171125 Yashoda’s penance 24x32 cm mixed media lr

’’கண்ணனின் வாய்க்குள்ளே கண்டனள்: ஏரார்ந்த
கண்ணிக்கே கண்ணளித்து கைவல்யம் : -மண்ணோடும்,
விண்ணோடும் சேர்ந்து விளையாடும் வாமனனை
தன்னோடு சேர்த்துரைத்தாள் தாங்க்ஸ்(Thanks Kesav)”….!

 
”கருத்தவர், ஆனால் கதிரொளி வெண்ணை
நிறத்தவர், நிர்மால்ய நீலம் -தரித்தவர்,
வண்ணமவர்,கேசவ்தன் எண்ணமவர், ஆய்ச்சியின்
கண்ணனை நெஞ்சே கருது’’….!

கேசவ் , மஹாகவி பாரதியாரின் ‘’குஞ்சென்றும் ,மூப்பென்றும் உண்டோ’’ வரிகள்தான் ‘’அக்கினிக் குஞ்சை’’ அன்னை தாலாட்டும் படம் பார்த்ததும் ஞாபகம் வந்தது….சூப்பர் கேசவ்….!

‘’காக்கைச் சிறகினை (ஏரார்ந்த) கண்ணி ,மடியிருத்தி
பூக்கச்செய் கின்றனள் பொன்குஞ்சாய்: -யாக்கை
நிறமெது வானாலும் நீலநிறக் கண்ணன்
பரமது பாகவதப் பிஞ்சு’’….!

 
”புதியன எண்ணும் பழைய விரும்பி,
மதிவழி எல்லாமே மாயை: -பதிநூற்றி(108 திருப்பதி)
எட்டில் வளர்கண்ணா , என்னத் தவம்செய்தாள்
எட்டவளை(கண்ணன் -எட்டாவது பிள்ளை) அம்மாவாய் ஏற்பு’’….!

 
’’அட்டைக் கரியவர் ,ஆனாரே வெள்ளையாய்
பெட்டை யசோதையின் பாதுகாப்புத்-தொட்டிலில்
தன்நினைவு இல்லாது தாலாட்டில் தூங்கிடும்
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *