Blog

  • நிலா ! . . .

    விசாலம்

    நிலா என்பது  கவிதையில் எல்லோரலும் உபயோகப்படுத்தப்  படுகிறது சின்ன பாப்பாவுக்கு அதன் அம்மா “நிலா நிலா வா வா ,நில்லாமல் ஓடிவா மலை மேலெ ஏறி வா மல்லிகைப் பூ கொண்டுவா  என்று  பாடி சாதம் ஊட்டுகிறாள் காதலர்கள் நிலவை ரசித்து தன்னை மறக்கின்றனர் உலகம் துறந்தவர் அல்லது சன்யாசிகளும் நிலாவின் குளுமையில் வெற்று வெளிச்சத்தில் அமர்ந்து தியானம்  செய்கின்றனர் ,முழுநிலாவின் போது அதாவது   பௌர்ணமி அன்றுதான்  ஸ்ரீ சத்யநாராயண பூஜையும் மாலை நேரம் நடக்கிறது ,

    மஹாகவி பாரதியார் வெண்ணிலவைக் குறித்து கவிதை இயற்றி இருக்கிறார்
    “எல்லைக் யில்லாததோர்  வானக் கடலிடை
    வெண்ணிலாவே! –விழிக்
    கின்ப மளிப்பதோர்  தீவென் றிலகுவை
    வெண்ணிலாவே
    நல்ல ஒளியின்  வகைபல  கண்டிலன்
    வெண்ணிலாவே—இந்த
    நனவை மறந்திட செய்வது கண்டிலன்
    வெண்ணிலாவே !
    தீது  புரிந்திட  வந்திடும்  தீயர்க்கும்
    வெண்ணிலாவே –நலஞ்
    செய்தொளி  நல்குவர்  மேலவ  ராமன்றோ
    வெண்ணிலாவே ,,,,
    சினிமாவிலும் நிலாவை  வைத்து பல பாடல்கள் உள்ளன , பழையக் கால பாடல் ”  அமுதைப் பொழியும் நிலவே  நீ அருகில்  வராததேனோ?” மிகவும்  ரசிக்கப்பட்டது இதேபோல் நிலவே என்னிடம் நெருங்காதே ” என்ற பாடலும் ஹிட் ஆனது இந்தக்கால படங்களிலும் பல பாடல்கள் நிலாவைக்குறித்து பாடபடுகின்றன குறித்து பாடப் படுகின்றன.
    சரி நிலா எங்கேயாவது கீழே விழுமா? விழுந்ததே ,,,,,  ஒரு பெரிய மரத்தின் கீழ்  குரங்குகள் அடித்த லூட்டியைக்  ஒரு கவிதை மூலம் பார்க்கலாம்
    என்  நிலா உடைந்து போனதே,,,,,
    பௌர்ணமி நிலவில்
    ஒரு நாள்
    ஆலமரத்தின் கீழ்
    ஒரு  வானரப் பட்டாளம்
    தாவித் தாவிக் களித்தன
    வம்புச் சண்டை போட்டன
    வாலைப் பிடித்து இழுத்தன
    முதுகில் சவாரி செய்தன ,
    பழங்களைப் பிடுங்கின
    கிளைகளை உலுக்கின .
    ஒரு  குட்டிக்குரங்கு
    கிணற்றில் தாவ
    கண்டது முழுநிலவைத்தான்
    “ஐயோ காபாற்றுங்கள்
    நிலா விழுந்து விட்டது நீரில்”
    அலறிபுடைத்துக்கொண்டு
    வந்தது ஒரு பட்டாளம்
    நீரிலிருந்து எடுத்தது நிலாவை
    நிலவும் கலைந்து போனது
    குட்டிக்குரங்கின் அழுகை
    வானத்தை எட்டியது .
    “ஐயோ என் நிலா
    இப்படி உடைந்து போனதே “!
    வ்ந்தது அங்கு வயதான வானரம்
    “அட முட்டாள்1
    வானத்தைப் பார்
    நிலா உடையவில்லை
    நிலா மாறவில்லை
    நிலா அழியவில்லை
    அதோ பார் வெண்நிலா
    பவனி வரும் அதன்
    அழகைப் பார் !..
    Share
  • ” தூர தரிசனம் “

    தமிழ்த்தேனீ

     

    தொலைபேசி உரையாடல் : மனைவி பேசிக்கொண்டிருக்கிறார் அவருடைய கணவர் அருகிலிருக்கிறார்

    மனைவி :ஹலோ யாரு? ஓ கமலியா சொல்லுங்க நல்லா இருக்கீங்களா

    எதிர் முனை: ……

    மனைவி :ஐயய்யோ அப்படியா

    எதிர் முனை: ….. மனைவி : ஐயய்யோ அப்புறம் என்னாச்சு!

    எதிர் முனை : …..

    மனைவி :…. அடடா ஏன் இப்பிடி செஞ்சுட்டாங்க அடேடே ….ஐயய்யோ. போச்சு போச்சு .கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா?

    எதிர் முனை:..

    மனைவி :சரி ஒண்ணும் கவலைப்படாதீங்க . வேற வழியில்லே விதி, யாரை விட்டுது.

    எதிர்முனை:….

    மனைவி : அய்யோ… எல்லாம் தலையெழுத்து

    எதிர் முனை:….

    மனைவி: (கண்ணில் நீர் வழிய பேசுகிறார்) நான் எதிர்பார்க்கவே இல்லே இப்பிடியாகும்னு

    (இந்தத் தொலைபேசி உரையாடல் கவனத்தை ஈர்க்கவே பதைபதைப்புடன் உட்கார்ந்திருக்கும் கணவர் சைகையினால் கேட்கிறார் என்ன ஆச்சு யாரு போன்லே?)

    மனைவி : சத்தம் போடாதீங்க என்று சைகை காட்டவே அமைதியாக ஆனால் பதட்டமாகவே உட்கார்ந்திருக்கும் கணவர்

    மனைவி : சரி நாம் கவலைப்பட்டு என்ன ஆவப்போகுது . மனசைத் தேத்திக்குங்க. வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜம்தான்.

    நம்மோட முன்னொர்கள் எத்தனையோ பேரு செத்துப்போயிட்டாங்க அதுக்காக புருஷனோ பொண்டாட்டியோ அவங்களோடயே செத்துப் போயிர்றாங்களா?நீங்கதான் மனசைத் தேத்திக்கணும்

    எதிர் முனை: …..

    மனைவி: சரி அழுது என்னா ஆவபோகுது மேலே நடக்கறதை கவனிங்க என்னதான் ஆறுதல் சொன்னாலும் போனவங்க திரும்பி வரபோறாங்களா? இல்லே ஆறுதல் சொல்லி தீரப்போற துக்கமா இது? மனசைத் தேத்திக்கோங்க.

    எதிர் முனை:………..

    மனைவி: சரி உங்க உடம்பைப் பாத்துக்கோங்க , உணர்ச்சி வசப்படாதீங்க ஏற்கெனவே உங்களுக்கு ப்ரஷர் அதிகம். எனக்கும் இந்தச் சேதியைக் கேள்விப்பட்டதிலேருந்து படபடன்னு வருது. சரிங்க ஜாக்கிரதை நேர்லே சந்திப்போம், ஹும் வரேன், வீட்டுக்காரரையும் கூட்டிகிட்டு வரேன். சரி போனை வெச்சிடறேன். என்று புருஷன் போயிட்டாலும் நாம் இருக்கறவரைக்கும் குழந்தைங்களுக்காகவாவது வாழ்ந்து தானே ஆகணும் ,நீங்க மனசைத் தேத்திக்கங்க பாப்போம் அடுத்து என்ன நடக்குதுன்னு என்று கூறிவிட்டு ரிசீவரை வைத்தாள் மனைவி.

    கணவர்: என்னாதும்மா என்ன ஆச்சு ஏதாவது சீரியஸ்ஸான விஷயமா

    மனைவி: ஒண்ணுமில்லே என்றபடி போகிறாள்

    கணவர்: ஆத்திரத்துடன் நான் ஒருத்தன் இங்கே பயந்துகிட்டே உக்காந்திருக்கேன் நீ பேசிப் பேசியே என் ப்ரஷரை தூண்டிவிட்டுட்டு ஒண்னுமில்லேன்னு போயிகிட்டே இருக்கியே என்னா விஷயம்ன்னு சொல்லு

    காமாஷிஅம்மா அதாங்க நம்மோட உறவுக்காரங்க ,அவங்க புருஷன் ராமநாதன் சர் கூட கம்ப்யூட்டர் கம்பனிலே மேனேஜரா இருக்காரே.

    கணவன்: ஆமா அவருக்கு என்ன என்று பதறியபடி கேட்கிறார்

    மனைவி : “காவேரி” தொலைகாட்சித் தொடர்லே நடிச்சிட்டு இருந்தாரே அவரை சாகடிச்சிட்டாங்க

    புருஷன் : என்னாது ! என்கிறார் பதறியபடி

    ஆமாங்க: அவரு நடிச்சதுக்கு பணம் குடுக்காம ஏமாத்திகிட்டே இருந்திருக்காங்க. அந்தக் கம்பனிக் காரங்க ,இவரு ஒரு நாளு பெரிய சண்டை போட்டிருக்காரு இனிமே பணம் குடுத்தாதான் நடிக்க வருவேன்னு சொல்லிட்டாரு கறாரா.

    புருஷன்: நியாயம்தானே , நிறையப் பேரு பணத்துக்குதானே நடிக்கறாங்க அதக் குடுக்காட்டி கேக்க மாட்டாங்களா ? அவரு நடிச்சதுக்குதானே பணம் கேட்டிருக்காரு . அதுக்கு கொலையே பண்ணிட்டாங்களா?

    மனைவி: பாவங்க இவரு நியாயத்தைக் கேக்கப் போயி சாகடிச்சிட்டாங்க

    புருஷன்: நாட்டிலே வர வர அநியாயம் அதிகமாயிட்டே போவுது .

    மனைவி : இவரு நடிக்கறாரே அந்த அப்பா கேர்க்டருக்கு இவர் பேரையே வெச்சாங்க ராமநாதன்னு.  இவரு பணம் கேட்டு தொந்தரவு செய்யறாருன்னு அந்த கதாபாத்திர மேக்கப்போட இவங்களை போட்டோ எடுத்து அந்த வீட்டுலே இவரு போட்டோவை மாட்டி ஒரு மாலையை போட்டுட்டு ராமநாதன் செத்துப் போயிட்டாருன்னு கதையை மாத்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். அதான் பேசிகிட்டு இருந்தோம் என்றாள் சாவகாசமாக.

     

     

    Share
  • அவலச் சுவையில் ஒரு மிடறு தேநீர்!..

    வருணன்

    அன்றாட வாழ்வில், குறிப்பாக உழைக்கும் பாட்டாளிகளின் வாழ்வியலோடு ஒன்றிய ஒரு விடயம் தேநீர் அருந்துதல். அதுதான் உடலெனும் இயந்திரத்தை இயக்குகிற எரிபொருள் அவர்களுக்கு. உணவே அதுதான், பல நாட்களில். களைத்திருக்கும் தேகத்தின் ஒவ்வொரு தசையையும் புத்துணர்வேற்றுவது சுவை மொட்டுக்களின் மீது படரும் சில மிடறு தேநீர்தான். நாம் பயன்படுத்தும் எல்லா அன்றாட பொருட்களும், அவை எவ்வளவு சிறியதாயினும், யாரோ ஒரு முகமறியா உழைப்பாளியின் வியர்வையே. பணம் கொடுத்துப் பெற்ற எந்த ஒரு பொருளுக்கு பின்னாலும் ஒரு கதையிருக்கும். உறிஞ்சும் தேநீர் விதிவிலக்கல்ல.  அரிதான மலைப்பிரதேசப் பயணங்களில் எனை மிகவும் கவர்பவை உதறி விரித்த பச்சைக் கம்பளமாய் காணக் கிடைக்கும் குளிர்ச்சியான தேயிலைத் தோட்டங்கள் தாம். அடுக்கடுக்காய், ஒரே சீராய் இயற்கை அன்னையின் தலை வகிடு போல. இந்த நயமான பிம்பத்தை புரட்டிப் போட்டிருக்கிறது ஒரு திரை அனுபவம். முதல் படைப்பிலிருந்தே தான் வழிகளை உருவாக்குபவன், பழகிய தடங்களில் பயணிப்பவன் அல்லன் என உரக்கச் சொல்லும் கலைஞன் பாலா. வணிக பரிமாணத்திற்கும் கலாப்பூர்வ பரிமாணத்திற்கும் இடையேயான சினிமாவின் விளையாட்டில் ஆடும் லாவகம் தெரிந்த படைப்பாளி.

    விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை தொடர்ந்து பதிவு செய்யும் திரைக் கலைஞன். இவர்களுடையதும் வாழ்க்கைதான். இவர்களும் மனிதர்கள் தான் என இவர்களைப் பற்றிய கதைகளை நம் கவனத்திற்கு கொண்டு வருகின்றன இவரது ஒவ்வொரு படைப்பும். சினிமா என்பது சொல்லப் போனால் புனைவுகளின் காட்சி மேடையே. திரையரங்க இருளில் நிழலின் வழியே நிசத்தைத் கண்டடையும் ஒரு கலாப்பூர்வாமான எத்தணிப்பு. தேயிலைத் தோட்ட கொத்தடிமைகளின் வாழ்க்கைப் பக்கங்களை வழிந்தோடும் கண்ணீரின் உவர்ப்போடு சொல்லும் ‘பரதேசி’யை பாலாவால் மட்டுமே எடுக்க முடியும். வேறு யாராலும் இது போல படைக்க முடியாது என்பதல்ல இதன் அர்த்த நீட்சி. சமரசங்களுக்கு தன் படைப்பைத் தாரை வார்க்காமலேயே வணிக சினிமாவின் எல்லைகளை விரிவாக்கும் சாத்தியப்பாடும் துணிவும் அவருக்கு மட்டுமே உண்டு, இன்றைய சூழலில். மையங்களை விடுத்து மற்றமைகளை மையங்களாக்குதல் பின்நவீனத்துவத்தின் ஒரு முக்கிய அம்சம். அந்த வகையில் பாலா ஒரு அசலான பின்நவீனத்துவ படைப்பாளி.

    வெள்ளைக்கார பிரபுக்கள் காலனீய இந்தியாவின் வெம்மையை தாக்குப் பிடிக்க இயலாமல் மலைப் பிரதேசங்களில் புகுந்து கொண்டனர். கூடவே அந்த நிலவியல் தேயிலை பயிரிட சாதகமாய் இருக்கவே பயிரிடல் ஆரம்பமானது. அட்டைகள் ஊறும் தோட்டங்களில் உழைக்கக் கொத்தடிமைகள் தேவைப்பட்டனர் அதிகளவில். அவர்களைக் கொண்டு வர அதிகார நிலையில் அடிமைகளும் வெள்ளையர் வசம். உறிஞ்சபட்ட உழைப்பின் நெடிய வரலாற்றைச் சுருங்க அறிமுகம் செய்கிறது படைப்பின் துவக்கக் குறிப்பு.

    திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் படைப்பு பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துள்ளது அனைவரும் அறிந்ததே. திரைப்படத்தின் கதை என்னவென்பது ஏறக்குறைய வாசிக்கும் எல்லோருக்கும் தெரியுமாதலால் அதன் வழி கிடைக்கப் பெற்ற அனுபவத்தையும் அதன் நீட்சியாய் மனதை அழுத்தியஅவதானிப்புகளிலும் கவனத்தைக் குவித்துள்ளேன். உலக சினிமா என்று அழைக்கப்படுபவை பெரும்பாலும் அந்தந்த பிரதேசங்களின் அழகியலையும், அங்குள்ள மக்களின் கலாச்சார, சமூக, உளவியல் கூறுகளையும் உயிர்ப்போடு எடுத்துக் காட்டுபவையே. இதனை பிரதியெடுத்தல் முட்டாள் தனமானது. மற்றொருவரின் ஆடை அளவுகளின் அடிப்படையில் தனக்கு உடுப்புத் தைத்துக் கொள்வது போன்றது. வெல்லும் மோகத்தின் அவசரத்தில் பல தமிழ்படைப்புகளில் இது நிகழ்ந்துள்ளது. பரதேசியில் நாற்பதுகளின் தமிழ் மகளின் அழகியல் அதன் உயிர்ப்போடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நீர் பருகும் சுரக்குடுவைகளும், சாமானியர்களின் உடைகளும், கிராமிய திருமண முறைகளும், ‘வாப்பா நெல்லு சோற கணக்கு பன்ணுவோ’ என்பதாக அவர்களின் யதார்த்தமும் அதனதன் அழகோடு கடந்து போகின்றன.

    துவக்கக் காட்சியில் காமிரா கதையின் துவக்கப் புள்ளியான சாலூர் கிராமத்தின் நிலவியலை பார்வையாளனுக்கு அறிமுகம் செய்கிறது , சந்து பொந்துகளில் துள்ளித் திரியும் விளையாட்டுச் சிறுவனின் துறுதுறுப்போடு. (இதே மாதிரியான  ஒரு காமிரா நகர்வு பின் பாதியில் கொள்ளை நோய் கண்ட அடிமைகளின் குடியிருப்புப் பகுதியை காட்டியிருக்கும் – A Beautiful Visual Design!). தண்டோரா போட்டு சேதி சொல்லும் ஒட்டுப் பொறுக்கியெனும் ராசா கதையின் நாயகன். விளிம்பு நிலை மாந்தரின் கூட்டத்தில் அவர்களாலேயே நகைக்கப் படும் மிகப் பரிதாபமன ஆத்மா.

    ஊருக்கு திருமணத்தை அறிவிக்கும் காட்சியிலும் அதன் தொடர்ச்சியிலும், தமிழரின் அன்றைய வாழ்வியலில் குழு வாழ்க்கையின் எச்சங்கள் விரவிக் கிடப்பதை அறிய முடிகிறது. உலகமயமாகலுக்குப் பிறகான இன்றைய காலகட்டதில் அந்த மிச்சங்கள் கூட முழுமையாய் தடயமின்றி அழிக்கபட்டு கூட்டுக் குடும்பங்களுக்கான சாத்தியங்கள் கூட இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. காண்கிற யாவரையும் உறவு சொல்லி அழைக்கும் நாயகனும் அதற்கு அவர்கள் கொடுக்கும் நக்கலான பதில்களும் அழகு. வெள்ளேந்தியான மனிதர்களின் பாசாங்கில்லாத உலகினை உரையாடல் வழி சொல்லும் நாஞ்சில் நாடனின் எழுதுகோல் அங்கதச் சவுக்கை நேர்த்தியாய் சுழற்றுகிறது இத்தருணங்களில். அங்கதச் சுவையோடு துவங்கும் கதையோட்டத்தில் மெல்ல கவிகிறது அவலச் சுவை. நாயகி அங்கம்மா ராசாவின் மீதான தன் பிரியங்களை எள்ளல் வழியாகவே அவனுக்கு வெளிப்படுத்துகிறாள். மனதால் இணையும் அவர்கள் உடலால் இணையும் பகுதிகளை காட்சியாக்குவதில் பாலா காட்டியிருக்கும் அக்கறை அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகரிக்கிறது. பூடகமாய் நடந்தவற்றை பார்வையாளனுக்கு கடத்துவதில் பாலாவின் கலா நேர்த்தி மிளிர்கிறது. போலவே வெள்ளைக்கார துரையின் உடற்பசிக்கு இரையாக்கப்பட்ட அப்பெண்ணின் உடல்மொழியும் அக்காட்சியினூடே கனத்து இறங்கும் மௌன நொடியும் இன்னுமொரு சான்று.

    சினிமா ஒரு காட்சி ஊடகம். கதையையும் அதன் வழியாக இயக்குனனின்சமூகத்துடனான உரையாடலையும் முன்னிறுத்துவது கதாபாத்திரங்களே. அவர்கள்மூலமாகவே இயக்குனர் புனைவின் வழி சொல்ல விழைபவை அனைத்தும்பார்வையாளர்களுக்கு கடத்தப்படுகிறது. பாத்திரப் படைப்பு எந்த அளவிற்குஉயிரோட்டமுடையதாகவும், குண விளக்கமுடையதாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்குஅதன் நம்பகத்தன்மை அதிகரிக்கும். நம்பகத்தன்மை மிகுந்த பாத்திரங்களைச்சுற்றி கட்டமைக்கப்படும் கதை வெளி உண்மையின் நிழல் போலாகும். இதில் அதுகச்சிதமாய் அமைந்திருக்கிறது( ஏனோ பரிசுத்தம் எனும் மருத்துவர் பாத்திரம்மட்டும் ஒரு பூங்கொத்தில் துருத்தியபடியிருக்கும் ஒரு வாடிய மலர் போலஇருந்தது.).

    அடிமை வாழ்வின் வலியை, அவர்களின் இயலாமையை, கையறு நிலையை மிகுந்தசிரத்தையோடு- அத்துணை கலைஞர்களின் பெரு உழைப்போடு- பதிவுசெய்திருக்கிறார் பாலா. ஒரு சிறந்த கதைக்கரு படைப்பின் ஆன்மா. திரைக்கதைஅதன் உயிர். அது உயிர்ப்போடிருக்கத் தேவையான சுவாசத்தைத் தருபவைகதாபாத்திரங்களே. வலிந்து திணிக்கப்படாத கதாபாத்திரங்கள் கதையோட்டத்தின்ஒவ்வொரு நகர்வையும் அதன் திருப்பத்தையும், அதனால் உருவாகும் விளைவு-எதிர்விளைவுகளையும் அர்த்தப்படுத்துகின்றன.

    ஒரு இயக்குனனின் கனவை காட்சிப்படுத்துவது ஒளிப்பதிவாளரே. அவரே இயக்குனன்அடை காத்திட்ட அக மனக்காட்சியை திரைச் சுருளுக்குள் அடைக்கிறார். செழியன்தனது கவித்துவமான புனைவு மொழி போலவே காட்சி மொழியையும் கையாண்டுள்ளார்.சாலூர் மற்றும் பச்சை மலையென கதை நகரும் இரண்டு நிலப்பகுதிகளையும்தனித்துவமாய் வேறுபடுத்திக் காட்டுகிறது காட்சிகளின் வண்ணத் தேர்வுகள்.புழுதியப்பிய சாலூரின் நிலம் வரண்டிருப்பினும் மனித மனங்கள் ஈரமாகவேஇருக்கின்றன. திசையெங்கும் பசுமை விரிப்பின் வனப்பில் கொழிக்கும் பச்சைமலை, கொத்தடிமைகளை அவர்களது வாழ்க்கை குறித்த கனவுகளோடு பொசுக்கும்இடுகாடன்றி வேறல்ல. பாடல்களை கதை சொல்லும் கருவியாய் சர்வ நேர்த்தியாய்பயன்படுத்திக் கொள்ளும் படைப்பாளிகளுள் முதன்மையானவர் பாலா.இப்படைப்பிலும் அதுவே நிகழ்ந்துள்ளது.

    பஞ்சம் பிழைக்க போகும் வழியில் பொட்டல் வெளியில் ஒரு மண்டல களைப்பு (அனைவருக்கும் தாடி மட்டும் வளர்ந்து தலைமுடி வளராமல் இருப்பது ஒரு பிழையான சித்தரிப்பே) அழுத்த நிலைகுலையும் ஒருவனை விடுத்து அவன் மனைவியையும் கூட்டத்தோடு இழுத்துச் செல்லும் கணத்தில், அந்த சரளைப் பாதையினூடே நீளும் அந்த கரம் திரையும், கூடவே மனதையும்,  வியாபிக்கிறது. உயரும் கை சொல்வதென்ன? அது யாசிப்பா அல்லது இறையை நோக்கிய முறையிடலா?

    இரண்டாம் பாதியில் தொடரும் காட்சிகள் கதை மாந்தரின் வாழ்வைச் சூழ்ந்திருக்கும் இருண்மையை அணிந்து கொள்கின்றன. காட்சிகள் நகர நகர திரையரங்கம் மெல்ல தன் சலனங்களை ஒடுக்கிக் கொண்டு நிசப்தத்தில் உரையத் துவங்குகிறது. இப்பகுதியில் எனது சிந்தனையை நிறைத்தது மதங்கள் குறித்த அவதானிப்பே. பரிசுத்தம் எனும் மருத்துவர் பாத்திரமும் அவரது மனைவியின் பாத்திரப் படைப்பும் ஏற்றுக் கொள்ளல் கூடியதாகவே இல்லை தான். அது குறித்து ஏறக்குறைய எல்லா விமர்சனங்களும் காய்ச்சி எடுத்து விட்டார்கள். அதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இன்னொமொரு கோணம் அவதனிப்பதற்கு இருக்கவே செய்கிறது.

    உலகின் சகல மதங்களும் நோய்மையிலிருந்தும், கவலைகளிலிருந்தும் மனிதர்களை விடுவிக்குமென்ற அவர்களது நம்பிக்கைகளைச் சுற்றியே கட்டமைக்கப் பட்டிருக்கின்றன என்பார் எஸ்.ரா. தனது கட்டுரை ஒன்றில். எத்தனை உண்மை! கொள்ளை நோய் கொத்துக் கொத்தாய் மனிதர்களை காவு கொள்ளும் தருணத்தில் வரும் மருத்துவர் மருந்துகளோடு மதத்தினையும் எடுத்துக் கொண்டு வருகிறார் என சித்தரிக்கப்படுகிறது. சொந்த மண்ணில் தனது வேர்கள் இல்லாத எந்த ஒரு மதம் எதுவாயினும் அது ஆரம்பத்தில் அதிகாரத்தின் நிர்பந்தத்தின் வழியாகவே பரவுகின்றது. இயேசு (தம்மை ஆண்டு நசிக்கும் வெள்ளையர் வணங்கும் அதே கடவுளே) தங்களை கவலைகளில் இருந்து மீட்டு இரட்சிக்க வந்தவர் என மருத்துவர் சொல்வது இந்த புனைவின் தளத்தில் பொருத்திப் பார்க்கையில் நகை முரணாகவே படுகிறது. பழைய கங்காணியை விடவும் இந்த மருத்துவன் ஆபத்தானவன்எனும் பரங்கித் துரையின் சொற்கள் அந்த பாத்திரத்தின் குணநலனின் மீதான மெய் விமர்சனமே. ஆனால் திரைப்படம் அடிப்படையாகக் கொண்ட நாவலை எழுதியதும் ஒரு மருத்துவர்(மருத்துவர் டானியேல்) தான் என்பது பனதில் நிழலாடுகையில் மனம் இப்பாத்திரத்தை மறுத்து முற்றாக புறக்கணிக்கிறது.   ’தன்னைத் தானே தந்தானைத் துதிப்போம்’ என தனது காதல் மனைவியோடு அவர் ஆடும் போது, ஒரு வேளை இவர் சொல்வது உண்மையாகி தங்களை இவர் சொல்லிமிந்த கடவுள் இந்நரகத்தினின்று மீட்டெடுப்பாரோ என்ற எதிர்பார்ப்போடு சாவிகொடுத்த பொம்மை போல இயந்திரத்தனமாய் ஆடும் மக்களின் கண்களில் ஒளிர்கிறது மீதமிருக்கும் நம்பிக்கையின் கடைசித் துளியும் , விரக்தியும் சரிவிகிதத்தில்.

    பொதுவாக பாலாவின் படைப்புகள் அவர் வன்முறையை ஆராத்திக்கிறாரோ எனும் ஐயத்தை நிச்சயம் உண்டாக்கும். சில நேரங்களில் முடிவுகள் வலிந்து திணிக்கப்பட்டதைப் போன்ற சாயலைப் பெற்றிருக்கும். ஆனால் அந்த் தடையை இப்படைப்பில் பாலா கடந்திருக்கிறார்.யாரும் யாரையும் கொன்று நியாயத்தை நிலை நாட்டவில்லை. பச்சை பலையில் மொத்தமாய் செத்துவிட்ட நியாயத்தை எங்கெயிருந்து நிலை நாட்டுவது?  தனக்கு அண்ட இடமளித்த பெண்ணின் மகளோடு கணக்கு முடிந்ததா என தெரிந்து கொள்ள  வருகிறான் ராசா. அச்சிறுமியையே காரணம் காட்டி நரகத்தின் வாயிலுக்கே மறுபடியும் அவன் அனுப்பப்படும் தருணத்தில் ஒரு நொடித் தயக்கம்அவன் கண்களில் மின்னுகிறது. ஆனால் அவன் அக்குழந்தைக்காய் தன்னை மறுபடியும் ஒப்புவிக்கிறான். ஒன்றும் இல்லாதவனே திறந்த மனதுடன் பிறருக்குத் தருவான் என எப்போதோ வாசித்தது உண்மையே.

    இறுதிக் காட்சியில் அங்கம்மாவும் அங்கேயே வந்து சேர உடைந்து கதறும் ராசா, “ நரகக் குழியில் வந்து விழுந்திட்டியே அங்கம்மா “ , என ஓலமிடும் போது காமிரா மெல்ல உயர்ந்து அந்தபச்சை பலை முழுவதையும் சுற்றி மீண்டும் அவனிடமே வரும் போது அந்த ஷாட் மொத்த கதையின் சாரத்தையும் அதன் நோக்கத்தையும் காட்டுகிறது. (எல்லோரும் இதப் பாருங்க எனும் த்வனியில் காமரா சுழன்றதாக தேன்றியது)

    அச்சிறுமியோடு பாறையின் மீதமர்ந்து “ நியாமாரே…” என்று கதறும் கதறல் நம் ஒவ்வொருவரை நோக்கியதாகவே இருக்கிறது. நாம் சில மிடறு தேநீர் உறிஞ்சி சுகித்திருக்க, தங்களின் வாழ்க்கையையே பெருமுதலாளிகளுக்கும் அட்டைகளுக்கும் (இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை) உறிஞ்சக் கையளித்தவர்களின் வாழ்க்கையை வலிக்க வலிக்க சொல்லியிருக்கிறார் பாலா. விமர்சனங்களைத் தாண்டி படைப்பு நிற்கவே செய்கிறது முக்கியமான படைப்பாக.

    படத்தை குறித்து சில முக்கிய விமர்சனங்கள் பரவலாக எல்லா விமர்சனக் கட்டுரைகளிலும் காண முடிந்தது. அதில் முதலாவது திரைப்படம் அது தழுவி எடுக்கப்பட்ட நாவலுக்கு நியாயம் சேர்க்கவில்லை எனும் விமர்சனம். ஒரு பார்வையாளனுக்கும் ஒரு வாசகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் நிறைய. வாசகன்

    அறிவார்ந்த தளத்திலிருந்து படைப்பை அணுகுபவன்.  பார்வையாளர்களில் பெரும்பான்மையினர் அந்த தளத்தில் இருந்து படைப்பை அணுகுவதே இல்லை. படத்தில் பிற்பாதியில் தான் நாவலே துவங்குகிறது. முற்பாதி முழுவதும் பாலா ‘எடலக்குடி ராசா’ எனும் நாஞ்சில் நாடனின் சிறுகதையையே எடுத்தாண்டுள்ளார். இதனால் அவர் படைப்பை இருட்டடிப்பு செய்துள்ளார் என்பது விமர்ச்னம். முற்பாதியில் இலகுத் தன்மை இருந்ததால் தான் படத்தின் இறுக்கம் சற்றே குறைந்தது.

    படம் விளிம்பு நிலை வரலாற்றையே திரித்து எழுதியுள்ளது இது ஒரு வரலாற்று அரசியல் என ஒருவர் கடுமையாய் விமர்சித்திருந்தார் ஒரு விமர்சகர், சிற்றிதழ் ஒன்றில். தற்செயலாய் அவரே எழுதியிருந்த ஒரு வெகுசன பத்திரிக்கையில் வேறொரு ஆங்கிலப் படத்திற்கான விமர்சனத்தை வாசிக்க நேர்ந்தது. அதில் அவரது இறுக்கமான மொழி நடையோ, கருத்தாழமோ, ஆய்வுத்தன்மையோ எதுவுமே இல்லை. வெகுசனப் பத்திரிக்கைகளின் வாசகர்கள் சிற்றிதழ் வாசகர் போல தீவிரத் தன்மைக்கு பரிச்சயமற்றவர்கள் என்பதே இதற்கு காரணம். அதனை மனதில் வைத்துத் தான் அவர் அப்படி எழுதியிருக்கிறார். இத்தனைக்கும் அந்த ஆங்கிலப் படம் குறித்துப் பேசுவதற்கு ஏராளம் இருந்தது. ஆனால் அவரது வழமையான தீவிர அணுகுமுறை அத்திரைப்பட விமர்சனத்தில் அறவே இல்லை. ஒரு விமர்சனத்தையே தளத்திற்கு ஏற்றார் போல மாற்றிக் கொள்ளும் ஒரு விமர்சகர்எந்த முகாந்திரத்தில் படைப்பின் நேர்மையை கிழித்து எடுக்கிறார் என்பது எனக்கு விளங்க முடியாத ஆச்சரியமாகவே இருக்கிறது.

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும், காட்டுமிராண்டி உணவுமுறையும் – 6.

    செல்வன்

    கொலஸ்டிராலை வேண்டியமட்டும் அலசியாகி விட்டது. நாகரிக மனிதனின் இன்னொரு வியாதியான டயபடிஸ் எனும் சர்க்கரை வியாதியை அடுத்து அலசுவோம்.

    டயபடிஸில் முக்கியமான மூன்றுவகைகள் உண்டு. டைப் 1, டைப் 2 மற்றும் ப்ரி டயபடிஸ் என மூன்று முக்கியவகை டயபடிஸ் உண்டு. இதில் டைப் 1 டயபடிஸ் என்பது நம் உடலில் உள்ள பேன்க்ரியாஸ் எனும் உள்ளுறுப்பு கிருமிகளால் பாதிக்கப்படுவதால் அல்லது வேறு நோய்களால் பாதிக்கப்படுவதால் வருவது. பேன்க்ரியாஸ் தான் இன்சுலினை சுரக்கும் உறுப்பு என்பதால் இன்சுலின் சுரப்பது பாதிக்கப்படுகையில் நமக்கு டைப் 1 டயபடிஸ் வருகிறது.

