Blog

  • தொலைத்தது (சிறுகதை)

    தொலைத்தது (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    அன்று பிரேமாவைப் பார்த்ததும் ஓடி ஒளிந்துகொள்ளத் தோன்றிற்று. அவளுடைய கல்யாணத்திற்கு நேரில் வந்து, எவ்வளவு வற்புறுத்தி அழைத்திருந்தாள்!

    கோயிலில் நடந்த அந்த வைபவத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு என் உடல்நிலைமேல்தான் பழி போடவேண்டும். சொன்னால் ஏற்றுக்கொள்வாளா?

    `இதெல்லாம் இயற்கை. தலைக்கு ஜலம் விட்டுக்கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே?’ என்று வாதாடுவாள் அந்த சண்டைக்காரி.

    மறைவான இடம் எங்கு இருக்கிறது என்று நான் விழித்துக்கொண்டிருந்தபோதே அவள் என்னைப் பார்த்துவிட்டாள். கழுத்தில் அழுக்கேறாத மஞ்சள் கயிறு.

    அந்த புது மணப்பெண் எதுவும் கேட்குமுன்னரே நான் முந்திக்கொண்டேன். “ஸாரி பிரேமா. ஒன் கல்யாணத்துக்கு வரமுடியல”.

    பிரேமா கலீரென்று சிரித்தாள். பேரழகியான அவள் முகத்திற்கு இன்னும் மெருகேற்றியது அந்தச் சிரிப்பு.

    “கல்யாணம் நடந்திருந்தாத்தானே!” சிரிப்பு பலத்தது.

    “பின்னே..?” என்ன கேட்பது, எப்படிக் கேட்பது என்ற தர்மசங்கடத்துடன் அவள் கழுத்தையே பார்த்தேன்.

    “சாயந்திரமா ஒங்க வீட்டுக்கு வந்து, விவரமா சொல்றேன், பானு. சாப்பாட்டு வேளை முடிஞ்சதும், ஒடனே வேலைக்கு வராட்டா, அந்த மானேஜர் பிசாசு கத்துவான்!”

    யாருக்கும் அடங்காத இவளை அவ்வளவு தூரம் பயமுறுத்தி வைத்திருக்கும் அந்த `மானேஜர் பிசாசைப்’ பார்க்க வேண்டும் போல் இருந்தது எனக்கு.

    பதினேழு வயதிலேயே உத்தியோகம் பார்த்துச் சம்பாதிக்க வேண்டும் என்று பிரேமாவுக்கு என்ன கட்டாயம்?

    `பொறுமையாக இரேன். அவள்தான் வீட்டுக்கு வந்து சொல்லப்போகிறாளே!’ நிதானமின்றி அலைந்த மனதை வைதேன்.

    பிரேமாவும் நானும் பேசிக்கொண்டிருந்தபோது, `இந்த தறுதலையோட என்ன பேச்சு!’ என்று அம்மா உள்ளே முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்.

    பிரேமாவின் காதிலும் விழுந்திருக்கும். ஆனால் யார் என்ன சொன்னாலும் அதனால் பாதிக்கப்படாததுபோல் நடந்துகொள்வாள்.

    “என்னைக் கேக்காம, அப்பா அந்தக் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டார். அந்தக் கறுப்பனை யார் கட்டிப்பாங்க! அதான், கல்யாணத்துக்கு மொதநாள் அவனோட அண்ணனோட ஓடிப்போயிட்டேன்!” மீண்டும் சிரிப்பு. “அவனோட பேர் என்ன தெரியுமா? ரெமோ! முழிக்காதே. ரெங்கசாமி மகன் மோகன்!”

    எனக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியவில்லை.

    “எனக்கு ஒங்கிட்ட மனம்விட்டுப் பேச முடியுது, பானு. நாம்ப சின்ன வயசிலேருந்து பழகினவங்க இல்லியா? அதான்,” என்றவள் தொடர்ந்தாள். “ரெமோவுக்கு இன்னும் படிப்பு முடியல. நான்தான் வேலை செஞ்சு சம்பாதிக்கிறேன்”.

    ஒரு வழியாக என் குரல் வெளிப்பட்டது. “ஒங்க வீட்டிலே?”

    பதிலுக்கு, இடி இடியென்று சிரித்தாள் பிரேமா. “நாங்க பண்ணின காரியத்துக்கு எந்த வீட்டிலே சேர்ப்பாங்க?”

    அதன்பின், பத்து வருடங்கள் கழித்துத்தான் நான் பிரேமாவைப் பார்த்தேன். அவளுடைய சிரிப்பு மட்டும் மாறாது, அப்படியே இருந்தது.

    “ரெமோவுக்குப் படிப்பு முடிஞ்சு, நல்ல வேலை கிடைச்சுடுச்சா?” நிறைய தங்க நகைகள் அணிந்திருந்தவளைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் அப்படி ஒரு கேள்வி எழுந்தது.

    “யாரு? ஓ, அவனா!”

    அப்படி என்ன அலட்சியம்?

    “இப்போ நான் அவனோட இல்லே”. இன்னொரு அதிர்ச்சியை அளித்தாள்.

    `நல்லவேளை, அம்மா அருகில் இல்லை, இவள் பேசுவதைக் கேட்க!’ என்று சிறிது நிம்மதி எழுந்தது எனக்குள்.

    “நான் முந்தி வேலை செஞ்சிட்டு இருந்தேன் பாரு, அந்தக் கடை முதலாளி என்மேல ஆசைப்பட்டார். `உன்னை ராணிமாதிரி வெச்சுக்கறேன்’னார். எதுக்காக ரெமோவுக்கு உழைச்சுக் கொட்டறது?”

    “இன்னொரு கல்யாணமா?” என் குரல் எனக்கே கேட்கவில்லை.

    “போதும். ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் பட்ட அவதி! `ஒனக்குப் பிறந்ததை நீயே வெச்சுக்கடா’ன்னுட்டு, என் மகனையும் அவங்கிட்ட குடுத்துட்டு, நான் ஜாலியா வெளியே வந்துட்டேன்!”

    இதற்கும் ஒரு சிரிப்பா?

    நான் முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டேன்.

    வெளிநாட்டில் பல வருடங்கள் கழித்துவிட்டு, அம்மாவைப் பார்க்கத் திரும்பி வந்தேன்.

    “பிரேமாவைப் பாத்தியா? எப்படிம்மா இருக்கா?” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

    தலையைத் திருப்பிக்கொண்டு உள்ளே போனாள் அம்மா. காதில் விழவில்லை என்று நான் நினைத்துக் கொள்ளவேண்டுமாம்!

    ஒரு கதையின் முடிவைத் தெரிந்துகொள்ளாமல் போனதுபோல் தவிப்பாக இருந்தது எனக்கு.

    சொல்லி வைத்தாற்போல், அவளே என்னைத் தேடி வந்தாள்.

    “ஒங்கம்மாவை மார்க்கெட்டில பாத்தேன். நீ வந்திருக்கிறதா சொன்னாங்க,” என்று ஏதோ ஒப்பிப்பதுபோல் சொன்னாள்.

    இளமையின் உற்சாகம் எப்போதும் நிலைத்திருக்குமா? அவளுக்கும் இப்போது ஐம்பது வயதாகி இருக்காது?

    “எங்கேயாவது வெளியே போகலாமா, பானு?” என்றாள் மெள்ள.

    எனக்குப் புரிந்தது. அம்மா காதில் விழக்கூடாது!

    பிறர் நினைப்பதைப்பற்றி இவள் என்று கவலைப்பட்டிருக்கிறாள் என்ற ஆச்சரியமும் எழாமலில்லை.

    உணர்ச்சியற்ற குரலில், “ரெமோ செத்துப்போயிட்டான்,” என்று ஆரம்பித்தாள்.

    என்னதான் அவனை விட்டுப் பிரிந்திருந்தாலும், சட்டப்படி அவள் இன்னும் அவனுடைய மனைவிதானே! அந்த துக்கமோ?

    “எனக்கு யாரும் சொல்லிவிடலே. பேப்பரில பாத்துத் தெரிஞ்சுக்கிட்டேன். இறுதி யாத்திரை இந்த விலாசத்திலே, இத்தனை மணிக்குன்னு போட்டிருந்தாங்க. ரயில்ல அங்க போனேன்”. அதன்பின் நீண்ட மௌனம். அவள் பார்வை எங்கோ நிலைத்திருந்தது.

    “மொதல்ல என் மகனை எனக்கு அடையாளம் தெரியல. எப்பவோ, ரெண்டு வயசில பாத்தது. அவங்கப்பாமாதிரியே அழகா இருந்தான். அதை வெச்சுத்தான்..!”

    நான் சற்றும் எதிர்பாராவிதமாக பிரேமா விம்ம ஆரம்பித்தாள்.

    “அவன் எல்லார்கிட்டேயும் என்ன சொன்னான், தெரியுமா பானு? `எனக்கு ஒரு அம்மா இருக்கிறதே தெரியாது,’ அப்படின்னான். எங்கிட்ட வந்து, `இனிமே இங்க வராதீங்க,’ன்னு கறாரா..! என்னால அவனுக்கு அவமானமாம்! பெத்த தாய்னுகூட பாக்காம என்னை விரட்டி அடிச்சுட்டாண்டி!”

    பெரிய குரலெடுத்து அழுதவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது?

    `ஒரு தாயாக நீ அவனுக்கு என்ன செய்தாய்?’ என்று கேட்கத்தான் தோன்றியது.

    ஆனால், என் கை வாயை முந்திக்கொண்டது. அவள் முதுகைப் பரிவுடன் தடவிக்கொடுத்தது.

    அடுக்கடுக்கான சங்கிலிகள்மேல் கை பட, பேச்சை மாற்றும் எண்ணத்துடன், “இவ்வளவு நகை போட்டுக்கிட்டு வெளியே வரலாமா, பிரேமா? தொலைஞ்சுடாது?” என்று செல்லமாகக் கடிந்தேன்.

    `எதை எதையோ தொலைத்துவிட்டேனே! நகை என்ன, கேவலம் உயிரில்லாத சாமான்!’ என்று எண்ணியிருப்பாள். இல்லாவிட்டால், அப்படிக் கதறியிருப்பாளா?

    பி.கு: எனக்குத் தெரிந்த மூன்று பெண்களின் குணாதிசயங்களை, அவற்றால் ஏற்பட்ட அனுபவங்களை, பிரேமா என்கிற ஒரு கதாபாத்திரத்துக்குள் புகுத்தியிருக்கிறேன்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 32

    கதை வடிவில் பழமொழி நானூறு – 32

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 65

    மனங்கொண்டக் கண்ணும் மருவில செய்யார்
    கனங்கொண்(டு) உரைத்தவை காக்கவே வேண்டும்
    சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க
    ‘இனங்கழு வேற்றினார் இல்’. 

    பழமொழி – ‘இனங்கழு வேற்றினார் இல்’

    பக்கத்துவீட்டிலிருந்து பலத்த சத்தம். எட்டிப் பார்த்தேன்.

    எல பொசகெட்ட பயலே. சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ உம்பாட்டுக்கு போய்க்கிட்டிருந்தா எப்டி? ஆளு மட்டும் பனமரம் கணக்கா வளந்து நிக்க. உங்க சித்தப்பந்தான் புத்திகெட்டு அலையுதாம்னா உனக்கெங்கல போச்சு புத்தி. அவன் பேச்சக்கேட்டு மண்டை கொளம்பி கிளம்பி போயிடுச்சோ. இங்ஙனகூடி அரிவாளத் தூக்கிட்டுத் திரிஞ்ச…. பொறவு உனக்கும் எனக்கும் ஒட்டுமில்ல ஒறவுமில்லனு சொல்லிப்புடுவேன். கஞ்சிகுடிக்க நாளமுன்னயும் வாசப்படி மிதிக்கவொட்டாம ஆகிப்போவும். நாதியத்து தெருவுல நிப்ப. மரியாத கெட்டுப்போவும். போலீஸ் கேசு ஆகிப்போச்சுதுன்னா குடும்பத்தோட நாண்டுகிட்டு நிக்க வேண்டியதுதான். வரமுறை தெரியாம சிலுப்பிக்கிட்டு அலையாத. ஆமாம்… சொல்லிப்புட்டேன். தலைமுடியை கொண்டையிட்டுக்கொண்டே கத்திக்கிட்டிருக்கா வெள்ளைச்சீல ஆச்சி.

    இந்தக் கிராமத்தில் பெரும்பாலும் இந்தச் சத்தங்கள் சாதாரணம்தான். ஒண்ணு வயல்வரப்பு பிரச்சினையா இருக்கும். இல்ல மாடு பயிர மேஞ்சிருக்கும். ஆனா இவங்க பிரச்சின வேற மாதிரியில்ல தோணுது. சரி பொடிநடையா போயி பெட்டிசன் சீனுகிட்ட விசாரிச்சா சேதி தெரிஞ்சுபோகும்.

    என்னய மாதிரி அரசாங்க வேலை பாத்துட்டு ரிடையர்மெண்ட் கு அப்பறம் கிராமத்துல குடியேறினவங்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்ல. மாசம் பொறந்தா பென்சன் வரும்.அத வச்சி காலத்த கழிச்சிர வேண்டியதுதான். பாவம் இந்த உழைப்பாளிகள்.

    மழை பெய்யலேன்னா பிரச்சினை. அதிகமா பெய்தா பிரச்சினை. பூச்சிகளால பிரச்சினை. இப்ப புதுசா வெட்டுக்கிளியாலயும் பிரச்சினையாம். நேத்துதான் பொலம்பிக்கிட்டிருந்தா இந்த ஆச்சி. இப்ப இந்தக் கத்து கத்திக்கிட்டு நிக்கறா. அவளோட செல்வத்திருமகனுக்கு சரியா படிப்பு வரல. அவனும் விவசாயந்தான் பாக்கறான். மூக்குக்கு மேல கோபம் மட்டும் வந்திரும். ஊர்ல இருக்குற எல்லாப் பிரச்சினையையும் தலைக்கு மேல போட்டுக்கிட்டு முன்னால போய் நிப்பான். இப்ப அப்டி என்னத்த இழுத்துண்டு வந்து நிக்கறானோ தெரியல. சீனு வாசத்திண்ணையிலதான் உக்காந்திருக்கான். மெதுவாக பேச்சுகுடுத்தேன். சீனு விஷயத்தைக் கக்க ஆரம்பிச்சான்.

    அது ஒண்ணுமில்ல. நம்ம சீனித்தேவர் பொண்ணு அதான் டவுண் காலேஜ்ல படிக்கறாளே அவ நம்மஊர் பஸ்டாண்டுல நின்னு யாரோ ஒரு பையன்கூட பேசிண்டிருந்தா போல. அதுக்குத்தான் ஊரே இந்தக் குதி குதிக்கிறது.

    சமஞ்ச பிள்ள இப்டிச் செய்யலாமா. குனிஞ்ச தலநிமிராம காலேஜுக்கு போனேம் வந்தேம்னு இருக்காம இப்டி எங்க குடும்ப மானத்த வாங்கிப்புட்டாளேன்னு அவர் சம்சாரம் வாசல்ல நின்னு புலம்பிக்கிட்டு இருந்தாங்க. உள்ள சொக்காரன், பங்காளினு ஒரு கூட்டமே அந்தப்பொண்ண சிபிஐ ரேஞ்சுல விசாரிச்சிண்டிருக்கா. அதுல உங்க பக்கத்து ஆத்துப் பிள்ளையாண்டான் அரிவாள வேற எடுத்துண்டு போறான். என்ன நடக்கப் போறதோ.

    அக்கம்பக்கத்துல கூடப்படிக்கிற ரெண்டு பொண்ணுகளும் போய் அந்தப்பையனும் நாங்களும் ஒரே பாடத்த எடுத்துப் படிக்கறதால பாட சம்பந்தமா ஏதோ கேட்டான். அவ்வளவுதான்னு சொல்லியும் யாரும் கேக்கறதா இல்ல.

    ஏண்டா சீனு ‘இனங்கழு வேற்றினார் இல்’ ங்கற பழமொழியக் கேள்விப் பட்டிருக்கியோ. இது பழமொழி நானூறுல முன்றுரை அரையனார் சொன்னது. அதுல அவர் அரசனா இருந்தாலும் பெரும்பாலான மக்கள் சொல்லறதக் கேக்காம என் சட்டம் இப்டித்தான் சொல்றது அதன்படிதான் நடப்பேன்னோ அல்லது எதுத்து நிக்கற எல்லாரையும் கழுவிலேற்றி கொன்னுடுவேன்னோ சொன்னதா யாருமில்லனு சொல்லியிருக்கார். சட்னு ஞாபகம் வந்ததால சொன்னேன்.

    இந்த மாதிரி சட்டத்தைக் கையில எடுத்துண்டு எடுத்தேன், கவிழ்த்தேன்னு நடந்துக்கிறவாகிட்ட என்னன்னு போய்ப் பேச. அதுக்காக சும்மா உக்காந்து பாத்துண்டும் இருக்க முடியாது. நான் பேசிக்கொண்டேபோக…

    சொந்தப்பொண்ண சந்தேகத்தின் பேர்ல கவுரக்கொலையெல்லாம் பண்றது தப்புனு தேவர்கிட்ட எடுத்துச் சொல்லற தைரியம் உங்க பக்கத்து ஆத்து ஆச்சிக்குத்தான் உண்டு. வாரும் சட்னு போய் ஆச்சியக் கூட்டிண்டு வரலாம். சீனு சொல்ல நானும் எழுந்து கிளம்பினேன்.

    பாடல் 66

    புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின்(று) உணர்கிற்பார்
    வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
    புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை
    ‘இன்சொல் இடர்ப்படுப்ப தில்’.

    பழமொழி- ‘இன்சொல் இடர்ப்படுப்ப தில்’

    உம் பொண்ணு ஜனனிக்காக இங்க வந்ததில நிறைய பேரோட நிறம் வெளுக்கறது தெரியுது. சொல்லிக்கொண்டே நடந்து கொண்டிருக்கிறார் என் கணவர்.

    அம்மா… அப்பாவ அங்கயெல்லாம் போகச் சொல்லாதீங்க. அந்த சிடுமூஞ்சி ஹெச் எம் பாத்தாங்கன்னா கேள்வி கேட்டே உண்டு இல்லனு பண்ணிடுவாங்க.

    மகளின் ஆதங்கத்துக்குப்பின் கவனிக்க ஆரம்பிச்சேன். இவர் எதுக்கு குட்டி போட்ட பூனை மாதிரி சுத்திக்கிட்டு இருக்காரு. போகிற போக்குல ஏதோ துணியில சாயம் வெளுத்தமாதிரி நிறம் வெளுக்குதுனு வேற சொல்றாரு. நாம இங்க வந்த வேலைய கவனிக்காம எதுக்கு இப்ப இந்த நடை. ,

    யோசித்துக்கொண்டிருக்கும்போதே கதவைத் திறந்து வெளியில் வந்த அந்த மஞ்சள் புடவைக்காரி. ..ஜனனி 10 ‘பி’ உள்ள வாம்மா. நாற்காலியிருந்து எழுந்த என்னை இப்ப ஸ்டூடன்ட் மட்டும்தான் உள்ள வரணும். நாங்க கூப்பிடும்போது நீங்க வந்தா போதும். ஜனனியோட அப்பா வந்திருக்கார் இல்ல. கன்பார்ம் செய்துகொண்டு உள்ளே சென்றுவிட்டாள். கதவும் அடைக்கப்பட்டுவிட்டது.

    சாவகாசமா ஜனனி அப்பா வந்து விசாரிக்கிறார். பொண்ண எங்க. நீ மட்டும் உக்காந்திருக்க.

    அவளை உள்ளே கூப்பிட்ட தகவலைச் சொன்னவுடன் சரி எழுந்திரு. ஒரு ரவுண்ட் இந்த ஸ்கூல சுத்திக்காட்டறேன். சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்துவிட்டார். பக்கத்து நாற்காலிகள் எல்லாம் விநோதமாக எங்களைப் பார்க்க ஆரம்பித்தன.

    தலையெழுத்து. இந்த மனுசன்கூட. ஜனனி இரண்டாம் வகுப்புலேந்து இங்கதான் படிக்கறா. பாதிக்குமேல கட்டிடங்கள் என் கண் முன்னாலதான் கட்டினாங்க. இந்த ஸ்கூலோட மூல முக்கு எல்லாம் எனக்கு நல்லாத் தெரியும். நீங்க தான் ஒருதடவ கூட வந்ததில்ல. சொல்லிக்கொண்டே அவரைத் திரும்ப அழைத்துவர பின்னாலேயே போகிறேன்.

    அனைவரின் கண்களும்எங்கள் பக்கம் என்பதால் இப்ப என்ன அவசரம். வந்த வேலய முடிச்சுட்டு குடும்பமா ஊர்வலம் போகலாம். இப்ப வந்து பேசாம இந்த நாற்காலில உக்காருங்க. எப்ப வேணும்னாலும் நம்ம ரெண்டு பேரையும் கூப்பிடுவாங்க. சொல்லிவிட்டு நான் அமர்ந்தேன்.

    அதெல்லாம் அரைமணிநேரம் ஆகும் விசாரிச்சிட்டேன். இப்ப ஜனனிக்கு ஒரு டெஸ்ட் குடுத்திருப்பாங்க. அத அவ எழுதி முடிச்சி அதோட ரிசல்ட வச்சிக்கிட்டுதான் நம்மகிட்ட பேசுவாங்க.

    பக்கத்து நாற்காலி பேச்சு குடுக்க ஆரம்பித்தது. ஹாய்.. நான் ஸ்வேதாவோட அம்மா.  வேற ஏதாவது ஸ்கூலுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கீங்களா. என்ன குரூப் எடுக்கணும்னு டிசைட் பண்ணியிருப்பீங்கயில்ல அதனால கேட்டேன். கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் அந்த அம்மாள் தொடர்ந்தாள். எங்க ஸ்வேதாவோட ஸ்மார்ட்னஸ்கு அவள நாங்க சட்டப்படிப்புல சேர்க்கலாம்னு இருக்கோம். அந்த சப்ஜெக்ட் இந்த ஸ்கூல்ல இல்லாததால நாங்க வேற இடத்துல அப்ளை பண்ணிட்டோம். இப்ப சும்மா ஒரு பார்மாலிட்டிக்கு வந்திருக்கோம். இவங்க சொல்லப்போறத சீரியசா எடுத்துக்க மாட்டோம்.

    அவர்கள் பேசிக்கொண்டே போக என் மனம் மூடிய கதவுக்கு உட்புறம் என்ன நடக்கிறதோ என எண்ணத் தொடங்கியது. ஒவ்வொருத்தர் தங்கள் பிள்ளைகளைப் பத்தி எவ்வளவுதூரம் யோசிச்சு முடிவெடுக்கிறாங்க. நாமளும் இருக்கோமே என சலித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் என்னை நோக்கி …. ஆமா நான் பேசிக்கிட்டே இருக்கேன்.உங்க ஜனனி என்ன குரூப் எடுக்கப்போறா. மேற்படிப்பு என்ஜினியரிங் தானே. ஸ்வேதா அடிக்கடி சொல்லுவா ஜனனிக்கு கணிதம் புடிக்கும்னு. ஒப்புக்கு நானும் ஆமாம் எனத் தலையாட்டிவிட்டு எழுந்து விட்டேன்.

