வையகத் தமிழ் வாழ்த்து

சி. ஜெயபாரதன், கனடா

பாரத கண்டச் சீரிளம் தமிழே !
ஓரினம் நாமெலாம் !
ஒருதாய் மக்கள் !
வாழ்த்துவம் உனையே !
வணங்குவம் உனையே !
தாரணி மீதில்உன்
வேர்களை விதைத்தாய் !
வேர்கள் தழைத்து
விழுதுகள் பெருகின !
ஈழத் தீவில்
இணைமொழி நீயே !
சிங்கப் பூரினில்
துணைமொழி நீயே !
மலேசிய நாட்டில்
தனிமொழி யானாய் !
காசினி மீதில்
மேவிய தமிழே !
வாழ்த்துவம் உனையே !
வணங்குவம் உனையே !

ஆத்தி சூடி ஓளவை,
ஆண்டாள்,
வையகப் புலவர்
வள்ளுவர், இளங்கோ,
பாரதி, கம்பர், பாரதி தாசன்,
யாவரும் உனது
மாதவப் புதல்வர் !
மலைகடல் தாண்டி
அலைகளைப் போல
ஆசியா, அரேபியா,
ஆஃப்ரிக்கா, ஈரோப்,
வடஅமெ ரிக்கா, கனடா புகுந்து
சொந்த மாக்கினர்,
செந்தமிழ் மாந்தர் !
யாதும் நாடே !
யாவரும் கேளிர் !
பாதுகாத் துன்னைப்
பரப்புதல் எம்பணி !
காசினி மீதில்
நேசமாய் நிலவும்
மாசிலாத் தமிழே !
வாழ்த்துவம் உனையே !
வையகத் தமிழே !
வணங்குவம் உனையே !

++++++++++

jayabarat@tnt21.com [April 7, 2008]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.