Blog

  • புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்

    புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்

    DSC00268

    மூலவர்   : முத்து மாரியம்மன், துர்க்கை

    தல விருட்சம் : வேம்பு மரம்

    தீர்த்தம் : வெல்லகுளம்

    பழமை : 500 ஆண்டுகள்

    புராணப் பெயர் : புன்னைவனம்

    ஊர் : புன்னைநல்லூர்

    மாவட்டம் : தஞ்சாவூர்

    மாநிலம் : தமிழ்நாடு

    தல சிறப்பு :  இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக, புற்று வடிவில் அருள் மழை பொழிகிறார்.

    DSC00277

    தல வரலாறு : நம் இந்தியத் திருநாட்டில் அமைந்திருக்கும் ஒவ்வொரு ஆலயத்திற்கும் அதன் அதிசயத்தின் அடிப்படையில் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் இது புராணக்கதை என்ற குறுகிய வட்டத்தில் சென்றாலும், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ள மன்னர்களால் எழுப்பப்பட்ட ஆலயங்கள் என்ற ஆதாரங்கள் ஓரளவிற்கேனும் அதன் நிலைப்பாட்டை உறுதி செய்யக்கூடியதாகவே உள்ளது. அந்த வகையில் இத்தலமும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்ற சிறப்பைப் பெறுகிறது.

    DSC00287

    தண்ணளி வீசும் பசும் வயல்வெளிகளுக்கிடையே புன்னைநல்லூர் மாரியம்மன் எழுந்தருளியிருக்கிறார். ஆலயத்தை அடைந்தவுடன் முதலில் தென்படுவது, மராத்திய மன்னர்களின் தனிப்பட்ட பாணியில் அமைந்த பரந்த மண்டபம். கோபுரம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம் மற்றும் இரண்டாம் பெரும் சுற்றுச்சுவர் போன்றவை சரபோஜி மன்னர் தஞ்சை மண்ணை ஆட்சி செய்த காலத்தில், கட்டப்பட்டு திருப்பணிகள் நிறைவேறியுள்ளன. இந்த ஆலயத்தின் மூன்றாவது சுற்றுச்சுவர் மராட்டிய மாமன்னர் சிவாஜியால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் அவர்களால் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    DSC00297

    இத்தலம் அமைந்த வரலாறு சுவையானது. வெறும் புற்று வடிவமாக அன்னை அருள்பாலித்துக் கொண்டிருந்த சமயம் அது. மகான் சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் கனவில் அம்மன் தோன்றி தனக்கு ஆலயம் எழுப்ப வேண்டி கட்டளை பிறப்பிக்கிறாள். இவரே அம்மனுக்கு மாரியன்னை வடிவமும் கொடுத்து ஸ்ரீசக்கரமும் உருவாக்கம் செய்தார். பின் ராஜஸ்ரீ சிவாஜி மகாராஜாவின் மூலம் ஆலயம் அற்புதமாக எழும்பியது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் முக்கியமான எண்பத்தி எட்டு திருக்கோவில்களில் புன்னை மாரியம்மன் கோவிலும் ஒன்று. கோவிலின் உட்பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் அழகே உருவாக அமைக்கப்பட்டுள்ளன.

     

    சதாசிவ பிரமேந்திரர்
    சதாசிவ பிரமேந்திரர்

    DSC00282

    கீர்த்தி சோழன் என்னும் மன்னன் அம்மனின் அருளால் பெற்ற ஆண்மகவிற்கு தேவசோழன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். அவன் நன்முறையில் வளர்ந்து பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். அப்போது தஞ்சையை ஆண்டுவந்த வெங்கோஜி மகாராஜா 1680 ம் ஆண்டில் திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்தபோது கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்மன் அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் எழுந்தருளியுள்ள தன்னை தரிசிக்க வருமாறு கட்டளையிடவும், அரசனும் தம் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து அங்கிருந்து புன்னைக் காட்டிற்குச் செல்ல வழியமைத்து, அம்மனின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அங்கு சிறிய கூரையும் வேய்ந்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டதோடு அந்த கிராமத்தையே ஆலயத்திற்காக வழங்கினார். மேலும் 1728 -1735 ஆண்டுகளில் தஞ்சையை ஆண்ட துளஜா என்ற மன்னனின் புதல்வி வைசூரி நோயால் கண்கள் பாதிக்கப்பட்டு இருந்தாள். அச்சமயம் அம்மனின் கீர்த்தியை அறிந்து ஆழ்ந்து வழிபட்டதால் பூரண குணம் பெற்றாள். இதனால் அம்மனின் திருவருளை எண்ணி பெரிதும் வியந்த அம்மன்னன் அம்பிகைக்கு சிறிய கோயிலாக கட்டினார். காலப்போக்கில் அது பெரும் கோவிலாக மாறியுள்ளது என்று வரலாறு கூறுகிறது.

    சண்டி
    சண்டி

    ஆறடி உயரமுள்ள அம்மனின் முகத்திலும், சிரசிலும் கோடைக்காலத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் தென்படுவதைக் காணலாம். இதன் காரணமாகவே ஆலயத்தின் அருகில் உள்ள, உள்தொட்டி என்று அழைக்கப்படும் தொட்டியிலும், வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படும் பிரகாரத்தைச் சுற்றி உள்ள தொட்டிகளிலும் , அம்மை நோய்கண்டவர்கள் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது. மனம் குளிர்ந்த அம்மன் பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கிறாள். அதனால் அம்மை நோய் முதல், தோல் வியாதி, கண் நோய் , வயிற்று வலி, உடம்பில் சொறி, சிரங்கு, கட்டிகள் ஏற்படுதல், போன்றவற்றால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இந்த அம்மனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் கட்டாயம் குணமடைவதாக நம்பிக்கை வலுவாக இருக்கிறது. மேலும் வேலை வாய்ப்பு, பணியிடம் மாற்றம் , தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்மன் அதனை நிறைவேற்றி கொடுக்கிறார் என்பதால் கோவிலில் எந்த நேரமும், குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் அதிகமாக பக்தர்கள் வந்து வழிபடுவதைக் காண முடிகிறது.

    DSC00271

    அம்மனுக்கு மாவிளக்குப் போடுதல் என்பதே இங்கு முக்கியமான பிரார்த்தனையாக உள்ளது. அம்மை நோய் கண்டு குணமடைந்தவர்கள் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். உடம்பில் கட்டிகளால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கிப் போட்டும், சொரி சிரங்கினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் உப்பு வாங்கிப் போட்டும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். கணவரின் நலனுக்காக நேர்ந்து கொண்ட பெண்கள் திருமாங்கல்யம் சாத்துதலையும் நேர்த்திகடனாக செய்கின்றனர். அம்மனுக்கு நிலைமாலை சாத்துவதால் தடைபட்ட திருமணங்கள் விரைவில் நடப்பதாகவும் நம்பிக்கை உள்ளது. பால்குடம் எடுத்தல், பால்காவடி, அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன்கள் ஆகும்.

    DSC00278

    அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருவதால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிடேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு மட்டுமே சாற்றப்படுகிறது. விட்டிணு துர்க்கை அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திக்கும் அன்றாடம் அபிசேகம் நடைபெறுகிறது. 5 ஆண்டிற்கு ஒரு முறை, ஒரு மண்டலம் தைல காப்பு அபிசேகம் நடைபெறுகிறது. அந்த காலத்தில் ஒரு மண்டலத்திற்கு அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து, அதில் ஆவாகனம் செய்து, அந்த அம்மனுக்கே அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெறுகிறது. அப்போது கருவறையில் உள்ள அம்மனுக்கு 48 நாட்களிலும் அன்றாடம் இரு வேளைகளிலும் சாம்பிராணி தைலம், புணுகு, போன்ற வாசனை பொருட்களால் அபிசேகம் நடைபெறுகிறது.

    DSC00273

    தைலாபிடேகம் செய்யும் காலங்களில் அம்மன் அதிகமான உக்கிரத்துடன் இருப்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்டு அம்மனுக்கு தயிர் பள்ளயம், இளநீர் போன்றவைகள் வைத்து நைவேத்தியம் நடைபெறுகிறது. ஆகம விதிப்படி அம்மனுக்கு நான்கு காலங்களும் பூசைகள் நடைபெறுகின்றன. ஆடி மாதம் , முத்துப்பல்லக்கு ஆவணி மாதம் , கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம், புரட்டாசி மாதம் , தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா போன்றவைகள் வெகு சிறப்பாக நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. மாசிமகத்தன்று 1008 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று உற்சவ மூர்த்திக்கு அபிசேகம் செய்கிறார்கள். ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று மிகச் சிறப்பான பூச்சொரிதல் நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோவில் இருக்கும் ஊரின் பெயரே ‘மாரியம்மன் கோவில்’தான்.
    இங்கு அனைத்து மதத்தினரும் வந்து வழிபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    அன்றாடம் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விடியற்காலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

    முகவரி: அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர் – 613 501,  தஞ்சாவூர் மாவட்டம். 

    Share
  • பரமனுமிவன் ரசிகன் ஆனதனால் பக்கத்தில் அழைத்துக் கொண்டானோ என்றெண்ணத் தோன்றுகிறது!

     

     

    ஓங்குபுகழ் நடிப்பினிலே ஓர் இமயம் சிவாஜிதான்..bss

    ஒருவரும்நிகரில்லை என்பதை ஒப்புவரே..

    நீண்டநெடும் வரலாறாய் நடிப்பிற்கு அவன் உலகம்!

    ஒவ்வொரு அசைவும் உன்னத நடிப்பைத்தரும்!

     

    பழம்பெருமை பேசுதற்கும் படத்தாலே உத்வேகம்தந்த

    பராசக்தி கணேசனை பைந்தமிழர் மறக்கமாட்டார்!

    புராணப் புருஷர்களும் பாத்திர ஏந்தல்களும்.. மனதில்

    பதியவைத்ததில் நடிகர்திலகம்தவிர வேறு எவருமிலர்!

     

    கப்பலோட்டியதமிழனும் கர்ணனெனும் பாத்திரமும்

    எவர்மனத்தில் இருந்தாலும் எடுத்துநீங்கள பாருங்கள்!

    நடிகர்திலகம் எனும் நவரசநாயகனின் உதிரம்கூட பேசும்!

    தங்கப்பதக்கத்தில் கம்பீரம் தற்பெருமை உதிர்க்கும்!

     

    கவியரசர்பாடலுக்கு உதட்டசைவு மட்டுமல்ல..bsiva

    உயிர்கொடுத்து நடித்ததனால் காலங்களை வென்று

    உச்சரிப்பில் உச்சம்தொட்ட ஒரே நடிகன் சிவாஜி!