    சொல்லிவைத்தாற்போல் மூடிய கதவு திறக்கப்பட்டு முதலில் எங்களைத் தான் அழைக்கிறார்கள். இந்த மனுசன் எங்கதான் இருந்தாரோ நல்ல பிள்ளைபோல் முதலில் நுழைகிறார். எங்கள் இருவரையும் எதிரே அமரச் செய்து ஜனனியை வெளியில் அனுப்பிவிட்டார் அந்த உளவியலாளர்.

    அறையைச் சுற்றி நோட்டமிட்டேன். பள்ளி முதல்வரின் அறை அது. இன்றைய தினத்துக்காக மூன்று மேசைகளில் உளவியலாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ஒரே சமயத்தில் மூன்று பெற்றோர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அனைவரும் பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவன் போல் அடக்கமாய் அமர்ந்திருக்கின்றனர்.

    எங்கள் முன்னே அமர்ந்திருக்கும் உளவியலாளர் ஜனனி எழுதிய தேர்வின் விடைத்தாளைக் காண்பித்து ஏதோ பேச எத்தனிக்கிறார். அவர் ஆரம்பிக்குமுன் என் கணவர் அதிக அளவு கெட்ட வார்த்தை பேசுகிற பசங்களை நீங்க எப்படி அறிவுரை சொல்லித் திருத்துவீங்க எனக் கேட்கிறார்.

    மீண்டும் அங்கிருந்த அனைவரின் கண்களும் எங்களின்மேல். அங்கு மாட்டப்பட்டிருந்த கடிகாரம், சார்ட்பேப்பர் இவைகளெல்லாம் கூட எங்களைப் பார்த்து முறைப்பதுபோல் உணர்கிறேன். அந்த மஞ்சள்புடவைக்காரி கையில் வைத்திருக்கும் லிஸ்டைக் காட்டி உளவியலாளர் காதில் ஏதோ சொல்கிறாள். அதற்குமேல் பொறுக்க முடியாமல் மெதுவான குரலில் கொஞ்சம் சும்மா உக்காந்திருக்கீங்களா. எந்த நேரத்துல எதப் பேசறதுனு தெரியாம. வந்த வேலையைப் பாக்கலாமே என்கிறேன்.

    என்னசார் பதிலே இல்ல என எதையுமே காதில் வாங்கிக்காம மீண்டும் கேட்கிறார் என் கணவர்.

    நீங்க ஜனனியப் பத்தி சொல்ல வந்ததச் சொல்லுங்க சார். மற்ற விசயத்தைப் பத்தி அப்பறம் பேசலாம். இடைமறிக்கிறேன் நான்.

    எங்கள் இருவரையும் பார்த்து நிதானமாக ஆரம்பிக்கிறார் அந்த உளவியலாளர்.

    எப்பவுமே நாங்க பசங்களுக்கு அனுபவபூர்வமாதான் உணர்த்துவோம். அறிவுரையாச் சொன்னா ஒரு காதுல வாங்கிட்டு இன்னொரு காது வழியா வெளிய தள்ளிடுவாங்க. அதிகமா வசவுச்சொல் பேசற பசங்க தங்களச் சுத்தி நடக்கறத நல்லா கவனிக்கிறாங்கனு அர்த்தம். அவங்க உபயோகிக்கிற சொற்கள் எல்லாம் வீட்டுக்குள்ள அப்பாவோ அம்மாவோ அல்லது வேறு ஒரு உறவினரோ உபயோகிக்கிற சொற்களாயிருக்கலாம் அல்லது குடியிருக்கிற பகுதியில பேசற பேச்சுக்களா இருக்கலாம். அத முதலில் கவனிப்போம். அப்படிப்பட்ட பசங்களுக்கு உற்ற நண்பர்கள்னு யாரும் அமைய மாட்டாங்க. அது எதனாலன்னு புரிஞ்சிக்காமயே தனித்து இருக்கோங்கிற வருத்தத்தில மேல மேல வகுப்பறையில அடாவடித்தனம் பண்ணுவாங்க.

    இந்தப் பசங்கள எங்ககிட்ட கூட்டிக்கிட்டு வரும்போது இனிமையா எப்படிப்பேசணும்னு பயிற்சி குடுப்போம். அதுக்குப்பிறகு இந்த மாதிரி வகுப்பறையில் பேசிப்பாருங்க. பதினைந்து நாள் போதும் உனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைச்சிடுவான்னு ஊக்குவிப்போம். முதலில் செஞ்சுதான் பார்ப்போமேன்னு தொடங்கற அவங்க ஒருத்தன  புன்மையான சொற்கள் துன்பத்திற் கொண்டு விடுமேயல்லாமல், இனிமையான சொற்கள் ஒரு போதும் துன்பத்திற் கொண்டு விடுவதில்லை அதன் பலன் நல்லதாகவே இருக்கும்னு உணர ஆரம்பிச்சிட்டாங்கன்னா வாழ்நாள் முழுக்க மத்தவங்க மனசுநோகாம இனிமையாகவேதான் பேசுவாங்க.

    புரியுது. புரியுது. ‘இன்சொல் இடர்ப்படுப்ப தில்’னு பழமொழியே இருக்கே. இவர் குறுக்கிட நான் தொடையைக் கிள்ளுகிறேன்.

    உளவியலாளர் தொடர்கிறார். சார் உங்க மகள் ஜனனி உங்களமாதிரியே புத்திசாலி. தனக்குப் பிடித்தது கணிதப் பாடம் அப்டிங்கறத தெளிவா தெரியப்படுத்தி இருக்காங்க இந்த டெஸ்ட்ல. அதனால அவங்களுக்குப் பிடித்த படிப்பைத் தொடர அனுமதியுங்க. வாழ்த்துக்கள்.

    அவர் முடித்துவிட்டார். இவ்வளவுதானா. எனக்கு ஒரே ஏமாற்றம். இரண்டு மணிநேரம் உட்கார்ந்தது இந்த இரண்டு வார்த்தை கேட்கத்தானா. வெளியே வந்தவொடனே இவர் மீண்டும் ஆரம்பிக்கிறார். நம்ம பக்கத்து வீட்டு ரமேஷும் அவர் மனைவியும் தம் பிள்ளையக் கூட்டிக்கிட்டு வந்து வகுப்பாசிரியர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தாங்க. ரமேஷ் ரொம்ப வருத்தமா சொல்லிக்கிட்டு இருந்தான். எம் பையன் நிறைய கெட்ட வார்த்தைகளை சரளமா உபயோகிக்கிறான். அவன் வகுப்புல இருக்கற பசங்கள கண்டிச்சு வைங்கன்னு. அதுக்கு அந்த ஆசிரியர் இந்த மாதிரி நடக்க வாய்ப்பே இல்ல. உங்க மகன்தான் மத்த பசங்களுக்குக் கத்துக் கொடுக்கிறான். அதப் பத்தி பேசதான் நான் உங்களக் கூப்பிட்டுவிட்டேன். ஒண்ணும் பெரிய பிரச்சினைஇல்ல. எங்க பள்ளியில உளவியலாளர் இருக்கார். அவர் கிட்ட தொடர்ந்து ஒருவாரம் அரைமணிநேரம் அனுப்பினா சரியாயிடும். அதுக்கு உங்க அனுமதி தேவை. அதுக்காகத்தான் கூப்பிட்டுவிட்டேன்னாங்க. நான் நிக்கறத கவனிச்சுட்டு அவங்க திரும்பிப் பாத்ததால வந்துட்டேன். அதனாலதான் இப்ப கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்.

    பாத்தியா அவன் சாயம் எப்டி வெளுத்திருச்சுனு. வீட்டுக்குள்ள இவன் சண்டபோடும் போது சொல்ற வார்த்தைகளத்தான் பிள்ளை பள்ளிக்கூடத்துல சொல்றானோ என்னவோ. என்னவரின் கற்பனைக் குதிரை சிறகடித்துப் பறக்க நான் ஜனனியுடன் மௌனமாய் நடந்தேன்.

    Share
  • A Home to Care

    A Home to Care

    Baskar Seshadri

    Greater chennai corporation has a home for the underprivileged and homeless and street beggars and its functioning on Pasumpon Muthuramalingam road near Nandanam Flyover.

    This home is for the destitutes and orphans. Some women who happen to be the victims of domestic violence also can move on with the best truthful details of theirs.

    Its s GCC Initiative but run by a private NGO Called Myrtle Organisation is Headed By Williams. Amala is the caretaker of this institution and she is in charge of all the inmates who are currently in . Some people are allowed even a little leave and go to native or take a short employment , but they have to give an undertaking that they will come back after few moths .This home caters both medical and psychological problems and provide counsel to those who are affected .

    Dr. Lakshmi of Royappettah hospital is treating such people often based on the proposal of the caretaker according to the needs – The home has people from the age ranging 3 to 60 years and they are in need of diapers, provisions, rice, cooking oil, tea dust and phenyle among other things. GCC Is providing the needed items every month for the maintenance of the home but the needs of the home is also met on the support of the donors. This home is situated at 23 Pasumpon Muthuramalingam Road near the Flyover. Whoever is interested to assist the home can directly do the same or can approach me for the coordination.

    Ms. Amala the caretaker can be reached at the mobile number 99400 89730

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 108 (ஓக்க)

    சேக்கிழார் பாடல் நயம் – 108 (ஓக்க)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    ஒக்க நெடுநா ளிவ்வுலகி லுயர்ந்த சைவப்  பெருந்தன்மை   
    தொக்க நிலைமை நெறிபோற்றித் தொண்டு பெற்ற விறன்மிண்டர்
    தக்க வகையாற் றம்பெருமா னருளி னாலே தாணிழற்கீழ்
    மிக்க கணநா யகராகுந் தன்மை பெற்று விளங்கினார்.  

    பொருள்

    இதுபோலவே பலகாலம் இவ்வுலகிலே உயர்ந்த பெருந்தன்மைகள் யாவும் கூடிய நிலையாகிய சைவநெறியினைப் பாதுகாத்துத் திருத்தொண்டு செய்யும் பேறு பெற்று வாழ்ந்த விறன்மிண்ட நாயனார் தமது திருத் தொண்டினுக்குப் பொருந்திய வகையினாலே கணநாயகராகும் நிலைமை யினைப் பெற்றுத் திருவடிநிழற்கீழ் விளங்கினார்.

    விளக்கம்

    ஒக்க – மேலே கண்ட வகைகளைப் போலவே. பெருந்தன்மை தொக்க சைவநெறி என மாற்றி, யாவையும் தொகுதியாகக் கூடிய நெறி சைவநெறியேயாம் என்பதை அறிந்துகொள்க  இது திருத்தொண்டத் தொகையாற் போந்த நெறி குறித்தது.

    நிலைமை நெறி – நிலைமையே இந்நெறியாம் என்க. போற்றி – பாதுகாத்து. துதித்து என்றலுமாம்.

    தொண்டு பெற்ற – நெறி போற்றுதலாகிய திருத்தொண்டினைச் செய்யும் பேறு பெற்ற. பெற்ற – “திருக்கூட்டத் தெதிர்முன்பரவு மருள் பெற்றே யிறைவூர் பாதந் தொழப் பெற்றார்“ , “புறகென் றுரைப்பச் சிவனருளாற் பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார்; மற்றும் பெற நின்றார்“  என்பன, இத்தொண்டினை இறைவ னருளாலே தாம் பெற்றவர். என்பதைஉணர்த்துகின்றன.

    “அவனருளாலே அவன்றாள் வணங்கி“ என்பது திருவாசகம்.

    தக்க வகை – இவர் செய்து வந்த திருத்தொண்டினுக்குப் பொருந்திய வகை. தகுதியாவது, சரியையாதி வழிகளில் தொண்டு செய்வோர்க்கு உரிய சாலோகம் முதலியனவாகச் சாத்திரங்களிற் கூறிய வகை.

    அருளினாலே தன்மை பெற்று – அருளாலே தொண்டு பெற்ற அதனால் அவ்வருளினாலே இறுதியில் இத்தன்மை பெற்று.

