Author: கவிஞர்.காவிரிமைந்தன்

  • அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    அங்கே  சிரிப்பவர்கள்2அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் …

    பொங்கும் புனல்தானே பாய்ந்துவரும் வெள்ளம்! அணைகளும் தடை செய்ய முடியாத ஆழிவெள்ளம் சூழ்கையில் எல்லாம் அடங்கத்தான் நேருமே! சமுதாய அவலங்களைத் தட்டிக் கேட்கும் எண்ணம் நம் எல்லோருக்கும் இருந்தாலும் நடைமுறையில் அனைவரும் முன்வருவதில்லை! நம் கண் முன்னே நடக்கும் தீயவர்களின் செயல்களைத் தடுத்திடவும் நாம் முனைவதில்லை! எதற்கு வம்பு என்கிற நோக்கில் பெரும்பாலோர் வழிநடக்க, எதிர்த்துக்குரல் கொடுக்க ஒருவன் பிறப்பெடுத்து வர மாட்டானா என்கிற ஏக்கம் நிறைந்திருக்க, திரைப்படங்களில் அப்படி ஒருவன் வருகின்றான், அவனே கதாநாயகனாய் திகழ்கின்றான்.

    திரைப்படங்களில் அமைக்கப்பட்ட இதுபோன்ற காட்சிகளில் தன் இயல்பான நடிப்பால், ஏழைகளின் இதயங்களில் எல்லாம் இன்றைக்கும் நிறைந்திருக்கும் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்கள் உச்சம் எவரும் எட்ட முடியாதது!

    சத்யா மூவிசாரின் ரிக்க்ஷாக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலிது!

    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
    இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
    நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
    அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது…

    நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா
    அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா
    தர்மத் தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா
    உண்மை தன்னை ஊமையாக்கி தலை குனிய வைப்பதா…

    நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன்
    பூனை அல்ல புலி தான் என்று போகப் போகக் காட்டுகிறேன் …

    வாலியின் வைர வரிகள் வீறு கொண்டு எழுகின்றன. கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் கதாநாயகனுக்காகவே அமைக்கப்பட்ட காட்சியில் பொருத்தமான உணர்வு மிக்க வார்த்தைகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் ஓங்கார நாதத்தோடு கலந்து உண்டாக்கும் அதிர்வுகள். அந்தச் சமுதாய அவலங்களைத் தகர்க்கும் புரட்சி நடையோடும் பொலிவோடும் அரங்கேறுகின்றன. புரட்சி நடிகர், புரட்சித்தலைவராய் பரிணாமம் பெறப் பயன்பட்ட படிக்கட்டுகளில் இப்பாடலும் அடங்கும் என்பதில் மிகையில்லை!

    காணொளி: https://youtu.be/lPfUcBCYews
    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்

    https://youtu.be/lPfUcBCYews

    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
    இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
    நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
    அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது…

    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
    அது ஆணவச் சிரிப்பு… ஆணவச் சிரிப்பு …

    வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
    பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
    மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே
    நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே
    எழுதி வைப்பார் ஏட்டிலே …

    [அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்]

    நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா
    அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா
    தர்மத் தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா
    உண்மை தன்னை ஊமையாக்கி தலை குனிய வைப்பதா
    தலை குனிய வைப்பதா …

    [அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்]

    தோட்டம் காக்க போட்ட வேலி பயிரை தின்பதோ
    அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ
    நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன்
    பூனை அல்ல புலி தான் என்று போகப் போகக் காட்டுகிறேன்
    போகப் போகக் காட்டுகிறேன் …

    [அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்]

    Share
  • தங்கரதம் வந்தது வீதியிலே …

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    thangaratham1அன்பின் முழுமைதனை அனுபவிப்போர் எவருமில்லை என்றுகூட சொல்லிவிடலாம் போலிருக்கிறது. அதுசரி, அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலே அன்பு என்பதை நினைவில் கொண்டிருப்பதே பெரும்பாடு என்கிற நிலையில், எப்படி முழுமையை எட்ட முடியும் என்கிற கேள்வியில் நியாயமிருக்கிறது. கதையில், கவிதையில், திரைப்படங்களில் மட்டுமே, சித்தரிப்புகளால் சில உயரங்களைத் தொட்டுவிட முடிகிறது. அதுவும் கூட்டணி முயற்சியில் நடைபெறும் இந்தச் சித்துவிளையாட்டு சிலநேரம் மகோன்னதப் படைப்புகளாய் அமைந்துவிடுவதுண்டு.

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களது தயாரிப்பில் உருவான படம் கலைக்கோயில், வியாபார ரீதியாக இந்தப் படம் வெற்றியடையவில்லை என்றாலும் கூட இசையைப் பொறுத்தவரை, ஆத்மதிருப்தி தந்த படம் என்றே சொல்வார் மெல்லிசை மன்னர்.

    இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான திரைச்சித்திரம்! இன்பத்தை ஏந்திவரும் சொற்களா, இசையா, அல்லது கதாநாயக நாயகி ‘பாவ’ங்களா? மொத்தத்தில் இந்தப் பாடல் கேட்கும்போது ஒரு இன்ப உலகத்திற்கு கடத்தப்பட்டுவிடுவது மட்டும் உண்மை! சுகமான ராகமிது, கர்நாடக சங்கீத சாம்ராஜ்ஜியத்தின் ஒரு அங்கமிது! தங்கத்தில் பதித்திடும் வைரத்தை பாசுரமாக்கி, நம் காதுகளுக்கு தந்து மகிழச் செய்திருக்கிறார்கள், பிரபல கர்நாடக சங்கீத வித்வான் பத்மஸ்ரீ பாலமுரளிகிருஷ்ணா மற்றும் பி.சுசீலா குரல்களில் பொழியும் சங்கீத அருவியிது!

    கவியரசு கண்ணதாசன் பாடலில் உள்ள பொருள்பற்றி எடுத்துரைக்க கடவுள்தான் வரவேண்டும், சிருங்கார ரசமென்று வந்துவிட்டால் கவிஞரின் கற்பனை உச்சம் தொடும்! முத்தமிழும் மோகனமும் தக்கதொரு விகிதத்தில் கலந்தினிக்கும் இப்பாடல் அற்புதம் என்பதன்றி வேறேது நான் சொல்ல?

    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈச னெந்தை யிணையடி நீழலே.
    என்கிற தேவாரத்தில் உள்ள சுகம் அத்தனையும் ஒருதுளியும் குறைவின்றி கிட்டும் தேவகானம்! தெய்வீகமும் காதலும் ஒரே சமதளப்புள்ளியில்தான் இருக்கின்றன! மனிதன் காதலை மட்டும் கவனம் செலுத்துகிறான், பக்தன் தெய்வீகத்தில் மட்டும் ஆழ்ந்துவிடுகிறான், கவிஞன் மட்டுமே இரண்டையும் இங்கே கலந்து தருகிறார்! ஆன்மதரிசனம் காட்டுகின்ற நிலையை பக்தி தந்துவிடுவது உண்மையென்றால் நான் சத்தியம் செய்வேன் காதலிலும் அது சாத்தியமே!!

    இப்பாடலில் மற்றுமொரு விசேஷம் – வீணையிசை – சிட்டிபாபு அவர்கள், முத்துராமன் அவர்களுடன் திரையில் தோன்றும் தாரகை சந்திரகாந்தா, (நினைவுக்கு வருகிறதா, சரவணப் பொய்கையில் நீராடி …அதே நாயகிதான்).

    திரைப் படம்: கலைக்கோவில்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி
    பாடியோர்: டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா, பி. சுசீலா

    காணொளி: https://youtu.be/a48iEYo3LQc

    ஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
    ஆ ஆஆஆஆ ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

    தங்கரதம் வந்தது வீதியிலே
    ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
    மரகதத் தோரணம் அசைந்தாட
    நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
    மரகதத் தோரணம் அசைந்தாட
    நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
    தங்கரதம் வந்தது வீதியிலே
    ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
    தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ

    செவ்விளநீரின் கண் திறந்து
    செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
    முளைவிடும் செந்நெல் கோலமிட்டு
    மூவருலா வந்த காலங்கள் போலே

    தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

    மாங்கனிக் கன்னத்தில் தேனூற
    சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
    தேன் தரும் வாழைகள் போராட
    தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட

    தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

    https://youtu.be/a48iEYo3LQc

    Share
  • செந்தாமரையே செந்தேனிதழே …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    புகுந்தவீடுபுகுந்தவீடு என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய பாடலிது! பாடலை இயற்றியவர் விசித்ரா.