    டைப் 2 டயபடிஸ் தான் பெரும்பாலானோருக்கு வருவது. இது நம் உணவு பழக்கங்களாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும் வருவது. நம் ரத்த அளவில் உள்ள சர்க்கரை 125 மிகி/ டிஎல் எனும் அளவைத் தாண்டுகையில் நாம் சர்க்கரை நோயாளி என அறியப்படுகிறோம். 100 மிகி/டிஎல் முதல் 125 மிகி/டிஎல் அளவில் சர்க்கரை இருந்தால் நாம் ப்ரிடயபடிக் என அழைக்கபடுகிறோம். 100 மிகி/டிஎல் அளவுக்கு கீழ் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என பொருள்.

    டயபடிஸ் வரக் காரணம் என்ன?

    நம் உணவில் உள்ள சர்க்கரை (கார்போஹைட்ரேட்) தான் சர்க்கரை நோய்க்கு காரணம். சர்க்கரை அரிசி, கோதுமை, பழங்கள், காய்கள் முதலிய பலவற்றிலும் ஏராளமாக இருக்கிறது. சர்க்கரையில் மூன்றூவகை உண்டு

    க்ளுகோஸ்

    லாக்டோஸ் – பாலில் இருக்கும் சர்க்கரை

    ப்ருக்டோஸ் – பழத்தில் இருக்கும் சர்க்கரை

    நாம் உண்ணும் அரிசி, கோதுமை முதலிய உணவுகளில் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை உண்டு. இது நேரடியாக குளுகோஸ் ஆக மாறுகிறது. அந்த குளுகோஸ் உடலில் இறங்கியவுடன் அதை ஜீரணம் செய்ய நம் பேன்க்ரியாஸ் இன்சுலினை உற்பத்தி செய்யவேண்டி உள்ளது. இன்சுலின் உற்பத்தி ஆனதும் பல தீய விளைவுகள் உடலில் நிகழ்கின்றன.

    ஆதி மனிதன் தினமும் மூன்று வேளை உண்ணும் வழக்கம் உடையவன் அல்ல. ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பதே சிரமம் எனும் நிலையில் இருந்தவன். அதனால் தேவைக்கு அதிகமாக உண்டால் அந்த அதிகபட்ச உணவை சேமித்து பஞ்சகாலத்தில் பயன்படுத்தும் அவசியம் அவனுக்கு இருந்தது. அதற்கு இன்சுலின் பேரளவில் பயன்பட்டது. ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளுகோஸ் கலந்தால் இன்சுலின் உற்பத்தி ஆகிறது. இன்சுலினின் உற்பத்தி நம் உடலில் உள்ள செல்களுக்கு அந்த கூடுதல் சர்க்கரையை சேமிக்கும் சிக்னல். கூடுதல் சர்க்கரையை எப்படி சேமிக்க முடியும்? இரு வழிகளில். ஒன்று கிளைகோஜென். கிளைகோஜென் நம் உடலின் ஆற்றல் தேவைகளுக்கு பயன்படும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் உடலுக்கு இரு நாள் அளவுக்கு மேல் தேவையான ஆற்றலை கிளைகோஜென்னாக சேமிக்கும் சக்தி இல்லை. ஆனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஏராளமாக கொழுப்பைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளது. அதனால் நம் உணவில் உள்ள சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு தொப்பையில் சேர்க்கபடுகிறது. நாமும் குண்டோதரர் ஆகிறோம்.

    சர்க்கரை வியாதி இதில் எப்படி வருகிறது?

    இன்சுலின் என்பது ஃபயர் எஞ்சின் மாதிரி. கூடுதல் சர்க்கரை உடலில் சேர்ந்தால் ஒரு எமெர்ஜென்சி எனும் அளவில் இன்சுலின் சுரந்து அதை கட்டுக்குள் வைக்கும். ஆனால் தினம் மூன்று வேளையும் நெருப்பு பிடித்து அலாரம் அடித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்? இதுவே தொடர்ந்து நாற்பது வருடம் நீடித்தால் என்ன ஆகும்?

    ஓடிக்கொன்டிருக்கும் ஃபயர் எஞ்சின் களைத்துப் போய் நின்றுவிடும். அதாவது பேன்க்ரியாஸ் தன் இன்சுலின் சுரக்கும் திறனை இழந்துவிடும் அல்லது குறைத்துக் கொள்ளும். இன்சுலின் சுரப்பது குறைந்தால் உடலில் சர்க்கரை அளவு அதிகம் ஆகி நமக்கு சர்க்கரை வியாதி வரும். அதன்பின் செயற்கையாக ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்குச் செல்வோம்.

    துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டு உணவுவகைகள் பலவும் ஏராளமான சர்க்கரை சத்து கொன்டவையாகவே உள்ளன. நம் காலை உணவான இட்லியை எடுத்துக்கொள்வோம். ஒரு இட்லியில் சுமார் 15 கிராம் சர்க்கரை உள்ளது. ஒரே ஒரு இட்லி சாப்பிடுவது சுமார் நான்கு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதற்கு சமம். காலையில் ஐந்து இட்லியும், சாம்பாரும் சாப்பிட்டால் நீங்கள் காலையில் மட்டும் 20 ஸ்பூன் சர்க்கரை (75 கிராம் சர்க்கரை)உண்கிறீர்கள் என பொருள்.

    “இட்லி சாப்பிடுவதும் சர்க்கரை சாப்பிடுவதும் ஒன்றா? இட்லி ஆரோக்கிய உணவு அல்லவா?” எனக் கேட்டு நீங்கள் என் மேல் கோபப்படலாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

    ஐந்து இட்டிலி சாப்பிடுவது நேரடியாக 75 கிராம் வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதை விட மோசமானது.

    சில உணவுகள் நம் உடலில் நுழைந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதில் உச்சக்கட்டமாக, உடனடியாக எரிந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு க்ளுகோஸ். க்ளுகோஸ் சாப்பிட்டவுடன் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு நமக்கு இருக்கும். அதற்கு காரணம் இதுதான். ரத்தத்தில் சர்க்கரை ஏறியவுடன் உடல் சுறுசுறுப்பு அடையும். உடல் உடனே அதை ஜீரணிக்க இன்சுலினை அனுப்பும். இன்சுலின் சுரந்தவுடன் பசி எடுக்கும். மேலும் எதையாவது உண்ணவேண்டும் போல் தோன்றும்.

    ஆக க்ளுகோஸ் ரத்தத்தில் கரையும் விகிதம் 100 என்பதை மையமாக வைத்து க்ளைசெமிக் இண்டெக்ஸ் எனும் இண்டெக்ஸ் உருவாக்கப்பட்டது. 72 தாண்டி இதில் இருக்கும் உணவுகள் ஆபத்தானவை. 72க்கு எத்தனை கீழே எண்ணிக்கை இருக்கிறதோ அத்தனைக்கத்தனை அந்த உணவு நல்லது. காரணம் அது மெதுவாக எரிந்து உடலுக்குத் தேவையான எனெர்ஜியை அளிக்கும். இன்சுலின் சுரப்பின் தேவையை குறைக்கும். இது உடலுக்கு மிகவும் நன்மையளிக்கும் சமாச்சாரம். உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    சில உணவுகளில் க்ளைசெமிக் இண்டெக்சை பார்க்கலாம்

    நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் கொடுக்கும் லிக்விட் க்ளுகோஸ் 100

    உருளைகிழங்கு 80 முதல் 98 (வகையை பொறுத்து)

    வெள்ளை சர்க்கரை 64

    முழு கோதுமை ரொட்டி 64 முதல் 87 வரை

    வெள்ளை அரிசி 64 முதல் 87 வரை (வகையை பொறுத்தது)

    வெள்ளை ரொட்டி 87

    ஆக சர்க்கரை, க்ளுகோஸ் ஆகியவற்றை உண்ணுவது நம் ரத்தத்தில் க்ளுகோஸ் சுரப்பை அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் க்ளுகோஸ் லெவெல்கள் உடலை வெலவெலத்துப் போகச் செய்யும். அதைக் குறைக்க உடனடியாக இன்சுலினை சுரக்கவேன்டியது கட்டாயம். ஒரு நாளுக்கு நாலைந்து தடவை இப்படி இன்சுலினை சுரந்தால் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலினை சுரக்கும் சக்தியை இழந்துவிடும். நாம் டைப் 2 டயபடிஸில் வீழ்வோம். அதன்பின் செயற்கையாக இன்சுலினை ஊசி மூலம் ஏற்றவேன்டியதுதான்.

    ஆக நம்மில் பெரும்பாலானோர் உண்ணும் அரிசி, கோதுமை (முழு கோதுமையாக இருப்பினும்) ஆகியவை சர்க்கரையை விட அதிக வேகத்தில் நம் ரத்தத்தில் கரைந்து க்ளுகோஸ் லெவெலை ஏற்றும். சர்க்கரை வியாதியை அதிகரிக்க/வரவழைக்க வேன்டுமனால் அதற்கு குறுக்கு வழி சர்க்கரை தின்பது கூட அல்ல. அரிசியையும், ப்ரெட்டையும் உண்பதே.

    ஆக “நான் குறைவாக தான் சாப்பிடுகிறேன். உடல் இளைக்கவில்லை” என சொல்லுகையில் அதற்கான காரணம் இதுதான்.

    காலை ஐந்து இட்டிலி

    மதியம் சாதம், சாம்பார், ரசம்,

    மாலை வடை, டீ காப்பி

    இரவு சப்பாத்தி, உருளைகிழங்கு குருமா

    இப்படி சராசரியான தமிழ்நாட்டு உணவை உண்பது தினம் சுமார் அரை கிலோ முதல் முக்கால் கிலோ வெள்ளை சர்க்கரையை நேரடியாக உண்பதற்கு சமம்.

    தினம் அரை கிலோ வெள்ளை சர்க்கரையை 40, 50 வருடங்களாக தொடர்ந்து உண்டுவந்தால் டயபடிஸ் வருவதிலும், உடல் எடை கூடுவதிலும், கொலஸ்டிரால் வருவதிலும் வியப்பு என்ன?

    இது எல்லாம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

    காட்டுமிராண்டி உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவு என்ன?

    கிட்டத்தட்ட பூஜ்ஜியத்துக்கு சமம்.

    காரணம் ஆதிமனிதன் உண்டது பெருமளவில் மாமிசம், சில வேர்கள், காய்கள். கோடையில் மட்டும் சில பழங்களை உண்டான். அதிலும் வேட்டை கிடைக்காத நாட்களில் முழு பட்டினி. தவிரவும் சர்க்கரை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற விவசாயகாலகட்ட பழங்கள் அவன் காலத்தில் இல்லை. ஆக ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 30 கிராம் அளவு சர்க்கரை அவன் உடலில் சேர்ந்திருந்தாலே பெரிய விஷயம். மேலும் 10,000 ஆன்டுகளுக்கு முன்புவரை உலகின் பெரும்பகுதி பனியால் சூழப்பட்டு இருந்தது. அதனால் மாமிசம் தான் அவன் முதன்மை உணவாக இருந்தது. இன்றும் பனிபடர்ந்த பகுதிகளில் வாழும் எஸ்கிமோ உணவில் 97% மாமிசம். மாமிசத்தில் துளி சர்க்கரை இல்லை. அதனால் ஆதிமனிதன் நாம் உண்பதைப் போன்ற பெரும் அளவுகளில் சர்க்கரையை உண்ணவில்லை. அதனால் அவனுக்கு சர்க்கரை வியாதியும் வரவில்லை.

    ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு நம் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு என்ன?

    இட்டிலி மற்றும் சப்பாத்தி.

    சப்பாத்தியின் கிளைசெமிக் எண் வெள்ளை சர்க்கரையின் கிளைசெமிக் இண்டெக்சை விட அதிகம்.

    சர்க்கரை நோயாளிகள் நாலு சப்பாத்தியை சாப்பிட்டு அதில் உள்ள சர்க்கரையை கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வது என்பது அரை கிலோ சர்க்கரையை சாப்பிட்டுவிட்டு அதைக் கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வதற்கு சமம்!!!

    இப்படி இட்டிலி, சப்பாத்தி போன்ற “ஆரோக்கிய உணவுகளை” தொடர்ந்து உண்டுவந்தால் அப்புறம் எப்படி சர்க்கரை வியாதி குணம் ஆகும்?

    (தொடரும்….)

    Share
  • மனமே மகிழ்ச்சி கொள்!….

    மேகலா இராமமூர்த்தி

    மனித வாழ்க்கையின் வெற்றியே அவர்தம் எண்ணத்தின் வலிமை கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது எனலாம். உற்சாகமும், தன்னம்பிக்கையும் மனத்தில் நிறைந்திருந்தால் எத்துணை கடினமான வேலையையும் நம்மால் துவளாமல் செய்யமுடியும். மாறாக மனம் சோர்வுடனும், ஆற்றல் குன்றியும் இருந்தால் எளிய வேலைகள் கூட நமக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிடக்கூடும்.

    நம் மனத்தை மகிழ்ச்சியின் ஊற்றாய், ஆற்றலின் கொள்கலனாய் எப்போதும் வைத்திருக்க முடியுமானால் நம் கனவுகள் மெய்ப்படும். வானம் வசப்படும். நடைமுறை வாழ்வில் சிலவற்றை நாம் பின்பற்றுவதன் வாயிலாக நம் மனத்தைச் சோர்வற்றுப் புத்துணர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் வைத்திருக்க முடியும். அவை யாவை என்பது குறித்துச் சற்றே ஆய்ந்து பார்ப்போம்.

    காலை எழுந்தவுடன் சூரிய உதயத்தை இரசிப்பது, அந்த இளவெயிலில் (பச்சைப் புல்வெளியில்) சற்றுதூரம் காலார நடப்பது போன்றவை நம் அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியோடு தொடங்க உதவி புரிபவை. அதுமட்டுமல்ல, இளங் காலைநேரச் சூரியஒளியில் நிறைந்திருக்கும் வைட்டமின் ’டி’ (vitamin D) நம் உடலுக்கு மிகவும் நன்மைதரக் கூடியது. இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் என்ற ஒன்றை அக்காலத்தில் தினசரி வழக்கமாகப் பின்பற்றி வந்திருக்க வேண்டும்.

    அதிகாலைச் சூரிய ஒளியில் நடக்க இயலவில்லையா? வருந்தத் தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே இயற்கை அன்னையின் அழகைக் கண்களால் பருகி மகிழலாம். சன்னலோரம் நின்ற வண்ணமே பறவைகள் எழுப்பும் இனிய ஒலிகளைச் செவிகுளிரக் கேட்டுக் களிக்கலாம்.

    காக்கை குருவி எங்கள் சாதி

    நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்

    நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
    நோக்க நோக்கக் களியாட்டம்.”

    என்ற மகாகவியின் பாடலைப் பாடியபடியே பறவைகளின் அழகையும், அவற்றின் இனிய கீதத்தையும் ரசிக்கலாம். இன்றைய நகர (நரக) வாழ்க்கையில் பறவைகளை எங்கே போய்த் தேடுவது என்று கேட்கின்றீர்களா……சாத்தியமானால் வீட்டிலிருந்தபடியே புள்ளினங்கள் பாடும் பள்ளியெழுச்சியைக் கேட்டு மகிழ்வோம். இல்லையெனில் பறவைகளின் இனிய கீதம், அருவிகள் பாயும்போது எழும் ஓங்கார ஒலி முதலியவற்றைப் ’பதிவு’ செய்து வைத்துக்கொண்டுகூட அதிகாலை நேரத்தில் கேட்டு மகிழலாம். அவ்வொலிகள் நம் மனத்திற்குப் புதிய உற்சாகத்தை அளிக்கும்; அன்றைய நாளின் தொடக்கத்தை இனியதாக்கும் என்று உளவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனால் நாம் அறிவது என்ன? இயற்கையை இரசிப்பதும், இயற்கையோடு இயைந்து வாழ்வதுமே மானுட வாழ்வின் இயல்பான மனமகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதே. நகரமயமாதலினால் (urbanization) எழில் கொஞ்சும் சோலைகளும், நீர்நிலைகளும், புள்ளினங்களும் விரைவாக அழிந்துவருகின்றன. அதனால் இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வு என்பதே இப்போது அருகிப்போய் வருகின்றது.