    கெளரவம் பாரிஸ்டர் என்றெடுத்த பாத்திரங்கள் எல்லாமே

     

    ஒன்றையொன்று வென்றதுண்டே தவிர.. இங்கே வேறு

    ஒருவர் வென்றதாக வரலாறில்லை!  பாசமலர் போல

    காவியங்கள் இங்கு உண்டா? பக்தியிலும் பாமாலை

    பரவசமாய் ஊட்டி நின்றார்! பரமனுமிவன் ரசிகன் ஆனதனால்

    பக்கத்தில் அழைத்துக் கொண்டானோ என்றெண்ணத் தோன்றுகிறது!

     

    உங்களுடன் நான்..

    காவிரிமைந்தன்

    Share
  • திருமால் திருப்புகழ் (149)

     

    கிரேசி மோகன்
    அடையாறு அனந்த பத்மநாப ஸ்வாமி
    ———————————————————————–

    தனனா தனந்த தனதனன தான தனனா தனந்த தனதனன தான
    தனனா தனந்த தனதனன தான -தனதான….

    ———————————————————————————————————————-

    hagavatha - the slaying of Kamsa - Keshav
    Bhagavatha – the slaying of Kamsa – Keshav

    ”நடவா ததென்றும் இனிநிகழ்வு றாது, நிகழ்வா னதன்று நடைபெறுதல்காண,
    உயிரோ டிருந்து உடலதனை பேணல் -அறியாமை
    எனவோ துசெங்கி ரியருணைவிதேகர், உபதே சமஞ்சரி புகல்மனவிசார,
    வழிநா னகந்தை எழுமனமதின் மூலம் -தனில்மூழ்க,
    ’’அடடா புகுந்த களமிடையில் போக, விஜயா! தளர்ந்து மனைவிலகு மாதர்,
    எனவூர் குலுங்கி நகையஅவ மானம் -அடைவாயே,
    எடுடா மிகுந்த வலுவுடைய தோளில், எதிராள் உடம்ப ழியசிலையும் வாளி,
    எனகீ தைசந்த மொழியுரைமு ராரி -அருள்வாயே
    குடமா டுகும்ப முனிகுருகு கேசன், முகமா றுகொண்ட அமரர்படை ஈசன்,
    குலமா திரெண்ட ணையமயிலு லாவு, -கொடிசேவல்
    துடிவே லணிந்த கரமுடைய மாறன், நடரா சன்முன்பு தொழமறைகள் நாலின்
    பொருளோ துசங்க ரியிளையவள் சேயின் – முறைமாம.

     

    வடஆ லிலன்று உலகழிய ஆழி தனிலா டிஅந்த குருவளிபு ரீச
    மலைநா டொதுங்கு துளஸிவன மாலி -திருமாலே
    படையா கநந்த கிசிலைகதை ஆழி சுடரா ழிகொண்டு கரியமலை போல
    அடையா றனந்த கமலமலர் நாபி -பெருமாளே
    —————————————————————————————————————

    படத்திற்கு நன்றி:

    http://bhagavatham.blogspot.in/

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!
    ஜூலை 21, 2014

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  திருமிகு. சீதா நடராஜன் அவர்கள்

    seetha natarajan
    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  திருமிகு. சீதா நடராஜன் அவர்கள் ஜித்து கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நிறுவனத்தின், ரிஷி பள்ளத்தாக்கு பள்ளி (J.Krishnamurti Foundation – Rishi Valley School) யில் சமூகவியல் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.  தனது சமூகவியல் வகுப்பில்  செயல்முறைக் கல்விமுறையில்  மாணவர்களுக்கு பாடத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிக்காக  இவர் பாராட்டப்படுகிறார்.

    வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் பரிந்துரையில் சமூகவியல் பாடங்களை பெரும் முயற்சியுடன் செயல்முறை பாடங்களாக அறிமுகப்படுத்தும் திருமிகு. சீதா நடராஜன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம். இவருடைய இணையதளம் :

    வண்ணமயமான விளக்கங்கள் – நாகரீகத்தின் பாதையில் பிரயாணம் செய்யும் ஒரு வகுப்பு

    கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள சீதா நடராஜன் சமூகப் பாடங்களுடன்  ஆங்கிலம், சுற்றுச் சூழல் பாடங்களும் கற்பிக்கிறார். கற்றல் திறன் குறைந்த, சிறப்பு பயிற்சி தேவையான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பயிற்சியையும் சீதா நடராஜன் பெற்றுள்ளார். நூல்கள், கவிதைகள், ஓவியங்கள் இவற்றிலும் ஆர்வம்  உள்ளவர் இவர்.

    உலக மற்றும் வாழ்வியல் பார்வையை விரிவாக்கும் சமூகவியல் பாடங்கள் கல்விக்கூடங்களில் அதற்குரிய மதிப்பினைப் பெறுவதில்லை.  பலநாட்டு மக்களின் கலாச்சாரத்தை அறிவதன் மூலமும், நமது நாட்டின் பண்டைய  மக்களின் வரலாற்றையும் நாகரிகத்தையும்  அறிவதன் மூலமும், தொடரும் இந்தக் காலவெளியில், தொடர்ச்சியாக வாழ்ந்து வரும்  மனிதஇனத்தின் அருமையை நாம் உணர்ந்து பாராட்ட முடியும். மனித இனத்தின்  சிறப்பினை அறிவதன் மூலமாக  இக்காலகட்டத்தில் வாழும் நாமும் நம் பங்கை செம்மையாகச் செய்யவேண்டிய பொறுப்பும் நமக்கு விளங்கும்.   ஆனால் இப்பாடம் அதிக சிரத்தையின்றிதான் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.  மாணவர்களும்  ஆர்வமின்றிக் கடனே என்றுதான்  மதிப்பெண் பெறும் நோக்கத்தை மட்டுமே  முன்னிறுத்தி பயில்கிறார்கள். பிறகு  ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதது போல வாழ்க்கைக்கும் உதவாத கல்விப் பயிற்சியாக இது  பயனற்று முற்றுப் பெற்றுவிடுகிறது.

    சிறந்த ஆசிரியர்களாக இருந்தாலும் பலர் மாணவர்களைக் கவரும் கோணத்தில் பாடங்களை வழங்க முயலுவதில்லை. இந்தப் போக்கினை மாற்றி, செயல்முறை அடிப்படையில் பாடத்தை அமைத்து, களப்பணிகள் பகுதியை உள்ளடக்கிய பாடங்களை கற்றுத் தரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் சீதா நடராஜன்.

    சைனா, எகிப்து, கிரேக்க நாடுகளையும், அவர்களது பண்டைய நாகரிகத்தின் வரலாற்றுடன், தற்கால வாழ்வியலையும் கற்கும் பாடமாக இருந்தால்,
    1. அந்த நாட்டு நூல்களையும், படங்களையும், பொருட்களையும் சேகரித்து காட்சிக்கு வைத்து விளக்குதல்
    2. அந்த நாடுகளின் இசை நாடகம் இலக்கியம் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
    3. சிறு நாடகங்களை எழுதி நடித்தல், நாட்டியங்களை ஆடுதல் போன்ற கலைநிகழ்ச்சிகளையும்

    உள்ளடக்கி பாடமுறையை வடிவமைக்கிறார்  சீதா நடராஜன்.

    இவ்வாறு மாணவர்கள் பாடங்களை அறிவதன் மூலம் அவர்கள் ஆர்வம் தூண்டப்படுவதால், அதைத் தொடர்ந்த அடுத்த கட்டமாக பிறநாடுகளின் கலாச்சார நிகழ்வுகளுடன் நம் நாட்டு கலாசாரத்தை  ஒப்பிட மாணவர்களும் ஆர்வம் கொண்டு தானே முன்வருகிறார்கள்.

    எடுத்துக்காட்டாக, சைனாவைப் பற்றிய பாடத்தில் அங்குள்ள மக்கள், இடங்கள், ஓவியங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மாணவர்களால் சேகரிக்கப்பட்டு, பள்ளியில்  ஒரு கண்காட்சியை நடத்தியிருக்கிறார் சீதா நடராஜன்.  மாமன்னர்  சின் ஹுயாங்க்டி பற்றிய அறிமுகத்தில், மன்னரின் கல்லறைக்கருகில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உயிருள்ள மனிதர்களின் அளவில் வடிக்கப்பட்டிருந்த சுட்டகளிமண் பொம்மைகளான வீரர்கள் குதிரைகள் போன்ற பொம்மைகளை குயவர்களின் உதவியுடன் களிமண்ணில் உருவாகியிருக்கிறார். சைனாவின் புகழ்பெற்ற டிராகன் நடனம் மாணவர்களால் சைனா மக்களின் உடையலங்காரத்துடன் நடத்திக்காட்டப்பட்டிருக்கிறது. சீன மக்களின் மத நம்பிக்கைகைகள், இறப்பிற்கு பின்னர் ஆவி, வாழ்வு சடங்குகள் போன்ற நம்பிக்கைகள் விவாதிக்கப்பட்ட பொழுது , மாணவர்களே விவாதத்தை முன்னெடுத்து இந்திய மக்களின் கலாச்சாரத்துடன் அவற்றை ஒப்பிட்டு அறிய ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

    அத்துடன் இந்த ஒப்புநோக்கும் ஆய்வு பிறமத சடங்குகள், நம்பிக்கைகள் எனவும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. பிறகு இவையாவும் இக்காலத்திற்கு பொருத்தமானவையா, இவற்றின் குறை நிறைகள் என்ன? என்ற கோணத்திலும் மாணவர்கள் தங்கள் கற்றலை விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.  மன்னராட்சி, அரசபரம்பரை அவர்களது  அரசாளும் உரிமையைப்  பெறும் நிலை, இக்கால அரசாங்க அமைப்புகள் என்றும் பாடம் தொடர்ந்திருக்கிறது. கன்பூஷியஸ் வழங்கிய வாழ்வியல் தத்துவங்கள் பள்ளியைத் தோற்றுவித்த   சிந்தனையாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரைகளுடன் ஒப்பிட்டு நோக்கப்பட்டிருக்கிறது.

    சைனா  போன்றே மற்ற பிறநாடுகளும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  எகிப்தின் புராதனம்,  கிராக்க நாட்டின் மக்களாட்சி முறையின் ஆரம்பம், புராணக்கதைகள், தத்துவ மேதைகள், போர் நிகழ்சிகள் என பாடங்கள் செயல்முறை வடிவெடுத்து மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. வெறுமே நூலில் தொடர்புகள் புரியாது பாடங்கள் படிப்பது, தேர்வுக்கு பிறகு படித்ததை மறப்பது என்ற வகையிலிருந்து இது மாறுபட்ட வகையில் நினைவில் நிறுத்தப்பட்டது என்பதை மாணவர்களின் நினைவுகூர்தல் மூலம்  அறியும் வாய்ப்பும் சீதா நடராஜனுக்கு கிடைத்திருக்கிறது.

    இவரைப் பாராட்ட விரும்புவோருக்காக, இவரது மின்னஞ்சல் முகவரி: nats_k@yahoo.com

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • முரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.

    NASA PLAN

     

    http://www.youtube.com/watch?v=WlXCstwZ_8Q&feature=player_detailpage

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ejIXRFzXgsg

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=_n8l62QJcBQ

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

     

    நிலவினில் தடம் வைத்தார்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆராயத்
    தளவுளவி சிலவற்றை
    நாசாவும்
    ஈசாவும் இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    வால்மீனை விரட்டிச் சென்று
    தூசியைப் பற்றிக்
    காசினியில் இறக்கினார் !
    வக்கிரக் கோள் ஒன்றின்
    மாதிரி மண்ணை
    வையத்தில் இறக்கியது
    ஜப்பான் விண்ணுளவி !
    அயான் எஞ்சினை இயக்கி
    பில்லியன் மைல்கள்
    பயணம் செய்து
    முரண் கோள் வெஸ்டாவை
    முற்றுகை இட்டு
    நாசா விண்ணுளவி ஏகுது
    செரிஸ் குள்ளக் கோள்  நோக்கி !
    முரண்கோளைக் கைப்பற்றி நேரடி ஆய்வுக்குத்
    திசை திருப்பும்  இப்போது !

    +++++++++++

     

    Asteroid Capture Program

     

    திசை திருப்பி முரண்கோளை ஆராயப் போகும் நாசாவின் புதுத் திட்டங்கள் :

    2013 ஏப்ரல் 12 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் பூமியை நெருங்கும் முரண்கோள் ஒன்றைப் பற்றி நிலவைச் சுற்ற வைத்துக் கூர்ந்து நேராக ஆராயும் திட்டத்துக்கு ஆரம்ப முத்திரை இட்டுள்ளது.   இந்தத் திட்டம் 2011 ஆண்டு முதலே இருந்து  இயங்கி வருகிறது. பூமியை நெருங்கும்  பெரிய முரண்கோள் ஒன்றையோ, அல்லது சிறிய முரண்கோள்  ஒன்றையோ,  நாசா விஞ்ஞானிகள் விண்ணுளவி மூலம், கண்காணித் தாலும், கவ்விப் பற்றப் போவது முதலில் ஒரு சிறிய முரண்கோளே.   அது கரிப்பொருள் மண்டிய, சுமார் 500 டன் எடை கொண் ட, 25 அடி அகல முரண்கோள் [carbonaceous C -type Asteroid].  அதற்கு இவ்வாண்டு நிதி ஒதுக்கம் : 105 மில்லியன் டாலர்.   இந்த முரண்கோள் பற்றும் திட்டம் நிறைவேறப் போவது : 2019 ஆம் ஆண்டில்.   சூரிய சக்தி ஓட்டும் மனிதரற்ற ஒரு சுய இயக்க விண்ணுளவி ஏவப் பட்டு,  பூமிக்கு அருகில் நெருங்கி வரும் ஒரு சிறிய முரண்கோளைப் பற்றி ஆராயும்.   இம்முயற்சி நாசா 2030 ஆண்டுகளில் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கிச் செல்லும் மனிதர் இயக்கும் விண்ணுளவிப் பயணங்களுக்கு உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

     

    Electric Asteroid -2

     

    நாசாவின் இந்த புதிய விண்ணுளவி பேராற்றல் கொண்ட சூரிய மின்சக்தி உந்துவிசையால் [High – Powered Solar Electric Propulsion]  இயங்கும் தகுதி உடையது.   சிறிய முரண்கோளைப் பற்றிய விண்ணுளவி அதைப் பூமியின் நெருக்கத்திலிருந்து நீக்கி, சந்திரனைச் சுற்றிவரும் கோளாக்கி விடும்.   அதே சமயம் கைப்பற்றிய முரண்கோளில் உள்ள மாதிரிகளை விண்ணுளவிக் கருவிகள் ஆராயும்.   மாதிரிகளில் இருக்கும் நீர்மை, உலோகங்கள், முலகங்கள், மூலக்கூறுகளைச் சோதனைக்கு எடுத்து மீளும்.   500 டன் பளுவுள்ள 25 அடி நீளமுள்ள முரண்கோள் ஒன்றைத் தேடல், கைப்பற்றல், திசை மாற்றல் போன்ற வினைகள், பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் 21 ஆம் நூற்றாண்டில் விண்வெளியில் செய்யப்படும் அரும் பெருஞ் சாதனைகளே.

     

     

    Electric Asteroid Model

     

    “முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”

    சார்லஸ் போல்டன் (NASA Administrator)

    “2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”

    ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

     

    Fig 8 Japan Space Probe to Asteroid

    “புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம்.  விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)

    “வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரிதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.

    அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    “வெஸ்டா, செரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

     

     

    நாசா விண்ணுளவி புலர்ச்சி செரிஸ் முரண் கோள் நோக்கிச் செல்கிறது.

    முதல் விண்வெளிக்  குறிக்கோள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி இரண்டாவது குறிப்பணியைத் துவங்க முரண்கோள் “செரிஸ்”  [Asteroid Ceres] நோக்கி இப்போது [2012 நவம்பர்] சென்று கொண்டிருக்கிறது.    2011 ஜூலை 15 ஆம் தேதி விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண் கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதைச் சுற்ற ஆரம்பித்தது.   ஏறக்குறைய  ஒன்பது மாதங்கள்  புலர்ச்சி வெஸ்டாவை வலம் வந்து பல ஆய்வுத் தகவல் அனுப்பி, 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈர்ப்பி லிருந்து விடுபட்டு அடுத்த முரண் கோள் செரிஸை நோக்கிச் செல்லத் துவங்கியது.

    2007 செப்டம்பர் 7 ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட புலர்ச்சி விண்ணுளவி  2008 ஆகஸ்டில் பூமி, செவ்வாய்க் கோள் கடந்து முரண் கோள்கள் நிரம்பிய வக்கிரக் கோள் வளையத்த நெருங்கி 2011 ஜூலை 15 ஆம் தேதி வெஸ்டா ஈர்ப்பு விசையில் இறங்கி  அதைச் சுற்ற ஆரம்பித்தது.   விண்ணுளவி புலர்ச்சி முரண் கோள்கள் வெஸ்டாவும், செரிஸும் போல சூரினைச் சுற்றி வருகிறது.   சூரியனிலிருந்து பூமி சுமார் 93 மில்லியன் மைல்கள் [150 கி.மீ.] சராசரி தூரத்தில் சூரினைச் சுற்றுகிறது.  இந்த தூரமே [One Astronomical Unit (1 AU)] என்று குறிப்பிடப்  படுகிறது.  இப்போது புலர்ச்சி விண்ணுளவி  வெஸ்டாவை விட்டு விலகி செரிஸ் முரண் கோளை நெருங்க தனிப்பட்ட சூரிய நீள்வட்டச் சுற்று வீதியில் பயணம் செய்கிறது.

     

     

     

    இவ்விதம் புலர்ச்சி விண்ணுளவி பல மில்லியன் மைல்கள் எளிதாய், ஆனால் மெதுவாய்ப் பயணம் செய்ய உந்துசக்தி தருவது அதன் : அயான் எஞ்சின் [Ion Propulsion System].   அதன் உந்துசக்தி வேகம் மணிக்கு 16,300  மைல்கள்.  அதாவது வினாடிக்கு 7.3 கி.மீ.  இப்போது [2012 நவம்பர்]  புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 166 மில்லியன் மைல் [267 மில்லியன் கி.மீ.] தூரத்தில் பயணம் செய்கிறது.   புலர்ச்சிக்குச் செரிஸ் முரண் கோள் 37 மில்லியன் மைல் [59 மில்லியன் கி.மீ.] தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

    நாசா விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண்கோளைச் சுற்றி முடித்தது.

    நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2011 ஜூலை 17 ஆம் தேதிமுதன் முதல் முரண் கோள் வளையத்தில் (Asteroid Belt) தடம் வைத்துப் பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது.  பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.

     

    jay

     

    விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

    2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் செரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது  2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.  இந்த திட்டத் துக்குச்  செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர்.  பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.

     

     

    வக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வா யிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ).  தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது.  பூமியிலிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது !  திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது.  ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது.  சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது

     

    பூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  வெஸ்டா, கிரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும்.  புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள்தான் இந்த வக்கிரக் கோள்கள்.!  முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ள தாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.

     

    முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ்.  அதன் பூதளத்  தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    புலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும்,  பிறகு செரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது.  இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது.  உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.

     

    பூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் :

    1. வெஸ்டா, செரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.

    2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.

    3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.

    4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.

    புலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது.  2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும்.  பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.

     

     

    (தொடரும்)

    ************************
    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand
    By : John Matson (June 11, 2010)
    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
    15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
    19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
    20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)
    21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
    22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
    23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
    24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
    25. NASA JPL Site on Dawn : http://dawn.jpl.nasa.gov/mission/trajectory.asp[Dawn Update]
    26 ANew Dawn For NASA’s Asteroid Explorer [October 1, 2012]
    27. http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) [October 17, 2012]
    28. Dawn Update : http://dawn.jpl.nasa.gov/mission/journal_10_31_12.asp[October 31, 2012]

    29.  http://www.pcmag.com/article2/0,2817,2417734,00.asp  [April 23, 2013]

    30.  http://www.nasa.gov/content/goddard/new-nasa-model-gives-glimpse-into-the-invisible-world-of-electric-asteroids/#.U8ldUjC_gcE  [June 25, 2014]

    31. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ejIXRFzXgsg

    ++++++++++++++++++
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (July  19, 2014)

    Attachments area

    Preview YouTube video NASA’s EPIC Asteroid Capture Plan

    NASA’s EPIC Asteroid Capture Plan

    Preview YouTube video NASA Announces Asteroid Identification, Capture and Sampling Initiative

    NASA Announces Asteroid Identification, Capture and Sampling Initiative
    Share
  • சலனத்தைச் சகித்துக்கொள்!

    -தாரமங்கலம் வளவன்

    வாழ்கையின் வசதிகள் அல்ல,
    அதன் அவலங்களே மனிதனை
    உருவாக்குகின்றன!

    வாழ்க்கையின் அமைதி அல்ல,
    அதன் சலனமே
    வாழ்க்கைப் படகை ஓட்டுகிறது!