    மிக்க – மேன்மையான. கணநாயகர் – சிவகணங்களின் தலைவர். தொண்டர்களின் நெறி போற்றி இங்குத் தலைமை பெற்ற தொண்டினுக் கேற்க அங்கும் கணநாயகராயினர் என்பது.

    “தூநறுங்  கொன்றை முடியவர் சுடர்நெடுங் கயிலைமால் வரையெய்தி,
    மான நற்பெருங் கணங்கட்கு நாதராம் வழித்தொண்டி னிலைபெற்றார்“

    என்பது  கணநாத நாயனர் புராண உள்ளுறை.

    இப்பாடல் தொண்டர்நெறிகளில் தலைமை பெற்றவர் விறன்மிண்டர் என்பதையும், அவருடைய கடுமையான தொண்டுநெறி அவருக்கு ‘கணநாயகர்’ என்ற உயர்பதத்தை அளித்தது என்பதையும்   குறிக்கிறது.

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 4

    அண்ணாகண்ணன் காணொலிகள் 4

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    Ponvandu | பொன்வண்டு | Sternocera

    இன்று கண்டேன் ஒரு பொன்வண்டு

     

    ஒரு ஜோடி தவிட்டுக் குருவிகள்

    இந்த ஜோடி என்ன செய்கிறது என்று பாருங்கள்.

     

    இரையைக் கொத்தும் இளம் கொக்கு

    ஓர் இளம் இந்தியக் குளத்துக் கொக்கு (மடையான்), புல் மீது அமர்ந்தபடி, இரையைக் கொத்தி உண்ணுகிறது. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து என்ற குறளுக்கு இணங்க, இந்த இந்தியக் குளத்துக் கொக்கு காத்திருந்து கொத்துகிறது. அதன் கழுத்து எவ்வளவு நீளும் என்பதையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

     

    தாழைக் கோழிகளின் சண்டை

    இரண்டு ஜோடி தாழைக் கோழிகள், நம் வீட்டுப் பின்புறத்தில் உண்டு. அவற்றுக்குள் ஏதோ தகராறு. இரண்டு தாழைக் கோழிகள், பல முறைகள் அடித்துக்கொண்டன. வெவ்வேறு இடங்களில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. நடுவில் ஒரு தாழைக்கோழி தடுக்கப் போய், அதற்கும் நாலு சாத்து விழுந்தது. அந்தப் பரபரப்பான சண்டைக் காட்சியை இங்கே பாருங்கள்.

    Six birds | ஆறு பறவைகள்

    ஒரே வரிசையில் ஆறு பறவைகள் (மடையான், மைனா, உண்ணிக் கொக்கு)

     

    Evening sky at Chennai – 16

    Male Cuckoo

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • More the rains and more the storage

    More the rains and more the storage

    Baskar Seshadri

    Though we experienced good rains here in Mylapore the quantum of water that got stored was not at par with the down pour especially in the temple tank .

    Its understood that Corporation commissioner had taken some extra steps to ensure that more inlets be made for the water to get stored . To ensure this GCC men started the work to lay and erect bigger inlets opposite to Sangeetha Restaurant .

    Now the water flows on south mada street will automatically go into the temple tank .

    The work was fully completed in three days flat but the final touches are yet to be done and the same is expected to be completed before this weekend if the rains do not hamper the work . May be we can think of more inlets of this size on all the four sides of the mada street . Probably may be even more .

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 21

    பரிமேலழகர் உரைத்திறன் – 21

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கணமின்றி இலக்கியம் இல்லை…….?

    முன்னுரை

    ‘கொட்டி கிழங்கோ கிழங்கெ’ன்று கூறித் தெருவில் நடந்த வணிகம் அருகிய காலம் இது. எல்லாம் ‘அங்காடி மயம்’ அல்லது ஆன்லைன் மயம். பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தெருவில் ஒருவர் காலை வேளையில் பற்பொடி விற்பனை செய்தார். அவர் இப்படிச் சொல்லித்தான் விற்பார். எப்படி? ‘பாடாவதி பற்பொடி வேணுமா?’ என்று. ‘பாடாவதி பற்பொடியை யாராவது வாங்குவார்களா?’ என அவரை வினவியபொழுது அவர் சொன்னார் ‘பற்பொடி பாடாவதி அல்ல. பல்லுதான் பாடாவதி. அதுதான் பூச்சிப்பிடித்துக் கெட்டிருக்கும். அதற்குத்தான் இந்தப் பொடி’ என்றார். அவர் சொன்ன விளக்கம் என்னவென்றால் ‘பாடாவதி பல்லுக்குப் பொடி’யாம். ‘பாடாவதி’ என்ற சொல்லைப் பற்பொடிக்கும் அடையாக்கலாம். பல்லுக்கும் அடையாக்கலாம். ஒரு தொடரை வேற்றுமையாகவும் பொருள் விரிக்கலாம். அல்வழியிலும் பொருள் விரிக்கலாம். இரண்டும் இரண்டு தனித்தனிப் பொருளைத் தரும். இதுபோலவே திருக்குறளில் சில சொற்கள், தொடர்கள். இவற்றிற்கு இலக்கண அமைதியைக் கூறுவதன் மூலம் அவற்றின் செம்பொருள் துலங்கவும், குழப்பத்தைத் தவிர்க்கவும் பரிமேலழகர் உரை உதவியிருக்கிறது. அது பற்றிய ஒரு சிறு விளக்கத்தைத் தருவதையே நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

    ஏன் வேண்டும் இலக்கண விளக்கம்?

    இனிமை வேண்டும் என்றால் இலக்கணம் வேண்டும்! ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் காதற்பெண்கள் கடைக்கண் பணியிலே’ என்பார் பாரதியார். ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்’ என்பார் பாரதிதாசன். பாரதிதாசன் வழக்கறிவார். பாரதியார் இலக்கணமறிவார். முன்னவர் வழக்கு நோக்கிக் ‘கடைக்கண்’ என்றார். பின்னவர் இலக்கணமறிந்துக் கண்ணின் கடை என்றார். எது சரி? இரண்டுமே சரி. பின்னதன் பொருளைத்தான் முன்னது தருகிறது. முன்னதன் கருத்தையே பின்னது காட்டுகிறது. இதுதான் இலக்கணம். எப்படி? கடைக்கண் என்று ஒன்றில்லை. ஏனென்றால் முதற்கண், இடைக்கண் என்று வேறு இல்லையாதலால்!. சொல் வழங்குகிறதே எனின் அதன் நோக்கம் கண்ணின் கடைப்பகுதியைக் குறிப்பதே!. எனவே ‘கடைக்கண்’ என்பதன் பொருள் கண்கடை என்பதே!. இது பாரதிக்கும் தெரியும் பாரதிதாசனுக்கும் தெரியும்.  அவரிருவருமே இலக்கணம் அறிந்தவர்கள். இந்த மக்களின் வழக்கும் உணர்ந்தவர்கள். எனவே கடைக்கண் என்பது ‘கண்ணினது கடைப்பகுதி’ என்னும் பொருளைத் தருகிறது. ‘அது’ என்பது ஆறாம் வேற்றுமை உருபு. ‘கண்ணினது கடை’ என்றிருந்தால் நெறி. கடைக்கண் என்றிருந்தால் அதனை முன்பின்னாகக் கொண்டு உருபை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது இலக்கணம். அதனால்தான்,

    “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
    உயிர்க்கிறுதி யாகி விடும்”  (476)

    என்னும் குறட்பாவில் பயின்றுள்ள ‘நுனிக்கொம்பர்’ என்னும் சொல்லுக்கு இலக்கண அமைதி கூற வந்த பரிமேலழகர்,

    ‘நுனிக்கொம்பர் என்பது கடைக்கண் என்பதுபோல முன் பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை’

    என்று எழுதுகிறார். கொம்பு என்றால் கிளை. கொம்பினது நுனி என்றால் கிளையினது நுனி என்பது பொருள். இப்படித்தான் பாட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று திருவள்ளுவரிடம் யாரும் சொல்லமுடியாது. அவர் எழுதியதற்குத்தான் நாம் விளக்கம் தரவேண்டும். எனவே ‘கொம்பினது நுனி’ என்பதைத்தான் ‘நுனிக்கொம்பு’ என்று எழுதியிருக்கிறார். கொம்பில் நுனிக்கொம்பு, இடைக்கொம்பு, கடைக்கொம்பு என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. ‘நுனிக்கரும்பு’, ‘நுனியிலை’ என்பதற்கும் இது பொருந்தும் ‘வாழையிலையின் அடி’ என்பார் பாரதிதாசன். பரிமேலழகரின் இந்த இலக்கண விளக்கத்தால் ‘கண்ணினது கடைப்பகுதி’, ‘கொம்பினது நுனி’ என்னும் பொருட்தெளிவும் கிட்டுகிறது. கிட்டவே பிற கண்களும் உளவோ? ‘பிற கொம்புகளும் உளவோ என்னும் குழப்பமும் வராமல் தடுக்கப்டுகின்றன. இதுபோன்று திருக்குறள் பரிமேலழகர் உரையில் வரும் சில இடங்களைத் தொடர்ந்து காணலாம்.

    ஆறாம் வேற்றுமை பொருள் விளக்கம்

    பெயர்ச்சொற்களின் வேற்றுமை பற்றி ஆராய்கிற தொல்காப்பியச் சொல்லதிகாரம் ஆறாம் வேற்றுமைப் பொருள் பற்றி,

    “ஆறாகுவதே
    அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
    தன்னினும் பிறிதினும் ‘இதனது இது’ எனும்
    அன்ன கிளவிக் கிழமைத் ததுவே!” தொல் சொல் (79)

    என்னும் நூற்பாவில் ஆராய்கிறார். ‘இதனது இது’ என்றால் ‘இதனுடைய உரிமை இது’ என்பது பொருள். ‘கிழமை’ என்றால் உரிமை. திங்களுக்கு உரியது திங்கட்கிழமை என்பதுபோல. இந்த உரிமை இரண்டு வகைப்படும். ஒன்று பொருளிலிருந்து பிரிக்க இயலாத உரிமை. பொருளிலிருந்து பிரிக்கக் கூடிய உரிமை. பிரிக்க இயலாத உரிமைக்குத் தற்கிழமை என்று பெயர். பிரிக்கக் கூடிய உரிமைக்குப் பிறிதின் கிழமை என்று பெயர். ‘பெண்ணினது அழகு’ ‘கண்ணினது பார்வை’ என்னும் தொடர்களில் பெண்ணையும் அழகையும் பிரிக்க இயலாது. கண்ணையும் பார்வையையும் பிரிக்க இயலாது. எனவே இவை தற்கிழமை. ‘பாரியது மலை’, ‘கபிலரது பாட்டு’ என்னும் தொடர்களில் பாரியையும் பறம்பையும் பிரிக்கலாம். கபிலரையும் பாட்டையும் பிரிக்கலாம். எனவே இவை பிறிதின் கிழமை.

    இனி இந்தப் பிரிக்க இயலாத தற்கிழமை என்பது ஒன்றுபல குழீஇய தற்கிழமை, வேறுபல குழீஇய தற்கிழமை, ஒன்றியற் கிழமை, உறுப்பின் கிழமை மெய்திரிந்ததாய ஐந்து வகைப்படும்.

    பிரிக்கக் கூடிய உரிமைகளாகிய பிறிதின் கிழமை, உடைமைக் கிழமை, முறைமைக்கிழமை, கருவிக்கிழமை, துணைக்கிழமை, கலக்கிழமை, முதற்கிழமை, செய்யுட்கிழமை எனப் பலவகைப்படும். இவற்றை விரிப்பின் பெருகுமெனினும் செய்யுட்கிழமையைப் பற்றிய ஒரு விளக்கம் தரப்படுகிறது.

    செய்யுட் கிழமை என்றால் என்ன?