    மனத்தை நாள்முழுவதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் அடுத்த வழிமுறையாகக் காலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன் சில நிமிடங்கள் கண்களை மூடி அன்றைய தினம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகின்றோமோ அவ்வாறே கற்பனை செய்து பார்க்கலாம். (இதற்கான தியானப் பயிற்சிகளும் இப்போது கற்றுத் தரப்படுகின்றன.) அன்று செய்யவேண்டிய வழக்கமான செயல்களை நம் மனக் கண்ணில் வரிசைப்படுத்தி அதில் ஓரிரு செயல்களையேனும் நமக்குப் பிடித்தமானவைகளாகச் சேர்த்துக்கொள்வோம். உதாரணமாக, நமக்கு இசையை இரசிப்பதில் ஆர்வம் என்று வைத்துக்கொண்டால் அதற்காகச் சிறிது நேரத்தை ஒதுக்கி நம் மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். அது இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமியின் தேவ கானமாகவும் இருக்கலாம் அல்லது திரைப்படப் பாடலாகவும் இருக்கலாம்……நமக்குத் தேவை மன மகிழ்ச்சி. இசையை விடப் புத்தகங்கள் படிப்பதில் ஈடுபாடு அதிகமா? சிறிது நேரம் புத்தக வாசிப்பில் பொழுதைச் செலவிட்டு மனத்தை உற்சாகப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நமக்குப் பிடித்த செயல்கள் ஒன்றிரண்டையேனும் நம் அன்றாட அலுவல் பட்டியலில் நுழைத்துவிட்டால் போதும். நமக்கு அவ்வளவாக விருப்பமில்லாத மற்ற செயல்களையும்கூட நாம் விருப்பத்தோடு செய்யத் தொடங்கிவிடுவோம். அப்புறமென்ன…? மனச்சோர்வு, மனஅழுத்தம் ஆகியவை நம்மைக் கண்டு காததூரம் ஓடிவிடும்.

    அடுத்ததாக, நம்மைக் குறித்தும், நம்மிடமிருக்கும் திறமைகள் குறித்தும் அவ்வப்போது சிந்தித்துப் பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும். ‘தன்னை அறிய தனக்கொரு கேடில்லை’ என்பது திருமூலர் வாக்கு. ஆகவே நம்மிடம் உள்ள திறமைகளை இனம்கண்டு நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளவேண்டும். அத்திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்துச் சிந்தித்து அவற்றை மேலும் மெருகேற்றிக் கொள்ள முயலவேண்டும். ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒரு திறமையேனும் நிச்சயம் ஒளிந்திருக்கும். அதனைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டாலே போதும், பாதிவெற்றி அடைந்துவிட்ட மாதிரிதான். நம்மைப் பற்றியும், நம் திறன்கள் பற்றியும் உயர்வாகவும், பெருமிதத்துடனும் எண்ண  ஆரம்பித்துவிட்டாலே, தாழ்வு மனப்பான்மை அகன்று வாழ்வைப் பிறர் போற்றும் வகையில் நடத்தும்வழி நமக்குப் புலப்பட்டுவிடும்.

    “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

    தள்ளினும் தள்ளாமை நீர்த்து.” என்பது வள்ளுவம்.

    எப்போதும் உயர்வானவற்றையே சிந்தித்து நம் வாழ்வையும் உயர்வானதாகவும், வளமானதாகவும் ஆக்கலாம்.

    மனித மனம் மகிழ்ச்சியிழப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணமாக உளவியலாளர்கள் சொல்வது ‘தனிமை.’ தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியாதுதான். ஆனால் இன்றைய நவநாகரிக உலகில் யாரும் யாருடனும் பேசுவதில்லை; பழகுவதில்லை, கேட்டால்….’இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்வி உடனே புறப்படும். அண்டை வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூடப் பலருக்குத் தெரிவதில்லை. இதனாலேயே பிள்ளைகளைப் பிரிந்து தனியே வசிக்கும் முதியோரில் பலர் மன அழுத்தத்திற்கும், வேறுபல மனநல பாதிப்புக்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

    இன்றைய வாழ்க்கைமுறையில் தனிமை என்பது அனைவருக்குமே (வயது வித்தியாசமில்லாமல்) ஏதோ ஒரு காலகட்டத்தில் தவிர்க்கவியலாததாகவே இருக்கும்பட்சத்தில், அந்தத் தனிமையைத் துன்பம் நிறைந்ததாகவும், கழிவிரக்கம் கொள்ளத்தக்கதாகவும் மாற்றிவிடாமல் அதிலும் மகிழ்ச்சியோடு இருப்பது எப்படி? உற்சாகத்தோடு வாழ்வது எப்படி? என்று சிந்தித்தால் வழிகள் புலப்படாமலா போய்விடும்?

    ’மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்பது அனுபவ மொழி. யோசித்துப் பார்த்தால், நம்மைச் சூழ்ந்துகொண்டு பயமுறுத்தும் தனிமையை விரட்டவும் சில நல்ல வழிகள் இருப்பது புலப்படும். நமக்குத் துணையாகவும், ஆறுதலாகவும் இருக்கக்கூடிய உறவினர்கள் யாரேனும் இருக்கிறார்களா….எனப் பார்த்து அவர்களுடனான நம் உறவை பலப்படுத்திக் கொள்ளலாம். அவர்களோடு நாமும் அல்லது நம்மோடு அவர்களும் இணைந்து வாழ்ந்து, மனம்விட்டுப் பேசி வாழ்வில் புதுவசந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம். அல்லது புதிய நட்புக்களை (வாய்ப்பிருந்தால்) ஏற்படுத்திக் கொண்டு அவர்களோடு நம் எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்து மன மகிழ்ச்சி கொள்ளலாம்.

    உறவுகளும், நட்பும் சரியாய் அமையவில்லையா? சோர்வடையத் தேவையில்லை. நம் உடலில் வலுவிருந்தால், உள்ளத்தில் ஊக்கமிருந்தால் வீட்டிலேயே தோட்டம் அமைப்பது, அவற்றைப் பராமரிப்பது போன்றவற்றில் நேரத்தைச் செலவிட்டுத் தனிமைக்கு வடிகால் தேடலாம்.

    தோட்டவேலைகள் (gardening) செய்வதில் சிலருக்கு மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் இருக்கும். அப்படி இருப்பின் அத்தகையோர் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். ஏனெனில் அதனால் விளையும் நன்மைகள் பல. தோட்டவேலைகள் செய்வதென்பது ’ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிப்பதற்குச் சமமாகும்’. எப்படியென்றால்…வீட்டிலே தோட்டங்கள் அமைப்பதும், அவற்றைப் பராமரிப்பதும் சிறந்த, பயன்தரும் உடலுழைப்பாக அமைந்துவிடுகின்றது. அதன்மூலம் வீட்டிற்குத் தேவையான இரசாயன உரங்களற்ற காய்கனிகள், பூக்கள் போன்றவற்றை நாம் பெறுகின்றோம். அத்தோடு, உடற்பயிற்சியாகவும் அது அமைந்துவிடுகின்ற காரணத்தால் உடலும் நோய்களின்றிச் சுறுசுறுப்பாகத் திகழ்கின்றது. இரவில் நல்ல உறக்கமும் வருகின்றது. சமீபத்தில் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் (University of Texas, America) நடத்தப்பட்ட ஆய்வில் வீட்டிலே தோட்டம் அமைத்து அவற்றின் பராமரிப்பில் நேரம் செலவிடுவோர், அதனைச் செய்யாத மற்றவர்களைக் காட்டிலும் அதிகச் சுறுசுறுப்பானவர்களாகவும், வாழ்க்கையில் திருப்தி நிறைந்தவர்களாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வீட்டில் தோட்டவேலைகள் செய்வது மனஅழுத்த நோய்க்கு மிகச் சிறந்த மாற்று மருந்தாகவும் திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ‘Horticultural therapy’ என்ற பெயரால் இதனை அழைக்கும் மருத்துவ உலகம் பல்வேறு மனநோய்களுக்கும் (anxiety and depression disorders), மறதிநோய்க்கும் (dementia) ’கைகண்ட’ மருந்தாக (நாம் மிகவும் சாதாரணமாக எண்ணும்) தோட்டவேலையைச் சிபாரிசு செய்கின்றது.

    அடுத்தபடியாக, நமக்குப் பிடித்த கலையையோ, மொழியையோ கற்றுக்கொள்வதன் மூலமாக மனச்சோர்வை விரட்டி மகிழ்ச்சியைச் சொந்தமாக்கிக்கொள்ள முடியும். யோகக் கலை, மனவளக் கலை போன்ற வாழ்வை வண்ணமயமாக்கும் எண்ணற்ற கலைகள் இப்போது எல்லா ஊர்களிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆன்மிக நாட்டம் மிகுந்தோராயின் அவர்களுக்குப் பிடித்த கோயில், குளங்களுக்கும், புனிதத் தலங்களுக்கும் சென்றுவரலாம்.

    நம்மை விட வாழ்விலும், வசதியிலும் நலிவடைந்திருப்பவர்களைச் சந்தித்து அவர்கட்கு உதவலாம். ’உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்ற கவியரசு கண்ணதாசனின் பொருள்பொதிந்த பாடல் வரிகளை எண்ணி மன அமைதியடையலாம். இவ்வாறு மனத்திற்கும், ஆன்மாவிற்கும் மகிழ்ச்சியையும், நிறைவையும் தரத்தக்க நல்ல செயல்களைத் தேடித் தேடிச் செய்வது, பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடுவது என்று ஆரம்பித்தால் தனிமை தானாகவே விடைபெற்றுப் போய்விடும்.

    அதுபோலவே, நம் மனத்திற்குப் பிடித்த மனிதர்கள், அவர்களோடு செலவிட்ட இனிய தருணங்கள், வாழ்வில் நடைபெற்ற என்றும் மறக்கவியலா இனிமையான சம்பவங்கள் ஆகியவற்றை அவ்வப்போது நம் மனத்திரையில் ஓடவிட்டுப் பார்ப்பது மனித மனங்களுக்கு ’இன்ஸ்டண்ட்’ மகிழ்ச்சியைத் தரக்கூடியது. அனைவர் வாழ்விலும் ஏதேனும் ஒன்றிரண்டு நல்ல சம்பவங்களேனும் நடந்திராமல் போயிராது. மனிதர்களாகிய நாம்தான் எப்போதும் நம் வாழ்வில் நிகழ்ந்த அவலங்களையும், துன்பங்களையும், மனத்தில் ஏற்பட்ட இரணங்களையுமே நினைத்து நினைத்து வருந்தி, நம்மைச் சுற்றி ஓர் சோக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி அதிலேயே காலம் கழிக்கின்றோம். பொதுவாக எதிர்மறையான எண்ணங்களுக்கு நற்சிந்தனைகளைவிட வலிமை அதிகம்தான்; மறுப்பதற்கில்லை. அதனால்தான் அவை நம் மனத்தை எளிதில் ஆக்கிரமித்து நம்மைச் செயலிழக்க வைக்கின்றன என்பது உளவியல் ரீதியான உண்மை. ஆயினும், அந்த வலிமை வாய்ந்த பகைவனை ’ நல்லதையே எண்ணுவோம்; நல்லதே நடக்கும்’ என்ற நற்சிந்தனையின் துணையோடு நாம் வீழ்த்தி வெற்றிகாணத்தான் வேண்டும்.

    நாம் உடலால் வளர்ந்து விட்டாலும் நம் மனம் என்றுமே ஓர் குழந்தைதான். எப்படி ஒரு குழந்தை சாக்லெட் தந்தால் சிரிக்கின்றது….ஊசி போட்டால் அழுகின்றதோ….அதுபோலவே நம் மனமும், அது மகிழும்படியான இனிய தகவல்களையும், நிகழ்வுகளையும் அதனிடம் பதிவுசெய்தால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றது. வருத்தம் தரத்தக்கத் துயர நிகழ்வுகளையும், நேர்ந்த அவமானங்களையும் பதிவு செய்யும்போது, ஒன்று கோபம் கொண்டு வெகுண்டெழுகின்றது; அதனால் பழிவாங்கும் உணர்ச்சி மேலிடுகின்றது….அல்லது தன் இயலாமையை நினைந்து வருந்தி அழுகின்றது. ஆகவே, நல்லவற்றையே நம் மனத்திற்குத் தீனியாகக் கொடுத்து அதனை எப்போதும் உற்சாகமாகவும், இன்பமாகவும் வைத்திருப்போம்.

    மன மகிழ்ச்சிக்கு வித்திடுவதில் நகைச்சுவை உணர்வுக்கு ஓர் முக்கியப் பங்குண்டு. நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள் எப்போதும் தம்மைச் சுற்றி மகிழ்ச்சி அலைகளைப் பரப்பிக் கொண்டே இருப்பர் எனலாம். அந்த நகைச்சுவை உணர்வு அவர்தம் முகத்தில் புன்னகையை நிரந்தரமாகக் குடியமர்த்தும். அதனால் கவலைகளும், மன அழுத்தமும் அங்கே தங்குவதே இல்லை. அவர்கள் தாமும் மகிழ்ந்து, தம்மைச் சுற்றி இருப்பவர்களையும் தம் நகைச்சுவை ததும்பும் பேச்சுக்களால் வசீகரித்து விடுவதால் அவர்கள் அருகில் இருப்பதே ஓர் மகிழ்ச்சியான அனுபவம்தான்.

    மன வலிமை, மன மகிழ்ச்சி என்று பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பதனால் அது கிடைத்துவிடுமா? சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத முடியும். அதுபோல மனம் மகிழ்ச்சியோடிருக்க மிகவும் அடிப்படையானது நல்ல உடல்நலம். அதற்கு உடலை நன்றாய்ப் பேணுதல் மிக அவசியம்.

    ”உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

    திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.” என்கிறார் திருமூலர்.

    உடலை ஓம்பவேண்டியதன் அவசியத்தை அழகாயும், ஆழமாயும் விளக்குகின்றது இப்பாடல்.

    உடல் தெம்பாகவும், திடமாகவும் இருக்க நல்ல சத்துள்ள, சமச்சீரான உணவை (well-balanced diet) அதற்கு எப்போதும் அளிக்க வேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழு தானியங்கள் (whole grains), சிறு தானியங்கள் ( தினை, கம்பு, கேழ்வரகு முதலியன), பால், முட்டை, மீன் வகைகள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலிற்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதேசமயம் ’மீதூண் விரும்பேல்’ என்ற பொன்மொழியையும் நினைவில் கொண்டு பசியறிந்து, உண்ணும் அளவறிந்து உண்டால் நம் உடலில் நோய்கள் குடிபுகா. உடல் பிணியற்றிருந்தால் உள்ளமும் பிணியின்றி மகிழ்ந்திருக்கும்.

    இவ்வாறு அனுதினமும் அதிகாலையில் எழுந்து இயற்கையை இரசித்து, இனியவைகளையே நினைந்து, தன்னம்பிக்கையோடும், மகிழ்வோடும் நாளைத் தொடங்கினால் அங்கே மனச் சோர்வுக்கோ, சோம்பலுக்கோ இடமேது?

    இயற்கையிலேயே அதிகச் சக்தியுடனும், திறனுடனும் படைக்கப்பட்டுள்ள நம் மனத்தில் வேண்டாத எண்ணங்களாகிய குப்பைகளையும், கூளங்களையும் நிரப்பி அங்கே துர்நாற்றம் வீசச் செய்வதைத் தவிர்த்து இனிய நினைவுகள், நிகழ்வுகள், நம்மிடமுள்ள சாதகமான அம்சங்கள், திறமைகள், கிடைத்த அங்கீகாரங்கள், இனியும் தொடர்ந்து செய்ய வேண்டிய நற்பணிகள் ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்துச் செயலாற்றுவோம். மனதிலுறுதியும், வாக்கினில் இனிமையும், நல்ல எண்ணங்களும் கொண்டவர்களாய் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். மனத்தின் அளப்பரிய ஆற்றலைப் பன்மடங்கு பெருக்குவோம். வாழ்வில் உயர்வோம்.

    Share
  • குட்டிச் சுட்டீஸ்

     

    -கவிநயா

     

    ஞாயிற்றுக் கிழமைகளில் சன் டி.வி.யில் வருகிற குட்டிப் பிள்ளைகள் நிகழ்ச்சி. அந்த நேரம் வீட்டில் இருந்தால், பார்ப்பதுண்டு. குட்டிப் பிள்ளைகள், அதுவும் மழலை மாறாமல் இருக்கையில் அவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டால், “குழலும் யாழும் இனிதென்று சொன்னவருக்கு அப்படிச் சொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ?” என்று கேட்கத் தோன்றுமல்லவா?

    நிகழ்ச்சி, ரசிக்கும்படியே இருந்தது, போன வாரம் பார்க்கும் வரையில்…

    போன வாரம் வந்த குழந்தைகளில் ஒரு குழந்தை… மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 வயது இருக்கும். அந்தக் குட்டிப் பிள்ளை சொல்கிறது, “அப்பா ‘சரக்கு’ குடிப்பார்”, என்று! அப்படி என்றால் என்னவென்று தெரியாமல்தான் சொல்கிறது… அது தெரிகிறது… இருந்தாலும், அப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது? வீட்டில் பெரியவர்கள் பேசுவதையும் செய்வதையும் கவனித்துத் தானே இந்தப் பிள்ளைகள் இவ்வளவும் கற்றுக் கொள்கிறார்கள்?

