Blog

  • MGNREGA ENSURING EFFECTIVE DECENTRALIZATION

    MGNREGA ENSURING EFFECTIVE DECENTRALIZATION

    Ashok Jacob Mathews
    Research Scholar,
    Dept. Of Political Science and Development Administration,
    Gandhigram Rural Institute,
    Gandhigram. 624302.
    ashokjmathews@gmail.com

    MGNREGA ENSURING EFFECTIVE DECENTRALIZATION

    MGNREGA has made its impact all over the nation in supporting the poverty alleviation measures. As a flagship programme, it has attracted the rural masses in such a way that the success of application illustrates acceptance among the people. The core idea behind schedule was to provide a supportive measure in eradicating poverty, but on the other side, the program has made a plethora of developmental activities from wage generation to the strengthening of the local governance. The schedule has created spillover effect in strengthening other plans. The village level outcomes are the real examples of the spillover effects made by the program beyond considering the household effects. The real stakeholders of the application are the rural masses who directly depend on agriculture for their income generation. These commonalities were having only minimum participation in the activities of the panchayat, whereas the involvement in the programme has made them to act as a real citizen by fulfilling their rights. The right-based actions made them participate in the activities of the gram panchayat from gram sabha to people’s election. When a person himself can portray himself in questioning the violation of his rights makes him empowered from the individual perspective. The programme has caused the people educate them self to be the part of deliberative democracy by making the community-based generation of awareness among the rural masses to produce effective public deliberation. The sustainable livelihood approaches have made the programme to be more viable among the masses as it created a feeling of public service delivery among them. MGNREGA programme itself made it as a quasi by law to the 73rd amendment as it provides better developmental scenario from poverty alleviation to environmental protection. Indian paradox of governance is entirely different from that of other countries in the world as we have to accommodate a large mass in the process where the programme has made its implication in transforming the real stakeholders towards it.

    Apart from providing the social security to the rural masses, the programme has brought empowerment to the women and thereby activated the gram sabha and promoted the developmental activities which resulted in the overall development of the villages. Panchayat Raj institutions are the backbone of Indian democracy whereas the community development programmes like MGNREGA has initiated powerful people movement which can ultimately result in transformation for a stronger and broader justice. Thus MGNREGA plays an essential role in deepening democracy and also provide social security for the poor through the creation of durable assets, improved water security, soil conservation and higher land productivity. From the time MGNREGA was implemented the programme has provided transformation to the society whereas also efficiently strengthened the governance at the grass root level where it is primarily performed thereby ensuring effective decentralisation. G. Palanithurai[1], in his work ‘Needing Social Action for Effective Panchayati Raj”, point out the fact that in the process of democratic devolution of powers the initiatives come from the centre and not from the people, But, to ensure success to this dispensation, the efforts have to come from the people. Social action, community participation, owning the institutions and taking responsibilities are the imperatives for the success of the Panchayati Raj institutions. In the process of devolution of power, people have to come to the forefront pushing the government into the background. He has underlined the importance of conscientization of the people on the role of the people in governance at the grassroots. The effectiveness of devolution depends on the participation of the people, and its efficacy judged on how they participated. The programmes like MGNREGA has made the people get closer to the government especially the panchayats as they are the primary implementing platform. The scheme has improved the lives of the people and has brought stability and assured income to the families that were until recently desperately poor (Vidya Subramanian)[2]. The application has initiated the people to get closer and work for the better deliverance. The people used to work on the schedule actively as it was a livelihood possibility for them and the work ensured them with better living conditions.

    The programme has made it be the platform for the poor people to engage themselves in a job which provides them with better livelihood options. The income earned from the programme ensured better living facilities for them. MGNREGA programme has its impact from the very base level as the people used to work in the schedule for better livelihood. According to OECD[3] “the primary objective is the provision of social protection to help the chronically poor at times of vulnerability by providing a form of income insurance”. The panchayats at the implementing level made the people to get closer to its activities and to make themselves active in the functions of the panchayat. The involvement of the panchayats caused the people participate in the activities of the panchayats. The participation of the people in Gram Sabha meetings has increased all over India as it was a platform which enabled them to demand their needs and concern. The rural women used to indulge in the household activities came forefront in lack of their demands. The programme made it be a platform for the women to empower themselves and to demand their needs. The act established the women be aware of their rights. The constitutional provisions have enabled them to be active and to participate themselves in the functions of the panchayat. The social audit provision made them to engage themselves in the transparency of the programme and to prepare themselves to be more concerned about the regulations which they have missed. The rights-based approach made the schedule to reach the people more close to their panchayats to raise their demands as the program caused the people get aware of their rights.

    The 73rd amendment made it possible to implement the decentralisation policies in India. It made India to transform the power from the governments to rural local bodies. It enabled the people to have adequate democracy as the participation of the rural people increased at the grass root level. According to G.Palanithurai[4] “The whole local governance system has to work for economic development and social justice. The reason for governing clause of the amendment to the Constitution of India. It should go through a participatory process”. Participation has got a broader and deeper connotation in this process. It has to enable every segment of the society to participate actively in governance and development process. The role of an ordinary man raised in the community with his higher level of involvement in the governance process. The decentralisation process was a revolution in the history of India as it enabled the people to have fruitful democracy. The decentralisation only allowed the people to have participated in the governance and to indulge themselves in the growth of their place. The decentralisation process with a higher level of involvement made the people think about self-sufficiency with a sustainable livelihood. The implementation of MGNREGA has also become a milestone in the history rural Indians as it provided opportunities for the rural people. The programme enabled the rural masses to gather together, and done by the functionaries of Panchayati Raj.

    The MGNREGA has promoted decentralisation in the country as the participation of the people has increased considerably. The participation increased among the women as the programme made them come out of their social structures and to make their own income. The opportunity to earn a better livelihood made them participate in the schedule for their goodness. In certain places especially during the lean season NREGA had been the only source of income (Sudha Narayan: 2008)[5].  The participation has enhanced the collective behaviour of the people as the cooperation among the people has increased. The increased collaboration made them to get together for their rights and to stand for it. Dreze[6] point out that NREGA is an unprecedented opportunity for the rural poor. The programme has promoted the people to deal with officials and representatives at the panchayat level and changed their hesitation to mingle with the officials. The panchayat involvement made them to initiate themselves towards their needs and to present it in front of the authorities. The implementation of the programme mainly targeted at promoting the livelihood of the people by ensuring the protection of the natural resources. The works focused on the protection of the environment by promoting sustainable development. According to P.S Appu[7] “NREGS has facilitated ‘people coming together’ irrespective of the sex and caste working together in creating productive assets.” The actions at the grass root level made the people close to the local institutors and thereby enabled them to have efficient decentralisation practices. The participation of the people in the MGNREGA made them engage more in the activities of the local institutions. According to Kaustav Banerjee[8] the right to work under NREGA could be a transformative right to bring about deep changes in the power structure of the rural society.  The assistance caused the people involve themselves more in the activities of local administration especially in Gram Sabha meetings and other events of the panchayats. The participation of people mainly focused on the effectiveness of the programme in reaching the people. The spillover effects created because of the programme are many and it not only gave results to the people but also made transformation to the whole panchayats where the programme was implemented. The effectiveness of the programme made the people to be closer towards the programme and to make it as a transformative measure for them to progress along with their locality. The participation made them to be close towards administrative institutions and to indulge them more in its activities all over India.  Thus the MGNREGA programme has initiated in ensuring effective decentralisation in the country.

    *Ashok Jacob Mathews, Research Scholar, Department of Political Science & Development Administration, Gandhigram Rural Institute, Gandhigram.624302.

     

    Reference      

    1. G. Palanithurai Needing Social Action for Effective Panchayati Raj, Kurukshetra, Vol.XLV; No.9, June 1993.
    2. G.Palanithurai, Decentralization: Critical Issues from the Field, New Delhi: Concept Publishing Company, 2009.
    1. Jean Dreze, NREGA: Dismantling the contractor raj, The Hindu, 20th November
    2. Sudha Narayan “Employment Guarantee Women’s Work and Childcare”, Economic and Political Weekly, March 1st, 2008.
    3. Kaustav Banerjee, The Right to Work in Theory and Practice: A case study of NREGA in India, Oxford University Press, 2010.
    4. Appu P.S, “Expand and reorient NREGA”, The Hindu, October 14th, 2009.
    5. Vidhya Subramanian, “Social and Political Dividend from NREGA”, The Hindu Oct 19th,
    6. OECD (2006, 2009), ‘What role for policy in tackling inequality?                                                      

    [1] G. Palanithurai ‘Needing Social Action for Effective Panchayati Raj’

    [2] Vidhya Subramanian, “Social and Political Dividend from NREGA”

    [3] OECD, ‘What role for policy in tackling inequality?

    [4] G.Palanithurai, Decentralization: Critical Issues from the Field

    [5] Sudha Narayan “Employment Guarantee Women’s Work and Childcare”

    [6] Jean Dreze (2007), NREGA: Dismantling the contractor raj The Hindu, 20th November

    [7] Appu P.S, “Expand and reorient NREGA”

    [8] Kaustav Banerjee, The Right to Work in Theory and Practice: A case study of NREGA in India

    Share
  • கபீர்தாசரின் கவிதைகள் – (2) தமிழாக்கம்:  க. பாலசுப்ரமணியன்

    க. பாலசுப்பிரமணியன்

    kabir-424x282

     

    துயரத்தில் இறைவனைத் தேடும் மனிதா

    சுகத்தில் அவனை ஏன் தேடுவதில்லை ?

    சுகத்தில் அவனை நீ நாடிவிட்டால்

    துயரமே என்றும் வருமோ உனக்கு ?

     

    வாசம் இங்கே வாசம் அங்கே

    வாசம் தேடும் கஸ்தூரி மானே

    வாசம்  வருவது உள்ளிருந்து

    விளங்கிடும் நாளும் வந்திடுமோ ?

     

    குருவும் இறைவனும் ஒன்றாய் நின்றால்

    அடைவேன் சரணம் யாருடைப் பாதம் ?

    குருவின் பாதங்களே முதலில் சரணம்

    குருவே காட்டினான் இறைவன் பாதையை !

     

    சொல்வாய் என்றும் சொற்கள் இனியவை

    சொல்லில் ஆணவம் சுத்தமாய் நீக்கி

    சொல்லின் இனிமையை சுகமாய் உணர்ந்து

    சொல்வாய் சொற்கள் இனிமையைப் பகிர்ந்து.

     

    ஒரே உரையில்  உண்டோ இருவாள்கள்

    ஒரே இடத்தில்  உண்டோ அன்பும் அகந்தையும் ?

    ஒரே முகத்தில் கண்களும் காதும்

    பார்த்திடும் கண்கள் என்றும் கேட்டதில்லை !

     

    நாளை செய்வதை இன்றே செய்

    இன்று செய்வதை இப்பொழுதே செய்

    நல்லவை  செய்திட நாட்களைத் தேடாதே

    நாளைய பொழுதை யாரே அறிந்தார் ?

     

    செடியினில் மொட்டுக்கள் முனங்கின மெதுவாய்

    மறைந்தே வருகிறான் மலர்கள் பறித்திட

    மணமாய்  மலர்ந்த மலர்கள்  மறைந்திடும்

    மலர்ந்திடும் நமக்கும் நாளை வந்திடும் !

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(194)

    செண்பக ஜெகதீசன்

     

     

    சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

    வறங்கூர்ந் தனைய துடைத்து.

    -திருக்குறள் -1010(நன்றியில் செல்வம்)

     

    புதுக் கவிதையில்…

     

    பிறர்க்குதவும்

    சிறப்புமிகு செல்வர் பெற்ற

    சிறிய வறுமை,

    மழை கொடுத்து

    மண்ணை வாழ்விக்கும்

    வான்மேகம்

    வறுமையுற்றது போன்றதே…!

     

    குறும்பாவில்…

     

    பண்புமிகு செல்வரின் சிறுவறுமை,

    உலகைக் காக்கும் மழைமேகம்

    வறுமையுற்றதற்கு ஒப்பாகும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    செல்வப் பயனே ஈதலெனும்

    சிறப்ப றிந்த செல்வரவர்,

    இல்லை யென்றே சொலுமளவில்

    இடராய் வந்த சிறுவறுமை,

    எல்லை யில்லாக் கருணையாலே

    எங்கும் பாரை வளமாக்கும்

    வல்லமை மிக்க வான்மேகம்

    வறுமை யுற்றது போலாமே…!

     

    லிமரைக்கூ..

     

    சிறப்புமிகு செல்வரின்சிறு வறுமை

    யதற்கு ஒப்பானதே, உலகை வாழவைக்கும்

    வான்மேகத்தின் மழையிலா வெறுமை…!

     

    கிராமிய பாணியில்…

     

    செல்வம் செல்வம் நல்ல செல்வம்,

    அடுத்தவுருக்குக் குடுத்துவாழ்ந்தா

    அதுதான் செல்வம் நல்ல செல்வம்..

     

    அப்படிக் குடுக்கற நல்லவனுக்கு

    வறும வந்தாலும் சின்னதுதான்,

    அது

    ஒலகத்த வாழவைக்கிற

    வானத்து மேகம் மழபெய்யாம

    வறுமயானது போலத்தான்..

     

    அதால

    செல்வம் செல்வம் நல்ல செல்வம்,

    அடுத்தவுருக்குக் குடுத்துவாழ்ந்தா

    அதுதான் செல்வம் நல்ல செல்வம்…!

     

     

    Share
  • நாடில்லாத் தளத்தில் இருப்போன் !

    image (5)

     

     

     

     

     

     

     

     

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா

     

    நாடில்லா மனிதன் அவன்

    நிஜமாகவே ! 

    வாடிக் கிடப்பது அவன் நாடில்லா

    தளத்தில் !

    தன் நாடில்லா நிலத்தில்

    யாருக்கும்

    உதவத் திட்டமிட வேண்டாம் !

    குறிக்கோள் இல்லை !

    போவ தெங்கே என்றும்

    அறியான் அவன் !

    சிறிதளவு

    என்னைப் போல, உன்னைப் போல   

    இல்லையா அவன் ?

     

    நாடில்லா மனிதா !

    நான் இப்போது நவில்வதைக் கேள் !

    நீ இழப்பதை அறியாய் !

    நாடில்லா மனிதா !  

    உன் ஆணைக்கடி பணியும்

    இவ்வையம் !

    குருடன் நீ !

    காண விழைவது மட்டும்

    கண்முன் தென்படும் !

    என்னைத் தெரியுதா உனக்கு ?

     

    நாடில்லா மனிதா ? நீ எதற்கும்

    கவலைப் படாதே !

    அவசரப் படாதே !

    உனது நேரத்தை எடுத்துக் கொள் !

    உதவ முன்வரும்

    மாற்றான் தோளில் ஏற்றி வை !

    நாடில்லா மனிதா !

    யாருக்கும்

    நாடில்லாத் திட்டம் வேண்டாய் !

    நாடில்லாப் பணியைப்

    புரியாய் !

     

    Share
  • வசந்தமாய் மாறும் !

           [ எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா ]

     

     

    ஆண்டவன் படைப்பிலே அனைத்துமே அற்புதம்

    ஆயினும் மனிதனோ அனைத்திலும் அதிசயம்

    வேண்டிய அனைத்தையும் விரைவினில் பெற்றிடும்

    வித்தைகள் அவனிடம் சொத்தென இருக்குதே !

     

    மனிதனைப் படைப்பினில் உயர்வெனக் கருதிட

    மனிதனின் செயல்களே காரணம் ஆயின

    புனிதனாய் மனிதனும் புவிதனில் இருக்கையில்

    மனிதனின் மாண்புகள் மாட்சிமை ஆகிடும் !

     

    தானமும் செய்தான் தவமும் செய்தான்

    ஈனமாம் காரியம் எண்ணிலாச் செய்தான்

    யானது என்னும் ஆணவக் குப்பை

    போனது போலத் தெரியவே இல்லை !

     

    குப்பைகள் குவிந்திடின் குணமெலாம் சிதறும்

    தப்பிதமாகவே செயல் எலாம் அமையும்

    எப்பவும் மனநிலை இறுகியே இருக்கும்

    எதை நினைத்தாலும் பதட்டமே பெருகும் !

     

    விருப்புகள் வெறுப்புகள் நிறையவே இருக்கும்

    வேதனை சோதனை நாளுமே குவியும்

    மனமதில் குப்பையாய் இவற்றினைச் சேர்த்தால்

    வாழ்கின்ற வாழ்வு வதங்கியே போகும் !

     

    வீட்டிலே குப்பைகளைச் சேர்த்துமே வைத்தால்

    வேண்டாத விளைவுகள் வந்துமே சேரும்

    நாற்றமது எடுக்கின்ற நரகமதாய் ஆகி

    நம்மகிழ்ச்சி ஆரோக்கியம் நாசமாய் போகும் !

     

    குப்பைகளைச் சேரவிடல் எப்பவுமே தப்பு

    குப்பைகளை குழிதோண்டி புதைத்துவிடல் வேண்டும்

    தப்பான எண்ணமதை எப்பவுமே நாளும்

    தலைமீது வைப்பதனை  நிறுத்திடுதல் நன்றே !

     

    மனமதிலே குப்பையாய் குவிந்துவிடும் அனைத்தும்

    மனமதனை மாய்த்துவிட வழிவகுக்கும் அன்றோ

    தினமே குப்பைகளை சேராது காத்தால்

    மனமென்னும் மாளிகை வசந்தமாய் மாறும் !

     

    Share
  • என் முதல் கனவு..!

     

     

    பெருவை பார்த்தசாரதி

    முதல் கனவு

     

     

     

     

     

     

     

    ஒருமுறைதான் உனைநான் நினைத்தேன் நீயோ..

    ……….ஓராயிரமுறை வந்தாயென் கனவில்!….நீயாரோ.!

    பருவமெய்திய நாள் முதல்கனவு கண்டபின்..

    ……….புரண்டு புரண்டு படுத்தாலும் நித்திரையில்லை.!

    ஒருநாள் விடாமலென் உறக்கத்தைக் கெடுத்தவன்..

    ……….ஊர்புகழும் அன்னவன் வாள்சுழற்றும் வீரன-வன்.!

    தருமின்ப மதிமயக்கமும் தழுவுமினிய சுகம்தனில்..

    ……….தழைந்துவந்த கனவிதுவேதான் என் முதல்கனவு.!

     

     

    கொல்லும் காதலெனும் பெருந்தீயை மூட்டிவிட்டு..

    ……….கண்ணைக்கட்டி காட்டில் விட்டகன்ற கட்டழகன்.!

    இல்லற சொர்க்கத்தை இயக்கிக் கொண்டிருக்கும்..

    ……….இன்ப அதிர்வலையில் திக்குமுக்காட வைத்தவன்.!

    கொல்லும் பகைகிழிக்கும் வீரமுடன் வேகமாகச்..

    ……….செல்லும் குதிரைஏறி வாளுடனெங்கு சென்றான்.!

    மெல்லமெல்ல நானுமெனை மறந்தேன் இதுதான்..

    ……….மென்மை நிலவொளியில் கண்டயென் முதல்கனவு.!

     

     

    பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடுமென்பார்..

    ……….படாதபாடு படுத்துமாம் பருவக் காதல்தொல்லை.!

    கட்டான ஆண்டகையென் கனவில் வந்த-தாலென்..

    ……….கட்டுடல் குலைகின்றது காதலெனும் ஏக்கத்தாலே.!

    மொட்டவிழ்ந்த மலராகி இதழுதிர்ந்த காம்புபோல..

    ……….மெலிந்து விட்டேன்!கண்டவர்கள் சொல்கிறார்கள்.!

    பட்டுமேனி என்னழகைப் பார்த்து…,கருப்புநிலா..

    ……….பழிப்பதுபோல் உணர்ந்ததுதான் என் முதல்கனவு.!

     

     

    ஒற்றை நிலாவொளி உலகுக்கே வெளிச்சம்தரும்..

    ……….உன்னால் இளவரசி என்மேனியில் அனல்பரவும்.!

    அற்றைநாள் நீவிடுத்த விழிக்கூரம்பு தைத்ததால்..

    ……….அங்கயற்கண்ணி நான் படுந்துன்பம் அறிவாயோ.!

    பிற்றைநாளிலும் பிதற்றுவேன்! கனவு கலையுமுன்..

    ……….பற்றியமனத்தைப் பதைக்க விட்டுச் சென்றாயென.!

    இற்றைநாள் நடக்கும் மன்மதப்போரில் வெல்லும்..

    ……….ஈண்டிய மறவனைக் கண்டதேயென் முதல்கனவு.!