    பாடலின் பல்லவி முதலாக பற்றிக் கொள்கிற இனிமை, இறுதிவரை தொடர்கிறது. பாடிய குரல்கள் தரும் மயக்கத்தில் இப்பாடலைக் கேட்பவரும் மயக்கத்திற்கு அடிமையாகிறோம். அடிமனதை வருடுகின்ற சுகம்தருகிறார் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.

    மெல்லிசை என்னும் சொல்லுக்குப் பொருள் சொல்லும் இன்னிசையிது என்று ரசிகர்கள் சத்தியம் செய்யலாம். தமிழ் மொழியின் இனிமையைப் பறைசாற்ற சான்று பகரும் தமிழ்த்திரையிசைப்பாடல்களில் இதுவும் ஒன்று! காதலர்களின் இதயப் பரிமாற்றம் நடைபெறும் நேரம் நலம் பாடும் வளமான சொற்கள் பரிமாறப்படுகின்றன. இன்பத்தின் உரையை எழுதிவைத்தாற்போல்… இதோ ஒரு காதல் பாடல் கவிதை மொழியாக்கப்பட்டுள்ளது.

    திரைப்படம்: புகுந்த வீடு
    பாடல்: செந்தாமரையே
    பாடகர்கள்: ஏ. எம். ராஜா, ஜிக்கி
    இசை: சங்கர் கணேஷ்
    பாடல் ஆசிரியர்: விசித்திரா

    ஆண்:
    செந்தாமரையே செந்தேனிதழே
    பெண்ணோவியமே கண்ணே வருக … கண்ணே வருக …

    பெண்:
    முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னவன் நீயோ
    மல்லிகையின் நலம் மதுவண்டோ
    [செந்தாமரையே]

    ஆண்:
    புகுந்த வீட்டின் புது வரவு
    நீ பூத்துக் குலுங்கும் புது நினைவு

    பெண்:
    மங்கையின் வாழ்வில் ஒளி விளக்கு
    அது மன்னவன் ஏற்றிய திரு விளக்கு

    ஆண்:
    இளமை தரும் மயக்கம்

    பெண்:
    இனிமை அதில் பிறக்கும்
    [செந்தாமரையே]

    பெண்:
    நீலவானின் முழுநிலவே
    உன்னை நெருங்கி மகிழும் என் மனமே

    ஆண்:
    ஆசை மனதின் தேனமுதே
    உன்னை அருந்தத் துடிக்கும் என் உறவே

    பெண்:
    கொடுத்தேன் என்னைக் கொடுத்தேன்

    ஆண்:
    எடுத்தேன் அள்ளி எடுத்தேன்
    [செந்தாமரையே]

    காணொளி: https://youtu.be/ZIJgMsoGUu8

    Share
  • வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா … மார்பு துடிக்குதடி …

    — கவிஞர் காவிரிமைந்தன். 

    வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மாஇளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம்! இயக்குநர் ஸ்ரீதரின் முக்கோணக் காதலின் மற்றுமொரு பரிமாணம்! இசை ஞானி இளையராஜா இசையாட்சி! எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இழைந்தோடும் குரல்! திரைக் கதையின் முக்கியக் கட்டத்தில் நாயகன் நாயகியை நோக்கிப் பாடுகின்ற இப்பாடல்!

    பாரதியின் கண்ணம்மா என்னும் பெயரை எத்தனை வாஞ்சையாய் பல்லவியில் பொருத்திப் பாடலை துவக்குகின்றார் கவிஞர் வாலி! மேடைப் பாடகனாய் கமலஹாசன் தன் காதல் தாபங்களைக் காட்டும் அற்றைய நாளின் மிகப் பிரபலமான பாடல்! கல்லூரி மாணவர்களின் கரகோஷத்தில் அரங்கங்கள் அதிர்ந்த அந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்! இசை ஞானி தனக்குக் கிட்டிய ஒவ்வொரு திரைப்படத்திலும் முத்திரை பதிக்க வெற்றிநடை போட்ட வெள்ளித்திரை ஓவியங்களில் இதுவும் ஒன்று!

    வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா2சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, கமலஹாசன் கூட்டணியில் கொட்டிக்கிடக்கும் நவரச நடிப்பில் இசை மலர்கள் ஆராதனை நம்மை ஈர்க்க வைக்கும்! பழமைக்கும் புதுமைக்கும் தன் கடைசி நாள் வரை ஈடுகொடுத்து எழுதி வந்த பாட்டுப் புலவன் வாலி வரைந்த வரிகள் அர்த்தத்தை அள்ளி வீசும்! இசைக்கோர்வை என்பது அவர் நடந்துவரும் ராஜபாட்டை! சாதாரண வார்த்தைகளைச் சரியான இடத்தில் பயன்படுத்தும்போது அவை அசுர பலம் பெற்றிடும் யுக்தியைக் கற்றுத் தேர்ந்தவரென்பதால் ‘காதல்’ பிரிவின் வலியை எளிதாக வார்த்தைகளில் இறக்குமதி செய்கிறார் கேளுங்கள்!

    கால மாற்றத்தில் ‘காதல்’ மாற்றம் பெறுகிற கோலத்தை இயக்குநர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் காண்பது கூட ஒரு இனிய அனுபவமே! அப்பட்டமாய் முக்கோணக் காதலை திரைக்கதையில் சொன்னவர் என்கிற பெருமை இவரையே சாரும்! இவர்தம் திரைப்படத்தில் கதையுண்டு! கருத்துண்டு! சுவையான பாடல்கள் நிரந்தரமாய் உண்டு! இனிதான இசையோடு என்றென்றும் கேட்டு மகிழ… நெகிழ… இப்பாடலும் வருகிறது கேளுங்கள்!!

    வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா … மார்பு துடிக்குதடி…
    பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போல் பாவை தெரியுதடி…

    என்னடி மீனாட்சி… சொன்னது என்னாச்சு…
    நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…
    என்னடி மீனாட்சி… சொன்னது என்னாச்சு…
    நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…

    உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
    அந்த வனத்தில் மறைந்திருக்கும் துளிவிஷம்…
    நெஞ்சம் தவித்திடும் நாளில்
    நீயோ அடுத்தவன் தோளில்
    எனை மறந்து போனது நியாயமோ
    இந்தக் காதல் ஓவியத்தின் பாதை மாறியது
    காலம் செய்துவிட்ட மாயமோ…
    ஒரு மனம் உருகுது…
    ஒரு மனம் விலகுது…
    (என்னடி)

    அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
    அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை …
    கண்ணன் தன் வழியே பாட…
    ராதை தன் வழியே ஓட…
    இந்தப் பிரிவைத் தாங்குமோ என் மனம்
    ஒரு நூலில் ஆடுகிற ஊஞ்சல் போன்றதடி
    நாளும் மாறுகின்ற உன் மனம்…
    (என்னடி)

    காணொளி: https://www.youtube.com/watch?v=3VjfAZzEb88

    https://www.youtube.com/watch?v=3VjfAZzEb88

    Share
  • தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்

    கவிஞர் காவிரிமைந்தன்

    சோளிங்கர் கம்பைன்ஸ் தயாரிப்பில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற அகிலனின் கணையாழி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்! எம்.ஜி.ஆர். நடித்து வெளியான கடைசித் திரைப்படமிது என்கிற பெருமையும் இதற்கு உண்டு! சரித்திர காலப் பின்னணியில் கவித்துவ பலத்துடன் புலவனாக – கதையின் நாயகன் இடம்பெற இடம்பெற்ற இரண்டு காதல் பாடல்களும் உயிர்பெற்று நம் கண்முன்னே உலவுகின்றன என்றால் மறுப்பதற்கில்லை!

    akavi

    அமுதத் தமிழில் எழுதும் கவிதை படைத்த புலவர் புலமைப்பித்தன் வரைந்தளித்த மற்றுமொரு தென்றல் காற்று இந்தப் பாடலில் கூந்தலில் ஆடுகின்ற காட்சி.. மெல்லிசை மன்னரால் வடித்தெடுக்கப்பட்ட இசை ஆபரணமிது என்று சொன்னாலும் அது மிகையாகாது!