    கள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தைக் குழந்தை உள்ளம் என்று சொல்கிறோம், ஆனால் இப்போது அந்தக் குழந்தை உள்ளம் குழந்தைகளிடமே கூட இல்லாமல் விரைவில் காணாமல் போய் விடுகிற அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

    சரி, இது கூட அந்தக் குழந்தை தெரியாமல் ஏதோ சொல்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அடுத்து வந்ததுதான் எனக்கு கிட்டத்தட்ட மாரடைப்பையே கொடுத்து விட்டது!

    அதாவது, நிகழ்ச்சி முடியும் போது ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுகள் கொடுப்பார்கள். இந்த முறை நிகழ்ச்சி முடியும் போது, “நிகழ்ச்சியை முடித்துக் கொள்வோமா?” என்று நிகழ்ச்சி நடத்துபவர் சொன்னதும், போன பத்தியில் சொன்ன அதே குழந்தை, “பரிசு எங்கே?” என்று கேட்டது.  அவரும் விளையாட்டாக, “இன்றைக்குப் பரிசெல்லாம் கிடையாது பாப்பா. எல்லோரும் அப்படியே அவங்கவங்க வீட்டுக்குப் போக வேண்டியதுதான்”, என்றார்.

    அதற்கு அந்தக் குழந்தை என்ன சொன்னது தெரியுமா?

    “பரிசு கொடுக்கலைன்னா தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்!”

    அட, உண்மையாகத்தான் சொல்கிறேன்! சத்தியமாக நான் கதை கட்டவில்லை! இந்த அளவிற்கெல்லாம் எனக்குக் கற்பனை வளமும் இல்லை!

    நிகழ்ச்சியாளரும் அசந்து போய் விட்டார் என்று நினைக்கிறேன். “பரிசு கொடுக்கலைன்னா என்ன செய்வே?” மறுபடியும் கேட்டார்.

    “தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்!”

    “அப்பவும் கொடுக்கலைன்னா என்ன பண்ணுவே?”

    “உங்களை மரத்துல தலை கீழா கட்டித் தொங்க விடச் சொல்லுவேன்”

    அவர் இன்னும் அசந்து விட்டார்.

    “நீ இப்படில்லாம் பேசினதாலயே உனக்குப் பரிசு கிடையாது”, என்று சொல்லி விட்டார்!

    அது வரையில் கொஞ்சம் பரவாயில்லை.

    பிறகு அந்தக் குழந்தை அவரை அருகில் வரச் சொல்லி, காதோடு, “ஏன் பரிசு தர மாட்டீங்க?” என்று கேட்டது.

    அவரும், “நீ அரிவாளைத் தூக்கச் சொல்வேன்னு சொன்னேல்ல? அதுக்குதான்”, என்றார்.

    “சரி நான் அப்படிச் சொல்ல மாட்டேன், பரிசு குடுங்க”, என்றது குழந்தை.

    பிறகுதான் அவர் பரிசு கொடுத்தார்.

    “உங்கள் குழந்தைகள் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்”, என்ற எச்சரிக்கையோடு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

    நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் மனதில் ஏறிய சுமை என்னவோ இன்னும் அப்படியேதான் இருக்கிறது 🙁

     

    படத்துக்கு நன்றி: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=9095&id1=6 (படத்தில் இருப்பது வேறு நிகழ்ச்சி)

     

    Share
  • சுண்டு விரலின் ஏக்கம்

     

    -தனுசு

     

    ப்ரியமான மகளே…
    வளர்ச்சி அடைந்தால்
    இடைவெளி உண்டாகிவிடுமா?
    நீ வளர்ந்ததால்
    நமக்குள்ளும் அதுதான் உண்டானதா?

    என் சுண்டு விரலின் ஏக்கம்
    நீண்டு கொண்டே போகிறது.
    அது
    உன்னோடு கட்டுண்டு இருந்த காலம் நினைத்து
    இன்னும் ஒரு
    தாகம் தருகிறது.

    படரத் துடிக்கும் கொடிபோல்
    முளைக்கத் துடிக்கும் விதை போல்
    நீரை விட்ட மீன்போல்
    உன் விரல்களின் ஸ்பரிசம் இல்லாததால்
    என் சுண்டு விரல் படும் அவஸ்தை
    எதை என்று சொல்ல…

    என் கட்டை விரலாலேயே
    அந்தக் குட்டை விரலுக்கு
    ஆறுதல் அளிக்கிறேன்.
    அன்பின் உச்சத்தில்
    அன்று நீ பெற்ற முத்தங்கள்
    இன்று
    ஆதங்கத்தில்
    அந்த விரலே பெறுகிறது.

    அன்றைய
    நம் அன்பின் சுவாசத்தை முகர
    இன்று
    அந்த விரலையே முகர்ந்து பார்க்கிறேன்.
    இன்னும்
    அன்றைய ஆசையில்
    அதனிடம் பேசவும் செய்கிறேன்.

    உன்
    பஞ்சு போன்ற
    அஞ்சு விரலின் நினைவு
    என்
    நெஞ்சுக் கூட்டை அரிக்குது!
    உன்
    பிள்ளைப்பருவ
    பிஞ்சு விரல்கள்
    பிரிஞ்சு போனதால்
    எனக்கு
    நஞ்சுகூட இனிக்குது!

    எனை தாங்க ஒரு கைத்தடி
    எனக்காக காத்திருக்கும் மண்ணின் ஆறடி
    இவைகளை நான் தொடும் முன்…
    மீண்டும் ஒரு வசந்தமோ
    அவைகளை தொட்ட பின்…
    மீண்டும் ஒரு பிறவியோ
    எனக்கு வேண்டாம்

    ஒரு நிம்மதி பெருமூச்சு வேண்டும்!
    அது
    என் சுண்டு விரல் நீ பிடிக்க
    நாம் நடக்க
    என் இதயம் அடைய வேண்டும்.

     

    படத்துக்கு நன்றி: http://pmbl.deviantart.com/art/Pinky-promise-212631494

     

    Share
  • ” உங்களுக்கும் வியர்க்கிறதா “….

    தமிழ்த்தேனீ

     தொலைக்காட்சிப் நிகழ்ச்சியில் நடிக நடிகையர் நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!  தினசரி, வாராந்தரி, மாதாந்திரப் பத்திரிகைகளில் கிளு கிளு சமாச்சாரங்கள் படித்து மனதைக் கிளுகிளுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!

    ஆங்கிலப் படங்கள் பார்த்து அதில் வரும் கொச்சையான காட்சிகளை , ரசித்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே தகப்பன்மார்களே!  செல்போனில் நண்பர் அனுப்பிய கிளுகிளு தொடுப்பை சொடுக்கி நீலப்படம் பார்த்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே தகப்பன்மார்களே!

    நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை தோலுரிக்கிறோம் பேர்வழியே என்று கண்டதையெல்லாம் , காணாததையெல்லாம் கிசுகிசுக்களாகப் பரப்பி வரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் இனிமை காணும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!    உங்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைக் கடிதமாகவே இந்தக் கடிதத்தை வரைகிறேன்.

    உங்களுக்கு பருவ வயதை நெருங்கும் பிள்ளைகள், பெண்கள் இருக்கிறார்களா?  அவர்களை இன்னமும் குழந்தைகள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? சற்றே விழிப்புணர்வு பெறுங்கள்!

    பல வருடங்களுக்கு முன் என் தாயார் கூறியது காதில் ஒலிக்கிறது.

    1. பெண்கள் முதல் படியில் கால் வைக்கும் போதே மிகுந்த கவனத்துடன் கவனத்துடன் வைக்க வேண்டும்.

           2. தவறான அணுகு முறையில் கால் வைத்து உருண்டு விட்டால் கடைசீப் படி வரை அவளால் எழவே முடியாது.

           3.  அதே போல் ஆணோ பெண்ணோ அடிப்படை தர்மத்தை மறந்து  வேறுபாதையில் சென்றால் பலன்கள் மிகவும் விபரீதமாக இருக்கும்

           4. எப்போதும் தன் நிலை தவறாமை இருபாலருக்கும் நன்மை செய்யும்

    மேற்கண்ட வாசகங்களை இப்போதும் கவனத்தில் வைத்திருக்கிறேன்.

     தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைக்காமையினால் நேர்மையாக இருப்பது பெரிதல்ல . தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவறு செய்யாதவரே நேர்மையாளர்கள், என்று கூறுவார் என் தாயார்.

     தீய வழக்கங்கள் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் நீரைப் போன்றது. ஆனால் நேர்மை என்னும் ஒழுக்கம் அதே நீர் பாதாளத்திலிருந்து மலை உச்சியை அடைவதைப் போன்றது. அதற்கு முயற்சி தேவை. கடினமான முயற்சியும் ஒரு விசையும் தேவை. அந்த விசைதான் ஒழுக்கம் , மனோதிடம், என்பார்கள்.”

     இப்போது நடைமுறையில் இருக்கும் காலம் சிறுவர்களுக்கும் ,சிறுமியர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் மோசமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே சற்றே நினைத்துப் பாருங்கள், எத்தனை மணித் துளிகள் உங்களால் உங்கள் பிள்ளைகளோடு செலவிட முடிகிறது? மிகக் குறைவான நேரமே செலவிடமுடிகிறது என்பதை மனதில் உணருங்கள்.

     அந்தக் குறைவான நேரத்தில் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால மேன்மைக்கு திட்டமிடுகிறீர்களா? உங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச உங்களால் முடிகிறதா? அல்லது நீங்கள் பேசுவதை உங்கள் பிள்ளைகள் காதில் வாங்குகின்றார்களா? அப்படியே காதில் வாங்கினாலும் கடைப் பிடிக்கிறார்களா? எப்படி அறிந்து கொள்வது இவற்றையெல்லாம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இயலாது என்று ஒரு பதிலும் கேட்கிறது.

    நான் காலையில் எழுந்து சமைத்து பள்ளிக்குச் செல்ல பிள்ளைகளுக்கு எடுத்து வைத்து , கணவருக்கு வேண்டியவற்றை செய்து, அவர்களை அனுப்பிவிட்டு மீதமிருக்கும் கடமைகளை முடிக்கவே நேரம் போதவில்லையே என்று வருத்தப் படும் தாய்மார்களே , உங்கள் கஷ்டம் புரிகிறது.

    காலையில் இந்த வாகன நெரிசலில் அலுவலகத்துக்கு சென்று அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு களைத்துப் போய்த் திரும்புகிறோம் நாங்கள் என்று கூறும் உங்கள் குரலும் காதில் விழுகிறது தகப்பன்மார்களே , உங்கள் கஷ்டமும் புரிகிறது.  நாங்களும் உங்கள் வயதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தானே உங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கினோம்.  ஆனால் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள் எப்போதும்.

     ஏனென்றால் முடிவில் உங்கள் பிள்ளை அல்லது பெண் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்னும் முடிவை ஆராயும்போது நல்லவிதமாக வளர்ந்திருந்தால் சரி, மாறாக தீய வழிகளில் கவனம் செலுத்தி வழிமாறியிருந்தால்? இந்த வாதங்கள் அனைத்துமே ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களாக மாறும் அல்லவா?

     யாரையும் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை . உண்மையைச் சொல்கிறேன். உங்கள் பிள்ளைகளைக் கவனியுங்கள்.

     “பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா?

    பேணி வளர்க்க வேணும் தெரியுமா? “

     என்று ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

    எங்கள் வாலிப வயதில் இலைமறை காய்மறைவாக இருந்த அத்துணை விஷயங்களும் அம்பலத்துக்கு வந்துவிட்டது இப்போது. தொலைக்காட்சி, இணையம், செல்போன் .எல்லாவற்றிலுமே விரல் நுனியில் உலகம் என்று எல்லாவற்றையும் பார்க்கும் வசதிகள் பெருகிவிட்டன.

    அதனால் பயமாக இருக்கிறது. சரியான நேரத்தில் முறையாக வழிகாட்டி வளர்க்கப்படும் பிள்ளைகளே எதிர்காலத்தில் சரியான பாதையில் வளர்ந்து நல்லவிதமாக வாழ்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

     அலுவலகத்துக்கு போகும் மனைவியையோ, கணவரையோ, அல்லது பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளையோ வேவு பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி நினைத்தாலும் நம்மால் அது இயலாது ,ஆனால் கண் காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

     ஆதரவான, அனுசரணையான, அன்பான கவனிப்பினால் அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.

     1. ஐந்து வயது வரை இளவரசனாக, அல்லது இளவரசியாக வளர்க்க வேண்டும்.

    2. ஐந்து வயதிலிருந்து 12 வயது வரை அடிமையாக வளர்க்க வேண்டும்

    3. 13 வயது முதல் 19 வயது வரை ராஜ குமாரனாக ,அல்லது ராஜ குமாரியாக வளர்க்க வேண்டும்.

    20 வயதிலிருந்து தோழனாக, தோழியாக பழகவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

     ஆனால் அப்போது குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தார்கள். இப்போது ஐந்து வயதுக் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற நம்மால் முடியவில்லை. ஆமாம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, பொது அறிவு வளர்ச்சி போன்றவை முற்காலத்தைவிட அதிகரித்திருக்கிறது. இளம் வயதிலேயே அதிகம் யோசிக்கிறார்கள்.

     அதிகம் தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களுக்கு இணையாக தெரிந்துகொண்டால்தான் அவர்களைக் கையாள முடியும்.  ஆகவே பழைய காலம் போல் வளர்க்க முடியாது என்னும் நடைமுறை தெரிகிறது இருந்தாலும் இன்னமும் அதிக கவனம் எடுத்துக்கொன்டு அவர்களின் கவனம் வேண்டாத தீய வழக்கங்களை நாடாத அளவுக்கு , அவர்களுக்கு புரியவைத்து, அவர்களுடன் கலந்து பேசி , அவர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

     இணையத்தில் மேய அவர்களை அனுமதிக்காமல் இருந்தாலோ, செல்போன் போன்ற நவீன கருவிகளை உபயோகிக்க அனுமதி அளிக்காமல் இருந்தாலோ, திரைப்படங்கள் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காமல் இருந்தாலோ தவிர்த்துவிடலாம் என்னும் குறுகிய மனோபாவத்தை விட்டுவிட்டு.

     எல்லாவற்றுக்கும் அவர்களை அனுமதித்து, அப்படி அனுமதிக்கும்போதே அவற்றிலுள்ள தீயவைகளைச் சுட்டிக் காட்டி அவற்றினால் வரும் கெடுதல்களை எடுத்துச் சொல்லி அவர்களை அதிலிருந்து விலக்கி, இணையம் போன்ற நவீன விஞ்ஞான முன்னேற்றத்தினால் எப்படி நற்பலன்களைப் பெறலாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை முன்னேற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம் நாம்.

     பொதுவாக சைக்கிளை குழந்தை ஓட்டினால் உடனே தாய் ஜாக்கிறதை இங்கேயே ஓட்டு ப்ரதான சாலைக்கு செல்லாதே என்று எச்சரிக்கிறாள், இதற்கு காரணம் குழந்தையின் மேலுள்ள அக்கறை ஒருபுறமென்றாலும் அந்தத் தாய்க்கு இருக்கும் பயம் மற்றொரு காரணம்.

    நம் பயத்தையெல்லாம் அந்தப் பிஞ்சு மனதில் ஏற்றக்கூடாது, அப்படி ப்ரதான சாலையில் சைக்கிள் ஓட்டாவிட்டால் அந்தக் குழந்தைக்கு எப்படி சாலை விதிகள், சாலையில் வண்டியோட்டும் முறை, நெளிவு சுளிவுகள் மனதில் பாடமாகும். ஆகவே அனுமதியுங்கள், ஆனால் பாதுகாப்பான முறையை கற்றுக் கொடுங்கள், அதுதான் வாழ்க்கையில் அவர்களை முன்னேற்றும் கருவி.

     இந்த உலகத்தில் இத்தனை தீமைகள் நிறைந்த உலகத்தில்தானே நம் பிள்ளைகள் வாழவேண்டும்? அப்படியானால் இந்த உலகத்தில் வாழ முறையான ,சரியான வழியை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்நாம். இந்தக் கட்டுரை எழுதக் காரணமாயிருந்த ஒரு நிகழ்வை பகிர்ந்துகொள்கிறேன்.

     ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றேன், வாயிலில் இருந்து குரல் கொடுத்தேன் எதிர் விளைவு இல்லை ,ஆகவே எப்போது வழக்கமாக செல்லும் நண்பர் வீடுதானே என்று உள்ளே நுழைந்தேன். எதிரே கணிணியில் அந்த நண்பரின் பிள்ளை பள்ளியில் படிக்கும் பிள்ளை தன்னை மறந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

     அடுத்தவர் கணிணியை எட்டிப் பார்க்கும் வழக்கமில்லாத நான் என் கண்ணைத் திருப்பும் ஒரு வினாடிக்குமுன் என் கண்ணில் பட்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஆம் அது ஒரு நீலப்படம். நான் வந்தது கூடத் தெரியாமல் அந்தப் பிள்ளை அதிலே மூழ்கியிருக்கிறான். சத்தம் போடாமல் வெளியே வந்தேன்.

