Blog

  • விருப்பமான ஒரு பிறந்தநாள் கேக் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    விருப்பமான ஒரு பிறந்தநாள் கேக் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    பிறந்தநாள் கேக் ஐந்து மணிக்குக் கொடுக்க வேண்டும் என்பதே ஒப்பந்தம். நான்கு மணிக்கு முன்பாகவே அதன் வேலை நிறைவடைந்திருந்தது. பேக்கரியில் அனைவரும் பார்க்கும் விதத்தில் காட்சிப்படுத்தியதுடன் என் வேலை முடிந்தது.

    ’பேக்கரி உரிமையாளர் பாராட்டுற விஷயத்துல ஒரு கஞ்சப்பையனல்ல. அவர் என் முதுகில் தட்டி வாழ்த்துக்களைப் பொழிந்தார். பேக்கரியில் வேலை பாக்கிற வேற இருவரை பொறாமைப்பட வைக்கணும்னு அவரு நினைச்சாரோ என்னமோ?’

    என்ன வாழ்த்தும்போது அவர் ஓரக்கண்ணால அவங்களையும் பார்த்தது  என்னக் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட செய்தது.

    கேக்கின் மேல்பாகத்தில் பாலாடை நிறத்தில் ’ஹாப்பி பர்த்டே’ என்று எழுதியதோடு அதுக்கு சுத்திலுமாக 20 சிவப்பு மெழுகுவர்த்திகள் அழகாக அடுக்கி வைக்கவும் செய்யப்பட்ட இந்த கேக் யாருக்கு என்று சில வாடிக்கையாளர்கள் கேட்காமல் இல்லை. அவர்களின் ஆர்வத்தை குறைக்க பேக்கரி உரிமையாளரோ,  நானோ, மற்ற ஊழியர்களோ தயாராகவில்லை. அப்படி கேக்கிற்கு ஒரு குழப்பமான சூழ்நிலை வந்தது. அது ப்ளம் கேக்கா? இல்ல சாக்லேட் கேக்கா? என்று ஒரே பார்வையில் கண்டறியக்கூடிய  சாமர்த்தியசாலி ஒருவர்  ’இவ்வகை ஒரு கேக்கை என்  வாழ்நாளிலேயே நான் பார்த்ததில்லை என்று மனதில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தியபோது பெருமையும், பெரு மகிழ்வும் கட்டுப்படுத்த சிறிது சிரமப்பட வேண்டி இருந்தது. ’நுண்ணிய கலை நுணுக்கங்களால் செய்த ஒரு சிற்பத்திற்கு இணையானது என்பது மற்றொரு வாடிக்கையாளரின் மதிப்புரை. அவரின் முன்பாக நான் முடிந்தவரை பணிவுடனிருந்தேன்.  இன்று கேக் எப்போதும் விட சிறப்பானதாக வர முழு முயற்சி செய்திருந்தேன். 20 வயது பிறந்தநாள் கொண்டாட இருக்கும் தீஷா என்ற பெண்ணின் முகம் அடிக்கடி என் நினைவில் வந்தது. ஒருவேளை அதுவே என்னை அதிகமாக உற்சாகப்படுத்தி இருக்கலாம். திராட்சைப் பழம் போட்டு சுட்டெடுக்கும் கேக்கின் அதிக வாசம் தான் அவளை சுயமாக கார் ஓட்டிக்கொண்டு இங்கு வர வைத்திருக்கும் என்று நான் கற்பனை செய்ததுண்டு. கேக்கின் கீழ்பாகம் செர்ரி பழத்தினால் அலங்கரிக்கும் போது அவளுடைய உதடுகளை குறித்து நான் எண்ணியதுண்டு.  செர்ரியின் அதே நிறம்தான் அவைகளுக்கும்.

    சுவரில் மாட்டப்பட்ட கடிகாரம் ஐந்து மணி என்று கூவிக் கூறியது. நீல நிறத்தில் உள்ள ஒரு சின்ன கார் எந்த நொடியும் பேக்கரியில் வந்து நிற்கலாம். எனது கண்கள் அடிக்கடி வெளியே எட்டி பார்த்தன.  கேக்குடன் பங்களாவிற்கு நானே செல்ல வேண்டி இருக்குமென்று ஞான அறிவு இதற்கிடையில் என்னுள் ஒலித்தது. காரண காரியத்தோடு விளக்கக் கூடிய ஒன்றாக அவ்வெண்ணம் இருக்கவில்லை.

    பதினைந்து நிமிட காத்திருப்பிற்குப் பிறகு பேக்கரி உரிமையாளர் தொலைபேசி வழியாக பங்களாவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.  அது பயன்படவில்லை.  பங்களாவின் தொலைபேசி தற்காலிகமாக வேலை செய்யவில்லை என்ற தகவல் இரண்டு மூன்று முறை ரிசிவர் வழியாக கேட்டது. ஒரு டாக்ஸி பிடித்து முடிந்தவரை வேகமாக கொண்டு போய் கொடுத்துவிட்டு வர என்னிடம் கட்டாயப்படுத்தினார். சம்மதத்தின் அறிகுறியாக தலையை ஆட்டிக்கொண்டு டாக்ஸி பிடிக்க நான் வெளியிலிறங்கினேன்.

    அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் வரவில்லை.  சரியாக ஐந்து முப்பது மணிக்கு நான் கிளம்பினேன். ஹோப் வில்லா’ டாக்ஸி ஓட்டுனருக்கு அறிமுகமான இடம் தான். கரும்பனைகளையும் பாறை கூட்டங்களையும் பின் தள்ளிக்கொண்டு டாக்ஸி டெய்ஸி தோட்டங்களுக்கிடையில் உள்ள சமமான பரப்பை அடைந்தது. தூரமாக பாதை இறக்கமாகச் செல்வதை டிரைவர் சுட்டிக்காண்பித்தார். பார்த்துக் கொண்டிருக்கவே குன்றின் மேற்பகுதி முழுவதுமாக மறைந்தது வழியோரங்களில் அங்கும் இங்குமாக குரங்குகள் காட்சியில் தெரிந்தன. சில குரங்குகள் மரங்களில் அமர்ந்து கொண்டு டாக்ஸிக்கு நேராக பார்த்து இளித்துக்கொண்டிருந்தன.  கரும் பாறைகளிலிருந்து உடைந்து வந்த நீர்ப்பாதை கூடுதல்  நீர் இல்லாமல் பாதையின் குறுக்காகச் சென்றது.  மலைச்சரிவின் மரங்களுக்கிடையில் காளான்கள்.

    ”டிம்…………….. ஓர் இரைச்சல் கேட்டது. டாக்ஸியின் எஞ்சின் சலனமற்றது.  ஓட்டுநர் கீழே இறங்கினார்.

    என்ன ஆச்சுன்னு நான் தலைய வெளியில விட்டு ஆராய்ந்தேன்.  ஓட்டுனர் போனட்டை தாழ்த்தி விட்டு எனக்குப் பக்கத்தில வந்தார். அவருடைய முகம் வெளிர்த்திருந்தது.

    நான் சுற்றிலும் பார்த்தேன் நீண்ட பாதையும் குன்றுகள் இறங்குகின்ற மலைச்சரிவுகளும் கண்களில் தெரிந்தன.

    ஓட்டுனர்  மன்னிப்பு கேட்கத் தயாரானார்

    “ வேண்டாம்.”

