தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் சார்பாக மகாசபைக் கூட்டம்

1

பத்திரிக்கைச்செய்தி

21.04.13 ஞாயிற்றுக்கிழமை  தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் சார்பாக மகாசபைக் கூட்டம்

தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் சுமார் 90 சதவீதத்தினர் பருத்தி நூலை வைத்துதான் நெசவு செயது வருகிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் விசைத்தறித் துறை பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது.  அதன்மூலமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஜவுளித் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாகக் கொண்டுவர வேண்டுமென்று அதன் தலைவர் எம்.எஸ். மதிவாணன் அவர்கள் கருத்து தெரிவித்தார்.

சமீபகாலங்களில் பல இன்னல்களை விசைத்தறி தொழிலாளர்களும் அதை சார்ந்த மற்ற தொழிலாளா;களும் சந்தித்த போதிலும் அவ்வப்போது ஜவுளித் துறை செயலர் மற்றும் அமைச்சரை அணுகி எங்களது குறைகளை கோரிக்கையாக சமர்ப்பித்து இருந்தோம்.  ஆனால், குறிப்பாக ஆறு மாதங்களாக  அமுல்படுத்தப்படாமல் இருந்த 11 ரக ஒதுக்கீட:டுச் சட்டத்தை காரணம் காட்டி விசைத்தறித் தொழிலாளர்களை அதிகாரிகள் அச்சுறுத்தியும் கைது செய்து விடுவோம் என்று கூறி வருவதனால் விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்ய முடியாமல் மிகவும் பயந்து உள்ளார்கள்.  இந்த பதினோரு ரக சட்டத்தில் வேஸ்டி, சேலை, துண்டு, சர்டிங் போன்ற முக்கிய ரகங்கள் இடம் பெற்று உள்ளது.  விசைத்தறியில் இந்த ரகங்கள் எல்லாம்  அதிகமாக தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது.  ரகங்களின் உற்பத்தியை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என்றால் அதை ஈடு செய்வதற்கு கைத்தறியினால் முடியாதது மட்டுமல்லாமல் கைத்தறியில் செய்தால் அதனுடைய விலை மிகவும் அதிகமாகிவிடும்.  தேவைக்கேற்றாற்போல் துணிகள் கிடைக்காது. இதனை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் இந்த சட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதை தாமதித்து வந்தது.  ஆனால் சில இடங்களில் சில அதிகாரிகள் விசைத்தறிக் கூடங்களுக்குச் ;சென்று சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று சொல்லி அச்சுறுத்தி வருகிறார்கள்.  மேலும் காட் சட்டத்தின்படி உற்பத்தி செய்வதற்கு தடை இல்லை என்று இருக்கிறது.  வெளிநாட்டிலிருந்து ஒதுக்கப்பட்ட ரகங்களை இறக்குமதி செய்யலாம் என்றும் அரசு சட்டத்திலும், ஒப்பந்தத்திலும் கூறப்படுகிறது.  அப்படியிருக்கும்போது இந்திய நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் உபயோகப்படுத்தப்டும் ரகங்களை நெய்யக்கூடாது  இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு இயற்றியது.  அதன்மூலம் விசைத்தறியில் சாதாரண மக்கள் அணியும் துணிகளான வேஸ்டி, சேலை, துண்டு, சர்டிங் போன்ற ரகங்களை நெய்தால் விசைத்தறியாளர்கள் மீது நடவடிக்கைக எடுக்கப்பட்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்று சட்டம் கூறுகிறது.  இதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடுத்து இந்த சட்டத்தை தடை செய்தோம்.   பின்பு உச்சநீதி மன்றத்திற்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டு இந்த சட்டத்தை எந்த ஒரு தொழிலும் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் இதற்கு ஒரு ஆலோசனைக்குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் கூறியது.  ஆனால் இதற்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் விசைத்தறியாளர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.  அவர்களுடைய பாதிப்பை மத்திய அரசு சிறிதும் கவனம் கொள்ள வில்லை.  எங்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

..2..
எந்த மாநிலத்திலும் இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதில்லை.  ஆனால், தற்போது கோவை, திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சில அதிகாரிகள் விசைத்தறிப் பட்டறைக்கு வந்து விசைத்தறியாளர்களை மிரட்டி அச்சுறுத்தி வழக்கு தொடுத்து வருகிறார்கள்.  இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தினால் தமிழ்நாட்டிலுள்ள 3 இலட்சம் தறிகளினுடைய உற்பத்தி நிறுத்தப்பட்டு விடும்.  லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்.  பெருமளவில் உற்பத்தி குறையும்.

ஆகையினால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் ஜவுளித்துறை அமைச்சர், செயலர் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் எங்களது கோரிக்கையினை பரிசீலிக்குமாறும மனுவினை சமர்ப்பித்து உள்ளோம் என்று தமிழ் நாடு விசைத்தறி சம்மேளத்தின் தலைவா; எம்.எஸ். மதிவாணன் தெரிவித்தார்..

இருப்பினும் மென்மேலும் விசைத்தறி நெசவாளர்கள் அச்சுறுத்தப்படுவதினால் நமது கோரிக்கையினை அரசாங்கத்திற்கு தெரிவிப்பது மட்டுமின்றி விசைத்தறி தொழிலுக்கு நல்ல திட்டங்களை வழங்கி காப்பாற்றுமாறும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எங்களது கோரிக்கையினை தெரிவிக்க உள்ளோம்.  இதன் தொடர்ச்சியாக வருகின்ற 21.04.13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சோமனூரில் அமைந்துள்ள லட்சுமி மகால் கல்யாண மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் மகாசபைக் கூட்டத்தினைக் கூட்ட உள்ளோம்.  இதுசமயம் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், விசைத்தறி நெசவாளர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளார்கள் என்றும் தலைவர் எம்.எஸ். மதிவாணன் தெரிவித்தார்..

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் சார்பாக மகாசபைக் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.