     வியர்த்துக் கொட்டியது எனக்கு. எனக்கு ஏன் வியர்க்கிறது என்று எண்ணிப் பார்த்தேன், நம் நாட்டின் ,நம் பாரம்பரியத்தின் நம் வம்சாவழியின் வருங்காலத் தூண்கள் இந்தப் பிள்ளைகள் , அவர்களின் வாழ்க்கை சிதறிவிடுமோ என்கிற பயம் எனக்கு வந்ததால் எனக்கு வியர்த்தது.

    உங்களுக்கும் வியர்க்கிறதா?

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Contact No : 9840884088    Email : rkc1947@gmail.com  ,  http://thamizththenee.blogspot.com

    Share
  • நைவுறும் நினைவுகள்

    எஸ்.ரவி 

    மனிதர் வாழ்வில் நிகழ்வன எல்லாம்

    நினைவெனும் நன்னூல் நிலையத்துள்ளே

    படிந்து படிந்து படிமங்க ளாகும்.!

    கற்றதும், கேட்டதும், படித்ததும், பட்டதும்,

    குறிப்பே டுகளாய்க் குவிந்து கிடக்கும்!

    குவியலுக் குள்ளே குடைந்து தேடினால்,

    மடிதவழ்ந் திருந்த மழலை நாட்களின்

    “அம்மா” வாசனை அங்கே இருக்கும்!

    ஒண்ணாம் வகுப்பில் ஒன்றாய்ப் படித்த

    கண்ணம்மாவும், கிருஷ்ணமூர்த்தியும்,

    ஓரம்  ஒன்றில் ஒளிந்து கிடப்பர்!

    ஐந்தாம் வகுப்பில், தீபாவளிக்கு

    அடம் பிடித்து வாங்கிய டெரிலின் சட்டை

    பச்சை நிறத்தில் பசுமையாய் இருக்கும்.

    கவனமாய்ச் செய்த கணக்குப் பாடம்,

    மனனம் செய்த செய்யுள், ஸ்லோகம்,

    கல்லூரி நாட்களின் கலாட்டா வாழ்க்கை

    எல்லாம் அங்கே இறைந்து கிடக்கும்.

    கண்ணையும், கருத்தையும் கவர்ந்து இழுத்த

    யாரோ ஒருத்தியின் ஓரப் பார்வையும்,

    காதல்  பதித்த  காலடித்  தடங்களும்

    திருமண தினமும்,  முத்லிர வளித்த

    புதுஅனு பவமும்,  தேனாய் இனித்த

    இல்லற வாழ்வும், இணைந்து கிடக்கும்,

    மக்களைப் பெற்(று)அவர் மழலை உகந்து,

    அட்மிஷனுக்கு அலைந்து திரிந்து,

    ஆளாக்கி விட்டதில் அலுத்துக் களைத்து

    முதுமை நெருங்கிய மூளைக் குள்ளே,

    பாசம்,  நட்பு, பகைமை, அன்பு,

    துவேஷம், துரோகம், கருணை, காதல்,

    எனப்பல அலைகள்; எத்தனை புயல்கள்!

     

    இத்தனை சுமைகள் அழுத்திய தாலோ,

    சரிவர ஒழுங்கு செய்யாமை யாலோ,

    பக்கங்கள் சிலசற்று பழுப்பேறி மங்கின!

    மறதிக் கரையான் மற்றதைத் தின்றது

    கவிதை வரிகள்   கண்ணீர் பட்டுக்

    கரைந்து போயின! காலனுக் காகக்

    காத்துக் கிடந்த காலப் போக்கில்

    எஞ்சி இருந்த பதிவுகள் எல்லாம்

    தடம் புரண்டங்கே தடுமாறிப் போயின!

    புத்தகம், வித்தகம், தத்துவம் எல்லாம்

    அர்த்த மிழந்திடும் அந்நேர த்தில்

    ‘நி’னைவுகள் ‘நைவதால் நிச்சயமாக

    வார்த்தைகள் சற்றே வரிசை கலைந்து

    கோர்வை தவறிக் குலைந்து போகும்!

     

    ஆனால் என்ன? ஆன்மா மட்டும்

    ஆண்டவனோடு அமைதி கொள்கையில்,

    நினைவுக ளெல்லம் நீறாய்ப் போகும்!

    படத்துக்கு நன்றி

     http://alzheimers.about.com/library/blbrain.htm

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 29

    இன்னம்பூரான்

    இந்தத் தொடரை விட்ட குறை எட்டு மாதங்களுக்கு முன், ஒரு வாசகரின் பதிலுக்குக் காத்திருந்ததால். ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருப்பதில்லையே! தற்காலத்திய ஆடிட்டர் ஜெனெரல் திரு. விநோத் ராய் அவர்கள் மே மாதம் வேலையிலிருந்து ஓய்வு பெறுவார். புதிய ஆடிட்டர் ஜெனெரல் நியமனம், பிரதமர் கையில். இது தான் முப்பது-நாற்பது வருடங்களாக நடந்து வருகிறது. தணிக்கைத் துறையிலிருந்து தலைமையை தேர்வு செய்வதில்லை. எல்லாம் ஐ.ஏ.எஸ். தலைகள். திரு. விநோத் ராயும் அங்கிருந்து வந்தவர் தான். ஆனால் பாருங்கள். தணிக்கைத்துறை, தன்னுடைய சீரிய மரபுகள், உகந்த நடைமுறைகள், வைக்கோல் போரில் ஒளித்து வைத்த ஊசியை தேடிப் பிடித்து விடும் திறன், விருப்பு/வெறுப்புக்கு அப்பாற்பட்ட தன்மை, அச்சம் தவிர்த்த மனப்பான்மை ஆகியவை மூலம் அவரைப் போன்ற, காலம் சென்ற திரு. சி.ஜி.சோமையா அவர்களைப் போன்ற உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தன்வசம் இழுத்துக்கொண்டது. தற்காலம் ஊடகமெங்கும், உலகளாவிய வகையில் இந்திய தணிக்கைத் துறையின் சாதனைகள் புகழப்படுகின்றன. ஐ.நா. அமைப்புகள் எல்லாவற்றிலும், இத்துறையினர் பேரும், புகழுமாக, பணி செய்கிறார்கள். மத்திய அரசின் அசரீரி வாக்கு ஆகிய அமைச்சரொருவர், ‘ஒருவர் தலைமை’ வேண்டாம். ஒரு ஆடிட் குழு அமைக்கலாமே என்று பட்டம் விட்டுப் பார்த்தார். துரிதமாக, அதை வாபஸ் பெற்றார். மற்றொரு அழகிய பெருமாள் அமைச்சர், ‘அதிகாரிகள் என்ன? நானே ஆடிட்டுக்கு அஞ்சுகிறேன்!’ என்று பூச்சாண்டி காண்பித்து விட்டு, எள்ளல் செய்கிறார்.

    எதற்கும், இங்கு நினைவூட்ட வேண்டியது,  மே 30, 1949 அன்று, அரசியல் சாஸனம் வகுக்கும் அவையில் டாக்டர் அம்பேத்கார் அவர்கள், ‘…இந்திய அரசியல் சாசனத்தின் முதல் முக்கிய பதவியாக ஆடிட்டர் ஜெனெரல் பதவியைக் கருதுகிறேன்…நீதிபதிகளின் ஸ்தானத்தை விட இது மேலும் பொறுப்பு மிகுந்த பதவி.. நீதித்துறையை விட இதை முக்கியமாகக் கருதுகிறேன்..‘என்றார், என்பதே. பல சான்றோர்கள் அதை வழி மொழிந்தார்கள். தணிக்கை மட்டுமல்ல; அரசின் வரவு/செலவு விஷயங்களை, ஆதியோடந்தமாக அலச வேண்டியதால், Comptroller and Auditor General என்ற நாமகரணம் தேவை என்றார், திரு.டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அதையெல்லாம் முற்றும் புறக்கணித்து விட்டார்கள். அரசு-தணிக்கை மோதலை கண்டு மனம் வருந்தி, ஓய்வு பெற்ற சில தணிக்கை அதிகாரிகள் ஜனாதிபதியிடம், ஒரு மேன்மை குழு மூலம்தான் அடுத்தத் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்கள். அதில் என்னுடைய கருத்து, அமெரிக்கா/இங்கிலாந்து போல, ஓய்வு பெறும் ஆடிட்டர் ஜெனரலும் அந்தக் குழுவில் இருக்க வேண்டும் என்பதே. என்ன செய்யப்போகிறார்களோ! தெரியவில்லை, பாரதமாதாவே! நல்லதே நடக்கட்டும்.

    அடுத்த செய்தி விசித்திரமானது. சில அரசுத் துறைகள், ‘நாங்கள் செய்யும் வேலைகளை முன்னாலேயே பரிசீலித்து, தணிக்கைத்துறை நற்சான்று கொடுக்கட்டும்.’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரோடு போடப்போறோம். ஒப்பந்தம் வரையுமுன், எங்கள் திட்டவட்டத்தைப் பாருங்கள் என்கிறார்கள், ஒரு துறையினர். நாங்கள் டெண்டர் திறகும்போது, வந்து சாட்சி இருங்கள் என்கிறது, மற்றொரு துறை. திரு.கேம்கா என்ற யோக்கியமான ஐ,ஏ.எஸ். அதிகாரியை வறுத்தெடுக்கும் ஹரியானா அரசு, நிலபுலன்கள் மதிப்பை தணிக்கைத்துறையே போடட்டும் என்று சொல்கிறது.  இது ஒரு பகடியாகத்தான் தோன்றுகிறது. என்னுடைய அனுபவத்தில் தணிக்கைத்துறை முன்கூட்டியே அரிதான சில சமயங்களில் அரசை அன்புக் கட்டளையாக எச்சரித்தது உண்டு. ஆனால், ‘நாங்கள் செய்யும் வேலைகளை முன்னாலேயே பரிசீலித்து, தணிக்கைத்துறை நற்சான்று கொடுக்கட்டும்.’ என்று கோஷமிடுவது ஒரு தகிடுதத்தமே அல்லது பகடியே. வாசகர்களின் விருப்பத்தைப் பொறுத்து, அது பற்றி, விவரமாக அலசி, அடுத்த கட்டுரை அமையலாம். சமைக்கும் முன் ருசி பார்ப்பது எப்படி?

    சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/-QuT8xa5bgrc/UNGPnQOl_xI/AAAAAAAAFCY/_0hUWBnS_DY/s400/auditor.jpg

    Share
  • தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் சார்பாக மகாசபைக் கூட்டம்

    பத்திரிக்கைச்செய்தி

    21.04.13 ஞாயிற்றுக்கிழமை  தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் சார்பாக மகாசபைக் கூட்டம்

    தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் சுமார் 90 சதவீதத்தினர் பருத்தி நூலை வைத்துதான் நெசவு செயது வருகிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் விசைத்தறித் துறை பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது.  அதன்மூலமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஜவுளித் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாகக் கொண்டுவர வேண்டுமென்று அதன் தலைவர் எம்.எஸ். மதிவாணன் அவர்கள் கருத்து தெரிவித்தார்.

    சமீபகாலங்களில் பல இன்னல்களை விசைத்தறி தொழிலாளர்களும் அதை சார்ந்த மற்ற தொழிலாளா;களும் சந்தித்த போதிலும் அவ்வப்போது ஜவுளித் துறை செயலர் மற்றும் அமைச்சரை அணுகி எங்களது குறைகளை கோரிக்கையாக சமர்ப்பித்து இருந்தோம்.  ஆனால், குறிப்பாக ஆறு மாதங்களாக  அமுல்படுத்தப்படாமல் இருந்த 11 ரக ஒதுக்கீட:டுச் சட்டத்தை காரணம் காட்டி விசைத்தறித் தொழிலாளர்களை அதிகாரிகள் அச்சுறுத்தியும் கைது செய்து விடுவோம் என்று கூறி வருவதனால் விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்ய முடியாமல் மிகவும் பயந்து உள்ளார்கள்.  இந்த பதினோரு ரக சட்டத்தில் வேஸ்டி, சேலை, துண்டு, சர்டிங் போன்ற முக்கிய ரகங்கள் இடம் பெற்று உள்ளது.  விசைத்தறியில் இந்த ரகங்கள் எல்லாம்  அதிகமாக தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது.  ரகங்களின் உற்பத்தியை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என்றால் அதை ஈடு செய்வதற்கு கைத்தறியினால் முடியாதது மட்டுமல்லாமல் கைத்தறியில் செய்தால் அதனுடைய விலை மிகவும் அதிகமாகிவிடும்.  தேவைக்கேற்றாற்போல் துணிகள் கிடைக்காது. இதனை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் இந்த சட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதை தாமதித்து வந்தது.  ஆனால் சில இடங்களில் சில அதிகாரிகள் விசைத்தறிக் கூடங்களுக்குச் ;சென்று சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று சொல்லி அச்சுறுத்தி வருகிறார்கள்.  மேலும் காட் சட்டத்தின்படி உற்பத்தி செய்வதற்கு தடை இல்லை என்று இருக்கிறது.  வெளிநாட்டிலிருந்து ஒதுக்கப்பட்ட ரகங்களை இறக்குமதி செய்யலாம் என்றும் அரசு சட்டத்திலும், ஒப்பந்தத்திலும் கூறப்படுகிறது.  அப்படியிருக்கும்போது இந்திய நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் உபயோகப்படுத்தப்டும் ரகங்களை நெய்யக்கூடாது  இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

    அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு இயற்றியது.  அதன்மூலம் விசைத்தறியில் சாதாரண மக்கள் அணியும் துணிகளான வேஸ்டி, சேலை, துண்டு, சர்டிங் போன்ற ரகங்களை நெய்தால் விசைத்தறியாளர்கள் மீது நடவடிக்கைக எடுக்கப்பட்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்று சட்டம் கூறுகிறது.  இதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடுத்து இந்த சட்டத்தை தடை செய்தோம்.   பின்பு உச்சநீதி மன்றத்திற்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டு இந்த சட்டத்தை எந்த ஒரு தொழிலும் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் இதற்கு ஒரு ஆலோசனைக்குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் கூறியது.  ஆனால் இதற்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் விசைத்தறியாளர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.  அவர்களுடைய பாதிப்பை மத்திய அரசு சிறிதும் கவனம் கொள்ள வில்லை.  எங்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

    ..2..
    எந்த மாநிலத்திலும் இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதில்லை.  ஆனால், தற்போது கோவை, திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சில அதிகாரிகள் விசைத்தறிப் பட்டறைக்கு வந்து விசைத்தறியாளர்களை மிரட்டி அச்சுறுத்தி வழக்கு தொடுத்து வருகிறார்கள்.  இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தினால் தமிழ்நாட்டிலுள்ள 3 இலட்சம் தறிகளினுடைய உற்பத்தி நிறுத்தப்பட்டு விடும்.  லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்.  பெருமளவில் உற்பத்தி குறையும்.

    ஆகையினால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் ஜவுளித்துறை அமைச்சர், செயலர் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் எங்களது கோரிக்கையினை பரிசீலிக்குமாறும மனுவினை சமர்ப்பித்து உள்ளோம் என்று தமிழ் நாடு விசைத்தறி சம்மேளத்தின் தலைவா; எம்.எஸ். மதிவாணன் தெரிவித்தார்..

    இருப்பினும் மென்மேலும் விசைத்தறி நெசவாளர்கள் அச்சுறுத்தப்படுவதினால் நமது கோரிக்கையினை அரசாங்கத்திற்கு தெரிவிப்பது மட்டுமின்றி விசைத்தறி தொழிலுக்கு நல்ல திட்டங்களை வழங்கி காப்பாற்றுமாறும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எங்களது கோரிக்கையினை தெரிவிக்க உள்ளோம்.  இதன் தொடர்ச்சியாக வருகின்ற 21.04.13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சோமனூரில் அமைந்துள்ள லட்சுமி மகால் கல்யாண மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் மகாசபைக் கூட்டத்தினைக் கூட்ட உள்ளோம்.  இதுசமயம் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், விசைத்தறி நெசவாளர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளார்கள் என்றும் தலைவர் எம்.எஸ். மதிவாணன் தெரிவித்தார்..

