Blog

  • வார ராசிபலன் – 21.01.2013 – 27.01.2013

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    வார ராசிபலன்

    மேஷம்: இந்த வாரம் பெண்கள் விழா, விருந்து என்று பரபரப்பாக பல பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். அலைச்சலில் ஆரோக்கியத்தை கவனிக்க மறந்து விடாதீர்கள். உடன் பிறந்தவருடன் நிலவிய பனிப் போர் மறையும். அக்கம் பக்கத்தாருடன் அளவுடன் பழகி வருவது நல்லது. மாணவர்கள் பாடங்களைப் பயில, பரிட்சை வரும் வரை காத்திராமல், நேரம் கிடைக்கும் போது பயின்று வந்தால் மதிப்பெண்களுடன் உங்கள் நற்பெயரும் உயரும். முக்கிய பதவியில் இருப்பவர்கள் ரகசியங்களைக் காப்பாற்றுவதில் உறுதியாய் இருந்தால், வீண் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம்.

    ரிஷபம்: வியாபாரிகள் புதிய முயற்சியில் இறங்குமுன் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டால், உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும். பணியில் இருப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் உடனிருப்பவர்களிடம் வன்மம் பாராட்டாமல் நடந்து கொள்ளுங்கள். உங்களின் கௌரவம் தானே உயரும். மாணவர்கள் எவரையும் எளிதில் நம்பி விடுவது சில சமயங்களில் சிரமத்தைத் தரலாம். எனவே புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது அவசியம். சுய தொழில் புரிபவர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்தாலும், வீண் செலவினங்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் வேண்டிய பொருட்களை வாங்க இயலும்.

    மிதுனம்: வியாபாரிகள் வெளி நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் முன்பு, ஆவணங்களையும், விதிமுறைகளையும் சரிபார்த்துச் செயல்படுதல் நல்லது. இல்லத்தில் அமைதி தவழ்வது பெண்களின் கையில்தான் உள்ளது. தவணை முறையில் பொருள்கள் வாங்குவதற்கு பதிலாக பண இருப்புக்கு ஏற்றவாறு பொருள்களைத் தேர்ந்தெடுங்கள்.பொருளாதரச் சிக்கல்கள் குறையும். பணியில் இருப்பவர்கள் முக்கியமான கோப்புகளைக் கையாள்கையில், மறதிக்கு இடம் அளிக்காதவாறு செயல்படுவது நல்லது. கலைஞர்கள் தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்க்க, தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தவும்.

    கடகம்: பெண்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னகளை வளர விடாதீர்கள். உடனடித் தீர்வுகள், உறவின் விரிசல்களை சரிசெய்துவிடும். பொது வாழ்வில் உள்ளவர்கள் உள்ளவர்கள் நிதானமாகச் செயலாற்றினால் அது உங்கள் உயர்வுக்கு வழி வகுக்கும். இந்த வாரம் நண்பர்களிடையே சிறு சிறு பூசல்கள் வந்து போகும்.எனவே மாணவர்கள் கடந்த கால விஷயங்களைப் பற்றிய விமர்சனங்களில் ஈடுபடவேண்டாம். கூட்டாளிகடையே நிலவி வந்த குழப்பமும் குதர்க்கங்களும் விலகிவிடும். புதிய வியாபார முயற்சிக்கு உற்சாகத்துடன் துணையிருப்பார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

    சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்கள் பெண்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் .தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். வியாபாரிகள் எடுக்கும் பணியில் நிதானத்துடன் செயல்பட்டால், சிக்கல்கள், வேண்டாத மனௗளைச்சல் ஆகிய இரண்டையும் தவிர்த்து விடலாம். கலைஞர்களுக்கு அவர்களின் தன்னம்பிக்கை முயற்சிக்குத் தக்க விதத்தில் துணை புரியும். பணியில் இருப்பவர்கள் வேலை விஷயத்தில் மெத்தனமாய் இராமல், கவனத்துடன் இருத்தல் அவசியம்.

    கன்னி: பொறுப்பில் இருப்பவர்கள் நண்பர்கள் விஷயத்திலும்,மற்றும் அவர்களுக்கென்று பணம் செலவழிப்பதிலும் அளவோடு இருப்பது நல்லது. மாண வர்கள் புதிய இடங்களுக்குச் செல்கையில், அறிமுகம் ஆகாதவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள். பணியில் இருப்பவர்கள் . முக்கியமான கோப்புக்களை உங்களின் நேரடி கவன த்தில் வைத்துக் கொள்ளுங்கள். நேரம் விரையமாகாமல் விரைந்து பணியாற் றலாம். கலைஞர்கள் வரவுக்கு மீறிய செலவுகளுக்கு இடமளிக்காதீர்கள். எவ்வளவு அதிகமான பணியிருந்தாலும், பெண்கள் வேளை தவறாமல் உணவு உண்டு விட்டால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

    துலாம்: கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள், கணக்குகளை ஒழுங்காகப் பராமரித்து வந்தால்,வேண்டிய சலுகைகளைப் பெறலாம். பெண்கள் கைப் பணத்தைப் பார்த்துச் செலவழியுங்கள். கடன் வாங்க வேண்டியிராது. இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்கள், நல்ல வேலையில் அமர்வார்கள். படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றிலும் மாணவர்கள் வெற்றி வாகை சூடும் வாய்ப்புக்கள் பல வந்து சேரும். இந்த வாரம் கலைஞர்களின் கலகலப்புக்கு இடையே சிறிது சலசலப்பும் அவ்வப்போது தலைகாட்டும். எனவே சக கலைஞர்களின் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

    விருச்சிகம்: பெண்களுக்கு உறவினரோடு உரையாடி மகிழும் வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கும். பெற்றோர் காட்டும் அன்பும், அரவணைப்பும் பிள்ளைகளை உற்சாகப் படுத்தும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் மதிப்பு கூடும்.இயந்திரம், இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளவர்கள் கவனத்துடன் செயலாற்றுவதோடு, தகுந்த பாதுகாப்பு விதிகளையும் கடை பிடிப்பது நல்லது..வியாபாரிகள் புதிய துறையில் இறங்கும் முன்பு, ஏற்ற இறக்கங்களை அறிந்து கொண்டால் அதற்குத் தக்கவாறு செயலாற்ற முடியும்.

    தனுசு: நேரம் தப்பித் தூங்கவேண்டிய சந்தர்ப்பங்களுக்கு இடமளிக்காத வகையில்,மாணவர்கள் திட்டமிட்டு பணிகளை முடிப்பது புத்திசாலித் தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கிற்கேற்ப இதமான ஆலோசனை வழங்குங்கள். உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். பணியில் இருப்பவர்கள் தங்கள் துறை தொடர்பான விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்வதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டை எளிதில் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தேவையில்லாமல் காரசாரமான விவாதங்களிலும், விமர்சனங்களிலும் தலையிடாதீர்கள். அமைதியான முறையில் வேலைகள் செல்லும்.

    மகரம்: குடும்ப விவகாரங்களில் பெண்கள் சிறிய விஷயங்களுக்காக சர்ச்சையில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் சிக்கலான நேரங்களில் அனுசரித்து நடந்து கொண்டால், பிரச்னைகள் பெரிதாகாமல் பிசுபிசுத்துவிடும்.கலஞர்கள் வீண் வதந்திக்கு முக்கியத்துவம் அளிக்காமலிருந்தால், நிம்மதி நிலவும். வியாபார நிமித்தம் வெளியூர் செல்கையில், உணவு மற்றும் குடிநீரில் கவனமாய் இருந்தால், தேக உபாதை கள் தலைகாட்டாது. பணியில் இருப்பவர்கள் தாங்கள் புழங்கும் விலையுயர்ந்த பொருட் களின் பரமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். பங்குதாரரிடையே நிலவிய மனஸ் தாபம் நீங்கும்.

    கும்பம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்கள். வியாபாரிகள் அதிக லாபத்தினை எதிர்பார்த்து, குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த காரியத்தினையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செய்து விடுங்கள். கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம். பெண்கள் வீண் செலவுகளைத் தவிர்த்தால், பொருளாதார இழப்புகள் அவ்வளவாய் இராது. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தினால், மதிப்பெண்களோடு, உங்களது மதிப்பும் உயரும்.

    மீனம்: சங்கடம், அனாவசிய சந்தேகம் ஆகியவற்றில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, கலைஞர்கள் வெளிவட்டாரப் பழக்கங்களில் கவனமாக இருத்தல் அவசியம். இந்த வாரம் சக ஊழியர்களின் போக்கில், இணக்கமும், சுணக்கமும் கலந்தே காணப்படும். எனவே பணியில் இருப்பவர்கள் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் கடந்த கால சோதனைகள் தந்த பாடங்களை நினைவில் கொண்டு செயலாற்றினால், வெற்றியும், நிம்மதியும் நிலைத்திருக்கும் . வியாபாரிகள் சரக்குகள் வாங்கும் போதும், விற்கும் போதும், பெரிய தொகைக்கான வாக்குறுதி தருவதில் கவனமாய் இருப்பது நல்லது.

    Share
  • இந்தச் சிரிப்பு…

     

     

    செண்பக ஜெகதீசன்

     

     

    மழையைத்தானே வேண்டினோம்..

    இடையே ஏனிந்த

    இடி வந்து மின்னலுடன்

    இன்னல் தருகிறது..

     

    நல்லது நடக்கும்போது

    நாலு கெட்டது

    நடந்துதான் தீரும்..

    இப்படிச் சொல்லி

    இடியாய்ச் சிரிக்கிறான்

    இறைவன்…!

     

    படத்திற்கு நன்றி:

    http://dzineblog.com/2011/08/28-exciting-photographs-of-weather-storms-for-inspiration.html

    Share
  • Carnivorous Plants – Sundew

    P.Tamizhmuhil Neelamegam

    Droseras, Commonly called as Sundews.They have gummy tentacles which attracts the insects by their bright colour and smell. Sundew is named because of the dew drops at the end of their tentacles which glitter when exposed to sunlight. They primarily grow on acidic bogs and moist sandy areas.

    How does it captures its prey?

    Once an insect lands on the leaf, the tentacles begin to wrap around the prey and the Sundew produces more digestive fluid. More tentacles wrap around the bug, and the digestive process begins. Within hours the Sundew has ingested its catch, leaving only the skeletal remains. Sundews have one of the more powerful digestive systems in the carnivorous plant world.

    This video shows a Drosera plant trapping a midge with its mobile tenticles and rolling its leaf.

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cZ7Fws1HaL0

    The researchers have found that the secret of the quick tentacles involves the releasing of pent-up hydraulic pressure in a sudden burst, and it happens fast.The sundew takes about 75 milliseconds to capture its prey with snap tentacles. These snap tentacles are  one-shot weapons.Once they capture a prey, these tentacles  break off.The sundew grows fast, developing new leaves every three to four days, so losing a snap tentacle does not affect the plant.

    Medicinal uses of the sundew:

    These sundews provide an effective remedy for respiratory ailments and chest problems including coughs, asthma,woophing cough, arteriosclerosis and bronchitis.The plant contains an antibiotic substance that, in pure form, is effective against Streptococcus, Staphylococcus, and Pneumococcus. In European folk medicine, the fresh juice is used for warts and corns, and is taken internally as an aphrodisiac.

    References:

    http://medicinalherbinfo.org/herbs/Sundew.html

    http://www.livescience.com/23488-carnivorous-plants-sundew-tentacles-prey.html

    http://www.gublers.com/Pages/Carnivorous%20Tabs/sundew.html

    To be Continued…

    Share
  • குசலம்

    இன்னம்பூரான்

    க்ஷேமம். க்ஷேமத்திற்கு எழுதவேணும். உபயகுசலோபரி… இது வைணவ பரிபாஷை. நேரில் பார்க்க நேர்ந்தால், ஒரு படி மேல் சென்று. ‘ தேவரீர் பாங்கா?’ என்று கனிவுடன் குசலம் விசாரிப்பதும், ‘அடியேன்! அங்கே? என்று மென்மையாக விடையுடன்,வினவுவதும் செவியில் இன்பமாகத்தான் விழுகிறது. தன் இல்லம் குடிசை. அவரில்லம் திருமாளிகை. பரிபாஷைகளை பற்றிய ஆய்வு சுவையாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன். பெருமாள் கோயிலில் ‘தாயார்’. சிவன் கோயிலில் ‘அம்பாள்’. வீபூதியை திருநீறு என்று சொல்வதில்லையா? எல்லா மொழிகளிலும் இந்த பண்பாடு இருக்கிறது. கலாச்சாரம் என்ற சொல்லுக்கு பொருத்தமான தமிழ்ச்சொல் தேடியபோது, ரசிகமணி அவர்களின் இந்த சொல்லாக்கம் கிடைத்தது என் பாக்கியம்.   இப்படி பலவிதமாக அடுக்கிக்கொண்டே போகலாம், தருமமிகு சென்னையின் சேரிவாழ் பாமரமக்களின் பழகுதமிழும் சரி, ‘டீ பார்ட்டி’ போன்ற ஆங்கிலம் கலந்த கடந்த நூற்றாண்டுக்கும் முந்திய நாட்டுப்பாடலும் சரி, மொழியின் அழகு பழகுமொழியில். இதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்.

    இந்த ‘நலம். நலம் அறிய அவா.’ என்ற சொற்றொடர் நமது மடலாடலில் சம்பிரதாயம் மட்டுமா அல்லது மனமறிந்த உணர்வு கூடிய வினாவா என்பது ஐயத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. சவுக்கடி கடிதங்கள் கூட இத்தகைய சம்பிரதாய பண்பாடுகளை பின்பற்றுவதும் காணக்கிடைப்பது தான். இது எப்படி இருக்கிறது?:

    ‘என் அன்பார்ந்த எதிர்கட்சி தலைவரே! நீங்கள் என்னை கடுங்கோபத்தில் தாக்கி நாளை நாடாளும் மன்றத்தில் பேசப்போவதாக, ஊடகங்களில் சொல்லியிருக்கிறீர்கள். முன்பே தெரிந்திருந்தால், அதைக் கேட்டு பயன்பெற நான் வந்திருப்பேன். ஆனால் பாருங்கள். நான் நாளை முயல்வேட்டைக்கு வருவதாக என் தொகுதியிடம் வாக்களித்து விட்டேன். மன்னிக்கவும். மறக்காமல் உங்கள் பொருள் செறிந்த உரையின் நகலை இந்த விலாசத்துக்கு அனுப்புங்கள். எனக்கு உபயோகம் ஆகும்.” இப்படிக்கு ஜான் டுகான். [பி.கு. உம்மை நார் நாராக கிழித்துப்போடாவிட்டால் என் பெயரை டுகான் ஜான் என்று மாற்றிக்கொள்வேன்!]

    இங்கிலாந்தில் இப்படி ஒரு பண்பாடு! நம்மூரில் அம்மாமி சுஷ்மா ஸ்வராஜுக்கும் அன்னை சோனியா மாமிக்கும் ஒரு மடலோடல் நடந்தால் எப்படியிருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். இந்த மடலாடல் குழுக்களுடன் பழகிப், பழகி, நானே திசை மாறுகிறேன், பாருங்கள்! எல்லாம் இந்த ‘வல்லமை’யால் வந்த வினை! சுக்கானே! திரும்பு.

    இந்த காலம் யாத்திரை என்றால் டூரிஸ்ட். அந்த காலத்தில் யாத்ரீகர்கள் கால் நடையாகவே, உழவாரப்பணி செய்து கொண்டே, திருத்தலங்களுக்குச் சென்று, இறைவனை தரிசித்து, தொழுது, பிரபந்தங்களும், பதிகங்களும் பாடி, பக்தியைப் பரப்பி வந்தார்கள். அப்படித்தான் எங்கள் இன்னம்பூர் எழுத்தறிவிநாதர் பெருமானின் கஜப்புருஷ்ட விமான ஆலயம் பாடஸ்தலமாயிற்று.

    “சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்

    முனிவனாய் முடி பத்துடை யான்றனைக்

    கனிய வூன்றிய காரணம் என்கொலோ

    இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே.”

    ஆழ்வாராதிகள் சேவித்த ஆலயங்கள் மங்களாசாஸனம் பெற்றன. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்’ என்றபடி எங்கெங்கும் எங்கள் முன்னோர்களும், ராஜ பரம்பரைகளும் (இது பற்றி ஒரு ஆய்வுப் பட்டறை நடக்கப்போகிறது.) பாமரர்களும் கோயில்கள் எழுப்பி வழிபாடு நடத்தியதால், யாத்ரீகர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்களில் ஒருவர் மதுரைக்கு வந்திருந்தார். அனல் வாதம், புனல் வாதம் எல்லாம் செய்து எதிர்க்கட்சியை சிதறடித்தார். அரசனோ அந்தக்கட்சி. ராணி இவர் பக்கம். ராஜாவும் சாய்ந்து விட்டார். இதற்குள் நாட்கள்/ மாதங்கள் பல கடந்து விட்டன போலும். இவர் ஊர்ப்பக்கம் திரும்பாததால், அப்பாவுக்கு ஒரே கவலை. அடித்துப்பிடித்துக்கொண்டு, மூப்பையும். களைப்பையும் பொருட்படுத்தாமல், ‘பெத்த மனம் பித்தாக’ அவரே மதுரையில் ஆஜராகி விட்டார். பிள்ளையாரையும் கண்டு களித்து, உச்சி முகர்ந்து ஆசு வாசப்படுத்திக்கொண்டபின், பிள்ளையாண்டான் அன்னையைப் பற்றி கேட்கவில்லை. அண்டையை பற்றி கேட்கவில்லை. ஊரார் சுபிக்ஷத்தைப் பற்றி கேட்கவில்லை!

    தத்துவமல்லவோ பேசினார், தந்தையுமான மைந்தன்! பிள்ளையார் (திருஞானசம்பந்தர்) சிவபாத இருதயரிடம் கேட்டது:

    மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக்
    கண்ணில் நல்லஃது   உறும் கமுமல வள நகர்ப்
    பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

    “இவ்வுலகின்கண் நல்ல முறையில் தினமும் வாழலாம்; சிந்தித்துப்பார்த்தால் அடுத்த உலகில் பெறவேண்டிய நல்ல கதிக்கும் யாதொரு விதமான குறையும் ஏற்படாது; கண்ணுக்கினிய நல்ல வளத்தோடு கூடிய கழுமலம் என்னும் சீர்காழிப்பதியின்கண் பெண்ணின் நல்லவளாகிய இறைவியுடன் பெருந்தகையாகிய சிவபிரான் நலமாக இருக்கிறான் அல்லவா1”

    ~ அ.ச.ஞானசம்பந்தன்

    அதான்! ‘தெய்வம் தந்த வீடு’ என்று பாடினார், கண்ணதாசன்.

    இன்னம்பூரான்

    20 01 2013

    உசாத்துணை: அ.ச. ஞானசம்பந்தன் (2005): இன்னமுதம். பக்கம் 25

    Share
  • தமிழ்முகிலின் பொன்வண்டு கதைக்கான இறுதிப் பகுதி

    பி. தமிழ்முகில் நீலமேகம்

    பொன் வண்டு சிறுகதையின் முதல் பகுதி

    மருத்துவமனையை அடைந்ததும் அவசர அவசரமாய் ஓடிச் சென்று அங்கிருந்த மருத்துவர் ஒருவரிடம் நடந்ததைக் கூறினார் நடத்துனர். உடனே, ஒயிலாவை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு வருமாறு அங்கிருந்த செவிலியரிடம் சொல்லிவிட்டு வேகமாக அவசரப் பிரிவு நோக்கிச் சென்றார்.இதற்குள் விஷயம் கேள்விப்பட ஒயிலரசியின்  தாய் தந்தையர் மற்றும் அவளது பாட்டி அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர்.

    யாரிடம் என்ன கேட்பது என்று புரியாமல் நின்று விழித்துக் கொண்டிருந்த அவர்களை, ஓர் செவிலி எதிர்கொண்டாள். “நீங்க தான் அந்த காலேஜ் பொண்ணப் பெத்தவங்களா? அதோ, அந்த ரூம்ல தான் டாக்டர் உங்க பொண்ணப்  பாத்துட்டு இருக்காரு.சத்தம் போடாம அங்க இருக்க பெஞ்ச்ல போய் உக்காந்திருங்க.டாக்டர் வந்துடுவாரு” என்று சொல்லிவிட்டு அவளும் அவசர அவசரமாய் சென்று விட்டாள். மிரண்ட பார்வையுடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு மனது ஒரு நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தனர் மூவரும்.
    “ஐயோ….எம்புள்ளைக்கு என்னாச்சோ …..அம்மா !!! பண்ணாரி மாரியாத்தா !!! எம்புள்ளைய காப்பாத்தி எங்கிட்ட கொடுத்துப்போடு தாயே !!! உனக்குப் பட்டுச்சேலை சாத்திப் பொங்கப் படையல் வைக்கிறேன்” என்று அழுது  அரற்றிக் கொண்டிருந்தாள் ஒயிலரசியின்  தாய்.சற்று நேரத்தில், ஒயிலரசியின் தங்கையும் பள்ளியிலிருந்து வந்து விட்டாள்.  அவளைக் கண்டதும் அந்தத் தாயின் அழுகை மேலும் அதிகமாயிற்று.”மஞ்சு கண்ணு !!! அக்காவுக்கு என்னாச்சுன்னே தெரியலடி.டாக்டரும் உள்ள போயி ரொம்ப நேரம் ஆச்சுது.எனக்கு என்னமோ பயமா இருக்குடி கண்ணு ” என்றாள்.”அக்காவுக்கு ஒன்னும் ஆகாதும்மா. கவலைப் படாதீங்க” என்று மஞ்சு அம்மாவுக்கு ஆறுதல் கூறினாலும், அவளது நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையே பயப் பந்து உருண்டோடி அவளது இதயத் துடிப்பை அதிகமாக்கிக் கொண்டிருந்தது.

    சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் ” உங்க பொண்ணுக்கு Posterior epistaxis.அதாவது, மூக்கோட பின் பகுதியில இருந்து ரத்தம் வந்திருக்கு.இந்த மாதிரி ஏற்கனவே வந்திருக்கும் போல.ஏன் நீங்க முன்னாடியே வரல? ” என்று கேட்ட மருத்துவரின் முகத்தை மிரட்சியுடன் பார்த்தனர் தாய்தந்தையர்.இருவரும் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.அவர்கள் இருவருக்கும் அப்படி ஒன்று நடந்ததை அறிந்திருக்கவில்லை.ஆம்.ஒயிலா அதற்கு முன் சில முறை அங்ஙனம் இரத்தம் வந்ததை சாதாரணமாய் எடுத்துக் கொண்டு விட்டிருந்தாள். பெற்றவர்களிடம் சொன்னால் பயந்து விடுவார்கள்.”சாதாரணமாய் மூக்கிலிருந்து இரத்தம் வடிகிறது தானே.சில்லு மூக்கு உடைந்திருக்கும் என்றெண்ணி உங்க பொண்ணு  அதை பெரிதாக எடுத்துக்  கொள்ளாததால், அது இன்னைக்கு  அவரது உயிருக்கே ஆபத்தாய் ஆகியிருக்கு .ரொம்ப கவலைக்கிடமான நிலைல தான் இருக்காங்க.நாங்க எங்களால முடிஞ்ச அளவு உயிரை காப்பாத்த முயற்சிக்கிறோம்.அதற்கு மேல ஆண்டவனைத் தான் நம்பணும்.” என்று மருத்துவர் சொல்வதைக் கேட்டதும் ஒயிலாவின் தாய் மயக்கமுற்று கீழே சரிந்தாள்.

    ஒரு மணி நேரம் சென்றிருக்கும். வெளியே வந்த மருத்துவரின் முகத்தைப் பீதியுடன் பார்த்தனர் அனைவரும். ” Posterior epistaxis னால மரணம் ஏற்படுவது என்பது ரொம்ப அபூர்வம் தான்.ஆனாலும் நடக்க வாய்ப்பிருக்கு. அது தான் உங்க மகள் விஷயத்துலயும் ஏற்பட்டிருக்கு.என்னை மன்னிச்சிடுங்க.என்னால உங்க மகளைக் காப்பாத்த முடியல” என்ற மருத்துவரின் காலடியில் மீதும் மயக்கமுற்று சரிந்தாள் ஒயிலாவின் தாய்.அவ்விடமே சோகமும் அழுகையுமாய் நிறைந்திருந்தது.

    சில நிமிடங்கள் பிரமை பிடித்தவராய் அமர்ந்திருந்த ஒயிலாவின் தந்தை, மெல்ல எழுந்து மருத்துவரிடம் சென்றார். “அய்யா, எம் மகள் இந்த உலகத்துல மீண்டும் வாழ வழி செய்வீங்களா? ” என்றவரின் முகத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தார் மருத்துவர். ” எம் மகளோட உடல் உறுப்புகள் எதெல்லாம் தானம் பண்ண முடியுமோ, அதெல்லாம் தேவையானவங்களுக்கு எடுத்துப்  பொருத்துங்க அய்யா. அவங்க மூலியமா எம்மக இந்த உலகத்துல உசுரோட உலவிட்டு இருப்பா.” என்று சொல்லிவிட்டு மௌனமாய் நின்றார் அத்தந்தை. ” நீங்க கையெழுத்து போட சொல்ற எடத்துல கையெழுத்து போடறேன்.சீக்கிரம் உறுப்பு தானத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று கூறிவிட்டு சுவற்றில் சாய்ந்தார்.

    இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடித்து அழுகையுடன் தரையில் சாய்ந்தாள் ஒயிலாவின் தாய். ஒயிலாவின் அலமாரியை திறந்த மஞ்சு, அங்கு ஒயிலாவிற்குப் பிடித்த பொன்வண்டு அவள் போட்டு வைத்திருந்த தீப்பெட்டியை விட்டு வெளியே வர எத்தனித்துக் கொண்டிருந்ததைக் கண்டாள். மஞ்சு பெட்டியை எடுத்துத் திறந்தது தான் தாமதம், அது விர்ரென்று பறந்து வந்து வீட்டிலிருந்த அனைவரையும் சுற்றிச் சுற்றி வந்தது. அது ஒயிலா ” நான் சாகவில்லை. உங்களோடு தான் இருக்கிறேன்” என்று சொல்வது போலிருந்தது. ஆம். ஒயிலா மீண்டும் இவ்வுலகில் உயிரோடு தான் உலவுகிறாள். தன் உறுப்புகளால் பலரை வாழ வைத்ததன் மூலம்.

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் !

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p_o4aY7xkXg

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0rocNtnD-yI

    [General relativity & Gravity]


    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    அஞ்ஞான உலகிலே இன்று

    விஞ்ஞானம் மாயையாய் ஆகிப் போச்சு !

    நியூட்டன் வடித்த ஈர்ப்பில் யுக்தி

    பியூட்டி இழந்தது !

    நிறைப் பளுவுக்கு ஏற்ப

    கோளின் காலவெளி வளைவு தான்

    ஈர்ப்பு விசை யென்று

    புதிதாய் விளக்கிய ஐன்ஸ்டைன்

    பொது ஒப்பியல் நியதியும் இப்போது

    பொய்யாகப் போகுமா ?

    புதிய பெயர் ஈர்ப்பு விசைக்கு

    “நுட்ப வடிவ வெளிப்பாடு”

    ஈர்ப்பு விசை

    வெப்பத் தேய்வு விசையென்று

    வெர்லிண்டே சொல்கிறார்

    காமாவின் பெரு வெடிப்பு விதிப்படி

    தாமாகப் பிரபஞ்சம் தோன்றியதும்

    புராணக் கதை யாகப் போகுது !

    படைப்போன் இன்றித்

    சுயமாய்ப் பிறந்த தாம் நமது

    பரிதிக் கோள் மண்டலம் !

    பால்வீதி விண்மீன் மந்தையில்

    காரண விளைவு விதியின்றி

    ஓரணுவும் தோன்றாது,

    மூலகம் ஆகாது

    மூலக் கூறாய்ச் சேராது

    உலகியற்றிய

    ஊழி முதல் ஏகாந்த மூலனின்றி

    ஏழுலகும் தோன்றுமோ ?

    குயவனின்றிப் பானைகள் தோன்றா

    மாயப் பிரபஞ்சத்தில்

    நிஜம் எது ? நிழல் எது ?
    +++++++++++++
    Fig 8 Einstein Manages Gravity

    “என் புதிய கண்ணோட்டத்தில் “ஈர்ப்பியல் விசை” என்னும் ஒன்றை நான் நம்புவதில்லை. தற்போதைய விஞ்ஞானம் ஈர்ப்பியல் பண்பாட்டைத் தவறான கருத்தோட்டத்தில் காண்கிறது. எப்படி இழுப்பியல் பண்பாடு [Elasticity] அணுக்களின் இயக்கத்தால் எழுகிறதோ அதுபோலவே ஈர்ப்பியல்பும் வெளியாகிறது. ஈர்ப்பு விசை என்பது ஒருவித வெப்பத் தேய்வு விசையே [Entropy Force]. அது இடம் மாறும் அண்டக் கோள்கள் அமைந்துள்ள அரங்கத்துக் கேற்ப மாறுகிறது. ஈர்ப்பு விசையும், பெரு வெடிப்பு நியதியும் ஒருவித மாயக் கருத்துகளே. [Gravity and The Big Bang Theory could be an illusion.”]