    ஜெயச்சந்திரனுடன் வாணிஜெயராம் இருவர் குரலில் கவித்துவமிக்க பாடல்வரிகள் தங்கம்போல் ஜொலிக்க எம்.ஜி.ஆர். லதா இருவரின் நடிப்பில் இமைப்பூக்கள் தலைகவிழ இதயநதி வழிந்தோடும் இன்பக்காதலிது – இன்னும் கேட்கலாம்! என்றும் மகிழலாம்!!

    https://www.youtube.com/watch?v=4I_BHvRR0hA&list=PLUSRfoOcUe4apYw16vNhK6WuFAiwyZTy_

    தென்றலில்ஆடும்கூந்தலில்கண்டேன்மழைகொண்டமேகம் – என்
    தேவதைஅமுதம்சிந்திடும்நேரம்இனிஎன்னநாணம்இனிஎன்னநாணம்?
    மன்னவன்உங்கள்பொன்னுடலன்றோஇந்திரலோகம்? அந்தி
    மாலையில்இந்தமாறனின்கணையில்ஏனிந்தவேகம்ஏனிந்தவேகம்?
    பாவையுடல்பாற்கடலில்பள்ளிகொள்ளநான்வரவோ?
    பனிசிந்தும்கனிகொஞ்சும்பூவிதழில்தேன்பெறவோ?
    மாலைவரும்நேரமெல்லாம்மன்னன்வரப்பார்த்திருந்தேன்
    வழியெங்கும்விழிவைத்துப்பார்த்தவிழிபூத்திருந்தேன்
    ஆலிலையின்ஓரத்திலேமேகலையின்நாதத்திலே
    இரவென்றும்பகலென்றும்காதல்மனம்பார்ப்பதுண்டோ?
    கள்ளவிழிமோகத்திலேதுள்ளிவந்தவேகத்திலே
    இதழ்சிந்தும்கவிவண்ணம்காலைவரைகேட்பதுண்டோ?
    காலைவரைகேட்பதுண்டோ?
    தென்றலில்ஆடும்கூந்தலில்கண்டேன்மழைகொண்டமேகம்
    கற்பகத்துச்சோலையிலேபூத்தமலர்நீயல்லவோ?
    விழியென்னும்கருவண்டுபாடவந்தபாட்டென்னவோ?
    காவியத்துநாயகினின்கட்டழகின்மார்பினிலே
    சுகமென்னசுகமென்றுமோகனப்பண்பாடியதோ?
    மோகனப்பண்பாடியதோ?
    தென்றலில்ஆடும்கூந்தலில்கண்டேன்மழைகொண்டமேகம் – என்
    தேவதைஅமுதம்சிந்திடும்நேரம்இனிஎன்னநாணம்இனிஎன்னநாணம்

    புலவர்தம் கற்பனையின் உச்சங்கள் கைதட்டி அழைக்க காதலின் ஊர்வலம் நடந்தேறுகிறது! அன்பின் அரங்கேற்றம் என்பதால் அணைப்பு அவசியமாகிறது! கண்கள் நடத்திடும் தேர்வு என்பதால் காட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன! கவிதைப் பாற்குடம் கரைபுரண்டு காதல் சாம்ராஜ்ஜியத்தில் வழிந்தோடுகிறது.

    மெல்லிய தென்றல் தாலாட்டும் முன்னிரவில் அன்பே உன் மடியில் தலைசாய்த்து இப்பாடலைக் கேட்டால் சுகம்! சுகம்! சுகமே!!

    பாடல்:தென்றலில் ஆடும்.. கூந்தலில் கண்டேன்
    திரைப்படம்: மதுரையைமீட்டசுந்தரபாண்டியன்
    பாடியவர்: வாணிஜெயராம், ஜெயச்சந்திரன்
    இயற்றியவர்: புலவர் புலமைப்பித்தன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1978

    Share
  • மெல்ல … மெல்ல மெல்ல …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

     

    மெல்ல … மெல்ல மெல்ல …

    அஞ்சுதலும் கெஞ்சுதலும் ஆசையினால் கொஞ்சுதலும் காதலிலே காணும் நிலை! உள்ளமலர் சிலிர்த்திடும் ஒவ்வொரு நொடியிலுமே பெண்மையங்கே பேசாமல் தவித்திருக்கும்! கண் வரைந்த ஓவியத்தைக் கண்ணெதிரே கண்டாற்போல் கவிதை சொல்லத் தித்திக்கும்! இருவரல்ல நாம் இனி ஒருவரென்றே ஓடிவந்து ஒன்றையொன்று சந்திக்கும்! வார்த்தைகளே வாராமல் சொல்லெடுக்க முயலும்போது வெட்கமது திரையிடும்! இத்தனைக்கும் இடையினில் காதலனின் கரங்கள் தன்னைப் பற்றிட முற்படும்போது…

    மெல்ல மெல்ல மெல்ல2மெல்ல… மெல்ல மெல்ல
    எந்தன் மேனி நடுங்குது மெல்ல
    சொல்ல… சொல்லச் சொல்ல
    நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல

    பணமா பாசமா திரைப்படத்திற்கா, திரை இசைத் திலகம் கே. வி.மகாதேவன் அவர்களின் இசையில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், கவியரசு கண்ணதாசன் இயற்றிய காதல் நீலாம்பரி ஒலிப்பது டி.எம்.சௌந்தரராஜன், பி. சுசீலா குரல்களில்!

    உச்சி முதற்கொண்டு பாதம் வரை – இங்கு
    ஓடிடும் மின்னலை என்ன சொல்ல…
    மிச்சம் இருப்பதை நாளை என்று – நெஞ்சில்
    மின்னிடும் ஆசையை என்ன சொல்ல

    மெல்ல மெல்ல மெல்லஅன்பின் மடியில் ஆசைக்கிளிகள் ஆலோலம் பாட..
    இன்ப மழையில் இதயம் நனையும் ‘சுகம்’ சுகம்தான் என்ன?
    பட்டுத் தெறிக்கும் முத்தைப் போல சொற்கள் ஓடி வர – அதைக்
    கட்டும் படுத்திக் காட்டும் இங்கே பாருங்களேன்!

    தாமரைப் பூவினில் வண்டு வந்து
    தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள …
    உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
    உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்..

    ஆண்டுகள் பல ஆனபோதும் மாண்டுவிடாத பாடல்!
    இன்பத் தேன்வார்க்கும் நிலைகள் பரவிக்கிடக்கும் சூழல்!
    கைகள் படுவதற்கும் கட்டியணைப்பதற்கும் இதமானபோது
    சொல்ல இனிக்கின்ற சுகமான பாடல்! சொர்க்கத்தின் தாழ் திறக்குமன்றோ?