    ‘கபிலரது பாட்டு’ என்னுந் தொடரில் கபிலரும் அவர் எழுதிய பாட்டும் தனித்தனியாக இருந்து உடைமைப் பொருளை உணர்த்துகிறது. அதனால் இது பிறிதின் கிழமை. இனி, அந்தப் பாட்டு அவர் எழுதியதாலேயே அவர்க்கு அது உடைமையாயிற்று. பாட்டாகிய செய்யுள் அவ்வுடைமைக்குக் காரணமாதலின்  அது செய்யுட்கிழமை ஆயிற்று. எனவே செய்யுட்கிழமை என்பது ஆறாம் வேற்றுமைப் பொருளாகிய உடைமைப் பொருளை உணர்த்தும் இரண்டு முறைகளில் பிறிதின் கிழமையின் வகைகளுள் ஒன்று என்பது பெறப்படும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் பின்வரும் பாட்டின் இலக்கண நுட்பத்தைப் புரிந்து கொள்ள இயலும்.

    “பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
    நெறி நின்றார் நீடு வாழ்வார்” (6)

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு,

    “மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார், பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.”

    என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். இந்தப் பொழிப்புரையைத் தொடர்ந்து வரும் விளக்கவுரையில்,

    “ஒழுக்கநெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருபு செய்யுட்கிழமைக்கண் வந்தது ‘கபிலரது பாட்டு’ என்பது போல”

    என்று ஒரு குறிப்பு வருகிறது. ஐந்தவித்தவன் இறைவன். ஐந்தவித்தான் ஆற்றல் என்றால் ஐந்தவித்தானது ஆற்றல் என்று பொருளன்று. ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல் என்பது பொருள். சொன்னவன் ஐந்தவித்தான். சொல்லப்பட்டவை ஐவகை ஆற்றல். இவ்வாற்றல் அவனோடு பிணிக்கப்பட்டது அன்று. பிரிந்து நிற்பது. எனவே ‘ஐந்தவித்தானது’ ஆற்றல்’ என்னும் ஆறாம் வேற்றுமை விரிக்கப்படினும் அது ‘அவனது ஆற்றல்’ என்னும் தற்கிழமையாகாது ‘அவனால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமையாய் நின்றதாம். எதுபோல? ‘கபிலரது பாட்டு’ என்பதுபோல!. ‘கபிலரது பாட்டு’ என்றால் ‘கபிலருடைய பாட்டு’ என்று பொருள் தந்தாலும் அவ்வுரிமைத்தொடர் கபிலரால் எழுதப்பட்ட பாட்டு’ என்று பிறிதின் கிழமையாகத்தான் அமையும். அதுபோல  ‘‘ஐந்தவித்தான் ஆற்றல்’ என்னும் தொடர் ஆறாம் வேற்றுமைக்குரியதாக விரிக்கப்படினும் அது ‘ஐந்தவித்தானது ஆற்றல் எனத்’ தற்கிழமையாக நில்லாது ‘ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமைப் பொருளினைத் தருவதைக் காணலாம்.

    வேற்றுமை மயக்கம்

    ‘வேற்றுமை மயக்கம்’ இரண்டு வகைபப்டும். ஒன்று ‘பொருள் மயக்கம்’. மற்றொன்று ‘உருபு மயக்கம்’. வேற்றுமை உருபுகள் தமக்குரிய பொருள் வரையறை எல்லைகளைக் கடந்து வேறொரு வேற்றுமையின் பொருளை உணர்த்தி நிற்பதைப் ‘பொருள் மயக்கம்’ என்பர். பிறிதொரு வேற்றுமை உருபு நிற்க வேண்டிய இடத்தைத் தான் பிடித்துக் கொண்டு அதனை விரட்டி விடுவதை ‘உருபு மயக்கம்’ என்பர். இவ்வாறான மயக்கங்கள் இயல்பானதன்றிச் செயற்கையானதல்ல. புலவனின் உணர்ச்சி வேக வெளிப்பாட்டில் நிகழ்ந்துவிடும் ஒரு விபத்தாகவே கருதப்படலாம். திருவள்ளுவர்,

    “உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு”. (261)

    என்று எழுதியிருக்கிறார். இந்தப் பாட்டிற்குத்,

    “தவத்தின் வடிவு உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிருக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும் தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று”

    என்று பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார். ‘தவத்திற்கு இலக்கணம்’ (தவத்திற்கு உரு) என்று பாட்டு அமைந்திருக்கிறது. இப்படி அமைந்தால் ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபாகிப் பொருள் தெளிவிருக்காது. புலவனுக்குக் கொடுத்தான் என்றால் பெற்றவன் புலவன். தவத்திற்கு உரு என்றால் கொடைப்பொருளால் குழப்பம் உண்டாகும். உண்மையில் தவத்தினுடைய உரு என்றுதான் இருக்க வேண்டும். அதாவது பாட்டில் நான்காம் வேற்றுமை உருபு வந்திருந்தாலும் அது ஆறாம் வேறாம் வேற்றுமைக்குரிய உடைமைப் பொருளை உணர்த்தி நிற்கிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் நான்காம் வேற்றுமை உருபு தனக்குரிய கொடைப் பொருளை உணர்த்தாமல் தனக்கு உரிமையல்லாத ஆறாம் வேற்றுமை உடைமைப் பொருளை உணர்த்தி நிற்கிறது. இந்த இலக்கண நுட்பத்தை அறிந்த பரிமேலழகர்,

    ‘தவத்திற்கு உரு’ என்பது யானையது கோடு கூரிது என்பதனை ‘யானைக்குக் கோடு கூரிது’ என்றாற்போல ஆறாவது பொருட்கண் நான்காவது வந்த மயக்கம்.

    என்று இலக்கண விளக்கம் தருகிறார். ‘யானைக்குக் கோடு கூர்மையானது’ என்பது ‘யானையினுடைய தந்தம் கூர்மையானது’ என்பதையே குறிக்கும்.  ஆனால் இலக்கியங்களில் ‘யானைக்குக் கோடு கூரிது’ என்று வருகிறது. அதனைப் போலவே ‘தவத்திற்கு உரு’ என இருந்தாலும் ‘‘தவத்தினுடைய உரு’ என்று கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். ஒவ்வொரு வேற்றுமைக்கும் தனித்தனிப் பொருள் வரையறை செய்யப்பட்டிருப்பதால் அதனுள் மாற்றம் வந்துவிடக்கூடாது என்னும் மொழிச் செப்பம் காக்கும் முயற்சி இது. வெள்ளாடு மட்டுமன்று வேற்றுமை உருபுகளும் வேலி தாண்டக்கூடாது என்பது இதனால் பெறப்படும்!

    பொருத்தம் பொருளிலும் வேண்டும்

    ‘ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்’ என்பன மூன்றாம் வேற்றுமைக்குரிய உருபுகள் ஆகும். இந்த ஐந்து உருபுகளுள் ‘ஆல், ஆன்’ என்னும் இரண்டும் கருவிப்பொருளிலும் கருத்தாப் பொருளிலும் வரும். ‘மழையினால் குளம் நிறைந்தது’, ‘கோலால் எழுதினான்’, ‘இதனான் முடிக்கும்’, ‘கலைஞரால் கட்டப்பட்டது’, ‘சாமிநாத அய்யரால் பதிப்பிக்கப்பட்டவை’ என்பன போல. ‘ஆன்’ உருபு தற்போது வழக்கில் இல்லை’. ‘ஒடு, ‘ஓடு’, ‘உடன்’ என்னும் இரண்டும் உடன்நிகழ்ச்சிப் பொருளில் வரும். ‘அமைச்சரோடு உதவியாளர் சென்றார்’ ‘அமைச்சருடன் ஒப்பந்தக்காரர் சென்றார்’ என்பன போல. இவற்றால் ஐந்து உருபுகள் கொண்ட மூன்றாம் வேற்றுமை மூன்று பொருண்மைகளில் வரும் என்பது தெரியவரும். வந்தாலும் இவ்வைந்து உருபுகளும் மூன்றாம் வேற்றுமைக்குரியனவே என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

    “அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
    புறத்த புகழு மில”  (39)

    என்ற குறட்பாவிற்கு,

    ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் இன்பமாயினும் துன்பத்தினிடத்த., அதுவுமேயன்றிப் புகழுடைய அல்ல”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது. ‘தூங்கு கையால்’ ஓங்கு நடை என்புழிப்போல” (புறம் 22)

    என்று விளக்கவுரை எழுதியிருக்கிறார். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்னும் தொடரில் பயின்று ‘ஆன்’ என்னும் வேற்றுமை உருபு அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப் பாட்டில் சொல்லப்படுவது காம இன்பத்தினை. அது இல்லறத்தோடு இணைந்திருக்க வேண்டிய ஒன்று. ‘பிறன்மனை விழைதல்’ காம இன்பம் தருமெனினும் அது துன்பத்தைத் தரும் புகழைத் தராது. இருக்கின்ற புகழை அழிக்கும். இழிவைத்தரும். அந்த வேற்றுமை உருபிற்கு இலக்கண அடிப்படையில் கருவிப்பொருளைக் கொண்டால் ‘இல்லறத்தால் வருவது இன்பம்’ எனப் பொருள் மயக்கம் உண்டாகும். ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே காம இன்பம்’ என்னும் பொருள் கிட்டாது. எனவே பரிமேலழகர் ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு உடன்நிகழ்ச்சிப் பொருள் தந்ததாகக் கருதி எழுதுகிறார். சரி, பரிமேலழகருக்காக வேற்றுமை இலக்கணம் மாறுபடுமா? என்றால் அவர் தான் கொண்ட பொருளை மற்றொருவரும் கொண்டிருக்கிறார் என்பதற்கான இலக்கியச் சான்றினைப் புறநானூற்றில் இருந்து எடுத்துக்காட்டுகிறார். அந்த எடுத்துக்காட்டில், யானையின் வரவு கூறப்பட்டுள்ளது. ஆடிவரும் அதன் துதிக்கையும் அசைநடையும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆனால் பாட்டு எப்படி அமைந்திருக்கிறது? ‘தூங்கு கையான் ஓங்கு நடைய’ என்றிருக்கிறது. ‘தூங்கு’ என்றால் ‘தொங்கு’ என்பது பொருள். ‘தொங்குகின்ற கையால் ஓங்கிய நடை’ என்று வராது. நடைக்குக் கை காரணமல்ல. கையொடு நடையாம். ‘கையான் நடை’ என்பதைக் ‘கையொடு நடை’ என மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். கொள்ளவே, ‘தூங்கு கையொடு ஓங்கு நடைய’ என்பது பெறப்படும். இங்கே ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு, உடன் நிகழ்ச்சிப் பொருளில் வந்தது. இவ்விரண்டு உருபுகளும் மூன்றனுக்குரியன எனினும் இலக்கியப் பொருள் நுட்பத்திற்காக மாறிய பொருள் தந்து அமைந்திருக்கிறது என்பதைப் பரிமேலழகர் உணர்த்தியிருக்கிறார்.

    இங்கே இரு சொல் அங்கே ஒரு சொல்!

    உலகவழக்கில் இயல்பாகப் பேசப்படும் சில தொடர்கள் நம் கவனத்தை ஈர்ப்பதுண்டு. ‘பார்த்துக் கேள்’, ‘கேட்டுப் பார்’, ‘போய்ப் பார்’, ‘பார்த்துப் போ’ என்னும் உலகவழக்கினையும் “புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை” என்பது திருவாசகத்தையும் நோக்குதற்குரியன. மேற்கண்ட சொற்களில் ‘பார்த்தல் என்பது ஒரு வினை. ‘கேட்டல்’ என்பது தனிவினை. ஆனால் ஒரு பொருளைத்தான் குறிக்கிறது. திருவாசகத்தில் வரும் ‘கேட்டல்’ என்பது தனிவினை. ‘அறியோம்’ என்பது தனிவினை. பொருளில் ‘உன்னைக் கண்டவர்களை நாங்கள் கேட்டதில்லை’ என்பது மட்டுமே உலகவழக்கிலும் இலக்கிய வழக்கிலும் அமைந்த இது மாதிரியான சொற்கள் ஆழமான கவனத்தைப் பெறுவதில்லை. ஆனால் உரையாசிரியப் பெருமக்கள் இலக்கியத்தின் பொருளாழம் கருதித் தம் நுண்ணோக்கினால் சில இலக்கண அமைதிகளைக் கூறுகின்றனர்.

    “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன்னயம் செய்து விடல்” (314)

    என்னும் குறட்பாவிற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “தமக்கு இன்னா செய்தாரைத் துறந்தோர் ஒறுத்தலாவது அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்”

    என்று கூறுகிறார். இக்குறட்பாவைச் சொல்லுகின்ற தமிழ்ப்பேராசிரியர் உட்பட அனைவரும் ‘பிறர் செய்த தீமையையும் நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுதல்’ என்று சரியாகச் சொன்னாலும் ‘மறந்துவிடுதல்’ என்பதற்கான வினைச்சொல் குறட்பாவில் இருக்கிறதா என்பதை எண்ணுவதே கிடையாது. அதாவது அவர்கள் கொள்கின்ற பொருளும் சொல்கின்ற பொருளும் சரியே. அதற்கான சொற்பயன்பாடு குறட்பாவில் இருக்க வேண்டுமல்லவா? இவர்கள் படாத கவலையைப் பரிமேலழகர் பட்டிருக்கிறார். தமது விளக்கவுரையில்,

    ‘செய்து அவ்விரண்டனையும் மறத்தல்’

    என்ற ஒரு தொடரில் தமது உரைநுட்பத்தைப் பதிவு செய்திருக்கிறார். ‘விடல்’ என்பதைப் பகுதிப் பொருள் விகுதியாகக் கொள்ளாமல் அதாவது துணைவினையாகக் (Auxillary verb) கொள்ளாமல் தலைவினையாகவே (principal verb) கொண்டு உரையெழுதுகிறார். ‘செய்து’ என்பது தனி வினையெச்சம். ‘விடல்’ என்பது தொழிற்பெயர். ‘செய்து விடல்’ என்னும் தொடர் ‘செய்து’ என்றும் ‘விடல்’ என்றும் இரண்டாகக் கொள்ளப்பட்டது. இக்குறட்பாவில் ‘ஒறுத்தல்’, ‘விடல்’ என்னுமிரண்டும் தொழிற்பெயர்கள். முன்னது எழுவாய். பின்னது பயனிலை. ‘ஒறுத்தலாவது மறத்தல்’ என இயைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைந்திருக்கிறது. எனவே ‘விடல்’ என்பதன் பொருள் மறத்தல் என்பதாகும். பரிமேலழகர் இவ்வாறு ‘செய்துவிடல்’ என்பதனை இரு சொல்லாகக் கொண்டு உரையெழுதியிருக்காவிட்டால் ‘பிறர் செய்த தீமையையும் அதற்கு மறுதலையாகச் செய்யப்பட்ட நன்மையினையும்  மறத்தல்’ என்னும் பொருண்மை கிட்டாதாம் என்க.

    ஒரு சொல்லை இரண்டாகப் பிரித்துக் காட்டி உரையெழுதிய பரிமேலழகர் வேறு சில இடங்களில் அது போன்ற சொற்களை ஒரு சொல்லாகவே காட்டியிருக்கிறார். அறிவுடையார், ‘உரிமை காரணமாகத் தம் நண்பர் செய்யும் பணியினை அச்செயலது தன்மை நோக்கி விரும்பி ஏற்றுக் கொள்வார்’ என்னும் பொருள்பட அமைந்த திருக்குறள்,

    “விழைதகைமை வேண்டியிருப்பர் கெழுதகையான்
    கேளாது நட்டார் செயின்” (804)

    என்பதாகும். இதற்குத்,

    “தம் கருத்தை நட்டார் உரிமையால் கேளாது செய்தாராயின் அச்செயலது விழையப்படும் தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார்”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர், தமது விளக்கவுரையில் நடத்தியிருக்கும் சொல்லாராய்ச்சியில்,

    “வேண்டியிருப்பர் என்பது எழுந்திருப்பர் என்பதுபோல ஒரு சொல் நீர்மைத்து”

    என்று எழுதிக் காட்டுகிறார். ‘வேண்டுதல்’ என்றால் ‘விரும்புதல்’. ‘இருப்பர்’ என்றால் ‘வினையின்றி வாளா இருத்தல்’ ‘வேண்டியிருப்பர்’ என்பதற்கு இவ்வாறு பிரித்து உரைகண்டால் அவர் விரும்புவாரா? விரும்பி இருப்பாரா? என்னும் மயக்கம் ஏற்படும் இதனைக் களையவே ‘வேண்டியிருப்பர்’ என்னும் அச்சொல்லை ‘ஒருசொல் நீர்மைத்து’ என எழுதுகிறார். எதுபோல? ‘எழுந்திருப்பர்’ என்பதுபோல. ‘எழுந்திருப்பர்’ என்பதில் ‘எழுதல்’ ஒரு வினை. ‘இருத்தல்’ அதன் துணைவினை. ‘யானை எழுந்திருக்கும்’ என்றால் ‘யானை எழும்’ என்றுதான் பொருளே தவிர, ‘யானை முதலில் எழும். அப்புறம் இருக்கும்’ என்று பொருளன்று. அதுபோல ‘எழுந்திருப்பர்’ என்றால் ‘எழுவர்’ என்ற ஒருபொருளைத்தான் தரும். அதுபோலவே ‘வேண்டியிருப்பர்’ என்றால் ‘விரும்புவர்’ என்னும் ஒரு பொருளைத்தான் தரும் என்பது பரிமேலழகர் விளக்கம். ‘எழுந்திருப்பர்’ என்பது ‘எழுவர்’ எனப் பொருள்படுமிடத்து ஒருசொல் நீர்மைத்து. இங்கே ‘வேண்டியிருப்பர்’ என்பது ‘விரும்புவர்’ என்னும் பொருள்படுவதால் இதுவும் அதுபோல ஒருசொல் நீர்மைத்து. இதே விளக்கத்தைச்,

    “சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
    ஊக்கம் அழிந்து விடும்.” (498)

    என்னும் குறட்பாவுக்குப்,

    “பெரும்படையுடைய அரசன் ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சேருமாயின் அவனால் தன் பெருமை அழியும்”

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையில்,

    “‘அழிந்துவிடும்’ என்பது ‘எழுந்திருக்கும்’ என்பதுபோல ஒருசொல்.”

    எனக் கூறியிருப்பதை நோக்குக. ‘எழுந்திருக்கும்’ என்பது ‘எழும்’ என்று பொருள்படுவதுபோல ‘அழிந்து விடும்’ என்பது ‘அழியும்’ எனப் பொருள்பட்டு ஒரு சொல்லாகும்.

    நிறைவுரை

    மொழியிலக்கணம் அதற்கானதன்று. நமக்கானது. ‘கத்தி கொண்டு ஓடினான்’ என்பதற்கும் ‘கத்திக்கொண்டு ஓடினான்’ என்பதற்குமான வேறுபாடு ஓர் ஒற்றெழுத்தேயெனினும் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் வேறுபடுத்திக் காட்டுவது காண்க. ‘இலக்கியம் கண்டதற்கே இலக்கணம்’ என்பது உண்மையே. ஆனால் அவ்விலக்கியத்தின் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள இலக்கணப் புலமை இன்றிமையாத ஒன்று என்பது மேற்கண்ட பதிவுகளால் புலனாகலாம். பரிமேலழகர் இவ்வாறு விளக்கியன அவர் திறன் காட்டுதற்கன்று குறட்பாவின் பொருள் திறன் புலப்படுவதற்கே! உண்மையில் இலக்கணமின்றி இலக்கியம் இல்லை என்பது உண்மையே!

    (தொடரும்…)

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 25 (ஊர்ப் பெண்டிர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 25 (ஊர்ப் பெண்டிர்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    பலதரப்பட்ட பெண்களைப் பற்றியதாக அமையும் இக்கட்டுரையுள்  நல்கூர்பெண்டிர், ஆளில் பெண்டிர், அரியல் பெண்டிர்,  சீறூர்ப்பெண்டிர், பேஎய் பெண்டிர், அயலில் பெண்டிர் ஆகிய அனைவரும் ஊர்ப்பெண்டிர் என்னும் தொகைப் பாத்திரத்துள் அடங்கி விடுகின்றனர்.

    ஊர்ப்பெண்டிர் பண்புகள் 

    தோழி, தாய், தலைவி ஆகியோரின் பேச்சில் ஊர்ப்பெண்டிர் வசைபாடப் பெறுகின்றனர்.

    “கொடிது அறிபெண்டிர்” (அகம்.- 20);

    “வெவ்வாய்ப் பெண்டிர்” (அகம்.- 50, 250; குறுந்.- 373; நற்.- 133);

    “அலர்வாய் அயலில் பெண்டிர்” (நற்.- 378);

    “நிரைய பெண்டிர்” (அகம்.- 95) எனவும்;

    “தீவாய் … … …  பெண்டிர்” (அகம்.- 203);

    என்ற சுட்டு முறைகளில் ஊர்ப்பெண்டிரின் பண்புகள் ஒரே தன்மையுடன்  பேசப்படுகின்றன. கொடுமையான செய்தியைப் பேசுபவர் என்றும்; துன்புறுத்தும் சொற்களையே பேசத் தெரிந்தவர் என்றும்; அலர் தூற்றுபவர் என்றும்; தீமை பயக்கும் பழியினைச் சுமத்துபவர் என்றும்; இழிந்த முறையில் புறம்பேசக்  கூடியவர் என்றும் ஒருசேரக் குறைகூறப் பெறுகின்றனர்.

    ஊர்ப்பெண்டிரின் சிறுபாத்திரத் தகுதி  

    ஊர்ப்பெண்டிர் பழி சுமத்துதல், கமுக்கமாக ஜாடை பேசுதல், ஆரவாரமாக அலர் தூற்றுதல் ஆகிய செயல்கள் உடையவராய்க் காட்சிப் படுத்தப்படுகின்றனர்.

    “அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப்
    புரையில் தீமொழி பயிற்றிய உரையெடுத்து
    ஆனாக் கௌவைத்தாகத்
    தான் என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே” (நற்.- 36)

    என்பது தலைவியின் கேள்வி.  ‘தாழ்ச்சி உடைய தீய சொற்களை எப்போதும் பேசிப் பழி சுமத்தும் ஊர்ப்பெண்கள் கமுக்கமாக ஜாடை பேசுவதுடன்; ஆரவாரமாக வாய்விட்டுத் தூற்றும் அளவிற்கு இந்த ஊர் எதை இழந்து விட்டது?!’ என்ற தலைவியின் வியப்புக் கலந்த வினாவில் ஊர்ப்பெண்டிர் என்ன பேசினார்கள்; எப்படிப் பேசினார்கள் என அனைத்தும் இடம்பெற்று அவர்க்குச் சிறுபாத்திரத் தகுதியைக்  கொடுக்கிறது. பெண்டிர் தூற்றும் அலர் பற்றிப் பேசும் பிற பாடல்களும் உள (அகம்.- 70; நற்.- 143)

    தலைவி கூற்றில் ஊர்ப்பெண்டிர்

    குறிஞ்சித்தலைவி ஊர்ப்பெண்டிரின் அலர்தூற்றும்  வாயை அடைக்க இயலாது என்பதைக்;

    “குறிஞ்சி நல் ஊர்ப்பெண்டிர்
    இன்னும் ஓவார் என்திறத்து அலரே” (நற்.- 116)

    எனத் தோழியிடம் குறைப்பட்டுக் கொள்கிறாள்.

