீழே காணலாம்:

    கிருஸ்வா க்ஷரம் லகுவதாம்
    குருவாம் தீர்க்க மாயது
    அனுஸ்வாரம் விஸர்க்கம்தான்
    தீவிர இயத்தினம் உரைச்சிடும்
    சில்லு கூட்டக்ஷரம் தானோ
    பின்வந்தால் ஹ்ரஸ்வம் குரு ”

    ஹ்ரஸ்வம் – இலகு (குறில்)
    தீர்க்கம் – குரு (நெடில்)

    ஹ்ரஸ்வத்திற்குப் (இலகு) பின் அனுஸ்வாரம் (o) விஸர்க்கம் (:) நீட்டி ஒலிக்கும் சில்லு இவை வந்தால் ஹ்ரஸ்வம் (இலகு) குருவாய் ஒலிக்கும்.

    കമല (கமல) – ஹ்ரஸ்வம் ஆனதால் எல்லாம் இலகு.
    வம்சம் – இதில் அனுஸ்வாரம் (o) வந்ததனால் எல்லாம் குரு.
    துக்கம்     – இதில் து என்பதற்குப் பின் விஸர்க்கம் இருப்பதனால் இதில் ஹ்ரஸ்வமான (இலகு) து குருவாகிறது. க என்ற ஹ்ரஸ்வத்தின் பின் அனுஸ்வாரம் வந்ததனால் இலகுவான ‘ க ‘ குருவாய் மாறியது.

    க்ருஷ்ணன் – இதில் க்ரு என்பதற்குப் பின்னர் ‘ ஷ்ண ‘ என்ற கூட்டெழுத்து வந்தனால் ஹ்ரஸ்வமான (லகு) க்ரு என்பது குருவானது.

    ஷ்ண என்பதற்குப் பின்னால் ‘ ன் ‘ என்ற சில்லெழுத்து வந்ததனால் ‘ ஷ்ண ‘ என்ற இலகு குருவாகியது.

    ரோசாப்பூ – இதில் எல்லாமே தீர்க்கமாகியதால் (நெடில்) இதில் உள்ள எல்லா எழுத்தும் இரண்டு மாத்திரைகள் பெறும்.

    வெஞ்சனமும் சில்லும்:

    க 1 க 2 க 3 க    இவை தமிழ் ‘ க ‘ வை ஒத்தவை. இவை போன்றன வெஞ்சனம் (உயிர்மெய்) என்றழைக்கப்படுகின்றன. தனியாய் நிற்கும் வெஞ்சனங்களுக்கு (மெய்யெழுத்துக்கள் ) சில்லு என்று பெயர்.

    சில்லுகள், கூட்டெழுத்துகளுக்கு ஒரு சிறப்பு விதி:

    சில்லுகளையும் கூட்டெழுத்துக்களையும் உச்சரிப்பது சில இடங்களில்                    தீவிரமாகவும் (அழுத்தமாகவும்) சில இடங்களில் லகு அளவிலும் (Normal) நடைபெறும். அவைகளில் தீவிரமாய் (அழுத்தமாய்) உச்சரிக்கப்படும் சில்லுகளுக்கு முன்வரும் லகுதான் குருவாய் மாறும். அல்லாத இடங்களில் லகு லகுதான்.

    உதாரணம்:

    மலர்பொடி – இதில் ர் என்பது அழுத்தமாய் உச்சரிக்கப்படுவதால் ‘ ல ‘ என்னும் இலகு குருவாய் மாறியது.

    மலர்மால – இதில் ர் என்பது அழுத்தம் இல்லாமல் சாதாரணமாக அல்லது இயல்பாக வந்தமையால் ‘ ல ‘ என்பது லகுவேதான்.

    கல்ப்னப்ரகாரம் – ப்ர என்பது அழுத்தமாக உச்சரிக்கப்படுவதால் இலகுவான ‘ ன ‘ என்பது குருவாய் மாறியது.

    கல்பிச்சப்ரகாரம் – ‘ ப்ர ‘ என்பது அழுத்தமாக உச்சரிக்கப்படாததால் லகுவான ச்சா என்பது குருவாய் மாறவில்லை. மேலும் ஓர் அடியின் இறுதியில் வரும் லகு நீட்டம் வேண்டுமிடத்து குருவாகவும் மாறும்.

    வடமொழி விருத்தங்களும் எழுத்துக்களும்:

    வடமொழியில் விருத்தங்கள் எழுத்து, மாத்திரை ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப்படுகின்றன. எழுத்தின் அடிப்படையில் அமையும் விருத்தம் வர்ணவிருத்தம் (வர்ணம் – எழுத்து) என்று அழைக்கப்படுகிறது. மாத்திரை அடிப்படையில் அமையும் விருத்தம் மாத்திராவிருத்தம் என்று அழைக்கப்படுகிறது.

    வர்ணவிருத்தத்தில் மூன்று எழுத்துக்கள் சேர்ந்தால் ஒரு கணம் என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 8 வகைக் கணங்கள் காணப்படுவதாக வடமொழி விருத்த நூலான சந்தசூத்திரம் கூறுகிறது.

    1.குரு /குரு /குரு – சர்வகுரு – மகணம்

    1. லகு /லகு/ குரு – ஆதிலகு – யகணம்

    3.குரு/லகு/குரு – மத்யலகு – ரகணம்

    4.லகு/லகு/குரு – அந்திகுரு- சகணம்

    5.குரு/குரு/லகு- அந்திலகு- தகணம்

    6.லகு/குரு/லகு- மத்யகுரு – ஜகணம்

    7.குரு/லகு/லகு – ஆதிகுரு – பகணம்

    8.லகு/லகு/லகு- சர்வலகு- நகணம்

    வர்ணவிருத்தம் மூன்று வகைப்படும்:

    1. சமவிருத்தம் : நான்கு அடிகளும் ஒரே மாதிரியான கணங்களைக் கொண்டு வருவது சமவிருத்தமாகும்.
    1. அர்த்தசமவிருத்தம்: முதலடியிலும் மூன்றாமடியிலும் ஒரே மாதிரியான கணங்களையும், இரண்டாம் அடியிலும் நான்காம் அடியிலும் ஓரே மாதிரியான கணங்களையும் பெற்றுவருவது அர்த்தசமவிருத்தமாகும்.
    2. வியமவிருத்தம்: நான்கு அடிகளும் ஒன்றுபோல் அமையாமல் ஒன்றுக்கொன்று வேறுபட்டு வருபவை வியமவிருத்தம்.

    மேற்கண்ட மூன்று பெரும் வர்ணவிருத்தங்களுள் சமவிருத்தம் 26 வகைப்படும். இந்த 26 விருத்தங்களும் குறிப்பிட்ட எழுத்தெண்ணிக்கை அடிப்படையில் அமைவனவாகும். இதைக் கீழ்க்கண்ட அட்டவணை மூலம் அறியலாம்.

    எழுத்துக்கள்          சந்தஸ்கள்

    1          உக்தா

    2          அதியுக்தா

    3          மத்யா

    4          ப்ரதிஷ்டா

    5          சூப்ரதிஷ்டா

    6          காயத்ரி

    7          உஷ்ணிக்

    8          அனுஷ்டுப்பு

    9          ப்ரஹதி

    10        பங்தி

    11        த்ருஷ்டுப்பு

    12        ஜகதி

    13        அதிஜகதி

    14        சக்வரி

    15        அதிசக்வரி

    16        அஷ்டி

    17        அதியஷ்டி

    18        த்ருதி

    19        அதித்ருதி

    20        க்ருதி

    21        ப்ரக்ருதி

    22        ஆக்ருதி

    23        விக்ருதி

    24        ஸம்க்ருதி

    25        அபிக்ருதி

    26        உத்க்ருதி

    இந்த 26 வகைகளுள்ளும் எழுத்து மாற்ற அடிப்படையிலான உள்வகைகள் உள்ளன. இது குறித்த விரிவான விளக்கத்திற்கு  விருத்த மஞ்சரியைக் காண்க.

    வியம விருத்தங்களில் எழுத்துக் குழுக்கள்:

    வியமவிருத்தங்களில் எழுத்துக்கள் அடிப்படையில் குழுக்கள் இருந்தமையை வடமொழி யாப்புநூல்கள் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

    பிங்கலர் கூறும் வர்ணவிருத்தங்களில் ஒரு வகையான வியமவிருத்தம் 4 குழுக்களைக் உடையதாக உள்ளது.முதல் குழு வக்த்ரா குழுவாகும். இதில்  நான்கடிகள் வரும். ஒவ்வொரு அடியும் எட்டெழுத்துவீதம் வரும். இரண்டாவது குழு பாதசதுரூர்த்துவா குழுவாகும். இதில் நான்கடிகள் வரும். முதல் அடி எட்டெழுத்தும், இரண்டாம் அடி பன்னிரண்டு எழுத்துக்களையும்,  மூன்றாம் அடி பதினாறு  எழுத்துக்களையும் நான்காம் அடி இருபது எழுத்துக்களையும் கொண்டு அமையும். மூன்றாவது உத்காதா குழு, இதில் நான்கடிகள் வரும். முதல், இரண்டு, மூன்று, நான்காம் அடிகள் முறையே பத்து , பத்து, பதினொன்று, பதின்மூன்று எழுத்துக்கள் பெற்று வரும். நான்காவது குழு, உபஸ்திதப்ரஜீபிதா குழு ஆகும். இதிலும் மற்றைய குழுக்கள் போலவே நான்கு அடிகள். முதல் அடி பதினான்கு எழுத்துக்களும், இரண்டாம் அடி பதின்மூன்று எழுத்துக்களும், மூன்றாமடி ஒன்பது எழுத்துக்களும், நான்காமடி பதினைந்து எழுத்துக்களும் பெற்றுவரும். மேற்கூறிய எழுத்துக்களின் எழுத்துவரிசையை மாற்றி ஒவ்வொரு குழுக்களிலும் பல்வேறு வகைகளை உருவாக்க முடியும். ஜெயகிருதி என்ற வடமொழி யாப்பியலாளர் மூன்று வகைப்பட்ட வியமவிருத்த (எழுத்து) குழுக்களைக் கூறுகிறார். அவையாவன:

    (I) சமனாக்ஷரா குழு
    (II) ஊனாக்ஷரா குழு
    (III) அதிகாக்ஷரா குழு

    இம்மூன்றுள் முதல்குழு பிங்கலரின் வக்த்ரா குழுவினோடும், இரண்டாவது குழு உத்காதா குழுவினோடும், மூன்றாவது குழு பாதசதுரூர்த்துவா குழுவினோடும் பொருந்தி வருகின்றன.

    மாத்திரா விருத்தம்:

    மாத்திராவிருத்தத்தைப் பொறுத்தவரை நான்குமாத்திரைகள் சேர்ந்தது ஒருகணம். இங்கு மாத்திரையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுக்கப்படுகிறது. மாத்திரை கணம் ஐந்து வகையாக வரும்.

    1. _ _ _ சர்வகுரு
    2. _ U U ஆதிகுரு
    3. U _ U மத்யகுரு
    4. U U _ அந்திகுரு
    5. U U U U சர்வலகு

    வர்ணவிருத்தம் போல் இவற்றிற்கு பகணம் ஜகணம், சகணம் என்ற பெயர்கள் கொடுப்பதில்லை. மேற்கண்ட ஐந்து வகையில் ஒன்றாவது வகை குருமயம் என்றும் ஐந்தாவது லகுமயம் என்றும் அழைக்கப்படுகிறது. 

    தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபு:

    தொல்காப்பியர் செய்யுளியலில் எழுத்தெண்ணிக்கை பற்றி விரிவாகப் பேசுகிறார். தொல்காப்பியர் பேசும் இவ்வெழுத்தெண்ணிக்கை மரபு தமிழிற்குரியதா? வடமொழிக்குரியதா? இத் தொடர்பில் பூ.கு.குப்புசாமிராஜா என்பவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் தொல்காப்பியச் செய்யுளியலில் வரும் எழுத்தெண்ணிக்கை மரபு வடமொழி நெறிபட்டது என்றும் எழுத்தெண்ணிக்கை பற்றி வரும் சூத்திரங்கள் இளம்பூரணருக்கு முன்வந்த உரையாசிரியர்களின் இடைச்செருகல்கள் என்றும் கூறுகிறார். இவர் கருத்து எழுத்தெண்ணிக்கை பற்றிய விவாதத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது. அவர் கூறுவதாவது: தொல்காப்பியத்தில் நிலத்தை எழுத்தெண்ணும் முறை பற்றி வரும், 

    நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே
    நாலெழுத் தாதியாக வாறெழுத்
    தேறிய நிலத்தே குறளடி என்ப ”

    என்று தொடங்கும் ஒன்பது சூத்திரங்களும் கூறுவது கட்டளையடியன்றோ? அது பற்றிக் கருத்தென்னை எனின் அச்சூத்திரங்கள் தொல்காப்பியர் சூத்திரங்களல்ல. இளம்பூரணருக்கு முன்பிருந்த உரையாசிரியர்களால் இயற்றப்பட்ட உரைசூத்திரங்களிவை எனத்தெரிகிறது. செய்யுளியலின் முதற்சூத்திரத்திற் தொகையாகக் கூறியபடி,

    மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ
    யாத்த சீரே யடியாப் பெனாஅ ”

    என்றபடி மாத்திரை, எழுத்து, அசைகளை விளக்கிப் பின் சீர்களை விளக்கும் சூத்திரங்களை நிரல்பட வைத்துள்ளார்.

    அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீர்
    ஒன்றுத லுடைய வோரொரு வழியே ”

    என்று சீரைப் பற்றிக் கூறுகிறார். அந்த ஒன்பது சூத்திரங்களையும் கழித்தபின்

    ”   சீர்நிலை தானே ஐந்தெழுத்திறவாது
    நேர்நிலை வஞ்சிக் காறு மாகும்
    எழுத்தள வெஞ்சினும் சீர்நிலை தானே
    குன்றலு மிகுதலு மில்லென மொழிப ”

    என்ற சூத்திரங்களால் சீர்களைப் பற்றியே கூறுகிறார். அதன் பிறகுதான், ” வஞ்சியடியே இருசீர்த்தாகும்” என்று அடிகளை விவரிக்கிறார். ஆதலின் சீரைப் பற்றிக் கூறும் சூத்திரங்களிடையே அடியைப் பற்றி நிரல்பட அமைக்கும் போக்குடைய தொல்காப்பியர் சூத்திரம் செய்திருக்க மாட்டார். ஆதலின் வடமொழி நெறிபற்றி வந்த எழுத்தெண்ணும் முறையை  தொல்காப்பியர் மேலே சுமத்த விரும்பிய பிற்காலத்தவர்களின் இடைச்செருகலே கட்டளை அடி என்னும் கற்பனை அடிகள் என்பது தெளிவாகும். அளவடிக்குள் குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என்று கூறுவது யாப்புக்குப் பொருத்தமில்லை என்பது நன்கறிந்த தொன்றாதலின். அஃது தொல்காப்பியர் கருத்தன்று என்றும் பதினேழு நிலம் என்பதும் எழுத்தலவு பற்றி வருவதன்று அசைச் சீர்களின் இடைநிலமே என்றும் தெளிவாக உணர வேண்டும் ” (தொல்காப்பியச் செய்யுளியல் இரு சூத்திர விளக்கம், மணிமேகலை மன்றம், இராஜபாளையம், ஆண்டு தெரியவில்லை)

    இக்கூற்று பொருந்துமாறில்லை. தமிழ்ச்செய்யுள் மரபில் ” எழுத்தெண்ணிக்கை ” என்பது முக்கிய இடத்தை வகித்துள்ளது என்பதை தொல்காப்பியரின், 

    உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ
    உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான ”

    என்ற செய்யுளியல் நூற்பா மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது. இங்கு ” உயிரில் எழுத்து எண்ணப்படா ” என்பது மேலும் கவனதிற்குரியது. இந்த இடம் குறிப்பிடத்தக்கது. இது வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபையும், தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபையும் பிரித்துக்காட்டுகிற இடம். எழுத்தெண்ணிக்கை மரபு தமிழில் அதற்கேயுரிய முறையியல் படி அமைந்திருந்தது என்பதைக் காட்டும் இடம்.

    தமிழ்ச்செய்யுளில் உயிரில் எழுத்து- மெய், சார்பெழுத்துக்கள் எண்ணப்படாது. ஆனால் வடமொழி யாப்பில் ‘ மெய் ‘ எண்ணப்படுவதற்குரியது. விலக்கப்படும் தன்மையுடையதன்று.

    ( தமிழில் கக் – 1 மாத்திரை.

    வடமொழியில் கக் – 2 மாத்திரை )

    மேலே காட்டிய உயிரில் எழுத்து….என்ற சூத்திரத்தோடு தொல்காப்பியர், ” அளபெடை அசைநிலை ஆகல் உரித்து ” ” ஒற்று அளபெடுப்பினும் அற்றென மொழிப ” ஒற்றெழுத்தியற்றே குற்றியலிகரம் ” என்ற சூத்திரங்களை எழுத்தெண்ணிக்கையோடு தொடர்புபடுத்திச் சிந்தித்திருக்கிறார் என்பது வெளிப்படை. எழுத்தெண்ணும் இம்முறையியல் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபிற்கே யுரியது. இத்தன்மையை வீரசோழிய உரைகாரர் பெருந்தேவனார் உரை மூலமும் நம்மால் அறிந்துகொள்ளமுடிகிறது. அவர் கூறுவதாவது:

    கடாஅ வுருவொடு கண்ணஞ்சாதி யாண்டு
    முகாஅமை வல்லதே யொற்று ”

    இதனை எப்படி ஓசையூட்டுவதெனிற் குற்றியலிகரம் என்று ஒன்றாக்கி அதனைச் சீரும் தளையுஞ் சிதையிற் சிறிய இட அளபோடாது மறிவர் அலகுபெறாமை யென்றிகரம் அலகுபெறாதாக்கி ஓசையூட்டுக என்பர். அதுவும் பிழையென்க. இகரங் குற்றெழுத்தாய் நின்று அலகு காரியம் பெறுதலல்லது ஒற்றெழுத்தே போல் அரைமாத்திரை உடைத்தாயினும் அலகு காரியம் பெறாதொழிதற்குக் காரணமின்மையாலென்க. அன்றியும் அலகு காரியம் பெறாவிடில் எல்லாவிடத்தும் பெறாதொழிய வேண்டுமென்க. அன்றியும் குற்றியலிகரம் அரைமாத்திரையாய் முற்றியலுகரம் ஒருமாத்திரையானமை உச்சாரணையினால் வேறுபடுத்திக் காட்டவொண்ணா வென்க…….அன்றியும் வடநூல் புலவர்க்கு ஓசையூட்டுக என்பதில்லை ”. (சி.வை.தாமேதரம்பிள்ளை பதிப்பு, வீரசோழியம்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக்: 142: 2008) இங்குக் குற்றியலிகரத்தை அலகு பெறாதாகி ஓசையூட்டுவது போன்ற முறையியல் வடமொழியில் இல்லை என்று பெருந்தேவனார் கூறுவதைக் கவனிக்க.

    முன்னர் காட்டிய பூ.கு. குப்புசாமி கட்டுரையிலிருந்து இன்னொரு கருத்தை எடுத்து விவாதிப்பதும் இக்கட்டுரைக்கு அவசியமானதாகும். அவர்தம் கூற்றாவது: ” மேலும் நமக்குக் கிடைத்த சங்க இலக்கியத்திலும் பயிலாத – முற்காலத்தில் இருந்ததாக உரையாசிரியர்களின் கற்பனையாகிய கட்டளை அடிகட்கே இச்சூத்திரம் பொருந்தும் என்பது சிலர் கருத்து ” (மு.சு.க.பக்.5)

    தொல்காப்பியரின் எழுத்தெண்ணி அடிவகுக்கும் முறை சங்க இலக்கியத்தில் இருக்கிறதா என்பது பற்றி இன்னும் முழுமையான ஆய்வு செய்யப்படவில்லை. இது முழுமையாகச் செய்யப்படவேண்டிய ஆய்வாகும். தொல்காப்பியர் செய்யுளியலில் கூறிய பல இடங்கள் தெளிவுபடுத்தபடாமலேயே உள்ளன. அவை உரிய தரவுகள் கிடைக்கும்போது தெளிவாகும். ஒரு வாதத்திற்காக குப்புசாமிராஜாவின் கருத்தை நாம் ஒப்புக்கொண்டாலும் கூட அதாவது எழுத்தெண்ணி அடிவகுக்கும் முறை சங்க இலக்கியத்தில் இல்லை என்பதற்காக அவ்வெழுத்தெண்ணிக்கை பற்றித் தொல்காப்பியர் கூறவில்லை என்ற பொருளில் குப்புசாமிராஜா கூறுவது பொருந்துமாறில்லை. வீரசோழிய ஆசிரியர் புத்தமித்திரர்  கூறும் ஏழ்வகைப் பத்தியக்கவிகளுக்கு  இலக்கியச்சான்றுகள் இல்லை என்பதற்காக அவற்றை இடைச்செருகல்கள் என்று ஒதுக்கமுடியாது. தொல்காப்பியர் கூறும் எழுத்தெண்ணி அடிவகுப்பது தொடர்பான சூத்திரங்கள் என்று குப்புசாமிராஜா கூறுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை.

    [தொடரும்]

    ******

    கட்டுரையாசிரியர்
    ஆய்வாளர்,
    EFEO,
    புதுச்சேரி.

     

     

     

    Share
  • சிவப்பிரகாசம் குறிப்பிடும் மூவகை வாசகர்கள்

    -முனைவர் த. சரவணன்

    தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
    தோன்றிய
    நூல்எனும் எவையும் தீதாகா”

    மேற்கண்ட பாடலடி உமாபதி சிவாசாரியார் இயற்றிய சிவப்பிரகாச அவையடக்கப் பாடலில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலடி தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் செல்வாக்குப் பெற்றது. பழமையை மட்டும் போற்றிப் புதுமையை இகழ்வதை இப்பாடலடி கண்டிக்கின்றது.  இவ் அவையடக்கப் பாடலில் இப்பாடலடியைத் தொடர்ந்து வரும் அடிகளில், ஒரு பனுவல் மூன்று வகை வாசகர்களால் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பது விளக்கப்படுகின்றது. எனவே இக்கட்டுரை சிவப்பிரகாச அவையடக்கப் பாடல் குறிப்பிடும் மூவகை வாசகர்களைப் பற்றி எடுத்து இயம்புகிறது.

    எழுதப்பட்ட ஒரு பனுவல் (Text), தனக்கான வாசகர்களாலும் உருவாக்கம் பெறும்போதுதான் அதற்குப் பன்முகப் பரிமாணம் கிடைக்கிறது. மேலும் எந்த ஒரு பனுவலும் தனக்கான வாசகர்கள் என்ற நினைப்பு இல்லாமல் உருவாவதில்லை. படைப்பு உருவாக்கத்தில் நிலவும் இந்தத் தன்மைதான் ஆற்றல் வாய்ந்த ஒன்றாக வாசித்தல் விளங்குவதற்கு அடிப்படை ஆதாரமாகிறது.

    வாசகர் என்கிற ஒரு கூட்டத்தாரின் பல்வேறு வகையான புலனுணர்வுகளால் உணரத்தக்க ஒரு நிகழ்வுதான் இலக்கியம். அவரவர் புலனுணர்வுகளுக்குத் தக்கவாறு ஒரு படைப்பிலக்கியம் எவ்வாறு புரிந்துகொள்ளப்படும் என்பதை இன்றைய திறனாய்வாளர்கள் வாசகர்கள் ஏற்புடைமைத் திறனாய்வில் (Readers Response theory) குறிப்பிடும் கூறுகளை உமாபதி சிவாசாரியார் சிவப்பிரகாச அவையடக்கப் பாடலில் குறிப்பிடுகின்றார்.

    உண்மையான வாசகர் (Actual reader), மேலான வாசகர் (Super reader), அறிவார்ந்த வாசகர் (Informed reader), இலட்சிய வாசகர் (Ideal Reader), மாதிரி வாசகர் (Model Reader), உள்ளுறை வாசகர் (Implied Reader), கொள்கை வாசகர் (Encoded reader) என்று வாசகர்கள் பல்வேறு திறனாய்வாளர்களால் பெயரிட்டழைக்கப்படுகின்றனர்.(Jeremy Hawthorn. 2011. A Glossary of Contemporary Literary Theory, pp.289-292) ஆனால் உமாபதி சிவாசாரியார்  பின்வரும் பாடலில் துணிந்த நன்மையினார், நடுவாம் தன்மையினார், ஆராய்ந்தறிதல் இன்மையினார் என்னும் மூவகை வாசகர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

    தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
    தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா துணிந்த
    நன்மையினார் நலங்கொள்மணி பொதியும்அதன் களங்கம்
    நவையாகா தெனஉண்மை நயந்திடுவர் நடுவாந்
    தன்மையினார் பழமைஅழ காராய்ந்து தரிப்பர்
    தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந் தறிதல்
    இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே திலருற்
    றிகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன் றிலரே.            (சிவப்பிரகாசம் பாடல் எண்.12)

    துணிந்த நன்மையினார்

    துணிந்த நன்மையினார் என்பவர் ஒரு நூலைப் படித்த உடனேயே அதனுடைய பழமையும் புதுமையும் சொற்குற்றமும் கொள்ளாமல் அப்படியே ஏற்றுக்கொள்வர். அது எவ்வாறெனில் நல்ல இரத்தினமானது ஒரு நாய்த்தோலிலே கட்டியிருந்தாலும் இரத்தினமறிந்தவர்கள் தோலின் குற்றம் கொள்ளாது மாணிக்கத்தின் நன்மையை மட்டும் கைக்கொள்ளுவர். இங்கு மாணிக்கத்தின் நன்மையைக் கொள்ளுபவரைப் போலத் துணிந்த நன்மையினார் என்பவர் குறிப்பிடப்படுகின்றார்.

    நடுவாந்தன்மையினார்

    இவர் முற்சொன்னவரைப் போல் அல்லாமல் ஒரு பனுவலை வாசித்தவுடன் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் வேதாகமத்தைப் பின் செல்லுகின்ற நூல் என்றும் நன்மையை உடையது என்றும் மெதுவாக ஏற்றுக்கொள்வார்.

    ஆராய்ந்தறிதல் இன்மையினார்

    இவர் குணமும் குற்றமும் பொருளிடத்தில் பொருந்தியுள்ள முறைமையை ஆராய்ந்து அறியாதவராய் இருப்பார். ஒரு நூலை உத்தமர்கள் கொண்டாடினால் கொண்டாடியும் ஒரு நூலின் மீது பொறாமை கொண்டோர் இகழ்ந்துரைத்தால் அதற்கு ஏற்றவாறு  அந்த நூலை இகழ்ந்தும் உரைப்பார். இவர் தமக்கென்று நன்மை தீமையைத் தீர்மானிக்கும் அறிவு இல்லாமல் திகழ்வார்.

    தொல்காப்பியர் இந்த மாந்தர்களைக் குறித்துக்

    கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
    உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
    நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே”–      தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் நூற்பா எண். 27

    எனச் சுட்டுகிறார். அத்தகைய உணர்வில்லாத மாந்தருக்குப் பனுவலின் பொருள் புலப்படாது  என்றும் பதிவு செய்கிறார். ஆக, தொல்காப்பியர் வாசகர்/மாந்தர் என்று கருதுவது பனுவலோடு இரண்டறக் கலந்த ஒருவரைத்தான் எனத் தெரிகின்றது. நவீனத் திறனாய்வும் பனுவலின் பண்பாக்கத்தோடு உருவாகும் ஒருவரைத்தான் வாசகர் என்று கருதுகிறது. இங்குச் சிவப்பிரகாசப் பாடல் குறிப்பிடும் முதல்வகை வாசகர்/மாந்தர் என்பவர் பனுவலோடு இரண்டறக் கலந்த உணர்வுடைய ஒருவர். மூன்றாம் வகை வாசகர்/மாந்தர் கண்ணினும் செவியினும் உணர்வில்லாத ஒருவர்.