    மெல்ல… மெல்ல மெல்ல …

    மெல்ல… மெல்ல மெல்ல
    மெல்ல… மெல்ல மெல்ல
    எந்தன் மேனி நடுங்குது மெல்ல
    சொல்ல.. சொல்லச் சொல்ல
    நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
    மெல்ல…

    உச்சி முதற்கொண்டு பாதம் வரை – இங்கு
    ஓடிடும் மின்னலை என்ன சொல்ல…
    மிச்சம் இருப்பதை நாளை என்று
    மிச்சம் இருப்பதை நாளை என்று – நெஞ்சில்
    மின்னிடும் ஆசையை என்ன சொல்ல
    மெல்ல…

    அத்திப் பழத்துக்கு மேலழகு – உந்தன்
    ஆசை பழத்துக்கு உள்ளழகு …
    தத்தித் தவிக்கின்ற பொன்னழகு
    தத்தித் தவிக்கின்ற பொன்னழகு – உன்னைத்
    தழுவத் துடிக்கின்ற பெண்ணழகு
    மெல்ல…

    தாமரைப் பூவினில் வண்டு வந்து
    தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள …
    உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
    உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
    உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்..
    ஆடுகின்றாய்.. ஆடுகின்றாய்..
    மெல்ல…

    மேலைத் திசையினில் போய் உறங்கும் – கதிர்
    மீண்டும் வரும் வரை நம் உலகம் …
    காலைப் பொழுதினில் சிந்தனைகள்
    காலைப் பொழுதினில் சிந்தனைகள் – மறு
    மாலை வரும் வரை கற்பனைகள்
    மெல்ல…

    ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த
    ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்…
    ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை
    ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை
    நாம் ஒன்று இரண்டு என்பதுமில்லை
    மெல்ல…

    காணொளி: https://www.youtube.com/watch?v=1J0ixlJPt5U

    Share
  • சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன் …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்…

    சித்திர செவ்வானம் சிரிக்கக் கண்டேன்1முழுநிலாக்கோலம்போல் முகமிருக்க, மோகனராகத்தை மனம் படிக்க, கடற்கரை அலைகளும் மெட்டமைக்க, வருகின்ற பாடல் கதை சொல்கிறது! காற்றினிலே வரும் கீதம் என்கிறது! முத்துராமன், கவிதா ஜோடி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ஜெயச்சந்திரன் குழுவினரோடு பாடிய பாடல், இளையராஜாவின் இதமான இசை கவிதையைக் கைப்பிடித்து வருகிறது!

    சித்திர செவ்வானம் சிரிக்கக் கண்டேன்2பஞ்சு அருணாசலம் அவர்களின் பாடலிது! இது அவரின் சொந்தப்படம் என்பதும் கூடுதல் தகவல்! நீரின்மேல் அமைந்திட்ட குடில்தன்னை மலர்கள் அலங்கரிக்க, ஓடமது , ஏதோ மது அருந்தியவனைப் போல் தள்ளாட, காதல் கிளிகள் இரண்டு மெளனகீதம் பாடுகின்றன, அசரீரீ போல் வருகின்ற குரல்கள், அருகே செல்லும் படகோட்டிகளுடையதாக, எழிலாய் படம்பிடித்து நாயக நாயகியின் பாவங்களை நயமாய் காட்டியிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

    புதிய தம்பதிகளின் இளமைப் பயணம் ஆரம்பமாகும்போது, இன்பத்திற்கு எல்லைகளேது? அதனைப் பிரதிபலிக்கும் வரிகள் வார்த்திருக்கும் பஞ்சு அருணாசலம் பாராட்டுக்குரியவராகிறார். 1978ல் வெளியான இப்படமும் குறிப்பாக இப்பாடலும் வானொலி நேயர்களின் விருப்பமாய் நெடுநாள் தொடர்ந்தது, நீண்ட நெடிய பட்டியலாக…

    மையை இட்ட கண்ணாலே
    மையல் தந்த நேரம்
    முதல்முதலா தொட்டேனே
    வாய்க்காக்கரை ஓரம்
    சாயாமல் சாய்ந்தாலே மார்பிலே …

    அள்ளிக்கட்டும் கண்டாங்கி
    அரைகுறையா ஒதுங்க
    அலுங்காம அணைச்சாளே
    வெதுவெதுப்பா மயங்க
    மஞ்சள் கண்ட கைகாரி
    மயக்கிவிட்டா என்னை …

    சித்திர செவ்வானம் சிரிக்கக் கண்டேன்0திரைப்படம்: காற்றினிலே வரும் கீதம்
    பாடல்: கவிஞர் பஞ்சு அருணாசலம்
    இசை :இளையராஜா
    பாடியவர் : ஜெயச்சந்திரன் குழுவினர்
    காணொளி: https://www.youtube.com/watch?v=Bk4R0ZfkRwg

    சித்திரச்  செவ்வானம் சிரிக்கக்கண்டேன்…

    தையரத்தைய்யா தையரத்தைய்யா
    தையரத்தைய்யா தையரத்தைய்யா
    சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்
    என் முத்தான முத்தம்மா
    என் கண்ணான கண்ணம்மா
    குய்ய இலவாலி தண்ணு நிலவாலம்
    தையரத்தய்யா தையரத்தைய்யா
    தையரத்தையா தையரத்தய்யா
    ( சித்திரச் செவ்வானம்)

    மையை இட்ட கண்ணாலே மையல் தந்த நேரம்
    முதல்முதலா தொட்டேனே வாய்க்காக்கரை ஓரம்
    சாயாமல் சாய்ந்தாலே மார்பிலே
    அள்ளிக்கட்டும் கண்டாங்கி அரைகுறையா ஒதுங்க
    அலுங்காம அணைச்சாளே வெதுவெதுப்பா மயங்க
    மஞ்சள் கண்ட கைகாரி
    மயக்கிவிட்டா என்னை
    ஏகுய்ய இலவாலி தண்ணு நிலவாலம்
    தையரத்தைய்யா தையரத்தய்யா
    (சித்திரச் செவ்வானம்)

    போய்வரவா என்றாலே ஏக்கத்துடன் பார்ப்பா
    நான் திரும்பி வரும்வரையில் கரையினில் நிப்பா
    உணவில்லை உறவில்லை வாடுவாள்
    என் முகத்தைப்பார்த்ததுமே துள்ளித்துள்ளி வருவா
    முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளித்தருவா
    சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத்தங்கம் போலே
    ஏகுய்ய இலவாலி தண்ணு நிலவாலம்
    தையரத்தைய்யா தையரத்தைய்யா
    (சித்திரச் செவ்வானம்.)

    https://www.youtube.com/watch?v=Bk4R0ZfkRwg

    Share
  • வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் …

    — கவிஞர் காவிரிமைந்தன் 

    வேலாலே விழிகள்2அன்பின் பரிபாஷையை உள்ளம் எப்போதும் வரவேற்கும். அது கண்களால் பேசினாலும் சரி, இமைகளால் அசைக்கப்பட்டாலும் சரி, புன்னகையால் பூத்திருந்தாலும் சரி, படைப்பியிலின் நியதிப்படி ஒன்றை ஒன்று நாடும், தேடும், திரைப்படமாக இருந்தால் பாடும்! சரிதானே!! என்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்காக நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் உஷா நந்தினி இணைந்து வழங்கிய ஒரு காதல் சித்திரம் இப்பாடல்! சந்தங்கள் நர்த்தனமாடும் இசை அதற்கு ஏற்ப வளைந்து கொடுக்க, மெல்லிசை மன்னரின் இன்னிசையில் உருவான காதல் சங்கீதமிது! டி.ஆர்.ராமண்ணா அவர்களின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் பதிவான இன்பகீதம், வரைந்தளித்திருக்கிறார் காவியக்கவிஞர் வாலி அவர்கள்!

    பாடலைக் கேட்போர் மனதில் எழும் பெருத்த சந்தேகம் இது கண்ணதாசன் பாடலா? வாலி பாடலா? ஆம், அத்தகு ஐயம் எவருக்கும் எழத்தான் செய்யும், பிறகென்ன, இது கண்ணதாசன் பாணி என்று அடித்துச் சொன்னால், அட இது வாலியின் பாடல் என்று பதில் வந்துவிழுகிறது! வாலியின் பாடல் என்று சொன்னால் கண்ணதாசன் என்று மாறிவிடுகிறது. இந்தப்பாடல் அந்த ரகம்தான்! வாலி வார்த்தைகளை வைத்து ஆடியிருக்கும் விளையாட்டு கண்ணதாசனின் சாயல் என்று சொல்ல வைக்கிறது!

    பட்டு சேலையில் மின்னும் பொன்னிழை
    பாவை மேனியில் ஆடும்
    தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம்
    கட்டுக் காவலை மீறும்

    இந்த தாள ஜதிக்கட்டு திருவருட்செல்வரில் “மன்னவன் வந்தானடி”யை நினைவூட்டும்!

    ராஜபார்ட் ரங்கதுரையில் ” மதனமாளிகையில் மன்மதலீலைகளாம்” பாடலை நினைவூட்டும்!