    டாக்டர் எரிக் வெர்லிண்டே [பேராசிரியர், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகம்]

    சனிக் கோளின் வளையங்களைச் சீராய்ச் சுற்ற வைக்கும் ஈர்ப்பு விசை, ஒழுங்கீனத்தை மிகையாக்கும் இயற்கைப் பண்பாட்டின் ஒருவிதக் கிளை விளைவே [Byproduct of Nature’s Propensity to maximize disorder (Entropy)]

    டென்னிஸ் ஓவர்பை [Dennis Overbye, Times Writer]

    “டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்! அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன! நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்! அது இரு நூறாண்டுகள் நீடித்தன! இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்! அது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது!”

    ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856-1950)

    ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி தற்கால மானிட ஞானத்தில் உதயமான ஒரு மாபெரும் சித்தாந்தச் சாதனை.

    பெர்ட்ராண்டு ரஸ்ஸல் (1872-1970)
    fig-4-newton-einstein-gravity.jpg

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=R9FVFh3HYaY

    [ Michio Kaku on the 4 Forces of Nature. ]

    “நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி, மெய்ப்பொருள் ஞானத்தைத் தெளிவு படுத்தும், ஓர் உன்னத தெய்வீகத்தைப் பணிவுடன் மதிப்பதுதான் என் மதம். அறிவினால் அளந்தறிய முடியாத பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உண்டாக்கிய ஓர் உயர்ந்த சக்தி எங்கும் நுட்ப விளக்கங்களில் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான், என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது. ‘

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    “எனது ஒப்பியல் நியதி மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மானியன் என்று பாராட்டும். பிரான்ஸ் என்னை உலகப் பிரமுகன் என்று போற்றி முழக்கும். நியதி பிழையானது என்று நிரூபண மானால், பிரான்ஸ் என்னை ஜெர்மானியன் என்று ஏசும்! ஜெர்மெனி என்னை யூதன் என்று எள்ளி நகையாடும்! “

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    ‘விண்டுரைக்க அறிய அரியதாய், விரிந்த வானவெளி யென நின்றனை! அண்ட கோடிகள் வானில் அமைத்தனை! அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை! மண்டலத்தை அணுவணு வாக்கினால் வருவது எத்தனை, அத்தனை யோசனை தூரம் அவற்றிடை வைத்தனை! பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை! பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை! வாயு வாகி வெளியை அளந்தனை! விண்ணை அளக்கும் விரிவே சக்தி! ‘

    மகாகவி பாரதியார் (1882-1921)

    Four fundamental forces
    four forces of nature

    நூலிழை நியதிவாதி கூறுகிறார் : ஈர்ப்பு விசை, பெரும் வெடிப்பு என்பவை மாயையாய் இருக்கலாம்

    ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகப் பௌதிகப் பேராசிரியர், எரிக் வெர்லிண்டே [Eric Verlinde] விஞ்ஞானிக்கு நியூட்டன், ஐன்ஸ்டைன் இருவரும் விளக்கிய “ஈர்ப்பியல் விசை மீது இப்போது நம்பிக்கை இல்லை. இது [2010- 2013] ஆண்டுகளில் பல விஞ்ஞானிகளை பெரு வியப்பில் தள்ளி இருக்கிறது ! எரிக் வெர்லிண்டே சாதாரண ஒரு விஞ்ஞானப் படிப்பாளி அல்லர். உலகப் புகழ்பெற்ற “நூலிழை நியதியை” [String Theory] முதன்முதல் விஞ்ஞானிகளுக்கு அறிவித்தவர். “ஸ்பைனோஸா பரிசு” [Spinoza Prize : The Dutch Nobel Prize] பெற்ற வெர்லிண்டர் ஈர்ப்பியல் விசையும், பெரு வெடிப்பு நியதியும் ஒரு மாயக் கோட்பாடாக இருக்கலாம் என்றொரு மாற்றுக் கருத்தைக் குறிப்பிடுகிறார். ஐன்ஸ்டைன் ஈர்ப்பு விசையைத் தன் பொது ஒப்பியல் நியதியாக விளக்குகிறார். ஈர்ப்பு விசை என்று ஒன்றில்லை. அதற்கு வெர்லிண்டை இடும் புதிய பெயர் “நுட்ப வடிவ வெளிப்பாடு.” [Microscopic Formulation, called Emergence].
    பிரபஞ்சத்தில் நான்கு வித அடிப்படை விசைகள் [Four Fundamental Forces of Nature] உள்ளன.

    1. ஒன்று அண்டக் கோள்களுக்கு இடையில் உள்ள ஈர்ப்பு விசை [Gravitational Force]. அதனால்தான் நாம் யாவரும் பூமியோடு ஒட்டி உலவுகிறோம்.

    2. இரண்டாவது மின்காந்த விசை [Electromagnetic Force]. அதாவது மின்காந்தக் கவர்ச்சி விசை.

    3. அணுக்கருத் துகள்களை [நியூட்ரான், புரோட்டான்] அணுவுக்குள் இறுக்கிப் பிணைத்துள்ள அழுத்தமான விசை [Strong Force in the Nucleus].

    4. கன உலோகங்களில் கதிரியக்கத் தேய்வால் [Radioactive Decay] மென்மை விசைப் பிடியிலிருந்து எளிதில் நீங்கும் அணுக்கருத் துகள்களின் வலுவற்ற விசை. [Weak Force in the Nucleus].

    Entropy

    Gravitational Force

    நாம் உணர்ந்த இயற்கை விசைகளிலே மேலான முறையில் பிரபஞ்ச ரீதியாக ஏற்றுக் கொள்ளப் படுவது ஈர்ப்பு விசையே. சூரியனும் அதைச் சுற்றி வலம்வரும் அண்டக் கோள்களும், அந்த சூரிய மண்டலம் போன்ற கோடான கோடி விண்மீன் மந்தை கொண்ட காலக்ஸிகளும் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாது பின்னிப் பிணைத்துச் சீராய் நகர்த்தி வருவது ஈர்ப்பு விசையே. ஈர்ப்பியல் விசை சக்தியுள்ள எல்லா வற்றையும் பாதிக்கிறது. சக்தியுள்ள எல்லாவற்றாலும் ஈர்ப்பு விசையும் பாதிப்படைகிறது. அகில ரீதியாக ஆளுமை செய்யும் ஈர்ப்பு விசையின் அடிப்படைச் சமன்பாடுகளரெல்லாம் “வெப்பத்துறை இயக்கவியல் விதிகளையும்” [Thermodynamics Laws], நீர்த்துறை இயக்கவியல் விதிகளையும் [Hydrodynamics Laws] ஒத்திருப்பதாக வெர்லிண்டே அழுத்தமாகக் கூறுகிறார். ஈர்ப்பியல் விசைக்குள்ள அவ்வித ஒருமைப் பாடுகளை இதுவரை யாரும் எடுத்து விளக்கியதில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
    முதல் பௌதிக விஞ்ஞானி கலிலியோ, ஐஸக் நியூட்டன் சுமார் 300 ஆண்டுகட்கு முன்பு கூறிய ஈர்ப்பியல் கோட்பாடு களை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மாற்றினார். 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் எரிக் வெர்லிண்டே வெளியிட்ட “ஈர்ப்பியலின் மூலத் தோற்றமும், நியூட்டன் விதிகளும்,” [On The Origin of Gravity and The Laws of Newton ] என்ற ஓர் ஆய்வு அறிக்கையில் ஈர்ப்பு விசை, பெரு வெடிப்பு இவற்றைத் தான் நம்பவில்லை என்று வெளியிட்டுள்ளார். மேலும் எரிக் வெர்லிண்டர் : “ஈர்ப்பியல் விசை யானது நாமறிந்த வெப்பத்துறை இயக்கவியல் விதிகளின் கிளை விளைவே [Consequence of the Laws of Thermodynamics] ” என்றும் கூறுகிறார்.

    Fig 1A How Gravity Works-1

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த ‘ஒப்பியல் நியதி’

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த ‘ஒப்பியல் நியதி ‘ [Theory of Relativity] அகில வெளி, காலம், பிண்டம், சக்தி [Space, Time, Matter, Energy] ஆகிய எளிய மெய்ப்பாடுகளை அடிப்படையாக் கொண்டு எழுதப் பட்டது! புது பெளதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை! ஆரம்பத்தில் பலருக்குப் புரிய வில்லை! ஆதலால் பலர் நியதியை எதிர்த்து வாதாடினர்! மானிடச் சிந்தனை யூகித்த மாபெரும் எழிற் படைப்பு, அவ்வரிய ‘ஒப்பியல் நியதி ‘ என்று கூறினார் ஆங்கிலக் கணித மேதை பெர்ட்ராண்டு ரஸ்ஸல். பல நூற்றாண்டுகளாய்ப் பரந்த விஞ்ஞான மாளிகையை எழுப்பிய, உலகின் உன்னத மேதைகளான, ஆர்க்கிமெடிஸ் [Archimedes], காபர்னிகஸ் [Copernicus], காலிலியோ [Galileo], கெப்ளர் [Kepler], நியூட்டன் [Newton], ஃபாரடே [Faraday], மாக்ஸ்வெல் [Maxwell] ஆகியோரின் தோள்கள் மீது நின்று கொண்டுதான், ஐன்ஸ்டைன் தனது ஒப்பற்ற அகில நியதியை ஆக்கம் செய்தார். ஐன்ஸ்டைன் படைத்து முடித்த பிறகு, இருபதாம் நூற்றாண்டிலும் விஞ்ஞான வல்லுநர்களான ஹென்ரி பாயின்கரே [Henri Poincare], லோரன்ஸ் [Lorentz], மின்கோவஸ்கி [Minkowski] ஆகியோர், ஒப்பியல் நியதியை எடுத்தாண்டு, மேலும் செம்மையாகச் செழிக்கச் செய்தனர். ஆதி அந்தம் அற்ற, அளவிட முடியாத மாயப் பிரபஞ்ச வெளியில் தாவி, ஈர்ப்பியல், மின்காந்தம் [Gravitation, Magnetism] ஆகியஇவற்றின் இரகசியங்களை அறிந்து, அணுக்கரு உள்ளே உறங்கும் அளவற்ற சக்தியைக் கணக்கிட்டு வெளியிட்டது, ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி!

    இரண்டாம் உலக மகா யுத்தத்தை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்குமாறு 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதியவர், ஐன்ஸ்டைன்! அக்கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதிய மூவர், ஐரோப்பிய யுத்தத்தின் போது அமெரிக்காவுக்கு ஓடி வந்த ஹங்கேரிய விஞ்ஞான மேதைகள்: லியோ ஸிலார்டு [Leo Szilard], எட்வர்ட் டெல்லர் [Edward Teller], யுஜின் வைக்னர் [Eugene Wignar]. ஹிட்லர் அணுகுண்டைத் தயாரிக்கும் முன்பே, அமெரிக்கா முதலில் உண்டாக்க வேண்டு மென்று, ஐன்ஸ்டைனை ஒப்பவைத்துக் கையெழுத்திட வைத்தவர்கள். அணுசக்தி யுகத்தை துவக்கி உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன், அணுகுண்டு பெருக்கத்தையும், சோதனைகளால் எழும் கதிரியக்கப் பொழிவுகள் தரும் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்!

    Relativity and gravity

    ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி

    ஒப்பியல் நியதி பொது, சிறப்பு என்று இரண்டு பிரிவுகளில் எழுதப் பட்டுள்ளது. சிறப்பு நியதியின் வாசகங்களில் ஒன்று: அகில வெளியில் எந்த முடத்துவக் கூண்டு நோக்கியிலும் [Inertial Frame of Reference] ஒளியின் வேகம் நிலையானது [Constancy of the Velocity of Light]. ஓர் இயங்கும் அண்டத்தின் [Moving Body] வளர்வேகம், சீர்வேகம் அல்லது தளர்வேகம் [Acceleration, Uniform motion, or Deceleration] எதுவும், அண்டம் வெளியாக்கும் ஒளியின் வேகத்தை பாதிக்காது! ஒளியைத் தூரத்தில் இருந்து எதிர்கொள்ளும் வேறு ஓர் அண்டத்தாலும் ஒளிவேகம் பாதிக்கப் படாது! உதாரணமாக 60mph வேகத்தில் ஓடும் ரயில் வண்டியிலிருந்து, ஒரு பந்தை 5mph வேகத்தில் வீசி எறிந்தால், அதைத் தரையில் நிற்கும் ஒரு மனிதன் கையில் பற்றும் போது, பந்து 55mph ஒப்பு வேகத்தில் [50+5=55mph Relative Velocity] அவனைத் தாக்குகிறது! ஆனால் வண்டி எஞ்சின் மின் விளக்கிலிருந்து 186,000 mps வேகத்தில் கிளம்பும் ஒளி தரை மனிதன் கண்களில் படும் போது, ஒளியின் வேகம் அதே 186,000 mps. இரயிலின் வேகம் பந்தின் ஒப்பு வேகத்தை மாற்றியது போல், ஒளியின் வேகத்தைப் பாதிப்பது கிடையாது. அதாவது ஒளிவேகம் ‘தனித்துவம் ‘ அல்லது ‘முதற்துவம் ‘ [Absolute] உடையது என்று கூறினார் ஐன்ஸ்டைன்! ஓளி வீசும் ஓர் அண்டத்தின் வேகம், அதிலிருந்து வெளியாகும் ஒளியின் வேகத்தை மாற்ற முடியாது!

    அடுத்த வாசகம்: அண்ட வெளியில் ஒளிவேகத்தை மிஞ்சிய வேகம் வேறு எதுவும் கிடையாது! அதாவது வெவ்வேறு கூண்டு நோக்கிகளில் நிற்கும் நபர்களுக்கு இடையே உள்ள ஒப்புவேகம், ஒளிவேகத்தை மிஞ்ச முடியாது! அகில வெளியில் ஒளி பயணம் செய்ய நேரம் எடுக்கிறது. ஒளியின் வேகம் வினாடிக்கு 186,000 மைல். ‘ஓளியாண்டு ‘ [Light year] என்பது தூர அளவு. அதாவது ஒளிவேகத்தில் ஓராண்டு காலம் செல்லும் தூரம்.
    fig-4-general-relativity.jpg

    கோடான கோடி விண்மீன்களின் தூரத்தை ஒளியாண்டு அளவியலில் தான் நிர்ணயம் செய்கிறார்கள். சூரிய ஒளி பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடம் ஆகிறது. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் 91 மில்லியன் மைல் [186,000 x 8 x 60]. ஆகவே தூரத்தில் உள்ள ஓர் அண்டத்திலிருந்து எழும் ஒளி, பூமியில் நிற்கும் ஒரு நபரின் கண்களைத் தொடும் போது, அது பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமான ஒரு நிகழ்ச்சி!

    விரிந்து கொண்டே போகும் விண்வெளி வளைவு!

