180625 Vishwaroopam -Mahabharatham-cover for Shri Balakumaran’s book part II watercolour -Arches 300 gsm 10×14” (3 days)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாலகுமார் நாவலுக்கு ,பாரதம் செய்தவர்,
நீலகுமார் நிற்பது நீளகுமார்: -கோலகுமார்
கேசவ் வரைந்ததைக் கண்டு கவுரவர்கள்
பேச மறந்தார் பயந்து….!

சுருதி ஒலிக்குள், பரிதி ஒளிக்குள்
இறுதிமுதல் இல்லா இறைக்குள் -கருதி
துதிக்கும் முனிவர்தம் தேடலுக்கு எட்டா
ஸ்திதிக்குப் புகன்றேன் சரண்….!

பசுக்களை மேய்த்தோய் வசுதேவன் மைந்தோய்
விசுவமாய் எங்கும் விரிந்தோய் -அசையும்
அசையா பொருள்களுக்கு ஆதார மான
இசையே வணக்கம் உனக்கு…..கிரேசி மோகன்….!

பகவான் உவாச….!
————————————————-

”எங்கிருந்(து) ஆரம்பம் எங்கெதில் சங்கமம்
இங்கணம் இவ்வுயிரை நன்குணர்ந்தோர் -இங்கிலர்
ஆதலால் சோதரர்காள் வேதனை வேண்டாம்வல்
சூதினைக் கொல்லல் சிறப்பு”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *