Author: கிரேசி மோகன்

  • ஸ்ரீ ரமண வசனாம்ருதங்கம்…..!

    ’பாலக்காட்டு மணி அய்யர்’’(காந்து )….!

    —————————————————

    குரு எத்துனை அவசியமோ, சீடன் அத்துனை முக்யம்….!
    ————————————————————————————————————-
    எங்கள் குழு(கிரேசி கிரியேஷன்ஸ்) இயக்குனர், நண்பன் காந்துவுடன் டெலிஃபோனில் பேசிக் கொண்டிருந்தேன்….அப்போது அவர் ‘’பாலக்க்காட்டு மணி அய்யரைப்’’ பற்றி சிலாகித்து சுவையான அனக்டோட்ஸை பறிமாறினார்….மிருதங்கம் பலா மரத்தால் செய்வார்களாம்….உடனே நான் அப்ப அவர் ‘’பலாக்காட்டு மணி அய்யர்’’ என்றேன்….காந்து ரஸித்தார்….நிற்க இல்லை அமர்க….
    உடனே பாரதிதாசரின் ‘’வேரில் பழுத்த பலா’’ நினைவுக்கு வந்தது….வெண்பாவுக்கு நல்ல ஈற்றடியாகப் பட்டது….இருந்தாலும் ‘’வேரில் பழுத்த விலா’’ என்று இருந்தால் மோனை சரியாக இருக்குமே, ஆனால் பொருள் சரியில்லையே என்று மூளையைக் கசக்கியபோது தோன்றிய வெண்பா….மாவீரன் அருச்சுனன் பேரில்….எண்ணங்களின் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்வதை ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி ‘’சேஷ்டை’’ என்கிறார்….வாழ்வதே சும்மா இருக்கத் தெரியாத ‘’சேஷ்டைதான்’’….’’சேஷ்டை’’ வெண்பாவைப் பார்ப்போம்….!

    ‘’தோள்வலி மிக்கவன், தீரன் தனஞ்ஜெயன்
    கேள்விக் கணைதொடுத்துக் கீதையை, -வேள்வியாய்,
    தேரில் அமர்ந்தவன் தாஸனாய்ப்(சீடனாய்ப்) பெற்றதால்,
    போரில் பழுத்த பலா’’….கிரேசி மோகன்….!

    ”மதிய உதயம்”….
    ———————————

    சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு….!
    பகவானுக்கு மிகவும் பிடித்த நூல்கள், ”யோக வாசிஷ்டம்”,
    ”ரிபு கீதை”, ”திரிபுரா ரஹஸ்யம்”…..!

    ”பூத,வர்த்த மான, பவிஷ்யத், இவைமூன்றும்,
    ஈதனை ஒத்த இடையூறாம், -சாதகனை,
    மொய்த்து மொசுக்கிடும், முக்திப் பழம்தனை,
    வைத்தியம்”வா சிஷ்ட வகுப்பு”….கிரேசி மோகன்….!

    வகுப்பு என்று முடித்தமைக்கு காரணம், ”என்னதான் புத்தகத்தில்
    படித்தாலும், குருமூலம்(TEACHER) அறிந்து கொள்வதே சிலாக்கியம்….பூதப் பிரதிபந்தம்-இறந்தகால பந்தங்களினால் ஏற்படும் இடையூறு….வர்த்தமான, பவிஷ்யத்-முறையே -நிகழ்கால,
    எதிர்கால இடையூறுகள்….வாசிக்கவும் வித்யாரண்யர் எழுதிய ”பஞ்சதசீ”….இதை உறுதி செய்வது ”வாசுதேவ மனனம்”….!

    AVM RAAJU வுக்கு பதில் மெயில் வழி….!
    —————————————————————————–

    .ராஜு, இந்தக் குழப்பம்(திருக்கு) எனக்கும் உண்டு….இதை நான் வேடிக்கையாக எழுதியுள்ளேன்….!
    குரு எத்துனை அவசியமோ, குருவை சீடன் தேடிக் கண்டு பிடித்தல் அத்துனை முக்யம் என்பார் ஸ்ரீ ரமண மஹரிஷி அவர்கள்….!இதை நான் வேடிக்கையாக எழுதியுள்ளேன்….!
    ZENபா….!
    —————————-
    ஒரு சீடன் குருவைத் தேடிப் போனான்…குருவைக் கண்டதும் சீடன்….
    சீடன் -குருவே எனக்கு வழி காட்டுங்கள்….
    குரு -என்னைத் தொடர்ந்து வா….
    (சீடன் குருவைத் தொடர்ந்து செல்ல….திடீரென்று நரகம் வந்தது….சீடன் அதிர்ந்து போய்….)

    சீடன் -குருவே தாங்கள் ZEN தானே….(கேட்க)
    குரு -(பயங்கரமாய் சிரித்து…) நான் YAMAHA டா குருமுட்டை….(என்றார்)….

    ரமணர் சொல்லுவார் யாருடைய சன்னிதியில் உனக்கு நிம்மதி ஏற்படுகிறதோ(எந்த உபதேசமும் இல்லாமல்)அவரே குரு….

    ”சன்னிதி மாத்திரத்தில் சத்குருவைக் கண்டறிவாய்
    அன்நிதி கண்டபின் ஐம்புலனை, -கொன்னுதீர்:
    யாதுஊ ரேதான் யாவரும் கேளிர்தான்
    தீதொடு நன்றும் திருக்கு’’….கிரேசி மோகன்….

    Share
  • தத்த குரு வெண்பாக்கள்….!

     

    தத்த குரு வெண்பாக்கள்….!
    ———————————-

    அத்திரி இல்லாள் அனுசூயா தொட்டவுடன்
    மொத்தவுரு ஆனார்கள் மூவிறையும் -இத்தரையில்
    தத்தகுரு போலாமோ மத்தகுரு மார்களெலாம்
    சித்தமொரு மித்தவரைச் சேர்….(1)….!

    அத்தையுரு வற்ற அருவ சொரூபமாய்
    சித்தமொரு மித்தென்றும் சிந்திக்க -தத்தகுரு
    சூலம், டமருகம், சங்காழி ஏந்தியமூ
    மூலம் முனியாய் முளைப்பு….(2)….!

    வேதங்கள் நான்கும் விளையாடும் நாய்களாய்
    பாதங்கள் பற்றிப் பணிந்திருக்க -ஓதுமயன்
    தாணுமால் சேர்க்கையாய் தத்தகுரு தேவரை
    காணமால் கொள்வீர்கண் காள்….(3)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180727 Yoga Vasishta – Guru PurNima – watercolour – charcoal -A4 -100 dpi lr

     

    லகு வாசிஷ்டம்
    ——————–

    வந்ததில் பற்றும் வருவதில் ஆர்வமும்
    அந்தநாள் ஞாபக ஆசையும் -தொந்தரவாம்
    ஆகவே மாயைக்(கு) அடங்காது ஆட்டத்தை
    ராகவா ஆடு ரசித்து….!

    ஆர்பரித்து ராகவா மேற்புரத்தில் ஆடுநீ
    பார்ப்பவர் கண்ணுக்குப் பற்றுதல்போல் -நீர்பரப்பாய்
    அஞ்சின்(ஐம்புலன்) அலைகளற்ற நெஞ்சிருக்க, வைக்கலாம்
    பஞ்சுக்(கு) அருகில் பிழம்பு….!

    இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டிடும்
    பொல்லாத நெஞ்சமொரு போக்கிரி -வில்லாளி
    ராகவா, ஆகவே மோகவாய் போகாது
    யோகமாம் வாசிஷ்டம் எய்து….கிரேசி மோகன்….!