    தங்கச் செங்கனி அங்கம் உன்னுடல்
    சங்கமம் ஆவது என்று
    திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன்
    பொங்கும் நாடகம் என்று

    தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம்
    தத்தைக்கே தரும் என்று
    சித்தம் சொன்னது வேகம் வந்தது
    நித்தம் ஆயிரம் உண்டு

    இந்த வரிகளும், வார்த்தைச் சரங்களும் முத்து முத்தானவை, இசையோடு அவை தரும் சுகராகங்கள் இதயங்களை மீட்டும் இன்பவீணைகள்! மலர்மேனி ஒன்று கண்முன்னே சதிராடக் கண்டு அலைமோதும் இளமனங்களில் எழும் இன்பங்களை சுகவரிகளில் தருகிறார் பாருங்கள்!! கேளுங்கள்!! தமிழ்ச்சுவையின்பம் என்னவென்று கேட்போருக்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு!!

    வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

    படம்: என்னை போல் ஒருவன்
    பாடல்: வாலி
    இசை: எம். எஸ். வி
    குரல்: டி. எம். எஸ்., பி. சுசீலா

    வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும்
    சிறு நூலாலே இடையில்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    ஆ ஆ ஹா ஆ ஆ ஓ ஹோ ஹா

    சீரோடு தானாடும் தேரோடும் திருநாள் எங்கே
    மல்லிகை தாமரை துள்ளிடும் மெல்லிய பூ போன்ற மங்கை இங்கே
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ,,, பூ போன்ற மங்கை இங்கே
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும்

    பட்டு சேலையில் மின்னும் பொன்னிழை பாவை மேனியில் ஆடும்
    தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம் கட்டுக் காவலை மீறும்
    ஆ ஆ ஆ ஆ ஆ
    கட்டும் கைவளை சொட்டும் மெல்லிசை மொட்டும் உன்னுடன் ஆடும்
    சிட்டு கண்களில் வெட்டும் மின்னலும் பட்டம் போல் விளையாடும்
    பூ வண்ணக் கூந்தல் என் மஞ்சமானால்
    நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாட

    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

    தங்கச் செங்கனி அங்கம் உன்னுடல் சங்கமம் ஆவது என்று
    திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன் பொங்கும் நாடகம் என்று
    ஓ ஓஓ ஓஓ ஓஓ
    தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம் தத்தைக்கே தரும் என்று
    சித்தம் சொன்னது வேகம் வந்தது நித்தம் ஆயிரம் உண்டு
    பாடுங்கள் இன்னும் தாளங்கள் சொல்லும்
    கூடுங்கள் என்று பெண் உள்ளம் சொல்லும்

    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
    சிறு நூலாலே இடையில்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    ஆ ஆ ஹா ஆ ஆ ஓ ஹோ ஹா

    காணொளி: https://www.youtube.com/watch?v=tRrgeh802Pk

     

    Share
  • முத்து நகையே உன்னை நான் அறிவேன் …

    — கவிஞர் காவிரிமைந்தன். 

     

     

    முத்து நகையே உன்னை நான் அறிவேன் …

    rojaraniமனித உறவுகளின் மேன்மையெல்லாம் உள்ளத்தாலே உணரப்படுதலே! அன்பு, கருணை, இறக்கம் என்கிற உணர்வுகளை நாடியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்! ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் தாய்க்கு மகன் பிள்ளைதான் என்பார்கள்! நாளெல்லாம் நெடிதுழைத்தாலும் நாடுவது பாசம், பற்று, காதல், பக்தி எனும் ஜீவன் தொடும் உணர்வுகளைத்தான்!

    எந்த ஒரு படைப்பாளனும், எழுத்தாளனும், கவிஞனும் கூட வாசகர்கள் நெஞ்சில் பதிவது எப்போது தெரியுமா? ஒவ்வொரு மனிதனின் நிழலாய், நிஜமாய் தொடரும் இன்ப துன்பங்களைத் தனது படைப்பில் தொட்டுக்காட்டும்போதுதான்!

    வெள்ளித்திரையில் என்று வரும்போது, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, நடிப்பு, குரல், இயக்கம் என்று பல்வேறு கலைஞர்களின் கூட்டு முயற்சியும் ஒத்துழைப்பும் ஒருங்கிணைக்கப்படுகிறது.

    sivajiநம் அபிமானத்திற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்கள் மேடைகளில் கவியரசு கண்ணதாசன் பற்றி அடிக்கடி குறிப்பிடும்போது அவருடைய தன்னுணர்ச்சிப் பாடல்கள் தனித்துவம் வாய்ந்ததாகக் குறிப்பிடுவார். அப்படி தன் உணர்ச்சிகளைப் பாத்திரங்கள் வாயிலாக ஏற்றித் தருகிற யுக்தி அனுபவம் வாய்ந்த கவிஞர்களுக்கே கைவந்த கலை!

    நம் நினைவுப் படலங்களில் இது போன்ற பாடல்கள் நிலைத்துவிடுவதற்குக் காரணமும் இதுதான்! கவிதையோடு இசை கைப்பிடித்து வருகின்ற அழகைத் தனது குரலால் அல்லவா வெளிப்படுத்துகிறார்கள் பாடக பாடகியர்! கற்பனையும் ஒப்பனையும் கலந்திருந்தாலும் அற்புதம் என்று நம்மைப் பரவசப்படுத்தும் நடிப்புத் திறத்தாலே உயர்ந்து நிற்கிற நடிகர் திலகமும், இதோ ‘என் தம்பி’ திரைப்படத்திற்காக கண்ணதாசன் வரைந்தளித்த இப் பாடலை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வார்த்தெடுத்த இசையில், டி.எம்.சௌந்தரராஜன் குரலில் உயிரூட்டியிருக்க … கேளுங்கள் இன்னொரு முறை!

    முத்து நகையே உன்னை நான் அறிவேன்
    தத்தும் கிளியே என்னை நீ அறிவாய்
    நம்மை நாமறிவோம்

    நிலவும் வானும் நிலமும் நீரும்
    ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ
    நீயும் நானும் காணும் உறவு
    நெஞ்சைவிட்டுச் செல்ல எண்ணுமோ

    வட்டமிடும் மனதைக் கயிறாலே
    கட்டியிழுத்தாலும் விலகாதே
    கட்டியிழுத்தாலும் விலகாதே
    சுட்டும் விழிச் சுடரே மயங்காதே
    தோளில் வைத்து வளர்ப்பேன் கலங்காதே

    பொன்னை நினைத்தா நான் வாழ வந்தேன்
    உன்னை நினைத்தே நான் காண வந்தேன்
    உன்னை நினைத்தே நான் காண வந்தேன்
    என்னை அறியும் உந்தன் மனசாட்சி
    இறைவன் இருந்தால் அவன் சாட்சி

    மனித வாழ்வில் சுகமும் சோகமும் தானே இரண்டு பக்கங்கள் என்கிற வரையில் இப்பாடல் மனதில் தவழும், மயிலிறகாய் வருடிக்கொடுக்கும்…

    காணொளி: https://youtu.be/ea1tW8G5DvA

    https://youtu.be/ea1tW8G5DvA

    Share
  • பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.  

     

    பாடுவோர் பாடினால்3பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …

    இம் என்னும் முன்னும், உம் என்னும் முன்னும் இசை பிறக்கும் மெல்லிசை மன்னரின் ஆர்மோனியத்தில்! அவரின் இசை சாம்ராஜ்ஜியத்தில் பூத்த பாடல்கள் என்றும் வாடதவை. நம்மை முணுமுணுக்க வைப்பவை. எம்.ஜி.ஆர். என்னும் கதாநாயகனுக்காக அவர் இசைத்த கானங்கள் காலங்களைத் தாண்டி வாழுபவை. எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை.