    சலனமற்ற வாழ்க்கை
    ஒரு எதிர்பார்ப்புதான்…
    நிஜத்தில்
    சலனமே வாழ்க்கை
    என்றாகும் போது
    சலனத்தைச்
    சகித்துக் கொள்!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 128

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி

    வண்ணக் குழம்பும் சுண்ணப் பொடியும்                                            image
    மணம்வீசும் குளிர்ந்த சந்தனமும்
    புழுக்கப்பட்ட தானியங்களுடன் சோறும்
    பூக்களும் புகையும் மனம் கவரும் மணப்பொருட்களும்
    தாங்கியே மறப் பணிப்பெண்கள் பின் தொடர்ந்து வர…

    கால்கொட்டும் பறையும்
    சூறை கொள்ளும்போது ஊதும் சின்னமும்
    கொம்பும் புல்லாங்குழலும்
    பெருமை வாய்ந்த மணியும் கூடியே ஒலித்திட...
    இவற்றை அந்த அணங்கின் முன்னே நிறுத்த…

    தான் அளித்த வெற்றிக்கு விலையாகிய
    பலியை உண்ணும் பலிபீடத்தை முதலில் வணங்கி
    விரைந்து செல்லும் கலைமானை ஊர்தியாக உடைய
    கொற்றவையைக் கையால் தொழுது
    வணங்கிப் போற்றினாள் சாலினி.

     ஆவேசமுற்ற சாலினி கண்ணகியைப் புகழ்தல்

    இணைந்து பொருந்திய மலர்போன்ற சிற்றடிகள் வருந்தித்
    துன்பங்கள் பல அனுபவித்துத் தன் கணவனோடு தங்கியிருந்த
    மணம் வீசும் கூந்தலையுடைய கண்ணகியைச் சுட்டிக் காட்டி,
    “இப்பெண் கொங்கு நாட்டின் செல்வி;
    குடமலை நாட்டினையாளும் செல்வி;
    தென் தமிழ்நாட்டின் பாவை;
    உலகத்தோர் செய்த தவத்தின் பயன்;
    ஒப்பற்ற உயர்ந்த மாணிக்கம் போன்றவள்…”
    தெய்வத்தன்மை அடைந்த சாலினி
    கண்ணகியைப் பற்றி இங்ஙனம் கூறினாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  36 – 50
    *http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*

    படத்துக்கு நன்றி:
    http://tamilvamban.blogspot.in/2014/03/03.html

     

    Share
  • காலம் கடந்த அங்கீகாரம் பெற்ற மேதையின் நெகிழ்வூட்டும் கதை

    ராமானுஜன் திரைப்படம்

    எஸ் வி வேணுகோபாலன்

     Ramanujam-Movie-Stills-4

    குடும்பத்துடன் ‘கோயிலுக்குக்’ கிளம்பினோம்
    மகள் ‘ராமானுஜன்’ பார்க்கவேண்டும்
    என்று சொன்னாள்
    அறிவே தெய்வம்
    – நெல்லை ஓவியர் வள்ளிநாயகம்
    அவர்களது குறுஞ்செய்தி

    மனப்பாடமாகச் சில செய்திகளைப் பட்டியல்போட்டு வாசித்து உருவேற்றி வைத்துக் கொண்டு கேட்கிற இடங்களில் அதை அப்படியே ஒப்பித்துக் காட்டி அதையே பொது அறிவு என்று பம்மாத்து செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வைத்தது, ராமானுஜன் திரைப்படம். ஒரு மாமேதையைக் குறித்து நான்கு வரிகளுக்கு மிகாமல் தெரிந்து வைத்துக் கொண்டு, அவரது புகைப்படத்தைக் கடந்து வேறொன்றும் பேச முடியாது இருப்பதை உணர்த்திய ஞான ராஜசேகரனுக்கு நன்றி.

    download

    அறிவுப் பசியோடு அலையும் மாணவர்களை ஒரு சமூகம் எப்படி அலைக்கழித்து, புறக்கணித்து, கொண்டாட்டங்களின்போது மட்டும் தேடித் திண்டாடுகிறது என்பதை மற்றுமொருமுறை எண்ணிப் பார்க்கவைத்து விட்டார் கணித மேதை ராமானுஜன். ஒரு கையடக்க பிரதியாக அவரது வாழ்க்கையை ஒரு மூன்று மணி நேர திரைப்படமாக நமக்கு வழங்கி இருக்கும் இயக்குனர் ஞான ராஜசேகரன் மற்றும் இந்தத் திரைப்படத்தில் அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்து நெகிழ்த்தியிருக்கும் ஒட்டு மொத்த நடிகர்கள், திரைக்குப் பின்னால் உழைத்திருக்கும் அசாத்திய கலைஞர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

    இந்து சனாதன ஏழை பிராம்மண குடும்பத்தில் பிறந்த ராமானுஜன் கணித உலகத்தில் மட்டுமே வாழத் தகுதியுள்ளவராகவும், சராசரி மனித வாழ்வுக்குள் பொருந்த இயலாது தவிப்பவராகவும் வாழ்ந்து மறைந்த கதை மட்டுமல்ல ராமானுஜன் வரலாறு. வேறு எத்தனையோ முக்கியமான விவாத உட்பொருள்களும் உள்ளடக்கிய சரிதை அது. காட்சி மொழிக்குள் அதனை தனக்கு சாத்தியமான வகையில் பரந்த பார்வைக்கு எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர்.

    தொடக்கக் காட்சியிலேயே பூஜ்யத்திற்கு மதிப்பில்லை என்று எப்படி சொல்லலாம் என்று கணக்கு வாத்தியாரை வகுப்பறையில் மடக்கிக் கேட்கிறான் சிறுவன் ராமானுஜன். அறிவின் துணிவு அங்கே அடையாளப் படுத்தப் படுகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் தன்னம்பிக்கையைக் குலைக்கும் புறச் சூழல் அமைந்துவிட, ஏக்கங்களோடு ஒரு வெளிச்சமற்ற பாதையில் திணறி நடக்கும் ஒரு மேதையை மீதிப் படம் காட்சிப் படுத்துகிறது.

    கட்டுக் குடுமி, நெற்றியில் நாமம், மேலை நாட்டிலும் நழுவிவிடாத பூஜை புனஸ்காரம், நாமகிரி தாயார் கனவில் எழுந்தருளி புதிரான கணக்குகளுக்கு விடையளிக்கிறாள் என்ற பரவசம், சாஸ்திர ஜோதிட கணிப்புகளில் ஆழும் மனம்…..என்ற வம்சாவழி நம்பிக்கைகளின் தொகுப்பாகத் தென்படும் ராமானுஜன் தனது கணித மேதைமையின் வெளிப்பாடுகளுக்காக இந்த ஆச்சார அணுகுமுறைகளின் மீது தானே கேள்விகளையும் உள்ளாக எழுப்புவதைப் படம் நுட்பமாக முன்வைக்கிறது.

    தன்னைக் கொண்டாடும் தாயின் பாசமே தனது சொந்த வாழ்க்கையின் பன்முக அம்சங்களை அனுபவிக்கத் தடையாகவும் இருக்கிறது என்பதை ராமானுஜன் அறிந்திருப்பது கடைசி காட்சிகளில் உணர்த்தப் படுவது திரைக் கதையின் முக்கியமான இடம். தடைக் கற்களைக் கடக்க அவரது உடல் ஒத்துழைப்பதில்லை. அதற்கு பல காரணங்களில் முக்கியமானது உளவியல் போராட்டம். இளவயதில் திருமணம். (உள்ளபடியே அப்போது அவருடைய மனைவி ஜானகிக்கு வயது பத்து). ஆனால் காதல் மனைவியோடான அந்தரங்கப் பரிமாற்றங்களை அனுமதிக்காத அவரது வாழ்க்கை 32 வயதில் முடிந்துவிடுகிறது. அப்போது அந்த அப்பாவிப் பெண்ணுக்கு வயது 21 !

    ராமானுஜனின் அவஸ்தைகளுக்கு இன்னொரு காரணம், போஷாக்கற்ற உணவு, வறுமை, உடற்பயிற்சி தேவையற்றது என்ற தவறான புரிதல். பள்ளிக் கூடத்தில் பி டி மாஸ்டர், ராமானுஜா நீயும் வந்து தேகாப்பியாசம் பண்ணு என்று சொல்கிறபோது, நான் கணக்கு அப்பியாசம் செய்கிறேனே அதுவே போதும் என்று சிலேடையாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறான் சிறுவன் ராமானுஜன். மூளை உழைப்பாளிகளுக்கு உடல் வலு தேவையில்லை என்கிற கோளாறான புரிதல் இன்றும் சமூகத்தில் நிலவுகிறது.

    கோயிலில் பாடும் தனது தாய் கோமளத்தம்மாவுடன் தானும் சேர்ந்து பாடும் சிறுவன் ராமானுஜன், பிரசாதம் கொடுக்கும் இடத்தில் குத்து மதிப்பாக விநியோகம் செய்யப்படும் கொழுக்கட்டைகளும், சுண்டலும் காத்திருக்கும் எல்லா பக்தர்களுக்கும் கிடைக்காது என்று கணக்கு போட்டுச் சொல்லி அசத்துவது, கல்லூரி வகுப்பு கணக்குப் புத்தகத்தை ஓர் இரவில் வாங்கி முழுவதும் படித்துத் தேர்ந்திருப்பது, எப்போதும் தன்னை விட மேல் வகுப்புகளில் படிக்கும் யாருக்கும் இலகுவாக கணக்குப் பாடம் கற்பிப்பது…இந்தக் காட்சிகள் இந்தத் தலைமுறை மாணவர்களை நிச்சயம் கொண்டாடிப் பார்க்கவைக்கும். கணிதம் ஒரு சவாலாக முன்வைக்கப்படும் நமது பாட திட்டம் மற்றும் கற்பிக்கும் முறைகளிலிருந்து மாணவர்களுக்குத் தென்றல் வீச கணிதம் கற்கும் ஆர்வத்தைத் தூண்ட இந்தப் படம் முக்கிய பங்களிப்பு செய்யும். நமது ஆசிரியர்கள் அவசியம் பார்ப்பது நல்லது.

    ஏதாவது ஒரு பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கி மற்றதில் தேறாத மாணவரை விட எல்லாவற்றிலும் சராசரி வாங்கித் தேர்ச்சி பெரும் மாணவர்களே எனக்கு தேவை என்று சொல்லும் ராமானுஜன் காலத்துக் கல்லூரி முதல்வர், எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு எடுக்கும் மாணவர்களை உற்பத்தி செய்யும் கல்வித் தலங்கள் இன்று தமிழகத்தில் சக்கை போடு போடுவது குறித்தும் கேள்விகள் எழுப்புகிறார். கல்வி என்றால் என்ன என்பதை இன்னும் இரண்டு தலைமுறைகளைக் கடந்தாவது சமூகம் கற்றுக் கொள்ளுமா தெரியவில்லை. நாகரிக உலகின் அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பக் கருவிகள் போன்றவற்றை உருவாக்கிய மேதைகளும், கவின் கலைகள் படைத்த படைப்பாளிகளும் தாங்கள் மிகக் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்துதான் இவற்றை வழங்கிச் சென்றிருக்கின்றனர் என்பதை இளமைக் காலத்திலேயே குழந்தைகளுக்கு நெஞ்சில் நிற்கும்படி சொல்லித் தந்தால்தானே உழைப்பின் மேன்மை அவர்களுக்குப் பாடம் ஆகும்! ராமானுஜன் படம் இந்த வகையிலும் ஒரு மிகச் செம்மாந்த பங்களிப்பைச் செய்கிறது.