    =============================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::25-11-17

    நன்றி:: கூகிள் இமேஜ்

     

    Share
  • கலித்தொகைப் பாடல்களில் கவிதைவளம் – 1

    -முனைவர் சு. செல்வகுமாரன்                                  

    முன்னுரை

    எட்டுத்தொகை நூல்களில் சிறப்புக்குரிய ஒன்றாக விளங்குவது கலித்தொகை.  கலித்தொகையின் selvapicமொத்தப்பாடல்கள்-150 ஆகும். இவற்றுள் முல்லைக் கலிப்பாடல்கள்-17 (சோழன்நல்லுருத்திரன்), மருதக்கலிப்பாடல்கள்-35 (மருதன் இளநாகன்), குறிஞ்சிக்கலிப்பாடல்கள்- 29 (கபிலர்), பாலைக்கலிப் பாடல்கள் – 35 (சேரமான் பெருங்கடுங்கோ), நெய்தற்கலிப்பாடல்கள் – 33 (நல்லந்துவன்) என்பதோடு நெய்தற்கலிப் பாடிய நல்லந்துவனாரே ஒரு கடவுள்வாழ்த்துப் பாடலையும் பாடி இதனைத் தொகுப்பித்துள்ளதாக அறியமுடிகிறது. இக்கட்டுரையானது, கலித்தொகையில் முல்லைக்கலிப் பாடல்கள் முல்லைநில மக்களான ஆயர் வாழ்வினை கருத்தியல் மற்றும் காட்சிப்படுத்தல் ரீதியாக எடுத்துரைப்பதன் மூலம் எப்படி அப்பாடல்களை புலவர் கவிதைவளம் மிக்க பாடல்களாக உருவெடுக்கச் செய்துள்ளார் என்பதை ஆராய்கின்றது.

    காலம்

    ஒரு இலக்கியத்தை வாசிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் அது உருவாக்கப்பட்ட காலமும் சூழலும் மிகவும் அடிப்படையானது. அந்த வகையில் சங்க இலக்கிய உருவாக்கத்தின் காலம் குறித்த பார்வை நமக்குத் தேவையாய் உள்ளது. சங்க இலக்கியத்தின் காலம் குறித்து ஆய்வுசெய்த பேராசிரியர் ச. வையாபுரிபிள்ளை, கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய மூன்று நூலினையும்  காலத்தால் பிற்பட்டதாக இருக்கலாம் என்று கருதுகின்றார். பேராசிரியர் கமில் சுவலபில் அவர்களும் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய மூன்று நூலினையும்  பழமையான சங்கப் பிரதிகளிலிருந்து நீக்கிவைக்க வேண்டும் என்கிறார். கருத்துநிலை, பாடலின் சொல் மற்றும் தொடர் அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பிரதிகள் பிற பிரதிகளிலிருந்து வேறுபடுவதாக அவர் கருதுகின்றார் என்பதாக வீ.அரசு அவர்கள் தன் கட்டுரையில் எடுத்தாளுகின்றார். மேலும் இவை குறித்துத் தனது கருத்தினை முன்வைக்கும் வீ. அரசு சங்கப் பிரதிகளின் மேல்எல்லை கி.மு. 550 எனில் கீழ் எல்லை கி.பி 400 என்று கொள்ளலாம். ஆனால் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றின் மேல்எல்லை கி.பி 5ஆம் நூற்றாண்டு எனில் கீழ்எல்லை கி.பி 9ஆம் நூற்றாண்டு வரை அமையலாம் என்பதாக தனது யூகத்தை முன்வைக்கின்றார். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் வெறியாட்டு, பலி, நடுகல் உள்ளிட்ட சடங்குகளின் அம்சங்களைக் கொண்டே அவர் இந்த முடிவுக்கு வருகின்றார். மேலும் சங்க இலக்கியத்தை எட்டுதொகை, பத்துப்பாட்டு என்ற நிலையில் வகைமைப்படுத்தும் அமைப்பு முறையினையே கட்டுடைப்பு செய்கின்ற பேராசிரியர் வீ. அரசு அவர்கள் அதனை,

    “தொகுதி ஒன்று – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து

    தொகுதி இரண்டு – பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை

    தொகுதி மூன்று – கலித்தொகை.

    தொகுதி நான்கு – பரிபாடல், திருமுருகாற்றுப்படை” 1

    என்ற நிலைகளில் வரிசைப்படுத்துகின்றார். இதற்கு அவர் வைக்கும் சான்றுகளில் ஒன்றினை இங்குக் குறிப்பிடுவது அவரது கருத்தினை நாம் ஏற்புடையதாக்கிக்கொள்ள பெரிதும் உதவியாய் அமைந்திடும். வெறியாடல் சடங்கானது முதல் தொகுதியில் 36 இடங்களிலும், இரண்டாம் தொகுதியில் 3 இடங்களிலும், நான்காம் தொகுதியில் ஓர் இடத்திலும் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். மூன்றாம் தொகுதியில் அதாவது கலித்தொகையில் இடம்பெறவில்லை என்பதாகவும் பதிவுசெய்கின்றார். இத்தன்மை கலித்தொகையின் காலம் பிற்காலமே என்பதனை ஓரளவு உறுதிசெய்து கொள்ள ஏதுவாகின்றது.

    திணை

    சங்க இலக்கியம் குறித்த ஆய்வுகளில் திணையும் அதன் உள்ளீடான முதல், கரு, உரிப்பொருட்கள் குறித்த இலக்கண நூற்களின் பாகுபாடும், அவைகளின் கருத்தியல் நிலையும் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றினைக் கருத்தில் கொள்ளாது, அல்லது உரிய காரணங்களின்றி முற்றிலும் மறுத்துச் சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வினைச் செய்ய இயலாது. நாம் எடுத்துக் கொண்டுள்ள கலித்தொகைப் பிரதியானது அன்பின் ஐந்திணையான முல்லை என்ற பாகுபாட்டில் இடம் பெறுவதாகிறது. இதற்குரிய முதற்பொருள் அதாவது நிலம் காடும் காடு சார்ந்த இடமாகவும், பெரும்பொழுது கார்காலமாகவும், சிறுபொழுது மாலை நேரமாகவும் சுட்டப்படுகிறது. கருப்பொருட்களான நீர் – காட்டாறு, மரம் – கொன்றை, குருந்தா, புதல், பூ – முல்லை, பிட, தளா, பறவை – காட்டுக்கோழி, விலங்கு –  மான், முயல், உணவு – வரகு, முதிரை, தொழில் – நிரை மேய்த்தல், பறை – ஏறுகோட்பறை, யாழ் (பண்) – சாதாரி, தெய்வம் – மாயோன் (திருமால்), தோன்றல் – ஆயன், ஆய்ச்சி, ஊர் – பாடி, சேரி என்பதாகவும், உரிப்பொருளாக – இருத்தலும் இருத்தல் நிமித்தத்தினையும் முல்லை திணைக்குரியனவாகத் தொல்காப்பியம் சுட்டுகின்றது. பிற இலக்கணநூல்கள் இவற்றோடு சிலவற்றை இணைத்தும் விரித்தும் கூறுவதனையும் காணலாம்.

    “கைக்கிளை, மற்றும் பெருந்திணைகள் தொல்காப்பியம், இலக்கண விளக்கம், முத்துவீரீயம், தொன்னூல் விளக்கம், சுவாமிநாதம் போன்ற இலக்கண நூல்களில் அகமாகவும், புறப்பொருள் வெண்பாமாலையுள் புறமாகவும், வீரசோழியத்துள் அகப்புறமாகவும் இடம்பெறுகின்றன.

         நம்பியகப்பொருள் மற்றும் மாறன் அகப்பொருள் ஆகிய இரு நூல்களிலும் கைக்கிளையும், பெருந்திணையும் அகத்திணையியலில் அகமாகவும், ஒழிபியலில் அகப்புறமாகவும் சுட்டப்படுகின்றன. களவியற், காரிகை கைக்கிளையை அகப்புறம் எனக் கூறுகின்றது.”2 என்பார்.

    செம்மொழித் தகுதி – இலக்கிய வளம்

    ஒரு மொழி செம்மொழித் தகுதியாக்கம் பெற்றிட அம்மொழியின் தொன்மையோடு அதன் இலக்கிய வளமும் முக்கியப் பங்களிப்பு செய்கின்றது. அந்த வகையில் தமிழ் செம்மொழித் தகுதிபெற்றிட சங்க இலக்கியங்கள் முதன்மைக் காரணியாய் விளங்கின என்றால் மிகையல்ல. அவ் இலக்கியங்களுக்கு அத்தகைய சிறப்பு என்ன என ஆராய்கின்றபோது அறிஞர்கள் ஓர் இலக்கியம் செழுமை அல்லது முழுமை பெற்றிட அதற்குத் தேவையான சில பொதுமைக் கூறுகளை அவ்இலக்கியம் கொண்டிருக்க வேண்டும் என வரையறை செய்கின்றனர். இதனைப் பாவணர் அவர்கள் ‘தொன்மை, முதன்மை, என்மை, ஒன்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை’ எனப் பதினாறு நிலைகளில் வகைமைப்படுத்திப் பார்க்கின்றார். மணவை முஸ்தபாவின் கருத்தினைத் தனது கட்டுரையில் எடுத்தாளும் பேரா. மு. பழனியப்பன் அவர்கள் அவற்றை தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு – பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித்தாக்கமில்லாத் தன்மை, இலக்கிய வளம், உயர்சிந்தனை, கலை இலக்கியத்தன்மை, மொழிக் கோட்பாடு’ என வரையறை செய்கின்றார்.

    உலகில் உயர் தனிச் செம்மொழித் தகுதிபெற்ற அரபி, சீனம், பிரெஞ்சு, ஸ்பானிஸ், சமஸ்கிருதம், ஜெர்மன், லத்தீன், பாரசீகம், ஹீப்ரு, கிரேக்கம் ஆகிய பத்து மொழிகளின் இலக்கிய வளங்களோடு தமிழின் தொன்மை இலக்கியங்களை ஒப்பிட்டு அணுகிய இரா. நடராசன் அவர்கள் தமிழ் மொழியைப்பற்றிக் குறிப்பிடுகிறபோது “தமிழ் உயர்தனிச் செம்மொழி மட்டுமல்ல. அது தொன்மை மொழிகளின் முடிசூடா ராணி. செம்மொழிகளிலேயே அதுதனித்த பல சிறப்புகள் கொண்டது. மற்ற எல்லா செம்மொழிகளுக்கும் முன்னதாக இலக்கண நூல்களைக் கண்டது தமிழ்.

    விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம், கணிதம் என அனைத்துத் துறையும் செழித்த ஒரேமொழி” 3 என்று அதன் சிறப்பை எடுத்துரைக்கின்றார்.

    செம்மொழி பற்றிப்பேசும் டாக்டர். மு.வ தனது மொழிவரலாற்று நூலில் ஓரிடத்தில் 1952லேயே “இன்று உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக மட்டும் கருதப்படும் தமிழ்மொழி, உலகப் பெருமொழிகளுள் ஒன்றாகக் கருதப்படும் நிலையையும் பெற்றிருக்கும்” 4 என்று குறிப்பிட்டிருப்பது அவர்களின் மொழி குறித்த ஆழ்ந்த பார்வையினையும், தமிழ்மொழியின் தன்னிகரற்ற சிறப்பினையும் உணர்த்திநிற்கின்றன. இன்னும், தமிழைச் செம்மொழியாக்குவதில் ஆரம்பம் முதலே குரல்கொடுத்த வி.கே. சூரிய நாராயண சாஸ்திரி, பூரணலிங்கம் பிள்ளை ஆகியோரின் கருத்தும், பார்வையும் கூட இங்கு முதன்மைக்குரிய ஒன்றாக எண்ணிப்பார்க்க வேண்டியதாகின்றது.

    கட்டுரையின் மையமான இலக்கியவளம் என்பது இங்குக் கவிதைக்குரிய வளமாகவே இனங்காணப்படுகின்றது. கவிதையின்  உறுப்புகள் பற்றிக் குறிப்பிடும் திறனாய்வாளர்கள் கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் என்று நான்கினை மிகவும் அவசியமாக கருதுகின்றனர். அப்படியாயின் இவைகள் இல்லாது ஒரு கவிதை முழுமை பெற்றதாகவே வளம் மிக்கதாகவே அமைய இயலாது என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. எனவே இலக்கிய வளம் என்பதனை இலக்கியத்தின் உட்கூறுகளில் ஒன்றாக மட்டுமே நம்மால் பொருத்திப்பார்க்க முடியாது. கவிதை உருவாக்கத்தின் மையமாய்த் திகழும் புனைவு மொழியும், அந்த மொழியை உருவாக்குகின்ற, கட்டமைக்கின்ற, மொழியின் கூறுகளை அடுக்கிச் சொல்லுகின்ற, ஒரு படைப்பை முழுமைப்படுத்துகின்ற அல்லது படைப்பை நீட்டிச் செல்லுகின்ற ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு படைப்பாளியின் சிந்தனைவளம், கற்பனைவளம், கருத்தியல் வளம், அழகியல் வளம் என்பன நிறைந்து கிடக்கின்றன. அவை இன்றிப் படைப்பு செழுமையான படைப்பாக, வளம் மிக்க படைப்பாக வெளிப்பட முடியாது என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

    கவிதையின் வளமையை நாம் தனிமைப்படுத்திப்பார்ப்பது கடினம். சுருங்கச் சொன்னால் கவிதை மொழியின் இயங்கியலாய் அதன் உள்ளீடாய் செயல்படுகின்ற கற்பனை, கருத்தியல், சிந்தனை, அழகியல் கூறுகள் படைப்பாளியின் அனுபவத் திரட்சியிலிருந்து வெளிப்படுகின்ற போதே ஒரு படைப்பானது உருவாக்கம் பெறுகின்றது. இத்தருணத்திலேயே படைப்பாளியிடமிருந்து உவமைகளும், உருவகங்களும், தொன்மங்களும், குறியீடுகளும், படிமக் காட்சிப்படுத்தல்களும், கதைசொல்லல் நிகழ்வுகளும் அவனால் உருவாக்கப்படுகின்ற படைப்பிற்குள் ஊடுருவிச் செல்கின்றன. ஒரு வகையில் சொல்வதானால் இந்த ஊடுருவலையும் படைப்பையும், படைப்பாளியையும் நம்மால் பிரித்தறிவது மிகவும் இயலாதது என்பதே சரியாக இருக்கும். அதுபோலவே ஒரு கவிதையை அதன் கட்டமைப்பு, கருத்தியல், அழகியல், நோக்கம், மொழி, ஒலி அமைப்பு ஆகிய ஏதேனும் ஓர் அளவுகோலை வைத்து வளம்மிக்க படைப்பு என்றோ, வளம்குன்றிய படைப்பு என்றோ வரையறுத்துவிடவும் முடியாது.

    படைப்பு குறித்து விவாதிக்கும் ஜானதன் கல்லர் “இலக்கியத்தின் வள ஆதாரங்கள் மற்றும் உற்பத்தி நுணுக்கங்களைப் பற்றிய விவரணை என்ற விதத்தில் இலக்கியவியல் என்பது சொல்லணி வகைகளின் (Rhetorical figures) விவரணையாகக் குறுக்கப்படத்தக்கதல்ல. ஆனால் இலக்கியமொழி சார்ந்த எல்லா வகையான செயல்பாடுகளுக்குமான வளஆதாரங்களையும் ஆய்வு செய்யும் விரிவுபடுத்தப்பட்ட அணியிலக்கணத்தின் ஒருபகுதியில் பார்க்கப்பட முடியும்”5 என்னும் கருத்து ஏற்புடையதாகின்றது. மேலும் “இலக்கியம் வளர்ந்தெழுவதற்கு நிலைக்களனாக உதவும் பொருட்கள், மக்களும் இயற்கையுமே. இவ்விரு பகுதிகளையும் பிரித்து, இயற்கையை விடுத்து மக்களைப் பற்றியும் அல்லது மக்களை விடுத்து இயற்கையைப் பற்றியும் புலவர் பாடுவாரேல், அவ்விலக்கியம் குறைவுள்ள இலக்கியமாகவே விளங்கும். (There are two great subjects of poetry, the natural world and human nature. It is a terrible business for poetry when it is wholly employed on men or wholly employed on nature – Stop – ford Brooke) தமிழ்ப் புலவரோ, தம் புலமைத் திறனைக் காட்டுவதற்கு, முதற் பொருளாக மக்களையும், துணைப்பொருளாக இயற்கையையும் எடுத்துக் கொண்டனர். இயற்கையை தமிழ்ப்புலவர் கையாண்ட முறையில், வேறு எம்மொழிப் புலவரும் கையாண்டிலர்.” 6 என்னும் தனிநாயக அடிகளாரின் கருத்தும் இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும்.

    கலித்தொகையின் சிறப்பு – கவிதை வளம்

    கலித்தொகையின் அமைப்புமுறை பற்றிக் குறிப்பிடும் பழம் பாடல் ஒன்று ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ எனப் பதிவுசெய்திருப்பதன் மூலம் கலித்தொகையினைப் பிற நூல்களிலிருந்து தனித்த சிறப்புடையதாக அடையாளப்படுத்திக் காட்டுகின்றது. அதுமட்டுமல்லாது எட்டுத்தொகை நூல்களில் யாப்பு அமைப்பினால் பெயர்பெற்ற இரண்டு நூல்களில் ஒன்றாகவும் கலித்தொகை விளங்குகின்றது. தொல்காப்பியர் அகப்பொருளில் அமைந்த பாடல்களைப் பாடுவதற்குரிய இரண்டு யாப்புகளில் ஒன்றாக கலியாப்பினை அடையாளம் காட்டுகின்றார். “கலியே பரிபாட்டு ஆயிருபாவினும் உரியதாகும் என்மனார் புலவர்” 7 கலித்தொகை ஏறுதழுவுதல் என்ற புறம்சார்ந்த வீரத்தை மையப்படுத்திப் பேசியிருந்தாலும் அதற்கு அடிப்படையாக அகம் விளங்குவதும் கலித்தொகையின் சிறப்புகளில் ஒன்றாக இனங்காணத்தக்கது. கலியாப்பு பலவாறாய் விளங்குகின்றது. அவற்றுள் ஒத்தாழிசை எனும் யாப்பு வகையில் பாடப்பெற்றவை கலித்தொகைப் பாடல்கள்.

    சங்க அகப்பாடல்களில் கைக்கிளையில் அமைந்த பாடல்கள் கலித்தொகையில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.(கலி- 56,57,58,100) அவ்வாறே பெருந்திணைப்பாடல்களும் கலித்தொகையில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. (கலி-138-147) தொல்காப்பிய அகத்திணையியல் அகத்திணைகள் ஏழு எனச்சுட்டும்; “கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக்கிளந்த எழுதிணை என்ப” 8 இவ்விலக்கணத்துக்குரிய இலக்கியம் கலித்தொகை ஒன்றே ஆகும். மேலும் பிற முல்லைப் பாடல்களில் இடம்பெற்றிராத ஏறு தழுவுதலைக் காட்சிப்படுத்தலும் கலித்தொகையின் முல்லைக்கலிக்குரிய சிறப்பாகக் கொள்ளத்தக்கன. முல்லைக்கலிப் பாடல்கள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோலப் பிற இலக்கியங்களுக்கு இல்லாத பல தனித்த சிறப்புகளை உடையன. இதனைப் பாடுபொருள் – கருத்தியல் அடிப்படையில் வகைமைப்படுத்திடும் பேராசிரியர் ராஜ்கௌதமன் “ஆயர்கள் ஏறுதழுவுதலும், குரவை அயர்தலும் (பா – 101,102,103,104,105,106), ஏறு தழுவியவழி களவு, களவு வெளிப்பாடு மற்றும் அறத்தொடு நிற்றலும் (107,111,114,115), கைக்கிளை-பெருந்திணை சார்ந்த அகப்புறத்தலைவன் தலைவியரான ஆயமகனும் ஆயத்தியும் பற்றிய இயல்பில்லா காமியமும் (108,110,112,113,116,117) என்பதாக மூன்று நிலைகளில் பிரித்து நோக்குகின்றார்” 9

    முல்லைக்கலியைப் பொறுத்தமட்டில் அதில் இடம்பெறும் பாத்திரங்கள் (Character) ஆயர்குடியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களில் எருமைகளை வளர்ப்பவர்கள் கோட்டினத்தார், பசுவை வளர்ப்பவர்கள் கோவினத்தார், ஆடுகளை வளர்ப்பவர்கள் ஆட்டினத்தார் என்றும் சுட்டப்படுவதை அறியமுடிகிறது. முல்லைக்கலிப் பாடல் 101இல் ஆயர்கள் ஏறுதழுவுவதைத் தலைவிக்கு வெவ்வேறு நிலைகளில்  தோழி காட்சிப்படுத்துகின்றாள். இப் பாடலின் முற்பகுதி முல்லைநில மக்களின் நிலம்குறித்த ஒரு புறச்சூழலை நம் கண்முன் கொண்டு நிறுத்துகின்றது.

