Blog

  • 13ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    13ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    2022 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 12 ஆண்டுகளை நிறைவுசெய்து 13ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் வல்லமை, 18,606 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,878 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேலான ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் மதிப்பீட்டாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம். அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    முக்கியமான தொடர்கள், கட்டுரைகள், படைப்புகள், தொடர்ந்து வெளிவருகின்றன. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம்.

    கடந்த ஆண்டு வல்லமையின் செலவினங்களுக்காக நன்கொடை கோரினேன். நண்பர்கள் ஜெயபாரதன், முனைவர் நா.கணேசன், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பேராசிரியர் ம.இராமச்சந்திரன் ஆகியோர் கனிவுடன் அனுப்பிய நன்கொடைகளால் தளம் சீராக இயங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கு உரிய கட்டணங்களை அடுத்த மூன்று மாதங்களில் செலுத்த வேண்டியிருக்கும். அன்பர்களின் நன்கொடையை வரவேற்கிறோம்.

    மேலும் நம் (Siteground) வழங்கியுடனான மூன்றாண்டு ஒப்பந்தம், இன்னும் மூன்று மாதங்களில் முடிகிறது. புதிதாக யாரிடம் இந்தப் பணியை ஒப்படைக்கலாம் எனத் தேடி வருகிறோம். தொடர்ந்து நிர்வகிக்கப்படும் வேர்ட்பிரஸ் (Managed WordPress) சேவையைத் தரமாகவும் மலிவாகவும் வழங்கும் நிறுவனங்களை / நண்பர்களைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.

    வல்லமைக்கு வரும் படைப்புகளை வெளியிடுவதில், முனைவர் சுரேஷ் ரங்கநாதன் பேருதவி புரிந்து வருகிறார். தள நிர்வாகப் பணியை எல்.கார்த்திக் தொடர்ந்து ஆற்றி வருகிறார். இருவருக்கும் நனி நன்றி.

    வல்லமை மின்னிதழை மேம்படுத்த, முயன்று வருகிறோம். உங்கள் வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிருங்கள்.

    Share
  • எஸ்.சுதர்சன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    எஸ்.சுதர்சன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    சென்னையில் எட்டாம் வகுப்புப் படிக்கும் எஸ்.சுதர்சனின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அசுரவடிவக் கருந்துளை படம் பிடிக்கப்பட்டது எப்படி?

    அசுரவடிவக் கருந்துளை படம் பிடிக்கப்பட்டது எப்படி?

    சி. ஜெயபாரதன், கனடா

    Now that the Event Horizon Telescope collaboration has released its image of the Milky Way’s black hole, the team is focusing on making movies of the two photographed black holes and finding other distant black holes large enough to study

    Read more: https://www.newscientist.com/article/2320264-whats-next-for-event-horizon-telescope-after-its-black-hole-pictures/#ixzz7TIS4Rog2

    An image of the Messier 87 black hole, showing, for the first time, how it looks in polarized light. The lines mark the orientation of polarization, which is related to the magnetic field around the shadow of the black hole.

    உலக விஞ்ஞானிகளின் ஒருபெரும் முதன்மைச் சாதனை

    இதுவரை கண்ணுக்குப் புலப்படாமல், பூதப் பெரும் ஈர்ப்பு விசையால் மட்டும் இருப்பதாகக் கருதப்படும்  கருந்துளையின் மெய்யான படத்தைப், பூமியில் தூரத்தில் உள்ள எட்டு ரேடியோ விண்ணோக்கிகள் கூர்ந்து படமெடுத்து, ஈன்ற பேரளவு தகவல் இலக்கத்தைச் [Data] 10 ஆண்டுகளாய்த் திரட்டிச், சுமார் 200 விஞ்ஞானிகள்  உறுதியாக வெளியிட்ட முதல் கருந்துளைப் படம்  இது.  மற்றும் பன்னாட்டு உலக விஞ்ஞானிகளின் உன்னத கூட்டு வெளியீடாக  மதிப்பிடப் படுகிறது.

    அந்த அசுரக் கருந்துளை பேரளவு நிறை கொண்டது.  6.5 பில்லியன் மடங்கு சூரியன் எடைக்குச் சமமானது.  அந்தக் கருந்துளை, பூமியிலிருந்து 55 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில், உள்ள M87 எனப்படும் ஒளிமந்தையின் [Galaxy M87]  மையத்தில் உள்ளது.  கருந்துளைகளுக்குச் “சுழற்சி” [Spin] உள்ளது.  மையக் கருந்துளை அருகில் வரும் பிண்டத்தையோ, அண்டத்தையோ, விழுங்கி, அதன் நிறை மிகையானால், சுழற்சியின் வேகம் அதிக  மாகிறது.

