கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

பாலகுமார் நாவலுக்கு ,பாரதம் செய்தவர்,
நீலகுமார் நிற்பது நீளகுமார்: -கோலகுமார்
கேசவ் வரைந்ததைக் கண்டு கவுரவர்கள்
பேச மறந்தார் பயந்து….!
சுருதி ஒலிக்குள், பரிதி ஒளிக்குள்
இறுதிமுதல் இல்லா இறைக்குள் -கருதி
துதிக்கும் முனிவர்தம் தேடலுக்கு எட்டா
ஸ்திதிக்குப் புகன்றேன் சரண்….!
பசுக்களை மேய்த்தோய் வசுதேவன் மைந்தோய்
விசுவமாய் எங்கும் விரிந்தோய் -அசையும்
அசையா பொருள்களுக்கு ஆதார மான
இசையே வணக்கம் உனக்கு…..கிரேசி மோகன்….!
பகவான் உவாச….!
————————————————-
”எங்கிருந்(து) ஆரம்பம் எங்கெதில் சங்கமம்
இங்கணம் இவ்வுயிரை நன்குணர்ந்தோர் -இங்கிலர்
ஆதலால் சோதரர்காள் வேதனை வேண்டாம்வல்
சூதினைக் கொல்லல் சிறப்பு”….கிரேசி மோகன்….!