       “தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற்கு அரும்பு ஈன்று,
    முளி முதல் பொதுளிய, முட்புறப் பிடவமும்
    குளி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று…10

    கார்காலத்தின் தொடக்கத்தில் பெய்த முதல்மழையில் நிலம் குளிர்ச்சியடைந்து செடிகளிடத்தே நிரம்ப அரும்புகள் தோன்றியுள்ளன. பிடவமலர்ச் செடியானது காற்றில் அசைந்தாடுகின்றது. அதனை கள்ளுண்டான் நிலைபோல அசைந்தாடுவதாகவும், அதன் மொட்டானது வளைந்த துடுப்பு போன்றது என்றும் புலவர் காட்சிப்படுத்துகின்றார். இந்த படிமச் சித்தரிப்பு சார்ந்த காட்சிப்படுத்தல் கவிதையை இங்கு வளமையுடையதாக்குகின்றது. இவற்றின் அழகியல்தனம் வாசகனைக் குறிப்பிட்ட படைப்பை விரும்பி வாசிக்க ஆர்வப்படுத்துகின்றது. அத்தோடு வாசகனின் மனத்தில் தான் கண்டுணர்ந்த அனுபவப் பொருள்களின் மூலம் எளிதில் பதிவுபெற்றுவிடவும் இந்த அணிவகைச் செயல்பாடுகள் காரணியாக அமைகின்றன. இதனைக் கவிதை வளமையின் ஒரு நிலையாக நாம் கண்டுணர முடிகின்றது.

    தொடர்ந்து முல்லைக்கலிப்பாடலானது ஏறுதழுவுதலை எடுத்துரைக்கின்ற போது ஏறுதழுவுதலின் கடுமைசார்ந்த நிகழ்வுகள், புராணக்கூறுகளின் மூலம் காட்சிப்படுத்தப்படுவதும் முதன்மையான பதிவுகளாக விளங்குகின்றன.

         “அம்சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
          நெஞ்சம் பிளந்து இட்டு நேரா நடுவண், தன்
          வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்.” 11
        “படர் அணி அந்தி, பசுங் கட் கடவுள்

          இடரிய ஏற்று, எருமை நெஞ்சு இடத்து இட்டு
          குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்” 12
        “ஆர்இருள் என்னான் அருங் கங்குல் வந்து, தன்

          தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்
          தோளின் திருகுவான் போன்ம்;” 13         

    அதாவது, முல்லை நிலத்து மலர்களைத் தொடுத்து கண்ணியாகச் சூடியிருந்த ஆயர் இளைஞர்கள், தாம் விரும்பிய பெண்களை அடைதல் பொருட்டும், தமது வீரத்தை வெளிப்படுத்துகின்ற விதத்திலும் தொழுவினுள் நுழைந்து இறைவனின் குந்தாலிப் படைபோன்று கூர்மையுடையதாய் சீவப்பட்ட கொம்புகளை உடைய ஏறுகளை அஞ்சாது தழுவுகின்றனர். அவ்வாறு ஏறுதழுவுகின்ற இளைஞர்களை எருதுகள் தம் கூரிய கொம்புகளால் குத்தி அவர்களின் குடலைச் சரியச் செய்கின்றன. அத்தோற்றமானது, அழகிய திரௌபதியின் கூந்தலிலே கை நீட்டிய துச்சாதனின் நெஞ்சைப் பிளந்து, பகைவர் நடுவே தன் வஞ்சினத்தை நிறைவேற்றிய வீமனைப் போன்றிருந்தது என்றும், ஊழி முடிவிலே, பசிய நிறத்தைத்தன் பாகத்தே உடையக் கடவுள், உயிரினங்களை அழிக்கும் எருமைக்கடா மீது ஏறிவரும் கூற்றுவனுடைய நெஞ்சைப்பிளந்து, குடரைக் காளிக்கு இட்டு அதன் வயிற்றை நிரப்புவது போன்றிருந்தது என்றும், கரிய இருள் என்றும் கருதானாய், நடுஇரவிலே வந்து, தன் தந்தையைக் கொன்றவனைத் தன் ஆற்றலின் வலிமையினால் தலையைத் திருகிய அசுவத்தாமனைப் போன்றிருந்தது என்றும் தோழியின் வாயிலாக புலவர் தலைவிக்கு காட்சிப்படுத்துகின்றார்.

         இங்கு பலம் பொருந்திய எருதுகளையும், பசுக்களையும் அடக்கி ஆளத்தெரிந்த வலிதிறன் மிக்க இளைஞன் ஒருவனையேத் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கொண்டவளாய் விளங்கிடும் தலைவியின் எண்ணம் பிரதிபலிக்கப் படுகின்றது. மட்டுமல்லாது கடுமை நிறைந்த அந்த ஏறுதழுவல் காட்சியினைக் கண்ட தலைவியானவள் தான் விரும்பிய தலைவன், தன்னுடன் களவு மேற்கொண்டிருந்த தலைவன் ஒரு வேளை தனக்கு கிடைக்காமல் போய் விடுவானோ என்று கலக்கமுறுகின்றாள். அப்போது அங்கே நிகழக்கூடிய நல்ல பல நிமித்தங்களை எடுத்துக் கூறி தோழி தலைவியினை ஆற்றுப்படுத்துகின்ற விதம் முல்லைநிலத்துக்கே உரிய ஆற்றி இருத்தல் என்னும் கற்பு ஒழுக்கத்தை நினைவுபடுத்தும் விதமாய் உள்ளன.

         இங்கு மேற்காணும் பகுதிகளில் செம்மொழியின் கூறுகளாகக் கருதப்படும் தொன்மை, பண்பாட்டுக்கலை அறிவு – பட்டறிவின் வெளிப்பாடு, தனித்தன்மை, பொதுமைப் பண்பு போன்ற பல கூறுகளும் இடம்பெற்றிருப்பதை நாம் கண்டுணர முடிகிறது. இவை கவிதையின் தனித்த கூறுகளாக விளங்குபவை என்றாலும், அவை கவிதையைப் பொதுமை நிலையில் வளமைப்படுத்துகின்ற பன்முகப்பட்ட அடிப்படைக் கூறுகளாக விளங்குவன என்பதும் கவனத்திற்குரியது. இவை படைப்பாளியின் காலம், இடம், அனுபவம் என்பதோடு படைப்பு குறித்த புரிதலைப் பொறுத்து சற்றே மாறுபடுவதை நாம் காணலாம்.

    [தொடரும்]

     

     

     

     

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (83)

    நிர்மலா ராகவன்

    ஊர்வம்பு

    நலம்-1

    முன்பெல்லாம், `கிசு கிசு’ என்று திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகளைப்பற்றிய ரகசியங்களை வெளியிட்டு வந்தது ஒரு பத்திரிகை. சம்பந்தப்பட்டவரே அதைப் படிக்கும்போதுதான் அந்த விஷயத்தை அறிந்திருப்பார். அவ்வளவு உண்மை இருக்கும் அச்செய்தியில்!

    இன்றைய கலாசாரத்தின்படி, வம்பு பேசுவது செய்தி. கூறப்படுவதில் நல்லது எதுவும் இருக்காது என்பது வேறு விஷயம். பிறரைப்பற்றி நல்லது இருந்தால் அதில் என்ன சுவாரசியம்! அதனால்தான் இப்போது தொலைகாட்சியும் கணினியும்கூட அப்பாணியைக் கைப்பிடிக்கின்றன.

    எந்த நடிகை மூக்கில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாள், இந்த நடிகைக்கும் அந்த நடிகருக்கும் இருக்கும் தொடர்பு காதலா, இல்லை, வெறும் நட்பு மட்டும்தானா என்றெல்லாம் ஆராயும் நேரத்தில் உபயோகமாக எதையாவது செய்யலாமே என்று நிறைய பேர் நினைப்பதில்லை.

    ஏன் வம்பு?

    `வம்பு’ என்றாலே எதிர்மறையான எண்ணம்தான் வருகிறது. தன் குறைகளைப்பற்றிப் பிறர் எண்ணிவிடவோ, பேசவோ இடங்கொடுக்க விரும்பாததாலோ பலரும் வம்பு பேசுகிறார்கள்.

    இவைகளைப் பார்ப்பவர்களும் கேட்பவர்களும் பிரபலமானவர்களின் பலவீனங்களை அறிவதால் நாம் அவர்களைவிட உயர்ந்துவிட்டோம் என்று நினைக்கிறார்களா, இல்லை, பொழுதுபோகாமல் இருக்க, எப்படியோ நேரத்தைக் கடத்தினால் சரி என்ற எண்ணமா?

    வம்பு பேசுவது பொய்யுரைப்பதற்குச் சமானம் (பழமொழி).

    சிற்றூர்களில் வம்படிப்பது பிரதான பொழுதுபோக்கு.

    செய்வதற்கு நிறைய காரியங்கள் இல்லாத சலிப்புடன், ஊரிலிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து, அதை ஒன்றுக்குப் பத்தாக பரப்புவார்கள். தம்மைப்பற்றி நினைக்கவும் விரும்பாது, பிறரது வாழ்வு எப்படி அமைகிறது என்று ஆராய்வதில் இவர்களுக்கு எல்லை கடந்த ஆர்வம்.

    பெரிய நகரத்திற்குக் குடிபெயர்ந்தாலும், பழைய பழக்கம் மாறுவதில்லை.

    கதை

    சக ஆசிரியையான ராணி பென்ஸ் காரை ஓட்டிவந்து, தினமும் கெட்டி ஜரிகை போட்ட பட்டுப்புடவைகளை உடுத்து வருவதைப் பார்த்து மிஸஸ் யாப்பிற்கு ஒரே வயிற்றெரிச்சல். அவளுக்கு எல்லாருடனும் போட்டி.

    ஒரு முறை, “ராணியின் கணவருக்கு எங்கு வேலை?” என்று என்னிடம் ரகசியக் குரலில் விசாரித்தாள்.

    அலட்சியமாக, “நீ அவளிடமே கேட்பதற்கென்ன!” என்றேன். என்னைப்பற்றியும் நாளை வம்பு பேசுவாள்! அதற்கு நானே இடங்கொடுக்கலாமா!

    என் தலை ,மறைந்ததும், `பிறருடன் ஒத்துப்போகாத ஜன்மம்!’ என்று என்னைப்பற்றி யாரிடமாவது புலம்பி இருப்பாள்.