    Credit…Event Horizon Telescope Collaboration

    On 12 May, 2022 the Event Horizon Telescope (EHT) revealed the first close-up picture of the black hole at the centre of the Milky Way. Now that it has taken images of both that black hole, called Sagittarius A* (Sgr A*), and the one at the centre of the M87 galaxy, known as M87*, it is time for the collaboration behind the images to move on to new scientific pursuits. So, what is next?

    First, the researchers will have to examine the data they have already collected. The images of Sgr A* and M87* were both assembled from data gathered in 2017, but there have since been two more observation periods, with extra telescopes added to the collaboration’s original network of eight.

    “Data does exist. We have taken data in 2018 with one additional telescope, 2022 with three additional telescopes, and we are working very, very hard to get that to you… as soon as we possibly can, but I can’t make any promises about when,” said EHT researcher Lia Medeiros at the Institute for Advanced Study in New Jersey during a 12 May press event. It will probably take years before the results of that analysis are released, she said.

    One thing this work is expected to clarify is the structure of the material around Sgr A*, particularly the three bright “knots” of light seen in the new image. Because of the way the image was made, the bright spots could just be artefacts. “Those knots tend to line up with the directions in which we have more telescopes,” said EHT researcher Feryal Özel at the University of Arizona during the press event. “Even though it’s natural in theory to expect these brighter spots, we don’t trust them in our data that much yet.”

    Read more: https://www.newscientist.com/article/2320264-whats-next-for-event-horizon-telescope-after-its-black-hole-pictures/#ixzz7TIbGR0RE

    தகவல்

    1. https://www.newscientist.com/article/2320264-whats-next-for-event-horizon-telescope-after-its-black-hole-pictures/
    2. https://www.newscientist.com/article/2320264-whats-next-for-event-horizon-telescope-after-its-black-hole-pictures/#ixzz7TIbGR0RE
    3. Milky Way’s black hole has got 75 times brighter and we don’t know why
    4. https://www.newscientist.com/article/2320264-whats-next-for-event-horizon-telescope-after-its-black-hole-pictures/#ixzz7TIchVfR3
    Share
  • குறளின் கதிர்களாய்…(401)

    குறளின் கதிர்களாய்…(401)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(401)

    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது.

    -திருக்குறள் – 102 (செய்ந்நன்றியறிதல்)

    புதுக் கவிதையில்…

    உற்ற காலத்தில்
    ஒருவன் செய்த உதவி
    உருவில் சிறிதெனிலும்,
    உண்மையில் அது
    உலகைக் காட்டிலும்
    உருவில்
    பெரிதாக மதிக்கத்தக்க
    பெருமையுடையதே…!

    குறும்பாவில்…

    உரிய காலத்தில் செய்த
    உதவி சிறிதெனிலும், உலகைவிடப் பெரிதாயது
    மதிக்கத்தக்கத் தகுதியுடையதே…!

    மரபுக் கவிதையில்…

    உதவி செய்யும் ஒருவனதை
    உரிய கால மதில்செய்தால்,
    அதனி னளவு சிறிதெனிலும்
    அதனைச் செய்த தருணமதால்
    அதனின் மதிப்பே உயர்ந்திடுமே,
    அகில அளவில் பெரிதாக
    உதவி யதுவும் பெற்றிடுமே
    உயர்ந்த நிலையைத் தன்னாலே…!

    லிமரைக்கூ…

    செய்தது சின்ன உதவியே,
    செய்யப்பட்ட காலத்தால் பெறுமது உலகைவிட
    மதிப்பில் பெரிய பதவியே…!

    கிராமிய பாணியில்…

    நன்றியிருக்கணும் நன்றியிருக்கணும்
    செய்த ஒதவிய மறந்திடாத
    நல்லகொணமான நன்றியிருக்கணும்..

    ஒருத்தன் செய்த
    ஒதவி சின்னதாயிருந்தாலும்,
    அதச்செய்த காலத்தக் கருதி
    அதோட மதிப்பு
    ஒலகத்தவிடப் பெருசா
    ஒயர்ந்து போகுமே..

    அதால
    நன்றியிருக்கணும் நன்றியிருக்கணும்
    செய்த ஒதவிய மறந்திடாத
    நல்லகொணமான நன்றியிருக்கணும்…!

    Share
  • பழநியில் அதிரி புதிரி குத்தாட்டம்

    பழநியில் அதிரி புதிரி குத்தாட்டம்

    இதை நடனம் ஆடாமல், கை கால் அசையாமல் பார்த்துவிடுங்கள், பார்க்கலாம்.

    பழநி தீர்த்தக்காவடி பக்தர்களின் அதிரடி அதிரி புதிரி குத்தாட்டம்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எள்ளு சாதம் என்கிற எள்ளோரை

    எள்ளு சாதம் என்கிற எள்ளோரை

    புளியோதரை சாப்பிட்டிருப்பீர்கள். எள்ளோரை தெரியுமா? சுவையும் சத்தும் கமகம மணமும் கொண்ட எள்ளோரை (எள்ளு சாதம்) செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மேடவாக்கம் மேம்பாலத்தில் ஒரு பயணம்

    மேடவாக்கம் மேம்பாலத்தில் ஒரு பயணம்

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த மேடவாக்கம் மேம்பாலம், சென்னையின் மிக நீளமான மேம்பாலம் (2.3 கி.மீ.). ரூ.95.21 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்வோருக்குப் பயண நேரம் வெகுவாகக் குறையும். இந்த மேம்பாலத்தின் மீது இன்று ஒரு பயணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழநி முருகன் கோவில் – படியேறிச் சென்று தரிசித்த அனுபவம்

    பழநி முருகன் கோவில் – படியேறிச் சென்று தரிசித்த அனுபவம்

    பழநிக்குச் செல்ல வேண்டும் என்பது எங்கள் நீண்ட கால விருப்பம். இறையுதிர்காடு தொடர்கதையை விகடனில் படித்த பிறகு அந்த விருப்பம், இன்னும் அதிகரித்தது. போகர், நவபாஷாணத்தால் முருகன் சிலையை வடித்ததை, முருகனின் அற்புத சக்திகளை இந்திரா சௌந்தர்ராஜன் அழகுற அதில் எழுதியிருப்பார். இறையருளால் சில நாள்கள் முன், பழநிக்குச் சென்றோம். மலை உச்சிக்குப் படியேறிச் சென்றோம். எங்கள் மகன் ஹரி நாராயணனும் (மூன்று வயது) பிஞ்சுப் பாதங்களால் படியேறி வந்தான். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • The Sky walk in T Nagar by Greater Chennai Corporation / Southern Railway

    The Sky walk in T Nagar by Greater Chennai Corporation / Southern Railway

    Baskar Seshadri

    The foot over bridge work which had commenced three years ago had come a grinding halt when covid struck us and it was almost sent to back burner. But now for the past few months the work had picked up a good speed and gained momentum in all spheres. The project which was planned at a cost of Rs Fifty crores but now it had now made a over run .The FOB Is planned to connect the Mambalam Railway Station to T Nagar Bus stand on Madley Road . The over crowding Natesan and Ranganathan street may have a relief once this becomes operational in this messy part of Chennai. One way it is the Flyover on South Usman Road and the thick and dense traffic all through the day had made the road unusable and many fear to travel on this stretch. The work is nearing completion and the top portion to cover the stretch had commenced. It is expected to be completed in few Months and By August this is likely to be operational. We have to wait and watch the impact of this and the State govt has to make certain amendments once this open for public usage.

    The Points to be made are –

    1 No vehicles should be allowed to ply including a bicycle.

    2 Vendors of any kind should not be allowed to have their activity.

    3 Traffic police should be posted in this six hundred meters stretch (0.6 km) to ensure smooth walk over by the pedestrians.

    4 Since the width of the bridge is around twelve feet i think there may be a bifurcation on this stretch to discipline the users.

    5 CCTV cameras should be fixed on all the sides.

    6 Since the Police station is nearby a watch tower can be considered on both sides.

    7 Manning of the stretch is essential since over crowding may lead to chaos and if necessary the public can be halted to move till the crowd on one end becomes free.

    8 A rescue team may be positioned during festival times

    9 Selfie activity should be banned here on this point.

    10 The exit and entry points on both sides should be made free always free in case of any emergency. Let’s hope this decongest T Nagar a bit.

