தத்த குரு வெண்பாக்கள்….!
———————————-

அத்திரி இல்லாள் அனுசூயா தொட்டவுடன்
மொத்தவுரு ஆனார்கள் மூவிறையும் -இத்தரையில்
தத்தகுரு போலாமோ மத்தகுரு மார்களெலாம்
சித்தமொரு மித்தவரைச் சேர்….(1)….!

அத்தையுரு வற்ற அருவ சொரூபமாய்
சித்தமொரு மித்தென்றும் சிந்திக்க -தத்தகுரு
சூலம், டமருகம், சங்காழி ஏந்தியமூ
மூலம் முனியாய் முளைப்பு….(2)….!

வேதங்கள் நான்கும் விளையாடும் நாய்களாய்
பாதங்கள் பற்றிப் பணிந்திருக்க -ஓதுமயன்
தாணுமால் சேர்க்கையாய் தத்தகுரு தேவரை
காணமால் கொள்வீர்கண் காள்….(3)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *