— கவிஞர் காவிரிமைந்தன்.

 

 

மெல்ல … மெல்ல மெல்ல …

அஞ்சுதலும் கெஞ்சுதலும் ஆசையினால் கொஞ்சுதலும் காதலிலே காணும் நிலை! உள்ளமலர் சிலிர்த்திடும் ஒவ்வொரு நொடியிலுமே பெண்மையங்கே பேசாமல் தவித்திருக்கும்! கண் வரைந்த ஓவியத்தைக் கண்ணெதிரே கண்டாற்போல் கவிதை சொல்லத் தித்திக்கும்! இருவரல்ல நாம் இனி ஒருவரென்றே ஓடிவந்து ஒன்றையொன்று சந்திக்கும்! வார்த்தைகளே வாராமல் சொல்லெடுக்க முயலும்போது வெட்கமது திரையிடும்! இத்தனைக்கும் இடையினில் காதலனின் கரங்கள் தன்னைப் பற்றிட முற்படும்போது…

மெல்ல மெல்ல மெல்ல2மெல்ல… மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல… சொல்லச் சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல

பணமா பாசமா திரைப்படத்திற்கா, திரை இசைத் திலகம் கே. வி.மகாதேவன் அவர்களின் இசையில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், கவியரசு கண்ணதாசன் இயற்றிய காதல் நீலாம்பரி ஒலிப்பது டி.எம்.சௌந்தரராஜன், பி. சுசீலா குரல்களில்!

உச்சி முதற்கொண்டு பாதம் வரை – இங்கு
ஓடிடும் மின்னலை என்ன சொல்ல…
மிச்சம் இருப்பதை நாளை என்று – நெஞ்சில்
மின்னிடும் ஆசையை என்ன சொல்ல

மெல்ல மெல்ல மெல்லஅன்பின் மடியில் ஆசைக்கிளிகள் ஆலோலம் பாட..
இன்ப மழையில் இதயம் நனையும் ‘சுகம்’ சுகம்தான் என்ன?
பட்டுத் தெறிக்கும் முத்தைப் போல சொற்கள் ஓடி வர – அதைக்
கட்டும் படுத்திக் காட்டும் இங்கே பாருங்களேன்!

தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள …
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்..

ஆண்டுகள் பல ஆனபோதும் மாண்டுவிடாத பாடல்!
இன்பத் தேன்வார்க்கும் நிலைகள் பரவிக்கிடக்கும் சூழல்!
கைகள் படுவதற்கும் கட்டியணைப்பதற்கும் இதமானபோது
சொல்ல இனிக்கின்ற சுகமான பாடல்! சொர்க்கத்தின் தாழ் திறக்குமன்றோ?

மெல்ல… மெல்ல மெல்ல …

மெல்ல… மெல்ல மெல்ல
மெல்ல… மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல.. சொல்லச் சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
மெல்ல…

உச்சி முதற்கொண்டு பாதம் வரை – இங்கு
ஓடிடும் மின்னலை என்ன சொல்ல…
மிச்சம் இருப்பதை நாளை என்று
மிச்சம் இருப்பதை நாளை என்று – நெஞ்சில்
மின்னிடும் ஆசையை என்ன சொல்ல
மெல்ல…

அத்திப் பழத்துக்கு மேலழகு – உந்தன்
ஆசை பழத்துக்கு உள்ளழகு …
தத்தித் தவிக்கின்ற பொன்னழகு
தத்தித் தவிக்கின்ற பொன்னழகு – உன்னைத்
தழுவத் துடிக்கின்ற பெண்ணழகு
மெல்ல…

தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள …
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்..
ஆடுகின்றாய்.. ஆடுகின்றாய்..
மெல்ல…

மேலைத் திசையினில் போய் உறங்கும் – கதிர்
மீண்டும் வரும் வரை நம் உலகம் …
காலைப் பொழுதினில் சிந்தனைகள்
காலைப் பொழுதினில் சிந்தனைகள் – மறு
மாலை வரும் வரை கற்பனைகள்
மெல்ல…

ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த
ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்…
ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை
ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை
நாம் ஒன்று இரண்டு என்பதுமில்லை
மெல்ல…

காணொளி: https://www.youtube.com/watch?v=1J0ixlJPt5U

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.