    தாய் கூற்றில் ஊர்ப்பெண்டிர்

    தன் மகள் தலைவடன் போன பின்னர் நடந்ததை எல்லாம் எண்ணிப் பார்த்துப் பேசும் தாய்;

    “அலர்வினை மேவல் அம்பல் பெண்டிர்” (அகம்.- 203)

    பேச்சையும் சேர்த்தே நினைத்துப் பேசுகிறாள்.

    தோழி கூற்றில் ஊர்ப்பெண்டிர்

    பகற்குறி வந்த தலைவனிடம் ஏதம் கூறி; இரவுக்குறியும் வசதிப்படாது என உணர்த்தும் தோழி;

    “…………………… ……… துஞ்சாக் கண்ணர்
    பெண்டிரும் உடைத்து இவ்அம்பல் ஊரே” (நற்.- 223)

    என்கிறாள்.

    தலைவன் கூற்றில் ஊர்ப்பெண்டிர்  

    தான் மையல் கொண்ட ஆயர் குலப்பெண் மோர் விற்றுக் கொண்டு வரும் போது; அவளிடம் மோர் வாங்கும் ஊர்ப்பெண்டிர் செயலையும் பேச்சையும்  விரிவாக எடுத்து உரைக்கிறான் தலைவன். அவளது அழகு யார்க்கும் அணங்காகித் துன்புறுத்தக் கூடியது என்று எண்ணியதால் வீட்டின் வாயிலை அடைத்துக் கொண்டு நின்று; தம் கணவர் காணாவண்ணம் அவளை விரைந்து அனுப்புவதே குறியாக ‘மாங்காய் நறுங்காடி கூட்டி உண்பேம்; நீ  உன் கிளையோடு சென்று சேர்வாயாக’ எனச் சொல்லி விலக்கியமையை நகை தோன்றக் கூறுகிறான் (கலி.- 109).

    பேய்ப் பெண்டிர்

    தொகையிலக்கியக் காலத்தில் ‘பேய்’ என்ற சொல்லின் பொருட்பரிமாணம்; இன்று வழங்கும் பொருளில் இருந்து மாறுபட்டது. பேஎய் என்று சுட்டப்பெறும் பெண்; தலைவி தனக்குத் தானே கூறிக் கொள்ளும் உவமையில் இடம் பெறுகிறாள். மகப்பேற்றின் போது  தலைவன் தன்னை விட்டு ஒதுங்கிப் புறத்தொழுக புனிறு நாறும் தன்னை விடுத்து; மணம் பொருந்திய பிற பெண்டிரை நாடிச் சென்ற அவனிடம்;

    “பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே” (ஐங்.- 70)

    என்கிறாள். இத்தலைவி பாசுபதநெறி சார்ந்தவள் எனலாம். இப்பாடலடியில் இடம் பெறும் ‘பேஎய்’ என்னும் சொல் எப்படிப்பட்ட பெண்ணைக் குறிக்கிறது என்பது நோக்கத்தக்கது.

    ‘பேஎய்ப் பெண்டிர்’ என்று பெயர் பெறுவோர் கணவனை இழந்த  பாசுபத சமயம் சார்ந்த பெண்டிர் ஆவர். இல்லற சுகம் நீத்து நீற்றுப்பூச்சுடன் எஞ்சிய வாழ்வைக் கழிக்கும் தன்மையால் தெய்வத்தன்மை பொருந்தியோர் என்னும் கருத்தில் பேய்ப்பெண்டிர் என்று பெயர் பெற்றமை தெரிகிறது.

    “பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
    காடு முன்னினனே கட்காமுறுநன்
    தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
    பாடுநர் கடும்பும் பையென்றனவே”  (புறம்.- 238).

    என்று வெளிமான் இறந்த போது அவனது மகளிர் தொடி கழித்தமையும் பேஎய் ஆயம் என்று பெயர் பெற்றமையும் ஒருங்கே பாடப்பட்டுள்ளது.

    சுடலைத் தீயே விளக்காகக் கணவனை இழந்து அழுத கண்ணீரால் தாம் பூசிய வெண்ணீறு அவிந்து விட அங்கிருந்த பெண்டிர் பேஎய்மகளிர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர் (புறம்.- 356).

    சுடுகாட்டுக்  காட்சியைப் பாடுங்கால்;  இறந்துபட்ட கணவனைத் தழுவி அழுத பெண்கள் விளரூன் தின்று கால்பெயர்த்து ஆடும் பாசுபதத்தாரைக் கண்டு வெருவி நீங்கியமை;

    “பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி……
    ஈமவிளக்கின் வெருவரப் பேரும் காடு” (புறம்.- 359)

    எனக் குறிப்பிடப் படுவதைக் காண்கிறோம்.

    புண்பட்டுக் குருதி சோர இறந்த தம் கணவரின் உடலைத் தீண்டிச் சிவந்த கைகளால் கூந்தலை அலைத்து அழுத பெண்களைப் பேஎய்ப் பெண்டிர் என்றே சுட்டுவது நோக்கத்தக்கது (புறம்.- 62)

    பாசுபதப் பெண்டிர் கணவனை இழந்த நிலையோடு; தன் நிலையை ஒப்பிட்டுப் பேசுகிறாள் தலைவி. ஏனெனில் இன்றும் கருவுயிர்த்த பெண்ணைப் பிறர் முன்னர் நடமாடவோ; உண்ணவோ;  பூச்சூடவோ அனுமதிக்க மாட்டார்கள். மீறினால் கண்பட்டு அப்பெண் நோயுறுவாள் என்று நம்புகின்றனர். அது போன்றே கருவுயிர்த்த பெண் கணவனுடன் தனித்திருப்பின் குழந்தைக்கு சீர் தைக்கும்; வயிற்றுப்போக்கு ஏற்படும் என்றும் நம்பிக்கை உள்ளது.

    தான் தனித்திருக்க; புறத்தொழுகும் கணவனின் நடவடிக்கையைத் தாங்க மாட்டாதவளாய்ப்; ‘பாசுபத நெறியில் கணவனை இழந்த பேஎய்ப் பெண் போல நானிருக்கிறேன்’ என்று அங்கலாய்க்கிறாள் தலைவி.

    பெண்டிரும் தொழிலும் 

    கணவனை இழந்த பெண்டிர் தாமே தொழில் செய்து வாழ்ந்தமை அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் இடம்பெறுகிறது  (புறம்.- 125&326).

    “ஆளில் பெண்டிர் தாளின் செய்த
    நுணங்கு நுண் பனுவல் போலக்” (நற்.- 353)

    கணங்கொள் மாமழை காட்சி அளித்தமை உவமையில் விளக்கம் பெறுகிறது.

    தமது வறுமை காரணமாக சேவல்கள் கொத்திப் பிளந்து போட்ட பருத்திக்கொட்டைகளை உணவிற்காகச் சேர்த்து வைத்தமை; காட்டுவழியை வருணிக்கும் பின்புலத்தில் ‘நல்கூர் பெண்டிர்’ செய்கையாகப் புனையப்பட்டுள்ளது (அகம்.-129). பருத்தி விதையில் இருந்து எடுக்கப்படும் பாலுடன் இனிப்பு சேர்த்துக்கஞ்சி காய்ச்சும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. அது மிகுந்த மருத்துவ குணம் கொண்டதென்ற கொள்கையும் உள்ளது.

    ஆனால் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் நற்றிணைக்கு எழுதிய உரையில்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளையும் சேர்ந்து எழுதிய அகநானூற்று  உரையிலிருந்து மாறுபட்டு; நல்கூர் பெண்டிர் என்போர் ‘பெண் தன்மையில் குறையுடையோர்’ என்று பொருளுரைப்பது (நற்.- 90) ஏற்றுக் கொள்ளுமாப் போல இல்லை.

    சில சேரிகள் சேர்ந்தமையும் வாழ்விடமாகிய சீறூர்ப் பெண்டிரின் வாழ்க்கைநிலை பின்தங்கியதாகக் காணப்படுகின்றது. காட்டுவழி பற்றிய வருணனையில் சீறூர்ப்பெண்டிர் இடம்பெறுகின்றனர். அவர்கள் விருந்தயர்வது;

    “பல்கவர் மருப்பின் முதுமான் போக்கிச்
    சில் உணா தந்த சீறூர் பெண்டிர்” (அகம்.- 283)

    என்ற பாடலடிகளில் காட்டப்படுகிறது.  அவ்வுணவின் தன்மை பற்றிய அடைமொழி அவர்களது எளிய வாழ்வு முறையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. மான்களை விரட்டி விட்டுக் கொண்டுவந்த சிறிதளவு உணவு என்பது; மானுண்டு எஞ்சிய உணவு என்று விளக்கம் அளிக்கிறார் உரையாசிரியர்.

    கள்விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்டிர் ‘அரியல் பெண்டிர்’ (அகம்.- 157) என்று சுட்டப்படுகின்றனர். அவர்கள் இடையில் சுமந்து வரும் விரிந்த பானையின் குவிந்த முனை சொரிந்த வடிகட்டிய கள்ளை அருந்தும்  பாலைநிலத்து மறவர் பற்றித் தலைவி பேசுகிறாள்.

    விலைநலப் பெண்டிர் பொருள் உடைய செல்வந்தர்பால் சேர்ந்து வளம் பெற்ற செய்தி உவமையாகச் சொல்லப்படுகிறது (புறம்.- 365).

    பெண்டிர் தகுதி

    புறப்பாடல்கள் பெண்டிர் தகுதி பற்றிய ஆவணங்களாக உள்ளன.

    கணவன் வினைநிமித்தம் அகன்று சென்றிருந்தாலும் மனைவி இரவலர்க்குப் பரிசில் வழங்கும் தகுதி பெற்று இருந்ததை கண்டீரக்கோன் நள்ளியின் மனையாள் செயல் மூலம் அறிகிறோம். நள்ளி தொலைதூரம் பிரிந்து போயிருந்தக்கால் பாணர்க்குப் பிடி யானைகளை அவள் பரிசளித்ததாகப் போற்றப்படுகிறாள்.

    “கிழவன் சேட்புலம் படரின் இழை அணிந்து
    புன்தலை மடப்பிடி பரிசிலாகப்
    பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண்புகழ்க்
    கண்டீரக்கோன்” (புறம்.- 151)

    என்று புகழும் புலவரின் நோக்கம் அந்த வேளாளனின் புகழ் பாடுவதே என்றாலும்; அவனது மனைவியின் தகுதிப்பாடு கூறி  இங்கே பெருமைப் படுத்தப்படுகிறான்.

    முதுகுடிப் பெண்டிர் தாம் வாழ்ந்த சமுதாயத்திற்குத் தேவையான வீரத்தைத் தம் மக்களுக்கு ஊட்டித் தியாகம் செய்யத் தயாராக இருந்தமை;

    “இன்ன விறலும் உள கொல் நமக்கு என
    மூதிற் பெண்டிர் கசிந்து அழ நாணிக்
    கூற்று” (புறம்.- 19)

    கண்ணோடியது என்னும் புனைந்துரை மூலம் தெரிகிறது. கணவன், சகோதரன், மகன் என உறவுகள் அனைவரையும் போரில் பறிகொடுத்தும்; தம் வாழ்வாதாரம் காக்க வீரமரணம் அடைந்ததையே பெருமையெனக் கருதிக் கண்ணீர் விட்ட காட்சிக்கு மூதில் பெண்டிர் ஆதாரமாக அமைந்துள்ளனர்.