    ஜாவியா இன்னொரு `வம்பி’. “குள்ளமாக இருக்கிறாள்! இவ்வளவு பெரிய ஜரிகை போட்ட புடவைகள் சகிக்கவில்லை! இதுகூடத் தெரியாதா!” என்று ராணியை விமரிசித்தாள் என்னிடம்.

    நான் அவளை ஆமோதிக்காததால், பொதுவாகவே `நட்புடன் பழகத் தெரியாதவ’ளாகிப் போனேன்.

    வம்பு பிறர் வாழ்வை எப்படிப் பாதிக்கும் என்பதில் இவர்களைப் போன்றவர்களுக்கு அக்கறை இல்லை. இப்படிப்பட்டவர்கள் எல்லாவற்றிலும், எவரிடத்திலும் குற்றம் காண்பவர்கள். பிறர் மகிழ்ச்சியாகவோ, தம்மைவிடச் சிறப்பாகவோ இருப்பதைக் காணப் பொறாதவர்கள். ஒருவரது முகத்திற்கு நேரே கூற தைரியம் இல்லாததை பிறரிடம் விவாதித்து நிறைவடைகிறவர்கள்.

    சில சமயம், தாம் சந்தித்தே இராதவரைப்பற்றிக்கூட அலசுவார்கள்.

    கதை

    ஆசிரியர்களின் பொது அறையில், மூன்று பேர் எதையோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். நான் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தேன்.

    என்னைப் பலமுறை அழைத்து என் கவனத்தைக் கவர்ந்து, “நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்க, “எதைப்பற்றி?” என்று புரியாமல் கேட்டேன்.

    “நாங்கள் இப்போது பேசிக்கொண்டிருந்ததைப்பற்றி!”

    “என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்?”

    படிக்கும்போது என் கவனம் எதிலும் செல்லாது, காது தற்காலிகமாக செவிடாகிவிடும், இதனாலேயே பள்ளி நாட்களில் பல முறை திட்டு வாங்கியிருக்கிறேன் என்று தெரிந்து ஆச்சரியப்பட்டார்கள்.

    இந்தியாவிலும், வெளிநாட்டிலும் குருவாகப் போற்றப்படும் ஒருவர் உண்மையிலேயே உயர்ந்தவர்தானா என்று ஆராய்ந்து, அவர்கள் எதிர்மறையான முடிவுக்கு வந்திருந்தார்கள். அவரைப்பற்றி அவர்களுக்குக் கேள்விஞானம் மட்டுமே.

    “எனக்குத் தெரியாத விஷயத்தில் நான் எப்படி கருத்து சொல்வது?” என்று மறுத்துவிட்டேன்.

    சராசரி மனிதர்கள் நிகழ்வுகளை விவாதிப்பர் எனில், எதிரில் இல்லாதவரைப்பற்றி அவதூறாகப் பேசுகிறவர் எதில் சேர்த்தி?

    கதை

    `கேட்பது எதையும் நம்பாதே, காண்பதில் பாதியை நம்பாதே!’

    எங்கள் பகுதியில் வசித்துவரும் முதிய பெண்மணியான லீ என்னிடம் கேட்டார், “உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் உங்கள் தங்கையாமே! சொல்லிக்கொள்கிறார்கள்!”

    பக்கத்து வீட்டுக்காரி இந்தியனே அல்ல. ஆங்கிலமும் சீனக் கலப்பும் கொண்டவள். கவுன்தான் அணிவாள்.

    நான் மறுத்ததும், விடாப்பிடியாக, “அவளுடைய கணவர் உங்கள் மாப்பிள்ளையின் தம்பியாம்!” என்று தொடர்ந்தாள். அதுவும் தவறு.

    அவர்களுக்கெல்லாம் பொழுது போகவில்லை என்பதால், என் மண்டையை உருட்டுகிறார்கள். அவர்கள் பேசும் சீன மொழி எனக்குப் புரியாது என்பதாலும் இருக்கலாம்.

    `கேள்விப்பட்டேன்,’ `சொன்னார்கள்,’ என்றெல்லாம் ஆரம்பிக்கும் செய்தியில் அனேகமாக உண்மையின் கலப்பு இருக்காது.

    தடுக்க முடியாது, தொத்து வியாதி

    யாருக்கும் உபயோகமற்ற வம்பைத் தடுக்கும் வழி தன்னைப்பற்றி தாறுமாறாகப் பேசியவரை நேருக்கு நேர் சந்தித்து, அவரிடம் நியாயம் கேட்பதுதான் என்கிறார்கள் சிலர். அப்போது வம்பர்கள் சற்றுத் தடுமாறலாம். ஆனாலும், குணம் மாறவா போகிறது! ஆகவே, அதை அலட்சியம் செய்வதுதான் சிறந்த வழி என்று தோன்றுகிறது.

    எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பார்கள் இவர்கள். நம்ப முடியாது. அவர்களுடன் நெருங்கிப் பழக நேர்ந்தால், நம்மையும் அறியாது, இந்த வியாதி தொற்றிக்கொள்ளும். யாரோ, எதுவோ செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான்.

    வம்பின் உபயோகம்

    புனைக் கதைகளுக்கு வம்பு இன்றியமையாதது.

    ஒருவரைப் பார்த்து, `இப்படித்தான் இருக்குமோ?’ என்று அவரைப்பற்றி நம் எண்ணங்களைச் சுழலவிட்டால் நல்ல கதைகள் கிடைக்கும். அவரது பெயரை மாற்றி, எதிர்காலத்தையும் கணித்து நாம் அளப்பதில் உண்மை இருக்காது. அதனால் அவர் நம்மேல் ஆத்திரப்பட முடியாது.

    பத்திரிகைகளில் ரகசியச் செய்திகளைத் திரட்டி எழுதுபவருக்கு இது எளிதில் சம்பாதிக்கும் வழி.

    முன்பு ஒரு `மஞ்சள்’ பத்திரிகையில் இதே தொழிலாக, `கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு,’ எந்த ஊரில் யார், யாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து வெளியிடுவார்களாம்.

    அப்படி என் தாத்தாவின் கிராமத்தில் ஒருவரைப்பற்றி அவதூறாகச் செய்தி வர, அவமானம் தாங்காமல் அந்த மனிதர் தற்கொலை செய்துகொண்டாராம்.

    இந்த நிகழ்வை என் தாய் அடிக்கடி தெரிவித்ததால், இன்னொருவரைப்பற்றித் தவறாகப் பேசுவது தீய குணம் என்று என் மனதில் படிந்துவிட்டது. உண்மையாகவே இருந்தாலும், உரக்கச் சொல்லக்கூடாதவைகளைப் பரப்புவானேன்!

    கதை

    நாகலட்சுமிக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்கள். மணமகனோ, மனைவியை இழந்தவர். ஒரு குழந்தையின் தந்தை. இருவருக்கும் பெரிய வயது வித்தியாசம்.

    எல்லாப் பெண்களையும் ஏதாவது ஒரு ஆணுடன் தகாத முறையில் சம்பந்தப்படுத்திப் பேசுவதிலேயே ஓய்ந்த பொழுதைக் கழித்தாள் நாகலட்சுமி.

    இதனால் பேசப்பட்ட பெண்களுக்கு மட்டுமின்றி, அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மன வேதனை. தாம்பத்தியங்களில் பிளவு உண்டாயின. ஒரு பெண் தற்கொலை முயற்சியில் இறங்கினாள்.

    `அறியாப் பருவத்தில் உடலுறவு ஏற்பட்டதால், கற்பழிப்புக்கு ஆளானதுபோல் நாகலட்சுமி மனதளவில் பாதிக்கப்பட்டுவிட்டாள்,’ என்கிறார் ஓர் உளவியல் மருத்துவர். (எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி பாதிக்கப்படுவதில்லை).

    அந்திம காலத்தின் இருபது வருடங்களைப் ஒரு வார்த்தைகூட பேச முடியாமல், படுக்கையிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது நாகலட்சுமிக்கு.

    `இவளுக்கு ஏன் இப்படி ஒரு நிலை!’ என்று மிகச் சில உறவினர்கள் பரிதாபப்பட்டார்கள்.

    பாதிக்கப்பட்டவர்கள் ஒரே வார்த்தையைத்தான் சொன்னார்கள்: “பேச்சு?”

    ஒருவர் தாழ்ந்திருக்கும்போது உதவி செய்யும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லாது, அவர்களது வீழ்ச்சியிலேயே ஆனந்தம் காணலாமா?

    இதற்கு நேர் எதிராக இருப்பவர்களும் உண்டு. பிறரது நற்பண்புகளையும் செயல்களையும் பாராட்டுகிறவர்கள் பொறாமையை வென்றவர்கள். இவர்கள் பிறருடன் நல்ல கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடுபவர்கள்.

    நீங்கள் எப்படி?

    தொடருவோம்

    Share
  • அகநானூற்றில் முருக வழிபாட்டுப் பதிவுகள்

    -பீ.பெரியசாமி

    முன்னுரை

    சங்ககாலம் முதல் இன்றுவரை முருக வழிபாடு என்பது தமிழர் பண்பாட்டில் கலந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. இதனை, “மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும், முல்லை, குறிஞ்சி மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே“ (தொல்.அக.5) எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். இதன்வழி முருகனை மலையும் மலையைச் சார்ந்த நிலமுமாகிய குறிஞ்சி நிலக்கடவுளாக அக்கால மக்கள் வழிபட்டனர் என்பது காணக்கிடக்கிறது. இக்குறிஞ்சி நிலக்கடவுளின் வழிபாட்டுப் பதிவுகள் எங்கெல்லாம் எவ்வாறெல்லாம் அகநானூற்றில் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரை ஆராயவுள்ளது.

    வெறியாட்டு நடத்துதல்

    தொல்காப்பியம் களவியலில் வெறியாட்டு குறித்து கூறியுள்ளது. இதற்கென ஒரு துறையும் ஒதுக்கியுள்ளார் தொல்காப்பியர். முருகனுக்கு உரித்தான காந்தள் பூவினைச் சூடி ஆடுவது அது.

    ”வெறிஅறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
    வெறியாட்டு அயர்ந்த காந்தளும்”
    (தொல். கள)

    அகநானூற்றில்,

    ”சூர்உறை வெற்பன் மார்புறத் தணிதல்
    அறிதனள் அல்லல் அன்னை வார்கொல்
    …………………………………….. ………………. ……………………
    முருகன் ஆர் அணங்கு என்றலின்” 
    (அகம்.98)

    எனும் பாடலில், எனக்கு நேர்ந்த துன்பமானது தலைவனின் மார்பை அடைதல் அல்லாது விலகுவதில்லை. இதையறியாமல் அன்னையானவள் வெறியாட்டு நடத்த முனைகிறாள். வார்கோலினை வளைக்குமாறு கூறி என் வளை நெகிழ்தலை அன்னையானவள் அறிந்துகொண்டாள். இது என்னவென்று அறியாது குறிசொல்லும் முதுபெண்டிரிடம் கேட்டாள். அவர்கள் கையில் இருக்கும் பிரம்பால் என்னைத் தட்டிப் பார்த்து, ”முருகன் பிடித்து ஆட்டுகிறான்” என்று கூறினர். இதனை மனத்தில் கொண்டே தாய் வெறியாட்டுக்கு ஆயத்தம் செய்வதாக தலைவி கூறுகிறாள். மேலும்,

    ”அறியா வேலன் தரீஇ, அன்னை
    வெறிஅயர் வியன்களம் பொலிய ஏத்தி
    மறிஉயிர் வழங்கா அளவை”(அகம்.242) எனும் பாடலில், “பல பிரப்பரிசிகளைப் பலியாக வைத்தும், உண்மையறியாத வேலனைக் கொண்டுவந்து வெறியயரும் பெரிய களத்தினைப் பொலியுறுமாறு போற்றித் துதித்தும், ஆட்டுக்குட்டியின் உயிரைப் பலியிட்டும் வெறியாட்டு செய்வதற்கும் முனைந்தாள் அன்னை“ என்பதில் வெறியாட்டு நிகழும்போது முருகனுக்குப் பலியிடுதல் என்பது அக்காலப் பண்பாட்டு மரபில் இருந்துள்ளமையை அறிய முடிகிறது. இது காலப்போக்கில் மாறிவிட்டது. மேலும், வெறியாட்டுக் களத்தினைக் குறித்து, ”வேலன் வெறிஅயர் வியன்களம்“ (அகம்.182) எனும் பாடல்வரி கூறுகிறது. இதன்வழி வெறியாட்டு நிகழ்த்துவதற்கெனத் தனியிடம் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது பெறப்பட்டது.

    பலியிடும் மரபு

    சங்ககாலம் முதற்கொண்டே நம் தமிழினத்தில் பலியிடுதல் எனும் சடங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அகநானூற்றுப் பாடல்களிலும் காணமுடிகிறது. அவற்றுள்,

    ”படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
    நெடுவேள் பேணத் தணிகுவள் இவள்என
    ……………………….. …………….. …………………….
    முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்”
    (அகம்.22)

    எனும் பாடலில், வணங்காதவரைத் தேய்த்துப் பழித்த பலவாகிய புகழைக் கொண்டவன்; பெரிய கையினை உடைய நெடுவேளாகிய முருகன். அவனை வணங்கினால் இவள் துயரம் தீங்கும் என, அந்தவேளை அவர்கள் நினைத்தனர். அறிவுரை கூறுகின்ற முதுபெண்டிரும், அதுவே உண்மை என்று கூறினர். ஆகவே, வெறியாட்டுக்களம் நல்ல முறையில் அமைக்கப்பெற்று, வேலினை நிறுத்தி அதற்கு மாலையினையும் சூட்டினர். வலிமை நிறைந்த கோவிலிலே ஆரவாரம் உண்டாகுமாறு முருகனின் புகழினையும் பாடினர், பலியிட்டனர், செந்தினையினைக் குருதியுடன் கலந்து தூவினர். இவ்வாறு முருகனை அச்சம் பொருந்திய நடு இரவினில் அவ்விடத்திற்கு வரவழைத்தனர் என்பதன் வழி இரவினிலே பலியிடுதல் நடைபெற்றது என்பதும் குருதி கலந்த உணவு தூவப்பட்டது என்பதும் அறியப்படுகிறது.

    முருகனின் சிறப்பு

    முருகனின் சிறப்பினை அகநானூறு,

    ”உருகெழு சிறப்பின் முருகுமனைத் தழீஇக்
    கடம்பும் கணனும் பாடி நுடங்குடி”
    (அகம்.138)

    எனும் பாடலில், உட்குப் பொருந்திய சிறப்பினையுடைய முருகனைக் கையாற்றொழுது, மலையின்கண் வருவித்து, அவன் கடம்பையும் களிற்றையும் புகழ்ந்துப் பாடிப் பனந்தோடும் காந்தள் மாலையும் கைக்கொண்டு, இரவு முழுவதும் வறிதே அசைந்து ஆடினராதல் நன்றாகுமோ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும்,

    ”கடியுடை வியல்நகர்க் காவல் கண்ணி
    முருகு என வேலன் தரூஉம்
    பவருமாகப் பயந்தன்றால் நமக்கே
    ”    (அகம்.232)

    எனும் பாடலில், நாள்தோறும் விரவிய பூப்பலியோடு கலந்து, காவல் பொருந்திய பரந்த மனையினைக் காத்தல் கருதி, அன்னையானவள் நம் வேறுபாடு முருகனால் ஏற்பட்டதென்று எண்ணி, வேலனை அழைத்துவரும் காலமாகவே நமக்குவந்து விளைந்தது என்பதில் முருகன் மகளிரிடையே தோன்றும் வேறுபாட்டைக் களையும் தெய்வமாகக் காட்சிபட்டுள்ளார். மேலும்,

    ”மெய்ம்மலி உவகையன் அந்நிலைக் கண்டு
    முருகு என உணர்ந்து முகமன் கூறி
    உருவச் செந்தினை நீரோடு தூவிதூஉம்”   (அகம்.272)

    எனும் பாடல், நம் வீட்டினிடத்து, உள்ளத்திலே மிகுந்த மகிழ்ச்சியுடையவனாய் அவன்வந்து சேர்ந்தான். அந்தச் சூழலிலே, நம் தாயும் கண்டாள் எனின், முருகனே என நினைத்து முகமகிழ்ந்து வரவேற்பளிப்பாள். நல்ல நிறம் வாய்ந்த செந்தினையை நீரோடு தூவி, வந்தவனை முருகனெனவே நினைத்து வழிபடவும் தொடங்கிவிடுவாள் என்பதில் முருகனை எவ்வாறு அக்கால மக்கள் தன் மனத்தில் வைத்து வழிபட்டனர் என்பதை அறிய முடிகிறது.

    சூரபதுமனை அழித்தல்

    சூரபதுமன் எனும் அரக்கனை முருகப்பெருமான் அழித்ததனையும், அதனோடு தொடர்புடைய செய்திகளையும் அகநானூறு கூறுகிறது. இதனை,

    ”சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
    சினம்மிகு வேந்தன் தண்பரங்குன்றத்து”  
    (அகம்.59)

    எனும் பாடலில், சூரபத்மனை அவன் சுற்றத்தோடு தொலைத்த ஒளிச்சுடரும் முனையினையுடைய நெடுவேலினையுடையவன், சினம் மிகுந்த முருகன். அச்சினம் தணிந்து, அவன் அருளுடையவனாகக் கோயில் கொண்டிருக்கும் இடம் திருப்பரங்குன்றம் என்பதிலிருந்தும்,

    ”புரிகணத் தன்ன நாய்தொடர் விட்டு
    முருகன் அன்ன சீற்றத்துக் கருந்திறல்”   
    (அகம்.68)

    எனும் பாடலில், ஒலியையொத்த கடுஞ்சீற்றத்துடன் பகைவரை எதிர்க்கக் கூடியவனாகிய முருகனின் வலிமையை இவ்வடிகள் எடுத்துக் கூறுகின்றன.

    பெயர்

    முருகனை – செவ்வேள், முருகன், முருகு, வேலன் எனும் பெயர்களில் அகநானூற்றுப் பாடல்களில் சுட்டியுள்ளனர். இதனை, ”காடுகெழு நெடுவேள்” (அகம்.5) என்பதில், மலையும் மலையினைச் சார்ந்த இடத்துக்குமுரிய கடவுள் நெடுவேள் எனும் முருகன் என்பதை உணர்த்துகிறது.

    முடிவுரை

    முருகன் – மலையும் மலையினைச் சார்ந்த இடத்துக்குமுரிய கடவுள் என்பதும், முருகனை வழிபடும்போது பலியிடுதல் நடைமுறையில் இருந்தது என்பதும், அவ்வாறு செய்யப்பட்ட வழிபாட்டுக்கு வெறியாட்டு என்று பெயர் என்பதும், முருகன் சூரனை அழித்தான் என்பதும். அவ்வாறு அழித்தபின் சினம் தணிந்தபின் திருப்பரங்குன்றில் கோயில் கொண்டான் என்பதும் இக்கட்டுரை வாயிலாக அறியப்படுவனவாகும்.

    ******

    கட்டுரையாளர்
    தமிழ்த்துறைத்தலைவர்
    D.L.R.  கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம், ஆற்காடு.

     

     

    Share
  • பொதுத்துறை நிறுவனங்களும், வங்கிகளில் அடமானமும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    இன்று பல ஊடகங்களிலும் பெரிதும் பேசப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் பணிமனைகளும், பேருந்துகளும், மண்டல அலுவலகங்களும் தனித்தனியாக சுமாராக ஏழு போக்குவரத்துக் கழகங்கள் அடமானம் வைக்கப்பட்டு 2000 – 2500 கோடி உரூபாய்களை கடனாகப் பெற்றுள்ளன. சட்டப்படி பொது மக்களுக்குச் சொந்தமான இந்த போக்குவரத்துக் கழகங்கள் அடமானம் வைக்க முடியுமா? தொகை செலுத்தப்படாவிட்டால் அவற்றை கையகப்படுத்த சட்டத்தில் வழிமுறை உள்ளதா? தலைநகரில் உள்ள போக்குவரத்துக் கழகங்களும் இதில் அடங்கும்.

    இரண்டு பேருந்துகள் நான்கு பேருந்துகள் வைத்திருக்கும் தனியார் நிறுவனத்தினர்கள் ஆண்டிற்கு ஒன்றோ அல்லது இரண்டாண்டிற்கு ஒன்றோ இலாபத்திலிருந்து புதிய வழித்தடங்களையும் வாங்கி இணைக்கமுடிவதையும் காணமுடிகிறது. சில பெரிய தனியார் நிறுவனங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. இது மட்டும் எப்படி சாத்தியமாகிறது.