    பொது ஒப்பியல் நியதி பிரபஞ்சத்தின் அமைப்பு எத்தகையது என்று ஆய்வு செய்கிறது. ஐன்ஸ்டைன் தனித்துவ, நிலைமாறாத [Absolute] அகிலத்தையோ, காலத்தையோ ஒப்புக் கொள்ளாமல் சில விஞ்ஞானிகள் ஒதுக்கித் தள்ளினார்! நோக்காளன் [Observer] அளக்கும் காலமும், வெளியும் அவன் நகர்ச்சியை [Motion] ஒட்டிய ஒப்பியல்பு உடையவை! ஆகவே நீளமும், காலமும் தனித்துவம் இழந்து விட்டன! அவை இரண்டும் அண்டத்தின் அசைவு அல்லது நோக்குபவன் நகர்ச்சியைச் சார்ந்த ஒப்பியல் பரிமாணங்களாய் ஆகிவிட்டன. வேகம் மிகுந்தால் ஒன்றின் நீளம் குன்றுகிறது; காலக் கடிகாரம் மெதுவாகச் செல்கிறது! விண்வெளியின் வடிவம் சதுரப் பட்டகமா [Cubical] ? அல்லது நீண்ட கோளமா ? ஒரு வேளை அது கோளக் கூண்டா ? அல்லது அது ஓர் எல்லையற்ற தொடர்ச்சியா [Unbounded Infinity] ?

    fig-3-gravity-probe-b.jpg

    fig-1a-gravity-probe-1.jpg

    அகில வெளியின் எல்லையைக் கணிக்க இருப்பவை இரண்டு கருவிகள்: பல மில்லியன் மைல் தொலைவி லிருந்து பூமியின் மீது, சுடரொளி வீசும் கோடான கோடிப் ‘பால் மயப் பரிதிகள் ‘ [Milky Way Galaxies] எழுப்பும் ஒளி, மற்றொன்று அவை அனுப்பும் வானலைகள் [Radio Waves]. ஒளி எல்லாத் திக்குகளிலிருந்தும் பூமியைத் தொடுவதைப் பார்த்தால், ஒன்று அது ஒழுங்கமைப்பு [Symmetrical Shape] உடையது, அல்லது முடிவற்ற தொடர்ச்சி கொண்டது போல் நமக்குத் தோன்றலாம். உண்மையில் அவை இரண்டும் அல்ல! ஐன்ஸ்டைன் கூற்றுப்படி பிரபஞ்சத்தை எந்த ‘முப்புற வடிவியல் ‘ [Three Dimensional Geometry] அமைப்பாலும் உருவகிக்க முடியாது. ஏனெனில் ஒளி நேர்கோட்டில் பயணம் செய்யாது தகவல் ஏதும் அனுப்பாததால், அண்ட வெளியின் எல்லை வடிவு நமக்குத் தெரிவதில்லை! ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி கூறுகிறது: ஓர் அண்டத்தின் பளு [Mass] விண்வெளி மீது, நடு நோக்கிய வளைவை [Curvature of Space towards the Centre] உண்டு பண்ணுகிறது. தனியாக வீழ்ச்சி [Free Fall] பெறும் ஓர் அண்டம், வேறோர் அண்டத்தின் வெளி வளைவுக்கு அருகே நெருங்கும் போது, முதல் அண்டம் அடுத்த அண்டத்தை நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] சுற்றுகிறது. அண்ட கோளங் களின் ஈர்ப்பியல்புக்கு [Gravitation], ஐன்ஸ்டைன் வைத்த இன்னுமொரு பெயர் ‘வெளி வளைவு ‘ [Curvature]. ஐஸக் நியூட்டன் ஈர்ப்பியல்பைத் தன் பூர்வீக யந்திரவியலில் [Classical Mechanics] ஓர் உந்தல் [Force] என்று விளக்கினார்.

    Fig 4 Gravity Bends Light

    விண்வெளியை ஒரு மாளிகை வடிவாகவோ, கோள உருவாகவோ முப்புற அங்களவுகளால் [Three Dimensional] கற்பனை செய்ய இயலாது. ஐன்ஸ்டைன் கூற்றுப்படி அது நாற்புற அங்களவு [Four Dimensional] கொண்டது. அண்ட வெளியின் நான்காம் அங்களவு [Fourth Dimension], காலம் [Time]. கோடான கோடி அண்ட கோளங் களையும், ஒளிமயப் பரிதிகளையும் [Galaxies] பிரம்மாண் டமான பிரபஞ்சம் தன் வயிற்றுக்குள்ளே வைத்துள்ள தால், விண்வெளி வளைந்து வளைந்து, கோணிப் போய் [Curved & Distorted] விரிந்து கொண்டே போகிறது! அண்ட வெளியின் ஈர்ப்பு விசையால் ஒளியின் பாதை பாதிக்கப் படுகிறது நீண்ட தூரத்தில் பயணம் செய்யும் ஒளி, அண்டத்தின் அருகே நேர் கோட்டில் செல்லாது வளைந்தே போகிறது. தொலைவி லிருந்து வரும் விண்மீனின் ஒளி சூரிய ஈர்ப்பு மண்டலத்தின் அருகே சென்றால், அது உட்புறமாக சூரிய மையத்தை நோக்கி, நேர்வளைவு அல்லது குவிவளைவில் [Positive Curve] வளைகிறது. ஒளி சூரிய மண்டலத்தை நெருங்கும் போது, மையத்திற்கு எதிராக வெளிப்புறத்தை நோக்கி, எதிர்வளைவு அல்லது குழிவளைவில் [Negative Curve] வளைவதில்லை! 1919 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தின் போது, இரண்டு பிரிட்டாஷ் குழுவினர், விண்மீன் பிம்பங்களின் வக்கிர போக்கைப் படமெடுத்து, ஐன்ஸ்டைன் கணித்ததுபோல் ஒளியின் நேர்வளைவு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டினர். ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதியின்படி, சுமார் 25,000 மைல் சுற்றளவுள்ள பூமியில் ஓரிடத்திலிருந்து கிளம்பும் ஒளி, புவி ஈர்ப்பால் வளைக்கப் பட்டு, முழு வட்டமிட்டு புறப்பட்ட இடத்தையே திரும்பவும் வந்து சேர்கிறது.

    Fig 1C The Curved Space

    ஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி ஏவல்
    2004 ஏப்ரல் 20 ஆம் தேதி நாசா 700 மில்லியன் டாலர் [Gravity Probe-B] விண்ணுளவியை போயிங் டெல்டா-2 ராக்கெட் மூலமாகப் பூமியை 400 மைல் உயரத்தில் சுற்றிவர அனுப்பியது. அந்த விண்ணுளவி ஓராண்டுகள் பூமையைச் சுற்றி ஐன்ஸ்டைன் புவியீர்ப்புக் கோட்பாட்டை நிரூபிக்க ஆய்வுகள் புரியும். உளவி-B ஐன்ஸ்டைன் புதிய விளக்கம் தந்த வெளி, காலம் [Space, Time] ஆகியவற்றைச் சோதிப்பதுடன், அவற்றைப் புவியீர்ப்பு ஆற்றல் எவ்விதம் திரிபு செய்கிறது என்றும் உளவு செய்யும். ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளின் இரண்டு பரிமாணங்களை உறுதிப்பாடு செய்ய நான்கு கோள உருண்டைகள் கொண்டு சுற்றும் ஓர் ஆழி மிதப்பிக் கருவி [Gyroscope] விண்ணுளவியில் இயங்கி வருகிறது! உளவி யானது ஒரு வழிகாட்டி விண்மீனை [Guide Star IM Pegasi] நோக்கித் தன்னை நேர்ப்ப்டுத்திக் கொள்ளும். ஓராண்டுகளாக ஆழிக் குண்டுகளின் சுற்றச்சுகள் [Spin Axes] எவ்விதம் நகர்ச்சி ஆகியுள்ளன வென்று பதிவு செய்யப்படும்.

    Gravity Assist Flyby

    Gravity Assist Analogy

    ஈர்ப்பியல் உந்து சக்தி [Gravity Assist Flyby]

    [தொடரும்]
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Albert Einstein By: Frederic Golden, Time Magazine -Person of the Century [Dec 31, 1999]

    2. A Brief History of Relativity By: Stephan Hawking, Time Magazine

    3. Einstein ‘s Unfinished Symphony By: Madeleine Nash, Time Magazine

    4. The Age of Einstein By: Roger Rosenblatt, Time Magazine

    5. 100 Years of Einstein By: Gregory Mone, Popular Science [June 2005]

    6. Gravity Probe Launched By: Chad Cooper, Staff Writer, NASA Kennedy Space Center (Apr 2, 2004]

    7. http://www.thinnai.com/science/sc0317021.html [Author ‘s Article on Einstein]

    8. Einstein Probe Heads into Space BBC News.

    9. Einstein Mass Energy Equation Marks 100 Years By: Roland Pease BBC Science Writer.

    10 All Systems Go on Gravity Probe B Source NASA [April 30, 2004]

    11 Testing Einstein ‘s Universe: Gravity Probe B [Feb 2005]

    12. http://spaceplace.nasa.gov/what-is-gravity/

    13. http://www.esa.int/Our_Activities/Space_Science/What_is_gravity [July 13, 2004]

    14. http://en.wikipedia.org/wiki/Gravity_assist Gravity Swing or Flyby [January 12, 2013]

    15. http://www.wisegeek.org/what-is-gravity.htm What is Gravity [January 7, 2013]

    16. Gravity is an Illusion By : John Hudson [ July 14, 2010]

    17. http://en.wikipedia.org/wiki/Entropy What is Entropy [January 18, 2013]

    18. http://arxiv.org/pdf/1001.0785.pdf On the Origin of Gravity and the Laws of Newton By : Erik Verlinde [January 6, 2010]

    ***************

    S. Jayabarathan [jayabarat@tnt21.com] January 20, 2013

    http://jayabarathan.wordpress.com/

    YouTube – Videos from this email
    Share
  • வையகத் தமிழ் வாழ்த்து

     

    வையகத் தமிழ் வாழ்த்து

    சி. ஜெயபாரதன், கனடா

    பாரத கண்டச் சீரிளம் தமிழே !
    ஓரினம் நாமெலாம் !
    ஒருதாய் மக்கள் !
    வாழ்த்துவம் உனையே !
    வணங்குவம் உனையே !
    தாரணி மீதில்உன்
    வேர்களை விதைத்தாய் !
    வேர்கள் தழைத்து
    விழுதுகள் பெருகின !
    ஈழத் தீவில்
    இணைமொழி நீயே !
    சிங்கப் பூரினில்
    துணைமொழி நீயே !
    மலேசிய நாட்டில்
    தனிமொழி யானாய் !
    காசினி மீதில்
    மேவிய தமிழே !
    வாழ்த்துவம் உனையே !
    வணங்குவம் உனையே !

    ஆத்தி சூடி ஓளவை,
    ஆண்டாள்,
    வையகப் புலவர்
    வள்ளுவர், இளங்கோ,
    பாரதி, கம்பர், பாரதி தாசன்,
    யாவரும் உனது
    மாதவப் புதல்வர் !
    மலைகடல் தாண்டி
    அலைகளைப் போல
    ஆசியா, அரேபியா,
    ஆஃப்ரிக்கா, ஈரோப்,
    வடஅமெ ரிக்கா, கனடா புகுந்து
    சொந்த மாக்கினர்,
    செந்தமிழ் மாந்தர் !
    யாதும் நாடே !
    யாவரும் கேளிர் !
    பாதுகாத் துன்னைப்
    பரப்புதல் எம்பணி !
    காசினி மீதில்
    நேசமாய் நிலவும்
    மாசிலாத் தமிழே !
    வாழ்த்துவம் உனையே !
    வையகத் தமிழே !
    வணங்குவம் உனையே !

    ++++++++++

    jayabarat@tnt21.com [April 7, 2008]

    Share
  • Literary Creativity in Tamil amongst Tamil Diaspora – அயல்நாட்டுத்தமிழ் இலக்கியங்கள்

    உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
     
    தேசியக் கருத்தரங்கம்
    ( 2013பிப்ரவரி 14, 15 )

    அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் எனும் பொருண்மையில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கினை 2013ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 14, 15ஆகிய நாட்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

    கீழ்க்காணும் ஏதாவது ஒரு பொருண்மையில் இக்கருத்தரங்கில் அளிக்கப்பெறும் ஆய்வுக் கட்டுரைகளை அமைத்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    அயலகத் தமிழரும் தமிழ் இலக்கியப் படைப்புகளும்

    அயல்நாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகள்

    அயலகத் தமிழ் இலக்கிய வரலாறு

    அயலகத் தமிழ் இலக்கியமும் சமூகமும்

    அயலகத் தமிழர்களின் இணையதள இலக்கியப் படைப்புகள்

    அயலகத் தமிழ் இலக்கியங்களில் மொழிநடை

    அயலகத் தமிழர் படைப்பிலக்கியங்களின் பரவலாக்கமும் மொழிபெயர்ப்பும்

    தங்களது பங்கேற்பு இசைவினை உடனே தெரிவிக்குமாறு அன்புடன்  கேட்டுக்கொள்கிறோம்.

    கட்டுரையாளர்கள் கவனத்திற்கு

    ஆய்வுக் கட்டுரை வந்து சேரவேண்டிய இறுதி நாள் 28.01.2013

    ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் (அ) ஆங்கிலத்தில் அமையலாம்.

    கருத்தரங்கத் தேர்வுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் மட்டுமே கருத்தரங்க ஆய்வுக் கோவையில் வெளியிடப்படும்.

    கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி

    முனைவர் கு.சிதம்பரம்
    முதுநிலை ஆராய்ச்சியாளர்
    அயல் நாட்டுத் தமிழர் புலம்.
    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
    தரமணி, சென்னை 600113
    மின்-அஞ்சல் – kchiling@yahoo.co.in
    கைபேசி 9500106269

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 2

    தேமொழி

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ
    உள்ளம் தன்னை மூடிவைத்த தெய்வம் வந்தா சொல்லும் இங்கே…
    – கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகள்

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 1>>

    Share
  • அம்மாவின் தேன்குழல்

    மாதவன் இளங்கோ 

    அன்று காலை ப்ருசெல்ஸ் (Brussels) விமான நிலையத்தில் நான் சென்ற விமானம் தரையிறங்கி சில நிமிடங்கள்தான் ஆகி இருந்தது.

    என் வேலையே ஊர் ஊராகச் சுற்றுவதுதான். ஆரம்பத்தில் என்னவோ அது கவர்ச்சியாகவும், சுவாரசியமாகவும்தான் இருந்தது. இப்போதெல்லாம் விமானப் பயணத்தையும், விமான நிலையங்களையும் நினைத்தாலே எரிச்சலும், தலைவலியும் வந்து விடுகிறது. இன்னும் சொல்லப்போனால், சென்னையில் வீட்டிலிருந்து கிளம்பி, வெளிநாடு வந்து சேர்ந்து, விடுதி அறைக்குள் நுழைவதற்குள் (door-to-door) நடப்பவைகள் எல்லாமே ஒரு கெட்டகனவு போலவே தோன்றுகிறது. ஏன்தான் இந்த ‘உலகம் சுற்றும் வாலிபப் பணியை தேர்ந்தெடுத்துத் தொலைத்தோமோ?’ என்று என்னையே நான்  அறைந்துகொள்ளவேண்டும் என்று பலசமயம் தோன்றும்.