    முடிவுரை

    சிவப்பிரகாச அவையடக்கப் பாடல் வெறும் அவையடக்கப் பாடலாக மட்டுமல்லாமல் இன்றைய இலக்கியத் திறனாய்வாளர் குறிப்பிடும் வாசகர் ஏற்புடைமை பற்றியும் விளக்குவதை அறிய முடிகிறது. ஒரு தத்துவ இலக்கியப் பனுவல் மூன்றுவகை மாந்தர்களால்/வாசகர்களால் மூன்றுவிதமாக புரிந்துகொள்ளும் முறையும் இப்பாடலால் விளக்கப்படுகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1.திருவிளங்கம், மு. (உ.ஆ.). 1933. கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த சிவப்பிரகாசம் மூலம். சுன்னாகம்: திருமகள் அச்சியந்திரசாலை.

    2.கணேசையர், சி. (ப.ஆ.). 1943. தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) பின்னான்கியல்களும் பேராசிரியமும். சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்.

    3.Jeremy Hawthorn. 2011. A Glossary of Contemporary Literary Theory. New Delhi: Heritage Publishers.

     ******

    கட்டுரையாளர்
    இளநிலை ஆய்வு அலுவலர்
    இலக்கியத்துறை
    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
    தரமணி, சென்னை -113

     

     

     

    Share
  • உதவிக் கரம்…

     

    செண்பக ஜெகதீசன்

     

     

    சிறகாய் இருந்தது

    இறகு-

    பறவை பறந்திட..

     

    உதிர்ந்தது ஒரு நாள்,

    விழுந்தது

    ஓடும் நீரில்..

     

    உதவியது அப்போதும்-

    எறும்புக்குப் படகாய்…!

     

     

    Share
  • கருவாச்சி காவியத்தில் குடும்ப அமைப்புமுறை

    -மோ. பவானி

    முன்னுரை

         குடும்பம், இன வாழ்வுடைய சமுதாயத்தின் அடிப்படையாக அமைகின்றது. முழுமைபெற்ற சமுதாய வாழ்வை மனிதா்களே மேற்கொள்ளத்தக்கவா்கள். குடும்பம் ஆண் பெண் சோ்க்கையில்தான் உருவாகின்றது. சமூகம் மனித இனத்துக்கு மட்டும் முதன்மையும் சிறப்பும் தருகின்ற ஓா் அமைப்பாகும். சமுதாயம் என்பது பலவகைக் குடும்பங்களின் கூட்டமைப்பு. சமுதாயத்தின் அடிப்படை அலகுகளாகக் குடும்பங்கள் கருதப்படுகின்றன. குடும்பம் என்பது ஆண் பெண் சோ்க்கை இல்லாமலோ அச்சோ்க்கையும் அவா்களுடைய சமுதாய இசைவில்லாமலேயே அதன்பயனாக மக்கட்பேறு இல்லாமலோ அமைவதில்லை. எனவே சமுதாயத்தின் அடிப்படை அலகும், உயிரியல் அமைப்புமான குடும்பங்கள் பற்றி அறிந்துகொள்வதாக, அக்குடும்பங்கள் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

    குடும்பம்

      ஊா் என்பது சிற்றெல்லை அமைப்பை கொண்டிருப்பதுபோல, குடும்பம் என்பது சிற்றெல்லை உறுப்பாக அமைகிறது. குடும்பம் என்பது கணவன் மனைவியும், பின் குழந்தைகளுமாக அமைவதாகும். குடும்பம் என்பது தொடக்கத்தில் கணவன் மனைவி என்று இருவா் மனவழியாகச் சோ்வதையும் பின் இரத்த உறவும், கொப்பூழ்க்கொடி உறவுமாகக் குழந்தைகள் சோ்வதையும் குறிக்கும். கணவன், மனைவி, மக்கள் என்றும் இவா்களோடு பெற்றோர்களும் சோ்வதைக் குறிக்கும். இதன் விளக்க அடிப்படையிலேயே குடும்பம் என்பது, ஓா் உயிரியல் அமைப்பாகிறது என்று பக்தவத்சலபாரதி குறிப்பிடுகிறார்.

    குடும்பத்தின் தோற்றம்

         குடும்பத்தின் தோற்றம் குறித்துப் பல்துறை அறிஞா்களால் பல்வேறு கோட்பாடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை, பாலுணா்வுக்கோட்பாடு, தந்தை தலைமைக்கோட்பாடு, தாய்த் தலைமைக்கோட்பாடு, ஒருதுணை மணக்கோட்பாடு, பல காரணிகோட்பாடு என ஐந்து கோட்பாடுகளைப் பக்தவத்சலபாரதி குறிப்பிடுகிறார். பிறிதொரு வகைப்பாட்டிலும் குடும்பத் தோற்ற நினைவுகள் கூறப்படுகின்றன. அவை, இரத்தஉறவு குடும்பம், குழுமனக் குடும்பம், நிறைவுபெற்ற பிணைப்புடைய மனக்குடும்பம், தந்தைத் தலைமைக் குடும்பம், தாய்த்தலைமைக் குடும்பம் என்பனவாகும், ஆயினும், இவற்றைப் படிமுறைகள் கோட்பாட்டின் உள்ளடக்கம் என்று குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

         குடும்பம் என்பது கணவன், மனைவி, மக்கள், பெற்றோர், உடன்பிறந்தோர், அவா் தம் மனைவி, மக்கள் என இரத்த உறவுடையவா்களைக் கொண்டது. இரத்த உறவு அல்லாமல் பணியாட்கள் அல்லது வேலையாட்கள் குடும்ப உறவினா்களாக அமைவதும் உண்டு. இதனை காப்பியங்களில் காணமுடிகிறது. இவ்வகையான உறவுமுறைகள் கொண்ட குடும்பங்கள் சங்க காலத்திலும் இருந்தன என்பதைப் புறநானூறு எடுத்துரைக்கின்றது.

    கருவாச்சி காவியம்

         கருவாச்சி காவியத்தில் கொண்ணவாயன் என்னும் பதினைந்து வயதுச் சிறுவன் பெரியமூக்கி வீட்டில் பண்ணையாளராகச் சேர்ந்து காடு வீடு சார்ந்த தொழில்களைச்செய்து குடும்பத்தில் ஒருவன் போல இடம் பெற்று வளா்கிறான். இதனால் இரத்த உறவு இல்லாதவா்கள்கூடக் குடும்ப உறுப்பினா்களாக இருக்கக்கூடும் என்பது தெரிகிறது. இத்தகையவா்கள் நீண்ட நெடுங்காலமாகக் குடும்பங்களில் இடம்பெற்று வந்திருக்கிறார்கள் என்பதை இலக்கியக் குறிப்புகள், இலக்கணக் குறிப்புகள் போன்றவை உறுதிப்படுத்துகின்றன. இதனை,

         “யான் கண்டனையா் என் இளையரும்“ (புறம் 191)

         “ஏவல் மரபின் ஏனோர்
         அடியோர் வினைவலோர்” (தொல்காப்பியம் 969, 970)

    என்று கூறுகிறது.

    கருவாச்சி காவியம்

         கருவாச்சி காவியத்தில் பெரியமூக்கி குடும்பம் தாய்த் தலைமைக் குடும்பமாகும். இதற்குச் சூழலே காரணமாகும். கணவன் இறந்தபின் குடும்பப் பொறுப்பு அவளுக்காகிறது. இவளது குடும்பம் தாயும் மகளும் கொண்ட சிறு குழுக்குடும்பமாகும்.

    குடும்ப அமைப்பு

         குடும்பம் என்பது சிறுகுழுக் குடும்பமாகவும், பெருங்குழுக் குடும்பமாகவும் இருக்கும், ஓா் ஆணும் பெண்ணும் தம் சமுதாய இசைவில் மணவழியாகப் பிணைப்புக்கொண்டு குழந்தைகளோடு இருப்பது சிறுகுழுக் குடும்பமாகும். இவா்களோடு பெற்றோரும், அவா் தம் மணமாகா மக்களும் சோ்ந்திருப்பது பெருங்குழுக் குடும்பமாகும், இந்நிலைகளை,

    கள்ளிக்காட்டு விவசாயக் கலாசாரத்தில் புருசன் பொண்டாட்டி உறவு என்பது வெறும் உரிமைகளை முன்னிறுத்தி ஏற்படுவதல்ல, கடமைகளை முன்னிறுத்தியே கட்டப்படுவது. மண்ணைக் கிண்டும் ஒருத்தனுக்கு வாக்கப்பட்ட வாழ்க்கை கட்டில் உற்பத்தியில் மட்டுமல்லாமல் காட்டில் உற்பத்தியிலும் அவள் வோ்வை விழுந்தாக வேண்டும். கள்ளிக்காட்டுக் கலாசாரத்தில் அப்படி இல்லை. இந்த சேலையும், அரைப்படி சோளமும் அவித்தக் கஞ்சியுமே அன்றாடங்களாகிவிட்ட ஒரு வறட்டு வாழ்க்கைக்கு வாக்கப்பட்டு வருகிற ஒரு பொம்பள திருடிக்கொள்வதற்குச் சௌகரியங்கள் ஏதும் இல்லாததால் பாடுகளை மட்டுமே பகிர்ந்து கொள்கிறாள். இக்குறிப்புவழி நோக்கும்போது உடைமை உறவுக்கு இடமில்லை உற்பத்தி உறவுக்கே இடமுண்டு அந்த உற்பத்தியே இருவரையும் இணைத்துக் குடும்பத்தை நடத்திச்செல்ல துணைபுரிகிறது என்பதும் தெரிகின்றது. இவற்றால் குடும்பத்தின் அகநோக்கமும், புறநோக்கமும் தெரிகின்றன.

         சடையத்தேவா் கட்டையன் ஆகியோர் தந்தை மகன் உறவில் ஆண்களே வாழ்வதும் அதேபோல் பெரிய மூக்கி கருவாச்சி ஆகியோர் தாய்மகள் உறவில் பெண்களே வாழ்வதுமான இக்குடும்பங்கள் சிறுகுழுக் குடும்பங்களாகும். ஆண்களே இருப்பதும், பெண்களே இருப்பதுமான குடும்பங்கள் சமுதாயத்திலும் அவற்றில் மனைவி இல்லாமல் ஆடவனாகிய தந்தையும் மகனும் வாழ்கின்ற நிலையும், கணவன் இல்லாமல் மனைவியாகிய தாயும் மகளும் வாழ்கின்ற நிலையும் இருப்பதைக் காணமுடிகிறது.

         காவக்காரச் சக்கனன் தன் மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் பலராக வாழ்வது பெருங்குழுக் குடும்பமாகும். இது கூட்டுக்குடும்பம் என்றும் சொல்லப்படும். இதில் மணமான மகனும், மனைவி மகளோடு சோ்ந்து வாழ்வதால் இதனை நோ்வழி விரிந்த குடும்பம் என்றும், அடிப்படைக்குடும்பம் என்றும் குறிப்பிடமுடிகிறது.

         குடும்பம் என்ற அமைப்போ திருமணம் என்ற நிகழ்வோ நிறுவனமோ இல்லாத நிலை மனிதஇனத் தொடக்ககாலத்தில் இருந்தது என்று குறிப்பிடுவதுண்டு. பாலின உணா்வு, பால் வேறுபாடு தெளிவாகத் தோன்றிய பின்பே பாலியல் ஒழுங்கு பேணத் திருமணம் என்னும் நிகழ்வின்வழிக் குடும்பம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்திருக்க வேண்டும். இது வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்த விலங்கின வாழ்க்கையிலிருந்து பண்பாட்டுமயமாதல் தன்மைக்கு வளா்ச்சி பெற்றுவந்த தொடக்க நிலையாகும்.

    கருவாச்சி காவியத்தில் காணப்படும் குடும்ப வகைகள்

         சடையத்தேவா் மனைவி இல்லாமல் கட்டையன் என்னும் மகனோடு வாழ்வதும், பெரிய மூக்கி கணவனை இழந்து கருவாச்சி என்னும் மகளோடு வாழ்வதுமான நிலையைக்கொண்ட இவ்விரு குடும்பங்களும் சிதைந்த குடும்பம் என்னும் வகையைச் சோ்கின்றன. இதேபோல வளவி கப்பஞ்செட்டியார் மனைவியை இழந்து தன் பெண் மக்களோடு வாழ்வதும், உருமாப் பெருமாத்தேவா் மனைவியை இழந்து தன் பெண் மக்களோடு வாழ்வதுமான இவையும் சிதைந்த குடும்பம் என்னும் வகையைச் சோ்ந்தனவாகும்.

         இப்புதினத்தில் வாழும் வைத்தியச் சிரங்கம்மா என்பவள் கணவனும் குழ்ந்தைகளும் இல்லாமல் தனி ஒருத்தியாக தன் ஒருத்திக்காகப் பல தொழில்களும் செய்துகொண்டு வாழ்வது தெரிகிறது. இதேபோலக் கேப்பக்களியான் என்பவனும் தனி ஆளாக வாழ்வதும் அறியமுடிகிறது.

