ஆயிரம் முகங்கள் எனக்கு!
-கவிஜி
உயிர் சுமந்து
திரியும்
இடைவெளியற்ற
மாற்றுச் சிந்தையில்
மற்றுமோர்
தீவுக்குள் தொலைவதைத் தவிர
வழியில்லை…
உடல் கொண்ட
பலம் முழுக்க
முதிர்ந்துபட்ட
கல்லடிகள்தான்…
உடைத்த கல்
உன் விழிக்குள் தூசியாகும்
உடைந்த கண்ணாடி
ஆனாலும் ஆயிரம்
முகங்கள் எனக்கு!
அத்துமீறி நுழையும்
காட்டுயானையைக் கேட்டு பார்…!
அத்திசை சொல்லும்
தாகம் – சுரண்டுபவள்
நீ என்கும்…!
பூக்கள் வியக்கும்
பிணமாகி, கிடப்பதில்தான்
பூர்த்தியாகிறது பயணம்
பாதம் நக்கும்
நாய் போல…!
நீ இல்லாத தேசத்திலும்
இனி நான் இருப்பேன்
இருத்தல் உனைக் கடந்த
என் சவத்தோடு!