    ஒரு பேருந்திற்கு ஒரு நாள் வருவாய் சுமாராக 13 முதல் 14,000 உரூபாய். ஒரு நாளைக்கு அரசு அங்கீகரித்துள்ள டீசல் செலவு 103 லிட்டருக்கு சுமாராக 7,000 உரூபாய். ஓட்டுநர், நடத்துனர், உதிரி பாகங்கள், அலுவலகச் செலவுகளுக்காக ஒரு பேருந்திற்கு 3,000 உரூபாய் செலவு. ஆக மொத்தம் ஒரு பேருந்திற்கு ஆகக்கூடிய செலவுகள் 10,000 உரூபாய். இதற்கு மேலே ஆயிரம் உரூபாய் எதிர்பாராத செலவினத்திற்கு ஒதுக்குவோம். ஆக ஒரு பேருந்திற்கு 2,000 முதல் 3,000 உரூபாய் வரை மீதமாகவேண்டும். தமிழ் நாட்டிலுள்ள பேருந்துகள் மொத்தம் சுமாராக 1 இலட்சம் என்று வைத்துக்கொண்டால் போக்குவரத்துக் கழகங்களின் ஒருநாள் வருமானம் சுமாராக 20 முதல் 30 கோடியாகும். ஆண்டு ஒன்றிற்கு 7,000 கோடி உரூபாய் வருமானம் வர இருக்கும்போது எதற்காக இந்த அடமானங்கள்? இது நிர்வாக சீர்கேடுகளால் ஏற்படும் பிரச்சனையா என்ற ஐயத்தையே தோற்றுவிக்கிறது. வைத்த அடமானப் பொருளை மீட்பதற்கு நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்கு கூரியர் பணியகங்களை நடத்துவதுபோல அரசு போக்குவரத்துக் கழகங்களும் துணைப்பணிகளிலும் ஈடுபடுவதால் எந்தவித செலவுமின்றி பல ஆயிரம் கோடிகளை வருமானமும் பார்க்கலாம் என்பதும் கண்கூடு.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    Govinda Damodara Madhaveti 01 watercolour -lr

    ’ஏரார்ந்த கண்ணி யசோதையார் கட்டினாலும்,
    மீறாத மாதவர், மத்தூன்றி, -தேரூர்ந்த
    கீதை தெறிக்கக் கடைகின்றார்,உரலிலிட்ட,
    பேதையை மாயத்தில் போட்டு’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • ’’நிர்வாண ஷட்கம்’’

     

    ———————————

    ‘’வேறு’’
    ——————

     

     

    ‘’தவம்நான், தளர்ச்சிநான்,
    அவம்நான், அலட்டல்நான்
    சவம்நான், சைதன்ய ரூப
    சிவம்நான் சிவானந்தமயம்நான்’’….

    பாயும் பூனைநான்
    பதுங்கும் புலியும்நான்
    தாயும் தந்தைமகனும்நான்
    ஓய்வும்நான், உழைப்பும்நான்
    ஓங்கார வடிவும்நான்
    வாயுவெளி நீர்மண் காற்று
    வடிவான சிவானந்தமயம்நான்

    அஞ்சாத சிங்கம்நான் அஞ்சுமணிற்பிள்ளைநான்
    பிஞ்சுநான் பூவாகிக் காய்க்கும் புடலைநான்
    பஞ்சாயுதன்நான் ,பஞ்சாங்க பிரம்மன்நான்
    பஞ்சபூதத்தாலான பரமானந்தசிவம்நான்….கிரேசி மோகன்….

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (19)

     
    மீ.விசுவநாதன்
    பகுதி: 19
    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்

    “கங்கையின் கதையும், பகீரத முயற்சியும்”

    சரகனின் பிள்ளை அம்சுமானும் 
    சந்ததி யான திலீபனிடம்
    அரசினைத் தந்து சென்றிட்டான்
    அறத்தினைப் போற்றும் அம்மகனும்
    உரசலே இன்றி ஆண்டாலும்
    உத்தம முன்னோர் நீர்க்கடனை
    விரைவிலே முடிக்க முடியாமல்
    விண்ணக வாழ்வைப் பெற்றிட்டான் ! (1)

    பகீரதனின் தவம்

    திலீபனின் பிள்ளை பகீரதனோ
    திடமுடை உள்ளங் கொண்டவனாய்
    பளீரென வீசும் ஒளிமுகத்தால்
    பக்தியில் தவமே மேற்கொண்டான் !
    பிரும்மனும் நேரில் காட்சிதந்து
    பெரும்புகழ் கங்கை நீர்மண்ணில்
    வருமென வரமும் கொடுத்திட்டார்
    மனத்திலே சிவனைத் துதியென்றார் ! (2)

    காற்றினை உணவாய்க் கொண்டபடி
    கடுந்தவம் செய்த பகீரதனின்
    ஆற்றலை வாழ்த்திப் பரமசிவன்
    அவனது எண்ணம் நிறைவேற
    ஊற்றெனப் பொங்கும் கங்கையினை
    உச்சியில் தாங்கி முடிந்திட்டான் !
    போற்றியே மீண்டும் வேண்டிடவே
    புகழ்மிகு நதியாய் ஓடவிட்டான் (3)

    அப்படி “அலகா நந்தா”வாய்
    அமுதெனப் பாய்ந்து வரவழியை
    தப்படி இன்றி பகீரதனும்
    சரியெனக் காட்டப் பின்தொடர்ந்தாள் !
    இப்படி கங்கை வந்ததனால்
    இவளினை “பாகீ ரதி”யென்பர் !
    குப்புற வீழ்ந்தும் குதித்தெழுந்தும்
    குஷியுடன் பாய்ந்து வரும்போது (4)

    தவசியர் “ஜன்கு” மகரிஷியின்
    தரமிகு யாக சாலையினை
    இவளது தண்ணீர் வேகத்தால்
    இடித்திடச் செய்து போகையிலே
    அவளது செருக்கு நீரதனை
    ஆவென “ஜன்கு” குடித்திட்டார் !
    உளமது இன்பம் கொண்டவரின்
    உயரிய இந்தச் செயல்கண்டு (5)

    தேவரும் ஜன்கு முனிபணிந்து,
    “தேவரீர் கங்கை உம்மகளாய்
    பாவனை செய்து கொள்ளுங்கள்,
    பாவமே தீர்க்கும் அவளைஎங்கள்
    தாகமே தீர்க்கத் தருகவென்றார்”
    தன்னுடை செவிகள் மூலமாக
    வேகமாய் ஜன்கு திறந்துவிட்டார்
    விரைந்தது “ஜான்ஹ வி”நதியாக ! (6)

    “சரக குமாரர்கள் நற்கதி அடைதல்”

    சிவனது தலையில் விழுந்துவந்த
    சிறந்ததோர் கங்கை நதிநீரில்
    பவதொடர் நீங்க நீராடி
    பரமனை அடைந்தோர் பலகோடி !
    உவமையே இல்லா நீரிதனால்
    உயரிய முறையில் தர்ப்பணத்தை
    தவசினால் முடித்த பகீரதனை
    தரணியே நினைத்துத் துதிக்கிறது ! (7)

    இந்தவோர் கதையை இராமனுக்கு
    இனிமையாய்ச் விச்வா மித்ரர்தான்
    சந்தியா கால வேளைவரை
    சரித்திரம் பிசகா தெடுத்துரைத்து,
    “விந்தையே மிகுந்த இக்கதையை
    விரும்பியே கேட்போர் மனங்குளிரும்
    பந்தமோ விலகும் பரமசுக
    பக்தனின் நிலைபோல் இருப்பரென்றார்!” (8)

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 42, 43, 44ம் பகுதி நிறைந்தது)

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171125 Yashoda’s penance 24x32 cm mixed media lr

    ’’கண்ணனின் வாய்க்குள்ளே கண்டனள்: ஏரார்ந்த
    கண்ணிக்கே கண்ணளித்து கைவல்யம் : -மண்ணோடும்,
    விண்ணோடும் சேர்ந்து விளையாடும் வாமனனை
    தன்னோடு சேர்த்துரைத்தாள் தாங்க்ஸ்(Thanks Kesav)”….!

     
    ”கருத்தவர், ஆனால் கதிரொளி வெண்ணை
    நிறத்தவர், நிர்மால்ய நீலம் -தரித்தவர்,
    வண்ணமவர்,கேசவ்தன் எண்ணமவர், ஆய்ச்சியின்
    கண்ணனை நெஞ்சே கருது’’….!

    கேசவ் , மஹாகவி பாரதியாரின் ‘’குஞ்சென்றும் ,மூப்பென்றும் உண்டோ’’ வரிகள்தான் ‘’அக்கினிக் குஞ்சை’’ அன்னை தாலாட்டும் படம் பார்த்ததும் ஞாபகம் வந்தது….சூப்பர் கேசவ்….!

    ‘’காக்கைச் சிறகினை (ஏரார்ந்த) கண்ணி ,மடியிருத்தி
    பூக்கச்செய் கின்றனள் பொன்குஞ்சாய்: -யாக்கை
    நிறமெது வானாலும் நீலநிறக் கண்ணன்
    பரமது பாகவதப் பிஞ்சு’’….!

     
    ”புதியன எண்ணும் பழைய விரும்பி,
    மதிவழி எல்லாமே மாயை: -பதிநூற்றி(108 திருப்பதி)
    எட்டில் வளர்கண்ணா , என்னத் தவம்செய்தாள்
    எட்டவளை(கண்ணன் -எட்டாவது பிள்ளை) அம்மாவாய் ஏற்பு’’….!

     
    ’’அட்டைக் கரியவர் ,ஆனாரே வெள்ளையாய்
    பெட்டை யசோதையின் பாதுகாப்புத்-தொட்டிலில்
    தன்நினைவு இல்லாது தாலாட்டில் தூங்கிடும்
    கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!

    Share
  • ’’தாய்’’….!

     

     

    ’’தாயில்லாமல் வீடில்லை
    தானாய் சுத்தம் ஆவதில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    எங்காத்தை பெருக்கி மொழுகுகின்றாள்’’

    காலங் கார்த்தால வருவாள்-துடப்பம்
    குச்சியால் தூசு தட்டுவாள்-
    பாத்திரம் அலம்பி,பழையதை உண்டு
    காத்திரமாய் துணி தோய்த்திடுவாள்-அந்தத்

    ’’தாயில்லாமல் வீடில்லை
    தானாய் சுத்தம் ஆவதில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    எங்காத்தை பெருக்கி மொழுகுகின்றாள்’’….கிரேசி மோகன்….!

    Share