    தனிக்குடும்பம் 

         கணவன் மனைவி என்றிருவரோடு பிறக்கும் குழந்தைகளும் அடங்கிய குடும்பம் தனிக்குடும்பம். கணவன் மனைவி மக்கள் என்னும் உறவுகளோடு வாழும் ஒரு குடும்பம் முழுவடிவம் பெற்ற குடும்பம் எனப்படும். எனவே இதன்படி குடும்பத்தின் முழுவடிவம் இதில் கிடைப்பதால் இதனை அடிப்படைக்குடும்பம். என்று மானிடவியலாளா் கருத்து அடிப்படையில் குறிப்பிடலாம். இக்கருத்தின் அடிப்படையில் கருவாச்சி குடும்பத்தில் புனைவியல் உறவு வகையில் கொண்ணவாயன் சோ்ந்திருப்பதும் சோ்ந்து வாழ்வோருடன் அமைந்த குடும்பங்களாகின்றன.

    சிதைந்த குடும்பம்

         கணவன் மனைவி குழந்தைகள் என்று அமைந்திருக்கும் தனிக் குடும்பத்தில் கணவனோ, மனைவியோ இறந்துபோவதில் அமையும் குடும்பம் சிதைந்த குடும்பம் எனப்படும்.

         இப்புதினத்தில் உருமாப் பெருமாத்தேவா், வளவி சுப்பஞ்செட்டியார், சடையத் தேவா் ஆகியோரின் குடும்பங்கள் மனைவியா் இல்லாமல் மக்களோடு வாழ்கின்ற குடும்பங்களாக இருப்பதால் இவை சிறுகுழுக் குடும்பமாதலோடு சிதைந்த குடும்பங்களாகவும் அமைந்திருக்கின்றன. பெரிய மூக்கி குடும்பம் கணவன் இல்லாமல் மகளோடு வாழ்வதால் இக்குடும்பம் சிறு குழுக்குடும்பம் சிதைந்த குடும்பம் என்னும் தன்மைகளை ஒருங்கே பெற்ற குடும்பமாக விளங்குகிறது.

    குடும்பத்தின் சிறப்பியல்புகள்

    1. மணஉறவுவழி ஆள்சேர்க்கையில்தான் குடும்பம் அமையும்.
    2. தொடா்ந்து முறைப்படியான இன்ப நுகா்ச்சியைக் குடும்பமே தர முடியும்.
    3. சட்டப்படி அமையும் சொத்துரிமை வாரிசுகளாகச் சமுதாயம் ஏற்கும் குழந்தைச் செல்வங்கள் குடும்பத்தின் வழியே கிடைப்பது, இத்தகைய தன்மைகள்வாய்ந்த குடும்பம் புகுந்த குடும்பம் எனப்படும் என்று சமூகவியல் அறிஞா் குறுிப்பிடுவா்.
    4. குடும்ப உறுப்பினரிடையே காணப்படும் இரத்த உறவு இது மரபுத் தொடா்ச்சியாக அமைந்து வளா்வதாகும். இத்தகைய குடும்பத்தைப் பிறந்த குடும்பம் என்று சமூகவியல் அறிஞா் குறிப்பிடுவா்.
    5. குடும்ப உறுப்பினா்களின் பொருளாதாரத் தேவை போன்றவற்றை அமைத்துக் கொடுப்பது.
    6. குடும்ப உறுப்பினா்களை ஒரே நிழலில் வாழவைப்பது.
    7. நிறுவனமற்ற சிறு சிறு குடும்பங்கள் காலப்போக்கில் வளா்ச்சிப் பெற்று சமூக அடிப்படையில் கிடைத்த சமூகத்தை உருவாக்குவது போன்றவையாகும். 

    குடும்பத்தின் கடமைகள்

         குடும்பத்தின் கடமைகள் இரு நிலைப்படும் அவை,

    1. குடும்பம் மட்டுமே குடும்ப உறுப்பினா்களுக்கு செய்யக்கூடியவை.
    2. குடும்பம் சமுதாயம் சார்ந்ததாகச் செய்யக்கூடியவை எனவே குடும்பத்தின் பணிகள் தனிமனிதருக்கு என்றும், சமுதாயத்திற்கு என்றும் பகுப்புறுகின்றன எனலாம்.

    குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினா்களுக்குச் செய்யக்கூடிய கடமைகள்

         குழந்தையைச் சமூக வயமாக்குதல், பண்பாட்டு வயமாக்குதல், பண்பாடு சமூகமரபு இவைஒட்டிக் குழந்தையின் ஆளுமையை உருவாக்குதல் அன்பு, பாசஉணா்வு போன்றவற்றை வளா்த்தல், பழக்கம், பிறரிடம் நடந்துகொள்ளும் முறை ஆகியவற்றை வளா்த்தல், கற்பித்தல் போன்றவை குடும்பத்துக்கு மட்டுமே உரிய கடமைகளாகும். இவற்றோடு இனப்பெருக்கம் என்பதும் குடும்பத்திற்கே உரியதாகும்.  இனப்பெருக்கம் இன்றிக் குடும்பம் வளா்ச்சியுறாது. குடும்ப வளா்ச்சியின்றேல் சமுதாயம் இல்லை.

         இவற்றுக்கு மேலாக ஒரு குழந்தையை மனிதனாக்கும் பெரும்பணி குடும்பத்தையே சாரும். அதனால்தான் மகனைச் சான்றோன் என்று பிறா் வாயால் சொல்லப்படுவதைத் தாய் விரும்புவாள் என்று திருக்குறள் குறிப்பிடக் காண்கிறோம்.

    குடும்பத்தின் சமுதாயம் சார்ந்த கடமைகள்

         சீலயச் சல்லடையாக்கி கொடிக்கள்ளிப்பாலில் புழுக்களை ஒட்டி விடும் வடிகட்டி மெடாவிலும் கொடத்திலும் நெப்பிக்கிட்டு இறங்கி வாராக பொம்பளைக மொடத் தன்னியாக கொதிக்க வைத்து குளிர வச்சுத் தண்ணிப்பந்தலும் போட்டுட்டா கருவாச்சி, ஊா் மந்தையில் கத்தாழக்கிழங்கு மஞ்சத் தண்ணியில் உப்புப்போட்டு ஊறவைத்தாள்,  கள்ளி கத்தாழமட்டை புளியம்பொட்டு போட்டு அடுப்பெரித்தாள். குழைய வேகவைத்தாள். அருவாள எடுத்து சின்ன சின்னதாக வகுத்து ஊா் மக்களைச் சாப்பிடச் சொன்னாள் என்று கருவாச்சி தன் ஊரில் நிலவிய கடும்பஞ்சத்தைப் போக்க மேற்கொண்டவை சமூகம்சார்ந்த பணிகளாகும். அதுவும் சமூகக் கூட்டுப்பணியாகும். மேலும் தோழிகளும், பெண்களுமான கனகமும், பவளமும், வாழ்வதற்காக அவா்கள் தனக்குத் திரும்பக் கொடுத்த அணிகலனை விற்றுப் பெட்டிக்கடை வைத்துக் கொடுத்தாள்.

         கருவாச்சியின் இவ்வகை உதவிகளைத் தற்கொலை மனப்பாங்கு என்று மானிடவியல் அறிஞா் சண்முகலிங்கன் குறிப்பிடுகிறார். இந்த மனப்பாங்கு பிறர் நிலையைத் தன்னிலைபோல உணா்வதால் உண்டாகும் என்று கூறுகின்றார்.

    முடிவுரை

         கருவாச்சி காவியத்தில் காணப்படும் குடும்ப அமைப்பு முறைகளையும், குடும்பத்தை பலவகையாகப் பிரித்த முறைகளையும் கிராமிய மாந்தா்களின் நிலையைப் பற்றியும் இப்புதினத்தின் வழியாக அறிய முடிகின்றது.

    பார்வை நூல்கள்

    1. வைரமுத்து – கருவாச்சி காவியம்
    2. பக்தவத்சலபாரதி – மானிடவியல் கோட்பாடுகள்.

    ******

    கட்டுரையாளர்
    முனைவா் பட்ட ஆய்வாளா்
    பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூா்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171130 - Govinda Damodara Madhaveti 05 -ink and watercolour - 24x32 cms -lr

    ’’மாதவனின் காதினை மாதவள்(மாது அவள்) கிள்ளிடும்
    போதினில் வானர(வான் ப்ளஸ் அரன் -அனுமார் ருத்திராம்ஸம்) போஜனம்: –தாதை(அப்பன்)
    விருந்துண்ணும் முன்பு, குரங்கெண்ணம்(நன்றிக் கடன்) கொள்ள,
    கருந்தா மரைக்கையில் கட்டு’’….!
    (அல்லது)
    திருந்தாத கள்ளனென்றாள் தாய்(யசோதா பாவம் கண்ணன்)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    யசோதை உவாச….!
    —————————————————

    171129 Govinda Damodara Madhaveti 04 lr —ink, watercolour-24x32cms -Canson 200gsm

    குறையெனக்குன் காட்சி நிறையெனக்குன் நாமம்
    சரியெனக்குன் மாயையின் சூழ்ச்சி -அரியுனக்கு
    இன்னும் தயக்கமேன் என்னைப் பிடித்திட
    கண்ணா அவிழ்த்திடுகண் கட்டு….

    மீண்டும் உரலிழுத்து மாமருதம் சாய்த்தரவத்
    தாண்டவம் ஆடித் தயிருண்டு -வேண்டிய
    ராதையை காதலித்து போதனையாய் கீதையை
    யாதவா வந்திங்(கு) எழுது….!
    ——————————————————————————————————
    ——————————————————————————————————
    கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்ட காரணம்
    அன்னையின் அன்பினாலா அல்லது -கண்ணனே
    ஓயாத லீலையின் மாயா வசப்பட்டு
    ஆயாசம் ஆனதா லா….
    பழிவாய் மணக்க பகலும் இரவும்
    மொழிவாய் முகுந்தா முராரி -விழுவாய்
    வணங்க வரதன் வளரடி தன்னில்
    இணங்கும் இகபரம் இங்கு….
    மூப்பும் பிணியும் முகமன் உரைத்திடும்
    தோற்பும் பகையும் திரண்டெழும் -போப்போய்
    மருதம் முறித்து மதயானை கொன்ற
    வரதனை நெஞ்சே வணங்கு….

    திருவிருந்த மார்பன் திருத்துழாய் மார்பன்
    மருவிருந்த மார்பன் மகனாய்ச் -சிறையில்
    கருவிருந்த மார்பன் தெருவிருந்த மண்ணை
    பெருவிருந்தாய் உண்ட புதிர்….
    சகஸ்ரமவன் நாமம் சகலமவன் ரூபம்
    ரகஸ்யமவன் மாயை, ரசிப்போர் -அகஸ்மாத்தாய்
    வானம் வசப்பட நானவன் தானென்ற
    ஞானத்தில் நிற்பார் நிலைத்து….

    பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
    முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
    கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    காயாம்பூ வண்ணத்தை கற்றோர்தம் எண்ணத்தை
    ஆயர்தம் சின்னத்தை மண்ணையுன் -ஓயாத
    மாயத்தை ஒப்பில்லா சீயத்தை நேயத்தில்
    தாயொத்த தாயத்தைத் தேடு….கிரேசி மோகன்….!

     

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 13

    -மேகலா இராமமூர்த்தி 

    தோழியின் இனிய இதயத்தை எண்ணி உளம்நெகிழ்ந்தவண்ணம் தலைவனும் தலைவியும் தம் பயணத்தைத் தொடரலாயினர். நடக்க நடக்க நீண்டுகொண்டே சென்றது சுரவழி. பகல்கழிந்து அந்திமாலையும் வந்து சேர்ந்தது! அப்போதும் தலைவனின் ஊர்நோக்கிய நெடும்பயணத்தை நிறுத்தாது, தலைவனும் தலைவியும் சென்றுகொண்டிருந்தனர். வழியில் எதிர்ப்பட்ட ஊரை அவர்கள் கவனித்திலர். ஆனால் அவ்வூரினர் களைத்துவரும் இவ்விளையோரைக் கவனித்துவிட்டனர். இவர்கள் உடன்போக்கு நிகழ்த்தும் காதலர்கள் என்பதையும் கணித்துவிட்டனர்.

    நில்லாது சென்றுகொண்டிருந்த தலைவன் தலைவியைப் பார்த்து,

    ”சிறியபிடி போன்றவளுக்குத் துணைவ! பகலவன் வானைவிட்டு அகலும்நேரம் நெருங்கிவிட்டது. வணிகக்கூட்டம் வந்திருக்கின்றது என்றெண்ணி, பகைப்புலத்தில் கொள்ளும் பகைபோல், வளையணிந்த நெடுவேலேந்தி அவ்வணிகரின் பொருள்களைக் களவாடும் ஆவலில் எம் காவற்காடுவரைவந்து வணிகரைக் காணாது வறிதே பெயரும் ஆறலை கள்வர் முழக்கும் தண்ணுமையெனும் வாத்திய ஒலியைக் கேளுங்கள்! நீவிர் இருவரும் பயணம் மேற்கொள்வதை இவ்வேளையில் தவிர்த்தலே நலம்” என்று நவின்றனர்.

    பாலைநிலத்திற் செல்லும் வணிகர்கூட்டத்தை எதிர்த்து, அவரது பொருளைக் கைக்கொள்ளல் ஆறலை கள்வரின் இயல்பு. ஆறலைகள்வர் தண்ணுமை ஒலியைக் கேள் என்று தலைவனுக்கு இடைச்சுர மக்கள் சொன்னதன் நோக்கம், அக்கள்வரால் இக்காதலருக்கு ஏதம்வரும் என்பதை உணர்த்தவே.

