Blog

  • 2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது

    Posted on October 20, 2018
    Trina Solar Company Supplies Solar Power Modules to
    Ukraine’s Largest Solar Power Plant
     
     
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
     
    ++++++++++++++++++

    சூரியக்கதிர் மின்சக்தி சேமிக்க,
    நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள
    ஓரரும் பெரும் மின்கலம்
    தாரணியில் உருவாகி விட்டது
    வாணிபப் படைப்புச் சாதனமாய் !
    தட்டாம்பூச்சி போல் பறக்க
    வானூர்திக்குப் பயன்படப் போகுது !
    பரிதி சக்தியால் பறக்கும் !
    எரி வாயு இல்லாமல் பறக்கும் !
    பகலிலும் இரவிலும் பறக்கும் !
    பசுமைப் புரட்சியில் பிறக்கும்  !
    பாதுகாப்பாய் இயங்குவது !
    நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் 
    நான்கு காற்றாடி உந்துது !
    பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
    பரிதிச் சக்தி ஊட்டும்  !
    ஒற்றை விமானி ஓட்டுவார் !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாட்களில்  உலகைச் சுற்றியது.
    சூரியக்கதிர் தட்டுகள்  அனுதினம்
    பராமரிக் கப்பட வேண்டும்.  
    நூறாண்டு முன் பறந்த
    ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    +++++++++++++++++++++++

    See the source image
     
     
    இந்திய சூரியக்கதிர் மின்சக்தி விருத்திக்கு வெளிநாட்டு நிறுவகங்கள் சாதனங்கள்  உற்பத்தி செய்யும்.
     
     
    2022 ஆண்டுக்குள் மொத்த 100,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மிகப்பெரு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் இந்தியாவில் நிறுவ, வெளிநாட்டு சூரியக்கதிர் நிறுவகங்கள் பங்கெடுக்கும் என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 2015 ஜூன் முதல் தேதி டெல்லியில் அறிவித்தார்.   உள்நாட்டு நிறுவகங்கள் தமது தொழிற் சாதனங் களை, மேல்நாட்டு நிறுவகங்கள் மூலமாய் மேம்படுத்த  முன்வந்துள்ளன.  இன்னும் ஓராண்டுக்குள் மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு நிறுவகங்கள் இந்தியாவில்  ஆரம்பிக்கத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  2015 நவம்பரில் தற்போதுள்ள சிறு திட்டமான 3000 மெகாவாட் நிறுவகத்திலிருந்து, 100,000 மெகாவாட் பெருந் திட்டத்துக்கு விரிவு படுத்தினார்.
    See the source image
    2015 ஆண்டில் மொத்த சூரியக்கதிர் மின்சக்தி நிலைய நிறுவகம் :  2700 மெகாவாட்.
    இந்திய  உற்பத்தி தகுதி : 2000 மெகாவாட் சூரியக்கதிர்ச் சாதன தட்டுகள் [Solar Power Modules]
    சூரியக் கதிர் மூலவிகள் [Solar Power PV Cells]   : 500 மெகவாட்.
    உள்நாட்டு சூரியக் கதிர் மூலவிகள் [PV Cells], வெளிநாட்டு விலையை விட 15 cents மிகையான விலையில் உள்ளன.  வெளிநாட்டு இறக்குமதி சூரியக் கதிர்ச் சாதனங்கள் நிதிச் செலவு, 7% – 8% குறைவாகவே உள்ளது.   சோலார் எனர்ஜி நிறுவகம் [SunEdison] இந்தியாவில் கட்டுமானம் செய்ய ஆகும் செலவு  [2015 நாணய மதிப்பு]  சுமார் 4 பில்லியன் டாலர்.
    indian solar industry
    Trina Solar Company to Invest $500 Million in Indian Solar Industry
    [December 4, 2017]
    See the source image
    See the source image
    ராஜஸ்தான் மாது சூரிய கதிர்த் தட்டுகளைத்
    துப்புரவு செய்கிறார்

    ++++++++++++

     

    magazine
    ++++++++++++++++++++++++++++
    இந்தியச்  சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள்
     
     சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும்  உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்”  [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது.  தற்போதைய  பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும்,  அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு  [Climate, Improper Installation, Lack of Maintenance]  ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல !
    இந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து  [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத்  ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை  வரை ஆராய்ந்து தீர்வுகள் கூற வந்தது.  ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.  அதற்கு  புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம்  [Ministry of New & Renewable Energy (MNRE)]  &   [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டன.
    ஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை
    +++++++++++++++++++
    உலக நிறுவன அரங்குகளில்  சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில்  [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெக்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று    [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds]  யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ஆசியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin]  கூறுகிறார்.  குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது.  இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில்  சிரமாக உள்ளது.
    சூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும்.
     
    கூரையில்’ ஒளித்தட்டுகள் அமைப்பு
     
    +++++++++++++
     
    +++++++++++++++++

     சூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.
    2013 -2014 ஆண்டுகட்கு  இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி   [Solar Energy Industries Association ]  அறிவித்துள்ளது.  அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது.  மீள் பயன்பாடு கனல் எருவுக்கு மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும்  தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது.  இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.
     
    அதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு  [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)]  தயாராகி வருகின்றன.  2010 ஆண்டிலிருந்துசூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது.  பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு   [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும்.  2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை.  அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters] விலைகளும் சேர்க்கப் படவேண்டும்.
    உதாரணமாக 2013 ஆண்டில்  ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh  மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையக  [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார்.  அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது.  அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது.  அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது.  அதனால் 25 ஆண்டுகட்டு  சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.

    World’s Largest Lithium Ion Battery Banks

    By Tesla

    ++++++++++++++++++++

     

    மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.

    2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியா வின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார்.  2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும்  மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார்.  2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது  100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார்.  அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

    A close-up of Musk's face while giving a talk
    Elon Musk 
    Space X Falcon Heavy Rocket Pioneer
    BORN Elon Reeve Musk
    June 28, 1971 (age 46)
    PretoriaTransvaal (now Gauteng), South Africa
    RESIDENCE Bel AirLos AngelesCalifornia, U.S.[1][2]
    CITIZENSHIP
    • South Africa (1971–present)
    • Canada (1989–present)
    • United States (2002–present)
    ALMA MATER
    OCCUPATION Entrepreneurengineerinventor, and investor
    KNOWN FOR SpaceXPayPalTesla Inc.HyperloopSolarCityOpenAIThe Boring CompanyNeuralinkZip2
    NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6]
    TITLE
    SPOUSE(S)
    CHILDREN 6
    PARENT(S)
    RELATIVES
    SIGNATURE

    Image result for Lithium Ion Research

    Image result for Solar Power Fuel Cell

    இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும்.  அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது.  மீள்சுழற்சி  கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை.  2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.  நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும்.  மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.

    Image result for Lithium Ion Technology

    Image result for Solar Power Fuel Cell

    மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது.  2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன.  அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது.  2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய்  ஏறிவிடும்  என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for Lithium Ion Technology

    Elon Musk’s Tesla Roadster
    Tesla Roadster in Falcon Heavy fairing.jpg
    The Tesla Roadster mounted on its payload adapter before fairing encapsulation
    OPERATOR SpaceX
    MANUFACTURER Tesla
    INSTRUMENT TYPE Inert mass
    FUNCTION Dummy payload
    WEBSITE spacex.com
    PROPERTIES
    MASS Approximately 1,300 kg (2,900 lb)
    HOST SPACECRAFT
    LAUNCH DATE January 2018
    ROCKET Falcon Heavy
    LAUNCH SITE KennedyLC-39A
    ORBIT Heliocentric

    Image result for Solar Power Fuel Cell

    மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும்.  எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது.  லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட  20% கனல்சக்தி  திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு.  நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும்.  2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for large size 100 mw battery

    Image result for Solar Power Fuel Cell

    மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன.  சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது.  மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.

    Image result for Solar Power Fuel Cell

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    ++++++++++++++++++

    Image result for Lithium Ion Research

    1.  http://www.solardaily.com/reports/PI_Berlin_examines_risks_facing_PV_projects_in_India_999.html  [August 2, 2018]
    2. https://natgrp.wordpress.com/tag/renewable-energy-certificates/  [October 19, 2016]
    3. https://solarpowermanagement.net/home
    4. http://www.solardaily.com/reports/Denver_takes_big_step_on_renewables_999.html [July 18, 2018
    5. http://www.solardaily.com/reports/KYOCERA_TCL_Solar_Completes_28MW_Solar_Power_Plant_in_Miyagi_Prefecture_Japan_999.html [August 2, 2018]
    6. https://www.marketscreener.com/KYOCERA-CORP-6492472/news/Kyocera-finishes-28-MW-solar-power-plant-in-Taiwa-Japan-26991864/ [July 25, 2018]
    7. https://economictimes.indiatimes.com/industry/energy/power/governments-target-to-set-up-100-gw-of-solar-plants-drives-local-foreign-companies/articleshow/47494798.cms [June 1, 2015]
    8.  http://www.saurenergy.com/solar-energy-news/trina-to-invest-usd-500-million-in-indian-solar-industry  [December 4, 2017]
    9. http://www.solardaily.com/reports/Trina_Solar_Supplies_Modules_to_Ukraines_Largest_Solar_Power_Plant_999.html [October 18, 2018]
    10. http://www.solardaily.com/reports/Renewable_energy_is_common_ground_for_Democrats_and_Republicans_999.html [October 17, 2018]

    +++++++++++++++++++++++++

    Share
  • ”மை LOVE வாப்பூர் டைம்ஸ்’’….!

    கிரேஸி மோகன்
    —————————

    மயிலாப்பூர்வாசிகளுக்கு நாகேஸ்வரராவ் பார்க்தான் காதல்கோட்டை. கல்லூரி நாட்களில் நான், விச்சு, நடராஜன் மூவரும் வேலை மெனக்கெட்டு பார்க்குக்கு வரும் காதலர்களை வேவு பார்க்கப் போவோம். லவ் டுடே பற்றி எனக்கு தெரியாது. அந்நாளில் மயிலாப்பூர் லவ் மடியாக ஆச்சாரத்தோடு இருந்தது. இரண்டு குழந்தைகளுக்கு இடையே உள்ள போதிய இடைவெளிவிட்டு காதலர்கள் அமர்ந்து (நாங்கள் பார்த்த காதலர்களில் பாதி பேர்கள் நாலு முழ வேட்டி, காலர் அழுக்காகாமல் இருக்க கழுத்தில் கர்சீப், சொக்காயின் கைக்கு வெளியே எட்டிப் பார்க்கும் கைவைத்த உள் பனியன், நெற்றியில் காதல் நிறைவேற கபாலீஸ்வரர் விபூதி, கற்பகாம்பாள் குங்குமம், சீனுவாசப் பெருமாள் தாயார் சன்னிதி மஞ்சள் காப்பு. பேசினால் அனுமார் கோயிலில் சாப்பிட்ட துளசி வாசனை தூக்கும்)
    ‘இவன் காதலிக்க வந்தானா?’ இல்லை கோயில் கச்சேரிக்கு தவில் வாசிக்க வந்தானா?’ என்று
    எண்ணத் தோன்றும்….

    சுவாரஸ்யமாக பேசியபடி பார்க் புல்லை காதலர் இருவரும் பிடுங்கி பிடுங்கி
    வாயில் வைத்து கடிப்பார்கள். காதலர்கள் வருவதற்கு முன்பு ஹவுஸ்புல்லாக இருந்த பார்க் எழுந்து போகும் போது புல்லே இல்லாமல் கார்-பார்க் செய்யும் அளவுக்கு வெட்ட வெளியாகிவிடும்.
    காதல் தோல்வி அடைந்தவர்களையும் பார்த்திருக்கிறோம், காதலில் வெற்றி அடைந்து கல்யாணமாகி தோல்வி அடைந்தவர்களையும் பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் விட வேடிக்கை என்னவென்றால் அன்று நாங்கள் பார்த்த காதல் ஜோடிகளில் ஓரிரு ஜோடிகள் இன்றும்கூட அதே நாகேஸ்வரராவ் பார்க்கில் இளம் நரை, கொட்டாவி, ஏப்பம், இருமலோடு புல்லைப் பிடுங்கிக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    காதலர்களை வேவு பார்ப்பதிலேயே ஜன்ம சாபல்யம் அடைந்து கொண்டிருந்த எங்கள் மூவரில் “டயமாச்சுடா… அப்பா கோவிச்சுப்பா…” என்று அசமஞ்ஜமாக பேசும் நடராஜன், பார்க்கில் பெஞ்சில் அமர்ந்து கெமிஸ்ட்ரி படிக்கும் கெளசல்யாவைக் கண்டதும் காதலாகி கசிந்து கண்ணீர் மல்க ஆரம்பித்தான். அந்நாளில் சைக்கிள் வித்தைகள் தெரிந்த நடராஜனை ‘ஹெர்குலிஸ்’ஸாகவே மதித்து பெண்கள் பெரிதும் விரும்பி ரசிப்பார்கள். நடராஜன் சைக்கிளை சரளி வரிசை, ஜண்ட வரிசை, கீர்த்தனம் என்று முறையாகப் பயின்ற மகாவித்வான். நானும் விச்சுவும் போட்டு தந்த திட்டப்படி கெளசல்யாவின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடராஜன் நாகேஸ்வரராவ் பார்க் அருகில் சைக்கிளில் அசுர சாகசங்களை செய்தான். கெளசல்யா எதிரே வரும் போது குரங்கு பெடலில் சுருதி சேர்த்துக் கொண்டு வரும் நடராஜன் தடாலென ஆரோகணத்துக்கு தாவி சீட்டில் அமர்ந்து இரண்டு கைகளையும் விட்டு பாலன்ஸ் ஆலாபனை செய்தபடி உச்சஸ்தாயியில் செல்லும்போது சட்டென்று அவரோகணமாக பின் சீட்டுக்கு இறங்கி, பின்பு அதிலிருந்து ரோட்டில் குதித்து சைக்கிளை மட்டும் தனி ஆவர்த்தனமாக சிறிது நேரம் ஓடவிட்டு, பின்பு அதை துரத்திச் சென்று ஜல்லிக்கட்டு காளையைப் பிடிப்பது போல ஹாண்டில் பாரைப் பிடித்து ஒரே ஜம்பில் சீட்டுக்கு தாவ… கெளசல்யா “நீயல்லவோ வீரன்” என்று கண்களால் தெரிவித்துவிட்டு கமிட் செய்யாமல் போய் விட்டாள்.