    பண்பாட்டு முரண்பாடுகள், உணவு முறையைச் சார்ந்த அவமதிப்பு, இறையுணர்வு குறித்த விவாதங்கள் இவற்றையும் படம் மென்மையாகப் பேசுகிறது. லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் கணிதத் துறையினர் பெரும்பாலும் நாத்திகர்களாயிருக்க, ராமானுஜனின் ஆளுமையை உலகறியச் செய்வதே தனது வாழ்நாள் கடமையாக எடுத்துச் செயல்படும் ஹார்டியை மாணவர்கள் இதுபற்றிக் கேட்கின்றனர். அவரோ, ராமானுஜனின் மத நம்பிக்கைகளைத் தம்மால் மிக எளிதாகத் தகர்த்துவிட முடியும், ஆனால் அவரது கணக்கு உலகைக் காப்பாற்றுவதே தனக்கு முக்கியம் என்று பதில் அளிக்கிறார். படத்தின் பல முக்கிய வசனங்களுள் இதுவும் ஒன்று. ராமானுஜனிடத்தும் இந்த பாதிப்புகள் தோன்றுவதை, சீக்காளியாக சொந்த நாடு திரும்பும் ராமானுஜன் தனக்குப் பணிவிடை செய்யவிடாது மனைவியைத் தடுக்கும் தனது தாயை எதிர்த்துப் பேசும் இடம் வெளிப்படுத்துகிறது.

    படத்தில் ரசனைமிக்க காட்சிகள் நிறைய உண்டு. தொடக்கக் காட்சியில் வகுப்பறையிலிருந்து காமிரா நேரே கோயிலுக்குள் நுழைகிறது. பாடலைப் பாடும் சுஹாசினி (கோமளத்தம்மாள்) காட்டும் முகபாவங்கள், மகன் இடையே வந்து கலந்துகொள்ளும்போது அவரும், அவருக்கருகே இருப்போரும் காட்டிக் கொள்ளும் கண் ஜாடை, லண்டனில் தற்கொலை முயற்சியை அடுத்து காவல் நிலையத்தில் சிறை வைக்கப்படும் ராமானுஜனைக் காப்பாற்ற ஹார்டி மேற்கொள்ளும் தடாலடி ஜாலங்கள் அருமை.

    ஜெமினி கணேசன் பேரனான அபிநய், ராமானுஜனின் பரிதவிப்பு, மனைவியைப் பிரிந்து படும் பாடு, கணித மேதையாக உருமாற, பட்டாம்பூச்சி உருவாக்கத்தில் படும் சிரமங்களைச் சந்திக்க வேண்டி வருவது உள்ளிட்ட காட்சிகளில் தனித்துத் தெரிகிறார். மருமகளை வாட்டி எடுக்கும் மாமியார் பாத்திரம் சுஹாசினி இதுவரை நடிக்காதது. தொடக்கப் பாடல் காட்சியில் அவரது கண்கள் அத்தனை பேசுகின்றன. அடித்து நிமிர்த்தியிருக்கிறார். ராமானுஜனின் இளம் மனைவி ஜானகியாக வரும் பாமா, அந்நாளைய ஆச்சார குடும்பத்தின் மருமகளாக அசாத்திய நடிப்பைக் காட்டியிருக்கிறார். நீங்களும் அசடு, நானும் அசடு அதுதான் நாம ஜோடி சேர்ந்திருக்கிறோம் என்று கணவரிடம் அவர் பேசும் இடம் கவிதை. நிழல்கள் ரவி, ராமானுஜனின் தந்தையாக நினைவில் நிற்கிறார்.

    டெல்லி கணேஷ், ராதாரவி, ஒய் ஜி மகேந்திரா, சரத் பாபு, கிட்டி உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் மிகச் சிறு அளவிலேயே தோற்றம் என்றெல்லாம் பார்க்காது, தங்களது பாத்திரத்தின் தன்மையை முழுமையாக பிரதிபலித்துள்ளனர். கணிதத்தோடு கிரிக்கெட் ஆட்டக்காரராகவும் திகழும் ஹார்டி பாத்திரத்தை ஏற்றிருக்கும் கெவின் சிறப்பாக நடித்திருக்கிறார். வெளி நாட்டவர்களை பயிற்சி கொடுத்து அவர்களையும் தமிழில் பேச வைத்திருப்பது அட்டகாசமான முயற்சி.

    மன நிலை பிறழ்ந்து வீதியில் அலையும் பி டி மாஸ்டர், பின்னர் ராமானுஜன் வெளிநாட்டிலிருந்து திரும்பும்போது மேலும் மோசமான கதியில் வீதியில் தென்படுகிறார். ராமானுஜனோ, நல்லவேளை நான் அப்படி ஆகிவிடவில்லை என்கிற இடம் அபாரமானது. தனக்கு சென்னை பல்கலை கொடுத்தனுப்பும் பணத்தில் பாதியை ஏழை மாணவர்களுக்கு தந்து உதவுங்கள் என்று அவர் திருப்பித் தந்து விடுவது மகத்தானது.

    இன்று ஏடிஎம் பயன்பாட்டுக்கு பாஸ்வர்ட் அமைப்பது ராமானுஜன் கோட்பாடுகளை வைத்துத் தான்! பல அறியல் தொழில்நுட்ப சாதனங்களை நாம் பயன்படுத்த அவரது சூத்திரங்களே இன்றும் உதவியாக இருக்கின்றது என்ற வாசகங்கள் நிரம்பிய அட்டையோடு படம் முடிகிறது. ஆனால் அவரது ஆகச் சிறந்த அறிவைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

    ராமானுஜன் மரணத் தறுவாயில் துடிக்கையில், அவரது இறுதி காரியங்களில் கலந்து கொண்டால், அவர் சமுத்திரத்தைக் கடந்து சென்றுவந்ததற்குப் பரிகாரம் செய்யாத பாவம் தங்களையும் பற்றிக் கொள்ளும் என்று சொல்லியவாறு ஆச்சார பிராம்மணர்கள் அவரது வீட்டை வீட்டை விட்டுக் கூண்டோடு காணாமல் போகிற இடமும் கதையில் முக்கியமானது. மறைந்த அவரது உடலுக்கு எரியூட்டுகையில் பாரதிக்கு நேர இருந்ததே (பாரதி மறைவு 1921; ராமானுஜன் – 1920) முன்னதாக அவருக்கும் நேர்வது கவனிக்கத் தக்க இடம். புறக்கணிப்பின் நிழல் இறுதிவரை அவரைத் தொடர்கிறது.

    ஆனால் காலம் கடந்தாவது அவரது கணக்குகளுக்கு அங்கீகாரம் கிடைத்ததுபோல், ராமானுஜன் வாழ்க்கைக்கும் அங்கீகாரத்தை காலம் வழங்குகிறது. ஞான ராஜசேகரன் அவர்களது அசாத்திய முயற்சி அதைத் திரையில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது. ராமானுஜன் பிறந்த ஊர் ஈரோடு என்பது பலருக்கும் தெரியாதது. படத்திலும் சொல்லப்படுவதில்லை. ஏழ்மையை விளக்காத சூழல், நிகழ்வுகள் வேகமாகத் தாவிச் செல்வது போன்ற சில குறைகள் உண்டுதான். ஆனாலும், ராமானுஜன் வாழ்ந்த அந்தக் காலத்திற்கே பார்வையாளர்களை ஈர்க்கும்வண்ணம் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி, அந்த உழைப்பைப் பாராட்ட வைக்கிறது.

    *************

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 23

    கே.ரவி

    1968-ல் என்று நினைக்கிறேன், பங்களூரிலிருந்து என் குடும்ப நண்பர் கரியப்பா என்பவர் சொன்ன யோசனையின்படிச் சிந்தனைக் கோட்டத்தில் கூட்டு வழிபாடு என்ற வாராந்திர பிரார்த்தனைக் கூட்டம் நடத்தும் வழக்கம் தொடங்கியது. அதை, அதன் ஆங்கிலப் பெயரில் ‘மாஸ் ப்ரேயர்’ என்றே அழைத்து வந்தோம். சனிக்கிழமை தோறும் மாலை 6-30 மணிக்கு என் தந்தை விஸ்வம் நடத்தி வந்த வித்யா ஸாகர் பள்ளியில் கூடுவதும், பலவிதமான பக்திப் பாடல்கள் பாடுவதுமாக அந்த நிகழ்ச்சி அமைந்தது.

    முதலில் நான் எழுதிய ஒரு வெண்பாவுடன் தொடங்கும். பிறகு கவியோகி சுத்தானந்த பாரதியாரின் சர்வ மத சமரசப் பாடல் ஒன்றைப் பாடுவோம்:

    வெண்பா

    ஒற்றுமை ஓங்கிட உள்ளிருள் நீங்கிட

    நற்றவம் நாளும் நனிசிறக்கக் – கற்றவர்க்

    கண்வாழும் நாதனே காப்பென்று பற்றினோம்

    பண்வாழும் நின்றன் பதம்

    சுத்தானந்த பாரதியாரின் பாடல்

    எல்லோரும் வாருங்கள் எல்லோரும் சேருங்கள்

    ஈசனை அன்புசெய்வோம்

    எல்லோரும் பாடுங்கள் எல்லோரும் ஆடுங்கள்

    இன்பமே நமதுதெய்வம்

    அல்லா பரமபிதா ஹரிஹர ப்ரும்ம மென்றும்

    அம்மையப் பாவென்றும்

    சொல்லில் அடங்கா ஜோதியைப் பாடிச்

    சுகித்திருப் போம்வாரீர்

    பிறகு “பார்த்தாய ப்ரதி போதிதாம்” என்று தொடங்கும் பகவத் கீதையின் பாராயண ஸ்லோகம் சொல்லி விட்டு அதன் பிறகு ஒவ்வொருவரும் அவரவர் கொண்டு வந்திருக்கும் பாடலைப் பாடச் சுமார் அரை மணி நேரத்தில் கூட்டு வழிபாடு நிறைவு பெறும். ஆவலுடன் அதுவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொங்கல், சுண்டல் போன்ற எதோ ஒன்றை அருந்தி விட்டுக் கலைந்து செல்வோம்.