    எல்லும் எல்லின்று பாடுங்  கேளாய்
    செல்லா  தீமோ  சிறுபிடி  துணையே
    வேற்றுமுனை  வெம்மையிற்  சாத்துவந்  திறுத்தென
    வளையணி  நெடுவேல்  ஏந்தி
    மிளைவந்து  பெயரும்  தண்ணுமைக்  குரலே.  (குறுந்: 390 – உறையூர் முதுகொற்றனார்)

    அம்மக்களின் விருப்பப்படியே அன்றிரவை அவ்வூரில் கழித்துவிட்டு மறுநாள்காலை தம் பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர் காதலர்கள்.

    thalaivan thalaiviதலைவனுடன் செல்லும் பயணமாதலால் கல்லும் முள்ளுங்கூடத் தலைவியின் கால்களுக்கு மெத்தையாகவே இருந்தன. சிறிதுதூரம் சென்றதும் கண்ணிற்பட்ட நெல்லிமரத்திலிருந்து காய்களைப் பறித்துத்தின்ற தலைவி, அருகிருந்த சுனையின் அழுக்குநீரைக்கூட அமுதமாய் எண்ணிப் பருகினாள். நாவினித்தது! உடனே, நெல்லியைத் தின்னச்சொன்ன அருமைத்தோழியின் நினைவுவந்ததால் நெஞ்சினித்தது. இத்தகு உத்தமத் தோழியைப் பெற்றநான் பேறுபெற்றவள் என நினைந்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.

    அவள் கண்ணீரைத் துடைத்த தலைவன் அவளை அன்பொடு நோக்கி, “கண்ணே! தம் வழிபடுதெய்வத்தை நேரிற்கண்ட மக்கள் எப்படி உளம் மகிழ்வரோ அவ்வாறு உனையடைந்ததால் நான் மகிழ்கின்றேன். நம் நடைப்பயணத்தால் நீ களைக்கலாகாது; ஆதலால் நிழல்காணுந்தோறும் இளைப்பாறு! மணல் காணுந்தோறும் வண்டலிழைத்து (சிற்றில்கட்டி) விளையாடு! அவசரம் ஏதுமில்லை” என்றான்.

    இதனிடையே, தலைவியின் தமர்க்குத் தலைவி ஆடவன் ஒருவனோடு உடன்போக்கு மேற்கொண்ட விவரம் தெரியவர, அவர்கள் அடைந்த துயருக்கோர் அளவில்லை. தலைவியின் நல்வாழ்வை எண்ணியே நாளுங்கவலும் தம்மிடங்கூடச் சொல்லாமல் தன் வாழ்வைத் தானே முடிவுசெய்துவிட்ட அருமை மகளையெண்ணி நற்றாயும் செவிலித்தாயும் வெகுளியும் வேதனையும் அடைந்தனர்.

    தோழியும் இதற்கு உடந்தையோ என்று ஐயுற்ற அவர்கள், அம்மடந்தையிடம் இதுகுறித்து விசாரிக்கலாயினர்.

    அவளோ, “அயல்மணத்தைத் தலைவிக்கு நீங்கள் நிகழ்த்தவிரும்பும் இத்தருணத்தில், உம்மிடம் தன் காதலைச் சொன்னால் அதனை நீங்கள் ஏற்பீர்களோ… மாட்டீர்களோ என்றஞ்சி அவ்வஞ்சி தான்விரும்பிய காதலனோடு சென்றிருக்கலாம்” என்று பட்டும்படாமலும் பதில்சொல்லித் தனக்கும் தலைவியின் உடன்போக்குக்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று காட்டிக்கொண்டாள்.

    தலைவியின் பிரிவால் அருமணி யிழந்த நாகம்போல அலமரலுற்றனர் தாயர் இருவரும். மகளின் எதிர்காலத்தை எண்ணியெண்ணி, பெற்றவளான நற்றாயும் பாலூட்டி வளர்த்த செவிலித்தாயும் புலம்பலாயினர்.

    ”பாலுமுண்ணாது, தனக்கினிய பந்தையும் விரும்பாது, மகளிர் கூட்டத்துடன் இடைவிடாது விளையாடுவதிலேயே நாட்டம்கொண்டிருந்த தலைவி, உலர்ந்த கிளையையுடைய ஓமை மரத்தினைக் குத்திய உயர்ந்த கொம்புடைய ஆண் யானை, வேனிற் தன்மையுடைய, மலையின் வெப்பம் மிகுந்த அடிவாரத்தில், மேகம் முழங்குகின்ற கடிய முழக்கத்தைக் கூர்ந்து கேட்கின்ற, மூங்கில்கள் உலர்ந்த, செல்லுதற்கரிய இடத்திலே, தலைவனோடு செல்லுதல் எளிது என நினைத்தாளோ?” என்று தலைவியின் மென்தன்மைக்கு வன்மைமிகு பாலைவழிப் பயணம் எப்படிப் பொருந்தும் என வருந்தினாள் நற்றாய்.

    பாலும்  உண்ணாள்  பந்துடன்  மேவாள்
    விளையாடு  ஆயமொடு  அயர்வோ  ளினியே
    எளிதென  உணர்ந்தனள்  கொல்லோ  முளிசினை
    ஓமை  குத்திய  உயர்கோட்டு  ஒருத்தல்
    வேனிற்  குன்றத்து  வெவ்வரைக்  கவாஅன்
    மழைமுழங்கு  கடுங்குரல்  ஓர்க்கும்
    கழைதிரங்  காரிடை  அவனொடு  செலவே.  (குறுந்: 396 – கயமனார்)

    பெற்றவளைத் தொடர்ந்து வளர்த்தவளான செவிலித்தாய் தன் மனவருத்தத்தை வெளிப்படுத்தலானாள்…

    ”கையிலேந்திய செம்பொன்னாலாகிய பாத்திரத்திலுள்ள அழகிய பொரியோடு கலந்த பாலையும் மிகுதி என்று கூறி உண்ணாத, திரட்சியமைந்த குறிய வளையணிந்த, தளிர்போன்ற மென்மையையுடைய என்மகள், நிழல் அடங்கி அற்றுப் போன, நீர் இல்லாத கடத்தற்கரிய பாலை நிலத்திலே வீரக்கழலணிந்த தலைவன் தன்னைப் பாதுகாப்ப விரைந்து சென்று, நீர்வளமற்ற சுனையின் பக்கத்தில் உலர்ந்து வெம்மை கொண்ட கலங்கல் நீரை ’தவ்’வென்னும் ஓசைபடக் குடிக்கும் வலிமையை எங்ஙனம் பெற்றாள்?” என்று சொல்லித் துயருற்றாள் செவிலித்தாய்.

    நிழலான்  றவிந்த  நீரில் ஆரிடைக்
    கழலோன்  காப்பக்  கடுகுபு  போகி
    அறுசுனை  மருங்கின்  மறுகுபு  வெந்த
    வெவ்வெங்  கலுழி  தவ்வெனக்  குடிக்கிய
    யாங்கு  வல்லுநள்கொல்  தானே  ஏந்திய
    செம்பொற்  புனைகலத்து  அம்பொரிக்  கலந்த
    பாலும்  பலவென  உண்ணாள்
    கோலமை  குறுந்தொடித்  தளிரன்  னோளே. (குறுந்: 356 – கயமனார்)

    இப்பாடலில் ‘செம்பொற் புனைகலத்து ஏந்தியபால்’ என்பது தலைவியின் தாய்வீட்டுச் செல்வநிலையை உணர்த்தி நிற்கின்றது. இத்துணை வளமையாய் வாழ்ந்தவள் வறண்டநிலத்தைக் கடக்கும் துன்பத்துக்கு ஆளாக நேர்ந்ததே என்பது செவிலியின் வேதனை. இவ்வாறு மாற்றி மாற்றித் தாயர் இருவரும் தம் மகளின் உடன்போக்கினைக் கடிந்தும், அவள் பிரிவினால் மனமொடிந்தும் புலம்பிக்கொண்டே இருந்தனர்.

    ஒருவாறு சற்றே சமாதானமடைந்த செவிலி, ”நம்மைப் பிரிந்து, ஒளிபொருந்திய நெடிய வேலையுடைய தலைவனோடு, மடப்பத்தையும் மாமையையும் உடைய நம் மகள் சென்ற பாலைநிலம், கதிரவன் காயாது மரத்தின் நிழல் பொருந்தியதாய்,  மலையிடத்தேயுள்ள சிறிய வழியின்கண் மணல்மிகப் பரவப்பெற்று குளிர்ந்த மழை பெய்ததாகுக” என்று தலைவிசென்ற சுரவழி அவளுக்கு இடரளிக்காது இதமளிக்க வேண்டும் என்று கரங்குவித்து இறைதொழுதாள்!

    inside-the-forestஞாயிறு  காயாது  மரநிழற்  பட்டு
    மலைமுதற்  சிறுநெறி  மணன்மிகத்  தாஅய்த்
    தண்மழை  தலையின்  றாக  நந்நீத்துச்
    சுடர்வாய்  நெடுவேற்  காளையொடு
    மடமா  அரிவை  போகிய  சுரனே.     (குறுந்: 378 – கயமனார்)

    தலைவி சென்றபாதை அவளுக்கு இனிதாய் இருக்கவேண்டும் என்று செவிலித்தாய் வேண்டுவதை ஐங்குறுநூற்றுப் பாடலொன்றிலும் நாம் காணவியலும்.

    மள்ளர்  கொட்டின்  மஞ்ஞை  யாலும்
    உயர்நெடுங்
     குன்றம்  படுமழை  தலைஇச்
    சுரநனி
     யினிய  வாகுக  தில்ல
    அறநெறி
     யிதுவெனத்  தெளிந்தவென்
    பிறைநுதற்
     குறுமகள்  போகிய  சுரனே’’     (ஐங். 371)

    தம் பிள்ளைகள் இன்னாதன செய்தாலும் அவர்களுக்கு இனியவே நினைப்பது தாயர்க்கே வாய்த்த தனிக்குணம் போலும்!

    ஆனால், நற்றாயின் மனம் மகளைப் பிரிந்த துயரிலிருந்து சிறிதும் விடுபடவில்லை. கண்ணீரும் கம்பலையுமாக அவள் பித்துப்பிடித்தவள்போல் அமர்ந்திருப்பதைக் கண்ட செவிலிக்கு மனம் பதறியது. ஒருமுடிவுக்கு வந்தவளாய் நற்றாயின் கண்ணீரைத் துடைத்தவள், ”கவலாதே தோழி! சுரவழி சென்ற தலைவியின் கரம்பற்றி அழைத்துவந்து, விரைவில் ஒப்படைக்கிறேன் உன்னிடம்!” என்று சூளுரைத்துப் புறப்பட்டாள் தலைவியைத் தேடி! 

    [தொடரும்]

     

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 37

    க. பாலசுப்பிரமணியன்

    அறிவால் இறைவனை அடைய முடியுமா ?

    திருமூலர்-1-3

    சலனமற்ற மனத்தைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதை அடைய எப்படிப்பட்ட அறிவு நமக்கு வேண்டும்? எந்த புத்தகங்களைப் படித்தால் இந்த அறிவு நமக்குக் கிட்டும்? எந்த மொழியில் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்? எந்தக் காலத்தில் எழுதப்பட்ட புத்ததகங்களில் இந்த அறிவு நமக்குக் கிட்டும்? இப்படிப்பட்ட பல கேள்விகள் நமது மூளையைத் துளைத்துக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கேள்விகளுக்கெள்ளாம் பதில் கொடுக்கும் வண்ணம் கபீர்தாசர் கூறுகின்றார்.

    “மூட்டை மூட்டையாகப் புத்தகங்களைப் படித்துவிட்டு எவரும் அறிஞர்கள் ஆவதில்லை. அன்பு என்ற இரண்டரை அட்சரத்தை எவன் படித்து அறிந்துள்ளானோ அவனுக்கு நிகர் யாருமில்லை.”

    இறைவனை அன்புப்பூர்வமாக உணரவேண்டும். அறிவு என்பது என்ன? ஐம்பொறிகளால் நமக்குக் கிடைக்கும் உணர்வுகள் மூளையில் பரிசீலிக்கப்பட்டு நம்முடைய பழைய நினைவுகள் உணர்வுகள் ஆகிவயவற்றோடு விவாதிக்கப்பட்டு ஒரு புதிய கருத்தாக பொருளாகக் கிடைப்பதுதானே அறிவு? ஆனால் இந்த ஐம்பொறிகளுக்கப்பால் உணர்வுகளுக்கு அப்பால் எவ்வளவு அனுபவப்பூர்வமான அறிந்த, அறியாத அறிவு சாம்ராஜ்யம் இருக்கிறது? எனவே, இறைவனை அறிவதற்கும் அவனுடைய முழுமையை உணர்வதற்கும் நாம் படித்துச் சேர்த்த அறிவு மட்டும் போதாது. திருமூலர் கூறுகின்றார்

    அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்

    அறிவு அறியாமை யாரும் அறியார்

    அறிவு அறியாமை கடந்தறி வானால்

    அறிவு அறியாமை யழகிய வாறே.

    அறிவையும் அறியாமையையும் கடந்து நிற்கின்ற பேரறிவை நாம் அறிந்தால் அது ஒரு பேரின்பமாக அமைந்துவிடும் .

    வாழ்வில் பல ஆண்டுகள் இந்த அறிவைப் பின் தொடராது காலம் கழித்தபின் மனதில் தன் தவறுக்கு வருத்தம் ஏற்படுகின்றது. இது எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் வழக்கமாக ஏற்படுவதுதான். இந்தத் துயரை வெளிப்படுத்தும் மாணிக்கவாசகர் சொல்கின்றார்

    ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்

    பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே.