    ஆனால் அந்தமுறை அப்படியெல்லாம் தோன்றவில்லை. ஏனென்றால், நீண்ட நாளைக்குப் பிறகு என் கல்லூரித் தோழன் கிருஷ்ணமூர்த்தியை சந்திக்கப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் இருந்தேன். அவனை அதற்கு முன்பு கடைசியாகக் கோயமுத்தூரில் நண்பன் ஒருவனின் திருமணத்தில் சந்தித்தது என்று நினைக்கிறேன். அவனும் பெல்ஜியம் சென்று நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டன.

    ப்ருசெல்ஸ் நகரம் எனக்கு ஒன்றும் புதியது அல்ல; ஆறு வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறேன். அப்போதெல்லாம், சென்னையிலிருந்து ப்ருசெல்சிற்கு நேரடி விமானம் கிடையாது; பிராங்க்பர்ட் (Frankfurt) நகரம் சென்று, மாற்றுப்பயணியர் ஓய்வறையில் நான்கு மணிநேரம் காத்திருந்து விட்டு, வேறு விமானம் மாறிச் செல்ல வேண்டும். நல்ல வேளை – அந்தமுறை அந்தத் தொல்லை இல்லை. நான் சென்றது ஒரு நேரடி விமானம்.

    பத்து மணிநேர விமான பயணத்தில் சரியாகத் தூக்கமே வரவில்லை. ஒரு தமிழ், ஒரு ஆங்கிலம், ஒரு இந்தி என தலா மூன்று திரைப்படங்களைப் பார்த்துவிட்டேன். மூன்றரை என்று கூடச் சொல்லலாம். ஏனென்றால், அந்த இந்திப்படத்தை ஏன்தான் பார்த்தோம் என்றாகி, பாதியில் நிறுத்திவிட்டுத் தூங்கிவிட்டேன்.

    குடியுரிமை மற்றும் சுங்க சோதனைகளை எல்லாம் விரைவாக முடித்துவிட்டு, என் மூட்டை முடிச்சுகளைத் தூக்கி தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு, வருகைக்கூடத்திற்குள் நுழைந்தேன்.

    “கார்த்திக் ….” என்று சற்று உரக்கவே ஒலித்தது கிருஷ்ணமூர்த்தியின் குரல். இடது புறம் திரும்பிப் பார்த்தால், வெள்ளைக்காரர்களுக்கு நடுவே ஒரு மாநிற முகம் புன்னகையுடன் கையசைத்துக்கொண்டிருந்தது. நிச்சயம் அவனேதான்.

    ஓடிச்சென்று கைகுலுக்கினேன்.

    “ஹே கிருஷ்ணா! எப்படிடா இருக்கே?”

    ‘என்னடா மச்சான் எப்படி இருக்கே’ என்று கேட்டுவிட்டு அணைக்கலாம் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால், இந்தப் பன்னிரண்டு வருட இடைவெளியும், முன்தலை வழுக்கை விழுந்து முற்றிலும் மாறிப்போயிருந்த அவன் தோற்றமும் ஏனோ தடுத்துவிட்டது.

    “என்னடா கார்த்திக், ஆளே மாறிப்போயிட்டே?” என்று கேட்டான்.

    “நானும் அதத்தான் கேட்கணும்னு நெனெச்சேன். நீ முந்திகிட்ட! ஆள் அடையாளமே தெரியலடா. நீமட்டும் என்ன கூப்பிடாம இருந்தா உன்ன கண்டே பிடிச்சிருக்க மாட்டேன்.”

    “என்னடா பண்றது. இங்க வாட்டர் ஹார்ட்னெஸ்  சித்த அதிகம். அதனால முடியெல்லாம் கொட்டிப்போயிடுத்து. பத்தாக்குறைக்கு இந்த ஊரு பட்டரும், பீரும் கொஞ்சம் உடம்ப கூட்டிடுத்து!!”

    “பீர் வேறையா? இது எப்போ இருந்து?”

    “அப்கோர்ஸ்! பெல்ஜியம் வந்துட்டு யாராச்சும் பீர் குடிக்காம இருப்பாளா? சரி வா போயிண்டே பேசலாம்.”

    வருகைக்கூடத்தை விட்டு வெளியே வந்த அடுத்த நொடி, சில்லென்று குளிர்காற்று வந்து மோதி என் உடம்பை சிலிர்க்கச் செய்தது.

    “ஊ………. ஐ கேன் பீல் ஈரோப் நவ்!” என்று சொன்னேன்.

    “ஹலோ, இப்போ இங்க சம்மர் தெரியுமோ? இதுக்கே சிலுத்துண்டா, வின்டர்லல்லாம் வந்தா நீ என்னடா பண்ணுவ?”

    “சம்மரா? சென்னைல வின்டர்கூட இவ்ளோ குளிராது மச்சி!”

    “ஐயையோ! சென்னைய பத்தி மட்டும் பேசாதடாப்பா சாமி! கேட்டாலே பயமா இருக்கு.”

    அவன் கூறியதைக்கேட்டுச் சிரித்தாலும், எனக்கு உள்ளுக்குள் சற்று எரிச்சல் உண்டாகியது.

    வெளிநாட்டவர்கள் கூட இப்படி பேசமாட்டார்கள். ஆனால், ஒரு மூன்று, நான்கு வருடம் வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டு, விடுமுறைக்கு வரும் நம் மக்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே? என்னவோ, இந்தியாவிற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதது போலவும், நாமெல்லாம் இங்கு ஏதோ பரிதாபமானதொரு வாழ்க்கையை   வாழ்ந்து கொண்டிருப்பது போலவும் பேசுவார்கள். இது போன்ற மனிதர்களைக் கண்டாலே எனக்கு எரிச்சல் வந்து விடுவது உண்டு.

    இப்படி ஏதேதோ உரையாடிக்கொண்டே அவனது காரை வந்தடைந்தோம்.

    “ஹே, ஆடி ஏ சிக்ஸ் (Audi A6)! கலக்கு மச்சி. யு நெவெர் மெயில்ட் மீ அபௌட் திஸ்!”

    “ஆமாண்டா. வந்த புதிசுல வோல்க்ஸ் வேகன் பசாட் வாங்கினேன். ஆடி மேல ரொம்ப நாளா ஒரு கண்ணு. வாங்கி எயிட் மந்த்ஸ் தான் ஆகுது.”

    ‘மோட்டார் வே’ எனப்படும் குறுக்கு சாலைகளற்ற, அதிவேக போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்தது கிருஷ்ணாவின் ஆடி.

    யாரோ பெருக்கிவிட்டுப் பின்  தண்ணீரால் துடைத்தெடுத்தது போல் காணப்படும் அந்த ரப்பர் சாலைகளையும், அதன் தரத்தையும், நெடுஞ்சாலையின் இரண்டு புறங்களிலும் விரிந்துகிடந்த பச்சைப் புல்வெளிகளையும், விதிகளை மதித்துச் செல்லும் வாகனங்களையும்  பார்க்கும் போது அவர்கள் அப்படி கர்வப்பட்டுக் கொள்வதிலும், நம்மை பரிதாபமாகப் பார்ப்பதிலும்கூட ஒரு நியாயம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.

    “கார்த்தி, பர்ஸ்ட் என் வீட்டுக்கு போயிட்டு, ப்ரேக்பாஸ்ட், லஞ்செல்லாம், முடிச்சிட்டு, கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு, அப்புறம் ஈவினிங்கா லூவன்ல (Leuven) இருக்கற உன் ஹோட்டல் ரூமுக்கு போகலாம்!”

    “ஒகே டா. யு ஆர் மை பாஸ் டுடே!  ஆமா , உன் வீடு எங்க இருக்கு?”

    “என் வீடு ப்ருசெல்சுக்கும், லூவனுக்கும் நடுவுல டெர்வூரன்-ங்கிற  (tervuren) ஒரு ஸ்மால் டவுன்ல இருக்கு. மொதல்ல லூவன்ல தான் இருந்தேன். என்னோட பையன ஒரு பிரிட்டிஷ் ஸ்கூல்ல சேர்க்கறதுக்காக இங்க வந்துட்டேன். எக்ஸ்பென்சிவ் தான் – பத்தாயிரம் ஈரோஸ் பெர் இயர்! பரவால.  ஐ டோன்ட் மைண்ட் த்ரோவிங் மனி பார் மை சன்!”

    “வாட்ட்ட்ட்??? பத்தாயிரம் ஈரோஸா? அப்ராக்சிமேட்லி, ஒரு வருஷத்துக்கு ஏழு லட்சம் ரூபா!!!! அம்மாடி!!!”

    “காச சேர்த்து என்னடா பண்ண போறோம். எல்லாம் என் பையனுக்காகத் தானே!”

    “அது கரெக்ட். எஜுகேஷன் ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் பார் தி கிட்ஸ்!”

    காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தோம். அது ஒரு அழகான வீடு. மூன்று பேருக்கு கொஞ்சம் பெரிய வீடு என்று கூடச் சொல்லலாம். கிருஷ்ணாவின் மனைவி வித்யா  மிக நேர்த்தியாக வீட்டை பராமரித்து வைத்திருந்தாள். அது அவளுடைய பொழுதுபோக்கு என்று கிருஷ்ணா கூறினான்.

    கிருஷ்ணாவின் குழந்தை சிரேஷின் அறிவு என்னை பிரமிக்கச் செய்தது. மூன்றரை வயதேயான அவன் அவ்வளவு செம்மையாக ஐபாடை (iPad) உபயோகித்த விதம் என்னை பிரம்மிக்கச் செய்தது. ஆனால் ஒன்று, அவனுக்குத் தமிழே பேசத் தெரியவில்லை.

    அவனுக்காகவே ஒரு பெரிய டாய் ரூம் (Toy Room) ஒன்றை செய்து கொடுத்திருந்தான் கிருஷ்ணா. அவ்வளவு பொம்மைகள் நம் ஊரில் ஒரு கடையில் கூட இருக்காது.

    அவன் வீட்டில் இதற்கு மேல் வாங்குவதற்கென்று ஒன்றும் இல்லை என்றுகூடச்  சொல்லலாம். அந்த அளவிற்கு ஆடம்பரமான வாழ்க்கையாக எனக்குப்பட்டாலும், தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்த  என் நண்பன் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டேன்.

    “வீடு நல்லாயிருக்குடா கிருஷ்ணா” என்று கூறிக்கொண்டிருந்தபோதே அவன் மனைவி, “க்ரிஸ் (Kris), பிரான்சிஸ் ஆன் தி லைன்” என்று கூறி கைப்பேசியை அவனிடம் கொடுத்தாள்.

    “க்ரிஸ் ஹியர்…” என்று யாரிடமோ சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். கிருஷ்ணமூர்த்தி – க்ரிஸ் ஆக மாறி இருந்தது. பரவாயில்லை, உடம்பு பெருத்துவிட்டிருந்தாலும் பெயராவது குறுகியிருக்கிறதே என்று நினைத்தபோது சிரிப்பு வந்தது.

    “சாரிடா கார்த்திக். ரியல் எஸ்டேட் ஏஜென்ட் போன் பண்ணினான். ஒரு வீடு ஒன்னு இந்த ஏரியால பாத்துண்டு இருக்கேன்”

    “இந்த வீடே சூபெர்பா  இருக்கேடா!”

    “இல்லடா, கொஞ்சம் பிக்கர் ஹவுஸ் வித் கார்டனோட வாங்கணுங்கறது எங்க ரெண்டு பேரோட ரொம்ப நாள் ட்ரீம். வித்யா கூட இப்போ கார்டன் ஆர்கிடெக்ட் கோர்ஸ் பண்ணிண்டு இருக்கா.”

    “சூப்பெர்டா! ஆல் த பெஸ்ட்!”

    பகல் நேரங்களில் என்னுடைய வேலை, மாலை நேரங்களில் கிருஷ்ணா – மன்னிக்கவும் – க்ரிஸ் வீட்டிலும் என்று இரண்டு வாரங்கள் ஓடியதே தெரியவில்லை. இதற்கு நடுவே, க்ரிஸ் ஒரு மூன்று நான்கு வீடுகளைப் பார்த்துவிட்டு, காற்றோற்றம் இல்லை, தோட்டம் பெரிதாக இல்லை என்று மறுத்து விட்டான்.

    நான் புறப்படுவதற்கு முந்தைய இரவு, நீண்ட நேரம் அவன் வீட்டில்  அளவளாவிக்கொண்டிருந்தோம்.

    “அடுத்த மாசம் கண்டிப்பா திரும்பவும் வர்ற மாதிரி இருக்குடா..”

    “தட்ஸ் க்ரேட்! அப்போ உங்களுக்கு ஒரு பெரிய லிஸ்ட் கொடுக்கறேன்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் வித்யா.

    ” கண்டிப்பா வித்யா. இட்ஸ் மை ப்ளஷர். ஹே கிருஷ்ணா, கேக்கணும்னு நெனெச்சேன். அம்மா இப்போ தஞ்சாவூர்லையா இருக்காங்க?”

    “இல்லடா, சென்னைல தான்! நான் கூட உன்கிட்ட சாக்லேட்ஸ் வாங்கித் தரணும்னு நெனெச்சேன் மறந்தே போயிடுத்து. டேம்!!! போயி குயிக்கா வாங்கிண்டு வந்துடவா?”

    “இப்போ டைம் நைன் ஆயிடுத்து. ஷாப்ஸ் எல்லாம் க்ளோஸ் பண்ணி இருப்பா. மே பி, கார்திக்க ஏர்போர்ட்-ல வாங்கிண்டு போகச் சொல்லலாம்” என்றாள் வித்யா.

    “ஆமான்டா. நான் ஏர்போர்ட்ல வாங்கிக்கிறேன். நீ அட்ரச மட்டும் கொடு” என்றேன்.

    “நாங்க இங்க வரும்போது அவ மந்தவெளிலதான் இருந்தா. இப்போதான் மயிலாப்பூர்ல வேற வீட்டுக்கு ஜாகை போயிட்டா. ஒன் செகண்ட், அட்ரெஸ் தரேன்.”.

    “அவங்க இங்க வரலையா?”

    “பெரியவாளுக்கெல்லாம் இந்த ஊரு சரிப்படாது டா. எங்கம்மா கோயில் கொளம்னு சுத்திண்டே இருப்பா. அவாளுக்கெல்லாம் இந்தியாதான் சரிப்படும். அடுத்த சம்மருக்கு  சும்மா கூட்டிண்டு வரலாமான்னு திங்க் பண்ணிண்டு இருக்கேன்.”

    அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. என்னதான் சுத்தமாகவும், கண்ணுக்கு அழகாகவும் தெரிந்தாலும், எப்போது பார்த்தாலும் எதோ ஊரடங்கு உத்தரவு போட்டது போலிருக்கும் அந்த அமைதி எனக்கே அச்சமூட்டியது. அங்கெல்லாம் ஒரு சுற்றுலா பயணியைப் போல பார்வையிடச் செல்லலாம், ரசிக்கலாம் – அவ்வளவுதான். ஆனால், அங்கேயே வாழ்வதை என்னாலெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

    கிருஷ்ணாவின் மனைவி தந்த  பட்டியலையும், அம்மாவின் முகவரியையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றேன்.

    மறுநாள் மறக்காமல் ப்ரெசெல்ஸ் ஏர்போர்ட்டில் அவனுடைய அம்மாவிற்கும் மட்டுமல்ல; என் குடும்பத்தினருக்கும் நிறைய சாக்கலேட்டுகளை வாங்கிக்கொண்டேன். உலகிலேயே அதிக அளவில் சாக்கலேட்டுகளை விற்கும் இடமாயிற்றே. விடுவேனா?

    இந்தியாவிற்கு வந்து ஆறு நாட்களாகி விட்டது. கிருஷ்ணாவின் தாயாரின் நினைவு வந்தது. சென்னை வெயிலுக்கு பெல்ஜியம் சாக்கலேட்டுகள் நீண்ட நாளைக்குத் தாங்காது – உருகி ஓடி விடும். பத்தாக்குறைக்கு மின்சாரப் பிரச்சினை வேறு. அதனால், காரை எடுத்துக்கொண்டு மயிலாப்பூருக்குக் கிளம்பினேன்.

    ஆர்.கே மட் சாலை வழியாக சென்று, தெப்பக்குளம் கடந்து வலது புறம் திரும்பி, காரை நிறுத்திவிட்டு, அங்கே இருக்கும் கடையில் முகவரியை காண்பித்தேன்.

    “சார், இதுக்கு சித்திரக்குளம் எல்லாம் தாண்டி போகனும் சார். கார்லல்லாம் போக முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க. சன்னதி தெருவுக்கா போயி கார நிப்பாட்டிட்டு, நடந்து போயிருங்க.”

    “ரொம்ப தேங்க்ஸ்!”

    காரை ஒட்டிக்கொண்டு போய், கோயிலுக்கு எதிரேயுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, சித்திரக்குளம் நோக்கி நடந்தேன்.

    ஒரு சில மணித்துளிகளில் அவன் தாயார் இருக்கும் தெருவை வந்தடைந்தேன். மிகமிகக் குறுகிய தெரு. காற்றோட்டமோ, வெளிச்சமோ வருவதற்கான வாய்ப்பே இல்லாமல் தோன்றியது. மேலும், அந்தத் தெருவில் இருந்த அத்தனை வீடுகளுமே ஏதோ போன நூற்றாண்டின் பாதியில் கட்டிய வீடுகளைப் போல் அழுக்குடனும், பராமரிப்பில்லாமலும் காட்சியளித்தன.

    நிஜமாகவே அந்தத் தெருதானா என்று எனக்குச் சந்தேகமே வந்துவிட்டது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு சென்ற ஒருவரிடம் முகவரியைக் காண்பித்துக் கேட்டேன்.

    “இந்த தெருவே தான்!”

    “பாலம்பாள் வீடு எதுன்னு தெரியுங்களா?” என்று கேட்டேன்.

    “பாலா மாமிய சொல்ரேள்னு நெனைக்கிறேன். அதோ அந்த கடைசி வீட்டுக்கு முந்தன வீடு” என்று வீட்டை காண்பித்தார்.

    நான் அவர் காட்டிய அந்த வீட்டிற்கு அருகே சென்றேன். அந்தத் தெருவிலேயே மிகவும் சிதிலமடைந்த வீடு அதுவாகத்தான் இருக்கும். வீடு பூட்டி இருந்தது. எனக்கு நிஜமாகவே அவர் அங்குதான் இருப்பார் என்று தோன்றவில்லை.

    என்னைக்கடந்து போன பெண்மணி, “ஆர பாக்க வந்தேள்?” என்று கேட்டார்.

    “பாலா மாமி”

    “இன்னைக்கு பிரதோஷம். மாமி அநேகமா கோயிலுக்குத்தான்  போயிருப்பா. சித்த நாழி இங்கேயே இருங்கோ. இல்லேனா கோயிலுக்கு போயி பாருங்கோளேன்.”

    “இல்ல.. இல்ல.. நான் இங்கயே வெயிட் பண்றேன்.”

    அந்தத் தெருவில் நின்றிருந்த ஒரு பழைய சைக்கிள் மேல் ஏறி அமர்ந்தேன். என் மனதில் பெல்ஜியமும், கிருஷ்ணாவின் வீடும், அவன் பேச்சுக்களும்  ஒன்றடுத்தொன்றாக நினைவுக்கு வந்தன. அந்தத் இருட்டுத் தெருவை திரும்பவும் வலதும், இடதுமாய்த் திரும்பிப் பார்த்தேன்.

    தெரு மூலையில் ஒரு வயதான பெண்மணி நுழைவது தெரிந்தது. இது அவராக இருக்குமோ? இருக்காது. அவரை ஓரிரண்டு முறை  கல்லூரி நாட்களில் பார்த்திருக்கிறேன். கல்லூரி விடுதியில் தங்கி இருந்த நாட்களில், கிருஷ்ணா தஞ்சாவூருக்கு சென்றுவிட்டு வந்தாலே எங்களுக்குக் குதூகலம் தான். அவ்வளவு இனிப்புகளும், கார வகைகளும் கொண்டு வருவான். அவ்வளவும் அவன் அம்மா வீட்டிலேயே செய்து கொடுத்தது. அவரை வைத்து ஒரு பலகாரக்கடையே ஆரம்பிக்கலாமென்று அவனை கிண்டல் செய்வோம். அதுவும் அவரின் தேன்குழல் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும்.

    அவரா இவர்? இருக்கலாம். அவர் என்னை நோக்கி நடந்து வர, நான் அவரைக் கூர்ந்து கவனித்தேன். அவரது மேனி ஒடுங்கிப் போயிருந்தது. கடைசியாகக் கல்லூரி விடுதியில் அவரைப் பார்த்தது இன்னமும் நினைவிலிருந்தது. ஒளிபொருந்திய அந்த முகம் ஏனோ அன்று வாடிக் கறுத்துப்போயிருந்தது.

    அவர் என்னைப் பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் பூட்டிய கதவைத் திறக்க முற்பட்டார். அவர் என்னை மறந்திருக்கலாம் என்று தோன்றியது.

    “அம்மா”

    “ஆரு?”

    நிச்சயமாய் அவரே தான்! ஆனால் அந்தக் குரல் சிறிது ஈனஸ்வரத்தில் ஒலித்து என் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது.

    “நான்தாம்மா. கார்த்திக். கிருஷ்ணாவோட காலேஜ் பிரண்ட்.”

    “அடடே.. வாங்கோ வாங்கோ! கிச்சா மூணுநா முன்னா தான் சொன்னான். நேக்குதான் அடையாளமே தெரியல”

    விரைவாகக் கதவைத் திறந்து என்னை உள்ளே அழைத்தார். திடீரென புதுவலுப்பெற்றவராய் ஓடிச்சென்று ஒரு நாற்காலியை எடுத்துவந்து போட்டார்.

    “காபி சாப்டுறியா பா?”

    முதலில் எனக்கு வேண்டாமென்று சொல்லத் தோன்றினாலும், அவர் நிலையை பார்த்தவுடன் சிறிது நேரம் அங்கு இருக்கவேண்டும் என்றும் தோன்றியது.

    “சரிம்மா! இந்தாங்க மா சாக்கலேட்ஸ்.”

    “கிச்சா சொன்னான். நோக்கு எதுக்குப்பா சிரமம்?” என்று கேட்டுவிட்டு, அதனைப் பெற்றுக்கொண்டு, “தோ வரேன்.” என்று சொல்லிவிட்டு காபி போட சென்று விட்டார்.

    அந்த வீட்டை சுற்றி பார்த்தேன். சுற்றிப்பார்க்கும் அளவிற்கு அது ஒரு பெரிய வீடில்லை. ஒரு பார்வையின் எல்லைக்குள்ளேயே ஒட்டுமொத்த வீடும் வந்து விழுந்துவிடும். ஆனால் அந்த இருட்டும், மக்கிய வாசமும் ஏதோ செய்தது. அவ்வளவு பழைய வீடு.

    “வேற வீடு கெடைக்கலையாம்மா?” என்று காபி கொண்டு வந்து கொடுத்தவரிடம் கேட்டேன்.

    “என்னப்பா பண்றது? கொஞ்ச நன்னாயிருந்தா பத்தாயிரம் கேக்கறா. மின்னமே இருந்த ஆத்துல பன்னெண்டாயிரம் கேட்டாளேனுதான் இங்க ஜாகை வந்துட்டேன். கிச்சா தோப்பனார் பென்ஷன் எட்டாயிரம் வர்றது. அத வச்சிண்டு அவ்ளோல்லாம் முடியாது பா. அவர் போறதுக்கு முன்னே வீடு வாங்கிவெச்சிருந்தா நேக்கு ஏன் இவ்ளோ பிரச்சினை வரப் போறது! எல்லாம் கர்ம வினை.” என்றார்.

    இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கையில், என் இதயம்  உலைக்களமாய் மாறி அந்த உஷ்ணத்தில் தகதகவெனக் கொதித்துச் சூடேறிய புதிய இரத்தம் என் நரம்புகளினூடே சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

    “கிச்சா நன்னா இருக்கானா?”

    அவர் கேட்டது என் காதில் விழுந்தும் என்னால் பதில் சொல்லமுடியவில்லை.

    “கிச்சா நன்னா இருக்கானா பா?” என்று மீண்டும் கேட்டார்.

    “ஒ.. நல்லா இருக்கான் மா.”

    “வீடு வாங்கப்போரேனு சொல்லிண்டு இருக்கான். அவ அப்பாவோட ஆசை. எல்லாம் நன்னா முடிஞ்சா விநாயகருக்குச் சிதறுக்கா போடறேன்னு வேண்டிண்டு இருக்கேன். அவ அப்பா போனப்புறம் என்னோட சேர்ந்து ரொம்ப ஸ்ரமப்பட்டுட்டான். இதுக்கு மேல அவன் ஸ்ரமப்படவேணாம்!”

    எனக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது.

    “கொழந்த எப்படி இருக்கான்? அதுக்கு நம்ம பேச்சே வர்ற மாட்டேன்றதே? எதாச்சும் டாக்டர் கிட்ட காட்ட சொன்னேன், செஞ்சானான்னு தெரியல.  இந்தியாவுக்கு வர்றத பத்தி ஏதாச்சும் சொன்னானா பா? பாத்தே நாலஞ்சு வருஷமாயிடுத்து. வேணாம். அவாளுக்கு எதுக்கு செரமம். வந்து போனா நெறைய செலவு ஆகும்னு எல்லாரும் சொல்றா. பாவம் அவாளே கஷ்டப்பட்டுண்டு இருக்கா!”

    அவருக்கு நிறைய பேசவேண்டும் போலிருக்கிறது என்று தெரிந்தது. எனவே, அவரைப் பேசவிட்டுவிட்டு, அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்தேன்.

    “எனக்கு ஒன்னும் இல்லப்பா. ஆனா…. இப்போல்லாம் அடிக்கடி கரண்ட் போய்டறதால ராத்திரியில தான் கொஞ்சம் பயமா இருக்கு! அதுவும் மழ வந்து, இடி இடிக்கரச்ச, கரண்டில்லாம, …. ரொம்ப பயமா… இருக்கு பா…. ” என்று கதறி அழத்தொடங்கிய போது, என் நெஞ்சம் படபடத்து, என் உடலின் ஒட்டுமொத்த சக்தியையும் யாரோ உறிஞ்சி விட்டாற்போல செயலிழந்து போய்விட்டேன்.  எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவரது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஆறுதல் சொன்னேன்.

    “கவலைப்  படாதீங்க மா. கிருஷ்ணாவுக்கு அங்க இருக்கவே பிடிக்கலையாம். சும்மா டாக்ஸ் சேவ் பண்ணத்தான் வீடு கூட வாங்கறான். ஒரு வருஷம், இல்லைனா இரண்டு வருஷத்துக்குள் வந்துடுவேன்னு சொன்னான். நீங்க தான் தேன்குழல் செய்வீங்களாமே, உங்க பேர்ல ஒரு தேன்குழல் கடையெல்லாம் வைக்கலாம்னு பேசிட்டு இருக்கோம்.” என்று நான் சொன்னவை எல்லாமே பொய்கள்! ஆனால், அந்த உன்னதமான தாயின் கண்ணீரை அடக்குவதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை.

    “நல்லவேளை. மறந்தே போயிடுத்து. கிச்சா நீ திரும்பவும் அங்க போறதா சொன்னானேன்னு சீடை, தேன்குழல் எல்லாம் பண்ணி இருக்கேன். கொஞ்சம் எடுத்துண்டு போயி கொடுக்கறையா?”

    “கண்டிப்பா மா” என்று அவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு, அவரிடமிருந்து விடைபெற மனமில்லாமல் கிளம்பினேன்.

    “அடிக்கடி ஆத்துக்கு வாப்பா” என்றவரிடம் புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன். தெருமுனைக்குச் சென்று திரும்பிப் பார்த்தேன். என்னையே ஒருவித சோகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவருக்குக் கையசைத்துவிட்டு இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

    வீட்டிற்குச் செல்லவே பிடிக்காத அளவிற்கு அந்த நிஜங்களின் பாரம் என் நெஞ்சை அழுத்தியது. நேராகக் கோயிலுக்குச் சென்று, என்னால் முடிந்த அளவிற்கு அந்தக் கடவுளைத் திட்டிவிட்டு, வெளியே வந்து பிரகாரத்தில் அமர்ந்தேன். எனது கையிலிருந்த அம்மாவின் தேன்குழல்கள் கண்களில் பட, கிருஷ்ணாவின் ஆடம்பர வாழ்க்கையும், அவன் பகட்டுப் பேச்சுக்களெல்லாமும் என் மனதில் வேகவேகமாய் ஓடின.

    கோயிலைவிட்டு வெளியே வந்த போது, தன் குருட்டுத்தாயை மூன்று சக்கர வண்டியில் தன்னருகே அமர்த்தியிருந்த மாற்றுத்திறனாளி இளைஞன் ஒருவன், “சார், சார்” என்று கையை நீட்டினான். அவன் குரலைக் கேட்ட அந்த வயதானப் பெண்மணியும், “ஐயா ரொம்ப பசிக்கிதுய்யா ராசா! எதாச்சி வாங்கி குடுய்யா…” என்று தன் கையை நீட்டினார்.

    வாழ்க்கையில் முதல்முறையாக அன்றுதான் எனக்கு ஒரு பிச்சைக்காரனின் கால்களில் வீழ்ந்து வணங்கவேண்டும் என்று தோன்றியது. ஒரு கையும் இரண்டு கால்களுமற்று அமர்ந்திருந்த அவனது கையில் இருபது ரூபாய் நோட்டையும், அவனது தாயின் கைகளில் அம்மாவின் தேன்குழல்களையும் வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தபோது ஒரு முடிவெடுத்தேன். இனி அந்த முடவன் கிருஷ்ணாவைச் சந்திக்கவே போவதில்லை என்று.

    Share
  • சின்னச் சின்னதாய்

     

    ஜெயஸ்ரீ ஷங்கர்              

                                                                                                                                                                           

    நாணத்தினால்
    தாமரை…
    வண்டுகள் வரவு..!

    நீ சூடிய மல்லிகை..!
    நறுமணம்…
    எனைத்தேடி..!

    விற்கும் வரை மட்டுமே..
    ஒய்யாரமாய்..அணிவகுப்பு..!
    செருப்பு…!

    வளைந்த வில்லும்
    நீந்தும் கெண்டையும்..
    உன் முகத்தில்..!

    நிறைகுடத்தை
    சுமக்கிறாள்
    கர்ப்பிணி..!

    கால் வலிக்காதா..
    சோர்வே வராதா,,..?
    கடலலைகள்.

    கனல் கொண்டு பறக்கும்
    புதுமைப் பெண்..
    மின்மினி…!

    சொன்ன வாக்கு பலிக்குது…
    வீட்டுக்குள்ளே.. குடுகுடுப்பைக்காரன்..
    கதவிடுக்கில் பல்லிச் சத்தம்..!

    மூடிய விழிகளுக்குள்
    வண்ணச் சித்திரம்..
    கனவு..!

    கட்டித்தொங்கப் போட்டாலும்
    சுதந்திரமாய்ப்.. பறக்கும் ஓர்நாள்
    சுதந்திர தினத்தில் தேசியக் கொடி..!

    சருகாகும் மலர்களே…
    வரம் வாங்கி வந்தீர்களா..
    சந்ததி வேண்டாம் என்று..!

    கண்டெடுத்தேன்..
    புதையலை..
    உன் மனம்..!

    மௌனமாய்…
    உயிர் போராட்டம்..
    எறும்புகள்..!

    உடலுக்குள்ளே…
    என்றும் குழந்தையாய்..
    மனம்..!

    திருமணம்..
    இருமனக் கனவின்..
    அரிச்சுவடி..!

    கர்ப்பத்தை கலைகாதீர்..
    விதையோடு பழங்கள்..!
    வயிற்றிலா விதைப்பது..?

    பாதத்திற்கு பாதுகாப்பு
    கைகளுக்கும் தற்காப்பு
    செருப்பு..!

    நாளைய நெல்லுக்கு..!
    நாற்று நடவு…இன்று..
    பட்டினியோடு..!

    உதிர்ந்த பூக்களை
    வாரி அணைக்க
    தென்னங்குச்சிகள்..!

    முகம் காட்டும் கண்ணாடியே..
    என்ன கோவம்..என்மேல்..?
    எங்கே ஒளித்தாய் என் இளமுகத்தை….!

    உடலுக்குள்ளே..
    விஷமருந்து ..
    உயிரோடிருந்தது..
    பட்டாசு..!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … (41)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.
    இன்றைய இங்க்லாந்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இப்புது வருடத்திலே எத்தகையதோர் திருப்பத்தை எடுக்கப் போகிறது என்பது இப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கமரன் அவர்கள் தனது புதுவருடச் செய்தியில் ” 2012ம் ஆண்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி நன்கு உணர்ந்துள்ளேன். இந்த நெருக்கடி ப்ழைய அரசாங்கத்தின் ஆடம்பரச் செலவினாலும், அனைத்துலக பொருளாதார பாதிப்பினாலும் எழுந்த விளைவுகளேயாகும். இந்தப் பிரச்சனையை வெகுவிரைவாகத் தீர்த்து விடுவோம் என்று கூறுமளவிற்கு எம்மிடம் கைவசம் ஒருவிதமான மந்திரஜாலங்களும் இல்லை. எம் கண் காணும் முன்னேற்றப் பாதை இன்னும் கரடுமுரடானதாகவே இருக்கிறது. இருப்பினும் நாம் போகும் பாதை முன்னேற்றத்தை நோக்கியே செல்கிறது என்னும் நம்பிக்கை எமக்குள்ளது ” எனும் வகையிலான கருத்தை முன்வைத்துள்ளார்.

    எதிர்க்கட்சிகளும் சில பொருளாதார நிபுணர்களும் இவ்வரசாங்கம் எடுக்கும் திட்டங்கள் மிகவும் அதீதமானவை அவை சிறிது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூறிவருகின்ற போதிலும், அரசாங்கம் தமது தீவிர பொருளாதாரக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மட்டுமே நாட்டை பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுவிக்கும் என்று கூறிவருகிறார்கள்.

    தமது பொருளாதாரக் கட்டுப்பாட்டுத் திட்டங்களின் படி அரசாங்கத்தின் செலவுகளை மட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தும் பணியில் தீவிர கவனம் செலுத்துகிறார்கள். அதில் ஒரு பகுதியாக வருமானம் குறைந்த மக்களின் வருமானத்தை ஈடுகட்டும் முகமாக அளிக்கப்பட்டு வந்த உதவித் தொகையில் உள்ள சீர்கேடுகளைக் களைவதால் ஏறத்தாழ 300 மில்லியன் பவுண்ட்ஸ் அளவிலான தொகையை மீதப்படுத்தலாம் எனும் கணிப்பை முன்வைக்கிறார்கள்.

    இது தொடர்பாக ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் படி பிரதமர் டேவிட் கமரனால் முன்னாள் கன்சர்வேடிவ் கட்ச்சித் தலைவர் “இயன் டன்கன் சிமித்” அவர்கள் பணிக்கப்பட்டார்.

    இரண்டுவருட கால ஆராய்ச்சியின் பின்னால் அவர் தனது அறிக்கையில் லேபர் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த குறைந்த வருமானவுள்ளவர்களுக்கான உதவித்தொகையின் பால் சுமார் 171 மில்லியன் பவுண்ட்ஸ் வரை செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வுதவித் தொகை ஒன்றே இங்கிலாந்து அரசாங்கத்தின் சமூக சேவை பட்ஜெட்டில் ஏறத்தாழ 60% பங்கை வகித்திருந்தது எனவும் இதன் நடைமுறையாக்கல் சரியான வகையில் பரிசோதிக்கப்படாததினால் பலர் இதனைச் துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக நிதி உதவியைப் பெற்றுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அது மட்டுமன்றி இவ்வுதவித் தொகைகளை பெறுவது மிகவும் இலகுவாக இருந்த காரணத்தினால் இங்கிலாந்துக்குள் சட்ட விரோதமாக நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இவரின் இக்குற்றச்சாட்டுகளை இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அப்போதைய அரசாங்கத்திலிருந்த லேபர் கட்சி வெறும் ” அரசியல் லாபத்திற்காக தம்மீது சுமத்தப்படும் கீழ்த்தரமான குற்றச்சாட்டு ” என்று மறுதலித்துள்ளார்கள்.

    ஆனால் அரசாங்கத்தின் சார்பான “இயன் டன்கன் சிமித்” அவர்களோ அனாவசியமான செலவு மட்டுமல்ல அது. சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவுவதைக் காட்டிலும் அவர்களை வருமைக் கோட்டிற்குக் கீழே தள்ளி அங்கேயே வைத்திருக்கும்படியான ஒரு செய்கையே இது என்றும் கூறியுள்ளார்.

    இவரின் கூற்றில் ஒருவகை உணமை இருப்பது போலவும் தென்படுகிறது. வாழ்க்கையின் அடிமட்டத்திலிருப்பவர்களுக்கு உதவுவது எத்துனை அவசியமோ அவர்கள் அந்நிலையிலிருந்து வெளியே வந்து தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியதும் ஒரு அரசாங்கத்தின் கடமையாகும்.

    இல்லையேல் அரசாங்கம் அளிக்கும் உதவித் தொகையில் தங்கியிருக்கும் ஒரு பரம்பரையை உருவாக்கும் செயலை ஊக்குவிப்பதாக இத்திட்டங்கள் அமைந்து விடும்.

    அதே சமயம் வேலையில்லாமல் திண்டாடும் மக்கள் கெளரவத்துடன் வாழ்வதற்கு நாட்டின் அடிமட்ட வாழ்க்கைச்செலவு என்று கனிக்கப்பட்ட தொகையை அளிக்கும் அரசின் சமூகக் கடமை பாராட்டப்பட வேண்டியதொன்றாகிறது.

    அர்சாங்கமோ அன்றி அரசியல்வாதிகளோ தனியான இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல அவர்களும் சாதாரண மனிதர்களே ! தமக்க%E

    Share
  • பொன் வண்டு கதைக்கு மேகலா இராமமூர்த்தியின் முடிவுரை

    பொன் வண்டு – முதற்பகுதி

    பொன் வண்டு (இறுதிப் பகுதி)

                                        மேகலா இராமமூர்த்தி

    …… நேரே அரசாங்க மருத்துவமனைக்கு பேருந்தை செலுத்தச் செய்தார்.

    அவசர சிகிச்சை டாக்டர் (emergency physician) விரைந்து முதலுதவி செய்ய ஆரம்பித்தார். முதலில் மூக்கிலிருந்து கொட்டுகின்ற இரத்ததை நிறுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டார். மாலாவின் துணையுடன் ஒயிலாவை நிமிர்த்தி உட்காரவைத்து, அவள் மூக்கின் மேல்பகுதியில் ஐஸ்பேக் (icepack) வைத்து இரத்தத்தை நிறுத்தினார். சிறிது நேரத்தில் ஒயிலாவிற்கு நினைவு திரும்பியது. மெல்ல மெல்ல கண்களைச் சிரமப்பட்டு திறந்தவளுக்குத் தன்னைச் சுற்றித் தெரிவதெல்லாம் ஏதோ கனவுபோலவே தோன்றியது.

    ஏதோ கேட்பதற்கு அவள் வாயைத் திறக்கும்முன், பயங்கரமான அழுகுரல் அவள் காதில் விழுந்தது. ஒயிலாவின் அம்மா அழுது அரற்றிக்கொண்டு அவளை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தாள். அவளின் பின் ஒயிலாவின் தந்தையும் அப்பத்தாவும் கலங்கிய கண்களோடு வந்துகொண்டிருந்தனர். மஞ்சு பள்ளிக்குச் சென்றிருந்தபடியால் அவளுக்கு விவரம் ஏதும் தெரியாது. ஒயிலாவின் அருகில் வந்ததும் அவர்கள் இன்னும் பெருங்குரலில் அழ ஆரம்பித்தனர்.

    அங்கு நின்றுகொண்டிருந்த டாக்டர் அவர்களை நோக்கி “ஏன் இப்படிக் கூச்சல் போடறீங்க?” கொஞ்சம் அமைதியா இருங்க, ப்ளீஸ்” என்றார். அங்கு சற்று அமைதி நிலவியது. ”யாரு கண்ணு பட்டுச்சோ எம்புள்ள மேலே, இப்படி ஆஸ்பத்திரியிலே கெடக்காளே? என்று சன்னமான குரலில் புலம்பினாள் ஒயிலாவின் தாய்.

    அப்போது, டாக்டர், ஒயிலரசியின் தந்தையைப் பார்த்து “கொஞ்சம் என் ரூமுக்கு வாங்கன்னு” சொல்லிவிட்டு நகர்ந்தார். ஒருவிதப் பதற்றத்தோடு அவரைப் பின் தொடர்ந்தார் ஒயிலாவின் தந்தை. ரூமுக்குள் வந்தவுடன் டாக்டர் தன் குரலைச் சற்று தாழ்த்திக்கொண்டு “இதுபோல முன்னமே மூக்குல இரத்தம் வந்திருக்கா அல்லது இதுதான் முதல் தடவையா?” என்று கேட்டார்.

    ”இல்ல டாக்டர்” அவ வீட்டுல  இருக்கும்போது இதுமாதிரி  நடந்ததில்ல. காலேஜுலேயும் நடந்திருக்க வாய்ப்பில்லேன்னுதான் நெனைக்கிறேன். அப்படி ஏதாச்சும் நடந்திருந்தா எம்மக எங்கிட்ட சொல்லியிருப்பா. ஏன் டாக்டர் கேக்கறீங்க? பயப்படறதுக்கு ஒண்ணுமில்லையே? என்று கலவரத்தோடு கேட்டார்.

    டாக்டர் சிறிது யோசித்தார். பயப்படற மாதிரி ஏதும் இருக்காதுன்னு தான் நானும் நெனைக்கிறேன். சில சமயங்கள்ல தலைல அடிபட்டாக்கூட மூக்கிலேர்ந்து அதிகப்படியா இரத்தம் வர வாய்ப்பிருக்கு. அதனால நாம எதுக்கும் மூளைய ஸ்கேன் செஞ்சு பாத்திடறது நல்லதுன்னு நெனைக்கிறேன். நம்ம மருத்துவமனைல அதுக்கான வசதியில்லை. அதனால சென்னையிலெ இருக்குற ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு சிபாரிசுக் கடிதம் தரேன். அங்க போய்ப்பாத்திடறது நல்லது என்றார்.

    ஒயிலாவிற்கு பூரண ஓய்வு  தேவைன்னு டாக்டர் சொல்லி அவளை டிஸ்சார்ஜ் செஞ்சிருந்ததாலே  அவளைப் படுக்கையைவிட்டு  எழ அனுமதிக்கவில்லை அவளின் தாயும், தந்தையும். ஒயிலாவிற்குப் பொழுது போவது மிகக் கடினமாகத்தான் இருந்தது. தோப்புப் பக்கம் போகமுடியலையேன்னு அவள் வருத்தப்பட்டுக் கொண்டே படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.