    நடராஜன் கேட்டுக் கொண்டதன் பேரில் ஓரளவு ஆகுபெயர், வினைத்தொகை தெரிந்த விச்சு
    “கெளசல்யா, நீ வானம்னா நான் பூமி, நீ பூமின்னா நான் வயல்… நான் வயல்னா நீ நாத்து…
    நீ நாத்துன்னா நான் வாத்து” என்ற ரீதியில் ஒரு காதல் கடிதம் எழுதித் தர… நடராஜன் அதை நேரிடையாக தந்தான். அதைப் படித்து விட்டு சிறிது நேரம் விசும்பி விசும்பி அழுத கெளசல்யா, நடராஜனின் வலது கையை பிடித்து, “கவிதை எழுதிய கைக்கு என் பரிசு” என்று செல்லமாக கையில் முத்தமிட்டு “நடராஜன்… கி.வா.ஜ.வுக்கு நீங்க உறவா?” என்று பேந்த பேந்த முழிக்கும் நடராஜனை பேசவிடாமல் “ஐ லவ் யூ” சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

    வழக்கம் போல காதலுக்கு மரியாதை இல்லை. “நடராஜனும் கெளசல்யாவும் பாம்பேக்கு ஓடிப்போவது” என்று நான் முன்மொழிய பின்வழிந்தான் விச்சு. ஓடிப்போகும் திட்டத்தை கெளசல்யாவிடம் தெரிவிக்கும் ரிஸ்க்கான பொறுப்பை விச்சு ஏற்றுக் கொண்டான். மறுநாள் இரவு எட்டு மணிக்கு நாங்கள் நாகேஸ்வரராவ் பார்க்கில் நுழைந்தபோது திட்டமிட்டபடி ஆலமரத்தடியில் நீலநிறப்புடவையுடன் கெளசல்யா அமர்ந்திருந்தாள். நடராஜன் அருகில் சென்று “கெளசல்யா ரெடியா…” என்று தோளைத் தொட்டு திருப்ப கெளசல்யாவின் அப்பா நீல புடவையை களைந்து, “ம்… ரெடி,
    ஸ்டெடி ஜூட்” என்று சொல்லி நடராஜனை துரத்தி துரத்தி அடித்தார். டினோசர் போல
    நடராஜனை புரட்டி புரட்டி எடுத்து ஒரேடியாக நாகேஸ்வரராவ் பார்க்கை ஜுராஸிக் பார்க் ஆக்கினார் கெளசல்யாவின் தந்தை.

    சமீபத்தில் கெளசல்யாவை அம்பிகா அப்பளம் வாசலில் பார்த்தேன். “என்ன மோகன் செளக்கியமா…
    ஒரு நிமிஷம்” என்று கூறிவிட்டு கடைக்குள் பார்த்து, ஏங்க… வாங்க யார் பாருங்க இங்க…” என்று கூற விச்சு நாலு குழந்தைகளுடன் வந்தான். கெளசல்யாவின் அப்பாவிடம் போட்டுக் கொடுத்து நடராஜனை ஒதுக்கி இடைச் செருகலாக நுழைந்து கெளசல்யாவைக் கைப்பற்றிய விச்சுவை வில்லன் என்றும் சொல்ல முடியாது. தற்போது ஒரு பெரிய விளம்பரக் கம்பெனியின் ஓனராக இருக்கும் விச்சு கெளசல்யாவை சவுகரியமாக காப்பாற்றி வருகிறான். நடராஜன் மயிலையில்
    சைக்கிள் கடை வைத்து பஞ்சர் போட்டுக் கொண்டிருக்கிறான். நாகேஸ்வரராவ் பார்க் அருகில் அமிர்தாஞ்சனம் தயாரிக்கும் இடம் இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை… நடராஜனின் காதல் “போயே போச்… போயிந்தே… இட்ஸ்-கான்” என்று ஆகிவிட்டது.


    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181020 Vatsalya -wcol -Strathmore 160gsm tnt 9×12″ icam -lr

     

    ”மாலோலன் பாடுகிறார் மாடதனை மார்தாங்கி,
    தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -ஏலேலோ
    வாழ்க்கையில் சிக்கி வழிதவறும் எங்களை
    ஊழ்கையில் சிக்கா(து) உதவு”….!

    ’வெள்ளைப் பசுங்கன்று, பிள்ளைக் கரியமுது
    கொள்ளை அழகாக கேசவ்நீர் -தெள்ளத்
    தெளிவாகத் தீட்டி அளித்திடுவோய், இன்று,
    பொலிவுடன் கண்ண பிரான்’’….கிரேசி மோகன்….!

    Share
  • நவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன் சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு சிறப்பு ஆராதனை விழா

    ஸ்ரீரீ தன்வந்திரி பீடத்தில்

    நவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன்

    சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு சிறப்பு ஆராதனை விழா

    நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டு சூலினி துர்கா ஹோமம், குபேர சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம், மஹா சரஸ்வதி ஹோமம், ருத்ர ஹோமம், அஷ்ட பைரவர் சகித காலபைரவர் ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், காயத்ரீ ஹோமம், அன்னபூரணி ஹோமம், போன்ற பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று உரிய தெய்வங்களுக்கு மஹா அபிஷேகத்துடன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    மேலும் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாச பூஜையும் சரஸ்வதி தேவிக்கு பாலபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சீரடி சாயிபாபாவின் 100 ஆம் ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு சீரடி சாயிபாபா மூலமந்திர ஹோமமும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. மேலும் நாளை ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181018 Mahishasuramardhini wcol Strathmore 160 gsm -72 dpi 9×12” lr

    மகிடா சுரனின் மகுடம் தெறித்து
    பகடைபோல் பாய்ந்து பறித்தோய்! -சகடனை
    செற்ற முகுந்தனின் உற்ற சகோதரி
    வெற்றி(விஜய தசமி) வழிக்கு வரம்….!

    இலவுகாத்த பச்சை இலைக்கிளி போலாம்
    உலவுகாத்தில் ஓடும் உடம்பு -நிலவுகோர்த்த
    தாழ்சடையான் சம்சாரம் தாள்பணிந்து நிற்போர்க்கு
    ஆழ்கடல் சம்சாரம் ஆறு…!கிரேசி மோகன்….!

    Share
  • அமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் நீண்ட பயணம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்கான நீண்ட பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்றாலும் இப்போது எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.  இருபது வருஷங்களுக்கு முன்புகூட இவர்கள் பலரால் நிந்திக்கப்பட்டார்கள்.  (இன்னும் சில சமூகங்களில் இவர்களுக்கு மரண தண்டனைகூடக் கொடுக்கப்படுகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.)

    1998-இல் வயோமிங் என்னும் மாநிலத்தைச் சேர்ந்த லாரமீ என்னும் ஊரில் ஒரு ஓரின ஈர்ப்பாளனை இரண்டு திருடர்கள் கடத்திக்கொண்டுபோய் துன்புறுத்திப் பின் ஒரு வேலியில் தொங்கவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.  அந்தப் பக்கமாக சைக்கிளில் போய்க்கொண்டிருந்த ஒருவன் – முதலில் வயல்களில் வைக்கப்படும் சோளக்கொல்லை பொம்மை என்று நினைத்துப் போகவிருந்தவன் – பின் நிலைமையை உணர்ந்து மருத்துவமனையில் அவனைச் சேர்த்தும் அவன் – மேத்யூ ஷெப்பர்ட் – இறந்துவிட்டான்.  வயோமிங்கில் நடந்த அவனுடைய ஈமச்சடங்குகளுக்கு நிறையப் பேர் வந்திருந்தாலும் சிலர் அது அங்கு நடைபெறுவதைக் கண்டித்து சுலோகங்கள் தாங்கிய அட்டைகளைச் சுமந்துவந்தனர்.  இதனால் அங்கு மகனுடைய அடக்கம் நடைபெற்றால் பின்னால் அவனுடைய கல்லறை அப்படி எதிர்த்தவர்களால் அசிங்கப்படுத்தப்படலாம் என்று பயந்து அவனுடைய பெற்றோர்கள் இருபது வருஷங்களாக மகனுடைய அஸ்தியை புதைக்காமல் வைத்திருந்தார்கள்.  இப்போது மகனுக்கு ஒரு பாதுகாப்பான இடம் கிடைத்திருக்கிறது.  கடைசியாக மகனுக்கு அவனுக்குப் பிரியமான இடத்தில் அவனுடைய கடைசி இருப்பிடம் அமைந்திருக்கிறது என்று அவனுடைய தந்தையும் தாயும் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கிறார்கள்.  முதலில் மகனுடைய அஸ்தியை வயோமிங்கின் மலைகளின் மீதும் சம வெளிகளிலும் தூவிவிட முடிவுசெய்தனர்.  இருந்தாலும் மகனிடம் தொடர்ந்து பேசுவதற்கு ஏதுவாக ஒரு பாதுகாப்பான இடம் தேடினர்.  இப்போது கடைசியாக வாஷிங்டன் நேஷனல் கதீட்ரலில் அஸ்தியைப் புதைக்க இடம் கிடைத்திருக்கிறது.  வரும் அக்டோபர் 26-ஆம் தேதி மேத்யூவின் அஸ்தி அங்கு புதைக்கப்படும்.  இது ஜெபக் கூட்டங்களும் ஞாபகார்த்தக் கூட்டங்களும் தினமும் நடைபெறும் கதீட் ரல்.  இங்கு பெரிய அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.   பெரிய புள்ளிகளான அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்ஸன், அமெரிக்கக் கப்பற்படையில் பெரிய அதிகாரியாக விளங்கிய ஜார்ஜ் டூயீ, ஹெலென் கெல்லர், அவருடைய ஆசிரியை ஆனா சல்லிவன் ஆகியோர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.  “இவர்களோடு மேத்யூவும் புதைக்கப்பட்டிருப்பது சிறந்த காரியம்தான்” என்று பிஷப் புத்தே கூறியிருக்கிறார். சமீபத்தில் அமெரிக்க செனட்டராக இருந்த, அமெரிக்காவின் கடற்படையில் பணிபுரிந்த, வியட்நாம் சிறையில் ஐந்தரை வருடங்கள் போர்க் கைதியாகக் கழித்த செனட்டர் மெக்கெயினைக் கவுரவித்து இறைவழிபாடு நடத்தினார்கள்.

    அக்டோபர் 26-ஆம் தேதியன்று பொதுமக்களுக்கான ஜெபக்கூட்டம் முடிவடைந்ததும் மேத்யூவின் குடும்ப அங்கத்தினர்களுக்காகத் தனிப்பட்ட முறையில் நடக்கப்போகும் நிகழ்ச்சியில் மேத்யூவின் அஸ்தி அங்கு புதைக்கப்படும்.  அந்த நிகழ்ச்சிக்கு பிஷப் புத்தேயும் ராபின்ஸனும் (இவர் 2003-இல் முதல் ஓரின ஈர்ப்பாள பிஷப்பாக எபிஸ்கோப்பல் தேவாலயத்தில் சேர்ந்தவர்) தலைமை தாங்குவார்கள்.  மேத்யூவின் பெற்றோர்கள் ஓரின ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினர் என்று பலவிதமான பால் பாகு

    பாடுகளுடையவர்களின் ((LGBTQ) உரிமைகளுக்காகப் பாடுபட்டு வருகிறார்கள்.  இவர்களோடு சேர்ந்து ராபின்ஸனும் பாடுபட்டு வருகிறார்.  மேத்யூவின் அம்மா கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தக் கதீட்ரலில் மேத்யூவின் அஸ்தியைப் புதைக்க ராபின்ஸன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

    மேத்யூவின் நண்பன் ஜேஸன் மார்ட்ஸன் நண்பனின் பெயரில் ஒரு பவுண்டேஷனை ஆரம்பித்து மேத்யூவுக்குப் பிரியமான உலக அரசியல், மனித உரிமைகள் பற்றி அவன் பெயர் விளங்குமாறு செய்யப் போகிறார்.  அக்டோபர் 26-ஆம் தேதி ஜேஸனும் மேத்யூவின் அஸ்தி புதைக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.  பிஷப் ராபின்ஸன் கூறியதுபோல் இம்மாதிரி பால் பாகுபாடு உடையவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா இப்போது – மேத்யூ கொல்லப்பட்டபோது இருந்ததைவிட – எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.  மத்திய அரசாலும்  சில மாநில அரசுகளாலும் ஓரின ஈர்ப்புத் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

    2009-இல் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு மசோதாவில் மேத்யூவின் பெயர் இடம் பெற்றிருக்கிறது.  அந்த மசோதா சட்டமாக்கப்பட்டபோது ஒருவரை வெறுப்பதால் இழைக்கப்படும் கொலைகளில் (Hate Crimes- அமெரிக்காவில் இவ்வகைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை உண்டு) பால் பாகுபாட்டினால் ஒருவரை வெறுத்து இழைக்கப்படும் கொலைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.  2013-லேயே ‘மேத்யூ, என் நண்பன்’ என்னும் ஆவணப் படமும் கதீட் ரலால் வெளியிடப்பட்டது.