    நான் கோபத்தோடு பிறந்தநாள் கேக்கை வெளியில் எடுத்தேன். உடம்ப வளச்சு நிக்கிற டிரைவரை கவனிக்காம நான் இறங்கி நடந்தேன். அவன் பின்னாலிருந்து என்னமோ அழைத்து சொன்னான்.  நான் அதை கவனிக்கல. என் மனசு கொந்தளிச்சது.  ஒரு பிறந்தநாள் கேக்கை கையில எடுத்திட்டு நீண்ட வழியாக உள்ள இந்த மலைப் பாதையில் என்னுடைய பயணம் கொஞ்சம் கூட சரியானதல்ல என்று நான் எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். சில பறவைகளின் கீச்சு குரல் கேட்டது. வானம்  மங்கிய நீல நிறமாக இருந்தது. குளிர்க் காற்று வீசியது இரண்டு பக்கங்களிலும் தேயிலைச் செடிகள் ஆடிக் கொண்டிருந்தன.

    ஒற்றையடிப் பாதை. இருட்டுறதுக்கு முன்னாடி நான் ஹோப் வில்லா’ போயிடலாம்னு நினைச்சாலும் இவ்வளவு தூரம் கடந்து பங்களாவோட கேட் கதவை அடைவதற்குள்ள பகல் வெளிச்சம் முழுவதுமாக மங்கி இருந்தது. சொந்தக்காரங்க வர நேரம் ஆகியும் கேட் திறந்து வைக்கவில்லை.

    அடங்காத ஒரு விலங்கைப் போல முரண்டு கொண்டு கேட்காமல் காவல்காரன் எனக்கு நேராக வந்தார். இதுக்கு முன்னாடி மிலிட்டரியில் இருந்தவராக இருக்கணும்.

    ”பேக்கரியில் இருந்து வரேன்”. நான் சொன்னேன்.

    “இது என்னது?” அவரின் கரகரத்த குரல் உயர்ந்தது.

     ”கேக் சூடாறவில்லை”

    “ சூடு ஆறிருச்சானு நான் கேட்கலையே!”

    இல்லன்னு எனக்கு சொல்ல வேண்டி வந்தது. அவன் கேட் திறந்தான். பங்களா தூரமாக மரங்களுக்கு இடையில் தெரிந்தது. அந்தப் பக்கமாக நடக்கும் போது தேக்கினுடையவும், பெரிய மரங்களினுடையவும் உச்சியில் இருந்து குளிர் கீழே இறங்கியது. பன்றி தொழுவம் எதிரில் தென்பட்டது. பங்களாவில் நிறைய பன்றிகளும், முயல்களும் உண்டென்று   கேள்விப்பட்டிருக்கறே. தோட்ட உரிமையாளரான பால்அகஸ்டின் பன்றிகளையும் முயல்களையும் வளர்த்துவதில் மட்டுமல்ல வேட்டையாடுவதிலும் விருப்பம் உள்ளவனாவான்.

    நான்  முற்றத்தை அடைந்தேன். வெளியில் உள்ள தூண்களுக்கு நடுவில்  தொங்கிக் கொண்டிருந்த விளக்கை யாரோ ஏற்றியவுடன் அவ்விடம் பிரகாசமானது.

    கேட் காவல்காரனின் வயதை ஒத்த ஒருவர் ஒரு மது பாட்டிலையும் ஏந்திக் கொண்டு அவசரமாக முற்றத்திற்கு வந்தார்.

    ’ஹில்டா’ அவன் திரும்பி நின்று கொண்டு சத்தமாகக் கூப்பிட்டார். ’வாத்து ரோஸ்ட் சீக்கிரம் கொண்டு வரணும்.’

     ஊதா நிறத்திலுள்ள பாதி உடையும், கவுனுமாக ஹில்டா இடது பக்க கதவு வழியாக ஓடி வந்தாள்.

    “ பன்றியோ?”

    ”அது அங்கே இருக்கட்டும்”

    ”சாமுவேலு அண்ணா போய்க்கோங்க. நான் உடனே கொண்டு வரேன்.”

    ”தாமதிக்கக் கூடாது”

    “விரோனியருடைய குழப்பம் தான்”

    ”அதெல்லாம் எனக்குத்தெரிய  வேண்டா. இது ரெண்டாவது பாட்டில் ஆச்சு நினைப்பிருக்கட்டும்.”

    சாமுவேல் ஒரு தாக்குதலின் கௌரவம் குறையாத முகத்துடன் படிகளிறங்கினான். பிறந்தநாள் கேக்குடன் நான் வந்திருக்கிறேன் என்ற போதும் கூட அவருடைய முகபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை.

    ”ஆகட்டும். என்னமோ ஆகட்டும். நீ பேச வேண்டியது எங்கிட்ட இல்ல எஜமாங்கிட்ட. எங்கூட. வா”

    அவர் எங்க கூட்டிட்டுப்போறாருனு  எனக்குத் தெரியல. சில அடிகள் நடந்த போது ஒரு பொருள் என் கண்ணில பட்டது. அங்கே கொஞ்சம் இருட்டா இருந்துச்சு.

    உள்ளே என்னமோ சிதறிக்கிடந்தது.

    ‘இன்னைக்கு முழுசும் தகர்க்கறதாவே இருக்கு.’ சாமுவேல் புலம்பினாரு.   உள்கூடங்களில் கண்ணாடி ஜன்னல்களுக்கு முழுவதும் கெட்டியான சிவப்பு நிற திரைசீலை இடப்பட்டிருந்தது. கதவு மல்லாக்கத் திறந்து வைத்திருந்த நிலையில் அதற்கும் கர்ட்டன் இருந்தது. அதன் ஒவ்வொரு பகுதியும் இரண்டுப் பக்கங்களிலுமாக தொங்கியது. அதற்கும் சிவப்பு நிற திரைச்சீலை தான். உள்ளே நல்ல வெளிச்சமாய் இருந்தது. ஆனால் வராண்டாவிலும் வெளியிலும் உள்ள விளக்குகள் ஏனோ ஏற்றப்படவில்லை.

    உள்ளே ஒரு நாய் குரைத்தது. அது என்னை ஆச்சரியப்படுத்தியது.

    ”பத்திரமா இருந்துக்கோ”

    சாமுவேல் மிருதுவான சத்தத்தில் எனக்கு முன்னறிவிப்பு தந்தான்.

    நான் கேக் தட்டை இறுக்கமாகப் பிடித்தேன்.

    சாமுவேல் பின் தொடர சைகை காட்டினான். நான் அவரின் பின்னாடி கட்டிடத்திற்குள்ளாக கடந்து வந்தேன். வரவேற்பறை சூனியமாய் இருந்தது. டீபாயில் ஒரு ஸ்படிகப் பாத்திரத்தில் பல அளவுகளில் உள்ள துண்டுகள். கொஞ்சம் முன்பாக நான் கேட்ட சத்தம் என்னவாக இருக்கும் என்று அதை பார்த்த போது அனுமானிக்க முடிந்தது.

    வரவேற்பறையில தவிட்டு நிறத் துணி போடப்பட்ட சோபாவும், மேலே கண்ணாடிப் பதிக்கப்பட்ட உயரம் குறைந்த மேசையும் தவிர வேறு சாமான்கள் ஒன்றுமில்லை. வலது மூலையில் ஓர் அலங்காரப் பொருளாக வைக்கப்பட்ட காவிவர்ண வேருக்கு மேல் ஒரு பீங்கான் சிலை. படுக்கையறைக்குள் கதவுக்கு மேலாக ஒரு ரோஸ்வுட் கடிகாரம். படுக்கை அறையில் இருந்து மதுவின் வாசம் வரவேற்பறை வரை வீசியது.

    நான் ஒரு நிழல் போல சாமுவேலுடன் நடந்தேன்.

    பால் அகஸ்டினை பல முறையாக நான் தூரமாக நின்று பார்த்ததுண்டு. நீளமானதும் பறந்ததுமான உடல். தலையின் பாதிக்கு மேல் நெற்றியே ஆக்கிரமித்திருந்தது. கன்னங்கள் உப்பி இளகி தொங்கிக் கொண்டிருக்கும். மேலுதட்டின் பாதி வரை வெட்டப்பட்டு மேல் பக்கம் வடிவமைக்கப்பட்ட மீசை. இடைவெளி இல்லாமல் சேர்ந்த புருவங்கள். கீழே மிகச்சிறிய கண்கள். சிக்காரியாவின் உருவம். பின்பாகமாக படுக்கையில் இரட்டைத்தலை துப்பாக்கி. வேட்டைக்கு உடன் கூட்டிட்டு போகக்கூடிய நாய் காலுக்குக்கீழ்  இல்லை. அதற்கு பதிலாக முதலாளிக்கு சமமான வேறொரு இருப்பிடத்தில் இருந்தது.

    ”யாரது?”

    ’தீஷாம்மா ஆர்டர் போட்ட பிறந்தநாள் கேக்கு எடுத்துட்டு வந்திருக்கே.’

    சாமுவேல் இத சொன்னதும் எல்லாம் விளக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். அது தவறாகியது. இருப்பிடத்தில் சாய்ந்து உட்கார்ந்து பால்அகஸ்டின் மெதுவாக முணுமுணுத்தார். நாய் எனக்கு நேராக குறைத்துக் கொண்டு குதித்தது. நான் அரண்டு போய் கதவை இலட்சியமிட்டு குதித்தேன். ஹில்டா அடுக்களையிலிருந்து வாத்து ரோஸ்டுடன் அவசரப்பட்டு வரக்கண்ட நேரம். அதுதான் காரணம். ட்ரே நிலத்தில் விழுந்தது. பின்னாலிருந்து  அலறல் கேட்டது. பால்அகஸ்டின் துப்பாக்கிக்குக் கை நீட்டுகிறான் என்பதை அறிந்தவுடன் ஏன்னு தெரியாமல் நான்  அதிர்ச்சிக்குள்ளானேன்.  என் அதிர்ஷ்டம் நாயின் கவனம் அதற்குள் ஹில்டா தரையில் வீழ்த்திய வாத்து ரோஸ்டின் மேல் திரும்பியது. நான் வேகமாக வெளியில் குதித்தேன். வெளியில் இருட்டு பரவியிருந்தது. நான் செடிகளுக்கு இடையில் பதுங்கி இருந்தேன். சதுப்பு நிலம் என்பது போல எனக்குச் சுற்றிலும் கொசுக்கள் இரம்பின.

    பிறகு பார்க்கும்போது நான் நிறைய விருந்தாளிகளுக்கு நடுவில் இருந்தேன். பங்களாவின் பரந்த வாசலில் விருந்தினர்கள் குழப்பவாதிகளாக நின்றனர். யாரும் வரவேற்க வராதிருந்ததுதான் குழப்பத்திற்கு காரணம்.  அது நிலைத்திருக்க, கடும் மஞ்சள் நிறத்தில் பட்டு சேலை அணிந்த ஒரு பெண் ஒரு மூலையில் தள்ளி நின்று சின்ன  கைக் கண்ணாடியில் பார்த்து உதடுகளில் லிப்ஸ்டிக் அடித்தாள். பங்களாவின் முற்றத்தில் விருந்தினர்களின் வாகனங்கள். அவைக்கு அருகில் கோட்டும் டையும் உடுத்திய ஒருவன் அழகாக பொதியப்பட்ட ஒரு பரிசுப்பொருளை கையில் ஏந்தி நின்றார். வேறு சிலருடைய கையிலும் பரிசு பொருட்கள் காணப்பட்டன. என் கையிலோ பிறந்தநாள் கேக். பல மின் விளக்குகளின் வெளிச்சத்தில் என்றாலும் எல்லார் முகத்திலும் சலனமான நிழல் விழுந்திருந்தது. பிறந்தநாள் கேக்கை யாரிடம் கைம்மாறுவது என்று தெரியாமல் குழம்பினேன்.

    அதற்குள் ஒருவர் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்து எதிர்பாராத காரணங்களால் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.

    ’என்னது?’ பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லையா?’ ஒரு விருந்தாளி சத்தமாகக் கேட்டார்.

    “ஆமாம் எதிர்பாராத சூழ்நிலையால் அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டியதா போச்சுனு மேடம் வருத்தத்தோட சொன்னாங்க” ஒருவர் விளக்கினார்.

    ”வெட்கம்……….”

    “ மேடத்தை கூப்பிடுங்க.”

    “ மன்னிக்கணும் மேடம் யாரையும் பார்க்க விரும்பல.”

    “தீஷா இருப்பாளே. அவளை கூப்பிடுங்க குறைந்தபட்சம் பரிசுகளையாவது அவளிடம் ஒப்படைக்கலாமே.”

    ”பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்துசெய்ததால  பரிசுகளையும் வாங்கக் கூடாது என்பதுதான் முடிவு.”

    அவர் ஓர் அரங்கு என்பதாக பாவித்து  புறம் திரும்பி நடந்து  மறைந்தார். தோல்வியையும் அசௌகர்த்தையும் பங்கிட்டுக் கொண்டு விருந்தினர் ஒவ்வொருத்தராக போய்க் கொண்டிருப்பதை, ஒரு கதவிற்குப் பின்னால் இருந்து ஹில்டா எட்டிப் பார்ப்பதை நான் கவனித்தேன். ஏற்கனவே முனங்கிக் கொண்டிருக்கும் கொசுக்களுக்கு இடையிலிருந்து விருந்தாளிகளுக்கு மத்தியில் நான் வந்ததே ஹில்டாவைப் பின்தொடர்ந்து தான்.

    நான் பிறந்த நாள் கேக்குடன் அவளுக்கு முன்னால் பாய்ந்தேன்.

    ‘ஹில்டா.’

    அவள் பின் வாங்கினாள். நான் கதவு வழியாக நுழைந்தேன். அவள் அறையை விட்டு போயிருக்கவில்லை.

    ’ம்ஹும்? என்ன வேணும்?’

    ’எனக்கு மேடத்தை பார்க்கணும்’

    ’மேடம் இப்போ யாரையும் பார்க்க மாட்டாங்கன்னு மேத்யூ சார் சொன்னது கேக்கலையா?’

    ’கேட்டுச்சு அது எனக்கு தொடர்பில்லாதது’

    ஹில்டாவின் நெற்றி சுழிந்தது. ஏன் எனக்குத் தொடர்பு இல்லைன்னு விளக்க முயற்சித்தேன். அதாவது நான் விருந்தில் பங்கேற்க வந்த ஆள் அல்ல. என் கையில் இருப்பது பிறந்தநாள் பரிசுமல்ல. தனிப்பட்ட முறையில்  ஆர்டர் கொடுத்து செய்த கேக்கோட வந்திருக்கிறேன்.

    அப்போது அடுக்களையில் மணி முழங்கியது.

    ’மேடம் கூப்பிடறாங்க’

    ஹில்டா என்னமோ எடுப்பதற்காக அடுக்களைக்கு வேகமாக நடந்தாள். நானும் பின் தொடர்ந்தேன்.

    அடுக்களையில் சின்ன மேசை மேல் முழுசாக பொரித்தெடுத்த ஒரு பன்றிக்கறிக்கு அருகில் மண்டி போட்டு உட்கார்ந்து  சேலை அணிந்த ஒரு பெண் கண்ணீர் விடுவதை கண்டு நான் மிரண்டேன்.

    ’விரோனி, போதும், ஹில்டா ஆணை இடுவது போல கூறினாள்

    ’என்னோட மனக்குமுறல நான் அழுதுதா தீர்க்க முடியும்.’ வீரோனி அழுகையைத் தொடர்ந்தாள்.

    நான் விரோனியை பார்த்துக் கொண்டிருக்கவே ஹில்டா நிலவறையிலிருந்து வேக வேகமாக ஒரு மது பாட்டிலுடன் வெளியில் வந்தாள். அடுக்களையிலிருந்து பங்களாவின் மேலே  செல்ல  படிக்கட்டுகள் இருந்தன. ஹில்டா படிகள் ஏறத் தொடங்கினாள். நானும் படிக்கட்டு ஏறுவது என்று தீர்மானித்தேன். ஹில்டா என்னை விலக்கவில்லை.

    ‘உண்மையில அங்க என்ன நடந்துச்சு? எனக்கு ஒன்னும் புரியல’

    நாங்க மேலே உள்ள வராண்டாவை அடைந்திருந்தோம்.

    ஷ்……ஷ்………

    ஹில்டா ஒரு முன்னறிவிப்பாக சுவரோடு சாய்ந்து நின்றாள். ஏதோ ஆபத்திலிருந்து தப்பிக்க நானும் அப்படியே செய்ய வேண்டும் என்று அவள் சைகையில் கூறினாள். வயது காரணமாக குருடர்களான இரண்டு பேர் ’தீஷாவின் பெரியம்மாவும் பெரியப்பாவும்’ என்று ஹில்டா என் காதில் ரகசியமாக கூறினாள். தட்டுத் தடுமாறி முன்னால் வந்தார்கள். பெரியப்பா வெள்ளியால் கட்டப்பட்ட மூங்கில் ஊன்றுகோலை கையில் வைத்திருந்தார். பெரியம்மாவின் கழுத்திலும், காதுகளிலும், கைகளிலும் நிறைய ஆபரணங்கள்.

    ’பொகையிலயும் சாப்பிட்டு நடக்கப் போறாங்க. ஒரு வழியும் இல்ல’

    ஹில்டா குரல் தாழ்த்தி கூறினாள். ஆனால் பெரியம்மா என்னமோ சத்தம் கேட்பது போல நின்று காதுகளை கூர்மையாக்கினார். ஹில்டா பாதங்களை ஊன்றி இடையிலூடாக  நடந்தாள். ஹில்டா பேய்களைப் போல நிற்கின்ற பெரியம்மாவினுடையவும் பெரியப்பாவினுடையவும் மேலிருந்து  பார்வையை அகற்றினாள். நானும் அப்படியே செய்தேன்.

    இடைவெளியில் இரண்டு பாகங்களிலாக படுக்கையறைகள்.

    வெளியில் காத்து நிற்கக் கூறி ஹில்டா ஒரு அறைக்குள் போனாள்.  திரும்பி வரும்போது கையில் மது பாட்டில் இருக்கவில்லை.

    ’எனக்குப் போயி, சூப்பு எடுத்துட்டு உடனே வரணும்’.

    ஹில்டா ஆடையைத் தூக்கி பிடித்துக்கொண்டு வேறொரு அறைக்கு நேராக நடந்தாள். அதன் கதவுகள் அடைந்து கிடந்தன. தீஷாவின் பெயர் அழைத்து ஹில்டா கதவை ஒரு முறை தட்டியதுதான் தாமதம், என்னவோ ஒரு பொருள் கதவுக்கு நேராக சத்தமாக வீசி எறியப்பட்டது அதற்குப் பின்னால் ஆக்ரோஷம் உயர்ந்தது. ’போ………. போ……….’

    ஹில்டா பேக்கரி என்றும், பிறந்தநாள் கேக்கென்றும் ஆக்ரோஷத்திற்கு இடையில் கூறினாலும் கதவு அடைந்தே தான் கிடந்தது. டேபிள் லைட்டை போல பல பொருட்களும் கதவிற்கு நேராக தூக்கி எறியற சத்தம் முழங்கியது. நான் அதிர்ச்சியோடு செய்வது அறியாது நின்றேன்.

    ’வந்திரு…… இனி இங்க நிக்க வேண்டாம் இந்த கேக்க இங்கே யாரும் வாங்கப் போறதில்லை. நீ இதை திரும்ப எடுத்துட்டு போ. அது முடியாதுன்னா நான் வேற வழி ஒன்னு சொல்றேன்.’ ஹில்டா என்னை கூட்டிக்கொண்டு நடத்தாள். நாங்க பொகையிலை (போதை)  திங்கிற பெரியப்பாவையும் பெரியம்மாவையும் கடந்து கீழே இறங்கினோம்.

    ஹில்டா என்னை வழிநடத்தியது ஒரு பன்றித் தொழுவத்திற்கு.  அதற்குள் பத்திருபது பன்றிகள் நெருக்கமாக நின்றிருந்தன. அவற்றில் சில குட்டிகள். வளர்ந்த பன்றிகளின் சின்ன கண்களில் உதாசினமும் விரக்திமும்  நிழலோடியது.

    ‘இவைகள்ல ஏதாவது ஒன்று பிறந்தது இன்றைக்காக இருக்கக் கூடாதா?’ என்று ஹில்டா கூறினாள்.

    சரிதான் நான் பிறந்த நாள் கேக்கை கொஞ்சம் கூட தயங்காமல் பன்றிகளுக்கு முன்பு வைத்தேன்.

    பன்றித் தொழுவத்திற்கும், ஹோப் வில்லாவிற்கும், புடக்காலியில் உள்ள மரங்களுக்கும், வெளியில் பறந்து கிடக்கின்ற தேயிலை தோட்டத்திற்கும் மேலே அமைதியும், தூய்மையும் ஆன பிறந்தநாள் இரவு.

    Share
  • 65 கிலோ ஆணழகன் போட்டி 2023

    65 கிலோ ஆணழகன் போட்டி 2023

    தம் உடலைத் தாமே செதுக்கும் சிற்பிகள் இவர்கள். கட்டு கட்டு கதறிடக் கட்டு என்பது போல், மனத்தைக் கட்டி, உடலைக் கட்டும் கட்டுமஸ்தான வீரர்கள். 65 கிலோ எடைப்பிரிவுக்கான ஆணழகன் போட்டி இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • தமிழ் இயலன் பேச்சு | தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி

    தமிழ் இயலன் பேச்சு | தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி

    மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நான் ஓர் இ.ஆ.ப. ( I’M AN IAS ACADEMY) பயிலகத்தின் இயக்குநர், பாவலர் தமிழ் இயலன் அவர்களின் வாழ்த்துரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • சாதம் உண்ணும் மயில்

    சாதம் உண்ணும் மயில்

    நாம் காக்கைக்குச் சாதம் வைப்பது போல், கோவையில் வசிக்கும் எங்கள் குடும்ப நண்பர் காஞ்சனா, மயிலுக்குச் சாதம் வைக்கிறார். தட்டில் வைத்த சாதத்தை மயில்கள் கொத்திக் கொத்தி உண்ணும் அழகிய காட்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • மிஸ்டர் கிளீன்மேன் – ஆணழகன் போட்டி 2023

    மிஸ்டர் கிளீன்மேன் – ஆணழகன் போட்டி 2023

    ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பது திருமூலர் வாக்கு. அவர் வழியில் உடம்பைச் சிக்கென வளர்த்திருக்கும் இளைய தலைமுறை இதோ. 55 கிலோ எடைப்பிரிவுக்கான ஆணழகன் போட்டி.

    40 வயதைக் கடந்தவர்களும் ஆணழகன் போட்டியில் தங்கள் ஆற்றலைக் காட்ட முடியும்.

    சாதனைக்கு வயது ஒரு தடையில்லை. 50 வயதைக் கடந்தவர்களும் ஆணழகன் போட்டியில் தங்கள் ஆற்றலைக் காட்ட முடியும். கோப்பைகள் வெல்ல முடியும் என்பதை இவர்கள் நிரூபிக்கிறார்கள்.

    சாதிக்க, உடல்நிலை ஒரு தடையில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணழகன் போட்டியில் தங்கள் ஆற்றலைக் காட்டும் அடலேறுகளைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • குறளின் கதிர்களாய்…(461)

    குறளின் கதிர்களாய்…(461)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(461)

    பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
    பெருகலிற் குன்ற லினிது.

    – திருக்குறள் -811 (தீ நட்பு)

    புதுக் கவிதையில்…

    உள்ளன்பு மிகுதியால்
    உருகுபவர் போலத் தோன்றிடினும்
    உயர்ந்த பண்பற்றவர்
    உடனான நட்பு,
    வளர்ந்து பெருகுவதைவிடத்
    தேய்ந்து குறைவதே
    உண்மையில் நல்லது…!

    குறும்பாவில்…

    அன்பால் உருகுவதாய்த் தோன்றினாலும்,
    பண்பற்றவரது நட்பு வளர்ந்து பெருகுவதைவிடத்
    தேய்ந்து குறைவதே நல்லது…!

    மரபுக் கவிதையில்…

    உண்மை யன்பு கொண்டேதான்
    உருகி நிற்பார் போல்தோன்றும்
    பண்பே யில்லா மாந்தரவர்
    பாசாங் காகக் கொளும்நட்பு,
    உண்மை யாக வளர்ந்தேதான்
    உறுதி யாகும் நிலையைவிட
    திண்ண மாகத் தேய்ந்ததுவே
    தீரக் குறைதல் நன்றாமே…!

    லிமரைக்கூ…

    அன்பில் உருகுவார் என்றே
    அசலாய்த் தோன்றும் பண்பிலார் நட்பது
    வளர்வதிலும் தேய்ந்திடுதல் நன்றே…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    நல்லவுங்க நட்பு,
    வேண்டவே வேண்டாம்
    கெட்டவங்களோட கெட்ட நட்பு..

    பாசத்தில உருகுற மாதிரி
    பாசாங்கு செய்யிற
    பண்பு கெட்டவங்க கூட
    கொண்ட நட்பொறவு
    வளருறதவெட
    தேஞ்சி
    இல்லாமப் போறதே நல்லது..

    அதால
    வேணும் வேணும்
    நல்லவுங்க நட்பு,
    வேண்டவே வேண்டாம்
    கெட்டவங்களோட கெட்ட நட்பு…!

    Share
  • புதிய பதினான்கு நூல்கள் – எம். ரிஷான் ஷெரீப்

    புதிய பதினான்கு நூல்கள் – எம். ரிஷான் ஷெரீப்

    வணக்கம்.

    2023 ஜுலை 21 அன்று இந்தியா, கோயமுத்தூர், கொடீஷியாவில் ஆரம்பமாகியுள்ள புத்தகக் கண்காட்சியில் எனது புதிய பதினான்கு நூல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    கூகி வா தியாங்கோ, சினுவா ஆச்சிபி, பென் ஒக்ரி உள்ளிட்ட  சர்வதேச இலக்கிய விருதுகளை வென்றுள்ள உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் முக்கியமான சிறுகதைகள் அடங்கியுள்ள தொகுப்புகளோடு, பாலியல் அடிமையாகவிருந்து மீண்ட மரியா ரோஸா ஹென்சன் எழுதிய அவரது சுயசரிதையும், உலகின் தலைசிறந்த தத்துவவாதியும், அறிஞருமான ஆந்த்ரே கோர்ஸ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மனைவிக்கு எழுதிய நீண்ட கடிதமும், இலங்கையின் புகழ்பெற்ற சிங்களப் பெண் எழுத்தாளரான சுநேத்ரா ராஜகருணாநாயக்கவின் சிறந்த நாவலும் எனது மொழிபெயர்ப்பில் தமிழில் தற்போது வெளிவந்துள்ளன.

    இந்த நூல்களை திராவிடன் ஸ்டாக், எதிர் வெளியீடு, காலச்சுவடு ஆகிய பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. புத்தகங்களின் அட்டைப்படங்களை இணைத்திருக்கிறேன். இந்த நூல்களை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் தற்போது பெற்றுக் கொள்ளலாம்.

    என்றும் அன்புடன்,
    எம். ரிஷான் ஷெரீப்

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 17

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 17

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


     

     

    Share
  • ஆடிப்பூரம்

    ஆடிப்பூரம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் கண்ணன் கூறுகிறார். திருவெம்பாவையினைத் தந்து சிவனை முன்னுறுத்துகிறார் மணிவாசகப் பெருமான் மார்கழியில். ஆண்டாள் நாச்சியாரும் வந்து திருவாய் மொழியினை வழங்கித் திருமால் பெருமையைப் பேசுகின்றார். சைவமும் வைணவமும் சங்க மிக்கும் சமய நிகழ்வாய்சமய விழாவாய் “மார்கழியில் திருவெம்பாவையும் திருப்பாவையும்” அமைகிறது அல்லவா! ஆனால் மார்கழியில் மங்கல நிகழ்ச்சிகளுக்கு இடங் கொடுக்காமல் விட்டு விட்டோம். இந்த வகையில் இணைவதாய் ஆடியும் வந்து நிற்கிறது. ஆனால் ஆடியும்  – மார்கழி போல் மகத்தான மாதமேயாகும். மார்கழியில் சைவமும் வைணமும் சங்கமிப்பது போல – ஆடியிலும் சங்கமிக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    ஆடியில் வருகின்ற பூரம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். ஆடிப்பூரம் சைவ ஆலயங்களிலும். வைணவ ஆலயங்களிலும் மிகவும் முக்கியத்துவம் மிக்க சமய நிகழ்வாய்சமய விழாவாய் இடம் பெறுவதை நாம் காணக்கூடியதாகவே இருக்கிறது. ஆடிப்பூரம் அம்மனின் அற்புதத் திருவிழாவாகும். மக்களையும்உலகினையும் காப்பதற்கு அம்பாள் சக்தியின் உருவாய் அவதரித்த தினமாய் ஆடிப்பூரம் கொள்ளப்படுகிறது. அதே வேளை வைணவம் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாகவும் கொள்ளப்படுகிறது. உமாதேவி அவதாரம் செய்ததாய் சிவபுராணம் சொல்லுகிறது. ஶ்ரீவில்லிபுத்தூரில் துளசிச் செடிக்கு அருகில் குழந்தையாய் ஆண்டாள் நாச்சியார் அவதாரம் செய்ததாக வைணவவர்கள் நம்புகின்றார்கள். சக்தியின் அவதாரமாகவே ஆண்டாளின் அவதாரம் கொள்ளப்படுகிறது என்பதும் நோக்கத்தக்கது. இந்த ஆடிப்பூர தினத்தில்த்தான்சித்தர்களும், யோகிகளும்தவத்தைத் தொடங்குவார்கள் என்று புராணங்கள் புகலுவதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    உலகத்தின் நன்மைக்காகவே அவதாரங்கள் நிகழ்கின்றன. இராமராய்கிருஷ்ணராய்பகவான் விஷ்ணு அவதாரம் செய்தார் என்பதைப் புராணங்கள் எடுத்துரைத்து நிற்கின்றன. அந்த அவதாரங்களுக்குத் துணையாக லக்ஷ்சுமி தேவி – சீதையாய்ருக்மணியாய் பூமியில் அவதாரம் செய்கிறார்கள். ஆனால் ஆண்டாள் நாச்சியார் அவதாரம் இம்மண்ணில் நிகழ்ந்த வேளை அவளுக்குதுணையாகஇணையாக பகவான் விஷ்ணு எந்தவித அவதாரமும் மேற் கொள்ளவே இல்லை என்பதுதான் மிகவும் முக்கியமாகும். ஆனால் சிலையாய் இருந்த கண்ணனையே மனத்தில் உறுதியாய் இருத்தி அவனையே மணப்பேன் என்னும் வைராக்கியத்தை உலகுக்கே காட்டிய பெண்ணாய் வைணவத்தின் மாமலர் ஆண்டாள் நாச்சியார் போற்றப்படுகிறார் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். அப்படியான அந்த ஆண்டாள் நாச்சியாரைக் கொண்டாடும் அற்புத நாளாகவும் ஆடிப்பூரம் அமைகிறது என்பதும் சிறப்பல்லவா! பெரியாழ்வார் என்பவர் வைணவத்தில் மதிப்பக்கப்படுகின்ற மிகச்சிறந்த அடியார் ஆவார். அவரின் வளர்ப்பு மகளாய் ஆண்டாள் நாச்சியார் ஆவது ஆண்டவனின் திருவருளே.

    சைவமும்வைணமும்பெயரளவில் இரண்டாக இருந்தாலும் – இறைவனை உறவாய் ஆக்கிக் கொள்ளுவதில் ஒன்றுபட்டே நிற்கின்றன. தாயாய்தந்தையாய்சகதோழனாய்காதலனாய்காதலியாய்என்றெல்லாம் எண்ணி கசிந்து உருகிப் பின்னிப் பிணைந்து நிற்பதை யாவரும் மனங்கொள்ளுதல் வேண்டும். இந்த வகையில் உலகினைக் காத்து நிற்கும் பெருஞ்சக்கியான அம்பாளை பல நிலைகளில் கண்டும்அந்தச் சக்திக்கு தங்களின் விருப்பங்கள் எது எது இருக்கிறதோ அத்தனையையும் நிறைவேற்றிப் பார்ப்பதில் பேரானந்தம் அடைகிறார்கள். அப்படிப் பேரானந்தம் அடையும் பாங்கினை ஆடிப் பூரம்காட்டி நிற்கிறது என்பதே முக்கிய நிலையாகும். இங்கே செய்யப்படும் செயல்களுக்கு முக்கிய காரணம் – பக்தியின் பரவசம் என்றுதான் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

    ஆண்டாள் நாச்சியார் கண்ணனையே கணவனாக்குவேன் என்று ஒரே பிடிவாதமாய் இருக்கிறார். கடவுளை மானிட உருவில் இருக்கும் ஒரு பெண் கணவனாய் கொள்ளுதல் பொருந்துமா என்று விமர்சனம் செய்வது பொருத்தமற்றதாகும். இங்கு பக்தியின் உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. மணிவாசகப் பெருமான் எந்தளவுக்கு சைவத்தில் முக்கியத்துவத்துவப்படுத்தப் படுகிறாரோ அவ்வாறே ஆண்டாளும் அமைகிறார். ஆண்டாள் தன்னுடைய பதினைந்தாம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலந்ததாய் சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாகவே திருப்பாவையையும்நாச்சியார் திருமொழியையும்தந்திருக்கிறார். ஆண்டாளின் இவ்விரு படைப்புக்களுமேதத்துவத்தையும்பக்தியையும்தேனாய் இனிக்கச் செழுந்தமிழில் பொக்கிஷமாய் அமைந்திருகிறது. இப்படிப் பெருமைக்குரிய ஆண்டாள் நாச்சியாரை அகத்தினில் அமர்த்திட ஆடிப்பூரம் அமைகிறது என்பது மனங்கொள்ளத்தக்கது. வைணவ ஆலயங்களில் ஆடிப்பூரம் மிகவும் பக்திபூர்வமாய் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சைவ ஆலயங்களில் அம்பாளை முன்னிறுத்தி ஆடிப்பூரம் பெருவிழாவாய் கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்கு பத்து நாட்கள் திருவிழாவாய் ஆடிப்பூரம் அமைவதையும் காணலாம். உலகத்தின் இயக்கத்துக்குக் காரணமான சக்தியே அம்பாளாய் இருப்பதாய் எண்ணும் அடியார்கள் தங்கள் விருப்பத்துக்கு அமைய – அம்பாளுக்குப் பலவித அலங்காரங்களைச் செய்து தங்கள் ஆராத பக்தியைக் காட்டி நிற்பதைக் காணக்கூடியதாக ஆடிப்பூரம் காணப்படும். அம்பாளுக்கு வளையல்களால் அலங்காரம் செய்வதுஅம்பாள் பூப்படைந்து விட்டாள் என்று பலவித சடங்குகளை ஆற்றுவதுஎன்று ஆடிப்பூரத்தை ஆனந்த விழாவாக ஆக்கியேவிடுவார்கள்.

    அம்பாளையும் தங்கள் குடும்பத்தில் ஒரு உறவாகவே எண்ணி – தங்கள் குடும்பப் பெண்கள் எப்படி யெல்லாம் அலங்கரிப்பார்களோ அப்படியே அலங்கரித்து பேருவகையும்பேரானந்தமும் பெறுவதை ஆடிப்பூரத்தில் கண்டிடலாம். மஞ்சள் காப்புசந்தனக்காப்புகுங்குமக் காப்பு என்றெல்லாம் நடத்திவளைகாப்பும் நடத்துவார்கள்.

    அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படும் வளையல்கள் பலவகையாய் அமையும். அந்த வளையல்கள் நிறைவில் அனைவருக்கும் அருட் பிரசாதமாய் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    திருமணம் ஆகாதவர்க்குத் திருமணம் விரைவாய் திருமணம் ஆவதற்கும்மனக்கசப்பினால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும்ஆடிப்பூரத்தின் வழிபாட்டால் நல்ல பலன் கிடைக்கிறது என்னும் நம்பிக்கை யாவரிடமும் நிறைந்தே இருக்கிறது. தோஷங்கள் கொண்ட தம்பதியர்களுக்குத் தோஷங்கள் நீங்கிவிடும் என்னும் நம்பிக்கையும் இருக்கிறது.