    இந்தக் கூட்டு வழிபாட்டில் பாடப்பட்ட பல பாடல்கள் தமிழ் இலக்கிய வராற்றில் நிச்சயமாக இடம்பெறப் போகும் பாடல்கள் என்பது என் நம்பிக்கை. அது சோதிடம் இல்லை சாமி! நான் சோதித்துச் சொல்லும் உண்மை. ஏற்கனவே, இந்தக் கூட்டு வழிபாட்டில் சுகி சிவம் இயற்றிப் பாடிய பாடல்களில் இருந்து சில வரிகளை இத்தொடரின் முந்தைய பகுதிகளில் சுட்டிக் காட்டி விட்டேன். அதில் ஒரு பாட்டில் வரும் இரண்டு பத்திகளை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். தேவி கருமாரி மீதான பாடல் அது:

    என்கண் கனிச்சாறே நெய்வேதனம் – எந்தன்

    பாடல்களில் உந்தன் நீராடனம்

    என்னுள்ளம் தானுந்தன் அரிவாகனம் – ம்!

    ஆகட்டும் உடனேயுன் ஆரோகணம்

    நகர்கின்ற போதெல்லாம் ரதவுத்ஸவம் – நீரில்

    நனைகின்ற போதெல்லாம் தெப்போத்ஸவம்

    பகர்கின்ற வாக்கெல்லாம் நின்பாசுரம் – உன்னைப்

    பாராட்டிச் செய்கின்ற அஷ்டோத்திரம்

    முதலில் இந்த வரிகளின் சொல்வளத்தில், ஓசைச்சிறப்பில் சொக்கி நிற்கும் மனோன்மணியைப் பார்க்கிறேன். அருகில் இருக்கும் புத்தி சிகாமணி புன்னகை பூக்கிறான். அவன் புன்னகையின் அர்த்தம் எனக்குப் புரிந்து விட்டது. ‘என்கிட்ட வந்து உட்கார்ந்து பாடம் கேட்க வேண்டும் ஓய்’ என்பது போல் ஒரு கர்வப் புன்னகை அது. சரி, கேட்டு வைப்போமே! அவன் சொல்கிறான்:

    “முதலில், தன்னிலிருந்து வேறாகத் தனக்கு வெளியில் அன்னையைப் பார்க்கிறான் பக்தன். தன் பரவசக் கண்ணீர்த் துளிகளை எடுத்தே அவளுக்கு நெய்வேதனமாகப் படைக்கிறான். தன் பாடல்களில் அவளை நீராட்டுகிறான். தன் உள்ளத்திலேயே அவள் அரோகணித்து எழுந்தருள வேண்டும் என்று வேண்டுகிறான்”

    மனோன்மணி இடைமறித்துப் பேசுகிறாள்:

    “ஆனால் எவ்வளவு கம்பீரமாக வேண்டுகிறான்! அந்த ஒற்றைச் சொல், “ம்” இருக்கிறதே, அது இடம் நிரப்பும் வெற்றுச் சொல் இல்லையப்பா. மற்றைச் சொற்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு முன்னிற்கும் வெற்றிச் சொல்.”

    சிகாமணி தொடர்கிறான்:

    “சபாஷ் மனோன்மணி, என் சகவாசத்தால் நீயும் இப்படிப் பேசக் கற்றுக் கொண்டு விட்டாய். சரி, என்ன சொல்லிக் கொண்டிருந்தேன், ஆம், ஆரோகணம். கருமாரி அன்னை பக்தனின் உள்ளத்தில் ஆரோகணித்ததும் என்ன ஆச்சு தெரியுமோ? பக்தன் நகர்கின்ற போதெல்லாம் அவளுக்கு ரதவுத்ஸவம், அவன் நீரில் நனைகின்ற போதெல்லாம் தெப்போத்ஸவம். குளிக்கும் போதெல்லாம் என்று கொச்சைப் படுத்தாமல், நீரில் நனைகின்ற போதெல்லாம் என்று போட்டான் பாருங்காணும், அதுக்குத்தான் துட்டு! ஆம், அவன் மழையில் நனையும் போது கூடன்னு அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். முதலில் அன்னையை முன்னிலைப் படுத்திப் பாடிய சிவம் அவளைத் தன்னிலைப் படுத்திப் பார்க்கும் அபூர்வ தரிசனத்தை விவரிக்கும் பாடலுக்கு இலக்கிய வரலாற்றில் இடம் கிடைக்காமல் போகுமா? மனோன்மணி விட்டு விடுவாளா? எப்படியும் சங்கப் பலகையை வரவழைத்து விடுவாள்.”

    மனோன்மணி உரக்கப் பாடுகிறாள்:

    வேண்டுமடி உன்னுடைய பாத நீழலே – தாயே

    வேண்டுமடி உன்னுடைய பாத நீழலே

    என்ன, சாமி வந்தது போல் மனோன்மணி ஆவேசமாகப் பாடுகிறாள்? ஓ, அது நண்பன் சு.ரவியின் பாட்டு. அவன், அதாவது, சு.ரவி; இந்த ‘அவர், இவர்’ மரியாதையைத் தவிர்த்து விடுகிறேன். அது கருத்தோட்டத்துக்குத் தடையாகிவிடும். அவன் அப்படித்தான் பாடுவான். பாரதியின் “வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா” என்ற சந்தத்திலேயே அமைந்த அந்தப் பாடலைத் தொடர்ந்து பாடுகிறாள் மனோன்மணி:

    வெய்ய காம னெஞ்சிடாது வீழ வைத்தவன்br

    துய்ய மாமணிப் புறத்துச் சோதியானவன்

    அஞ்சும் அமரர் நெஞ்சு குளிர

    நஞ்சு கொண்ட கண்ட னங்குக்

    கொஞ்சு கின்ற போதில் உன்னை

    தஞ்சம் என்ற டைந்து விட்டோம்

    வேண்டுமடி உன்னுடைய பாத நீழலே

    சிகாமணி எதுவும் பேசவில்லை. ஒரு கனத்த மெளனம் சூழ்ந்து கொள்கிறது. அந்தச் சொற்களின் சந்தச் சுவையில், சொற்சதங்கையின் ‘கலீர் கலீர்’ நாதத்தில் லயித்து விட்ட பரவச மெளனம் அது!

    வெய்ய காமன் நெஞ்சிடாது என்று படிப்பதா, இல்லை, எஞ்சிடாது என்று படிப்பதா? நஞ்சுண்டதால் சிவனின் கண்டம் சூடேறியதும், அமரர் நெஞ்சு குளிர்ந்தனர் என்ற முரண்பாட்டை ரசிப்பதா? அன்னையாக நீ தனித்திருக்கும் போது வராமல், அம்மையப்பனாக நீங்கள் சேர்ந்திருக்கும் தருணம் பார்த்துத் தஞ்சம் என்று வந்து விட்டோம், ஆட்கொள்வதைத் தவிர உமக்கு வேறு வழியில்லை என்று சொல்லாமல் சொல்லும் நயத்தை வியப்பதா?

    கேள்விகள் சிகாமணியின் தொண்டை வரை வந்துன. மனோன்மணி ஒரு பிடிபிடித்ததால் அவை அங்கேயே தங்கி விட, விடம் உண்ட கண்டனைப் போல் சிகாமணி, கேள்விக் கணைகள் தொன்டையிலேயே சிக்குண்ட கண்டனாகப் பேச்சிழந்து நின்றிருக்கிறான். பாவம்!

    சிந்தனைக் கோட்டம் செயலிழந்த பிறகும் மாஸ் ப்ரேயர் தொடர்ந்து சில ஆண்டுகள் நடந்தது. நடக்கும் இடங்கள் அவ்வப்போது மாறிக் கொண்டிருந்தன. அது நின்று போன பிறகு இரண்டு, மூன்று முறை அதை மீண்டும் தொடர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டும், நாளடைவில் அது நின்று விட்டது.

    “மோகத்தைக் கொன்று விடு அல்லாலென்றன் மூச்சை நிறுத்தி விடு” என்ற பாரதி பாடல் நண்பன் அ.பாபுவின் குரலில் ஒலித்ததையும், நண்பன் ரமணன், சிவகுமார் போன்றவர்கள் பாடிய பாடல்களையும் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம், ‘ஓ அந்த இனிய நாட்கள்!’ என்றுதான் பெருமூச்சு விடத் தோன்றுகிறது.

    தெய்வ பக்தியற்ற வரட்டுச் சித்தாந்த வாதியாக இருந்த என்னை மெல்ல மெல்லப் பக்குவப் படுத்தி, உருகச் செய்து, பக்தி மார்கத்தின் மகோன்னதத்தை உணரச் செய்த கூட்டு வழிபாட்டுப் பாடல்கள் என்றும் என் நெஞ்சை விட்டகலாதவை. நானும் உருகி, உருகிப் பாடத் தொடங்கினேன்:

    ராம மணி மந்த்ரம் ஶ்ரீ ராகவ முகுந்தம்

    ரட்சகம் அளிக்கின்ற தேவாம்ருதம்

    விழிகள் அரவிந்தம் அதில் கருணை மகரந்தம்

    விதிகதி கலங்க வரும் கோதண்டம் – கொடும்

    விதிகதி கலங்க வரும் கோதண்டம்

    எழில்மிகு வசந்தம் என் கவிதை ப்ரபந்தம் – நீ

    எழுந்தருளி வைகுமொரு வைகுந்தம்

    ராம மணி மந்த்ரம் ஶ்ரீ ராகவ முகுந்தம்

    தோளழகு கண்டு விழி தோற்ற கதையுண்டு – உன்

    தோளழகு கண்டு விழி தோற்ற கதையுண்டு – நீ

    தொட்டவுடனே சிவன்வில் இற்றதன்று – உன்

    காலடியிலே கல்லும் உயிர்த்ததென்றால் – கண்

    நீர்த்துளிகளும் கவிதை யாவதுண்டு – என்கண்

    ணீர்த்துளிகளும் கவிதை யாவதுண்டு

    ராம மணி மந்த்ரம் ஶ்ரீ ராகவ முகுந்தம்

    “ஏம்பா, உன் கவிதையே வைகுந்தமா, உன் கண்ணீர்த் துளிகளும் கவிதை ஆகணுமா? என்னப்பா, காதல்னாலும் கவிதை, கடவுள்னாலும் கவிதை, உனக்கு எல்லாமே கவிதைதானா?” கேட்டானே ஒரு கேள்வி, புத்தி சிகாமணி.

    வாயடைத்துப்போய் நின்று விட்டேன். மனோன்மணி மட்டும் மெல்லச் சிணுங்குகிறாள் . . . .!

    (தொடரும்)

    Share
  • அழகு தமிழ் பேசிடுவோம்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    அன்புக் குழந்தைகளே
    அனைவருமே கேளுங்கள்
    அன்னைத்தமிழ் மொழியில்
    அனைவருமே பேசிடுவோம்!

    பள்ளிக்குச் சென்றுநீர்
    படித்தாலும் ஆங்கிலத்தை
    பாலூட்டும் தாயினிடம்
    பசுந்தமிழில் பேசிடுவீர்!

