Blog

  • நிறைமதியாளர்!

    -வேதா. இலங்காதிலகம்

    நாலடியார்

    அதிகாரம் 25 –   அறிவுடைமை

    பகைவர் பணிவிட நோக்கித்  தகவுடையார்
    தாமேயு நாணித் தலைச்செல்லார் காணா
    யிளம்பிறை யாயக்காற் றிங்களைச் சேரா
    தணங்கருந் துப்பி னரா. (நாலடி: 241)

    அணங்கு – வருத்தம் செய்யும், அரு – கொடிய, துப்பின் – வலியுடைய, அரா – பாம்பு, இளம்பிறை – இளையபிறைச் சந்திரனாயிருக்கும் போது, திங்களை – சந்திரனை, சேராது – வருத்துவதற்கு நெருங்காது, (அது போல) தகவு உடையார் – தகுந்த அறிவுடையார், பகைவர் – தம்முடன் மாறுபட்டவர், பணிவு இடம் நோக்கு – தாழ்ந்து இருக்கும் காலத்தைக் கவனித்து, தாமேயும் நாணி – தம்மில் தாமே வெட்கமுற்று, தலைசெல்லார் – அவரை அடக்குதற்கு எதிர்த்துச் செல்லமாட்டார், காணாய் – இதனை அறிக.

    எனது வரிகள்:-

    முழுமதிச் சந்திரனையே என்றும்
    பழுதுடை கிரகணம் பற்றும்
    பிறை நிலாவை அதன்
    குறையோடு கிரகணம் பற்றா
    இவ் விதியாய் எதிராளியின்
    திடமற்ற நிலைப்பாடில் பலவீனரை
    அடக்கார்  எதிர்க்கார்  தம்முள்
    குறுகும் நிறை மதியாளர். 

     

    Share
  • வானம் உன் கைகளுக்குள்!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    பூந்தென்றல்   வீதியுலா
    புறப்பட்டு   வருவதற்கே
    ஏந்திவரும்   பல்லக்கை
    எதிர்பார்த்தா   காத்துளது ?

    காரிருளை   மாய்ப்பதற்குக்                              skytouching
    கதிரவன்தான்   காலைவர
    தேரினையா   எதிர்பார்த்துத்
    தெருமுனையில்   காத்துளது ?

    கண்களினைப்   பறிக்கின்ற
    கார்மேக   மின்னல்தான்
    மின்சாரம்   எதிர்பார்த்தா
    மின்னுதற்குக்   காத்துளது ?

    தானிறங்கி   வருவதற்குத்
    தரையிருந்து   குழாய்இணைப்பு
    வானிற்கு   வருமென்றா
    வளமழையும்   காத்துளது ?

    சாதனைகள்   புரிவதற்குச்
    சந்தர்ப்பம்     வாய்க்குமென்று
    சோதனைகள்   செய்யாமல்
    சோம்பலுடன்   இருப்பதுவோ ?

    வாய்ப்புகளோ   உனைத்தேடி
    வரவேற்பு     கொடுக்காது
    வாய்ப்புகளை   உருவாக்கு
    வானம்உன்    கைகளுக்குள் !

     

    Share
  • பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ..

    கவிஞர் காவிரி மைந்தன்

    akv
    akv1உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல் மட்டுமல்ல! தமிழ்த்திரை வரலாற்றிலும் அந்தப்படம் மறக்க முடியாத ஒன்று! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை அழைத்து.. இந்தப் படத்திற்கான இசையமைப்பிற்கு முதல் தொகையை வழங்கிய புரட்சித்தலைவர்.. முழுக்க முழுக்க பாடல்களின் வெற்றியை எதிர்பார்க்கிறேன்! பத்துப் பாடல்கள்.. அனைத்தும் முத்துப் பாடல்களாக வரவேண்டும் என்று பணிக்க.. மெல்லிசை மன்னரும் தன் திறம் முழுக்கச் செலுத்தி ஒவ்வொரு பாடலாக உருவாக்கித் தருகிறார். காலை முதல் மாலைவரை நடந்திடும் அப்பணியை மாலையிலே வந்து கேட்டு கருத்து வழங்கிய மக்கள் திலகம்.. ஒவ்வொரு பாடலையும்.. எதிர்பார்த்த அளவு சரியாக வரவில்லை.. என்று சொல்ல, மெல்லிசை மன்னரோ.. சரி.. அப்படியென்றால் நாளைக்கு இதே பாடலுக்கு வேறு மெட்டுக்கள் அமைத்துக் காட்டுகிறேன் என்பாராம். எம்.ஜி.ஆரோ.. சரி.. விடுங்க.. அடுத்த பாடலையாவது இன்னும் நல்லா பண்ணுங்க என்று விடைபெறுவாராம்.

    அப்படியே படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் எம்.ஜி.ஆர். அவர்களின் தினசரி கருத்தின்படி பரவாயில்லைakv2 ரகமாகவே அமைந்திட மெல்லிசை மன்னருக்கு.. மனம் திருப்தியாக இல்லை.. எனவே கடைசிப் பாடலை இசையமைத்துவிட்டு.. இதோ பாருங்க.. இந்தப் பாடலும் உங்களுக்கு திருப்தியாக இல்லையென்றால்.. நான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்.. நீங்கள் வேறொரு இசையமைப்பாளரை வைத்து இசை அமைத்துக் கொள்ளுங்கள் என்று எம்.ஜி.ஆரிடம் சொல்ல.. கடைசிப்பாடலையும் கேட்டபின் பொன்மனச் செம்மல் புகன்றிட்ட பாராட்டுகள் எத்தனை தெரியுமா? எம்.எஸ்.வி.. உங்கள் இசையை வேறு எவரும் குறை சொல்லக் கூடாது.. நான் மட்டும்தான் அந்த உரிமை பெற்றவன்.. மேலும் ஒவ்வொரு பாடலையும் நீங்கள் வித்தியாசமான முயற்சி செய்து புதுமையாக செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படி நடந்துகொண்டேன் என்றார். அது தவிர.. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பாடல்கள் அனைத்தும் காலங்களை வென்று நிற்கும் கானங்களாகும் என்றே அன்றே உறுதிபட தெரிவித்து உள்ளத்து மகிழ்ச்சியை வெறும் வார்த்தைகளால் வழங்காமல், குறிப்பிட்ட தொகைக்கு மேலே பல மடங்கு மெல்லிசை மன்னருக்கு வழங்கிய வள்ளலின் இசை ரசனை என்றைக்காவது சோடை போனதுண்டா?

    வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.. என்கிற முதல் பாடல் முதல் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் தமிழ்பேசும் மக்கள் அனைவரின் விருப்பப் பாடல்களானதை மறுக்க முடியுமா? இதோ பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ .. வாலிபக் கவிஞர் வாலியின் கைவண்ணம்.. மக்கள் திலகத்தோடு தாய்லாந்து நாட்டு கதாநாயகி இணைசேர.. கற்பனை வானம் திறக்கிறது.. கன்னித்தமிழ் மணக்கிறது.. இன்பத்தேன் வழிகிறது.. இதயம்வரை நனைகிறது.. அதற்கு முன்னரோ.. பின்னரோ.. வந்த எந்த இசையோடும் ஒப்பிட்டுப் பாருங்கள்.. மெல்லிசை மன்னருக்கு நிகர் மெல்லிசை மன்னரே என்று நிரூபிக்கும் தரமான இசை.. மேலைநாட்டு சங்கீதத்தை தன் கற்பனையாலே கேள்வி ஞானத்தாலே மீட்டெடுத்துத் தருகின்ற வித்தைக்காரர்.. இதைவிட சிறந்ததொரு இசை உலகம் சுற்றும் வாலிபனுக்கு கிடைத்திடுமா?

    டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் அமைந்த இன்னிசை ஸ்வரமாலை..
    இதோ.. மெல்லப் பேசும் கள்ளப்பார்வை ஜாதிப்பூவின் மென்மை..

    பச்சைக்கிளி முத்துச்சரம்
    முல்லைக்கொடி யாரோ……………

    திரைப்படம்:உலகம் சுற்றும் வாலிபன்.
    பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன் பி.சுசீலா
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    வரிகள்: கவிஞர் வாலி

    பச்சைக்கிளி முத்துச்சரம்
    முல்லைக்கொடி யாரோ
    பாவை என்னும் பேரில் வரும்
    தேவன் மகள் நீயோ ?
    பொன்னின் நிறம் பிள்ளை மனம்
    வள்ளல் குணம் யாரோ
    மன்னன் எனும் பேரில் வரும்
    தேவன் மகன் நீயோ (பொன்னின்)

    தத்தை போலத் தாவும் பாவை
    பாதம் நோகும் என்று
    மெத்தை போல பூவைத் தூவும்
    வாடைக் காற்றும் உண்டு
    வண்ணச்சோலை வானம் பூமி
    யாவும் இன்பம் இங்கு
    இந்தக் கோலம் நாளும் காண
    நானும் நீயும் பங்கு
    கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
    நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ (பச்சை)

    பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல
    நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன
    சொல்லகை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு
    கண்பட்டாடும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று
    பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
    கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவா (பச்சை)
    பல்லவி முதல் சரணங்கள் வரை பாடலில் இனிமை..இளமை.. புதுமை!!


    கவிஞர் காவிரிமைந்தன்
    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
    பம்மல், சென்னை 600 075
    தற்போது – அபுதாபி – அமீரகம்
    00971 50 2519693
    00971 50 4497052
    kaviri2015@gmail.com
    www.thamizhnadhi.com

    Share
  • ஆயிரம் முகங்கள் எனக்கு!

    -கவிஜி

    உயிர் சுமந்து
    திரியும்
    இடைவெளியற்ற
    மாற்றுச் சிந்தையில்
    மற்றுமோர்
    தீவுக்குள் தொலைவதைத் தவிர
    வழியில்லை…

    உடல் கொண்ட
    பலம் முழுக்க
    முதிர்ந்துபட்ட
    கல்லடிகள்தான்…

    உடைத்த கல்
    உன் விழிக்குள் தூசியாகும்
    உடைந்த கண்ணாடி
    ஆனாலும் ஆயிரம்
    முகங்கள் எனக்கு!

    அத்துமீறி நுழையும்
    காட்டுயானையைக் கேட்டு பார்…!
    அத்திசை சொல்லும்
    தாகம் – சுரண்டுபவள்
    நீ என்கும்…!

    பூக்கள் வியக்கும்
    பிணமாகி, கிடப்பதில்தான்
    பூர்த்தியாகிறது பயணம்
    பாதம் நக்கும்
    நாய் போல…!

    நீ இல்லாத தேசத்திலும்
    இனி நான் இருப்பேன்
    இருத்தல் உனைக் கடந்த
    என் சவத்தோடு!

     

    Share
  • படிப்பதற்கே நூல்கள்!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    அடுக்கடுக்காய் நூல்களினை அடுக்கி வைத்தே
    அழகுதனைப் பார்ப்பதிலே பயன்தான் உண்டோ?
    மிடுக்கான பேழைக்குள் வரிசை யாக
    மிளிர்கின்ற படிவைத்தால் அறிவா கூடும்?                 Tamizhazhan
    எடுக்காமல் எடுப்பாக வீட்டிற் குள்ளே
    எழிலுக்காய் வைப்பதிலே மதிப்பா சேரும்?
    கொடுக்காமல் புதைக்கின்ற பணத்தைப் போன்ற
    கொடுமையன்றோ படிக்காமல் வைத்தி ருத்தல்!

    வாங்கிவந்த நூல்களினைக் கருத்துக் கேற்ப
    வகைபடுத்தித் துறைபிரித்து வைக்க வேண்டும்
    பாங்காகத் தூசிதட்டிப் பூச்சி வந்து
    பக்கங்கள் அரிக்காமல் காக்க வேண்டும்
    பூங்காவில் தேன்தேடும் தேனீ போன்றுப்
    புதுநூல்கள் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்
    நீங்காத அன்புகாட்டிக் காக்கும் தாயாய்
    நிறைநெஞ்சால் நாள்தோறும் பேண வேண்டும்!

    உண்பதற்கு நேரத்தை ஒதுக்கல் போல
    உரியநேரம் படிப்பதற்கும் ஒதுக்க வேண்டும்
    பண்புகளைக் குழந்தைகட்குச் சொல்லல் போன்று
    படிக்கின்ற பழக்கத்தைப் பதிக்க வேண்டும்
    எண்ணத்தை அறிவுதனைக் கூர்மை யாக்கி
    எப்போதும் துணைநிற்கும் நூல்கள் தம்மைக்
    கண்போலக் காத்துநாளும் படிக்கும் போதே
    கால்நிற்கும் துணிவுவந்து சிறக்கும் வாழ்வே !

     

    Share
  • உள்ளம் கொள்ளை போகுதே !

    -பா.ராஜசேகர்

    இரவுப்பெண் 
    தலை சூடிய
    மலரோ 
    அது நிலவு !

    வளர்மங்கை 
    மனம் தேடிய 
    மலரும் 
    வனம் தினம் 
    தேடிவரும் வண்டோ                             
    அது நான் !

    கண் மீனது                                                            younggirl
    பெண் மானது 
    வெண் மேகங்களும் 
    தலை சாயும் 
    அவள் தேகம் !

    மலர் மொய்க்கும் 
    வண்டுகளைப் போல 
    ஊர் கூடிவரும் 
    நீ மலர்சூடி
    வரும்போது !

    மழை 
    நீர் அருவி 
    மலை மேலிருந்து 
    தென்றலிடை 
    வளைந்து நீ வரும் 
    அழகில் நாணும் !

    உன் 
    முன்னழகு 
    என் கண்களிலே 
    பூமி பந்தை 
    இரண்டு துடுண்டுகளாக 
    வெட்டி ஓட்டும் !

    உன் 
    கட்டழகில் ஒட்டிக்கொண்ட 
    ஆடை தேனில் 
    ஊறச் சுளை 
    சுவைக்கும் !

    காரிருளை 
    ஓர் பின்னலில் 
    ஊஞ்சல் 
    உன் கூந்தல் !

    உன் 
    புன்னகையைச் 
    சுருட்டி கூந்தல் 
    முனையில் கட்டி 
    நீ நடந்து 
    வர அழகு!

    கூந்தலாடும் 
    அசைவும் 
    கொள்ளை போகும் 
    மனசு !
    கொல்லுதடி வயசு!!

     

    Share
  • வண்ணங்கள் தாண்டிய என் மொழியில்…!

    -கவிஜி

    உதிர்தலில்
    இளவேனில் முன்பனி…
    பகர்தலில்
    முதுவேனில் பின்பனி…
    காலம் சருகுகள்
    மிதிக்கிறது
    படாமல் படும்
    பாதங்களில்
    நான் மட்டும் கேட்கும்
    மெட்டிச் சத்தம்…

    துளியாய்த் தொலைந்த
    காட்டுக்குள்
    மரமாகி நிற்கிறது
    நினைவுகள்…!
    நிழல் மறையும்
    நேரங்களில்
    மீண்டும் மீண்டும்
    உயிர்த்தலே
    பெரும் சுவாசம்…!

    மூடு மந்திரக்
    கோட்பாட்டில்
    சித்திரமாகி நிறைகிறது
    உதிர்தலின் ஓர் இலை…!
    அது நானாகி
    யோசிக்கும் பிழையில்
    என் காட்சி
    வண்ணங்கள் தாண்டிய
    என் மொழியில்…!

     

    Share
  • வாழ்வது ஒரு சாண் வயிற்றுக்கே!

    -துஷ்யந்தி, இலங்கை

    வாழ்க்கைச் சக்கரம் இயங்க
    வழிகாட்டியும் இதுவே…
    வாழ்க்கைச் சக்கரத்தை முடிக்க
    குழி தோண்டுவதும் இதுவே..!

    அளவாய் உணவு கொடுக்க
    உண்டு தினம் இன்பம்…
    அளவுக்கதிமானால் தரும்
    நமக்கே வீண் சோகம்..!

    வறுமையின் நிறந்தனைக்
    காட்டுவதும் இதுவே…
    வாழ்வில் பிறர்க்குச் சேவையெனச்
    செய்யவேண்டியதும் இதற்கே..!

    ஈயாது சேர்ப்பான் பெரு
    வயிறு கொண்டு இருப்பான்…
    இறப்பின் பின் அவனோ
    இடமில்லாது திரிவான்…!

    நாடாளும் மன்னனுக்கும்
    ஒரே அளவு பசிதான்…
    நாட்டின் சிறு சேவகனுக்கும்
    அதே அளவு பசிதான்..!

    வீணான எண்ணம் கொண்ட
    மனிதனுக்கே பிரிவினை…
    பசியென்று வந்துவிட்டால்
    வயிற்றுக்கில்லை வேற்றுமை…!

    வாழ்க்கையில் உண்மைகள்
    பலவுண்டு கேளுங்கள்….
    வாழும்வரை நாமெல்லாம்
    செய்யவேண்டும் பல சேவைகள்..!

     

    Share
  • கவிஞனால்தான் முடியும்!

    -சுரேஜமீ.

    கவிஞனால்தான் முடியும்! காலத்தால் அழிக்க முடியாத கருத்தைச் சொல்வதற்கு!

     

    இந்திய மண்ணின் இரண்டு இதிகாசங்கள் சொல்லும் நீதி, வாழ்க்கை இயம்பட வாழ வழிசொல்லும் ஒப்பற்ற காவியங்கள் என்பது யாவரும் அறிந்ததே!

    அதை சொல்லும் விதத்தில், எவ்வகையிலும் சளித்தவர்கள் அல்ல நம் கவிஞர்கள்!

    அதிலும் குறிப்பாக, கவிச் சக்ரவர்த்தி கம்பன், அயோத்தியா காண்டத்தில், மந்திரப் படலத்தில், ஒரு வாழ்த்துப் பா வைக்கிறான்.

    Kambanஅந்த விருத்தத்தில், கடைசி நான்கு வரிகளில், ஒரு காதையின் முழுக்கருத்தையும் சொல்லி விடுகிறான் என்பதை, என்னுடைய கோணத்தில் பார்க்க விரும்புகிறேன்.

    இதோ அந்த பாடல் வரிகள்:
    …….கூனும் சிறிய கோத் தாயும்
    கொடுமை இழைப்பக் கோல் துறந்து,
    கானும் கடலும் கடந்து, இமையோர்
    இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை!

    என்ன சொல்கிறான் கம்பன்? சிந்திப்போமா?

    கூனியும், இராமனின் சிறிய தாயான கைகேயியும், செய்த கொடுமையின் விளைவால், அரசாள வேண்டிய இராமன், பட்டத்தைத் துறந்து, கானகம் ஏகிக், கயவர்களின் சூழ்ச்சியால், கட்டின மனைவி சீதையைப் பிரிந்து, ஆற்றொனாத் துன்பத்திற்கு ஆளாகி, அனுமனின் உதவியால், கடல் கடந்து, தன் இமைபோல இருக்கக் கூடிய மனைவி சீதாப்பிராட்டியை துன்பத்திலிருந்து மீட்க, இழிசெயல் புரிந்த இராவணனை அழித்து, வெற்றியை ஈட்டித் தன் மனைவியை மீட்ட வேந்தன் இராமன் என்று

    இரத்தினச் சுருக்கமாக, ஈரிரண்டு வரிகளில் யாரால் சொல்ல முடியும்?

    கவிஞனால்தான் முடியும்! காலத்தால் அழிக்க முடியாத கருத்தைச் சொல்வதற்கு!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    வார்த்தைகள் இல்லையே வெண்பா விளம்பிட,
    நீர்த்தேனே நின்வரைவை நான்கண்டு, -பார்த்தனின்
    சாரதி வாய்குவித்தல் சங்காபுல் லாங்குழலா!
    பாரதம்முள் வாத்சல்யம் பூ ….கிரேசி மோகன்….

    Share
  • திருக்குறள் வெப்பவளிக்கூடு – ஓர் உலக சாதனை முயற்சி

    மகேந்திரன் அர்சுனராஜா

    நண்பர்கள் சிலர் கூடி ஒரு உலகசாதனை முயற்சியில் இறங்கியுள்ளோம். அதாவது உலகப்பொதுமறையான திருக்குறளை வெப்பவளிக்கூடில் ( Hot Air Balloon) தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கச்செய்ய உள்ளோம். வெப்பவளிக்கூடில் அச்சேறிய முதல் நூல் ஒரு தமிழ் நூல் என்ற பெருமை நமக்கு கிட்டும். அந்த பெருமைக்கு உகந்த நூல் திருக்குறளை தவிர வேறு இருக்க முடியாது என்பது எங்கள் கருத்து.

    atk

    இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்கள் இதோ

    1. தமிழர்கள் அல்லாதவர்களிடம் திருக்குறள் ஆர்வம் உண்டாக்குவது.
    2. எக்காலத்திற்கும் ஏற்புடையது குறள் என்று மீண்டும் ஒருமுறை பிரமாண்டமாக பறைசாற்றுவது.
    3. புதுமையான ஒரு வழியில் திருக்குறளை நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது.

    இந்த முயற்சிக்கான திட்டமிடல் பல வருடங்களாக நடந்துகொண்டிருகிறது. தற்பொழுது தான் இதை அதிகாரபூர்வமாக சித்திரை முதல் நாளில் அறிவித்துள்ளோம். வெப்பவளிக்கூடில் மிகவும் அனுபவம் வாய்ந்த Global Media Box என்னும் நிறுவனம் மூலம் இந்தக்கனவுத் திட்டம் நனவாக உள்ளது. அமெரிக்காவில் அச்சேறி , வரும் ஆண்டின் திருவள்ளுவர் நாளில் , பொள்ளாச்சியில் இந்த வெப்பவளிக்கூட்டை பறக்கவிட உள்ளோம். பின்னர் இதனை உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு கொண்டு செல்ல உள்ளோம். இதன் மூலம் திருக்குறளைப் பற்றியும் தமிழ் பற்றியும் ஒரு உலகளாவிய விழிப்புணர்வு உண்டாகும் என்பது எங்கள் நம்பிக்கை .

    தற்பொழுது இந்த முயற்சிக்கு ஆதரவு திரட்டுகிறோம் . ஒத்த சிந்தனை உள்ள அனைவரையும் இந்த முயற்சியில் பங்கேற்க அழைக்கிறோம்.

    1. முதலில் திருக்குறளை உயிர்மூச்சாக எண்ணி ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கு இந்த செய்தியை ஒருவரையும் விட்டுவிடாமல் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு உங்கள் உதவி வேண்டும். அறிஞர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் வேண்டும்.

    2. உலகெங்கிலும் பரவியுள்ள தமிழ் சங்கங்களுக்கு இந்த செய்தி சென்றடைய வேண்டும். அங்கு யாரை தொடர்பு கொள்வது என்ற விபரம் வேண்டும்.

    3. இந்த முயற்சியை மேலும் சிறப்படையச் செய்ய தங்களின் அறிவுரைகள் வேண்டும்.

    4. இது ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சி , இதற்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவியும் வேண்டும்.

    இந்த முயற்சியை பற்றி மேலும் அறிய கீழ்க்கண்ட முகவரிகளில் காண்க.

    அய்யா சாலமன் பாப்பையா அவர்களின் வாழ்த்து
    https://www.youtube.com/watch?v=zK9XydZUhY4&feature=youtu.be

    www.facebook.com/kuralballoon

    www.kuralballoon.com

    மே 1 முதல் பொருளாதார உதவி இணையம் மூலமாக செய்ய இயலும்.

    உங்களால் இரண்டு வழிகளில் பொருளாதார உதவி செய்ய முடியும்:

    1. இந்த நிகழ்வுக்கு உங்களின் பங்களிப்பு : ரூபாய் 3,000/- அளிப்பவர்களின் பெயர்கள், திருக்குறள் வெப்பவளிக்கூடு வெப்சைட் இல் இடம்பெறும் .மேலும் அவர்களுக்கு திருக்குறள் வெப்பவளிக்கூடு பிரத்யோக பேனா ,கீ செயின்,டிஜிட்டல் சான்றிதல் மற்றும் திருக்குறளை உள்ளடக்கிய ஒரு பென் டிரைவ் வழங்கப்படும் .

    2. வெப்பவளிக்கூடு உங்கள் புகைப்படம் : ரூபாய் 10,000/- அளிப்பவர்களின் புகைப்படம் அவர்களின் பெயருடன் திருக்குறள் வெப்பவளிக்கூடில் அச்சிடப்படும் .மேலும் அவர்களுக்கு, திருக்குறள் வெப்பவளிக்கூடு பிரத்யோக ஆடை , பேனா ,கீ செயின்,டிஜிட்டல் சான்றிதல் மற்றும் திருக்குறளை உள்ளடக்கிய ஒரு பென் டிரைவ் வழங்கப்படும் . ( இந்த முறையில் 1330 நபர்கள் மட்டுமே பங்கு பெற முடியும் ).

    இவ்வாறு பெரும் தொகை மற்றும் செலவு கணங்குகள் வெளிப்படையாக பராமரிக்கப்படும்.

    வெப்பவளிக்கூடின் கட்டமைப்பு கீழ்க்கண்ட படத்தில் காண்க.

    பொருளாதார உதவி எல்லோராலும் இயலாத ஒன்று. அதனால் வேறு சில பங்களிப்பு முறைகளுக்கும் வழி செய்து கொண்டிருக்கிறோம் ( நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு , மாணவர்களுக்கான போட்டிகள் , புகைப்பட கண்காட்சி ) ஆக இப்போதைக்கு இந்த செய்தியினை எல்லோர்க்கும் கொண்டு செல்வதே பெரிய உதவியாக இருக்கும்.

    விபரங்கள் – www.kuralballoon.com

    – மகேந்திரன் அர்சுனராஜா

    Share
  • விநாயகர் கவசம்

    சுரேஜமீ

    வணக்கம். இங்கே கொடுக்கப் பட்டுள்ள ‘விநாயகர் கவசத்தை’ கந்த சஷ்டி மெட்டில் புனைந்துள்ளேன் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த அஷய த்ரிதியை நாளில், அனைவரும் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன்.

    av

    விநாயகர் கவசம்
    சதுர்த்தியில் மலர்ந்த
    சண்முக சோதரா
    சதுர்மறை போற்றும்
    சிவனுமை பாலா
    தினம்உனைப் பாடி
    துதிசெய்து நாளும்
    உனதருள் வேண்டி
    நிதமுனைப் பணிவோம்.

    முன்வினை களைவாய்
    மூஷிக வாகனா
    என்மனம் இருப்பாய்
    ஈசன் புதல்வா
    சிந்தையில் கலப்பாய்
    சித்தி விநாயகா
    உன்பதம் சரணம்
    உமையவள் மைந்தா.

    ஒன்றுமே அறியேன்
    உலகினில் பிறந்தேன்
    உன்னடி சேர்ந்தேன்
    ஒரு வரம் தருவாய்
    நன்று மற்றன்று
    நவிலா வண்ணம்
    நந்தன விநாயகா
    நலமது அருள்வாய்.

    இருசெவி என்றும்
    இன்பமே உய்க்கும்
    நற்செய்தி நாளும்
    நயம்படக் கேட்க
    இருவிழி காணும்
    ஒரு முகக்காட்சி
    மங்கல மூர்த்தி
    நினதருள் சாட்சி.

    நாமகள் நாவினில்
    அமர்ந்து அடியேன்
    சொல்பொருள் யாவும்
    நலமென விளைய
    நுகரும் மணமே
    நறுமணமாகி,என்
    மெய்யது காப்பாய்
    கஜமுக கணபதி.