    சைவமும்.  வைணவமும் சங்கமிக்கும் சயயப் பெருவிழா ஆலயங்கள் தோறும் நடக்கும்  ஆடிப்பூரம் அமைந்த ஆடி மாதத்தை எப்படி ஒதுக்கிட முடியும்ஆடிப்பூரம் அம்மனுக்கு உரிய பக்குவமான நாளாகும். பக்தர்கள் மனக்குறைகளைக் களையும் பாங்கான நாளாகும். அமங்கலமே ஆடியென எண்ணும் எண்ணத்தை அகத்தைவிட்டே அகற்றிடுவோம். ஆடியும் ஆடியில் வருகின்ற அத்தனை நாட்களுமே அம்மனுக்குரிய மங்கல நாட்களேயாகும். ஆடிப்பூரம் வாழ்வில் மனமகிழ்ச்சியையும்மனவமைதியையும்மன எண்ணங்களையும் நிறைவேற்றித் தரும் உன்னத நாளாகும். அது மட்டுமல்ல சைவமும் வைணவமும் சக்தியை முன்னிறுத்திச் சங்கமித்து ஒரே நிலையில் பயணப்படும் பக்தி நிறை நாளுமாகும் என்பதை மனமிருத்துதல் வேண்டும்

    ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெலாம்
    பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக்
    காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்புமங்கை
    சேர்த்தாளை முக்கண்ணியைய  தொழுவார்க்கு    ஒருதீங்கில்லையே

    இன்றே திருவாடிப்பூரம் எமக்காக
    அன்றே ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத
    வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
    ஆழ்வார் திருமகளாராய்

    திருவாடிப்பூரத்துச்  செகத்துதித்தாள் வாழியயே
    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியவே
    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியவே

    பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
    வேதம் அனைத்திற்கும் வித்தாகும் – கோதைதமிழ்
    ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை
    வையம் சுமம்பதும் வம்பு .

    Share
  • முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 4

    முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 4

    சி. ஜெயபாரதன், கனடா

    கலில் கிப்ரான் நூல் தொகுப்பு
    மேரியின் மேப்பிள் சிரப்பு
    காப்பு மகளிர் அணைப்பு

    ***************************

    முதியோர்க்குக் காப்பகத்தில் தாம்பத்திய நெருக்கத்தை அனுமதி.

    மோசஸின் 11ஆம் நெறிக் கட்டளை முதியோர்க்கு

    ********************

    ஆஷாவின் போட்டோ படங்களை உடனே அழித்துவிட்டேன்.  முகமூடி இல்லாது முதியோர் வசிப்பு இல்லத்தில் காப்பு மகளிர் உலவுவது தெரிந்தால் வேலையிலிருந்து நீக்கப்படுவார்.  எனக்குக் குளிப்பு, துடைப்பு, ஆடை அணிவிப்பு, முடக்கு வாதப் பாத வலி சிகிச்சை செய்யும் எல்லா வித மகளிர்க்கும் காஜூ, லட்டு இனிப்புத் தின்பண்டம் அளித்தேன். இராப் பொழுது, ஒரு கதவைத் தட்டி ஆண்குரல் கேட்ட பொற்கைப் பாண்டியன் பக்கத்து வீட்டுக் கதவுகளை எல்லாம் தட்டிய கதை போன்றதுதான்.  ஆஷாவுக்கு மட்டும் இனிப்பு தினம் கொடுப்பது, அவளை நேசித்துக்கொண்டது, எப்படியோ முதியோர் காப்பக மேலாளர் மேடம் ஹாமில்டனுக்குத் தெரிந்துவிட்டது.

    அடுத்து நாள் ஓடி வந்த மேடம், ஒழுக்க நெறிச் சட்ட விதிகளை யாவரது முன்னிலையில் ஒப்பித்தாள். அனைவரும் விழித்தார்.  குசுகுசுப்பு, முணுமுணுப்புகள் செவிக்கு அருகில் எழுந்தன.

    “இனிப்பு தருவது தவறு, பரிசு தருவது கூடாது, மகளிரை அணைப்பது நிறுத்தப்பட வேண்டும். ஆண்-பெண் கைகுலுக்கல் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    முதியோர் காப்பகத்தில் அணைப்பு கூடாது, இனிப்பு கூடாது, காதலிப்பு கூடாது.

    கண்காணிப்பு மகளிர் யாருக்கும் முதியோர் காஜூ, லட்டு கொடுக்கக் கூடாது.  கொடுத்தால் காப்பக மகளிர் வாங்கக் கூடாது.  மறுக்க வேண்டும்.  புதிய ஆணைகள் இவை.

    வந்த சில நாட்களில், முதியோர் காப்பக மகளிர் சுறுசுறுப்பாக, யந்திரம் போல் பணிபுரிவது கண்டு அவரைப் “பாதுகாக்கும் அணங்குகள்” என்று பாராட்டினேன்.

    நோக்குமிடம் எல்லாம் நொந்த மகளிர் மௌன முகத்தில் ஒளிவீசியது.  பலரது முகத்தில் புன்னகை மின்னியது. இப்போது இனிப்புத் தின்பண்டம் கொடுத்தால், யாரும், வாங்குவது கிடையாது.

    ஆனால் ஒரே ஒரு நர்ஸ் மட்டும் விதியை மீறினாள்.  என்  அறைக்கு வரும் போது, பணி முடிந்த பின், இனிப்புத் தின்பண்டம்  எடுத்துக் கொள் என்று வேண்டினால், சிரித்துக்கொண்டு, ஒரு காஜூவோ, லட்டோ எடுத்துக்கொள்வாள்.

    அவள் யார் ?  ஆஷாதான் !

    Share
  • தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி

    தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி

    மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவி செல்வி இரெ.சக்தி, முதலிடம் பெற்றார். இவர், தனித்தமிழ்ச் செல்வர் விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசு வென்றார். வெற்றியாளர் சக்தியின் உரையைக் கேளுங்கள்.

    பேச்சுப் போட்டிக்கான நடுவர்கள்: பால சீனிவாசன், அண்ணாகண்ணன்

    மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த, செல்வி ரேஷ்மா கிருஷ்ணன் இரண்டாம் இடம் பெற்றார். இவரது உரையைக் கேளுங்கள்.

     

    மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழன், மூன்றாம் இடம் பெற்றார். அண்மையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தூய தமிழ்ப் பேச்சுப் போட்டியில் இவர் முதலிடம் பெற்று, தங்கக் காசு வென்றது குறிப்பிடத்தக்கது. தமிழுணர்வு மிக்க தமிழனின் மிடுக்கான உரை இதோ.

    சேலம் கல்லூரி மாணவர் கதிரவன் ஆற்றிய உரை இங்கே.

    தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசினர் கலைக் கல்லூரியின் மாணவி காயத்ரி ஆற்றிய உரை இங்கே.

    திருவாரூர்க் கல்லூரி மாணவி நறுமுகை ஆற்றிய உரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • சின்ன சின்னக் கால்களால் – பாடல்

    சின்ன சின்னக் கால்களால் – பாடல்

    சின்ன சின்னக் கால்களால், சிங்காரக் கால்களால், வான்வண்ணக் கண்ணன் இங்கு வருகின்றான். சுந்தரம் பாகவதர் இயற்றி, நீலமேகம் குழுவினர் பாடிய அழகிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • இந்திய விண்னுளவி சந்திரயான் – 3 நிலவை நோக்கி வெற்றிகரமாய் ஏவப்பட்டது

    இந்திய விண்னுளவி சந்திரயான் – 3 நிலவை நோக்கி வெற்றிகரமாய் ஏவப்பட்டது

    https://www.bbc.com/news/world-asia-india-66185565

    சி. ஜெயபாரதன், கனடா

    image.png
    நிலாவில் இறங்கும் தளவுளவி & நகரும் தளவூர்தி

    Chandrayaan-3: India’s historic Moon mission lifts off successfully

    image.png

    image.png
    சந்திரயான் -3 ராக்கெட், விண்ணுளவி, தளவுளவி, தளவூர்தி
    image.png
    நிலவு நோக்கி ராக்கெட் போக்கு
    image.png
    சந்திரயான் -3 தளவுளவி
    image.png

    விண்ணுளவி நிலவுப் பயணப் பாதை

    2023 ஆண்டில் இந்தியா சந்திரயான் – 3  விண்சுற்றி அனுப்பி  நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது.

    2023 ஜூலை 14 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆணையகம் சந்திரயான் -3 விண்ணுளவியை நிலவை நோக்கி வெற்றிகரமாக ஏவியுள்ளது. அத்திட்டத்தின் குறிப்பணி, விண்ணுளவி நிலவை நெருங்கிச் சுற்றி, தென்துருவத்தில் ஒரு தளவுளவியை மெதுவாக இறக்கிய பின்பு, அதிலிருந்து ஒரு தளவூர்தி வெளிவரும்.  அந்த விண்வெளி நிகழ்ச்சி 2023 ஆகஸ்டு மாதம் 24 ஆம் தேதி நிகழும்.  வெற்றிகரமாக அது நிகழ்ந்தால் இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சைனா நாடுகளோடு நான்காவது இடத்தைப் பெறும்.

    இதே குறிப்பணியில் ஏவப்பட்ட சந்திரயான் -2 முழு வெற்றி அடையாது, தளவுளவி நிலவின் தரையில் மோதி முறிந்து தோல்வியுற்றது.  சந்திரயான் -3  விண்ணுளவியின் எடை 3900 கி கிராம்.  விக்ரம் என்னும் பெயருடைய தளவுளவியின் எடை 1500 கி.கிராம்.  பிரஞ்யான் என்னும் பெயருடைய தளவூர்தி  சந்திரயான் -3 திட்டச் செலவு 75 மில்லியன் டாலர் [சுமார்  ரூபாய். 6 பில்லியன்] [2023 நாணய மதிப்பு].

    இதுவரை இறங்கித் தேடாத நிலவின் தென்துருவத்தில், விக்ரம் இறங்கி, தளவூர்தி ஆய்வுகள் புரிந்து பூமிக்குத் தவவல் அனுப்பும். பூமியின் 15 நாட்கள், நிலவின் ஒருநாள் ஆகும். அதாவது சூரிய வெளிச்சம் 15 நாள் நிலவில் தெரியும். 15 நாட்கள் இருள் மயம்.  சூரிய சக்தியில் இயங்கும் தளவுளவியும், தளவூர்தியும் 15 நாட்கள் இயங்கும்.  15 நாட்கள் முடங்கும்.. சந்திரயான் -3 குறிப்பணி வெற்றி அடைந்தால், அடுத்து விமானிகள் ஓட்டும் விண்வெளிச் சுற்றுப் பயணத்தை முயலும்.

    1. Chandrayaan-3: India’s historic Moon mission lifts off successfully – BBC News

    2. India launches historic Chandrayaan-3 mission to land spacecraft on the moon (yahoo.com)

    Share
  • குறளின் கதிர்களாய்…(460)

    குறளின் கதிர்களாய்…(460)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(460)

    மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்து
    மொருவுக வொப்பிலார் நட்பு.

    -திருக்குறள் -800 (நட்பாராய்தல்)

    புதுக் கவிதையில்…

    உலகத்தோடு ஒத்தொழுகும்
    குற்றமற்றவரின் நட்பைக்
    கொள்க உறவாய்,
    உலகோடு ஒத்துவராத பண்பிலாரை
    உணராமல்
    நட்பு கொண்டிருப்பினும்
    நட்பதை
    அவர் விரும்பும் ஒன்றைக்
    கொடுத்தாவது
    கைவிட வேண்டும்…!

    குறும்பாவில்…

    குற்றமற்றவரோடு கொள்க நட்பு,
    ஒத்த பண்பிலாரது நட்பை அவர்விரும்பும்
    ஒன்றைக் கொடுத்தாவது விட்டிடுக…!

    மரபுக் கவிதையில்…

    உலகுடன் ஒத்திடும் குற்றமற்றோர்
    உறவினைக் கொண்டிடு நட்பெனவே,
    நலமுடன் ஒத்திடாப் பண்பிலாரை
    நட்பெனத் தவறியே ஏற்றிடினும்
    விலகியே சென்றிடும் வழியதுவாய்
    விரும்பியே அன்னவர் கேட்பதையே
    இலகுவாய்க் கொடுத்தவர் நட்பினையே
    இலையென உதறியே செல்வீரே…!

    லிமரைக்கூ…

    நட்போடிரு குற்றமற்றவர் கிட்டே,
    கைவிடு பண்பிலார் நட்பை பொருள்கொடுத்தேனும்
    விலகிடு அவரை விட்டே…!

    கிராமிய பாணியில்…

    நட்புகொள்ளு நட்புகொள்ளு
    நல்லவரோட நட்புகொள்ளு,
    நல்லாப் பாத்தறிஞ்சி
    எல்லாந்தெரிஞ்சி நட்புகொள்ளு..

    ஒலத்தோட ஒத்துப்போற
    குத்தங்கொற இல்லாதவர்கிட்ட
    நட்புகொள்ளு,
    ஒலகத்தோட ஒத்துவராத
    நல்ல கொணமில்லாவரோட
    கொண்ட நட்ப
    அவரு கேக்கிற பொருளக்
    குடுத்தாவுது உட்டு வெலகிடு..

    அதால
    நட்புகொள்ளு நட்புகொள்ளு
    நல்லவரோட நட்புகொள்ளு,
    நல்லாப் பாத்தறிஞ்சி
    எல்லாந்தெரிஞ்சி நட்புகொள்ளு…!

    Share
  • அண்ணாகண்ணன் டைம்ஸ் – புதிய யூடியூப் அலைவரிசை

    அண்ணாகண்ணன் டைம்ஸ் – புதிய யூடியூப் அலைவரிசை

    அண்ணாகண்ணன் டைம்ஸ் என்ற புதிய யூடியூப் அலைவரிசையைத் தொடங்கியுள்ளேன். இனி, என் புதிய பதிவுகள், இதில் இடம்பெறும். அன்பர்கள் இதில் இணைந்து ஆதரிக்க வேண்டுகிறேன்.

    https://youtube.com/@Annakannantimes

    மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவி செல்வி இரெ.சக்தி, முதலிடம் பெற்றார். இவர், தனித்தமிழ்ச் செல்வர் விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசு வென்றார். வெற்றியாளர் சக்தியின் உரையைக் கேளுங்கள்.

    பேச்சுப் போட்டிக்கான நடுவர்கள்: பால சீனிவாசன், அண்ணாகண்ணன்

    மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த, செல்வி ரேஷ்மா கிருஷ்ணன் இரண்டாம் இடம் பெற்றார். இவரது உரையைக் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share