    அவர் அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை, இறக்கும் மனிதர்கள் இறவாப் பாடல்கள்…

    இன்று அவர் நம்மிடம் இல்லை. அவர் அமைத்த இசை, அவர் கொடுத்த பாடல்கள், தமிழ் உலகம் உள்ளவரை உயிரோடு உலவி வரும். இதோ இந்தப் பாடல் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் இயற்றியது. கண்ணன் என் காதலன் திரைப்படத்திற்காக வரைந்த இசையோவியம். செந்தமிழ் சீர் கொண்டு கவிஞர் தர, மெல்லிசை இசையாலே எம்.எஸ்.வி. உயிர் கொடுக்க, அற்புதக் குரலாலே நம்மை வயப்படுத்தும் டி.எம்.சௌந்தரராஜன்.

    பாடுவோர் பாடினால்பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்… கதையின்படி நடக்க முடியாத நாயகி, இந்த இசை கேட்டு, கால்கள் குணம்பெற்று ஆடத் தொடங்குகிறாள். ஏற்ற பல்லவி இசையை சுமந்து வர, எம்.ஜி.ஆர். அவர்களின் முக பாவங்கள் அடடா… அடடா… போட வைக்கும். நாயகியாக செல்வி ஜெயலலிதா. பாடல் வரிகளை உச்சரித்து இது மெட்டுக்கு இடப்பட்ட வரிகளா அல்லது இயற்றிய வரிகளுக்கு இடப்பட்ட மெட்டா என்று பட்டிமன்றம் வைக்கச் சொல்கிற பாடல்.

    கலைகளைத் தெய்வமாய் காண வேண்டும் என்கிற வைர வரியும் பாடலில் மின்ன…

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்

    நம்மையும் அறியாமல் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் ஆடத் தோன்றுகிற ரகசியம் … இசையல்லவா?

    ____________________________________________________________________________
    பாடல்: பாடுவோர் பாடினால்
    திரைப்படம்: கண்ணன் என் காதலன் (1968)
    இயற்றியவர்: கவிஞர் ஆலங்குடி சோமு
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    காணொளி: https://youtu.be/qBFIb_2iChc
    ____________________________________________________________________________

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
    கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
    கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்… ம்…
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

    பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்
    கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்
    தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
    தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
    நூலளந்த இடைதான் நெளிய நூறு கோடி விந்தை புரிய
    நூறு கோடி விந்தை புரிய
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

    பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
    பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை
    புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
    புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
    மேடை வந்த தென்றல் என்றேன்
    ஆடை கொண்ட மின்னல் என்றேன்
    ஆடை கொண்ட மின்னல் என்றேன்

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
    கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
    கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

    ____________________________________________________________________________

    https://youtu.be/qBFIb_2iChc

    ____________________________________________________________________________

    Share
  • இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே!

    கவிஞர் காவிரிமைந்தன்

    abdul
    இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே!
    இவர்போல் மனிதர் இதுவரை இங்கு பிறந்ததில்லையே!
    வள்ளுவன் வாய்மொழி வகுத்தது பாதையென வாழ்ந்தவரல்லவா?
    ”சொல்’ எனும் சொல்லே உருதுமொழியில் ‘கலாம்’ ஆனதைச் சொல்லவா?
    காலம் நமக்குத் தந்த கொடைதான் ‘அப்துல் கலாம்’ அல்லவா?
    வாழும் நாள்வரை நாளும் பொழுதும் நாட்டிற்காய் உழைத்தவரல்லவா?
    உலகம் போற்றும் உன்னதத் தலைவர்கள் எவரும் போற்றும் புகழ்மனிதர்!
    மாணவ மாணவியர் மத்தியில் மட்டுமே – தன் வாழ்நாளைக் கழித்தவர்!
    நாளைய இந்தியா வல்லரசாக நமக்கெல்லாம் கனவினைக் கொடுத்தவர்!
    ஏழையும்கூட வாழ்வில் உயர்ந்திட முடியும் என்று வாழ்ந்துகாட்டியவர்!
    எளிமை பணிவு இரண்டையும் கொண்டே ஏற்ற பதவியை அலங்கரித்தார்!
    ஏவுகணையின் நாயகன் இவரென்று இந்தியா புகழ்ந்துரைக்கும்!
    பொக்ரைன் குண்டுகள் வெடித்தபோது புத்தரே சிரித்தாரன்றோ?
    போலியோ குழந்தைகள் அணியும்வண்ணம் குறையெடைஉலோகம் கண்டார்!
    அடைந்திட்ட மகிழ்ச்சியின் உச்சமிதுவென உள்ளம் நெகிழ்ந்து சொன்னார்!
    ‘நம்பிக்கை’ என்கிற வார்த்தைக்கே நங்கூரமிட்டுக் கொடுத்தார்!
    ஒட்டுமொத்த இந்தியாவும் வணங்கும் ‘தலைமகன்’!
    ஒருவர்கூட புறம்கூறாத உத்தமமான மனிதன்!
    அறிவுச்செல்வம் பெற்றுவிட்டால் அகிலம் நமதென்றார்!
    ஆற்றல் பலவும் இளைஞரிடம் அதையே தினம் வளர்த்தார்!
    போற்றுதலுக்குரிய ஆசிரியப் பணிக்கு மீண்டும் திரும்பிவந்தார்!
    புகழ்வதற்கு புதிதாய் என்னிடம் வார்த்தைகளில்லை!
    மண்ணில் தோன்றிய மனிதர்கள் மடிந்துதான் தீரவேண்டும்!
    மக்கள் மனதில் ‘கலாம்’ என்பதற்கு மரணம் என்றுமில்லை!!
    கண்ணீருடன்..
    காவிரிமைந்தன்.. அபுதாபி..

    Share
  • தங்க நிலவே உன்னை உருக்கி …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

     

    தங்க நிலவே உன்னை உருக்கிதங்க நிலவே உன்னை உருக்கி …

    பாடல்களாலேயே திரைப்படம் வெற்றியின் எல்லையைத்தொட முடியும் என்று நிரூபித்தவர் விஜய தே.ராஜேந்தர் ஆவார். மற்றுமொரு பாசமலர் என்று பேசப்படும் அளவில் தங்கைப் பாசத்தை திரையில் வடித்திருப்பார். ஆற்றல் என்று சொல்லும்போது, ஒருவருக்கு கதை சொல்லத்தெரியும் அல்லது எழுதத் தெரியும். ஒருவருக்கு இசையமைக்கத் தெரியும். ஒருவருக்கு பாடத் தெரியும். ஒருவருக்கு வசனம் எழுதத் தெரியும். ஒருவருக்கு நடிக்கத் தெரியும் என்று இருக்கையில் இத்தனையும் தன்னால் செய்ய இயலும் என்று சொல்வதைக்காட்டிலும் இவர் நிரூபித்த வெற்றிச் சித்திரங்கள் ஒன்றிரண்டல்ல.

    அஷ்டவதானியாக அறியப்பட்ட இவர் வடித்த கவிதைகள்தான் திரையில் பாடல்களாயின. உருகவும் வைக்கத் தெரியும். தெம்மாங்கு பாட்டும் இவருக்கு வரும். காதலைச் சொல்வதிலும் வல்லவர். பாசத்தைப் பொழிவதிலும் இவர் முன்னவர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, பாடுவது, இயக்கம், நடிப்பு என்று பன்முகம் காட்டும் டி.ராஜேந்தர் அவர்களைப் பாராட்டாத உள்ளங்கள் இல்லை.

    தங்கைக்கோர் கீதம் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியிருக்க, வரிகளை வரைந்து இசையை வடித்திருக்கிறார் விஜய டி.ராஜேந்தர். இந்தப் பாடல் வரிகள் கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவை என்று அறியும்போது மெய்சிலிர்க்கிறது.

    ஆம்,
    ஜவுளிக்கடை பொம்மைக்கூட
    கட்டுதம்மா பட்டுசேலை
    உனக்கொன்னு வாங்கிடவே
    ஏழை அண்ணன் ஏங்கிடவே
    ஆசைப்பட்டு தொட்டிடுவேன்
    காசைக் கண்டு விட்டிடுவேன்

    என்கிற வரிகளைக் கேட்டு, யார் எழுதியது என்று அறிந்து டி.ராஜேந்தரை அழைத்து பாராட்டிய பெருமகன் கண்ணதாசன்!