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    வல்லமைக் குழுவின் அன்பு உள்ளங்களுக்கு விஜய வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நன்னாளில் புது வருட வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புது வருடம் பெயருக்கேற்றாற்போல் எல்லா வெற்றிகளையும் நமக்குத் தரவேண்டும். தந்தே ஆகவேண்டும் (அப்படித் தராவிட்டால் அடுத்த அறுபது வருடம் கழித்து வரும் இந்தப் பெயரை எடுத்து விடுவோம்)

    பொதுவாக ஒவ்வொரு புதுவருடமும், தமிழ்நாட்டில் எப்படியோ, இந்த ஆந்திர தேசத்தில் மட்டும் ஊருக்கு ஊர் பஞ்சாங்கம் படிப்பார்கள். இந்த வருடத்தில் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஆரூடம் சொல்லி, அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு லாபம் எவ்வளவு கிரயம் எத்தனை என்பதைக் கூட கணக்கிட்டுச் சொல்வார்கள். தேச சுபிட்சத்தைப் பற்றியும், ஒவ்வொரு சமயம் சில அரசியல் வாதிகளைப் பற்றியும் கூட ஆரூடங்கள் வருவதுண்டு. தேச சுபிட்சம் என வரும்போது, பொய்த்துப் போகும் மழையைப் பற்றியும் அல்லது அதீதமான புயல் மழை போன்றவற்றினால் பாதிப்புகளைக் கூட கணக்கிட்டு சொல்லும்போது சில சமயம் எனக்கே வியப்பாக இருக்கும். இதுவெல்லாம் இப்படித்தான் என எப்படித்தான் கணிக்கிறார்களோ. ஆனால் பல சமயங்களில் இவர்கள் கணக்குப்படிதான் நடக்கிறது என்பதையும் சமபவங்கள் நிகழ்கையில் நமக்குக் காணக் கிடைக்கின்றன என்பதையும் நாம் சொல்லிவிடவேண்டும்.

    அதே போல் மனிதர்களுக்கான ஆரூடச்செய்திகளும் கூட இவர்கள் சொல்படிதான் நடக்கின்றனவா என்ற மாயை எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. ஆரூடங்கள் பொய்ப்பதில்லை என்பதை சில சமயம் நானே உணர்ந்திருக்கும்போதும், பல சமயங்களில் இந்த ஆரூடத்தினால் நன்மைகள் விளைகின்றனவா என்றும் யோசிப்பதுண்டு. நாளை நடப்பது என்ன என்பது இப்போதே தெரிந்தால் வாழ்வின் சுவாரசியம் போய்விடாதா என என்னுள்ளேயே கேள்விகள் கேட்டுக் கொள்வதுண்டு. ஆனாலும் இந்த ஆரூடங்கள் ஒருவிதத்தில் நல்லதைத்தான் செய்கின்றன. அதாவது மனிதனது வாழ்வில் நம்பிக்கை மேலும் பெருகவும், இப்படி ஒருவேளை நிகழ்காலத்தில் நடந்து விட்டால் தன்னைத் தானே அவன் அதற்கேற்றபடி தயார் செய்து கொள்ளவும் நிச்சயம் உதவுகின்றன. நடப்பதும் நடக்க இருப்பதும் நம் கையில் இல்லை என்ற தத்துவ நிலையைக் கூட இந்த ஆரூடங்கள் உணர்த்துவதாக நான் நினைத்துக் கொள்கின்றேன். வாழ்வின் மீது நம்பிக்கையைப் பலப்படுத்துகின்றன என்றும் சொல்லலாம்.இந்த ஒன்றே போதுமல்லவா ஆரூடத்தினால் ஏற்படும் பலன்கள் உண்டு என்பதற்கு?

    வல்லமையில் பலவாரங்களாக இப்படிப்பட்ட வாரபலன்களை திருமதி காயத்ரி பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிவருகின்றார்கள் இந்தப் புதிய வருடம் நல்ல நல்ல பலன்களை எல்லாருக்கும் அள்ளி வழங்குமா என்று அவர்தான் கணித்துச் சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டாலும் இத்தனை வாரங்களாக வாசகர்கள் மனதில் வாழ்வின் மீது ஒரு நம்பிக்கையை. வளர்த்து வந்திருக்கும் இவரை எத்தனை பாராட்டினாலும் தகும். ஆகையினால் வல்லமை குழுவினர் ஒரு மனதாக திருமதி காயத்ரி பாலசுப்பிரமணியம் அவர்களை இந்த வார வல்ல்மையாளராக சிறப்பிக்கிறோம்.

    வல்லமையாளர் விருது என்பது வல்லமையில் இது ஐம்பதாவது வாரமாக வழங்கப்படும் விருதாக இந்த வார விருது அமைகின்றதும். அதுவும் இந்தப் புதிய வருடமான விஜய வருட ஆரம்ப வாரத்தில் நிகழ்வதால் இந்த விருதுக்கு ஏதோ ஒரு சிறப்பு பெருமையும் சேர்ந்து கொள்வதாக எனக்குள் ஒரு பிரமை. எப்படி இருந்தாலும் இந்த விருதை வாங்கியவருக்கு என் வாழ்த்துக்கள்.

    கடைசி பாரா: பூந்தலைச் சிறுகோல் – முனைவர் பானுமதி.

    சிறு வயதில் தாய் (செவிலி) பொன்னால் ஆன கிண்ணத்தில் பால் சோற்றை ஏந்திக் கொண்டு குழந்தைக்கு ஊட்டுகிறாள். அந்தக் குழந்தை உண்ண மறுத்து கால் கொலுசு ஒலிக்க இங்குமங்கும் ஓடி ஒளிந்து கொள்கிறது.. மூச்சிறைக்கத் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அக்குழந்தைக்கே மூச்சிறைக்கும் போது அத்தாய்க்கு எப்படி இருக்கும். பொறுமையாக அத்தாய் அக்குழந்தையின் பின்னால் ஓடுகிறாள். அப்போதும் உண்ண மறுக்கும் குழந்தையை அவள் அடிக்கவில்லை. மாறாக அடிப்பதாக நடிக்கிறாள். அதுவும் எப்படி? பூவால் சுற்றப்பட்ட ஒரு கோலைக் கையால் ஓங்கிக் காட்டி. ஆம் ஒரு வேளை அக்கோல் அக்குழந்தையின் மேல் பட்டு விட்டால் வலித்து விடுமே என்பதால் அக்கோலைப் பூவால் சுற்றியிருந்தாளாம். இதைச் செய்தவள் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயல்ல. செவிலித்தாய். இக்கால வழக்கில் கூறவேண்டுமானால் வேலைக்காரப் பெண்மணி.

    “புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,‘உண்’ என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்

    முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,
    அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
    பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,
    ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி”

    Share
  • மரத்துப்போன மனம்.

    ராஜ்ப்ரியன்

    மஞ்சு எழுந்திரிம்மா என சரளா காபி டம்பளருடன் அறைக்குள் வந்து தன் ஒரே மகளை எழுப்பிக்கொண்டு இருந்தார்.

    தூக்கக் கலக்கத்திலேயே என்னம்மா ?.

    ஆறு மணியாச்சி எழுந்திருடா.

    எங்கம்மா போகப்போறன் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கறன்.

    இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வர்றாங்க செல்லம்.

    அதைக் கேட்டதும் தூக்கம் கலைந்து மஞ்சுவின் மனம் தவிக்க ஆரம்பித்தது. முதல் முறையா பொண்ணு பாக்க வர்றாங்க. பக்கத்து வீட்டு அக்காவ புடிக்கலன்னு மாப்பிள்ள சொன்னதைப்போல என்னை சொல்லக்கூடாது கடவுளே என மனதில் வேண்டிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். அவள் கையில் காபி டம்ளரை தந்த சரளா சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு அந்த மஞ்சள் கலர் புடவைய கட்டிக்கடா.

    என்னம்மா திடீர்ன்னு புடவை கட்டச்சொல்ற. நான் தான் இதுவரைக்கும் புடவை கட்டனதுயில்லன்னு உனக்கு தெரியும்மில்ல.

    உனக்கு புடவை கட்ட தெரியலன்னு பொண்ணு பாக்க வர்றவங்களுக்கு தெரிஞ்சதுன்னா அசிங்கமாயிடும். எதிர்த்த வீட்டு கவிதாவ வரச்சொல்றன் அவ வந்து உன்னை ரெடிப்பண்ணுவா எனச்சொல்லிவிட்டு வெளியே போனார். ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தபடி காபி குடித்துவிட்டு பாத்ரூம் சென்ற மஞ்சுவுக்கு குளிக்கும் போது மார்கழி மாத குளிர்ந்த நீரும் சுடு நீர் போல் இருந்தது. குளித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தபோது கட்டிலில் அமர்ந்திருந்த கவிதா எவ்ளோ நேரம்டீ குளிப்ப?.

    பயமாயிருக்கு அண்ணி.

    என்ன பயம்.

    பொண்ணு பாக்க வர்றவங்களுக்கு என்ன புடிக்கும்மில்ல.

    என்னடீ கேள்வியிது.

    சொல்லுங்க அண்ணீ.

    உனக்கென்னடீ. நல்ல கலரா அழகா கொழுக்கு மொழுக்குன்னு இருக்கற. எல்லாம்மே அளவா ஜம்முனு இருக்கு.

    ச்சீ……..

    என்னடீ ச்சீ. ஏரியா பசங்க உன்ன பாத்து ஜொள்ளு விடறானுங்க. அதவிட முக்கியம் நீ பி.எஸ்.சி பீ.எட் படிச்சியிருக்கற உன்ன கொத்திம்போவ நான் நீன்னு போட்டி போடுவானுங்க. நீ என்னடீன்னா புடிக்குமான்னு கேள்வி கேட்கற.

    அதில்ல பக்கத்து வீட்லயிருக்கற மலர் அக்காவ பொண்ணு பாக்க வர்றவங்கயெல்லாம் வேணாம் வேணாம்ன்னிட்டு போறாங்க என்னையும் அப்படி சொல்லிட்டா?.

    அவள பாக்க வர்றவங்க நகை அதிகமா கேட்கறாங்க. அத அவுங்களாள போட முடியல அதனால இழுத்தும் போவுது. உனக்கென்ன அழகிருக்கு, படிப்பிருக்கு. அதோட உங்கப்பா ஹெட்மாஸ்டர். வசதியா இருக்கிங்க. அப்பறம்மென்ன வர்றவனுக்கு உன்ன புடிக்கும் சும்மா ரெடியாகு எனச்சொல்ல மஞ்சு அவசர அவசரமாக பாவடை, ஜாக்கெட் அணிந்துக்கொண்டு நின்றாள். கவிதா அவளுக்கு அழகாக புடவை கட்டிவிடவும் வெளியே ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது,

    மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்கம்மா என மஞ்சுவின் அப்பா சோமசுந்தரம் குரல் தந்துவிட்டு வாசலுக்கு சென்றார். சரளாவும் வெளியே வந்து வாங்க வாங்க என புன்னகையிடன் அழைத்து வந்து சோபாவில் உட்காரவைத்தார்கள். இவர் தான் மாப்பிள்ளை. பேரு குமரன். இது அவரோட அப்பா மோகன், அது அவுங்க அம்மா என புரோக்கர் மணி அறிமுகப்படுத்தியவர் மஞ்சுவின் அப்பாவையும், அம்மாவையும் மாப்பிள்ளை வீட்டாருக்கு அறிமுகப்படுத்தினார்.

    காபி எடுத்துவாம்மா என தன் மனைவியிடம் மெல்லிய குரலில் சோமசுந்தரம் சொல்ல மஞ்சு மனதில் பயத்தோடும், வெட்கத்தோடு காபி டம்பளர்களை எடுத்துக்கொண்டு அன்ன நடையோடு வந்து மாப்பிள்ளை வீட்டாருக்கு தரும்போது அடிக்கண்ணால் மாப்பிள்ளையை ஒரு பார்வை பார்த்தால். மனதில் ஒரு குறுகுறுப்பு. எல்லோருக்கும் வணக்கம் வைத்தாள். இரண்டு பேரும் வெட்கப்படாம பாத்துக்குங்க கட்டிக்கிட்டு வாழ போறவங்க நீங்க தான் என புரோக்கர் மணி சொன்னதும் குமரன் மெல்ல அவளை பார்த்தான். அதிகம் உயரமும் இல்லாமல், மொத்தென்று இல்லாமல் அம்சமாக இருந்தாள் மஞ்சு.

    பையன் சாப்ட்வேர் இன்ஜினியர் மாசம் முப்பதாயிரம் சம்பாதிக்கறாரு. கம்பெனியிலயிருந்து வெளிநாடு அனுப்புவாங்க. அப்ப பையன் சம்பளம் டபுள் மடங்காகிடும் என்ற மணி, பையனோட அப்பா முன்சிபால்டியில ஹெல்த் இன்ஸ்பெக்டரா இருக்காரு. ஒரு பையன், ஒரு பொண்ணு. பொண்ணு கல்யாணமாகி பெங்களுரூல இருக்கு எனச்சொன்னவர் சற்று இடைவெளி விட்டு இரண்டு குடும்பத்தாரும் சரின்னா ஜாதக பொருத்தம் பாக்கலாம் என்றார். தனது மகளின் ஜாதகத்தைத் தந்த சோமசுந்தரம் நீங்க பையன் ஜாதகத்தை தாங்க எங்க குடும்ப ஜோசியர்க்கிட்ட கேட்டுட்டு சொல்றோம் என வாங்கிக்கொண்டார்.

    மாப்பிள்ளை வீட்டார் போனதும் மஞ்சுவிடம் மாப்பிள்ளைய பாத்தியா உனக்கு புடிச்சியிருக்கா என சரளா பலமுறை கேட்டும் நீயும் அப்பாவும் பாத்து ஓ.கே சொன்னா எனக்கும் ஓ.கே ம்மா என்றாள். மழுப்பாம சொல்லுடீ என கவிதா கேட்டும் கடைசி வரை பதில் சொல்லவேயில்லை. அன்றைய இரவு மஞ்சுவுக்கு தூக்கம் போனது. அழகா தான் இருந்தான் என அவள் மனம் குளிற தொடங்கியது. அப்படியே தூங்கி போனால். அடுத்த இரண்டாவது நாள் ஜாதகம் பொருந்தமில்லைமின்னு ஜோசியர் சொன்னாரு என மனைவியிடம் சோமசுந்தரம் சொன்னது அறைக்குள் இருந்த மஞ்சுவின் காதில் விழுந்தபோது அவளின் மனம் வெறுமையானது.

    ஜாதகம் பொருந்தி வரலயாம் அண்ணி.

    கல்யாணம்ன்னா அப்படித்தாண்டீ. ஜாகதம் பொருந்தி வந்தாத்தான் அதுக்கப்பறம் பேச ஆரம்பிப்பாங்க என்றாள் கவிதா.

    கட்டிலில் படுத்திருந்த மஞ்சுவின் விம்மி புடைத்திருந்த அவளின் உடல் பாகத்தை ஒரு கை தீண்டீயது. அவளின் இடுப்பில் விளையாடியது. கூச்சத்தில் நெளிந்த இடுப்பிலிருந்து மேல் நோக்கி அந்த கை செல்ல சடாரென முழித்துக்கொண்டாள். வெட்கத்தில் அவளின் முகத்தில் ஒரு நாணம். மீண்டும் படுத்தபோது உடல் சூட்டில் உறக்கம் வரவில்லை. தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டுகிடந்தாள். காலை அறையை விட்டு எழுந்து வெளியே வந்தவள் அம்மா இன்னைக்கு வெள்ளிக்கிழமை சாயந்தரம் கவிதா அண்ணியோட நான் கோயிலுக்கு போயிட்டு வந்துடறன்ம்மா.

    இன்னைக்கு சாயந்தரம் உன்ன பொண்ணு பாக்க வர்றாங்கடா. நீ கோயிலுக்கு போனா லேட்டாகிடும் அடுத்தவாரம் போய்க்கடாம்மா.

    மஞ்சுவின் மனதில் மீண்டும் ஒரு குறுகுறுப்பு. காமாட்சி தாயே இப்பவாவுது ஜாதகம் பொருந்தி வரனும் என வேண்டிக்கொண்டால். எதிர்பார்த்தப்படி சாயந்தரம் பெண் பார்க்க ஒரு கூட்டம் வந்திருந்தது. பையன் பேரு சரவணன் என புரோக்கர் மணி அறிமுகப்படுத்த காபி டம்பளர்களுடன் வந்த மஞ்சு மாப்பிள்ளையை பார்த்தவளின் மனதில் முன்ன பார்த்தவனை விட இவன் சுமார் தான் என மனம் கணக்கிட்டது. ஜாதகம் பொருத்தம் வந்தா தாங்க அடுத்து பேச முடியும் என சோமசுந்தரம் சொன்னதும் மாப்பிள்ளையுடன் வந்திருந்தவர் நாங்க ஜாதகம் பாத்துட்டோம் 12 பொருத்ததுல 9 பொருத்தம் வருது. எங்களுக்கு பொண்ணு புடிச்சியிருக்கு. நீங்க ஜாதகம் பாத்துட்டு மணிக்கிட்ட சொல்லிவிடுங்க நாங்க கிளம்பறோம் என கிளம்பினார்கள்.

    ஒரு வாரம் கடந்த நிலையில் அப்பா ஜாதகம் பாக்கறன்னு சொன்னாரு. என்னாச்சி மாப்பிள்ளை வீட்டார்க்கிட்ட என்ன சொன்னாருன்னு தெரியலயே என மனம் கேள்வி மேல் கேள்வி கேட்டது. என்னடீயாச்சி என கவிதா கேட்டபோது தெரியல அண்ணீ.