    தலைவனின் தாயாகிய சீறூர் நல்கூர் பெண்டு

    கற்புக்கடம் பூண்டு; தன் பிறந்த வீட்டிலிருந்து காதலனுடன் செல்லும் தலைவிக்குத் தம் மனையில் சிலம்புகழி நோன்பு நிகழ்த்தும் பண்பாடு பெண்டிரிடம் இருந்தது. வறுமை வாய்ப்பட்டு இருப்பினும் தலைவனையும் தலைவியையும் இல்லறத்தில் இணைக்கும் செயலைப் பெண்டிர் தயக்கமின்றிச் செய்தனர். ஓர் பசுவை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு; ஒரே ஒரு தூண் மட்டுமே நிற்கும் முற்றத்தை உடைய; நல்கூர் பெண்டிரின் ‘புல்வேய் குரம்பையில்’; தலைவனுடன் போன தன் மகளுக்குச் சிலம்புகழி நோன்பு நடக்குமே என நொந்து புலம்புகிறாள் செல்வக்குடியைச் சேர்ந்த தாய் (அகம்.- 369).

    முடிவுரை

    ஊர்ப்பெண்டிர் பழி சுமத்துதல், கமுக்கமாக ஜாடை பேசுதல், ஆரவாரமாக அலர் தூற்றுதல் ஆகிய செயல்கள் உடையவராய்ப்  பேசப்படுகின்றனர்; ஒருசேர வசைபாடப் பெறுகின்றனர்.

    கணவனை இழந்த  பாசுபத சமயம் சார்ந்த பெண்டிர் பேஎய்மகளிர் என்றே குறிப்பிடப்பட்டனர். ஆளில் பெண்டிர் நூற்புத் தொழில் செய்து வாழ்ந்தனர். நல்கூர் பெண்டிர் பருத்திக்கொட்டைகளை அன்றாட உணவிற்காகச் சேகரித்தனர். சீறூர்ப் பெண்டிரின் வாழ்க்கைநிலை பின்தங்கி இருந்தது. கள்விற்கும் தொழிலிலும் பெண்கள் ஈடுபட்டனர். விலைநலப் பெண்டிர் பொருளுடைய  செல்வந்தரிடம் சேர்ந்து வளம் பெற்றனர்.

    கணவன் வினைநிமித்தம் அகன்று சென்றிருந்தாலும் மனைவி இரவலர்க்குப் பரிசில் வழங்கும் தகுதி பெற்று இருந்தாள். முதுகுடிப் பெண்டிர் தாம் வாழ்ந்த சமுதாயத்திற்குத் தேவையான வீரத்தைத் தம் மக்களுக்கு ஊட்டித் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர்.

    வறுமை வாய்ப்பட்டு இருப்பினும் பண்பாடு காத்துத் தலைவனையும் தலைவியையும் இல்லறத்தில் இணைக்கும் செயலைப் பெண்டிர் தயக்கமின்றிச் செய்தனர்.

    Share
  • Great food donation happens at Mandaveli

    Great food donation happens at Mandaveli

    Baskar Seshadri

    He is Sri Lingeswaran, a resident of Mandaveli. He is a devotee of Kollimalai siddhar and has been spending good amount of money for the cause of the poor and donates a lot to various charitable trusts.

    Here in Mandaveli since the outbreak of corona he has been making mass feeding to hundreds of people everyday and you can find a serpentine queue everyday to get the food in the morning and during lunch hours.

    Local construction workers, Ricksha waalahas, and all sorts of people gather every day to get their food. He had made arrangements to ensure that its done in an orderly manner. Steel barricades are erected as a make shift barrier and water is provided for washing the hands and to drink.

    He has a team of workers and staffs to conduct this everyday.

    What more?

    His daughter Dr. Mohana is giving free consultation every day in the morning and evening. She is from AIIMS and also handles the patients at Sri Ranga Nursing Home, Devanathan street

    Of course there are some complaints that its an encroachment happening everyday and the managers of the Trust denies this and say all best actions are in place.

    There are some issues which I don’t deny since I had noticed few times about the crowd that surge there. In fact old used Betel nut Plate are thrown over and sometimes they float during rains and reach the next street ..

    If some extra care is taken this can be regularised better with no inconvenience to any one. I plan to tell them my ideas sometime. On the other hand, their generosity is something extraordinary and one has to emulate the quality of GIVING. This food donation happens at Thiruvengadam street , Mandaveli.

    Share
  • நாவலர் பெருமான்!

    நாவலர் பெருமான்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    அன்னியமாம் பேரிருளில் அகப்பட்ட சைவமதை
    முன்னின்று பேரொளியாய்க் காத்திடவே வந்தமைந்த
    நல்லைநகர் நாவலராய் நல்வரமாய் ஆறுமுகம்
    எல்லோரும் மதித்திடவே பிறந்தனரே ஈழத்தில்

    கருவினிலே சமயநெறி நிறைந்தவராய்ப் பிறந்தமையால்
    கருதியது அத்தனையும் சமயநெறி ஆகியது
    குறைகளையப் புறப்பட்ட குறையில்லாப் பெருமகனாய்
    நிறையறிவாய் விளங்கினரே நிமலனருள் நாவலரும்

    நீறணிந்த மேனியராய் நெஞ்சமெலாம் சிவனினைவாய்
    ஆறுமுக நாவலரும் ஆசாரம் பேணினரே
    தந்தையினைக் குருவாக்கி தாம்கற்றார் பலவற்றை
    ஐயமின்றி கற்பதிலே அவர்கவனம் நின்றதுவே

    ஆங்கிலத்தைக் கற்றிட்டார் அன்னியத்தை ஒதுக்கிட்டார்
    அழகுதமிழ் இலக்கணத்தை அறிந்துவிட உரைவகுத்தார்
    பாமரரும் விளங்குதற்குப் பாங்கான உரைநடையைப்
    பக்குவமாய் வழங்கிட்ட வல்லாளர் ஆகிநின்றார்

    சமயத்தை விளக்குதற்குச் சரியான வழியென்று
    பிரசங்க வடிவத்தைப் பேருரமாய்க் கொண்டாரே
    அரனாரின் ஆலயங்கள் அரங்கமாய் ஆக்கியே
    ஆறுமுக நாவலரும் அரும்பணிகள் ஆற்றிநின்றார்

    சமயத்தை வளர்ப்பதற்குத் தமிழையே கையெடுத்தார்
    தமிழ்கொண்டு சைவத்தைத் தான்விளக்க முன்னின்றார்
    கல்வியொடு ஒழுக்கமதைக் கற்பிக்கப் பலபள்ளி
    நல்லைநகர் நாவலரும் நன்றாகத் தாபித்தார்

    அன்னைத் தமிழோடு ஆங்கிலமும் வடமொழியும்
    ஆறுமுக நாவலரின் அரணாக அமைந்ததுவே
    கேட்டிடுவார் மனம்பதியக் கருத்துரைக்கும் ஆளுமையால்
    நல்லைநகர் பெருமானார் எல்லையிலாப் புகழடைந்தார்

    ஈழத்தின் வரலாற்றில் இணையில்லாப் பெருமகனாய்
    நல்லைநகர் நாவலரை நாடுபோற்றி நிற்கிறது
    வேதமொடு ஆகமங்கள் விளங்குகின்ற சைவமதம்
    நாவலரை நினைப்பதற்கு நம்சொத்தாய் அமைந்திருக்கு

    Share
  • குறளின் கதிர்களாய்…(330)

    குறளின் கதிர்களாய்…(330)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(330)

    செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
    னல்விருந்து வானத் தவர்க்கு.

    – திருக்குறள் – 86 (விருந்தோம்பல்)

    புதுக் கவிதையில்...

    வந்த விருந்தினரை
    நன்கு உபசரித்து,
    மேலும்
    வரவிருக்கும் விருந்தினரை
    எதிர்பார்த்து அவரோடுண்ணக்
    காத்திருப்பவன்,
    மறுபிறப்பில் தேவனாய்
    வானிலுள்ளோர்க்கு
    நல்விருந்தாய் ஆவான்…!

    குறும்பாவில்...

    வந்த விருந்தை உபசரித்து
    வரும் விருந்தினருடன் சேர்ந்துண்ணக் காத்திருப்போன்,
    மறுபிறப்பில் தேவனாய் விண்ணோர் விருந்தாவான்…!

    மரபுக் கவிதையில்...

    தேடி வந்த விருந்தினர்கள்
    திகட்டு மளவில் உபசரித்தே,
    நாடி யினிமேல் வரப்போகும்
    நல்விருந் துடனே சேர்ந்தேதான்
    கூடி உணவது உண்டிடும்நல்
    கொள்கை யோடு காத்திருப்போன்,
    தேடும் தேவனாய் மறுபிறப்பில்
    தெய்வ வானோர் விருந்தாமே…!

    லிமரைக்கூ

    வந்திருந்த விருந்தினர் உண்ண உதவி,
    உபசரித்தனுப்பி யவரை, வருவிருந்தோடுண்ணக் காத்திருப்பவனைத்
    தேடிவரும் வானோர்விருந்தெனும் தேவ பதவி…!

    கிராமிய பாணியில்...

    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
    விருந்தாளிய ஒபசரிக்கணும்,
    ஒருகொறயுமில்லாம ஒபசரிக்கணும்..

    வந்த விருந்தாளிய
    ஒருகொறயும் இல்லாம
    ஒபசரிச்சி அனுப்பிட்டு,
    வரப்போற விருந்தாளிய எதிர்பாத்து
    அவுங்களோடச் சாப்புடக் காத்திருக்கும்
    உத்தமந்தான்,
    மறுபொறப்புல தேவனாகி
    மேல் ஒலகத்தில உள்ளவங்களுக்கு
    விருந்தாப் போவானே..

    அதால
    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
    விருந்தாளிய ஒபசரிக்கணும்,
    ஒருகொறயுமில்லாம ஒபசரிக்கணும்…!

    Share
  • Alert: அடையாற்றின் கரையில் உடைப்பு

    Alert: அடையாற்றின் கரையில் உடைப்பு

    அடையாறு நதியின் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்றிலிருந்து மேற்குத் தாம்பரம், பெருங்களத்தூர், வரதராஜபுரம், பாலாஜி நகர், குட்வில் நகர்… என இதைச் சுற்றியுள்ள 20 ஊர்களில் தண்ணீர் புகுந்துள்ளது. கால்வாய்களில் நீர்மட்டம் ஏறி, கரைகளை மீறி நாலாபுறமும் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. சாலைகளை மூழ்கடித்து, வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரை உடைந்துள்ள பகுதியை இங்கே பார்க்கலாம். தாம்பரம் பெருநகராட்சி உடனடி நடவடிக்கை எடுத்து, கரையை அடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சனிப்பெயர்ச்சி பலன்கள் | 2020 – 23 | வேதா கோபாலன்

    சனிப்பெயர்ச்சி பலன்கள் | 2020 – 23 | வேதா கோபாலன்

    ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ. 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள், பரிகாரங்களுடன், எந்தெந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புரெவிப் புயல் கனமழை

    புரெவிப் புயல் கனமழை

    இன்று காலை புரெவிப் புயலுடன் சேர்ந்த கனமழை, சென்னை, தாம்பரத்தில் உள்ள நம் பகுதியைப் புரட்டி எடுத்தது.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 3

    அண்ணாகண்ணன் காணொலிகள் 3

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    தோசை சாப்பிடும் அணில்

    நம் வீட்டுத் தோசையை வெளுத்துக் கட்டும் அணில்.

    Rain drops | மழைத்துளிகள்

    புரவிப் புயல், சென்னை தாம்பரத்தில் நம் பகுதியில் சில்லென்ற சூழலையும் சிறு தூறலையும் நாள்முழுக்கத் தந்துள்ளது. நீர்ப்படுகை மீது மழைத்துளிகள் வரையும் வட்டங்களும் ஓவியங்களும் தனி அழகு. பார்த்து மகிழுங்கள்.

    Squirrel is biting Neem stick

    வேப்பங்குச்சியைக் கடிக்கும் அணில்.

    Two Red-vented Bulbuls

    புரவிப் புயல் நாளில் இரு சின்னான்கள். இடம்: சென்னை

     

    வேப்பமர உச்சியிலே சின்னான்

    Red-vented Bulbul is singing on the top of Neem tree

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share