    கவியரசராலேயே பாராட்டப்பட்ட பெருமைக்குரிய பாடலாசிரியராக பவனிவந்த டி.ராஜேந்தரின் அண்ணன் தங்கை பாசத்திற்கு 1980ல் மலர்ந்த பாசமலரிது!

    இனிமை சிந்தும் புல்லாங்குழல் எடுத்துக் கொடுக்க, அருமையான பாடல் தாலாட்டுபோல அசைந்து வருகிறது பாலுவின் குரலில்…

    தங்க நிலவே உன்னை உருக்கி
    தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
    நட்சத்திரமே உன்னை உடைச்சி
    விதவிதமா வைர நகை போட்டிடவோ
    ஆரிரரோ ஆரிராரிரரோ
    ஆரிரரோ ஆரிராரிரரோ

    தங்க நிலவே உன்னை உருக்கி
    தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
    நட்சத்திரமே உன்னை உடைச்சி
    விதவிதமா வைர நகை போட்டிடவோ
    ஆரிரரோ ஆரிராரிரரோ
    ஆரிரரோ ஆரிராரிரரோ

    ஜவுளிக் கடை பொம்மை கூட
    கட்டுதம்மா பட்டுச் சேலை
    உனக்கொண்ணு வாங்கிடவே
    ஏழை அண்ணன் ஏங்கிடவே
    ஆசைப்பட்டு தொட்டு விடுவேன்
    காசக் கண்டு விட்டு விடுவேன்
    நாளும் வரும் நாளை
    என்று காத்திருப்பேன் …
    ஆரிரரோ ஆரிராரிரரோ
    ஆரிரரோ ஆரிராரிரரோ

    கண்ணீரில் நான் மிதந்து
    கண்மணியைக் கரை சேர்ப்பேன்
    பட்டினியா நான் கிடந்து
    சீதனங்கள் சேத்து வைப்பேன்
    தாலியேறும் நாள் வரைக்கும்
    கண்ணிரண்டும் தூங்காது
    கொட்டு மேளம் கேக்க
    வேணும் சீக்கிரமே …

    தங்க நிலவே உன்னை உருக்கி
    தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
    நட்சத்திரமே உன்னை உடைச்சி
    விதவிதமா வைர நகை போட்டிடவோ
    ஆரிரரோ ஆரிராரிரரோ
    ஆரிரரோ ஆரிராரிரரோ

    காணொளி: https://youtu.be/GmoyzOPtBnk

    https://youtu.be/GmoyzOPtBnk

    Share
  • நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    thalaivanநீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் …

    1970ல் வெளிவந்த தலைவன் திரைப்படத்திற்காக எம்.ஜி.ஆர். வாணிஸ்ரீ நடிக்க, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா குரல் கொடுக்க, கவிஞர் வாலியின் பாடலிது! மெல்லிசை மன்னருக்கு குருவாய் விளங்கிய எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையில் உருவான கானமிது! வண்ணக்கனவுகளில் வலம் வந்த எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களுக்கு முன்னோடியாய் கறுப்பு வெள்ளை காலத்திலும் இதுபோன்ற இன்னிசையில் பிரபலமான பாடல்கள் பல உண்டு. நினைத்தேன் வந்தாய் (காவல்காரன்) முதலாக இதோ தலைவனில், நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்… பொதுவாக நூற்றுக் கணக்கில் பாடல்கள் உண்டு டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா குரல்களில். இப்பாடல், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – பி.சுசீலா குரல்களில்.

    கதையின் நாயகி கனவு காண, அக்கனவில் கதாநாயகன் வந்துசேர, இன்பம் பொங்கும் வெண்ணிலா இருவருக்கும் இடையில் வீற்றிருக்க, அன்புநதி வழிந்தோடி வருகிறது பாருங்கள். அமர்க்களமாய் இசையெழும்பி வழிகிறது, இருவர் குரலில் அமுதம் கிடைக்கிறது! பாட்டுத்தலைவன் நோக்கி பாட்டுடைத்தலைவி பல்லவி தருகின்றாள், செந்தமிழ் இன்பம் செவிகளில் மோத, வந்திடும் பாடல் நம்மை அழைப்பது நீராழி மண்டபத்திற்கு.

    ………………………………………………………………………………………………………………………………

    காணொளி: https://www.youtube.com/watch?v=1HIfx8vuNSY

    https://youtu.be/1HIfx8vuNSY

    ………………………………………………………………………………………………………………………………

    தேனளந்தே இதழ் திறந்திருக்க
    அதைத் தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க …

    போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
    வா வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க …

    நேரளவில் இருவர் என்றிருக்க
    சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க …

    கீழ் திசையில் கதிர் தோன்றும் வரை
    அங்கு பொழிந்ததெல்லாம் இன்பக் காதல் மழை …

    கற்பனையில் வலம்வந்து கவிதைத்தேன்பொழிந்து காட்டும் வாலி அவர்களின் வல்லமை, இதயத்தில் என்றும் தமிழை நேசிக்க வைக்கிறது! ஆசையில் விழுந்தால் ஆனந்த மயக்கம் வரும் என்பதை இவ்வரிகள் எடுத்துச் சொல்கின்றன! இல்லற இன்பத்தின் உச்சம் தொடுகின்ற பாட்டுவரிகளை பட்டுக்கம்பளத்தில் இட்டு வைக்கிறது இசை! எடுத்துக் காட்டும் குரல்கள்!!

    தலைவி காத்திருக்கிறாளாம், எப்படி பல்லவி விடை தருகிறது! காத்திருக்கும் தலைவியை ஆதரிக்கும் தலைவன் இங்கே!!
    இடம் கொடுப்பதற்கே நாணம்தடை விதிக்கும் என்கிற காதல் இலக்கணத்தை எடுத்துச் சொல்லும் இனிய வரிகள் உள்ளடக்கி, தலைவனின் பாடல் வருகிறது, தங்குதடையில்லாத தமிழோடு.

    பெண்:
    நீராழி மண்டபத்தில் நீராழி மண்டபத்தில்
    தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
    தலைவன் வாராமல் காத்திருந்தாள்
    பெண்ணொருத்தி விழி மலர் பூத்திருந்தாள்

    ஆண்:
    நாடாளும் மன்னவனின் நாடாளும் மன்னவனின்
    இதய வீடாளும் பெண்ணரசி
    தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
    மன்னன் கை தொடும் போது தலை குனிந்தாள்

    பெண்:
    வாடையிலே வாழை இலை குனியும்
    வாடையிலே வாழை இலை குனியும்
    கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
    காதலிலே பெண்மை தலை குனியும்

    ஆண்:
    ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

    பெண்:
    காதலிலே பெண்மை தலை குனியும்
    இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்

    ஆண்:
    பெண்ணிலவு அங்கே நாணுவதை கண்டு

    பெண்:
    ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

    ஆண்:
    பெண்ணிலவு அங்கே நாணுவதை கண்டு
    வெண்ணிலவு முகிலில் போய் மறைய
    வெண்ணிலவு முகிலில் போய் மறைய
    காதலனும் நல்ல வேளை கண்டான்
    அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்

    பெண்:
    நீராழி மண்டபத்தில் …

    பெண்:
    தேனளந்தே இதழ் திறந்திருக்க
    அதைத் தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
    தேனளந்தே இதழ் திறந்திருக்க
    அதைத் தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க

    ஆண்:
    போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
    போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
    வா வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க

    பெண்:
    நேரளவில் இருவர் என்றிருக்க

    ஆண்:
    சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க

    பெண்:
    கீழ் திசையில் கதிர் தோன்றும் வரை

    ஆண்:
    அங்கு பொழிந்ததெல்லாம் இன்பக் காதல் மழை

    பெண்:
    நீராழி மண்டபத்தில்
    தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
    தலைவன் வாராமல் காத்திருந்தாள்
    பெண்ணொருத்தி விழி மலர் பூத்திருந்தாள்

    Share
  • பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    பாவாடை தாவணியில் …

    நினைவுகளின் நீரோடையில் தெளிவான இளம்பருவம்!
    வாலிபம் வந்து தலைநீட்டும் அது ஒரு வசந்தகாலம்!!
    தலைவன் தலைவி துணைதேடும் மானுட விளையாட்டு!
    இறைவன் படைப்பில் இதயங்கள் இணையும் திருமணம் எனும்கூட்டு!!