    அப்போது பக்கத்து அறையில்  அவள் தாயும், தந்தையும் மெதுவாகப்  பேசிக்கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது. அவள் தந்தை, டாக்டர் தன்னிடம் கூறிய விஷயங்களை ஒன்றுவிடாமல் அவள் தாயிடம் கூறிக்கொண்டிருந்தார். தலையில் அடிபட்டாலும் மூக்கிலிருந்து இரத்தம் வடியுமுன்னு டாக்டர் சொன்னதைக் குறிப்பிட்டு, ஒயிலா எங்கயாச்சும் கீழே விழுந்தாளா? உனக்கு ஏதாச்சும் தெரியுமான்னு அவள் தாயிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்படி ஏதும் நடக்கலியே, நடந்திருந்தா ஒயிலா எங்கிட்ட சொல்லாம இருக்கமாட்டாளே என்று தன் தாய் தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தை ஒயிலா கேட்டாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

    அன்று சனிக்கிழமை. கல்லூரி விடுமுறை. வழக்கத்தைவிட வேகமாகக் காலை டிபனை முடித்துவிட்டு மான் போலத் துள்ளிக்கொண்டு தோப்புக்குச் சென்றாள் ஒயிலா. முதல் நாள் தமிழ்ப் பேராசிரியை நடத்திய “காணி நிலம் வேண்டும்” என்ற பாரதியின் பாடல் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு, உற்சாகத்தில் உள்ளம் துள்ளத் தோப்பையும், சிட்டுக்குருவிகளையும் காண ஆவல் கொண்டு வேகமாக ஓடினாள். திடீரென்று கால் இடறிக் கீழே விழுந்தாள். பலமாக எதன் மீதோ தலை மோதியது; உலகம் சுழன்றது. உடனே நினைவிழந்தாள்.

    சிறுது நேரம் கழித்துக்  கண் விழித்துப் பார்க்கையில் தான் ஒரு பள்ளத்தில் கிடப்பதை அறிந்தாள் ஒயிலா. தலை விண், விண் என்று வலிப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். தன் தலை அந்தப் பள்ளத்திலிருந்த பெரிய கருங்கல் ஒன்றில் மோதியிருப்பதை அறிந்து அதிர்ந்தாள். மூக்கிலிருந்து ஏதோ கசிவதை அறிந்து கையால் வழித்தாள். ஆ! ரத்தம் என்று கத்தினாள். இங்கு நடந்ததை அம்மா, அப்பாவிடம் தெரிவிப்பதா, வேண்டாமா என்று சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவள், வேண்டாம்! அவர்களிடம் சொன்னால் பயந்து போவார்கள். வீணாக அவர்களைச் சங்கடப் படுத்த வேண்டாம், என்று முடிவெடுத்து, தோப்பில் அதற்குப் பிறகு இருக்க மனமின்றி வீடு நோக்கி நடந்தாள்.

    “நாளைக்கு விடிகாலையிலேயே ஒயிலாவோட கெளம்பிப் பட்டணம் போகணும், ஸ்கேன் எடுக்கணும்” என்று தந்தை, தன் தாயிடம் கூறிய வார்த்தைகள் ஒயிலாவின் பழைய நினைவுகளைக் கலைத்து அவளை நிஜ உலகிற்கு அழைத்து வந்தன.

    பொழுது விடிந்தது. ஒயிலரசியும், அவள் தந்தையும் சென்னைக்குப் புறப்பட்டனர். அப்பத்தா ஓடிவந்து ஒயிலாவிற்குத் திருநீறிட்டாள். ஒனக்கு ஒரு கொறவும் வராது தாயி! என்று கண்ணீரோடு திருஷ்டி கழித்தாள். ஒயிலாவின் அன்னையும், மஞ்சுவும் சோகம் கப்பிய முகத்தோடு அருகில் நின்றனர்.

    நீண்ட பயணம் ஒயிலாவை மிகவும்  களைப்படையச் செய்தது. பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டாள். இரவு உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு இருவரும் ஓர் விடுதியில் தங்கினர். மறுநாள் காலை சீக்கிரமேயெழுந்து மருத்துவமனை செல்ல ஆயத்தமாயினர். அவசர சிகிச்சை டாக்டர் தந்த சிபாரிசுக் கடித்ததைக் காட்டியதில் மருத்துவமனையில் சிறிது விரைவாகவே ஸ்கேன் எடுக்க முடிந்தது. ஸ்கேன் ரிசல்டை மறுநாள் தெரிந்துகொள்ளலாம் என அறிந்தார்கள்.

    ஒயிலாவும், தந்தையும் தாம் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினர். பொழுதைப் போக்குவது சிரமமாக இருந்தது இருவருக்கும். ”அப்பா! நாம சும்மா இங்கையே ஒக்காந்திருக்காம மெரினா பீச்சுக்குப் போயிட்டு வருவோமே” என்று ஒயிலா சொன்ன யோசனையை அவள் தந்தை ஏற்றுக்கொண்டார். அன்று மாலை மெரினா பீச்சுக்குச் சென்றார்கள். ஒயிலா கடல் அலைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்ட அவள் தந்தை, ”கடவுளே எம்மவளுக்கு ஒரு நோயும் இருக்கப்படாது. நாளைக்கி ஸ்கேன் ரிப்போர்ட்டில் ஒரு பிரச்சனையுமில்லன்னு வரணும்” என்று கண்ணீரோடு கண்ணைமூடிப் பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்.

    அப்பா! என்ற தீனமான குரலைக் கேட்டுக் கண்ணைத் திறந்தார் அவர். தன் மகள் நினைவு தப்பி மயக்கமாகியிருப்பதையும், அவள் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதையும் கண்டு, ”ஐயோ! யாராவது உதவிக்கு வாங்களேன்!” என்று அலறினார். சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த ஒருவர் விரைந்து வந்தார். என்ன சார்! என்ன ஆச்சு? என்று கேட்டபடியே ஒயிலாவைப் பார்த்தார். பேச இயலாமல் ஒயிலாவின் தந்தை தவித்ததைக் கண்டு, ”பாப்பாவுக்கு என்ன ஆச்சு சார்! என்று மறுபடியும் கேட்டார். ஒயிலா திடீரென்று மூர்ச்சையானதையும், அவள் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதையும் ஒயிலாவின் தந்தைக் கண்ணீரோடு கூறிமுடிக்க, அவர் ”கவலைப்படாதீங்க சார்! நான் ஆட்டோ டிரைவர் தான், பாப்பாவை உடனே ஆஸ்பத்திரியிலே சேத்து ட்ரீட்மெண்ட் குடுத்துடலாம்” என்றார்.

    ஒயிலாவின் தந்தை கண்ணீர்  மல்க அவரைக் கையெடுத்துக் கும்பிட்டார். காலையில் ஸ்கேன் எடுத்த மருத்துவமனையின் பேரைச் சொல்லி அங்கேயே சேத்துடலாம் என்று தெரிவித்தார். ஆட்டோ விரைந்தது.

    மறுபடி ஒயிலா கண்விழித்தபோது மீண்டும் தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்து தனக்குத் தானே வருத்தத்தோடு புன்னகைத்துக் கொண்டாள். அருகில் தன் தந்தை அமர்ந்து தன்னையே கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருப்பதை அறிந்து சிரிக்க முயன்றாள். அன்று இரவு வந்த ”ட்யூட்டி டாக்டர்” ஒயிலாவின் ஸ்கேன் ரிப்போர்ட் ரெடியாகிவிட்டது என்று கூறி ஒயிலாவின் தந்தையைத் தன் அறைக்கு அழைத்தார். ”இதோ வந்துடறேம்மா” என்று ஒயிலாவிடம் சொல்லிவிட்டு அவள் தந்தை அறையை விட்டு அகன்றார்.

    தன் எதிரில் நின்ற ஒயிலாவின்  தந்தையை வருத்தத்தோடு பார்த்த  டாக்டர், ”சார் மனசத் தேத்திக்குங்க, உங்க மகளோட சிறுமூளையிலே பலமான அடிபட்டு இரத்தம் கட்டியிருக்கு. ஆபரேசன் செஞ்சு குணப்படுத்தமுடியாத அளவு சேதம் பலமாயிருக்கு. எந்த நேரமும் அவங்க உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். கடவுள வேண்டிக்குங்க. மனுசங்களாலெ முடியாததைக் கடவுள் பொறுப்புலதான் விடவேண்டியிருக்கு” என்று கூறி அமைதியானார். அதைக் கேட்டு ஒயிலாவின் தந்தை சுக்கு நூறாகச் சிதறிப்போனார். ஸ்கேன் ரீப்போர்ட்டை கை நடுங்க வாங்கித் தன் பையில் மறைத்துக் கொண்டு தன் மகளிருந்த அறையை நோக்கித் தள்ளாடியபடியே சென்றார்.

    ஒயிலா பட்டணத்திலிருந்து வீடு வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆயிற்று. அவள் கல்லூரி செல்ல அனுமதிக்கப் படவில்லை. எல்லோரும் தன்னைப் பரிதாபமாகப் பார்ப்பதும், அடிக்கடி வீட்டில் அழுகுரல்கள் கேட்பதும் வாடிக்கையாயிற்று. ”பயப்படும்படி ஏதும் ஸ்கேன் ரிபோர்ட்டில் இல்லை” என்று தன் தந்தை தன்னிடம் கூறினாலும், மற்றவர்கள் நடவடிக்கையால் தன் உயிருக்கு ஏதோ ஆபத்து காத்திருக்கின்றது என்பதை அந்த சுட்டிப் பெண்ணால் நன்றாக உணரமுடிந்தது.

    மறுநாள் அதிகாலையில் உறக்கம் கலைந்து எழுந்த ஒயிலரசி அப்பத்தாவையும் எழுப்பி தனக்கு மிகவும் பிடித்த பால் பணியாரம் செய்து தரவேண்டும் என்று கேட்டாள். பேத்தியின் மீது உயிரையே வைத்திருந்த அப்பத்தாவும், ”அதுக்கென்ன ராசாத்தி இதோ செஞ்சுதாரேன்” என்று அடுக்களைக்கு விரைந்தாள். ”பல் தேய்ச்சுட்டு வந்து ஒரு பிடி பிடிக்கிறேன்னு” சொல்லிட்டு கொல்லைப் பக்கம் ஓடினாள் ஒயிலரசி.

    அரைமணி நேரமாகியும் ஒயிலரசி  அடுப்பங்கரைப் பக்கம் வரலியே, சுட்டு வச்ச பணியாரம் ஆறிப்போயிடுமே என்று எண்ணிக்கொண்டே, ”ஒயிலா… ஒயிலாக்குட்டி!” என்று கூப்பிட்டுக்கொண்டே கொல்லைப் பக்கம் வந்த அப்பத்தா, ஒயிலரசி தரையில் விழுந்துகிடப்பதைக் கண்டு பதறியபடியே அவளருகே ஓடினாள். எந்தாயீ, ஒயிலா…ஒயிலா! என் தங்கமே எழுந்திரும்மா என்று அலறினாள். அப்பத்தாவின் அலறல் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் பீதியோடு ஓடிவந்தனர். ஒயிலாவிடம் எந்த அசைவுமில்லை.

    ஒயிலாவை மடியில் போட்டுக்கொண்டு உலுக்கினாள் அப்பத்தா. அம்மா… எங்கண்ணு…எழுந்திரு தாயீ! என்று மீண்டும் அரற்றினாள்.. ஒரு பதிலுமில்லை. முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். மூக்கிலிருந்து வழிந்த இரத்தம் சிறிது காய்ந்திருந்தது.

    பின்பு நடந்ததெல்லாம் மறக்க முடியாத நிகழ்வுகள் ஆகிப் போயின! ”பொன் வண்டு” போல அவ்வீட்டில் வளைய வந்த ஒயிலாவின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், ஈடுசெய்யமுடியா இழப்பையும் அக்குடும்பத்திற்குத் தந்தது.

    உடலைவிட்டு ஒயிலரசியின்  உயிர் பிரிந்திருந்தாலும் அவள் ஆன்மா என்றும் அழிவின்றி அவ்வீட்டையும், அவள் மிகவும் நேசித்த தோட்டதையுமே சுற்றிச் சுற்றி வரும் என்பதில் சந்தேகமில்லை…

    Share
  • அக்னி

     
    சு. கோதண்டராமன்

    புலவர் வகுத்தபடி புகழோடு  தோன்றினாய்.

    பிறக்கும் கணமுதலே பிரகாசம் பரப்புகிறாய்.

    கடமை முடிந்தவுடன் கணமும் உயிர் தரியாய்.

    காலம் பலவாகக் கவிந்திருந்த இருளெனினும்

    நிற்றல் இயலுமோ நின் முன்னே தேவனே.

    சார்ந்தாரைக் காத்திடுதல் சான்றோரின் இயல்பென்பர்.

    நீயோ சார்ந்தாரை நீறாக்கி மகிழ்கின்றாய்,

    உயர்வும் தாழ்வுமென உனக்கில்லை பேதங்கள்

    உன்னதக் கலைப் பொருளை ஓசையின்றி விழுங்கிடுவாய்.

    அழுகிய பிணத்தினையும் ஆசையுடன் உண்டிடுவாய்

    அழுக்கு தூசிகளை அழித்திடவே விரும்பிடுவாய்

    பழையன நைந்தன உன் பசி வாய்க்கு உணவாக்கி

    புதுமை பிறத்தற்குப் புவி தன்னில் வழியமைப்பாய்.

    தங்கம் ஒளிர்வதுன் தயவின்றி நடைபெறுமோ?

    வீட்டில் சமையலகம் வீதியில் வாகனங்கள்

    எந்திரத் தொழிலகங்கள் யாவையும் இயக்கிடுவாய்

    நீயின்றி எனக்கிந்தப் பொருளெல்லாம் ஏது?

    நானே தான் ஏது?

    என்னிடம் நீ இன்றேல் எனைத் தூக்கி நான்கு பேர்

    உன்னிடம் சேர்ப்பித்தல் உலகில் மரபன்றோ?

    மானிடரே வாருங்கள், மகரிஷிகள் சொன்னபடி

    வேத மொழி சில கூறி வேண்டிடுவோம் அக்கினியை.

    அக்னிமீளே புரோஹிதம்

    யக்ஞஸ்ய தேவம் ருத்விஜம்

    ஹோதாரம் ரத்ன தாதமம்

    முன்னின்று வழிநடத்திச் செல்பவனே போற்றி

    முதன்மையாய் நலம் செய்யும் முன்னவனே போற்றி

    யாகத்தின் தலைவனாய் இயங்கிடுவாய் போற்றி

    யாகங்கள் செய்பவனும் நீயே தான் போற்றி

    சிறப்பான செல்வங்கள் சேர்த்திடுவாய் போற்றி

    Share
  • கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே !!

    சத்தியமணி

     

    கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே !!
    கண்ணீரில் அவர்கள் கைகட்டி இவர்கள்
    தண்ணீரில் சட்டம் டைகட்டி திட்டும்
    புதுமைப் பெண்டிர் புகழ்சொன்ன பாரதி
    புலம்பி அழுவதை எத்த்மிழிர் கேட்டனரோ
    பசும்பொன் புன்னகை ததும்பிடும் காந்தி
    விசும்பல் ஒலிகூட உம்காதில் சேராதோ
    இப்போது இந்நாளில் இனிமேலும் குறைவது
    பாதுகாப்பு பண்பாடு குலநீதி நற்குணமே
    எப்போது எந்நாளில் இவையாவும் சீராகும்
    தப்பொன்றை காணாமல் இருந்தாலே கேடாகும்
    கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே !!

    Share