தாம்பரம், முடிச்சூர் சாலையில் நண்பகலில் இந்தப் பெரியவரைப் பார்த்தேன். பெரிய நாதஸ்வரத்துடன் ஒவ்வொரு கடை வாசலிலும் சில நொடிகள் மட்டும் வாசித்துச் சன்மானம் பெற்றுக்கொண்டிருந்தார். அவரை மேலும் சிறிது வாசிக்கச் சொல்லிப் பதிவு செய்தேன். இவர் எப்படி வாசிக்கிறார் என்று பாருங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.