    ஐம்புலன் தன்னை
    ஐங்கரன் காப்பான்
    தினம் ஒருதடவை
    மனமது ஒன்றிப்
    பாடும் பக்தர்கள்
    பாரினில் நற்கதி
    பெறுவார் சத்தியம்
    பால கணபதியருளால்.

    அல்லல்கள் ஓடும்
    நல்லவை நாடும்
    நவகோள் அருளை
    வாரி வழங்கும்
    ஒருமுறை உன்னைத்
    தொழும்அன்பர் யாவர்க்கும்
    ஹேரம்ப கணபதி
    அருள்நமைக் காக்கும்!

    -சுரேஜமீ

    Share
  • ICCP-2015 updates

    Dear ICCP -2015 program Committee members

    I am happy to share the updates of ICCP
    As you aware that the conference hosted by Don Bosco College, Yelagiri Hills, India
    Integrated Intelligent Research , Chennai, India
    the following organizations are supporting as a Co-Organizers
    Research Institutions
    · Korean Convergence Society, Korea
    · Society of Convergence and Integrated Research (SCIR), Korea
    · Indian Society for Education and Environment (ISEE), India
    · Top Engineers, India
    · Karka Kasadara Academy, India
    Academic Institutions
    · Loyola-ICAM College of Engineering and Technology, Chennai
    · Dept of Mathematics, Loyola College , Chennai – 34
    · Dept of Computer Science, St. Anthony’s College, Shillong, India
    Industry
    Bosco Soft Technologies Pvt Ltd

    The program Committee strengthen with 113 members

    Dr.J.SatheeshKumar, Bharathiar University agreed to act as a publication Chair for the Conference. He facilitated the SCOPUS journals for the publication.
    Dr.V.Jeyabalaraja, Professor,Department of Computer Science & Engineering, Velammal Engineering College, Anna University, Chennai. agreed to act as chair for Conference technical review Committee.[Note: The committee members are in process. It will be available on web site soon]
    Dr. Chhavi Saxena, Associate professor, Maharana Pratap College of Technology as an, Gwalior, Dr. Arun Sharma alumni of IIT Roorkee, India and Thapar University, Punjab (India) and Dr.J.SatheeshKumar, Bharathiar University are agreed to provide a special session during the conference.

    The first round of call for paper send for 75,000 email addresses. We are start receiving the papers and inquires about the conference .

    I kindly request you to share the conference information to your institution, faculty members and your social media such as face book, linkedin , orkut etc.

    If the members have any innovative idea, willing to collaborate with other similar interest group please send the mail to clementkingiir@gmail.com or clementking@yahoo.com

    seeking your support for the success of the conference

    I kindly request the members to login https://easychair.org/conferences/?conf=iccp2015
    for more information please visit http://iccpconferences.org/index.html

    Dr.A.Clementking ,
    Associate Professor,
    Dept of Computer Science,
    College of Computer Science ,
    King Khalid University , Abha , KSA
    +966-562056556

    Share
  • திருச்சானூர் அலமேலுமங்காத் தாயார்

    கீழ் திருப்பதி திருச்சானூர் அலமேலுமங்காத் தாயார் சன்னிதியில் எழுதியது….

    04-padmavathi-devibrahmotsavam
    ”கல்விக் கடனால்* குசேலனுக்கு செல்வமன்று,
    செல்வத்தைக்(லஷ்மியை) கட்டியின்று சேர்க்கின்றாய்: -அல்லுபகல்,
    உண்டியலில் காசு உனதடியார் போட்டுஜர
    கண்டியில் தீர்த்தார் கடன்’’….கிரேசி மோகன்….

    *கல்விக் கடன் -குசேலனுடன் கண்ணன் பால்யத்தில் சேர்ந்து கல்வி பயின்று…

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    IMPULSIVE ஆக இழுத்தணைத்து மாட்டுக்கு,
    C0MPULSIVE வாத்சல்யம் கூட்டுகிறான், -TEMPLE,
    இதுதான் நமக்கு, அதிகாலை கேசவ்
    புதிதான பொற்கோயில் பார்’’….கிரேசி மோகன்….

    Share