    காதல் என்னும் பரவசத்தால் ஆயிரம் பரபரப்பு!
    காலை மாலை வேளைகள் எல்லாம் நெஞ்சில் துடிதுடிப்பு!!
    எண்ணிப் பார்க்கும் இதயத்தில் எத்தனை அலையடிக்கும்!
    எண்ணத்தானே முடிவதில்லை இதுவரை ஒருவருக்கும்!!

    கனவுகளிலே மிதப்பதுவே பருவம் செய்யும் ஜாலமாகும்!
    கண்களிலே சுமப்பதுவே பருவம் செய்யும் தேவலோகம்!!
    மன்மதனை அழைத்திடவே மனதிற்குள் சுகம் தோன்றும்!
    மலர்க்கணை பாய்ந்திடவே மணநாள் பெறும் சொர்க்கமாகும்!!

    பாவாடை தாவணியில் 1தமிழகத்துப் பண்பாட்டில் உறவுக்குள் பெண் எடுப்பதும், கொடுப்பதும் தாரளமான ஒன்றே! இதனாலேயே இளம் வயது முதல், இவன் – இவளுக்கு, இவள் – இவனுக்கு என்று பெரியவர்கள் முடிவு செய்வதுமுண்டு. தமக்கை மகளைத் தாரமாக ஏற்றிருக்கும் ஆண் மகன்கள் அதிகமுள்ள நாடு நம் தமிழ்நாடு. இந்தப் பாரம்பரியம் பட்டுவிடக்கூடாதென கெட்டிக்காரத்தனத்துடன் இன்றும் கடைப்பிடிக்கும் குடும்பங்களும் அதிகம் உண்டு. இவ்வரிசையில் இளம் பருவத்தில் தான் கண்ட பாவாடை தாவணியை மறக்க முடியாமல், பருவத்தைச் சுமந்துவரும் ஆடவர்கள் கோடியுண்டு!

    அன்று பார்த்த அந்த உருவமா.. இப்படிச் செழித்து, கொழித்து வளர்ந்து வதனம் காட்டுகிறது? எண்ணத்திரையில் சின்னவளாய் கண்ணுக்குள் நின்றிருந்த அவளைச் சிங்காரமாய்.. ஒய்யாரமாய்.. சேலை கட்டிய பூங்கொடியாய் பார்த்துப் பூரிக்கின்றவர்களில் ஒருவனாய்..

    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

    இந்தப் பாடலின் பல்லவியில்தான் பண்பாட்டின் பின்னணி உள்ளது. சரணங்களில் வரும் வரிகளும் வார்த்தை ரதங்களாய் அழகு சேர்க்கின்றன. அங்கேயும் கண்ணதாசன் முத்திரை பளிச்சிடுகிறது பாருங்கள்!

    பொதுவாக பெண்டிர்தான் ஏழேழு ஜென்மங்களுக்கும் நீங்களே எனக்கு கணவராக வரவேண்டும் என்று சொல்வது வழக்கம்! அடடா.. ஒரு ஆண்கூட அப்படிச் சொன்ன சுவடுகள் இல்லையே…

    எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
    ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
    மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
    நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்

    என்று புதிய பிரகடன உத்தியைத் திரைப்படப்பாடலில் வடித்துச் சென்ற கவியுள்ளமே!
    நிச்சய தாம்பூலத்தில் நடிகர் திலகத்தின் அதியற்புத நடிப்பில் வெள்ளித்திரை வழங்கிய விருந்தல்லவா?

    திரைப்பாடல் என்னும் வகையில்கூட இத்தனை அர்த்தபுஷ்பங்களை மாலையாக்கி வைத்த நின் திறனை எண்ணி வியக்கிறோம்! கேட்டு ரசிக்கிறோம்!!
    ……………………………………………………………………………………………………………………
    காணொளி: https://youtu.be/UTPvMuptaUg

    https://youtu.be/UTPvMuptaUg

    ……………………………………………………………………………………………………………………

    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
    பனி போல நாணம் அதை மூடியதேனோ
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

    வாவென்று கூறாமல் வருவதில்லையா
    காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா
    வாவென்று கூறாமல் வருவதில்லையா
    காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா
    சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா
    இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

    தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
    நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா
    தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
    நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா
    முத்தமிழே முக்கனியே மோகவண்ணமே
    முப்பொழுதும் எப்பொழுதும் சொந்தமே
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

    எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
    ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
    மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
    நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    ……………………………………………………………………………………………………………………
    திரைப்படம் – நிச்சய தாம்பூலம்
    பாடல் – பாவாடை தாவணியில்
    கவிஞர் – கண்ணதாசன்
    இசை – திரு.எம்.எஸ்.விஸ்வநாதன், திரு.டி.கே.இராமமூர்த்தி
    ……………………………………………………………………………………………………………………

    Share
  • தேனுண்ணும் வண்டு …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    தேனுண்ணும் வண்டு..

    Then unnum vanduஅமரதீபம் திரைப்படத்திற்காக டி. சலபதிராவ் மற்றும் ஜி.இராமநாதன் இசையில் ஏ.எம்.ராஜா மற்றும் பி.சுசீலா பாடிய பாடல். பாடலை இயற்றியிருக்கிறார் கவிஞர் மாயவநாதன், 1956ல் வெளிவந்த இப்படத்தின் பாடல் இன்றும் மக்கள் மனதில் வசந்தகீதமாய் வலம்வருகிறது!

    கேட்டாலே கிறங்க வைக்கும் இனிய இசையில், பாடும் குயில்களாக ஏ.எம்.ராஜா., பி.சுசீலா தமிழமுதம் பொழிய, இயற்கையின் எழில்தனை வார்த்தைகளாக்கி வரைந்துவைத்த கவிதையிது!

    காதலின் இன்பம் என்று எதை நாம் சொல்ல முடியும்? கவிதையும் இசையும் இப்படி கைகோர்த்து வருகிற காட்சி தவிர, கண்கள் காணும் காட்சி இதுவே காதலுக்கு சாட்சியாக, எழில்மேலும் கவிவண்ணம் இசையோடு சேர்ந்து இங்கு என்னென்ன சொல்கிறது கேளுங்கள்!!

    மனதின் மூலை முடுக்கெல்லாம் இந்தப் பாடலின் ரீங்காரம் ஓங்காரமிட நல்ல தமிழ்ப் பாடல் வரிகளிவை என்று நாளைய சமுதாயமும் அடையாளம் காண மாயவநாதன் எழுதிவைத்த பாட்டு!

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நடிகையர் திலகம் சாவித்திரியும் இணைந்து வழங்கிய பாட்டு!!! இதய அரங்கில் இனிமை தவழ என்றைக்கும் கேட்கலாம்… எத்தனை முறை வேண்டுமானாலும்!!!

    தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
    திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
    பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓஓஓஓ
    பூங்கொடியே நீ சொல்லுவாய்

    வீணை இன்பநாதம் எழுந்திடும் விநோதம்
    விரலாடும் விதம் போலவே
    காற்றினிலே தென்றல் காற்றினிலே
    காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
    புதுமை இதில் தான் என்னவோ ஓஓஓஓ
    புதுமை இதில் தான் என்னவோ?

    மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு
    ஏனலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
    மென்காற்றே நீ சொல்லுவாய் ஓஓஓஓ
    மென் காற்றே நீ சொல்லுவாய்

    கானமயில் நின்று வான்முகிலைக் கண்டு
    களித்தாடும் விதம் போலவே..
    கலையிதுவே வாழ்வின் கலையிதுவே
    கலையிதுவே சலசலெனும் மெல்லிய பூங்காற்றே
    காணாததுமேன் வாழ்விலே ஓஓஓஓ
    காணாததுமேன் வாழ்விலே

    கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
    காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ?
    கலைமதியே நீ சொல்லுவாய் ஒஓஓஓ
    கலைமதியே நீ சொல்லுவாய்
    ஓஓஓ ஓஓஓ

    காணொளி: https://youtu.be/AhGgNSX545E

    Share