    Share
  • பொரணி

    பொரணி

    உடுமலை கி. ராம்கணேஷ்

    என்றாவது ஒருநாள்
    அதைச் செய்யத்தான் போகிறேன்
    யாருமற்ற பொழுதொன்றில்
    நிகழத்தான் போகிறது
    கெக்கலி கொட்டிச் சிரிக்கும்
    கையும் வாயும் மௌனியாகும்
    என்னவென்று சொல்லித் தொலைக்க
    காலம் காத்துக் கொண்டுதான் இருக்கிறது
    முன்னதையும் பின்னதையும் ஒன்றாக்கி
    மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
    முடிச்சுப் போடத்தான் செய்கிறீர்கள்
    வெறும் வாயில் ஊரையே மென்று
    காறிக் காறித் துப்புகிறீர்கள்
    சாறில்லாமல் சோறு உண்டாலும்
    சண்டையில்லாமல் உண்ண மறுக்கிறீர்கள்
    ஒருநாள்
    நாவில் கூட ஈரமில்லாமல்
    சாகத்தான் போகிறீர்கள்
    அப்பொழுதுதான் புரியும் பொரணி

    Share
  • வீதியில் ஒலித்த நாதஸ்வரம்

    வீதியில் ஒலித்த நாதஸ்வரம்

    தாம்பரம், முடிச்சூர் சாலையில் நண்பகலில் இந்தப் பெரியவரைப் பார்த்தேன். பெரிய நாதஸ்வரத்துடன் ஒவ்வொரு கடை வாசலிலும் சில நொடிகள் மட்டும் வாசித்துச் சன்மானம் பெற்றுக்கொண்டிருந்தார். அவரை மேலும் சிறிது வாசிக்கச் சொல்லிப் பதிவு செய்தேன். இவர் எப்படி வாசிக்கிறார் என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தனித்திருக்கும் பெற்றோர் – தீர்வு என்ன?

    தனித்திருக்கும் பெற்றோர் – தீர்வு என்ன?

    அயல்நாட்டில் பிள்ளைகள் இருக்க, முதிய வயதில் தாய்நாட்டில் பெற்றோர் தனித்திருக்கும் நிலை உருவாகிறது. இதற்கு என்ன தீர்வு? சுதா மாதவன் கேள்வியை முன்வைத்து நிர்மலா ராகவன் உடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஹரி நாராயணனின் ஆயிரம் கேள்விகள்

    ஹரி நாராயணனின் ஆயிரம் கேள்விகள்

    ஹரி நாராயணனுக்கு மூன்றே முக்கால் வயது. இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை. அக்காவிடமும் தொலைக்காட்சி வழியாகவும் நிறையக் கற்றுக்கொள்கிறான். அது என்ன, இது என்ன என ஏராளமாகக் கேள்விகள் எழுப்புவான். தமிழ்ச் சொல்லைக் கேட்டு ஆங்கிலத்திலும் ஆங்கிலச் சொல்லைக் கேட்டுத் தமிழிலும் அதைச் சொல்லச் சொல்வான். இதோ இன்று அவன் எழுப்பிய கேள்விகளின் ஒரு பகுதி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவையில் ஒரு பலூன் கோட்டை

    கோவையில் ஒரு பலூன் கோட்டை

    கோவையில் நடைபெற்ற பிரெஞ்சு கார்னிவல் நிகழ்வில் பலூன் கோட்டை அமைத்திருந்தார்கள். இதில் 15 நிமிடம் விளையாட, ஒருவருக்கு ரூ.50 கட்டணம். நித்திலாவும் ஹரி நாராயணனும் உற்சாகமாக விளையாடினார்கள். குழந்தைகள் குதித்து, கும்மாளம் போட்டு, கொண்டாடிய காட்சிகள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • My Friend

    My Friend

    Baskar Seshadri

    My Friend Sivakumar is a big hearted person. He with his wife spends a great deal of time every day to feed the pets in and around Mandaveli. They are too kind enough to spend good money and involve their maximum time in all the activities of social interest. Every day they feed hundreds of birds on their terrace in Mandaveli almost like Camera Sekar of Royappettah. They soak the rice the previous night and provide the breakfast to the waiting birds every day in the Morning and evening. Have you ever seen Hundreds of parrots sitting on a perfect line to take their food every day? It happens at his terrace. Both of them are jointly involved in the activities and are showing the best of Humanity.

    Not only this. They are in a touch with a NGO and are providing the water-bowls to the street animals and Birds wherever they could.  Only yesterday i was just planning a water bowl near my house. Last year a young Tejaswi did the same and had erected a water bowl at the beginning of Thiruvengadam Street, Mandaveli .

    This evening Siva fondly as he is being called by one and all rang me to say that he was ready with a bowl for me. In next five minutes he landed in front of My House and placed the bowl. What more? He even went in to fetch water and made the first filling. I was so moved at the act of this couple. Thanks Siva and Mrs Viji for all the great qualities of yours. May your tribe increase.

    My Respects and Kudos.

    Please support Sivakumar and His family in his mission and he will be too glad to take the support. Siva a down to earth person is my friend for the past Forty Five Years and even before.

    Share