திருமால் திருப்புகழ் (149)
கிரேசி மோகன்
அடையாறு அனந்த பத்மநாப ஸ்வாமி
———————————————————————–
தனனா தனந்த தனதனன தான தனனா தனந்த தனதனன தான
தனனா தனந்த தனதனன தான -தனதான….
———————————————————————————————————————-
”நடவா ததென்றும் இனிநிகழ்வு றாது, நிகழ்வா னதன்று நடைபெறுதல்காண,
உயிரோ டிருந்து உடலதனை பேணல் -அறியாமை
எனவோ துசெங்கி ரியருணைவிதேகர், உபதே சமஞ்சரி புகல்மனவிசார,
வழிநா னகந்தை எழுமனமதின் மூலம் -தனில்மூழ்க,
’’அடடா புகுந்த களமிடையில் போக, விஜயா! தளர்ந்து மனைவிலகு மாதர்,
எனவூர் குலுங்கி நகையஅவ மானம் -அடைவாயே,
எடுடா மிகுந்த வலுவுடைய தோளில், எதிராள் உடம்ப ழியசிலையும் வாளி,
எனகீ தைசந்த மொழியுரைமு ராரி -அருள்வாயே
குடமா டுகும்ப முனிகுருகு கேசன், முகமா றுகொண்ட அமரர்படை ஈசன்,
குலமா திரெண்ட ணையமயிலு லாவு, -கொடிசேவல்
துடிவே லணிந்த கரமுடைய மாறன், நடரா சன்முன்பு தொழமறைகள் நாலின்
பொருளோ துசங்க ரியிளையவள் சேயின் – முறைமாம.
வடஆ லிலன்று உலகழிய ஆழி தனிலா டிஅந்த குருவளிபு ரீச
மலைநா டொதுங்கு துளஸிவன மாலி -திருமாலே
படையா கநந்த கிசிலைகதை ஆழி சுடரா ழிகொண்டு கரியமலை போல
அடையா றனந்த கமலமலர் நாபி -பெருமாளே
—————————————————————————————————————
படத்திற்கு நன்றி:
http://bhagavatham.blogspot.in/