    குரு பஞ்சகம்….!
    ———————

    ஒருநோயும் அணுகாத உடல் ஆரோக்கியம்
    ஓகோ எனப்புகழ் , ஒரு மேரு திரவியம்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(1)

    திருவொத்த மனையாள் திடமான பிள்ளைகள்
    தங்கவோ மாளிகை தாயாதி உறவினர்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(2)

    மறை சாத்திரங்கள் முறையோடு பயின்றாய்
    உரைநடை பாட்டதில் கரைகண்டு வென்றாய்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(3)

    அருகாமை அண்டை அசலூர் அனைத்திலும்
    மருவிலா மதிப்புடன் மாசற்றிருப்பினும்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(4)

    ஈற்றடியில் ஈரேழு உலகாளும் மன்னர்கள்
    போற்றிடப் புலமையில் ஆற்றல் இருப்பினும்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(5)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    KRISHNA FOR TODAY….!
    ————————————————

    180721 Yashoda watercolour, conté and charcoal A4 scan 300dpi wm

    கண்ணனின் வாய்க்குள்ளே கண்ணனைக் கண்டதும்
    அன்னை இழுத்தாள் அவசரமாய் -மண்ணுக்கு:
    மாதாவின் கண்களுக்கு மாயத் திரையிட்ட
    கீதா உபதேசா காப்பு….!

    சூர்பணகை ஆனாலும் சுந்தரி ஆனாலும்
    பார்ப்பன எல்லாம் பரம்பொருளே -தாற்பரியம்
    தன்னை உணர்ந்து தவறா(து) இருந்திட
    கண்ணனை நெஞ்சே கருது….!

    சினம்மிகுந்த மாமன் சிறைபிறந்து ஆயர்
    இனம்புகுந்து வாழ்ந்த இடையன் -மணம்குவிந்த
    மண்ணணைநீர் மேகத்து வண்ணனை மாற்றான்தாய்க்
    கண்ணனை நெஞ்சே கருது….!

    தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
    சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
    மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
    கோதா மணாளனே காப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ‘பாப்பா நெமிலிவாழ் பாலா திரிபுரை,
    காப்பாள், அடியார் கரம்பிடித்துச், -சேர்ப்பாள்
    அதியற் புதமான ஆன்ம உலகில்:
    துதியவளை சாக்லேட்டைத் தந்து’’….(1)

    ’’அமளி இலாத அமைதி லயத்தில்,
    ரமண மயமாய் ரமிப்பு, -நெமிலிவாழ்,
    பாண்டுரங்கன் சோதரி, பாலா திரிபுரையை
    வேண்டி யுறங்க வரம்’’….(2)

    ‘’காளி அரக்கர்க்கு, கற்பகம் பக்தர்க்கு,
    யாளி அமரும் எஜமானி, -தோளிரெண்டில்,
    வேலா யுதன்அண்ணன் வேழனைச் சுமந்திடும்,
    பாலா நவராத்ரிப் பெண்’’….(3)

    ’’வெள்ளை அரவிந்தம் வீற்று நெமிலியில்
    கொள்ளை அழகாய் கொலுவிருக்கும், -பிள்ளையவள்,
    பாலா திரிபுரையைப் போற்றிப் பணிவோர்க்கு
    நாளாம் நவராத்ரி நாள்’’….(4)

    ’’சுப்ரமண்ய அய்யரின் சொப்பனத்தில் வந்(து)ஆற்றில்,
    தெப்பமாய் நீந்திக்கண் தென்படுவேன், -அப்புறம்,
    ஆலயம் வேண்டாம், அகத்தில் குடிவைப்பீர்’’,
    வாலைபா லாஅருள் வாக்கு’’….(5)

    ‘’மூலாதா ரத்தினில் மூளும் கனலவள்,
    கோலா கலகோ குலன்தங்கை, -பாலா
    திரிபுரையைக் காண திருநெமிலி செல்வோம்
    ஹரிசோ தரியே அரண்’’….கிரேசி மோகன்….(6)

    ”சுண்டு விரலளவு சொப்புப் பதுமையாய்
    கண்டு பிடித்தனர் காட்டாற்றில், -கொண்டுவந்த,
    நாலா யிரத்தோன் நவனீதன் சோதரி
    பாலாம் பிகையவள் பேர்”….கிரேசி மோகன்….(7)

    விடிகாலை வெளிச்சம்”….
    ———————————–

    “மாலை மயக்கம், மதிய உதயம்அதி
    காலை வெளிச்சம் கனவாகும், -பாலை,
    திரிபுரையைக் கண்டு தரிசிப்போர் , தம்முன்,
    எரிபவை கூட எழில்”…..கிரேசி மோகன்….(8)

    ”பாலாவின் பேர்சொல்லி பாம்பை எழுப்பிடு.
    மூலாதா ரத்தில் முழிபிதுங்கும் : -தோளா
    யிரத்தில் உறங்கிடும், யாதவன் தங்கை,
    சிரத்தில் சிரிப்பாள் சிலிர்த்து’’….கிரேசி மோகன்….(9)

    ’’இமியளவும் தீங்கின்றி, இன்சொல் உரைக்க,
    நெமிலிவாழ் பாலா நெகிழ்வாள் , -ஞமலியின்,
    வாலை நிமிர்த்தித்தன், ஆளாய் அமர்த்துவது,
    பாலை திரிபுரையின் போக்கு’’….கிரேசி மோகன்….(10)

    ஞமலி -நாய்

    ”ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்….கிரேசி மோகன்….(11)

    ”பயமகல பாலா, பலம்பெருக பாலா,
    லயமடைய பாலா, லலிதை -மயமான,
    ரூப தியான ரமிப்பில் இருப்போர்க்கு,
    ஆபத்(து) உதவி அவள்”….கிரேசி மோகன்….(12)

     

    ‘’திரிபுர சுந்தரி தேவி நமஸ்தே,
    பரிபூ ரணமுணர பாலா -சரிபுகல்வாய்,
    சாதகனாய் ஆக்கி சதாசர்வ காலமும்
    மாதவத்தில் மூழ்கயென், மனு’’….கிரேசி மோகன்….(13)

     

    ”தாலேலோ தாலேலோ தாயாரின் தாலாட்டு,
    பாலேலோ பாலேலோ பையனிவன் -தாலேலோ,
    தூங்காமல் தூங்கும் திருமால் சகோதரி
    ஓங்காரி பாலாவுக்(கு) ஓய்வு”….கிரேசி மோகன்….(14)

     

    ‘’கல்லைச் சிலையாக்கும் கல்லுளி மங்கம்மா,
    சொல்லைக் கவியாக்கும் சுந்தரி, -கொல்லை,
    குமுதத்தில் பூப்பாள் குலம்ஜாதி காணா,
    அமுதத்தன் தங்கை அவள்’’….கிரேசி மோகன்….(15)

     

    ‘’ஆலோல வள்ளியின் ஆம்படையான் அன்னையே,
    தாலேலோ பாடவந்தேன் தாயுனக்கு, -பாலேலோ,
    மாலோலன் தங்காய், மனோன்மணி கண்ணுறங்கு,
    காலேல கண்மலர்ந்து கா’’….கிரேசி மோகன்….(16)

    கா -காப்பாய்….

     

    ‘’பொற்கரத்தில் மாலையும், புத்தகமும் ஏந்தியவா(று)
    அற்புதங்கள் செய்ய அலைந்தனையே, -கற்பகமே,
    கண்ணுறங்கு பாலேலோ,கால்வலிக்கப் போகிறது,
    பண்ணுறங்கப் பாடுமெனைப் பார்’’….கிரேசி மோகன்….(17)

     

    ‘’ஈசனிரு கண்ணை இறுகநீ மூடியதால்,
    தேசம் இருண்டதே தேவியே ! -வீசிடும்
    கண்ணிமைகள் பொத்தியதி காலை எழந்திடலாம்,
    பெண்ணிமய பாலா படு’’….கிரேசி மோகன்….(18)

     

    ’’நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட,
    ஐயம் அகன்றதும் ஆதரவாய், -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள், பரமசுகம் கூட்ட,
    படித்ததெலாம் பாலாமுன் பாழ்’’….கிரேசி மோகன்….(19)

     

    ”அமளியில் லாமல் , அமைதியைக் காத்தால்,
    நெமிலிவாழ் பாலா நினக்குள், -கமலியாய்,
    நெஞ்சகத் தாமரையில் நின்று நிலைத்திருந்து,
    அஞ்சேல் அபயம் அளிப்பு”….கிரேசி மோகன்….(20)

     

    ‘’சீட்டிப்பா வாடையும் ,சில்க்கில் சட்டையுமாய்,
    நாட்டுப் புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள்
    வீற்றவளே பாலா , வருக வருகநான்
    சாற்றும்வெண் பாவை சகித்து’’….(21)….கிரேசி மோகன்….

     

    “கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்,
    அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்,
    சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
    லக்கு(LUCK)பாலா ஊர்நெமி லி “….(22)….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180725 Kaliamardhana A4 wcol charcoal – with the nagapatnis scan 300 -wm

    புகுந்தன்று, பொய்கை படமெடுத்த ஐந்து
    முகம்கொண்ட காளியன் மீது -வெகுண்டெழுந்(து)
    ஆடிய ஆட்டம், அதற்கீடாய் ஐம்புலன்கள்,
    ஆடா(து) அடங்கநீ ஆடு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180724 Vatsalya A4 wcol charcoal scan 300dpi wm

    குட்டிக் கரியதன் குட்டியிடம், கோகுலக்
    குட்டனவன் ராதையைக் காண்கிறான்: -சுட்டிப்
    பயலவர்க்கு எல்லாமே, பைங்கிளி ராதா:
    வயலிவர் ராதைநீர் வீச்சு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180625 Vishwaroopam -Mahabharatham-cover for Shri Balakumaran’s book part II watercolour -Arches 300 gsm 10×14” (3 days)

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    பாலகுமார் நாவலுக்கு ,பாரதம் செய்தவர்,
    நீலகுமார் நிற்பது நீளகுமார்: -கோலகுமார்
    கேசவ் வரைந்ததைக் கண்டு கவுரவர்கள்
    பேச மறந்தார் பயந்து….!

    சுருதி ஒலிக்குள், பரிதி ஒளிக்குள்
    இறுதிமுதல் இல்லா இறைக்குள் -கருதி
    துதிக்கும் முனிவர்தம் தேடலுக்கு எட்டா
    ஸ்திதிக்குப் புகன்றேன் சரண்….!

    பசுக்களை மேய்த்தோய் வசுதேவன் மைந்தோய்
    விசுவமாய் எங்கும் விரிந்தோய் -அசையும்
    அசையா பொருள்களுக்கு ஆதார மான
    இசையே வணக்கம் உனக்கு…..கிரேசி மோகன்….!

    பகவான் உவாச….!
    ————————————————-

    ”எங்கிருந்(து) ஆரம்பம் எங்கெதில் சங்கமம்
    இங்கணம் இவ்வுயிரை நன்குணர்ந்தோர் -இங்கிலர்
    ஆதலால் சோதரர்காள் வேதனை வேண்டாம்வல்
    சூதினைக் கொல்லல் சிறப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • கிரேசி மோகனின் ‘ராஜ சியாமளா தண்டகம்”

     

     

    ராஜ சியாமளா தெண்டகம்(அடியேன் ‘’கண்ணன் அனுபூதியை’’ வெளியிட்ட சமயம், வக்கீலும், வானவில் கழகத்தின் தலைவருமான, எனது நண்பன் க.ரவி அன்பளிப்பாய்க் கொடுத்த ‘’ராஜ சியாமளாவின்’’ பேரில் எழுதிய தெண்டகம்….!) க.ரவி ஓர் அம்பாள் படமும் அளித்தான்(இணைத்துள்ளேன்….!)
    ———————————————

    பாடல்: கிரேசி மோகனின் ‘ராஜ சியாமளா தண்டகம்” 
    இசை: குரு கல்யாண்

    நிலாச்சில்லை தங்க நீள்முடியில் தாங்கி
    விலாநோகச் சேலை வலம்வரும் சின்ன
    இலாவல்லி இடையாள் சொலாச்சொல்லை உடையாள்
    கலாவல்லியை ராஜ ச்யாமளாவில் கண்டேன்….(1)

    சிரமுச்சித் தங்கும் சிறுபிறையும் அறிவும்
    கரும்பிச்சை கொள்ளும் கரும்பச்சை வடிவும்
    கரமர்ச்சிக்கின்ற கற்பனை யாழ் இசையும்
    தரும்பிச்சை கொள்வோர் தரணியிலே மேலோர்….(2)

    மேடான நெற்றி அதற்க்கீடாம் அம்மேரு
    தேடுகின்ற ஞானிக்கது திகழ்கின்ற ஊரு
    நாடுகின்ற அன்பர்க்கு நல்லறிவுச் சாறு
    பாடுஅவள் பேரு பயனடைவாய் பாரு….(3)

    ஓலையுற்ற செவிகள் ஓமிசைக்கும் கிளிகள்
    மாலையுற்ற கழுத்து மாலோலன் சங்கம்
    சேலையுற்ற தனங்கள் ஞானச்சீ தனங்கள்
    தாளையொற்றிப் பணிவீர் தாயளிப்பாள் குணங்கள்….(4)

    போகுமிடமெல்லாம் புகழ் உமக்குச் சேரும்
    ராகுகாலம் கூட மிகரம்யமாக மாறும்
    ஆதரவிக்கிங்கென்றும் அவளருளே போதும்
    ஆதலினால் அம்மா அபயமென்று ஓதும்….(5)

    சாமளையின் பாதச் சிலம்புனக்கு காப்பு
    கோமளையிரு காதின் குண்டலங்கள் யாப்பு
    நாமலைய வேண்டாம் நாலாயிரம் பாட
    தாமரையாள் தருவாள் நாமுகந்து நாட….(6)

    கல்வியவள் அருளால் கலவியாகப் படியும்
    வல்வினைகள் மாறி விளையாட்டாய் முடியும்
    செல்வமுனைத் தேர்ந்து சுவிகாரம் கொள்ளும்
    அல்மதியம் மாலை ஆதவனாய் ஒளிரும்….(7)

    ஸ்திரபுத்தியோடு ஸ்திதப் ப்ரஞ்ஞனாக
    பெருபக்தி கொண்டு பாரதிக்கு ஏக
    அறுபத்தி நான்கு ஆயகலை தம்மை
    குருவொத்து அளிப்பாள் வரசித்தி அம்மை….(8)

    ராணி லலிதாங்கி ராஜ சியாமளா
    வாணி மாதங்கி வாக்கிற் கதிபதியே
    பூநீ மகரந்தம் பொய்கை வண்டும்நீ
    நான்நீ ஆகிடயென் நாவில் அமர்வாயே….(9)

    மகரயாழை மடியினில் நீட்டி
    அகர உகர மகரம் மீட்டி
    சிகரமேரு சிரத்தினில் வீற்ற
    சகலகலா வல்லியைப் போற்று….(10)

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180722 Krishna avatar 01- A4 – watercolour -charcoal 100 dpi scan lr

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    வாசுதேவ ரைவசுதே வர்வெஞ்சி றைநீங்கி
    ஓசை யமுனா ஓய்ந்திட -நீசனவன்
    கூற்றனாய் வாய்த்தவன் கம்சன் கொலைக்கஞ்சி
    மாற்றான்தாய் பக்கம் மகன்….!

    நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
    கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
    அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
    குப்பம் நுழைந்தவனே காப்பு….!

    ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
    கருத்த நிறக்கண்ணன் நின்போல் -பிறப்பில்
    அனாதை ஆனாலும் ஆய்ச்சியர் அன்பால்
    அனாதி அவன்கதை ஆச்சு….!

    திரும்ப சிறையில் பிறந்து சிரித்து
    விரும்பி வ்ரஜமண் விரைந்து -கறந்த
    பசுக்கள் பால்மடி பச்சிளங் கன்று
    ருசிக்கும்முன் உண்ணகண்ணா ரா….!

    (யமுனை)ஆத்திலொரு காலாக (சிறை)சேத்திலொரு காலாக
    காத்திருக்கேன் கேள்விக் குறியாக -பூத்திருவை
    மார்பினில் சூடிய மாதவா, நேருக்கு
    நேர்பதில் கூறுவதென் நாள்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180715 Garuda vahana watercolour brushpen A4 lr2

    புள்வா கனர்வி(ல்)லேந்தும், பூந்துழாய் மாதினை
    கல்யாணம் கட்டியக் கேசவர் , -எள்ளென்றால்
    எண்ணையாய் பக்தியை ஏற்கின்ற கோகுலக்
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180720 Krishnapremi A4 Wcol charcoal -lr 100dpi

    ‘சங்கூ துதுமந்தி,சாட்டையில் கண்ணபிரான்
    அங்கிருந்த வாறே அருச்சுனர்க்கு -சங்கீதை(சங்கு கீதை)
    சொல்கின்றார் ’’சவ்யஸாஸி சோம்பல் அழகல்ல
    வில்கன்றை ஏந்து விஜய்’’….கிரேசி மோகன்….!

    Share
  • ”ஸ்ரீ ரமண வசனாம்ருதம்’’….!

     

     

    ‘’சிரித்திடும் நானார்! , சிரிக்கவைக்கும் நானார்! ,
    விறைத்திட சுடுகாட்டில் வேக -எறிந்திடும்
    நானார்! ,எரிந்திடும் நானார்! , எரிந்தபின்
    நானார்! , புனரபிதான் நான்’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    KRISHNA FOR TODAY….!
    ————————————————-

    180718 Krishna Leela A4 wcol charcoal wm

    அளித்திடுவார் உச்சியை, ‘ஆ’போல் உனக்கும்
    களித்திரு கண்ணன் கலப்பில் -பளிச்சென
    நாக(ம்)(குண்டலினி) ஏறா மல்நாம்உச்சி, நாம சஹஸ்ரத்தால்(சஹஸ்ரஹார சக்ரம்-விஷ்ணு சஹஸ்ர நாமம்-சக்ரம் சுதர்ஸனம்)
    வேகமாய் நித்ரை விழிப்பு….!

    அந்தரங்க சுத்தியுடன் அந்த(அ)ணங்கு(கோமாதா பெண்தானே) ‘ஆ’போல,
    அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க -வந்திறங்கி
    வைகுண்டம் வாவென்று கைகொடுத்து உச்சிமுகர்
    பைகொண்ட நாகமுற்ற பொற்பு(அழகு)….!

    ”பாதுகை ஆயிரம்’’….!
    ————————————————–
    பைகொண்ட பாம்பில் படுத்த பரம்பொருள்
    வைகுண்ட நாதர் வடிவத்தை -கைகொண்டு
    ஏந்தும்கால் பாதுகையே நீந்திவா பாற்கடலில்
    ஏந்திச்செல் என்னை எடுத்து….!

    அப்பண ஆதி அனந்தன் அமர்ந்தவரே,
    சொப்பனம் இவ்வுலக சாராம்சம் -அற்பநான்
    எண்ணம் தொலைத்து எழுவாய் விழிப்புடன்
    கண்ணனை நெஞ்சே கருது….!

    வேறார்வம் கொள்ளாது ஆராப் புலனடக்கி
    நாரா யணனை நினைப்பதே -சாராம்சம்
    அன்நிலைக்கு செல்ல அனுபூதி தந்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது….!

    கேசம் திருவல்லா கால்கள் திருவாப்பூர்
    சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி -வாசனாய்
    நீளப் படுத்தவரே நீலபத்ம நாபரே
    கோலத் திருவுருவே காப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180716 Vatsalya – Canson 21.5×29.5inch mixed media (charcoal,pastel,acrylic and watercolour) -lr

    ”மாலோலன் பாடுகிறார் மாடை மடிதாங்கி,
    தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -காலேல(காலையில்)
    கேசவ் அனுப்ப கலிதீர்ந்து போனது
    வாசனையாய்(பிராரப்தம்,ஆகாமி….!) என்வெண்பா வாய்”….கிரேசி மோகன்….

    Share