சின்னச் சின்னதாய்
ஜெயஸ்ரீ ஷங்கர்
நாணத்தினால்
தாமரை…
வண்டுகள் வரவு..!
நீ சூடிய மல்லிகை..!
நறுமணம்…
எனைத்தேடி..!
விற்கும் வரை மட்டுமே..
ஒய்யாரமாய்..அணிவகுப்பு..!
செருப்பு…!
வளைந்த வில்லும்
நீந்தும் கெண்டையும்..
உன் முகத்தில்..!
நிறைகுடத்தை
சுமக்கிறாள்
கர்ப்பிணி..!
கால் வலிக்காதா..
சோர்வே வராதா,,..?
கடலலைகள்.
கனல் கொண்டு பறக்கும்
புதுமைப் பெண்..
மின்மினி…!
சொன்ன வாக்கு பலிக்குது…
வீட்டுக்குள்ளே.. குடுகுடுப்பைக்காரன்..
கதவிடுக்கில் பல்லிச் சத்தம்..!
மூடிய விழிகளுக்குள்
வண்ணச் சித்திரம்..
கனவு..!
கட்டித்தொங்கப் போட்டாலும்
சுதந்திரமாய்ப்.. பறக்கும் ஓர்நாள்
சுதந்திர தினத்தில் தேசியக் கொடி..!
சருகாகும் மலர்களே…
வரம் வாங்கி வந்தீர்களா..
சந்ததி வேண்டாம் என்று..!
கண்டெடுத்தேன்..
புதையலை..
உன் மனம்..!
மௌனமாய்…
உயிர் போராட்டம்..
எறும்புகள்..!
உடலுக்குள்ளே…
என்றும் குழந்தையாய்..
மனம்..!
திருமணம்..
இருமனக் கனவின்..
அரிச்சுவடி..!
கர்ப்பத்தை கலைகாதீர்..
விதையோடு பழங்கள்..!
வயிற்றிலா விதைப்பது..?
பாதத்திற்கு பாதுகாப்பு
கைகளுக்கும் தற்காப்பு
செருப்பு..!
நாளைய நெல்லுக்கு..!
நாற்று நடவு…இன்று..
பட்டினியோடு..!
உதிர்ந்த பூக்களை
வாரி அணைக்க
தென்னங்குச்சிகள்..!
முகம் காட்டும் கண்ணாடியே..
என்ன கோவம்..என்மேல்..?
எங்கே ஒளித்தாய் என் இளமுகத்தை….!
உடலுக்குள்ளே..
விஷமருந்து ..
உயிரோடிருந்தது..
பட்டாசு..!

மலர்கள் சருகு ஆவதில்லை. வாடினாலும் மலர்களே. சும்மா ஒரு கப்ஸா விட்டேன்.
பாதத்திற்கு பாதுகாப்பு
கைகளுக்கும் தற்காப்பு
செருப்பு..!
ஹி..ஹி..ஹீ….சிரிக்காமல் இருக்க முடியவில்லை…
….. தேமொழி