    தாய்ப்பாலைக் குடித்துநிதம்
    தா
    ன்வளர்ந்து நிற்கின்றோம்
    தமிழ் மொழியில்பேசிவிடின்
    தலைநிமிர்ந்து நிற்போமே!

    அப்பாவென அழைப்போம்
    அரவணைப்பார் ஆசையுடன்
    டாடி’என  அழைக்கின்
    வாடிவிடும் முகமவர்க்கு!

    மடிமீது வைத்தெம்மை
    மயக்குமொழி பேசிநிற்கும்
    மாண்புமிகு அம்மாவை
    மம்மி’யாய் ஆக்காதீர்!

    அன்புக் குழந்தைகளே
    ஆங்கிலத்தைப் படியுங்கள்
    அதேவேளை தமிழ்மொழியை
    அணைத்துமே நின்றிடுவீர்!

    பிறந்தநாள் நிகழ்ச்சிகளில்
    பேசுங்கள் தமிழ்மொழியில்
    பெற்றவரும் உற்றவரும்
    பெருமையுடன் பார்ப்பார்கள்

    வெளியிலே ஆங்கிலத்தை
    விட்டெறிந்து பேசுங்கள்
    வீட்டிலே அன்னைமொழி
    விரும்பியே பேசிடுவீர்!

    எங்குநாம் வாழ்ந்தாலும்
    என்றுமே தமிழர்நாம்
    என்கின்ற எண்ணமதை
    எள்ளளவும் மறக்காதீர்!

    வென்றதமிழ் வீரத்தமிழ்
    வியந்துலகு போற்றுந்தமிழ்
    அந்தமொழி எங்கள்மொழி
    தையுணர்ந்து நிற்போமே!

    அழகுதமிழ் பேசிடுவோம்
    அன்போடு நடந்திடுவோம்
    ஆண்டவன் துணையிருப்பான்
    னந்தமாய் இருப்போமே!

    Share
  • முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) -13

    படக்கதை -13

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா

    வசனம், வடிவமைப்பு : வையவன்

    ஓவியர் : தமிழ்

    Mukkonakkilikal - 49Mukkonakkilikal - 50Mukkonakkilikal - 51Mukkonakkilikal - 52

    தொடரும்…

    Share
  • மோடி அரசு என்ன செய்கிறது?

    –நாகேஸ்வரி அண்ணாமலை.

    getty imageகாஸா தீப்பற்றி எரிகிறது.  இஸ்ரேல் அரசு தொடர்ந்து குண்டுமழை பொழிகிறது.  இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க மோடி அரசு விரும்பவில்லை.  ஏதாவது ஒரு பக்கம் சாயப் போய் அதன் பலன்களை அனுபவிக்க இந்தியா தயாராகயில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.  என்னதான் இந்திய நலன்கள் பாதிக்கப்படும் என்றாலும் கண் முன்னே ஒரு அநியாயம் நடந்துகொண்டிருக்கும்போது அதைத் தட்டிக் கேட்காமல் இருப்பது இந்தியாவுக்கு அழகல்ல.

    பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் தொடர்ந்து அநீதி இழைத்துக்கொண்டிருக்கிறது.  பாலஸ்தீனத்தில் பல நூறு ஆண்டுகளாக முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கி.பி. 132-இல் யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறிய பிறகு அங்கேயே தங்கிவிட்ட ஒரு சில யூதர்களும் தங்களுக்குள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவின் பல நாடுகளிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடியேற ஆரம்பித்த பிறகு இந்த நிலை மாறத் தொடங்கியது.  வெளியிலிருந்து யூதர்கள் வருவதை பாலஸ்தீனத்திலேயே வாழ்ந்த யூதர்களும் விரும்பவில்லை.  இருந்தாலும் அதுவரை இல்லாத, தங்களுடைய புண்ணிய பூமி என்று யூதர்கள் கருதிய பாலஸ்தீனத்தில் குடியேற வேண்டும் என்ற பல நாடுகளிலும் வாழ்ந்த யூதர்களின் வெறியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.  எத்தனையோ தடைகள் இருந்தும் அவற்றையெல்லாம் மீறி யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறிக்கொண்டிருந்தனர்.  அங்கேயே காலங்காலமாக வாழ்ந்துவந்த அரேபியர்களின் – இவர்களில் பாலஸ்தீன முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சேர்த்தி – நிலங்களை வாங்கி அங்கு விவசாயக் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டனர்.  அந்த நிலங்கள் திரும்பவும் பாலஸ்தீனர்களுக்கு விற்கபபடாமல் பார்த்துக்கொண்டனர்.  அந்த நிலங்களில் பாடுபட யூத வேலையாட்களையே நியமித்தனர்.  தங்களுடன் வெளியிலிருந்து கொண்டுவந்த பணபலத்தாலும் தொழில்நுட்பத்தாலும் தொழிற்சாலைகளை அமைத்துக்கொண்டனர்; கல்வி ஸ்தாபனங்களை ஏற்படுத்திக்கொண்டனர்.  மேலும் மேலும் பல யூதர்களை பாலஸ்தீனத்திற்குள் வரவழைத்து யூதர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டிருந்தனர்.  யூதர்களின் வரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை உணர்ந்த அரேபியர்களுக்கு யூதர்கள் மேல் கோபம் ஏற்பட்டது.  இது நியாயம்தானே?

    அப்போது பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகையில் இருந்தது.  அங்கு வாழ்ந்துவந்த அரேபியர்களின் சம்மதத்தைப் பெறாமலே பிரிட்டன் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தனி நாடு அமைக்க உதவுவதாக ஒரு அறிக்கை மூலம் வாக்குறுதி அளித்தது.  அரேபியர்களின் அனுமதி இல்லாமலேயே பாலஸ்தீனத்திற்குள் தொடர்ந்து யூதர்கள் குடியேறியது அரேபியர்களுக்கு எதிரான முதல் அநீதி என்றால் பிரிட்டன் அங்கு தனி நாடு அமைக்க உதவுவதாக வாக்களித்தது இரண்டாவது அநீதி.  இந்த இரண்டு அநீதிகளையும் எதிர்த்துப் பாலஸ்தீனர்கள் போராடினாலும் பலன் எதுவும் கிடைக்கவில்லை.  யூதர்கள் தங்களுக்கு இழைத்துவரும் கொடுமைகளைக் கண்டிக்க அவர்களின் இடங்களை பாலஸ்தீனர்கள் தாக்கினால் யூதர்கள் தங்கள் பாதுகாப்புக்காக அமைத்துக்கொண்ட படைபலத்தால் அரேபியர்களைத் திருப்பித் தாக்கினர்.

    இப்படி வெளியிலிருந்து வந்து குடியேறிய யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே சச்சரவுகள் நடந்துகொண்டிருக்கும்போதே இந்தச் சச்சரவுகளுக்குத் தீர்வு காணப் பாலஸ்தீனத்தை அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே பிரிப்பது என்று பிரிட்டன் செய்த முடிவு அரேபியர்களுக்கு எதிராகச் செய்த மூன்றாவது அநீதி.  மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனர்ளுக்குப் பாலஸ்தீனத்தின் பாதிக்கும் குறைவான பகுதியையும் வெளியிலிருந்து வந்த யூதர்களுக்கு பாலஸ்தீனத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியையும் கொடுப்பதாக ஐ.நா. முடிவு செய்தது பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட நான்காவது அநீதி.

    தங்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட இடங்களை இஸ்ரேல் எனற் நாடாக அவசர அவசரமாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட யூதர்கள் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களையும் தங்கள் படைபலத்தால் பிடித்துக்கொண்டது ஐந்தாவது அநீதி.  இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் குடியிருப்புகளை நிறுவி அங்கு யூதர்களைக் குடியேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  அப்படி அங்கு குடியேற்றப்பட்டவர்கள் அவர்களுக்கு அருகில் வசிக்கும் பாலஸ்தீனர்களுக்குக் கொடுமைகள் இழைத்து வருகிறார்கள்.  இது ஆறாவது அநீதி.  இன்னும் பல அநீதிகளை இழைத்து வருகிறார்கள்.

    உலக வல்லரசான அமெரிக்கா இஸ்ரேலுக்கு எல்லா வழிகளிலும் இந்த அநீதிகள் தொடர உதவி வருகிறது.  இத்தனை அநீதிகளையும் எதிர்த்துச் சில நாடுகள் பாலஸ்தீனர்களுக்கு உதவ முன்வந்தாலும் அவை எல்லாம் பலவீனமானவை.  அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது.  இதனால் ஆதரவற்ற அனாதைக் குழந்தை போல் இருக்கும் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களைத் தாக்க முயற்சிக்கிறார்கள்.  ஆனால் இஸ்ரேலோ பாலஸ்தீனர்கள் ஒரு அடி அடித்தால் திரும்பப் பத்து அடி கொடுக்கிறது.  இப்போது பாருங்கள்.  மூன்று யூதப் பையன்களைக் கடத்திக்கொண்டு போய்க் கொன்றவர்கள் ஹமாஸ் என்ற தீவிரவாதக் கட்சி என்று இஸ்ரேலாக முடிவுசெய்து காஸாவின் மேல் குண்டு மழை பொழிந்து 265 பாலஸ்தீனர்களைக் கொன்றிருக்கிறது; ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்தியிருக்கிறது.

    பாலஸ்தீனர்களுக்கு எதிராக மேலே குறிப்பிட்ட அநீதிகளோடு இஸ்ரேல் தொடர்ந்து அநீதி இழைத்துக்கொண்டே போகிறது.  இதை ஏன் நம் இந்திய அரசு தட்டிக் கேட்கவில்லை?  1938-லேயே காந்திஜி தன் ஹரிஜன் பத்திரிக்கையில் யூதர்கள் வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேறுவதைக் கண்டித்திருக்கிறார்.  அதன் பிறகு எத்தனையோ அநீதிகள் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கின்றன.  இதைக் கண்டிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்கு இல்லையா?  2002-இல் இந்துக்கள் முஸ்லீம்களை சித்திரவதை செய்வதைக் கண்டும் காணாதது போல் இருந்த மோடி இப்போதும் இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்களாகிய முஸ்லீம்களைப் பல இன்னல்களுக்கு ஆளாக்குவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க விரும்புகிறாரா?  தவறு செய்யாதது மட்டுமல்ல, தவறைக் கண்டிக்காமல் இருந்து தவறுக்குத் துணைபோவதும் தவறல்லவா?  இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு அமைக்கப் போவதாகக் கூறும் ஒரு அரசு தார்மீகத்தின் அடிப்படை நியதியையே மீறலாமா?

    பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளை விபரமாக அடையாளம் வெளியிடவிருக்கும் என்னுடைய நூலில் காணலாம்.