    புறப்பார்வைக்குத் தென்படும் பல இடங்களில் இறைவனைத் தேடும் நாம் அவன் இருக்கும் உண்மையான இடத்தைக் கண்டுகொள்வதில்லை  இந்த  அறியாமையை விளக்கும் வண்ணம் பட்டினத்தார் கூறுகின்றார்

    சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்

    அல்லினு மாசற்ற வகாயந் தன்னிலு மாய்ந்துவிட்டோர்

    இல்லிலு மன்ப ரிடத்திலு மீசனி ருக்குமிடங்

    கல்லிலுஞ் செம்பிலு மோவிருப் பானெங்கள் கண்ணுதலே

    இந்தக் கருத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது பட்டினத்தாரின் அனுபவத்தில் வந்த மற்றொரு பாடல் –

    எல்லா மறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி

    வல்லா னறிந்துள னென்றுண ராது மதிமயங்கிச்

    சொல்லான் மலைந்துறு சூழ்விதி யின்படி துக்கித்துப்பின்

    எல்லாஞ் சிவன் செய லென்பர் காண் கச்சி யேகம்பனே

    இந்த நிலையை அடைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?. அந்த அனுபவம் சலனமற்ற மனதிற்கன்றோ கிடைக்கும். அந்த சலனமற்ற நிலையை விளக்கும் திருமூலர் கூறுகின்றார்:

    தூங்கிக் கண்டார் சிவ லோகமும் தம் உள்ளே

    தூங்கிக் கண்டார் சிவ யோகமும் தம் உள்ளே

    தூங்கிக் கண்டார் சிவ போகமும் தம் உள்ளே

    தூங்கிக் கண்டார் நிலை சொல்வதெவ்வாறே

    இந்த தூக்கம் நாம் நித்தம் இரவில் உறங்கும் உறக்கம் அல்ல. இது விழிப்புணர்விலிருந்தும் மயக்க நிலையிலும் இருந்து விடுபட்ட நிலை. உலக நடப்புக்களிலிருந்து விடுபட்ட நிலை. உணர்ந்தும் உணராத நிலை. யோகத்தில் ஆழ்ந்த நிலை. போகங்களிருந்து விடுபட்ட நிலை. இந்தத் தூக்கத்தில் ஒளிமயமாக அவன் மட்டும் உணர்வோடு ஒன்றி இருக்கும் நிலை.

    இந்த நிலை எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதா ?  இதற்கு என்ன முயற்சி செய்ய வேண்டும் ?

    தொடருவோம்

    Share
  • வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் சடங்கு முறைகள்

    -மோ. பவானி

    முன்னுரை

         நாடோடிகளாகத் திரிந்த மானிடச் சமூகம் ஓரிடத்தில் நிலையாகத் தங்கித் தங்கள் குடிகளை அமா்த்திச் சமுதாய அமைப்பினை உருவாக்கிய காலகட்டங்களில் தனக்குத்தெரிந்த சடங்கு முறைகளைத் தோற்றுவித்தனா். மனிதர்கள் தம் வாழ்க்கையைக் குறிக்கோளுடை.யதாக்கி ஒற்றுமையுடனும் ஒழுங்குநெறியுடனும் வாழத் தலைப்பட்டபோது ஏற்படுத்திக்கொண்ட ஒரு சம்பிரதாயச் சாத்திரமே சடங்கு ஆகும். மனித வாழ்வில் இடம்பெறும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து மக்களால் கையாளப்படுமானால் அவையே சடங்குகள் எனப்படும். அத்தகைய சடங்கு முறைகளைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

    சடங்கின் நோக்கம்

       மனித வாழ்வு சிறப்பாகவும், செழிப்பாகவும் தழைத்தோங்கச் செய்வது சடங்கின் முதன்மை நோக்கமாகக் கருதலாம். மகிழ்ச்சி, நம்பிக்கை, அமைதி, நோயின்மை, பீடைகள் நீங்கவும், சமுதாயம் ஒருமைப்பாட்டுடன் செயல்படவும், குடும்பஉறவுகள் வலுப்பெறவும் சடங்குகள் தேவையானதாகக் கருதப்படுகின்றன. மனிதன் நம்பிக்கையுடன் செயல்படவும் மனநிறைவு கொண்டு வாழவும்  சடங்குகள் தேவையாக அமைகின்றன.

    சடங்கு நடத்தப்படுவதால் ஏற்படும் நன்மைகள்

         சமுதாயத்தில் சடங்குகள் நடத்தப்படுவதால் பல நன்மைகள் விளைகின்றன. சமுதாயத்தில் ஒருமைப்பாடு தழைத்தோங்குகிறது. உறவினா்களுக்கிடையே நல்லுறவு, கட்டுப்பாடுகள் போன்றவை நிலைபெறுகின்றன. நம்முன்னோர்களை நினைவுபடுத்திக்கொள்வதோடு, வழிவழியாக வந்த மரபுகளும், பண்பாடுகளும் பாதுகாக்கப்படுகின்றன.

         சமுதாயத்தில் சடங்கு நடத்தப்படுவதால் ஏற்படும் நன்மையினை அழகர் சடங்குகளின் மூலம் ஓர் இனத்திற்கும் மற்றோர் இனத்திற்கும் உள்ள வேறுபாட்டையும், அச்சடங்குகளைச் செய்கின்ற மக்களின் மனநிலைகளையும், அவர்கள் வாழும் இடங்களையும் அவர்களுடைய கல்வி, நாகரிகம், பண்பாடு, ஒழுக்கம், மதம் போன்றவற்றையும் அவர்களுடைய எதிர்காலச் சமுதாயம் எப்படி இருக்கும் என்பதையும் அறியமுடிகின்றது.

    வாழ்வியல் சடங்குகள்

         மனிதவாழ்வில் இரண்டறக் கலந்துள்ள சடங்குகள் அவனின் வாழ்க்கைச் சூழல்களுக்கு தகுந்தபடி மாற்றம்பெறுகின்றன. சடங்குகளை மங்கலம், அமங்கலம் என இருவகையாகப் பகுத்துக் காண்பதும், பிறப்பு, காதுகுத்துதல், பூப்பு, திருமணம் முதலான சடங்குகள் மங்கலச் சடங்குகள் என்றும், இறப்புத் தொடா்பான சடங்குகள் அமங்கலச் சடங்குகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. கள்ளிக்காட்டுக் கிராமிய மக்களின் வாழ்வில் இடம்பெற்ற வாழ்வியல் சடங்குகளை வைரமுத்து தெளிவாக எடுத்துக்காட்டுகிறார்.

    1. பிறப்புச் சடங்குகள்
    2. காதுகுத்துச் சடங்குகள்
    3. திருமணச் சடங்குகள்
    4. இறப்புச் சடங்குகள்
    5. இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள்

    எனும் ஐந்து நிலைகளில் வகைப்படுத்தியுள்ளார்.

    பிறப்புச் சடங்குகள் 

         சமுதாயத்தில் வாழக்கூடிய மனித இனத்தின் மாபெரும் செல்வம் குழந்தைச் செல்வமாகும். மழலைச் செல்வம் இல்லையெனில் அவா் பெற்றிருந்த செல்வத்தால் யாதொரு பயனும் இல்லை. குடும்பத்தின் செல்வமாக விளங்கும் குழந்தைக்கு எவ்விதத் தீவினையும் நிகழாமல் இருப்பதற்காக மக்கள் மேற்கொள்ளும் சடங்கு முறையே பிறப்புச் சடங்குகள் எனலாம்.

         குழந்தை பிறப்பதற்கு அறிவியல் முறையான காரணம் கண்டறிய இயலாத பழங்குடியினா் அவற்றைக் காக்கச் சடங்குகளின் துணையை நாடினர். இச்சடங்குகள் மந்திரம், சமயம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திச் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறாகத் தொடா்ந்து இச்சடங்கு முறைகள் இன்றளவும் மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. பிறந்த குழந்தைக்கு நலன்வேண்டிச் செய்யப்படும் சடங்குகள் பிறப்புச் சடங்குகள் என்று ஞானசேகர் விளக்கிக் காட்டுகிறார்.

         பிறந்த குழந்தை நலமுடன் வாழவேண்டும் என்ற நல்ல நோக்கத்தினாலேயே பிறப்புச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. குழந்தைக்கு சடங்குகள் நடத்துவதன் நோக்கத்தினை நடேச சாஸ்திரி என்பவர் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.

        குழந்தைச் செல்வத்தின் முக்கியத்துவத்தாலும் நன்மக்கள் போற்றும் இறையருளின் இன்றியமையாலும் பல்வேறு சடங்குகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

    தேனைத்தொட்டு வைத்தல்

         பிறந்த குழந்தையின் நாக்கில் சீனியைக் கரைத்து அதை விரலால் தொட்டு வைப்பதற்கு தேனை வைத்தல் என்று பெயர்.

         பேயத்தேவரின் மகள் செல்லத்தாயிக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்குப் பேயத்தேவரும் அவர் மனைவி அழகம்மாளும் தேனைத்தொட்டு வைக்கும் காட்சியினைக் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்தின் வழியே காட்சிப்படுத்துகின்றார் வைரமுத்து.

         பிறந்த குழந்தைக்குச் தேனைத்தொட்டு வைப்பது என்பது, அந்த ஊர் வழக்கம். வசம்பின் நுனியில் எண்ணெய்தொட்டு குழந்தையின் வாயில் மூன்றுமுறை வைக்கும்போது ஓம்புத்தி போயி ஏம்புத்தி வரவேண்டும் என்று சொல்லிச் சொல்லி வைப்பது மரபு. எனத் தேனைத்தொட்டு வைக்கும் சடங்கு முறையினைக் கிராம மக்கள் பின்பற்றிய விதத்தினை எடுத்துரைக்கிறார். குடும்பத்தில் அனுபவம் வாய்ந்த நல்ல குணநலன்களை உடையவா்களின் பண்புநலன்கள் அக்குழந்தைக்கு அமைய வேண்டும் என்ற நோக்கில் இச்சடங்கு முறை அமைந்துள்ளமையை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

    காதுகுத்தும் சடங்கு

         காதுகுத்தும் சடங்கு கிராமமக்களின் தவிர்க்க இயலாத சடங்கு முறையாகும். குழந்தை பிறந்த சில மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ காதுகுத்தும் சடங்கு நடைபெறும். குழந்தைப் பருவத்தில் காது குத்தவில்லை எனில் இறப்பதற்குள்ளாகவும், இல்லை இறந்த பின்பாவது காது குத்தியே அடக்கம் செய்யும் வழக்கம் இன்றளவும் மக்களிடையே நிலவி வருகின்றது.

         வைரமுத்து படைப்பில் இடம்பெறும் காது குத்தும் சடங்கு முறையினை,

    1. காது குத்துவதால் ஏற்படும் நன்மை
    2. தாய்மாமன் சீர் கொண்டு வருதல்
    3. காது குத்து நடைபெறும் முறை

    என்ற நிலைகளில் வகைப்படுத்தியுள்ளார்.

         கள்ளிக்காட்டு கிராம மக்களின் வாழ்வில் காதுகுத்தும் சடங்கு மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்துள்ளமையைக் கருவாச்சி காவியம் எனும் புதினம் வழியாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். காது குத்தும் சடங்கில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினையும், மக்களின் மனநிலையினையும் வாழ்வியல் பின்புலங்களையும் இதன்மூலம் காட்டுகிறார்.

         காதுல ஓட்ட போட்டதும் சலசலன்னு இரத்தம் ஒழுகுதா இல்லையா? இரத்தம் ஒழுங்குமுறையா இருந்தா செத்த நேரத்துல ஒறையனும் அப்படி ஒறையலனா சக்தி இருக்கா இல்லையான்னு சோதிக்கிறதுதான் காது குத்தாம். இது ஒரு வைத்தியன்கணக்கு என்று காதுகுத்துச் சடங்குகள் நடைபெறுவதற்குரிய காரண காரியங்களை மேற்கண்ட கூற்று வழியே ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும் மருத்துவ ரீதியான அடிப்படையிலும் இச்சடங்கு நன்மையை மட்டும் விளைவிக்கும் நிலையினை எடுத்துரைக்கிறார்.

    திருமணச் சடங்கு

         கிராமப்புற மக்களின் வாழ்வியல் பின்புலங்களைத் தெளிவாக உணர்த்த வைரமுத்து ஒவ்வொரு சடங்கு முறையினையும் நுட்பமாகக் கவனித்துத் தம் படைப்பு வழியே பதிவு செய்துள்ளார். மனித வாழ்வின் திருப்புமுனைச் சடங்காகக் கருதப்படும் திருமணச் சடங்கின் மேன்மையையும் தேவையினையும் தெளிவுபடுத்தும் ஆண், பெண் இருவரும் இணைந்து வாழும் திருமண வாழ்வினை,

         ஓா் ஆணும் பெண்ணும் உறவுகொள்ளச் சடங்குகள் சம்பிரதாயங்களோடு சம்மதம் வாங்கிக் கொண்டால் ஊர் அதைக் கல்யாணம் என்கிறது என்று விளக்கம் தருகின்றார்.

         நாகரிகம் வளா்ச்சியடையாத பொழுதும் கிராமங்களில் திருமணச் சடங்குகள் இன்றளவும் சிதையாமல் பின்பற்றப்பட்டு வருவதைத் தம் படைப்பின் வழியே அடையாளப்படுத்துகின்றார். இதுவே வைரமுத்துவின் படைப்பில் காணலாகும் திருமணச் சடங்குகளாகுகின்றன.

    • மணமக்கள் திருமணம்
    • மார்க்கத் திருமணம்

    எனும் இருநிலைகளில் வகைப்படுத்தி ஆராயலாம்.

    இறப்புச் சடங்குகள் 

         இறப்பு என்பது மனித வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இறுதி நிகழ்வாகும். இறப்பில் சிலர் இயற்கையாகவும், சிலர் நோய்வாய்ப்பட்டும் இறப்பர். மனிதா்களின் வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்த்தும் நிகழ்வே இறப்பு எனலாம். வாழ்க்கையில் மனிதர்கள் தம்முடைய குடும்பத்தோடும், உறவினர்களோடும், சமுதாயத்தோடும் வாழ்ந்து வரும்போது  “இறப்பு” ஒரு மிகப்பெரிய மாறுதலை உண்டாக்குகிறது.