    “மேத்யூ கொலைசெய்யப்பட்டதிலிருந்து இந்த இருபது வருடங்களில்  எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  ஆயினும் இன்னும் எவ்வளவோ மாற வேண்டியிருக்கிறது.  பால் பாகுபாடு உடையவர்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்.  அவர்களும் கடவுளின் குழந்தைகள்.  அதனால் அவர்களுடைய பால் பாகு பாட்டினால் அவர்களை வெறுப்பதை விட்டுவிட்டு அவர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்” என்றார் பிஷப் புத்தே.

    இப்போதைய போப் பிரான்சிஸும் ஓரின ஈர்ப்பாளர்கள் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, “அவர்களைப் பற்றிக் கணிப்பதற்கு நான் யார்?  அவர்களும் கடவுளின் குழந்தைகள்” என்றார்.

    “இந்தக் கத்தீட்ரலில்  புதைக்கப்பட்டிருக்கும் மற்றப் பெரிய மனிதர்களோடு எங்கள் மகன் மேத்யூவுக்கும் இடம் கிடைத்திருப்பது நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான மகிழ்ச்சியான விஷயம்” என்று மேத்யூவின் தந்தை கூறியிருக்கிறார்.

    அமெரிக்கா பல வழிகளில் உலகிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது.  பால் பாகுபாடுடையவர்களுக்கு சமூகத்தில் உரிய இடத்தை வழங்கியிருப்பதிலும் முதன்மை வகிக்கிறது.

    இருந்தாலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அவருடைய ஆதரவாளர்களும் இதுவரை அவர்களுக்குக் கிடைத்திருக்கும் உரிமைகளை மறுத்துச் சட்டம் இயற்றிவிடுவார்களோ என்ற பயமும் வருகிறது.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (284)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். இதோ மற்றொரு வாரத்தில் உங்களுடன் மடல் மூலம் மனந்திறக்க விழைகிறேன். காலத்தின் வேகம் சூறாவளிக் காற்றின் வேகத்தைப் போல அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் வேகத்திற்கேற்ப நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளும் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. அன்றைய நாட்டின் நடப்புகள் இன்றைய நாட்டின் நடப்புக்கு ஏற்றதாகக் கருதப்படாததால் சமுதாய நிலைப்பாடுகளும் காலத்திற்கேற்பத் தமது போக்குகளை மாற்றிக் கொண்டே செல்கின்றன. இது நாட்டிற்கு நாடு அந்தந்த நாட்டின் கலாசார நிலைப்பாடுகளை ஒட்டி வேறுபடுகின்றதேயொழிய அடிப்படையில் அனைத்தும் காலத்தின் மாற்றங்களே!

    இங்கிலாந்தில் இன்று அரசியல்களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இங்கிலாந்தின் பிரதமர் தெரேசா மே அவர்கள் தமது பதவியில் நிலைத்து இருப்பாரா? எனும் கேள்வி பல அரசியல் அவதானிகள் மத்தியில் எழுப்பப்பட்டு அலசப்பட்டு வருகிறது. “ப்ரெக்ஸிட்” எனும் அந்தப் பூதம் மீண்டும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் குவளையிலிருந்து மெதுவாக தலையை வெளியே நீட்டினாலும் அந்நிகழ்வு பூதாகரமான நிகழ்வாகவே நோக்கப்படுகிறது. இங்கிலாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றத்தின் பின்னால் எவ்வகையான வியாபார ஒப்பந்தத்தை எட்டப்போகின்றன என்பதே இன்றைய முக்கியமான விவாதமாக இருக்கின்றது.

    இந்த ஒப்பந்தத்தை எட்ட இருக்கும் காலக்கெடுவானது அவசரமாகத் தனது எல்லையை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தின் ப்ரெக்ஸிட்டுக்கான அமைச்சரும், பிரதமரும் அவசரம், அவசரமாக பல கருத்துப்பரிமாறல்களை ஜரோப்பிய ஒன்றியத்துடன் நிகழ்த்தினாலும் இன்னும் தீர்க்கப்படாத சில முக்கிய விவகாரங்கள் தலையிடியைக் கொடுக்காமலில்லை. இங்கிலாந்தின் பிரதமரின் வைராக்கியத்தைப் பாராட்டமலிருக்க முடியாது. ப்ரெக்ஸிட் வேண்டும் எனும் தீர்ப்பளித்த பெரும்பான்மை இங்கிலாந்து மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அரசின் ஜனநாயகக் கடமை என அதற்குச் சார்பான அரசியல்வாதிகள் ஒருபுறம், மக்கள் ஆதரவாக வாக்களித்தார்கள் எனும் ஒரே காரணத்திற்காக நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டாலும் பரவாயில்லை ப்ரெக்ஸிட்டை நிறைவேற்றுவோம் என்பதல்ல உண்மையான ஜனநாயகம் என்று வாதிடும் அரசியல்வாதிகள் ஒருபுறம், இந்த இக்கட்டான சூழலை உபயோகித்து அரசாங்கத்தைக் கவிழ்த்துப் பொதுத்தேர்தலுக்கு வழிவகுத்தால் தமக்கு வெற்றியடைய ஒரு வாய்ப்பிருக்கும் என்று செயல்படும் எதிர்கட்சி ஒருபுறம், பிரதமரின் சூழலை உபயோகித்து பிரதமரை வீழ்த்தித் தாம் பிரதமராகலாம் எனும் எண்ணம் கொண்ட பிரதமரின் கட்சியைச் சார்ந்தோரின் முதுக்குப் பின்னால் விழும் கத்திக் குத்துகள் ஒருபுறம் என அனைத்தையும் சமாளித்துக் கொண்டு ஒரு பெண் என்று எண்ணி என்னை விழுத்தி விட முடியாது என்று செயற்படும் பிரதமரின் வைராக்யம் அலாதியானது.

    பிரதமருக்கான இந்த பிரச்சனைகள் ஓரிடத்தில் இருந்து மட்டும் வந்து விடவில்லை. அரசாங்கத்தின் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ப்ரபல்யமான அரசியல்வாதிகள் எனப்பலரும் இந்நிலைக்கு காரணகர்த்தாக்கள். இங்கே செயற்படும் எத்தனை பேர் நாட்டின் நன்மையை முன்வைத்து செயற்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியே! இன்னும் இரண்டு தினங்களில் கூட இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத்தொடரில் ஒரு முடிவும், உடன்படிக்கையும் எட்டப்படாவிட்டால் உடன்படிக்கையற்ற ஒரு விலகலையே இங்கிலாந்து எதிர்நோக்க வேண்டிவரும். அத்தகைய ஓர் முடிவினால் எத்தகைய பொருளாதாரப் பின்னடைவுக்கு இங்கிலாந்து முகம் கொடுக்க வேண்டிவரும் என்பது யாராலும் கூறமுடியாத ஒரு விடயமாகும். பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொண்டாலும்,ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவானவர்கள் இப்பின்னடைவு மிகவும் தற்காலிகமானது அதைத்தொடர்ந்து வரும் முன்னேற்றம் இப்பின்னடைவினை நியாயப்படுத்தும் என்கிறார்கள். ஆனால் ப்ரெக்ஸிட்டுக்கு எதிரானவர்களோ இப்பின்னடைவு எமது பொருளாதாரத்தை ஒரு பத்து வருடங்களுக்கு மேலாகப் பின் தள்ளும் என்கிறார்கள். இத்தகைய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் படலத்தை இதுவரை எந்த ஒரு நாடுமோ மேற்கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரித்திரத்திலேயே இத்தகைய ஒரு நிகழ்வு இப்போதுதான் முதன்முறையாக நிகழ்கிறது.

    பிரதமர் திரேஸா மே அவர்கள் நாட்டின் முன்னேற்ற்த்துக்கான உடன்படிக்கையை நிறைவேற்றித் தனது சங்கற்பத்தை நிறைவேற்றுவாரா? இல்லை பதவியைப் பறிகொடுப்பாரா?  இங்கிலாந்தின் பொருளாதாரம் எவ்வகையில் பாதிக்கப்படப் போகிறது? இக்கேள்விகளுக்கெல்லாம் விடையை அடுத்த வாரம் பகன்று விடுமா? இல்லை இன்னும் ஏக்கத்தின் விளிம்பில் காத்திருக்க வேண்டுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்
    16.10.2018

     

    Share
  • சங்க காலப் பெண் கவிஞர்கள் போற்றும் மானுட விழுமியங்கள்      

    முனைவைர் பா.தமிழரசி

    தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,

    அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,

    சிவகாசி.

    மானுட விழுமியங்கள்:

    பண்பாட்டைச் சோர்ந்தோர் தம் வாழ்க்கைக்கும் செயல்முறைக்கும் தொடர்புடையதான விழுமியங்களைக் கொண்டு ஒழுகுவர். தவிர்க்க வேண்டியவற்றை நீக்குவர். அவை தம் பண்பாட்டு விழுமியங்களோடு கலந்து விடாது பார்த்துக் கொள்வர். தனிமனித விழுமியம் என்றில்லாமல் தனித்த ஒரு சமூக விழுமியம் என்று காத்துக் கொள்வர். ஒரு சமூகத்தைச் சார்ந்தோரின் பண்பாடு உடைய வாழ்வியலின் இன்றியமையாத அடிப்படைப் பண்புகள் இவை இவை என்று கூறுவது மானுட விழுமியங்கள் என்பார் ராபர்ட் பியர்ஸ்டெட். விழுமியம் எனும் சொல் சங்க இலக்கியங்களுள் இடம்பெறவில்லை. ‘விழுமிய’ எனும் சொல் சங்க இலக்கியங்களுள் காணப்படுகின்றது. இச்சொல்லுக்கு சிறந்த – (சென்னைப் பல்கலைக்கழகக் கழகத் தமிழ்ப் பேரகராதி) செழித்த, வளமான, உயர்ந்த என அகராதிகள் பொருள் தருகின்றன. பத்துப்பாட்டில் இடம் பெறும் ‘விழுமிய’ என்னும் சொல்லுக்கு நச்சினார்க்கினியர் ‘சீரிய’ எனப் பொருள் கொள்கிறார். இப்பொருளை உட்கொண்டே அகராதிகள் ‘சிறந்த’ எனும் பொருளை முன் வைக்கின்றன எனலாம். வள்ளவர் குறிப்பிடும் ‘விழுப்பம்’ என்னும் சொல்லும் ‘சீர்மை’ என்னும் பொருளுடையது. எனவே, மனித வாழ்வில் பின்பற்றத்தக்க நெறிகளுள் சீர்மையுடையனவற்றைத் தனித்து அடையாளப்படுத்த ‘விழுமியம்’ எனும் சொல்லைப் பயன்படுத்தலாம்.

    மானம் பெரிது :

    வெண்ணிக்குயத்தியார் என்ற புலவர் சேர மன்னனின் மானத்தைப் பெரிதாகப் போற்றுகிறார். வீரம் சமூக விழுமியமாக இருந்தாலும் வீரத்தை விட மானமே உயர்ந்ததாக சங்க காலத்தில் போற்றப்பெற்றது. சங்க காலத்தில் மார்பில் பட்டு முதுகுப்பக்கம் அம்பு வந்து விட்டாலும் புறப்புண் பெற்றதாகக் கருதப்பட்டது. புறப்புண் பெற்றால் அவமானம். அவமானம் நேரும் பொழுது அரசரே ஆனாலும் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீப்பது அக்காலச் சமூக விழுமியம். வீரத்தை விட மானம்பெரிதாகப் போற்றப்படுகிறது.

    “  நளியிரு முந்நீர் நாவாயோட்டி

    புறப்புண்ணாணி வடக்கிருந்தோனே” (புறம்.66)

    ஒழுக்கம்:

    ஏமாற்றாமை, திருடாமை, பரத்தையர் ஒழுக்கம் ( கண்டிக்கத் தக்கதாகவே இருந்நதது ) இவை விழுமியங்களாக இருந்தன. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ (கலித்.133) இவை பண்பு தொடர்பான விழுமியங்களை உணர்த்துகின்றது.

    ஒருவனுக்கு ஒருத்தி எனும் கோட்பாடு :

    சங்க விழுமியங்களுள் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற பண்பாட்டு விழுமியம் சங்ககால ஆண், பெண் வாழ்வில் காக்கப்பெற்றுள்ளது. இல்லற முறைமையால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறி போற்றப் பெற்றது. அரசியல் காரணங்களுக்காகக் கூட இருதார முறை சங்ககாலச் சமுதாயத்தில் அனுமதிக்கப் பெறவில்லை.

    இரண்டாம் மனைவியராகவோ அல்லது காமக்கிழத்தியராகவோ கூட பெண்கள் அரசனுக்கு இருத்தல் கூடாது என்பதைப் பேகன்-கண்ணகி வரலாற்றில் பேகனைக் கண்டித்த பாணர், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர் பாடல்கள் காட்டுகின்றன. புறநானூற்றில் 143 முதல் 147 வரை உள்ள பாடல்கள் இதை வலியுறுத்துகின்றன.

    ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மனைவியை இழந்து வாடும் கணவன் பற்றிய செய்தி புறம் 251, 252 பாடல்களில் மாற்பித்தியார் சுட்டுகின்றார்.

    “ கள்ளி போகிய களியம் பறந்தலை

    வெள்ளிடைப் பொத்திய வினை விறகு ஈமத்து

    ஒள்ளழற் பள்ளிய பாயல் சேர்த்தி” (புறம். 245)

    கள்ளிச் செடி நிறைந்த சுடுகாட்டில் எரியும் நெருப்பில் விறகுப் படுக்கையில் அன்பிற்குரியவளைக் கிடத்தி விட்டு இன்னும் என் உயிரைப் போக்கிக் கொள்ளாது உயிர் வாழ்கின்றேன் எனப் புலம்பும் ஆணின் குரல் பெண் பற்றிய சமூக மதிப்பீடாகும். ஆண் துயரத்தால் அழமாட்டான் என்ற புனைவைத் தகர்த்துப் புனையப்பட்டுள்ள சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் பாடல் வரிகள், பெண்ணைப் போற்றுவதாக அமைந்துள்ளன. மேலும்,

    “கறங்கு வெள் ளருவி யேற்றலினிறம் பெயர்ந்து

    தில்லை யன்ன புல்லென சடையோ

    ……….

    இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

    சொல்வலை சேட்டுவ னானாயினன் முன்னே” (புறம்.252)

    மனைவியின் நினைவிலேயே வாழும் கணவனின் நெஞ்சம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மனைவியோடு சோ்ந்திருந்த இன்பச்சூழலையும், அவனை இழந்ததால் ஏற்பட்ட சோகத்தையும் சடைமுடி வளர்த்த கோலத்தையும் இப்பாடல் காட்டுகிறது. மனைவியை இழந்து வாடும் துன்பம் தாங்காமல் வீட்டை விட்டு ஊரை விட்டும் வெளியே சாமியாராகப் போய் விட்டதை இப்பாடல் சுட்டுகின்றது. மனைவியைப் பிரிந்த கணவன் பிற்காலத்தைப் போல, அக்காலத்தில் பிறிதொரு பெண்ணை மணம் முடிக்காமை சங்க இலக்கிய ஒருவன் – ஒருத்தி விழுமியத்துக்கு அரண் சோ்க்கிறது. இது ‘தபுதார நிலை’ எனப்படும்.

    பெண் கொல்லாமை :

    ஆடவர், அரசர் மற்றோர் யாவராலும் பேணிக் காக்கத்தக்க தகைமை சான்றவள் பெண். அவளைக் கொலை செய்தல் பெரும் பழியாக எண்ணப்பெற்றது. பெண் கொலை புரிந்த நன்னன் என்று மன்னனை வெறுத்து ஒதுக்கியதைக் குறுந்தொகை, ‘பெண் கொலை புரிந்த நன்னன் போல்’ (பா.292) பாடலடி புலப்படுத்துகின்றது.

    வீரர்கள் போருக்குச் செல்லும் போது போர் அறமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவர்களுள் பெண், குழந்தை, பசு, பார்ப்பனர், பிணியுடையோர்; ஆவார். குழந்தை பெறாத மணம் முடித்த பெண்களுக்குப் போர் தொடுக்கும் போது பகை மன்னரோ படையினரோ ஊறு செய்தல் கூடாது என்பது அறமாகப் போற்றப்பட்டது. நெட்டிமையார் எனும் பெண் புலவர் படை தொடுக்கும் காலங்களில் படையினரால் ஊறு செய்யப்படக் கூடாதோர் என்று பட்டியல் இடுகிறார். அப்பட்டியலில் குழந்தை பெறாதோர் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

    தாய்மைப்பேறு :

    பெண்ணின் பெருமைகள் பலவாயினும் அனைத்தினும் தாய்மைப் பண்பே தலையாயச் சிறப்பும், பெருமையும் ஆகும். தன்னலம் கருதாத தொண்டு மனமே தாய்மை. என்பும் பிறர்க்கு ஈயும் அன்பு தாய்மை. தெய்வங்களுள் தலையாய தெய்வம் தாய்மை. மணமான பெண் தாய்மை அடைவது பெரும் பேறாகப் போற்றப்பட்டது. பெண்பாற் புலவராகிய பொன்முடியார் எழுதியுள்ள புறநானூற்றுப் பாட்டில்,

    “ ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

    சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே” (புறம்.312)

    பெண்ணின் கடமையோடு ஏனையோரின் கடமையும் வற்புறுத்தப்பட்டமை தெளிவாகப் புலப்படுகிறது.

    சுயநலம் அகற்று, பொது நலம் பேணு :

    மனிதம் என்பதன் பொருள் சுயநலம் அன்று, பொதுநலம். தன்னை விட மற்றவரை நினைப்பது அதுவும் அறிஞரை நினைப்பது போற்றுவது தன்னையே வளர்க்கும் என்பதை அவ்வை அதியனின் வாழ்வு எடுத்துரைக்கிறது. அரசனாக இருந்த அதியமான் தன்னிடம் அரசியல் ஆலோசராக இருந்த அறிஞர் அவ்வையை மிக மதிக்கிறான். அதன் விளைவாக மரணமிலாப் பெரு வாழ்வைத் தரும் மலையிடைப் பழுத்த நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் அவ்வையாருக்குத் தருகிறான். அதியமானைத் தன் கவிதைப் படைப்புகளின் ஊடே மரணமிலா வாழ்வை அவ்வை வழங்குகிறார். உதவுபவனையே உலகம் உயர்த்துகிறது. இல்லறத்தில் வாழ்கின்றவர்கள் உழைத்து உற்பத்தி செய்து பிறர்க்கு உதவும் தன்னலமற்ற பண்பு உடையவர்கள் என்பதனை அகநூல்கள் உயர்ந்த விழுமியங்களாக காட்டுகின்றன.

    உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை :

    சங்கப் பெண் கவிஞர்கள் காதல் உணர்வுகளையும் காமவேட்கையையும் மனத்தடைகளற்றுக் கவிதை களாக்கியுள்ளனர். பெண்களுக்குத் தங்கு தடையற்ற விடுதலை உரிமை அளிக்கப்பட்டிருந்தது. மணம் ஆகும் முன்னரே காதல் புரிதல், காதலித்த ஆடவனுடன் உடன்போக்கு கொண்டு வாழ்தல், பின்னர் மீண்டு வந்து பெற்றோருடன் கூடி வாழ்தல் ஆகியன வழக்கில் இருந்தன. இவை தகாதனவாகக் கருதப்படவில்லை, தடை செய்யப்படவும் இல்லை. ஆண் மேலாதிக்கச் சமூகத்தில் அதிகாரத்தின் ஆளுகைக்கேற்ப எல்லா நிலைகளிலும் பெண் ஒடுக்கப்பட்டாலும் அவளுடைய எதிர்க்குரலும் தனித்துவமும் கவிதைகளில் பதிவாகியுள்ளன. வெள்ளி வீதியாரின் காமம் பற்றிய மனப்பதிவுகள் வாசிப்பில் உருக்கத்தை ஏற்படுத்துகின்றன. “ வானத்தில் திங்கள் ஒளிர்கின்றது., கடல் அலை கரையில் மோதுகிறது., அன்றில் பறவை பனைமர உச்சியிலிருந்து கத்துகிறது., யாமத்திலும் யாழ் மீட்டப்படுகிறது., இவை எல்லாவற்றையும் விட காமத்தைக் களையும் தலைவன் அருகில் இல்லையே! (நற்றிணை. 385) என தலைவி வருந்துகிறாள். இம்மன நிலை தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகும். காதல் வயப்பட்ட அகப்பாடல்களில் வெளிப்படும் பெண் பற்றிய பிம்பம் நாடக வழக்கியல் தன்மையுடையது.

    பெண்பாற் புலவர்கள் மொழிப்புலமை வாய்ந்தவர்களாகவும் மொழிவளம் பேணும் மாண்பினராகவும், கவியாற்றலும், கற்பனைத்திறத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர். தங்கள் பாடல்களில் மன உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்துள்ளனர். ஔவையார், வெள்ளிவீதியார் போன்றோர் தமது கவித்திறனால் இலக்கியத்துள் தனியிடம் பெற்று விளங்கினர் என்பதை உணர முடிகிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181017 -Saraswati wcol A4 -300 dpi scan wm

    ”மீட்ட ஒருகை, மெருகூட்ட மற்றோர்கை,
    பாட்டின் சுருதியைப் போட்டொருகை, -காட்டும்,
    பலேபேஷ் அபிநயம், போட்டபடி ஒர்கை,
    தலேபா ரதிடர்பன் தா’’….!

    ”மீட்டும் ஒருகை, மெருகூட்டும் மற்றோர்கை,
    பாட்டின் சுருதியைப் போட்டொருகை, -காட்டும்
    மகாகவி பாரதியின் மாங்குயில் பாட்டு,
    தகாதோர் செவிக்கவள் திட்டு’’….!

    ”வித்யா வினய சம்பன்னே”…..!
    —————————————————————-

    ”சகல கலாவல்லி, சங்கீத சாம்ராட்,
    அகல விடாதுனை ஆட்கொண்டு, -இகபர,
    சுகங்க ளுடனே சுவிகாரம் கொள்வாள்,
    அகங்கார நெஞ்சை அழித்து”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181017 Mahagowri A4 wcol icam lr

    புள்ளி மயிலாக புன்னை வனநாதர்
    பள்ளியறை வாழ்பரம பத்தினியே -வெள்ளி
    விடையேறி ஈசர் இடபாகம் ஈஷீ
    மடையோனென் நாவில் மலர்….கிரேசி மோகன்….!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 7

    ======================

    திருச்சி புலவர் இராமமூர்த்தி.

    —————————————————

     

    தற்கு  முன் எழுதிய கட்டுரையில்  சேய்மையிலிருந்து அண்மைநோக்கி வரும்

    காட்சியின்  அழகு கூறப்பெற்றது. இனி, இக்கட்டுரையில்  அண்மையிலிருந்து  சேய்மையை  நோக்கும் காட்சி கூறப்பெறுகிறது.  திருக்குறளிலும் , இத்தகைய காட்சி உண்டு. ஒரு குளத்தில் மீன்கள் அங்குமிங்கும் நீந்துகின்றன. அந்தக் குளத்தருகே இரவுநேரத்தில் பெண்ணொருத்தி வருகிறாள். அக்காலத்து நீரினுள்  எட்டிப் பார்க்கிறாள். அந்தப் பெண்ணின் முகம் நீரில் தெரிகிறது. அருகில் வானத்து நிலவின் பிம்பமும் தெரிகிறது. அந்த நீரில் மீன்கள் அங்குமிங்கும் அலைகின்றன!  அதைக் கண்ட வள்ளுவர், மீன்கள் கலங்கித்திரிவதற்குக்  காரணம் கற்பிக்கிறார். அவை எதையோ பார்த்துக் கலங்கி விலகி, விலகி ஓடுவது போல் தெரிகிறது. இயல்பாகத் தம் அருகில் வரும் பெண்ணின் முகத்தைக் கண்டு அஞ்சி விலகாத மீன்கள் வானத்து நிலசுவின் வெண்திரை ஒளியைக் கண்டு வேறுபாடாக உணர்ந்து விலகுகின்றன!  அதாவது வழக்கமாக நாள்தோறும் இரவில் வரும் பெண்களைப்  போலில்லாமல், வெண்மை  ஒளிவீசி விளங்கும் நிலவைக் கண்டு மீன்கள் விலகி நீந்துவதாகத் தன்  குறிப்பை  ஏற்றிக் கூறுகிறார். அதே மீன்கள், வானத்தில் உள்ள விண்மீன்களும் நிலவின் பிம்பத்துடன் தெரியும் பெண்ணின் முகநிழலும் தோன்றுவதால், அவையும் கலங்கித்  திரிகின்றன, என்று கருத்து கின்றன, என்று வள்ளுவர் தன்குறிப்பை  ஏற்றிக் கூறுகிறார் ! அருகிலுள்ள நீரில் தெரியும் பிம்பங்களிலிருந்து குளத்து மீன்களையும், அதற்கும் மேலே தெரியும் வானத்து மீன்களையும் காண்பது, அண்மையிலிருந்து சேய்மையைக் காணும் காட்சியைக்  குறிக்கிறது! இதனை,

    ’மதியும்  மடந்தை முகனும்  அறியா 

      பதியிற்  கலங்கின  மீன்!’’

    என்ற திருக்குறள் புலப்படுத்துகிறது. பெரிய புராணத்திலும்  கரும்புகலின் அருகில் நின்ற கடைசியர், அக்கரும்புகள், மூங்கில்போல்பருத்து  அடர்ந்து வளர்ந்திருப்பது  காடுபோல் இருப்பதாகக் கருதுகின்றனர். அதனைக்

    ’காடெலாம்  கழைக் கரும்பு ‘’

    என்ற தொடறால் சேக்கிழார் விளக்குகிறார்! இன்னும் சற்றே எட்டிப் பார்த்தால்  அங்குள்ள சோலைகளின் செடி ,கொடிகளில் உள்ள சிறுகிளைகளாகிய குழைகளில்  இலைகள் தளிர்த்து அரும்புவது தோன்றுகின்றது! இதனைக்

    ‘’  காவெல்லாம் குழைக்கு  அரும்பு’’

    என்று சேக்கிழார் பாடுகிறார். அதன்பின்னர் சற்றுத் தொலைவில் தெரியும் , வயல் நீரில்  கருமையான குவளைப்பூக்கள் மலர்கின்றன. அதனை அடுத்துள்ள நீரில், சங்குகள் நெருங்கி யுள்ளன! இதனைச் சேக்கிழார்,

    ‘’மாடெல்லாம்  கருங்குவளை, வயலெல்லாம் நெருங்கும் வளை ‘’

    எனப்படுகிறார்! அவற்றை அடுத்து வெளியில் தெரியும் மரக்கிளைகளில்  மென்மையான அன்னங்கள் அமர்ந்திருக்கின்றன! அவற்றை அடுத்துப் புறத்தே தெரியும் குளங்களில்    எங்கெங்கும்  கடலன்னங்கள் எனப்படும் நாரைகள்  விளங்குகின்றன! இதனை,

    ‘’கோடெல்லாம் மடவன்னம்,  குளமெல்லாம்  கடலன்னம் ‘’

    என்று புலவர் பாடுகின்றார். அதனையும் அடுத்து பக்கத்து நாடுகளை அப்பெண்கள் பார்க்கின்றனர்! அந்த நாடுகளை  நீர்வளம் பெருகிய சோழநாடு என்று கருதுகின்றனர்;  அதற்கும் அப்புறத்தே உள்ள நாடுகள் இச்சோழ நாட்டுக்கு இணையானவை அல்ல! என்றும் கருதுகின்றனர்! இதனைச் சேக்கிழார் ,

    ‘’நாடெல்லாம் நீர்நாடு  தனையொவ்வா  நலமெங்கும் ‘’

    என்கிறார். இனி முழுப் பாடலையும் காண்போம் ,

    ‘’காடெல்லாம்  கழைக்கரும்பு  காவெல்லாம்  குழைக்கரும்பு

     மாடெல்லாம்  கருங்குவளை  வயலெல்லாம்  நெருங்குவளை

     கோடெல்லாம் மடவண்ணம்  குளமெல்லாம்  கடலன்னம்

     நாடெல்லாம்  நீர்நாடு  தனையொவ்வா  நலமெல்லாம்!’’

    இப்பாடல் அருகிலிருந்து தொலைவில் பார்க்கும் நிலையைத் தெளிவாக்கு கின்றது.முதலில் கரும்பு வயல்,பின்னர் சோலைகளில் அரும்பும் குழைகள்,அடுத்து வயல்கள், அடுத்து வரப்புகள் , அடுத்து குளங்கள்,அடுத்து சோழ நாடு , அடுத்து உலகநாடுகள்  புலனாகின்றன.

    இதில் சிந்தாந்தம் குறிக்கும் தியான நிலையை உய்த்துணரலாம். தியானம் செய்யும் போது அனைத்தும் உள்ளே ஒடுங்கி இறைமையை யோக நிலையில் அருகில் உணரலாம். அந்த ஒடுக்கத்தினுள், வெளிப்பிரபஞ்சம் யாவும் அடங்கி நிற்கும்! அதில் வெளியில் உள்ள பிரபஞ்ச தரிசனம் கிட்டும். உள்ளிருந்தே புறமெங்கும் கண்டறியும் சித்தி, தியான யோகத்தினர்க்கு  வாய்க்கும் என்ற தத்துவ உண்மையை, தெய்வச் சேக்கிழார் ஸ்வாமிகள் இப்பாடல் மூலம்  விளக்கியருளுகின்றார்.

    ========================================================================

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 21

    -மேகலா இராமமூர்த்தி

    திருக்குறள், அறம் பொருள் இன்பம் எனும் முப்பொருளும் பேசுவதுபோலவே நாலடியும் இவை மூன்றையும் பேசுகின்றது. இங்கே காமம் என்பதே இன்பம் எனும் பெயரால் சுட்டப்படுவது என்பதறிக. வள்ளுவத்தில் காமம் 25 அதிகாரங்களில் விரிவாகப் பேசப்படுகின்றது. ஆனால் நாலடி பல்தரப்பட்ட காமஞ்சார் செய்திகளையும் ஒரே அதிகாரத்தில் சுருக்கமாய்ப் பேசிவிடுகின்றது.

    அவற்றில் சில நம் கவனத்துக்கு…

    முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
    உயங்காக்கால் உப்பின்றாம் காமம் – வயங்கோதம்
    நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
    புல்லாப் புலப்பதோர் ஆறு.
    (நாலடி – 391)

    தலைவியைத் தழுவாவிடின் அவளுடம்பில் பசலை நிறம் பரவும்; ஆனால் இடையிடையே அவள் ஊடல் கொள்ளாவிடில் காமச் சுவை குன்றும். ஆகலின், அலைகள் நில்லாது அலைத்துக்கொண்டிருக்கும் நீண்ட கழியினை உடைய குளிர்ந்த துறைவனே! ஊடுதலும் பின் கூடுதலுமே காமத்துக்கு இனிய நெறியாகும் என்று வாயில் நேர்ந்த தோழி, தலைமகளின் ஊடல் தவிர்த்துக் கூடிய தலைமகற்குக்  கூறியது இது எனும் குறிப்பு இப்பாடலில் காணப்படுகின்றது.

    புலவி என்று சொல்லப்படும் ஊடல் காமத்துக்குச் சுவையூட்டும் உப்பாகும்; அதுவே அளவுகடந்து சென்றால் சுவைகெட்டுத் தப்பாகும். இதனையே வள்ளுவர்,

    உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
    மிக்கற்றால் நீள விடல்.
    (1302) என்றுணர்த்தினார்.

    அதுபோன்றே,

    ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின். (1330) என்று காமம் துய்க்கும் கலையைக் கருத்தாய்ச் சொன்னவரும் அவரே.

    மாலைக்காலம், தலைவனோடு கூடியிருக்கும் தலைவியர்க்கு இன்பத்தையும் அவனைப் பிரிந்திருக்கும் தலைவியர்க்கு அளவற்ற துன்பத்தையும் அளிக்கக்கூடியது.

    தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியர்க்கு மாலைக்காலம் எத்தகு வருத்தத்தைத் தரும் என்பதைப் ‘பொழுதுகண்டு இரங்கல்’ எனுல் அதிகாரத்தில் வள்ளுவர் விளங்கவுரைப்பார். அதில், தலைவனை முதன்முறையாய்ப் பிரியும் தலைவி ஒருத்தி, தலைவனோடு தான் கூடியிருந்த காலத்தில் இம்மாலைக்காலம் இத்தகைய துன்பத்தைத் தரவல்லது என்று அறிந்திலேனே என்று வருந்துவதை, பெண்களின் உளவியலை நன்குணர்ந்தவராய், வள்ளுவர் வெளிப்படுத்தியிருக்கும் திறம் எண்ணி இன்புறத்தக்கது.

    மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
    காலை அறிந்த திலேன்
    . (1226)

    தலைவன்  தன்னைப் பிரிந்து பொருள்தேட விழைகின்றான் என்பதை அறிந்தாள் ஒரு தலைவி. அதன்பின்னர் அவள் செயற்பாடுகளில் தெரிந்த மாற்றத்தைக் கவனித்த தோழி, ”கம்மத்தொழில் செய்கின்ற மக்கள் தம் தொழிலை நிறுத்திக் கருவிகளை ஏறக்கட்டிச் சென்ற  மயங்கஞ் செய்யும் இம் மாலைப்பொழுதில், மலர்களை ஆராய்ந்து மாலை தொடுத்துக்கொண்டிருந்த  தலைவி, நின் பிரிவு கேட்டுத் தனது கையிலிருந்த மாலையை நழுவவிட்டுத் தலைவராகிய துணையைப் பிரிந்த மகளிர்க்கு இந்த மலர்மாலை என்ன பயன் தரும்?” என்று சொல்லி வருந்தி அழுவாளாயினள்” என்று தலைவனிடம் தலைவியின் உளநிலையை உணர்த்துகின்றாள். ஈண்டு அவள் நோக்கம் தலைவன் தன் செலவினைத் தவிர்க்க வேண்டும் என்பதே.

    கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
    மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
    கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
    இம்மாலை என்செய்வ தென்று. 
    (நாலடி – 393) 

    அகநூல்களில் தலைமகன் தலைவியின் நலம் பாராட்டும் பாடல்களில் புலவர்களின் கற்பனைத் திறன் கொடிகட்டிப் பறப்பதைக் காணலாம். அவ்வரிசையில் நாலடியின் ஆசிரியர்களும் எம் கற்பனைத் திறன் யார்க்கும் குறைந்ததன்று என்று பொற்போடு நிறுவியிருக்கும் பாடலை அடுத்துக் காண்போம்.

    கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
    பின்சென்றது அம்ம சிறுசிரல் – பின்சென்றும்
    ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
    கோட்டிய வில்வாக் கறிந்து. 
    (நாலடி – 395)
     

    ”கண்களைக் கயல்மீன் என்று கருதிய கருத்தினால் அதனைக் குத்தித் தின்னும் பொருட்டு, நம் காதலியின் பின்னே சென்றது சிச்சிலி என்னுஞ் சிறிய மீன்குத்திப் பறவை. ஆனால் அவ்வாறு பின்சென்றும் அவளின் ஒள்ளிய புருவத்தைக் கண்டு இது வில்லின் வளைவென்று எண்ணிக் குத்தாமல் விட்டுவிட்டது” என்று  தன் கற்பனையை வி(வ)ரிக்கின்றான் தலைவன்.

    வள்ளுவத்திலும் தலைவன் தலைவியின் நலம் புனைந்துரைக்கும் பாடல்கள் நினைந்தின்புறத் தக்கவை.

    குறட் காதலனின் கற்பனை இது!

    வானத்தில் ஒளிவிடும் விண்மீன்கள் வெண்ணிலவைப் பார்த்தன; அப்படியே சற்றுக் குனிந்து புவியிலுள்ள பெண்ணிலவின் முகத்தையும் பார்த்தன.  அவ்வளவுதான்…உண்மையான மதி எது என்பதில் அவற்றிற்கே குழப்பம் வந்து மதிகலங்கிப் போயினவாம்!

    மதியும் மடந்தை முகனும் அறியாப்
    பதியிற் கலங்கிய மீன். (1116)

    நலம் பாராட்டும் அன்பினால் காமம் மாட்சிமைப்படும் என்பது நம்மனோரின் எண்ணம்.

    தலைவி ஒருத்தி தன் காதற் தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்டாள். அதனை அறிந்த செவிலித்தாய், தலைவியின் மென் தன்மையையும் அவள் கடந்துசென்ற பாதையின் வன்மையையும் நினைந்து கலங்கும் பாடலிது!

    அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
    பரற்கானம் ஆற்றின கொல்லோ – அரக்கார்ந்த
    பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
    அஞ்சிப்பின் வாங்கும் அடி.  (நாலடி – 396)

    செந்நிறம் பொருந்திய ஆம்பல் மலரைப்போல நறுமணத்தோடு விளங்கும் வாயையும் அழகிய இடையையுமுடைய நம் புதல்விக்கு, அழகுக்காகச் செந்நிற மிக்க செம்பஞ்சிக் குழம்பைத் தடவினாலும் ‘மெதுவாக, மெதுவாக’ வென்று அஞ்சிக் கூறிப் பின் இழுத்துக்கொள்ளும் அத்துணை மெல்லிய பாதங்கள் தலைவனோடு உடன்போக்கிற் பிரிந்த இப்போது பரற்கற்களையுடைய கானத்திற் செல்லப் பொறுத்தனவோ? என்றெண்ணிக் கலங்குகின்றது அத் தாயுள்ளம்.

    தலைவியுடைய திருவாயின் நறுமணத்துக்கு ஆம்பல் மலரின் மணத்தைப் புலவோர் பலரும் ஒத்த மனத்தினராய்ச் சான்று காட்டியுள்ளனர். அவற்றில் சில…

    ஆம்ப னாறுந் தேம்பொதி துவர்வாய்  (குறுந்தொகை – 300)

    ஆம்பனா றமுதச் செவ்வாய் (சீவக. 561)

    ஆம்ப னாறுந் தேம்பொதி நறுவிரைத் தாமரைச் செவ்வாய் (சிலப். 4: 73-4)

    தலைவனோடு உடன்போக்கு மேற்கொள்ளத் தலைப்பட்டாள் மற்றொரு தலைவி. அதனை அறிந்த அவள் தோழி, மெல்லியளான இவள் இந்தக் கடுமையான காட்டுவழியில் எவ்வாறு நடந்துசெல்வாள் என்று ஐயுற்றுத் தலைவியிடமே அதுபற்றி வினவ, அதற்குத் தலைவி தந்த மறுமொழியே இப்பாடல்!

    கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
    நடக்கவும் வல்லையோ என்றி – சுடர்த்தொடீஇ!
    பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
    கற்றான் அஃதூரும் ஆறு. (நாலடி – 398)

    ”வன்மையுடையதும் யாருங் கடந்து செல்லுதற்குக் கடுமையானதுமான காட்டுவழியில் காளையாகிய தலைவன் பின்னே நாளை நீ உடன்போக்கில் நடந்து போகவும் வல்லமையுடையையோ என்று கேட்கின்ற சுடர்த் தொடியே! பெருமையிற் சிறந்த குதிரையொன்றினைப் பெற்றவனொருவன் அப்பொழுதே அதில் ஏறி ஊர்ந்துசெல்லும் நெறியைக் கற்றவனாகின்றான்” என்றாள் தலைவி.

    இங்கே அவள் உணர்த்துவது, உழுவலன்பினால் ஒன்றுபட்ட உள்ளம் அளப்பரும் ஆற்றலைப் பெறுகின்றது; அஃது எத்துணைக் கடுமையையும் தாங்கவல்லது என்பதே.

    நம் அன்றாட வாழ்வில்கூட, வலிமை குறைந்த கோழியானது தன் குஞ்சுகளை வலிய பருந்து கவர்ந்துசெல்ல முனையும்போது அதனைப் பறந்து தாக்குவதைப் பார்க்கமுடியும். அவசியமும் தேவையுமே வலியற்ற மனிதர்களையும் மகத்தான ஆற்றலாளர்களாக மாற்றுகின்றது என்பது மறுக்கவியலா உண்மை.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்  பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

    Share
  • மீன்குளத்தி அம்மன் கோயில் வழிபாடு

    -முனைவர் ரா.திவ்யா

    திருக்கோயில் அமைப்பில் தமிழகக்கோயில்கள் சிறந்து விளங்குகின்றன.  அதுபோலவே, கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோயில்களும் தனித்தன்மையுடன் சிறப்புப்பெற்று விளங்குகின்றன.  தமிழகக் கோயில் அமைப்புக்கும் கேரளக் கோயில் அமைப்புக்கும் வேறுபாடு உள்ளமை யாவரும் அறிந்த ஒன்றாகும்.  கேரளாவில் பத்மநாபன் கோயில், குருவாயூர் கோயில், சபரிமலைக் கோயில், கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயில் ஆகியவை பெரும்புகழ் பெற்று விளங்குகின்றன.

    வரலாறு

    ஏறத்தாழ பல ஆண்டுகளுக்கு முன்னர் பிற இடங்களுக்குப் பிழைப்பைத் தேடி முதியவர் ஒருவர் கேரளாவிற்கு நடைப்பயணமாகி வந்து சேர்ந்தார்.  அவர்கள் வீரசைவ வேளாள மன்னாடியார் வகுப்பைச் சேர்ந்த மூன்று தாய் வழிக் குடும்பத்தார் ஆவார்கள்.  அம்முதியவர் தொழிலுக்காக எங்கு சென்றாலும் அந்நாட்களில் எல்லாம் தங்களது தெய்வமான மீனாட்சி அம்மனைத் தரிசித்து விட்டே செல்வார்.  பின்னைய நாளிலெல்லாம் தனக்கு வயதானதால் அடிக்கடிப் போக முடிவதில்லை.  ஒரு சமயம் அம்மனைத் தரிசித்து உன்னை வணங்க இனி வரமுடியாது என்று வருந்திக் கொண்டு சிறு மூட்டையும், குடையும் எடுத்தவாறு நடந்து வந்தார்.  சிறிது தூரமாக நடந்த பின் அவருக்குத் தண்ணீர்த் தாகம் ஏற்பட்டது. அங்கிருந்த குளத்தின் அருகிலே மூட்டையையும், குடையையும் வைத்துவிட்டு, தண்ணீர்க் குடிக்கச் சென்றார்.  சிறிது நேரம் கழித்து அம்மனை நினைத்துக் கொண்டு மூட்டையைத் தோளிலே போட்டு, குடையைத் தூக்க, அது நகராததை எண்ணினார்.  அங்கு விளையாடுகின்ற சிறுவர்களை அழைத்துப் பார்க்கச் சொல்லி அங்கு வாழுகின்ற மக்களை அழைத்தார்.  அங்கு குடியிருப்பது அம்மன் மீனாட்சியே எனக் கூறினார்கள்.  அங்குள்ள இடங்களுக்கெல்லாம் இச்செய்தியானது பரவியது.  அம்மன் குடியிருந்த காரணத்தால் அவ்விடமானது குடமந்து எனப் பெயர்பெற்றது. என்று தகவலாளி அம்மன் வந்த வரலாற்றினைக் கூறுகிறார்.  இந்நாளில் குடமந்து என்ற பெயரானது மருவி கொடுமந்து எனப் பெயர் பெற்றது. இக்கொடுமந்து என்ற இடத்தில் தான் அம்மன் எண்ணூறு ஆண்டுகளாக எழுந்தருளியுள்ளதாகக் கூறுகின்றனர்.

    கோயில் பெயர்க்காரணம்

    இக்கோயிலில் மீன்கள் மிகுந்து காணப்படுகின்றன.  இங்குள்ள மீன்களுக்கு “மீனூட்டு” நிகழ்ச்சி நடைபெறும்.  “மீன்கள் குளத்தில் அதிகமாக இருப்பதால் மீன்குளத்தி அம்மன் என்று பெயர் வந்தது” எனக் குறிப்பிடுகிறார்.

    “குளத்தில் மீன் இருப்பது, அம்மன் மதுரையில் இருந்து வந்தாள்.  அம்மதுரையை பாண்டியன் ஆண்டு கொண்டிருந்தான்.  அவனுடைய கொடி மீன் கொடி என்பதாலே இக்குளத்தில் மீன்கள் வளர்கிறது” என்ற (தக.நடராஜ்) கருத்தினைக் குறிப்பிடுகிறார்.

    தகவலாளிப் பெயர்ப்பட்டியல்

    1. தக.நடராஜ் – பல்லசேனா
    2. வசந்தி – கோயமுத்தூர்
    3. தாமஸ் – பொள்ளாச்சி

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி.

     

    Share
  • சங்க இலக்கியங்களில் எதிரொலி

     

    செ. முத்துமாரி,முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ் உயராய்வு மையம், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,

    திருநெல்வேலி – 8.

    முன்னுரை

    மாறாத சுவையும் தோய்ந்த இன்பமும் அளவின்றிச் சுறப்பன சங்கப் பாடல்கள். அவை பழந்தமிழர் வாழ்வை படம் பிடித்தாற் போல் கண்ணெதிரில் நிறுத்தி காட்டும் காலக்கண்ணாடியாக அமைத்துள்ளது. உற்றுநோக்கி, அதன் சிறப்பை, ஆற்றலை, நுட்பமான நிகழ்வுகளைத் தம் இலக்கியங்களில்  பதிவு செய்தனர். சங்கப் புலவர்களின் கூர்மையான  கவனத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்ட ஒலி வகையுள் ஒன்றான எதிரொலிக்கும் மனித குரல் வழி எழும் எதிரொலி பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    எதிரொலி

    echo  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில்

          எதிரொலி என்பது பொருளாகும் ஒருவர் எழுப்பும்

           ஒலியை ஒலி அதிர்வினால் மீண்டும் திரும்பக்

           கேட்பதே எதிரொலி ஆகும்1

    “எதிரொலி என்ற பொருள் தரும் ‘சிலம்பு

          என்னும் சொல்லை சங்க இலக்கியங்களில்

          பரவலாகக் காணலாம் எதிரொலி செய்தலால்

          மலைக்குச் சிலம்பு என்ற பெயரும் உண்டு“ 2

    குரல் ஒலி

    குரல் ஒலித் தோற்றுவிப்பன மனிதனின் உடல் உறுப்புகளே அவற்றைப் பேச்சு உறுப்புகள் அல்லது ஒலிவுறுப்புகள் எனக் குறிப்பிடுவர். உதடு, பல், அண்ணம், உள்நாக்கு, காற்றுகுழல், குரல்வளை, தொண்டை போன்ற உறுப்புகள் குரல் ஒலியைத் தோற்றுவிக்கின்றன. குரல்ஒலியானது, முணுமுணுப்பு ஒலி கீச்சுகுரல் ஒலி, கிசுகிசு ஒலி, பேரொலி என ஒலிக்கும் தன்மையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றது.

    குரல் ஒலி மனிதர்கள் பேசும் சுழலமைவைப் பொருத்து மிகுந்தும் குறுகியும் ஒலிக்கும் மிகுந்து ஒலிக்கும் போது அவ்வொலி  எதிரொலியாகத் திரும்பக் கேட்பதும் உண்டு இவ்வெதிரொலி பற்றிய சான்றுகளைச் சங்கப் பாடல்களில் காணலாம்.

    சங்க இலக்கியங்களில் எதிரொலிக் குறித்த செய்திகள் பரவலாக காணப்படிகின்றன. ஆயினும் மனிதக் குரல் ஒலி மூலமாக எழும் எதிரொலிகள் பற்றிய செய்திகள் ஒருசிலவே காணப்படுகின்றன அவை பின்வருமாறு அவை பின்வருமாறு

    1. அதட்டும் ஒலி
    2. அழைப்பொலி
    3. வாழ்த்தொலி
    4. மலைவாழ் மக்கள் எழுப்பும்
    5. அதட்டும் ஒலி

    பெரியவர்கள் தம்மைவிட வயதில் சிறியவர்களையோ, விலங்குகளையோ, பறவைகளையோ அதட்டி தாம் கருதியதைச் செய்து முடிப்பது உண்டு. அவ்வாறு அதட்டும் ஓசையானது பேரொளியாக எழும்பி எதிரொலியாகக் கயமனார் என்னும் புலவர் அகநானூற்றில் அழகுற எடுத்தியம்பியுள்ளார்.

    பாலை நிலத்தின் அரிய வழியில் சகடத்தை இழுத்துச் செல்லும்  எருதுகள் அவ்வழியில் போக முடியாமல் இடற்படுகின்றன. அவ்வெருதுகளை உப்புவணிகர் அதட்டி ஓட்டுவதால் அவரது அதட்டும் குரல்வொலியனது மலைப்பகுதிகளில் எதிரொலிக்கின்றது. இதனை,

    “கொடுங் கோல் உமணர், பகடு தெழி தென் விளி

    நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்”

    (அகம்: 17:13-14)

    எனும் பாடல்வரிகள் அறியலாம்.

    1. 2. அழைப்பொலி

    ஒருவர் இன்னொருவரை  அழைக்கும் பொது அருகில் இருந்தால்  மெதுவாகவும், தொலைவில் இருந்தால் சத்தமாகவும் அழைப்பது வழக்கம். அவ்வாறு  சத்தமாக அழைக்கும் பொது இடத்தின் சூழலமைவைப் பொறுத்து அவ்வழைப்போலி எதிரொலியாகக் கேட்பதும் உண்டு. இதனை பரிபாடலில் காணலாம்.

    பேதை பருவத்தில் உள்ள ஓர் இளம்பெண் தன் உறவினரை விட்டுப் பிரிந்ததால் மலைப்பகுதியில்  இட வேறுபாடு  காரணமாக எங்கு செல்ல வேண்டும் என்பது  கூடத் தெரியாமல் திகைக்கிறாள். பின் தன் உறவினரைச் ‘சிறந்தவரே! சிறந்தவரே!’ என்று அழைக்கிறார்.  அங்குள்ள குகைகள் அவள் அழைப்பை ஏற்காமல்  விளியின் இசையே மட்டும் ஏற்றுக்கொண்டு எதிரொலிக்கின்றன.  அப்பெண் குகையின் எதிரொலி என்பதறியாமல் உறவினரின் அழைப்பொலி என்று நினைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப அழைத்துக் கூவுவதை,

    ‘ஏஎ’ ஓஒ’ என விளி ஏற்பிக்க

    ஏஎ’ ஓஒ’  என்று ஏலா அவ் விளி

    அவ் இசை முழை ஏற்று அழைப்ப அழைத்துழிக்

    செல்குவர் ஆங்குத்  தமர்க் காணாமை

    மீட்சியும், கூவுக் கூஉ  மேவும் மடமைத்தே

    வாழ்த்து உவப்பான் குன்றின் வகை’’ (பரி. 19;61-66)

    எனும் பரிபாடல் வரிகளால்  அறியலாம்.  இப்பாடல் அவ்விடம் பெண்ணின் வழியாத்  துயரத்தை எதிரொலி மூலம் நுட்பமாக புலப்படுத்தி நிற்பது படித்து இன்புறத் தக்கதாகும்.

    1. வாழ்த்தொலி:

    ஒருவரைப் பலர் கூடி வாழத்தும்  பொது மிகுந்த ஆரவாரத்துடன் வாழ்த்தி மகிழ்வது வழக்கம். திருமுருகாற்றுப்படை இத்தகைய வாழ்த்தொலி மூலம் எழும் எதிரொழி குறித்த செய்தியைப்  பதிவு செய்திருப்பது நோக்கத்தக்கது.

    சூரர மகளிர் பலரும் ஒன்று கூடி விளாமரத்தின் தளிரை ஒருவர் மேல் ஒருவர் அத்தளிர் படும்படி விரலால் தெறிக்கச் செய்வர். அத்தளிர்  பட்டவுடன் ‘அசுரர்களை வென்று, அவர்களைக் கொன்றொழித்து அவ்வெற்றி குறித்துத்  தூக்கிய கோழிக்  கொடி வாழிய பெரிது’ என்று வாழ்த்திப் பலரும்  ஒன்றாக  கூடி ஆடிப்பாடும் ஆரவாரம் மலையெங்கும் எதிரொலிக்கின்றது. இதனை,

    ‘கோழி ஓங்கிய வென்றுஅடு விறற் கொடி

    வாழிய  பெரிது! என்று ஏத்தி  பலர் உடன்

    சீர்திகழ் சிலம்புஅகம்  சிலம்பப் பாடி

    சூரர  மகளிர் ஆடும் சோலை” (தி.மு. 38-41)

    எனும்  திருமுருகாற்றுப்படையின் பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

    1. மலைவாழ் மக்கள் எழுப்பும் குரல் ஒலிகள்

    பொதுவாக எதிரொலி மலைப்பகுதிகளில்  அதிகமாக எழுவது உண்டு. விலங்குகளின்  ஓசையும், இடி ஓசையும், மலைகளில்  பட்டு எதிரொலிப்பது வழக்கம். அவற்றோடு மலைவாழ் மக்கள்  எழுப்பும் குரல் ஒலிகளும் மலைகளில் பட்டு எதிரொலிக்கும் செய்தியைச் சங்க இலக்கியங்களில் ஒன்றான மலைபடுகடாம் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளது வியப்பிற்குரியதாகும்.  மலைபடுகடாம்  மலைவாழ் குறவர்கள் விலங்குகளைப் பிடிக்கும் போது எழுப்பும் ஒலி, தேன் எடுக்கும்  போது எழுப்பும் ஆரவார ஒலி, ஆகியவற்றின் எதிரொலிகளை எடுத்துரைக்கின்றன.

    “விலங்கல், மீமிசைப் பணவைக் கானவர்

    புலம்புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்”

    (மலைப்படு 298-299)

    எனும் பூசல் ஒலியும்,

    “கலை கையற்ற  காண்பின் நெடுவரை,

    நிலை பெய்திட்ட மால்பு நெறியாகப்,

    பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை””

    என்னும் தேன் எடுக்கும் போது எழும் ஒலியும் எதிரொலிகளை ஏற்படுத்துவதை இப்பாடல் வரிகள் வரிகள் எடுத்துரைக்கின்றன.

    மேலும், மலைவாழ் பெண்களின் பாட்டொலி, கிளியோட்டும் ஒலி, சூரர மகளிரின் ஆரவார ஒலி, ஆகியனவும் அவற்றின் பாடலைப் படிப்பவர்க்குப் புதிய அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

    ‘கொடுவரி பாய்ந்தெனக்  தொழுநர் மார்பின்

    நெடுவிசி விழுப்புண் தனிமார், காப்பென

     

    அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் மாடல்’

    (மலைபடு: 302-304)

    ‘தினைக்குறு மகளிர் இசைபடு வள்ளையும்’ (மலைபடு:342)

    எனும் பாட்டொலிகளும்,

    ‘ஒலிகழைத் தட்டை புடைநர் புனன்தொனும்,

    கிளிகடி மகளிர் விளிபடுபூசல்’ (மலைபடு:328-329)

    எனும் கிளியோட்டும் ஒலியும்,

    ‘அருவிருகளும் வான் அரமகளிர்

    வருவிசைதவிராது வாங்குபு குடைதொறும்

    தெரிஇமிழ்  கொண்டதும் இயம்போல் இன்னிசை’

    (மலைபடு:294-296)

    எனும் சூரர மகளிரின் ஆரவார ஒலியும்  மலைப்பகுதிகளில் பட்டு எதிரொலிப்பதை மலைபடுகடாம் அழகுற எடுத்துரைக்கிறது எனலாம்.

    இவ்வொலிகள் தவிர மலைவாழ்மக்கள் எழுப்பும் குரலைக் கூத்தொலியும் (மலைபடு:322), காட்டுப்பசுக்கள் ஒன்றோடு ஓன்று போர் இடுவதைக் கண்டும் குறவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியும் (மலை 330-333), குறவச் சிறுவர்கள் எழுப்பும் ஓசையும் (மலை 336-339)  எதிரொலிகள் எழுப்புவதை மலைபடுகடாம் நுட்பமாக பாடிக் களிக்கிறது.

    முடிவுரை

    எதிரொலிகள் அறிவியல் நுட்பம் ஆகும். திரும்பக் கேட்டல் என்பது மனித மனதிற்கு இன்பம் விளைவிப்பது மலை பகுதிகளே பெரும்பாலும் எதிரொலிகளின் பிறப்பிடமாகும். இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் குரல் ஒலிகளும் மலைபகுதிகளிலேயே பட்டுத் திரும்ப எதிரொலிக்கும் எதிரொலிகளாக அமைத்துள்ளன. பெரும்பாலும் மனித உணர்வுகளும் சூழல் அமைவுகளுமே எதிரொளிக்குக் காரணமாக அமைவதை இக்கட்டுரை உறுதிபடுத்துகிறது எனலாம்.

    அடிக்குறிப்புகள்

    1. English Dictionary oxford P.No.54
    2. ச. பவானந்தம் பிள்ளை, தமிழ் சொல்லகராதி. ப .

    துணைநூற்பட்டியல்

    1.மறைமலை இலக்குவனார், சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு கட்டுரை, 2010.

    1. இரா. குணசீலன், பழந்தமிழர் ஒலிச்சூழல், இந்திய பல்கலைகழகத் தமிழாசிரியர் மன்ற பன்னாட்டு கருத்தரங்கு கட்டுரை, 2007.
    2. இரா. குணசீலன், சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, 2003.

    4.மு.பூங்கோதை, மதுரைக்காஞ்சியில் ஒலிச்சூழலமைவு, முத்துக்கமலம், இணைய இலக்கிய இதழ்.

       

    Share
  • மஞ்சரி இலக்கியமும் வகைகளும்

    முனைவர் இரா.வீரபத்திரன்,உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்

    தமிழ் சொல்வளமும் பொருள்வளமும் மிக்க உயர்தனிச் செம்மொழி. இத்தமிழ்ச் சோலையில் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் போன்றவற்றைவிட சிற்றிலக்கியங்களே அளவாலும் வகைகளாலும் மிகுதியான எண்ணிக்கையில் பூத்துக் குலுங்கின. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் கலம்பகம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, உலா, தூது, பரணி, குறவஞ்சி, பள்ளு, கோவை போன்ற சில வகைகள் சிறப்பாகச் செல்வாக்குப் பெற்றுள்ளன எனலாம். இன்னும் பல சிற்றிலக்கிய வகைகள் செல்வாக்குப் பெறாமலும், பெயரளவில் மட்டுமே அறிமுகத்துடனும் காணப்படுகின்றன. இவ்வகை இலக்கியங்கள் தமிழ்ச் சோலையில் செல்வாக்குப் பெற்று வளர்ந்தால் தமிழ்மொழி சீரிளமைக் கன்னியாய் என்றும் தொடர்ந்து வாழும். காலந்தோறும் தமிழ்ச் சோலையில் பல புதுவகையான இலக்கியங்கள் புதுமணம் பரப்பிக் கொண்டே இருக்கின்றன.

    மஞ்சரி இலக்கியம்விளக்கம்

    ‘மஞ்சரி’ என்பதற்குப் பூங்கொத்து, பூமாலை, தளிர், மலர்க்காம்பு, ஒழுக்கம், மஞ்சரிப்பா என்னும் ஆறு பொருள்களைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி விளக்கம் தருகிறது.1 பலவகைப் பாவும் பாவினமும் கலந்து பாடுதலை கலம்பகம் என்பர். இதேப்போல் பூங்கொத்துப் போல, பூமாலைப் போலப் பல்வேறு வகையான பாடல் தொகுப்புகளுக்கு மஞ்சரி எனப் பெயர் சூட்டியுள்ளனர். தனிப்பா மஞ்சரி, காமரச மஞ்சரி முதலியன இவ்வகையின. யானையின் போர்த்தொழில் பலவற்றையும் விவரித்துப் பாடும் ஒரு சிற்றிலக்கியத்திற்கு ‘ஆதோரண மஞ்சரி’ எனப் பெயரிட்டு உள்ளனர். பற்பல பொருள் பற்றி வெளிவரும் சிறந்த கட்டுரைகள், கதைகள் முதலியவற்றைத் தொகுத்துக் ‘கலைமகள்’ அலுவலகம் வெளியிட்டுவரும் திங்கள் இதழ் ‘மஞ்சரி’ என்னும் பெயருடையதாதலைப் பலரும் அறிவர். இங்கெல்லாம் பலவற்றையும் ஒருங்கு திரட்டிய திரட்டு நூல் என்னும் கருத்திலேயே ‘மஞ்சரி’ என்னும் பெயர் வழங்கப்படுதலைக் காணமுடிகின்றது. இலக்கியம் என்பதற்கும் செய்யுள் உறுப்புக்களை இணைத்துக் கட்டுதல் என்பது பொருள். ஆகவே பூங்கொத்து, பூமாலைப் போல் பல்வேறு வகையான பாடல் தொகுப்புக்கள் அடங்கிய நூலுக்கு மஞ்சரி இலக்கியம் என்று பெயர் கொள்ளலாம்.

    மஞ்சரி இலக்கியத்தின் இலக்கணம்

    இலக்கியத்திற்கு இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் பிரபந்த மரபியல், பிரபந்தத்திரட்டு ஆகிய இரண்டு நூல்கள் மட்டுமே மஞ்சரி இலக்கியத்தின் இலக்கணத்தைக் கூறுகின்றன. மஞ்சரி இலக்கியத்தின் முழு உருவமும் போக்கும் இவ்விரு பாட்டியல் நூலும் தெளிவாக வரையறை செய்யவில்லை.

    பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த பாட்டியல் நூலான பிரபந்த மரபியல்,

    “கருதுபொருள் இடம் காலம் தொழிலின்

    முப்பான் நாற்பான் எழுபான் தொண்ணூறு

    நூறான் வெண்பாக் கலித்துறையின் ஆதல்

    மன்னும் அவ்வெண்ணான் மாலை மஞ்சரி

    காஞ்சி மாலை முல்லைக்கலி சதகமென்று

    இயலும் செய்யுட்கு ஏற்ற பெயரே”2

    என்று பொருள், இடம், காலம், தொழில் என்ற நான்கின் அடிப்படையில் வெண்பா அல்லது கலித்துறைப் பாவினால் பாடப்படுவது மஞ்சரி இலக்கியம் என்கின்றது. இதனால் பொருள், இடம், காலம், தொழில் பற்றி நால்வகை மஞ்சரிகள் உள்ளன என்பது தெரிய வருகிறது.

    பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த பாட்டியல் நூலான பிரபந்தத்திரட்டு,

    “வரும்பவனி பத்து வருமவர்காண் நாலில்

    அரும்பும்ஒன் பானாள்முன்றிற் காகும் – விரும்புகரி

    பத்தாநா ளையப்பவனி பாவைபிரிவே ; வணிக

    வத்தருக்கா காமஞ்சரி”3

    தலைவன் பத்துநாள் உலா வரல் ; அவ்வுலாவின் நாலாம் நாள் பாவை ஒருத்தி அவனைக் காணல் ; அவனிடம் அன்பு அரும்புதல் ; ஒன்பதாம் நாளில் தன் முன்றிலில் வந்து அவனைக் காணுதல் ; பத்தாம் நாள் யானையின் மேல் அவன் உலா வரல் ; பின்னர் பாவை பிரிவால் வருந்துதல் – என்னும் பொருளில் வருவது ‘மஞ்சரி’ என்னும் இலக்கியமாகும்.

    மஞ்சரி இலக்கிய வகைகள்

    சிற்றிலக்கியங்களின் பெயர்களில் அமைந்த முடிவுச் சொல்லின் ஒற்றுமை வேற்றுமை கருதிச் சிற்றிலக்கியங்களைப் பாகுபடுத்துவர். சிற்றிலக்கியப் பெயர்களில் அமைந்த இச்சொல் முடிவுகள் சிற்றிலக்கியப் பாடுபொருண்மை, யாப்புவகை, பாடல் எண்ணிக்கை ஆகிய இவற்றுடன் கூடி அமைகின்றன.

    சிற்றிலக்கியங்களில் மாலை என்னும் சொல் முடிவைப் பெற்று அமைந்த சிற்றிலக்கியப் பெயர்கள் மிகுதியாக உள்ளன என்பதை அறிவோம். இதேபோல் மஞ்சரி என்னும் சொல் முடிவைப் பெற்று அமையும் இலக்கியங்கள் உள்ளன. வெற்றிக்கரந்தை மஞ்சரி, வாதோரண மஞ்சரி என்பன மஞ்சரி என்னும் சொல் முடிவைப் பெற்று அமைந்துள்ளன. மஞ்சரி என்னும் பெயர்க் கொண்ட இலக்கிய வகையும் உள்ளது.

    வெற்றிக்கரந்தை மஞ்சரி

    பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரையை மீட்கின்றவர், கரந்தை மலர்மாலை சூடிச்சென்று மீட்டு வருவதனை விரித்துப் பேசுவது வெற்றிக்கரந்தை மஞ்சரி என்பர். இதனை பிரபந்த தீபிகையும், முத்துவீரியமும் கூறுகின்றன.

    பிரபந்த தீபிகை,

    “மாற்றலர்கள் கொண்டநிரை மிட்போர் கரந்தைப்பூ

    மாலைசூ டிப்போகிமீள்

    வகையினை விரித்தோத லைவெற்றிக் கரந்தையின்

    மஞ்சரியெ னக்கூறுவா்.;”4

    பிரபந்த  மரபியல் முதலான நூல்கள் ‘கரந்தை’ என நிரை மீட்டலை மட்டும் சுட்டுகின்றன. முத்துவீரியம் வெற்றிக்கரந்தை என்றும், பிரபந்த தீபிகை வெற்றிக் கரந்தையின் மஞ்சரி என்ப பெயர்சூட்டிச் செயல்விளக்கம் அளிக்கின்றது. வெற்றிக் கரந்தை மஞ்சரி என்ற பெயர்நிலை பிரபந்த தீபம் முதல் காணப்படுகின்றது. மாலையிலக்கிய வகையாகவும் எவ்யாப்பின் முப்பது செய்யுளாலாவதாகவும் பிரபந்த மரபியல் இதனை நுவலுகின்றது. பிற்காலப் பாட்டியலில் இது காணப்படவில்லை.

    வாதோரண மஞ்சரி

    யானையை வயப்படுத்தி அடக்கினவருக்கும், எதிர்த்த யானையை வெட்டி அடக்கியனவருக்கும், பற்றிப் பிடித்துச் சேர்த்தவருக்கும், அவர்தம் வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப்பாவால் தொகுத்துப்பாடுவது வாதோரண மஞ்சரியாகும்.

    “யானை வயப்படுத்தி அடக்கின வருக்கும்

    எதிர்பொரும் யானையை ஈரவெட்டி

    அடக்கின வருக்கும் அதட்டிப் பிடித்துச்

    சேர்த்த வருக்கும் வீரச் சிறப்பை

    வஞ்சியாற் பாடுவ ததுவா தோரண

    மஞ்சரி எனப் பெயர் வைக்கப் படுமே”5

    என்று முத்துவீரியம் இலக்கணம் கூறுகின்றது.

    மஞ்சரி இலக்கியத்திற்குச் சொல்லப்பட்டுள்ள இலக்கணமும் பாடுபொருளும், வெற்றிக்கரந்தை மஞ்சரி, வாதோரண மஞ்சரி முதலிய இலக்கியங்களுக்கு சொல்லப்பட்டுள்ள இலக்கணமும் பாடுபொருளும் வேறுபடுகின்றன. அந்தாதி இலக்கியங்களின் வகைகளான பதிற்றுப் பத்தந்தாதி, நூற்றந்தாதி போன்றவை அந்தாதி எனும் அமைப்பு நிலையில் ஒன்றுபட்டு பாடல் எண்ணிக்கையால் வேறுபடுகின்றன. ஆனால் மேற்குறிப்பிட்ட மஞ்சரி எனும் சொல் முடிவைப் பெறும் இலக்கிய வகைகள் ‘மஞ்சரி’ இலக்கியத்தின்று முற்றிலும் வேறுபடுகின்றன. இவைகளை மஞ்சரியின் இலக்கிய வகைகள் என்று கூறுவது பொருந்துவதன்று.

    திரிபு மஞ்சரி

    “திரிபு எனும் சொல், வேறுபாடு, தோன்றல், திரிதல் முதலிய இலக்கணப் புணர்ச்சி விகாரம், முத்திக்கு இடையூறாய் நிற்கும் விபரீத உணர்வு எனும் பொருண்மைகளுடன், முதலெழுத்தொழிய இரண்டு முதலான எழுத்துக்கள் அடிதோறும் ஒத்திருக்கையிற் பொருள் வேறுபடப் பாடுஞ் செய்யுள் எனவும் பொருள் படுகின்றது.”6 இதன் அடிப்படையில், திரிபுச் செய்யுட்கள் பல அமைந்த இலக்கிய வகை, திரிபு மஞ்சரி எனக் கொள்ளல் பொருந்தும்.