    படம் உதவிக்கு நன்றி: Thomas Coex/Agence France-Presse/Getty Images

    Share
  • அழகெனும் ஓவியம் இங்கே…..

    –கவிஞர் காவிரிமைந்தன்.
    ooruku uzhaipavan

    ஊருக்கு உழைப்பவன் என்னும் திரைப்படம் வீனஸ் பிக்சர்ஸ் தயாரிக்க எம்.ஜி.ஆர். வாணிஸ்ரீ நடித்த  படம்.  மெல்லிசை மன்னரின் இன்னிசையில் எல்லா பாடல்களும் வெற்றி! இனிமையோடு இணைந்துவரும் இசையமைப்பில் கே. ஜே. ஏசுதாஸ், பி. சுசீலா  குரல்கள் நம்மைக் கடத்திக் கொண்டு போக – வரிகளை வார்த்தெடுத்துத் தந்திருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம்!

    muthulingamஇன்பத்தமிழ் ஊற்றெடுக்கும் இதயமல்லவா.. கவிஞர் எழுதியுள்ள வரிகளெல்லாம் முத்துக்கள் எனச் சொல்லவா?

    இதம்பதமாய்.. சொல்வதிலும் முதன்மை வகிக்கும் கவிஞரின் சொல்லாட்சி இளமை நதி ஓடிவரும் காட்சிக்கு சாட்சி!

    அழகிய மங்கையை அழகுதமிழ்ச் சொல்லாலேஅலங்காரம் செய்து பல்லவியைத் தந்துவிட்டு அடுத்துவரும் சரணங்களிலும் ஆராதிக்கும்போது – கவிஞர்தம் புலமையை, தனித்திறமையை வாழ்த்தாத இதயங்கள் ஏது?

    ஒவ்வொரு பாடலும் உயிர்பெற்றெழ வைக்கிற இசை வழங்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.  எம்.ஜி.ஆருக்காக ஆர்மோனியத்தில் கை வைத்தால் பொன்மனச்செம்மலின் புகழ்வளர்க்க சங்கீதம் சபைக்கு வரும்!  நல்லதோர் திரைப்பாடல் தமிழுக்கு வரும் என்பது அன்றைய காலக் கட்டத்தில் எல்லோரும் அறிந்த ஒன்று!!   அந்த வகையில் அழகெனும் ஓவியம் இங்கே!

    காணொளி: http://youtu.be/o_wZJnBPzRc

    கவிஞர்: முத்துலிங்கம்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியவர்: கே. ஜே. ஏசுதாஸ், பி. சுசீலா
    நடிப்பு: எம்.ஜி.ஆர், நிர்மலா
    படம்: ஊருக்கு உழைப்பவன்

    அழகெனும் ஓவியம் இங்கே ..
    உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே ..
    இலக்கிய காவியம் இங்கே
    உன்னை இயற்றிய பாவலன் எங்கே ..

    காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில் –
    கவி கம்பன் எழுதாத பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில்
    முத்து சரங்கள் சிந்தாமல் சிந்தும் சிறு நகையில் –
    நான் மூன்றாம் தமிழை பார்கிறேன் கண்ணே உந்தன் இடையசைவில்
    (அழகெனும் ஓவியம் )

    என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே –
    நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
    ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை –
    நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை
    (இலக்கிய காவியம் )

    ஆடை விலக்கும் பூங்காற்றை நீ ஏன் அழைத்து வந்தாய்
    நான் ஆட துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய்
    நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய்
    நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய்
    (அழகெனும் ஓவியம் )

    Share
  • ரேவதிக்கு நாய்க் குட்டி வேணுமாம்…

    –தாரமங்கலம் வளவன்.

    பங்களாவின் கேட் அருகே நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை, மீனாட்சி ஏற்கனவே பார்த்திருக்கிறாள். தங்கள் அரிசி மண்டியில் குமாஸ்தாவாக வேலை செய்யும் சதாசிவத்தின் பெண் தான் அவள்.   பத்து வயது இருக்கும் என்று தோன்றியது.

    தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்த்து,

    “ உள்ளே வா… தெறந்து தான் இருக்குது..” என்றாள் மீனாட்சி.

    வந்த பெண்ணைப் பார்த்து,

    “ நீ சதாசிவத்தின் பொண்ணு தானே.. பேரு என்னா…” மீனாட்சி கேட்டாள்.

    “ ரேவதி..”  என்றாள் அந்த பெண்.

    அந்த பெண் சற்று தயங்கி விட்டு,

    “ உங்க வீட்டு நாய், நாலு குட்டி போட்டு இருக்கிறதா சொன்னாங்க… எனக்கு நாய் வளக்கணும்னு ரொம்ப நாளா ஆசை… எனக்கு ஒரு குட்டி கொடுப்பீங்களா..”

    மீனாட்சிக்கு திகைப்பாய் இருந்தது அவள் கேட்டது.

    Rishikesh Animal Care Community FaceBook Pageசதாசிவம், தன் வீட்டில் நாய் வளர்ப்பதாகச் சொன்னாரே..

    அடிக்கடி, சாப்பாடு ஏதாவது மீதி ஆயிட்டா, வேஸ்ட் பண்ணாதீங்க, எங்க வீட்டு நாய்க்கு சாப்பிடறதுக்கு போடலாம்னு சொல்லி வாங்கிட்டு போவாரே..

    உண்மையில் சதாசிவத்தின் வீட்டில் நாய் ஏதும் இல்லையா.

    அப்படியானால், சதாசிவம் வாங்கிப் போன சாப்பாடு அவர் சாப்பிடத்தானா..

    சதாசிவம் வீட்டில் அவ்வளவு வறுமையா..

    ஐயோ பாவம் என்று மனதில் தோன்றியது.

    “ உங்க வீட்ல நாய் ஏதும் இல்லியா….” மீனாட்சி ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

    “ இல்ல… அப்பாகிட்ட ரொம்ப நாளா கேக்கிறேன்.. அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாரு..”

    கொஞ்சம் இடைவெளி விட்டு,

    “ நான் அந்த குட்டிகளை பாக்கணும்…” என்றாள் ரேவதி.

    “ சரி.. பாரு.. பின்பக்கம் தான் இருக்கு. போய் பாரு..” என்று சொல்லி விட்டு மீனாட்சி சமையல் வேலையை பார்க்க போய் விட்டாள்.

    பார்த்து விட்டு திரும்பி வந்த ரேவதி,

    “ அந்த வெள்ளக் குட்டியை எனக்கு கொடுப்பீங்களா..” என்றாள்.

    “ சரி கொடுக்கிறேன்.. ஆனா நான் கொடுத்ததா வீட்ல யாருகிட்டேயும் சொல்லாதே.. தெருவில அனாதையா இருந்திச்சி.. எடுத்து வந்தேன்னு சொல்லு..”

    சரி என்று தலையாட்டி விட்டு,  நாய்க்குட்டியை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றாள் அந்த பெண் ரேவதி.

    உள்ளே இருந்து வந்த மீனாட்சியின் கணவர்,

    “ அந்த பொண்ணு கிட்ட ஏன் அப்படி பொய் சொல்லச் சொன்னே..” என்று கேட்டார்.

    “ பாவம் நாலு பொண்ணுங்க… கஷ்ட ஜீவனம் போல இருக்கு.. இந்த மாசத்திலே இருந்து அவருக்கு சம்பளம் கொஞ்சம் கூட்டி கொடுங்க.. என்ன புரிஞ்சிதா..” என்று மீனாட்சி சொல்ல, அதற்கு அவள் கணவர் தலையாட்டினார்.

     

     

    ——————————————————————————————————————-
    படம் உதவிக்கு நன்றி:
    Rishikesh Animal Care Community FaceBook Page
    https://www.facebook.com/RishikeshAnimalShelter
    https://www.facebook.com/photo.php?fbid=452591534858573&set=pb.192122577572138.-2207520000.1405897050.&type=3&theater

    Share
  • பட்டணம் போகணும்

    சேசாத்ரி பாஸ்கர்

     

    என் அப்பா காலமாவதற்கு முன் அவருக்கு எப்படியாவது பென்ஷன் வாங்க கடும் முயற்சி செய்தேன் . கலெக்டர் முதல் கடை ஊழியன் வரை எல்லாரிடம் சொல்லியாகிவிட்டது . அவர் பணத்தை அவர் காண வேண்டும் என்ற ஆசை . ஏகப்பட்ட கடிதம் , தனி கோப்பு என்று எல்லாம் செய்தாகி பலன் இல்லை . கட் ஆப் எண்பத்தி ரெண்டு . ஒரு வருஷம் கூட .. சாரி என்றார்கள் . சார் , நாற்பது வருஷ சர்வீஸ் .என்றேன் …. கேஸ் போடு …. ஜட்ஜு கிட்ட கூட்டி போ ..

    ..தப்பில்லையா சார் …

    பணம் வேணும்னா எதை வேணா செய்யலாம் ..

    சண்டை போட்டு பணமா … வேணாம் .அடுத்த பஸ்ல போயிடலாம் .

    இல்ல .நாளைக்கு அம்மாவுக்கும் உபயோகமாக இருக்கும் என்றேன்

    அவர் பார்த்த பார்வையின் அர்த்தம் அப்போது விளங்கவில்லை .

    இல்ல பா … ரங்கா விலாஸ்ல காபி சாப்ட்டுட்டு போலாம் .

    ரெண்டு வாரம் கழித்து ஒரு கடுதாசி வந்தது

    கலெக்டரின் பச்சை கையெழுத்து .

    என் எழுத்துக்கு அவ்வளவு பலமா ?

    அப்பாவை எழுப்பினேன் . பத்து மணிக்கு பட்டணம போகணும்
    என்றேன் .

    என்னத்துக்கு என்றார் .

    பெரிய இடம் , கொஞ்சம் நல்லா போனும்…மணியை கூப்பிடவா …

    பிளேடு என்கிட்டே இருக்கு ..தாடியை எடுத்துடு …

    உன் இஷ்டம் என்றார் .

    அங்கவஸ்திரம் போட்டுப்ப இல்ல …

    இப்படி அலங்காரமா போனா எனக்கு வர பணமும் வராது .

    அப்படி இல்ல பா … ஒரு மாநேர்ஸ் என்றேன் ..

    நிறைய பேர் இருந்தார்கள் ..

    கலெக்டர் பேசினார் .. எல்லோரிடம் மன்னிப்பு கேட்டார் . பொருளாதார சூழ்நிலை சரியில்லை என்றார் . கூட்டம் கலைந்தது .

    ஆட்டோ என குரல் கொடுத்தேன் .

    பஸ்லயே போலாம் என்றார் . அவரை கண் கொண்டு பார்க்க முடியவில்லை . அந்த கனமான மனம் அவர் இறந்த போது கூட வரவில்லை .

    Share