         இறப்பு மனித வாழ்வின் இறுதிநிலை என்றாலும், அதற்குப் பின்னர் மீண்டும் இவ்வுலகில் பிறக்கிறான் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே பரவலாக நிலவிவருகின்றது. இதனாலயே மற்ற நிலைகளில் கடைப்பிடிக்கும் சடங்கு முறைகளைக் காட்டிலும் இறந்தவர்களுக்குச் செய்யும் ஈமச்சடங்குகள் மனித வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்நிலை பழங்குடியினர் முதல் தமக்கென ஒரு நாகரிகத்தைக் கொண்டிருக்கும் பல்வேறு சாதிக் குழுவினர் வரை அனைவரிடமும் காணக்கூடியதாகும் என்று வாழ்வியல் களஞ்சியம் எடுத்துரைக்கிறது.

         வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் மனிதர்கள் இறந்துவிட்டால் அவர்களை அடக்கம்செய்யும் முறை இல்லாமல் காணப்பட்டது. இறந்தவர்களின் உடலைப் பறவைகளும், மிருகங்களும் சிதைத்து உணவாக உட்கொள்ளும் நிலையே இருந்தது. மனிதர்களின் நாகரிக வளர்ச்சியால் சமுதாயத்தில் இறந்த மனிதனை அடக்கம் செய்யும் வழக்கம் ஏற்படத் தொடங்கியது எனலாம். உலக மக்கள் இறந்தவர்களின் உடலினை அடக்கம்செய்யப் பல வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர்.

         பண்டை நாளில் திபெத் மக்களும், அமெரிக்க ஆஸ்திரேலிய மக்களும் பிணத்தைப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவாக விட்டுவிடுவர். மத்தியத்தரைக் கடற்கரைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இறந்தவா்களைத் தங்கள் குகைகளில் புதைத்தார்கள். திபெத் மக்கள் மேற்கு ஆப்பிரிக்க ஆதிகுடிகள், பாலிவேசிய மக்கள் பிணத்தைக் கடலிலோ, ஆற்றிலோ எறிந்து இருக்கிறார்கள். அந்தமானியர், நாகர், அஸ்ஸாம்வாசிகள், தோண்டுகள் மக்கள் மரத்தின்மேல் பரண்கட்டிப் பிணத்தை அதன் மீது வைத்துவிடுவர். மேலும் சிந்துசமவெளி மக்கள் பிணத்தை உட்காரும் நிலையில் தாழிகளில் வைத்து அடக்கம் பண்ணி அடைத்தனர் என்று கலைக்களஞ்சியம் எடுத்துரைக்கிறது.

         கள்ளிக்காட்டு கிராம மக்களின் வாழ்வியல் இடம்பெறும் சிறப்புச் சடங்கின் நிலைப்பாட்டினை வைரமுத்து தன்னுடைய படைப்புகளில் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார். கிராம மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ள இறப்பு குறித்த நிகழ்வுகள் வழியே மக்களின் வாழ்வியல் பின்புலங்களையும் எடுத்துரைக்கின்றார். இதனை,

    1. இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள்
    2. இடுகாட்டில் நடத்தப்படும் சடங்குகள்

    எனும் இரு நிலைகளில் வகைப்படுத்தி ஆராயலாம்.

    இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள்

         உடலைவிட்டு உயிர்பிரிந்த பின் அவ்வுடலுக்குச் செய்யப்படும் சடங்குகள் இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள் எனலாம். வைரமுத்து தம் நாவல்களில் கிராமமக்களின் வாழ்வியலில் நடைபெறும் இறப்பு குறித்த நிகழ்வுகளையும், சடங்கு முறைகளையும் தெளிவுபட எடுத்துக்காட்டுகிறார்.

         பேயத்தேவரின் மனைவி அழகம்மாள் இறந்த செய்தியினை உறவினர்களுக்கும், பிற ஊர்களுக்கும் சொல்லச் சொல்லும் நிலையினைக் கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் நாவல்வழியாகக் கவிஞர் எடுத்துரைக்கிறார். அப்போது தான் ஊர் ஊருக்கு எழவு சொல்லப் போய்க்கொண்டிருந்த மாதாரிக் கொத்தன் தொங்கித் துவண்டுவரும் பேயத்தேவரைக் கண்டு யப்பே! நான் என்னத்தச் சொல்லுவேன் ஆத்தா எழவு சொல்லவும் நான் உசுரோட இருக்கனே என்றான். அழுக்குத் துண்டை வாயில் வைத்து அடைத்துக்கொண்டு போடா….. போயி பொழுதோட சொல்றா என்றார். பேயத்தேவர். கண்ணீா்பேய் உடைந்த வார்த்தைகளால் எனும் பகுதியில் இறந்தவுடன் இறப்புச் செய்தியினைச் சொல்வதற்கு ஆள் அனுப்பும் நிலையினைக் கிராம மக்கள் கையாண்டுள்ளமைத் தெளிவாகக் காட்டுகிறார்.

         இறப்புச் செய்தியினைப் பிறருக்குத் தெரிவிக்க ஆண்களே சென்று வந்துள்ளனர். கிராமப்புறங்களில் இவ்வேலையினை வெட்டியான் என்னும் இனமக்களே செய்துவந்துள்ளனா் என்பதை வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் புதினம் வழியே புலப்படுத்தியுள்ளார்.

         ”யப்பே! வண்டி நாய்க்கரு செத்துப் போயிட்டாரப்பே”ன்னு எழவு சொல்லி நின்னான் நச்சர்வரம் வெட்டியான் என்று பேயத்தேவரின் உற்ற நண்பராக விளங்கும் வண்டி நாயக்கர் இறப்புச் செய்தியைப் பெறுவதன் வழிச் சுட்டிக்காட்டுகின்றார்.

    முடிவுரை 

         மனிதர்களின் வாழ்வில் எந்தவொரு செயலாக இருந்தாலும் நன்கு நடைபெற வேண்டும் என்று கருதி முறையாகச் செய்யப்படுகின்ற செயல்பாடுகள் சடங்கு என்ற வடிவம் பெறுகின்றது எனலாம். தாயும், சேயும் எவ்வித நோய்நொடியும் தாக்காமல் இருக்கத் தீட்டுக் கழிக்கும் சடங்குகளும், காதுகுத்தும் சடங்குகளும் கிராம மக்களின் வாழ்வில் தவிர்க்க இயலாத சடங்கு முறைகளாகும். இன்றும் அவை நடைமுறையில் இருப்பதை வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளதைக் காணமுடிகின்றது.

    பார்வை நூல்கள்

    1. வைரமுத்து – கள்ளிக்காட்டு இதிகாசம்
    2. வாழ்வியல் களஞ்சியம்
    3. கள்ளிக் களஞ்சியம்

    *****

    கட்டுரையாளர்
    முனைவா்பட்ட ஆய்வாளா்
    பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூா்

    Share
  • உதவிடுமா !

    எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

     

    பிறந்திடும் போது இறப்பினைப் பற்றி

    நினைந்திடும் மனிதர் உலகினி லுண்டா

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடையினில் தானே

    பெரும் போராட்டம் நடக்குது இங்கே

    சொத்துக்கள் சேர்ப்பதும் சொகுசெலாம் காண்பதும்

    நித்தியம் என்று நினைக்கிறார் மனிதர்

    எத்தனை இடர்கள் வருமென நினையா

    இருப்பதைப் பெருக்க நினைக்கிறார் நாளும் !

     

    வாழும்வரை வாழுங்கள் வகைவகையாய் சுவையுங்கள்

    நாளைபற்றி நினைக்காமல் நன்றாக மகிழுங்கள்

    ஊணுறக்கம் தனைமறந்து உழையுங்கள் உழையுங்கள்

    உங்களுக்குப் பின்னாலே உங்கள்சொத்து யாருக்கு

    உயிருடம்பில் இருக்கும்வரை உங்கள்சொத்து உங்களுக்கே

    உயிர்பிரிந்து போனபின்னால் உங்கள்சொத்து என்னவாகும்

    பிள்ளைகளும் பேரர்களும் பிய்த்தெடுத்து நிற்பார்கள்

    அவர்களுக்குள் போராட்டம் ஆரம்பம் ஆகிவிடும் !

     

    மனைவி பிரிந்துவிட்டால் வாழ்க்கையே கசந்துவிடும்

    மகிழ்ச்சி அமைதியெல்லாம் மங்கியே இருந்துவிடும்

    சேர்த்துவைத்த சொத்தெல்லாம் பார்த்துநிற்கும் ஓரக்கண்ணால்

    சிந்தனையோ எமைவிட்டு சிதறியே சென்றுநிற்கும்

    ஆறுதலைக் கூறிநிற்க வந்திடுவர் சிலமக்கள்

    ஆஸ்த்திதனை மனமெண்ணி வந்தணைவார் சிலமக்கள்

    தேறுதலும் ஆறுதலும் உயிருள்ள உடம்பினுக்கே

    உயிர்பிரிந்து போனபின்னர் உங்கள்சொத்து யாருக்கோ !

     

    இல்லறத்தில் இருந்திடுங்கள் இன்பமாய் வாழ்ந்திடுங்கள்

    பிள்ளைச்செல்வம் பெற்றிடுங்கள் பேணி வளர்த்திடுங்கள்

    நல்லகல்வி கொடுத்திடுங்கள் நற்றுணையாய் இருந்திடுங்கள்

    நாளுமவர் உயர்ச்சிக்காய் நாழுமே உழையுங்கள்

    ஆளாக்கி விட்டபின்னர் அன்புடனே இருந்திடுங்கள்

    அவர்களுக்கு வேண்டியதை ஆசையுடன் கொடுத்திடுங்கள்

    அவர்கள்தான் கதியென்று அடிமனதில் பதியாது

    அன்றாடம் வாழ்வுதனை அகமகிழ வாழுங்கள் !

     

    எதிர்பார்ப்பு எப்பவுமே ஏமாற்றம் தந்துவிடும்

    இருக்கின்ற வாழ்வுதனை பொறுப்புடனே வாழுங்கள்

    கிடைக்கின்ற வாய்ப்புகளை முடக்கிவிட நினைக்காதீர்

    மடத்தனமாய் மகிழ்ச்சியினை மழுங்கடிக்க முயலாதீர்

    கொடுத்துநிற்கத் தயங்காதீர் குதூகலத்தைத் தொலையாதீர்

    எடுத்துவைத்துச் சேமித்து இல்லையென வாழாதீர்

    பிடித்தமுடன் வாழுங்கள் பேராசை விட்டிடுங்கள்

    அடுத்தவர்கள் வியந்துநிற்க ஆனந்தமாய் வாழுங்கள் !

     

    இருக்கும் வரையினிலே இன்பமாய் வாழுங்கள்

    கொடுக்கும் பொருளையெல்லாம் கொடுத்துமே மகிழுங்கள்

    சேர்த்துவைக்கும் எண்ணமதைச் சிந்தனையில் கொள்ளாதீர்

    ஆர்க்குமே பாராமாய் இருந்துவிட நினையாதீர்

    வாழுகின்ற வாழ்நாளில் வண்ணமுற வாழுங்கள்

    செய்கின்ற அத்தனையும் சீராகச் செய்யுங்கள்

    உங்கள்வாழ்வு உங்களிடம் என்பதையே உணருங்கள்

    உயிர்பிரிந்தால் வாழ்வெமக்கு உதவிடுமா சிந்தியுங்கள் !

    Share
  • கலித்தொகைப் பாடல்களில் கவிதை வளம் – 2

    -முனைவர் சு. செல்வகுமாரன்

    கவிதைமொழியின் சொற்பயன்பாடு பற்றிக் குறிப்பிடும் க. பூரணச்சந்திரன் “நடைமுறை ரீதியான எழுத்தாளன் சொற்களை பயன்படுத்தும்போது ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தம் மட்டுமே தரமுயலுவான். ஆனால் கவிஞனோ எத்தனை அர்த்தங்களை ஒரு சொல் தருகிறதோ அத்தனையையும் பயன்படுத்த முயற்சி செய்வான்.

        கவிதை மொழியைப்பற்றிய ஒரு தவறான கருத்து என்னவென்றால், கவிஞர் மிக அழகான, ஒலிநயத்துடன் கூடிய சிறப்பான சொற்களைப் பயன்படுத்துவார் என்பதுதான். உண்மையில் கவிஞர்கள் தேடுவது மிக அர்த்தப்பாங்கான – அர்த்தச்செறிவான சொற்களைத்தான். சொற்கள் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பொருள் தருகின்றன. மொழியில் பல தளங்களும் விதங்களும் இருக்கின்றன. கவிஞன் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். அவன் தேர்ந்தெடுக்கும் சொல் மிக உன்னதமானதாக – எளிமையானதாக அழகுத்தன்மை உள்ளதாக – அற்றதாக, ரொமான்ண்டிசத் தன்மை வாய்ந்தாக – யதார்த்தத்தன்மை கூடியதாக, பழங்காலச் சொல்லாக – புதிய சொல்லாக, கலைச்சொல்லாக – சாதாரணமாகப் புழங்குவதாக, ஓரிரு அசை கொண்டதாக – பல அசைகள் கொண்டதாக, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

    ஒரு தளத்தில் இயங்கும் கவிதைக்கு வேறுஒரு தளத்திலிருந்து கூடச் சொற்கள் ஆளப்படலாம். இதைச் சிறப்பாகச் செய்தால் ஒரு வியப்பதிர்ச்சி உருவாக்கும். கவிதையின் ஆழத்தைக் கூட்டும். கவிஞனின் தொழிலே சொற்களை மேலும் மேலும் தேடிச் செல்வதும் கண்டுபிடிப்பதும்தான். அச்சொற்களின் இரகசியத் தொடர்புகள் புலப்படும் சமயத்தில் கவிதையின் ஆழமும் கனமும் கூடுகின்றன. வெடித்துச் சிதறும் ஒரு வெடிகுண்டின் அழுத்தத்தைப் போல அதில் அழுத்தம் கூடுகிறது.” 14 என்று குறிப்பிடுவது கவிதைமொழியின் இயக்கம் குறித்துப் புரிந்துகொள்ள உதவுகிறது.