    இவ் இலக்கிய வகையையும் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய தில்லைத் திருவாயிரத்தில் இத்திரிபு மஞ்சரி 25 கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களால் உருவாகியுள்ளது. திருவரங்கத் திருவாயிரத்தில் மற்றொரு திரிபு மஞ்சரி காணப்படுகிறது. இது 32 கட்டளைக் கலித்துறைகளைப் பெறுகின்றது. இவை அனைத்தும் முதற்சீரில் திரிபு கொள்கின்றன. முதலெழுத்தொழிய ஏனைய எழுத்துக்கள் ஒரு பாடலின் நான்கு அடியின் முதற்சீரிலும் ஒத்து அமைந்து இத்திரிபை உருவாக்குகின்றன.

    யமக மஞ்சரி

    யமகம் என்பது ‘வந்த எழுத்துக்களே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லது அடிகளிற் பின்னும் வருவதாகிய மடக்கு என்னும் அணி’ என விளக்கப்படுகின்றது. யமக அந்தாதி, இத்தகைய செய்யுட்கள் அந்தாதியும் பெற்று அமைந்த இலக்கிய வகையைக் குறிக்க, யமக மஞ்சரி என்பது, அந்தாதி இலக்கிய வகையைக் குறிக்க, யமக மஞ்சரி என்பது, அந்தாதி பெறாது தொடரும் பல யமகச் செய்யுளுடைய நூலைக் குறிக்கின்றது எனலாம்.

    ‘ஒரு சொல்லானே நான்கடியும் மடக்குவதனை இயமா வியமகமென்ப’ எனத் தண்டியலங்கார (96) உரை கூறுவது யமகமும் மடக்கும் ஒத்து வந்த பண்டை அணியிலக்கணக் கோட்பாட்டை விளக்குகின்றது.

    கலம்பக உறுப்புகளுள் ஒன்றாக யமகம் அமைதலைப் பாட்டியல்களும், இலக்கியங்களும் புலப்படுத்துகின்றன.

    “மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி ஆங்கே

    மான்கண்டால் மானுக்கே வாடி மாதர்

    குயில்கண்டால் குயிலுக்கே குழைதி ஆகில்

    கொஞ்சுரம்போக் கொழி நெஞ்சே…..”7

    தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடும் இடத்தில் மயில், குயில், மான் ஆகியவற்றைக் காண நேரும். அவ்வாறு காணும்போது தலைவியை நினைத்து வருந்துகிறான் என்னும் பொருளில் இவ்வடிகள் அமைந்துள்ளது.

    மயில், மான், குயில் என்னும் சொற்கள் அ்றிணைப் பொருளையும் மயிலுக்கே, குயிலுக்கே எனவரும் சொற்கள் தலைவியைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது. ஆகவே வந்த சொற்களே மீண்டும் வந்து வேறு பொருள் தர நின்றது. அதனால் இது கலம்பக உறுப்புகளுள் யமகத்திற்கு ஆகி வந்தது.

    ரச மஞ்சரி

    ஒன்பான் சுவைகள் நவரசம் எனப்படுகின்றன. வீரம், அருவருப்பு, பெருநகை, அச்சம், கோரம், கருணை, சாந்தம், அற்புதம், சிங்காரம் எனும் ஒன்பது சுவைகளும் இலக்கியப் பொருளானமையைத் தண்டபாணி சுவாமிகளின் நவரச மஞ்சரி காட்டுகின்றது.

    ஒவ்வொரு சுவைக்கும் ஒன்பது பாடலாக, வெவ்வேறுபட்ட யாப்பில் 81 கவிதைகள் இதன்கண் அமைகின்றன. சிங்காரமாகிய ஒன்பதாவது பகுதி பொருட்பகுப்பிற்கேற்ப, அகத்துறைகள் கொண்டு அமைகின்றது. செந்திலாண்டவன் புகழ் புலப்படும் வண்ணம் இப்பல்சுவைச் செய்யுட்கள் பொருந்துகின்றன.

    மேற்குறிப்பிட்ட யமக, திரிபு, ரச மஞ்சரி முதலியவையும் மஞ்சரி என்னும் சொல் முடிவைப் பெற்று அமைதலைக் காணமுடிகின்றது. பாடல்களில் சொல் வேறுபடுதல், பொருள் வேறுபடுதல், போன்ற அமைப்பு முறைகளைக் கொண்டு, மஞ்சரி எனும் பெயர் கொண்ட இச்செய்யுட்களை மஞ்சரி இலக்கியத்தின் வகைகளாகக் கொள்ளுதல் பொருந்தாது எனலாம். ஏனெனில் மஞ்சரி இலக்கியத்திற்கு கூறப்பட்டுள்ள இலக்கண அமைப்பு முறைகளில் இருந்து இவை முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.

    சிவத்தல மஞ்சரி

    இருபதாம் நூற்றாண்டில் ஆ. சிங்காரவேலரால் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூல் உரைநடை வடிவில் அமைந்துள்ளது. இந்நூலைத் தொகுத்தவர் நெ.சி. தெய்வசிகாமணி ஆவார். பூங்கொத்துப் போல, சிவனின் பெருமைகள் இந்நூல் முழுவதும் கூறப்பட்டுள்ளன.

    சிவபெருமான், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களின் துயரம் போக்குதல், செருக்கால் மதி இழந்த அசுரர்களைக் கொல்லுதல், சிவனடியார்களுக்கு அருள் பாலித்தல், சிவனின் திருவிளையாடல்கள் போன்றவை கூறப்பட்டுள்ளன. கைலாசாதி பர்வத விவரம், சிவராத்திரி பற்றிய குறிப்புக்கள், சிவனின் மூர்த்தங்கள் (64) குறிப்பிடப்பட்டள்ளன.

    சிவன் உறையும் தலங்கள், வடநாட்டில் 32 தலங்கள், தொண்டை நாட்டில் 36 தலங்கள், மகதநாடு அல்லது நடுநாட்டில் 22 தலங்கள், சோழநாடு காவேரியின் வடகரையில் 65 தலங்கள், காவேரியின் தென்கரையில் 128 தலங்கள், பாண்டி நாட்டில் 15 தலங்கள், கொங்கு நாட்டில் 7 தலங்கள், மலை நாட்டில் 2 தலங்கள், ஈழநாட்டில் 2 தலங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், திருவாசகம் பெற்ற சிவத் தலங்கள், திருவாசக வைப்புத் தலங்கள், திருவிசைப்பா பெற்ற தலங்கள் போன்றவை பற்றிய குறிப்புக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

    மஞ்சரி இலக்கியத்தின் அமைப்பு முறை

    காதலை முதன்மைப் பொருளாக வைத்துத் தலைவன் ஒருவனின் புகழ் பேசுகின்ற முறையில் மஞ்சரி இலக்கியம் அமைந்துள்ளது.

    பாட்டுடைத் தலைவன் உலா வருகிறான். அவனைக் கண்ட பெண்கள் வேட்கையுற்றுப் புலம்புகிறார்கள். தலைவியும் அவன்மீது காதல் கொள்கிறாள். உலா வந்த தலைவனின் எதிரே சென்று, அவனைப் புகழ்ந்து, அவனிடம் தனக்குள் ஆராக் காதலை வெளிப்படுத்திப் பேசுகிறாள். பின்னர் தன் தோழியை அத்தலைவனிடம் தூதாக அனுப்பி அவனுடைய மாலையை அத்தோழியின் வாயிலாகப் பெற்று மகிழ்கிறாள். தலைவன் தலைவியின் இல்லத்திற்கு வருகிறான். அவனை அவள் வரவேற்று, மஞ்சத்தில் அமரச் செய்து உபசரித்து மகிழ்கிறாள். அவனுடன் கூடிக் குலாவி அவள் இன்பம் துய்த்து வாழ்கிறாள்.

    மஞ்சரி என்பது பூங்கொத்துக்கும் பெயராதல் போல மஞ்சரி இலக்கியமும் அகப்பொருள் புறப்பொருள் பற்றிய சில சிற்றிலக்கியங்களின் கூட்டமைப்பாயும் உள்ளது. கேசாதிபாதம், விறலியாற்றுப்படை, தசாங்கம், காதல், குறம், உலா, தூது முதலியனவும் காதல் வளர்ச்சிக்குத் துணையாய் நிற்கின்ற வகையில் உள்ளமையால் மஞ்சரியில் விஞ்சி நிற்பது காதற்சுவை நிகழ்ச்சிகளே ஆகும். மஞ்சரி இலக்கியங்கள் கண்ணியமைப்பில் கலிவெண்பாவினால் பாடப்பட்டுள்ளன.

    தொகுப்புரை

    மஞ்சரி என்பதற்கு பூங்கொத்து, பூமாலை, தளிர், மலர்க்காம்பு, ஒழுக்கம் முதலிய பொருள்கள் குறிக்கப்படுகின்றன.பலவகை மலர்களால் தொடுக்கப்படுவது பூமாலை ஆதல் போல பல பாடல்களைத் தொகுத்துக் கூறும் நூல் மஞ்சரி எனப்படுகின்றது.

    மஞ்சரி இலக்கியத்திற்கு பிரபந்தத் திரட்டு, பிரபந்த மரபியல் முதலிய பாட்டியல் நூல்களே இலக்கணம் வகுத்துள்ளன. இவ்விலக்கியம் 16ஆம் நூற்றாண்டில் சில புலவர்களால் சிறப்பாகப் போற்றிப் பாடப்பட்டுள்ளது.

    மாலை இலக்கியங்கள் போன்று மஞ்சரியும் இறுதியில் மஞ்சரி எனும் சொல் முடிவைப் பெற்று விளங்குகின்றது. வெற்றிக்கரந்தை மஞ்சரி, வாதோரண மஞ்சரி போன்றன மஞ்சரி எனும் சொல் முடிவைப் பெற்றுள்ள வேறொரு வகை இலக்கியமாகக் கருதப்படுகிறது.

    யமக மஞ்சரி, திரிபு மஞ்சரி என்பன செய்யுளில் சொற்களின் அமைப்பு முறையில் ஏற்படும் மாற்றம் வைத்து குறிக்கப்படுகிறது. ரச மஞ்சரி என்பது சுவைகளைப் பற்றிப் பேசும் இலக்கியமாகும். மஞ்சரி இலக்கியத்தின் இலக்கணமும், அமைப்பு முறையும் மேற்குறித்த மஞ்சரி எனும் சொல் முடிவைப் பெற்று வந்த இலக்கியங்களின் இலக்கணமும் அமைப்பு முறையும் வேறுபட்டுள்ளன. இவை மஞ்சரி இலக்கியத்தின் வகையாகக் கருதமுடியாது.

    சிவத்தல மஞ்சரி, சிவனின் பெருமைகளை அவனது அடியார்களுக்கு எடுத்துரைத்தல் போலவும், சிவனின் திருவிளையாடல்கள் பற்றியும், சிவன் உறையும் தலங்கள் பற்றியும் உரைநடைவடிவில் எடுத்துரைக்கின்றது. காதலை முதன்மைப் பொருளாக வைத்துத் தலைவன் ஒருவனின் புகழ் பேசுகின்ற முறையில் மஞ்சரி இலக்கியம் அமைந்துள்ளது.

    பாட்டுடைத் தலைவன் உலா வருகிறான். அவனைக் கண்ட பெண்கள் வேட்கையுற்றுப் புலம்புகிறார்கள். தலைவியும் அவன்மீது காதல் கொள்கிறாள். உலா வந்த தலைவனின் எதிரே சென்று, அவனைப் புகழ்ந்து, அவனிடம் தனக்குள் ஆராக் காதலை வெளிப்படுத்திப் பேசுகிறாள். பின்னர் தன் தோழியை அத்தலைவனிடம் தூதாக அனுப்பி அவனுடைய மாலையை அத்தோழியின் வாயிலாகப் பெற்று மகிழ்கிறாள். தலைவன் தலைவியின் இல்லத்திற்கு வருகிறான். அவனை அவள் வரவேற்று, மஞ்சத்தில் அமரச் செய்து உபசரித்து மகிழ்கிறாள். அவனுடன் கூடிக் குலாவி அவள் இன்பம் துய்த்து வாழ்கிறாள்.

    மஞ்சரி என்பது பூங்கொத்துக்கும் பெயராதல் போல மஞ்சரி இலக்கியமும் அகப்பொருள் புறப்பொருள் பற்றிய சில சிற்றிலக்கியங்களின் கூட்டமைப்பாயும் உள்ளது. கேசாதிபாதம், விறலியாற்றுப்படை, தசாங்கம், காதல், குறம், உலா, தூது முதலியனவும் காதல் வளர்ச்சிக்குத் துணையாய் நிற்கின்ற வகையில் உள்ளமையால் மஞ்சரியில் விஞ்சி நிற்பது காதற்சுவை நிகழ்ச்சிகளே ஆகும். மஞ்சரி இலக்கியங்கள் கண்ணியமைப்பில் கலிவெண்பாவினால் பாடப்பட்டுள்ளன.

    குறிப்புகள்

    1. சென்னைப் பல்கலைக்கழக பேரகராதி தொகுதி-6 ப.201
    2. பிரபந்தமரபியல் , நூற்பா.102
    3. பிரபந்தத்திரட்டு, நூற்பா.109
    4. பிரபந்த தீபிகை, நூற்பா .35
    5. முத்துவீரியம், நூற்பா.1070
    6. உ.வே. சாமிநாதையர், இலக்கிய வகையும் வடிவும், ப.516
    7. நந்திக்கலம்பகம், பா.17
    Share