    செவ்வாய்கிழமை மஞ்சுவும், கவிதாவும் கோயிலை சுத்தி வந்தவர்கள் பிரகாரத்தில் அமரும் போது ஜாதகம் பொருந்தி வந்துச்சாம் ஆனா பையன் குடும்பம் வசதியா இல்லை. என் பொண்ண நான் செல்லம்மா வளர்த்துயிருக்கன். அங்க போய் கஸ்டப்படக்கூடாதுன்னு சொல்லி உங்கப்பா வேணாம்ன்னிட்டாருன்னு சொன்னதா உங்கம்மா சொன்னாங்க என கவிதா சொன்னதை மஞ்சு அமைதியாக கேட்டுக்கொண்டாலும் அவள் முகம் சோகத்தில் இருப்பதை பார்த்து ஏய் இதுக்கெல்லாம் கவலைப்படாதடீ. கல்யாணம் தள்ளி தள்ளி போகுதுன்னா நல்ல புருஷன் அமைவான்னு அர்த்தம்.

    அத விடுங்க அண்ணி என சோகமாக சொல்ல கவிதா தன் மாமியார் பற்றி புகார் சொல்ல ஆரம்பித்தாள்.

    அதற்கடுத்து வந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு போலிஸ்கார மாப்பிள்ளையும், மாலை லெக்சரர் மாப்பிள்ளையும் வந்தார்கள். இப்படி வாரத்தில் இரண்டு, மூன்று முறை துணிக்கடையில் பொம்மைக்கு துணி மாத்தி மாத்தி கொண்டு வந்து நிறுத்தி வைப்பது போல மஞ்சுவுக்கு புடவையை கட்டி காபி டம்பளரை கையில் தந்து அனுப்புவதும் பெண் பார்க்க வந்தவர்கள் முன்னால் உட்காருவதும் இவன் தான் மாப்பிள்ளை என அறிமுகப்படுத்தும் போது மரக்கட்டையாக அமர்ந்திருந்தாள். பக்கத்து வீட்டு அக்கா மாதிரி ராசியில்லாதவன்னு முத்திரை குத்தப்போறாங்க என மனம் புழுங்கி இரவில் தன் அறையில் வெளியே கேட்க முடியாத சத்தத்தில் அழ தொடங்கியிருந்தாள்.

    அண்ணீ அண்ணீ என கவிதாவை சுற்றி வரும் மஞ்சு இப்போதுயெல்லாம் கவிதாவிடமும் சரியாக பேசுவதில்லை. இது கவிதாவுக்கும் புரிந்தேயிருந்தது. நல்ல குடும்பம்மா, மாப்பிள்ளையோட கூட பொறந்தவங்க இல்லாம, வசதியா, அழகா, கவர்மெண்ட் வேலையில இருக்கனம்ன்னு ஒருத்தன்கிட்டயே இவ்வளவும் பாத்தா எப்படி கிடைக்கும். இது இவுங்களுக்கு புரியமாட்டேன்குது. பாவம் அவ என மனதில் நினைத்துக்கொண்டாள் கவிதா.

    அன்றும் அப்படித்தான், மஞ்சுவின் வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடந்தது. மாப்பிள்ளை அருண் செவப்பாகயில்லை என்றாலும் மாநிறமாக அழகாக இருந்தான். மஞ்சு காபி எடுத்துவாம்மா என்றதும் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் காபி தட்டை எடுத்து வந்தாள். பொண்ண நல்லா பாத்துக்குங்க தம்பி. அப்பறம் சரியா பாக்கலன்னு சொல்லக்கூடாது என உடன் வந்த ஒரு பெருசு சொல்ல அருண் அப்போதும் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் தன் முன் நீட்டிய காபி டம்பளரை எடுக்கும் போது ஒரு முறை பார்த்தான். அந்தப்பெண் தன்னை பார்த்தாளா பார்க்கவில்லையா என்பதை அந்த முகத்தில் அருணால் அறிய முடியவில்லை.

    நீயும் பாத்துக்கம்மா என்றதும் வெறுப்பில் இருந்த மஞ்சு கையில் வைத்திருந்த காபி தட்டை எதிரில் இருந்த கண்ணாடி டீப்பா மேல் டமால் என போட சூடான காபி எல்லோர் மீதும் பட்டு தெரிக்க எல்லோரும் அதிர்ச்சியுடன் சடாரென எழுந்திருக்க மஞ்சு கண்ணீருடன் அப்படியே ரூம்க்குள் ஓடிப்போய் கதவை சாத்திவிட்டாள். அருண் உடன் வந்த உறவுக்காரர்களோ, புடிக்கலன்னா புடிக்கலன்னு சொல்ல வேண்டியதுதானே எதுக்கு பைத்தியம் மாதிரி நடந்துக்குது என பேசியபடி கிளம்பி சென்றனர்.

    அதிர்ச்சியான சோமசுந்தரமும், சரளாவும் மஞ்சுவின் அறைக்குள் சென்று என்னாச்சி என கெஞ்சி, கொஞ்சி கேட்டும் எதுவும் பதில் சொல்லவில்லை உம்மென மூடி வைத்திருந்த ஜன்னலையே பார்த்துக்கொண்டுயிருந்தாள். பயந்துப்போய் குடும்ப டாக்டர் மிருதளாவிடம் அழைத்து சென்றனர். மஞ்சுவை செக் பண்ணியவர் உடம்புக்கு ஒன்னும்மில்ல. அவ மனசுல ஏதோ பாரம்மிருக்கு. நான் கேட்டன் எதுவும் சொல்லல. சைக்காடிஸ்ட் டாக்டர் அட்ரஸ் தர்றன் அவுங்களைப்போய் பாருங்க. இதுக்கு அவுங்க ட்ரீட்மெண்ட் தர்றது தான் பெஸ்ட்.

    என்ன டாக்டர் என் பொண்ணு மெண்டல்ன்னு சொல்றிங்களா என லேசான கோபத்தோடு சோமு கேட்க நான் அப்படி சொல்லல. இது மனசு சம்மந்தப்பட்டது. மருந்து மாத்திரையால குணப்படுத்த முடியாது. சைக்காடிஸ்ட்ன்னா ஏன் பயப்படறிங்க. பயப்படமா போங்க. நான் விஷயத்த சொல்லிடறன் நீங்க போய் பாருங்க என அட்ரஸ் தந்தார். மனநல மருத்துவர் டாக்டர் புனிதாவை சந்தித்தனர். நீங்க வெளியில இருங்க என சோமுவையும், சரளாவையும் வெளியே அனுப்பிவிட்டு மஞ்சுவுடன் பேச தொடங்கினார்.

    உன் வயசு பொண்ணுங்க எல்லாம் ஜாலியா இருக்கும்போது நீ மட்டும் ஏன் டல்லா இருக்கற ?.

    எனக்கு யாரையும் புடிக்கல மேடம்.

    அதனால தான் கோயில்ல ஆடுகளுக்கு மஞ்சத்தண்ணி தெளிக்கற மாதிரி பொண்ணு பாக்க வந்தவங்க மேல நீ தண்ணி தெளிச்சியா?.

    அதைக் கேட்டு லேசாக சிரித்த மஞ்சு. அவுங்க மேல கோபம்மில்ல. எங்கப்பா மேல தான் கோபம். அத அவர் மேல காட்ட முடியல. அதனால தான் அவுங்க மேல காட்ட வேண்டியதா போச்சி.

    அப்பா மேல அப்படியென்ன கோபம் ?.

    பொண்ணு பாக்க இதுவரை அப்பா இருபது மாப்பிளைங்கள வரவச்சிட்டாரு. சும்மா எங்கிட்ட புடிச்சியிருக்கான்னு கேட்கறாரு. ஆனா அவர் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்காறான்னு தான் பாக்கறாரு. ஓவ்வொரு முறை இவர் தான் மாப்பிள்ளை இவர் தான் மாப்பிள்ளைன்னு சொல்லும் போது எனக்கு கூசுது. நிறைய மாப்பிள்ளை வந்துட்டு வந்துட்டு போறதால நானும் பக்கத்து வீட்டு அக்கா மாதிரி ராசியில்லாதவளோன்னு நினைக்க தோணுது. கோயிலுக்கு, மார்க்கெட் போகும்போது தெரிஞ்சவங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாங்களே என்ன ஆச்சின்னு கேட்கும் போது பதில் சொல்ல முடியல. அப்பாவுக்கு பிடிச்சா அம்மாவுக்கு புடிக்கல, அம்மாவுக்கு புடிச்சா அப்பாவுக்கு புடிக்கல. இரண்டு பேருக்கும் புடிச்சா ஜாதகம் சரியில்ல, பையன் வீட்ல வசதி குறைவு, சம்பளம் குறைவா வாங்கறான்னு ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டி கழிக்கறாங்க. அந்த கோபத்தல தான் அப்படி நடந்துக்கிட்டன் என்றவள் ரொம்ப செல்லமா வளக்கறன்னு வெளியில நண்பர்கள உருவாக்கிக்க கூட விடல. மனசுல இருக்கறத பகிர்ந்துக்கற அளவுக்கு கூட நெருக்கமான நண்பர்கள் இல்லாம போய்ட்டாங்க என கண்ணீர் விட.

    அழுது முடிக்கட்டும் என காத்திருந்த டாக்டர் புனிதா அழுகை சத்தம் குறைந்ததும், மஞ்சு உன்ன மாதிரி தான் இன்னைக்கு நிறைய பொண்ணுங்க மனசுல பாரத்தோட இருக்காங்க. அப்பா அம்மா சொன்னா கட்டிக்கறன்னு சொல்லதா. வாழப்போறது அவுங்கயில்ல, நீ தான் வாழப்போற. பொண்ணு பாக்க வர்றங்கக்கிட்ட உங்க அப்பா அம்மா பேசறத விட நீ பேசு இரண்டு பேருக்கும் ஒத்துப்போனா மட்டும் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லு. கல்யாணம் பண்ணிக்க பணம் முக்கியம்மில்ல. வாழ்க்கைக்கு முக்கிய தேவை புரிதல் தான். அடுத்த முறை பொண்ணு பாக்க யார் வந்தாலும் தெளிவா இரு. வாழ்க்கைங்கறது இப்பத்தான் தொடங்குது. அவுங்க அப்படி சொல்லுவாங்க, இவுங்க இப்படி சொல்லுவாங்கன்னு நினைச்சி கவலைப்படாத. நீங்க உங்களுக்காக வாழப்போறிங்க. அதனால ஒரு பிரச்சனை வந்தா தைரியமா எதிர்க்கொள்ளனும். அப்பத்தான் இந்த உலகத்தல வாழ முடியும். படிச்சியிருக்க எதையும் யோசிச்சி முற்போக்கா சிந்திச்சிப்பாரு. அப்பா அம்மா சொல்றத அப்படியே ஏத்துக்காத. அதுக்காக அவுங்க சொல்றத உதாசினமும் படுத்தாத. நீ பேசலன்னா யாருக்கும் எதுவும் தெரியாது. பேசு அப்பத்தான் உன் மனசுல இருக்கறது தெரியும்.

    பேச விடமாட்டேங்கிறாங்களே?.

    உடனே பேசவிடுவாங்களா. பெண்கள அடக்கி வச்சியிருக்கற சமூகத்தல உடனே பேசவிட்டுடுவாங்களா என்ன?. பேச முயற்சி செய். வுhழ்க்கை வாழப்போறது நீ தான் அதனால நீ தான் முடிவு எடுக்கனும் என்றபோது மஞ்சுவின் மனதில் ஒரு நம்பிக்கை வந்திருந்தது. அது முகத்தில் தெரிந்ததும் மஞ்சுவின் அப்பாவையும் அம்மாவையும் உள்ளே அழைத்தார்.

    என்ன டாக்டர் பிரச்சனை ?.

    நீங்க தான் பிரச்சனை. பொண்ணு மேல ரொம்ப பாசம் வச்சியிருக்கிங்க. அது எல்லா பெற்றோர்களும் செய்யறதுதான். ஆனா நீங்க உங்க பொண்ணு வாழ்க்கைய பத்தி அளவுக்கு அதிகமா பயப்படறிங்க. உங்க மேல அவுங்க வச்சியிருக்கற மரியாதைய, பாசத்த நீங்க தவற பயன்படுத்தறிங்க. வாரத்துக்கு இரண்டு, மூனு பேரை அழைச்சி வந்து இவர் தான் மாப்பிள்ளைன்னு அறிமுகப்படுத்தினா எப்படிங்க ஒரு பொண்ணால சகிச்சிக்க முடியும். உங்க பொண்ணு மனசுல என்னயிருக்குன்னு பாருங்க. அவுங்க தான் வாழப்போறவங்க. அவுங்க முடிவு எடுக்கட்டும். நீங்களா ஒரு முடிவு எடுத்து இதுதான் சரியா இருக்கும்ன்னு நம்பாதிங்க. ஜாதகம், பொருத்தம் பாக்கறிங்க அது உங்களோட நம்பிக்கை. இது மாடர்ன் உலகம் இங்க இன்னமும் ஜாதகம் சொல்றத உண்மைன்னு நம்பிக்கிட்டு இருக்காதிங்க. பல தம்பதிங்க வாழ்க்கையில ஜாதகம் பொய்ய போயிருக்கு. அதனால உங்க பொண்ணு சந்தோஷமா இருக்கனும்ன்னா மாப்பிள்ளைய தேர்ந்து எடுக்கறதல உங்க பொண்ணோட பங்கு அதிகமா இருக்கட்டும். அதுதான் அவுங்க வாழ்க்கைக்கு நல்லது என சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார்.

    மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது சோமுவின் மனம் சின்ன புள்ள அதுக்கு என்ன தெரியும் என பேசியது. மஞ்சுவின் மனம் தெளிவாக இருந்தது.

    ——————

    Share
  • பாடுபொருள்!

     

    மேகலா இராமமூர்த்தி

     

    (எழுது)கோலைக் கையில் பற்றிய படியே

    கவிபாடு பொருள்தனைச் சிந்தித் திருந்தேன்!

    காலைக் கதிரோன் ஒளிமுகம் காட்டி

    ஏந்திழையே எனைப் பாடுக என்றான்!

     

    காலை ஆட்டித் தூங்கும் குழந்தையோ

    நானே கவிதை அறிகிலை நீஎன,

    கோலம் போட்டு நிமிர்ந்த அன்னையின்

    முறுவல் கூடக் கவிதையாய்த் தோன்றச்

    சாலை யோரம் நின்ற மரங்கள்

    மங்கையே என்னைப் பாடுவாய் என்றன!

     

    சேலை அணிந்து சென்ற பெண்ணோ

    நடக்கும் கவிதை(நான்) எனைப் பாடென்றாள்!

    வாலை ஆட்டியே சென்ற நாயும் – என்

    நன்றி குணத்தைப் போற்றிப்பா டென்றது!

     

    வேலையில் மூழ்கிப் போனத னாலே

    கவியெழு திடநான் மறந்தஅவ் வேளையில்

    மாலை மங்கி இருளும் வந்தது

    கோலநிலவும் குளிர்முகம் காட்டியே

    வாலைக் குமரியே எனை மறந்தனையே….

    வடித்திடு கவியொன்று என்மேல் என்றது!

     

    இயற்கை அன்னையின் இனிய அழகில்

    பாடு பொருளுக்கோர் பஞ்சமு மில்லை!

    வியக்க வைத்திடும் அவளின் படைப்பில்

    ஒவ்வொரு பொருளும் கவிதையே அன்றோ!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 67

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    “மயங்கு திணைநிலை வரி அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல்”
    (37)

     

    நல்ல முத்துகளால் செய்த அணிகளை அணிந்த
    நன்மை பொருந்திய பவளத்தால் ஆன மேகலை அணிந்த
    செந்நெல் பயிரையுடைய மருத நிலம் தோறும்
    அலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய
    நெய்தல் நிலத் தலைவனே!

    புன்னை மரங்களடர்ந்த சோலையதனில்
    வலிய மீன்கொடி உடைய மன்மதன் ஏவிய அம்புகளால்
    என் மேனியில் மேவிய புதிய புண்கள்
    என்னை அடையாளமே கண்டுகொள்ள முடியாவண்ணம்
    என் அழகதனை மறைத்துதான் விளங்குகின்றன.
    இதை என் அன்னையவள் அறிந்தால்
    என்னதான் நான் செய்வேன்?!

    (38)

    அழகிய பவளவாய் திறந்து
    கடல் முத்து நிகர்த்த புன்னகை புரியும்
    பரதவர் சேரியில் வலைகள் உலரும்
    அலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய
    நெய்தல் நிலத் தலைவனே!

    மழைக்காலத்து மலரும் பீர்க்கம்பூக்களின்
    நிறமொத்த மேனியளாய்ப்
    பசலை படர்ந்த என் மேனி
    பொன்னிறத்தில் பொலிகின்றது.
    வெறியாட்டு நிகழ்த்தி தெய்வமது வழிபட்டு
    இக்கொடுமை செய்தவர் யார் என
    என் அன்னையவள் ஆராய்ந்து அறிந்தால்
    என்னதான் நான் செய்வேன்?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/diploma/a031/a0312/html/a0312103.htm

    Share