    முல்லைக்கலிப் பாடல் (3) ஏறுதழுவுதல் பற்றியதான தோழியின் கூற்றாக அமைகின்றது. இப்பாடலில் ஏறுதழுவுதல் தொடர்பான நிகழ்வினைக் காணாதவரும் கண்டுகொள்கின்ற விதமாய் புலவர் காட்சிப்படுத்தும் விதம் படைப்பாக்க மொழிசார்ந்த ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாய் உள்ளது.

         “அவர் மிடை கொள
          மணிவரை மருங்கின் அருவி போல
          அணிவரம்பு அறுத்த வெண்காற் காரியும், ….” 15
         “ஓவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற
          சேஎச் செவி முதற்கொண்டு, பெயர்ந்து ஒற்றும்….” 16

    ஆயமகளிர் தங்களுக்குரிய பரண்களில் வந்தமர்கின்றனர். அப்போது தொழுவினுள் பசுக்களைப் புகச்செய்கின்றனர். அந்தப் பசுக்கள் பல்வேறு விதமாக அழகுபடவும், வன்மம் மிக்கதாகவும் விளங்குகின்றன. அவற்றினை காட்சிப்படுத்தும் புலவன் மலையினின்று வீழும் அருவி போல அழகின் எல்லை மீறிய வெள்ளிய கால்களை உடைய கரிய எருதுகளையும், விண்மீன்கள் பூத்து விளங்கும் அந்திவான் போல வெள்ளிய புள்ளிகள் கொண்ட வெள்ளை எருதுகளையும், இறைவனின் தலையில் சூடியுள்ள பிறை போல வளைந்த கொம்புகளை உடைய சிவந்த எருதுகளையும் பொருந்துகின்ற மாறுபாட்டினை உடைய வலிய பிற ஏறுகள் பலவற்றையும் தொழுவினுள் புகவிட்டனர் என்பதாக பதிவு செய்கின்றார். இன்னொரு இடத்தில் காயாம் பூக்கண்ணி சூடி ஏறுதழுவுகின்ற பொதுவன் ஒருவன் இடையறாத வேகத்துடன் கோபம் கொண்டு தன்னை நோக்கி வந்த சிவந்த நிறமுடைய ஒரு எருதினை அதன் செவியடியிற் பற்றிக் கொண்டு அதன் வலியை அடக்கிய அழகைத் தலைவிக்கு தோழி மூலம் காட்சிப்படுத்துகின்றார்.

          இதற்கு நல்லுருத்திரனார் ஒரு தொன்மத்தை ஒப்புமை செய்கின்றார். பகைவிடுத்த பிடரி மயிர் கொண்ட குதிரையை வாயைப் பிளந்து, கொன்ற சமயத்தில் மாயனும் இத்தகையனோ? என்று என் நெஞ்சம் அச்சம் கொண்டதாக தோழிக் கூறுவதாக அமைகின்றது. பாடல் ஆயர் வாழ்வியல் தொடர்பான பல விவரங்களை பதிவுசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுருங்கச் சொன்னால் அவையே முல்லைக்கலிப்பாடலின் அடிக்கருத்தியலாகவும் விளங்குகின்றது. ஆக முல்லைக்கலியைப் பொறுத்தமட்டில் கருத்தியலை அழகியல் உறுப்புக்களைக் கொண்டு காட்சிப்படுத்துகின்றவிதமுமே கவிதையினை வளமையுடையதாகவும், செழுமையுடையதாகவும் இனங்காணச் செய்கின்றது. அத்தோடு கவிதையில் இயல்பாய் அமைந்து விடுகின்ற உணர்ச்சியும், கட்டமைப்பும் கூட முல்லைக்கலிப் பாடலின் வளமைக்கு காரணமாக அமைகின்றன.

        முல்லைக்கலிப் பாடல் (4) தோழி, தலைவி கூற்றாக அமைந்துள்ள உரையாடல்களாகவே அமைந்துள்ளன. அவர்களின் உரையாடல்கள் வெவ்வேறான காட்சிப்படுத்தல்களை நிகழ்த்துகின்றன. பாடலின் முதல்பகுதி ஏறுதழுவுலுக்காக தொழுவத்தில் விடப்பட்ட வெவ்வேறு எருதுகளின் வலிமை குறித்தனவாகவும், வலிமையும் கொலைத்தன்மை மிக்கதுமான எருதுகளை அடக்கிவிடும் ஆயன் எத்தகைய சிறப்பு மிக்க ஆயர்குலத் தலைவியை அடையலாம் என்பதனையும் விவரணைவதாக அமைகின்றன.

       “அவ்வழி, முள்எயிற்று ஏர் இவளைப் பெறும், இது ஓர்
        வெள்ஏற்று எருத்து அடக்குவான்.
    ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில்பெறும், ….”  17   

    அதாவது, எருதுகள் நிறைந்திருக்கும் இந்தத் தொழுவத்தினிடத்தே நிற்கின்ற ஒப்பிடுதற்கு அரிதான பலம் பொருந்திய வெள்ளை ஏற்றின் கழுத்திலே கிடந்து அடக்குபவன் முள்எயிற்று அழகியான இவளைப் பெறுவான் என்பதும்,  கூரிய கொம்புகளை உடைய கார் என்று சொல்லக் கூடிய எருதின் சினத்தை அஞ்சாது தழுவி அடக்குபவன் ஒளிமிக்க அணிகலன்களையுடைய தலைவியின் நீண்ட கூந்தலிலே துயிலுகின்ற பாக்கியத்தைப் பெறுவான் என்பதும்,  குரால் நிறம் உடையக் கண்களைக் கொண்ட கொலைத்தொழில் மிக்க ஏற்றை அடக்குபவன் வெருவுதலையுடைய பிணை மானைப் போல பார்க்கும் வலிபடர்ந்த கண்களை உடைய இந்த நல்லவளைப் பெறுவான் என்பதும், மிகுதியான வலிமையுடைய சிவந்த எருதின்  சினத்தை அஞ்சாமல் அடக்கி ஆள்பவன், வரிபொருந்திய காதணியினையும், மூங்கில் போன்ற தோள்களையும் உடைய தலைவியுடன் துயிலுறுதலைப் பெறுவான் என்றும் ஆயர்கள் முறைப்படி அறிவித்தல் செய்து பல விண்மீன்கள்  சூழ்ந்த அழகிய சந்திரனைப் போலப் பல பெண்கள் சூழ்ந்திருந்த அந்தப் பரணிடத்தே தலைவியையும் அழகு நிரம்பியவளாக கொண்டு சேர்த்தனர் என்பதாகக் காட்சிப்படுத்தி நம் மனக்கண்ணில் நிறுத்தப்படுவதன் மூலம் தலைவியின் சிறப்பு  உணர்த்தப்படுகிறது.

     இங்கு ஆயர்குலப் பெண்கள் ஏறுதழுவல் மூலமாகத் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட நிலையினை விவரிக்கும் டாக்டார் மு.வ “ஏறுதழுவுதல் என்ற ஒரு வழக்கம் முல்லை நிலத்துக்கு உரியது. அது மற்ற சங்க நூல்களில் இல்லாமல் கலித்தொகையில் மட்டும் காணப்படுகிறது. அப்பகுதியில், ஆயர்களின் வீரமும் அஞ்சாமையும் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஆயர் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதனால், அவளுக்கு உரிய கணவன் வீரம் மிக்கவனாக இருத்தல் வேண்டும். இன்ன காளையைத் தழுவி அடக்கவல்ல வீரனே அவளை மணப்பதற்கு உரியவன் என்று பலரும் அறியத் தெரிவிப்பது வழக்கம். அவ்வாறே வேறு குடும்பத்துப் பெண்களுக்கும் திருமண ஏற்பாடாக ஏறுகள் குறிக்கப்படும். இந்த ஏறுகளைத் தழுவி அடக்குவதற்கு வீரர்கள் காத்திருப்பார்கள். இதற்கு ஒரு நாள் குறிக்கப்படும் அன்று அஞ்சாமல் களத்தில் புகுந்து ஏறுகளை எதிர்த்து, அவற்றின் கொம்புகளால் குத்துண்டும் புண்பட்டும் வெற்றி பெறும் வீரர்களை அந்தந்தப் பெண்கள் மணந்து கொள்வார்கள். இவ்வாறு நிகழ்வதே ஏறுதழுவுதல் என்பது. இன்ன ஏற்றை அடக்கித் தழுவும் வீரனுக்கே உரியவள் இப்பெண் என்று பலமுறை சொல்லிப் பலர் அறியச் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது.” 18  எனக் குறிப்பிடுவது முதன்மையானதாகும்.

    மேலும் முல்லைக்கலிப் பாடல் (14) தலைவியை தலைவன் உரிய காலத்தில் வரைந்து கொள்ளாத நிலையில், தலைவியை அயலானுக்கு மணம்செய்து கொடுக்க வீட்டில் முயல்கின்றனர். அந்தத் தருணத்தில் தலைவி தோழியின் வாயிலாகத் தலைவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வரைவு கடாவுகின்றாள். அப்பாடலின் இறுதிப் பகுதியாக இடம்பெற்றுள்ள

         “தருமணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
    எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்…” 19

    என்னும்  வரிகள் ஆயமகளிரின் திருமணம் தொடர்பான நிகழ்வு அல்லது சடங்கில் பெண் எருமையின் கொம்பினை வைத்தல் என்பது இனவரைவியல் நோக்கில் ஆராயப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனைப் போலவே ஆயர்குலப் பெண்களின் கற்பொழுக்கமும் வலியுறுத்தப்படுவது உணர்த்தப்படுகின்றது. இது குறித்து தம் கருத்தினை பதிவு செய்யும் ராஜ்கெவுதமன்,

         “(114) தலைவி கூற்றாக உள்ள பாடலாகும். ஆயர்குடிப் பிறந்த பெண் ஒருவனோடு மட்டுமே மணவாழ்க்கை உண்டு என்பதில் கௌரவம் கொள்ளுகிறாள்.

    தலைவி தருமணல் தாழப்பெய்து வீட்டைச் செம்மண்ணால் பூசி பெண் எருமையின் கொம்போடு எமர் (வீட்டார்) இங்கு அயரும் பெரும்மணம் எல்லாம் தனித்து ஒழிய – (முன்னர்) வரிமணல் முன்துறையில் சிற்றில் புனைந்து ஆடிய ஆயத்தாரிலிருந்து நான் தனிநீங்கி அவனோடு புணர்ந்த ஒருமணம்தான் அறிவேன். இந்த உலகமே பெறினும் அருநெறி ஆயர்மகளிருக்கு இருமணம் கூடுதல் இயல்பு இல்லை. (என்று பிறர் வரைவு கேட்டுவந்த போது தலைவி கூறுகிறாள்.)

         ஆணுக்கு வீரம் மாதிரி, பெண்ணுக்குக் களவு மணம் புரிந்த ஒருவனே கணவன் என்ற மதிப்பீடு ஆகியுள்ளதை இங்கே காண இயலும். தொல்காப்பியம் கற்பு பற்றி வரையறுத்த நெறி இந்தியத் துணைகண்டம் முழுமைக்கும் உரிய நெறியாக இருந்தது.” 20

         முல்லைக்கலிப் பாடல்கள் நிறைந்த வர்ணிப்புகளைக்  கொண்டுள்ளன. அவை முல்லைநில மக்களின் வாழ்வில் முக்கியத்துவம் பெற்ற ஏறுதழுவுதல், குரவையாடுதல்,  ஆயர்குலப் பெண்களின் கற்புநெறி உள்ளிட்ட செய்திகளைத் தமிழ்ப் பண்பாட்டு முறையியலோடு வெளிப்படுத்துவது ஆகியன இதன் நோக்கமாகவும் கருத்தியலாகவும் அமைகின்றன. இங்கு பாடுபொருள் முக்கியத்துவம் பெறுகின்றது. அப்படியாயின் கவிதையின் வளத்திற்கு வெறுமனே அணிசார்ந்த அமைப்புகளும், மொழியும் மட்டுமே காரணியாக இருக்க முடியாது. மாறாக இலக்கியத்தின் அடிநாதமாக விளங்கக்கூடிய பாடுபொருளும் அதன்  வளமைக்கும் செழுமைக்கும் காரணியாக அமைவதை நாம் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆக கவிதையின் வளமை என்பது ஒரு பெருங்கடல் போன்று விரிந்தும் நீண்டும் செல்லத்தக்கது.

    சான்றெண் விளக்கம்

    1. வீ.அரசு – சங்க நூல்களின் காலம், ப – 7
    2. சுந்தரபாண்டியன் . க – தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி, ப-24
    3. நடராசன். இரா – செம்மொழிகள், ப – 8
    4. டாக்டர், மு.வ, மொழி வரலாறு, ப – 330, முதல் பதிப்பு – 1952
    5. ஜானதன் கல்லர் தமிழில் ஆர். சிவக்குமார் – இலக்கியக் கோட்பாடு, ப -112
    6. தனிநாயகம் அடிகளாரின் படைப்புகள், ப – 341
    7. தொல், அகத்திணை, பா – 5
    8. தொல் – அகத்திணை – 1
    9. ராஜ்கெவுதமன்- கலித்தொகை பரிபாடல் ஒரு விளிம்பு நிலை நோக்கு, ப-112
    10. முல்லைக்கலி, பா 1:1-3
    11. மேலது, பா – 1: 18-20
    12. மேலது, பா – 1: 24-26
    13. மேலது, பா – 101: 30 – 32
    14. க. பூரணச்சந்திரன், கவிதையியல், ப – 73
    15. முல்லைக்கலி, 3: 11-13
    16. மேலது, 3: 50-51
    17. மேலது, 4: 20 -28
    18. மு.வ, முல்லைத்திணை, பக் – 13, 14
    19. முல்லைக்கலி, பா-14:12-13
    20. ராஜ்கௌதமன்- கலித்தொகை பரிபாடல் ஒரு விளிம்புநிலை நோக்கு, பக் – 121, 122

     

     

    Share