ஸ்ரீ ரமண வசனாம்ருதங்கம்…..!

’பாலக்காட்டு மணி அய்யர்’’(காந்து )….!

—————————————————

குரு எத்துனை அவசியமோ, சீடன் அத்துனை முக்யம்….!
————————————————————————————————————-
எங்கள் குழு(கிரேசி கிரியேஷன்ஸ்) இயக்குனர், நண்பன் காந்துவுடன் டெலிஃபோனில் பேசிக் கொண்டிருந்தேன்….அப்போது அவர் ‘’பாலக்க்காட்டு மணி அய்யரைப்’’ பற்றி சிலாகித்து சுவையான அனக்டோட்ஸை பறிமாறினார்….மிருதங்கம் பலா மரத்தால் செய்வார்களாம்….உடனே நான் அப்ப அவர் ‘’பலாக்காட்டு மணி அய்யர்’’ என்றேன்….காந்து ரஸித்தார்….நிற்க இல்லை அமர்க….
உடனே பாரதிதாசரின் ‘’வேரில் பழுத்த பலா’’ நினைவுக்கு வந்தது….வெண்பாவுக்கு நல்ல ஈற்றடியாகப் பட்டது….இருந்தாலும் ‘’வேரில் பழுத்த விலா’’ என்று இருந்தால் மோனை சரியாக இருக்குமே, ஆனால் பொருள் சரியில்லையே என்று மூளையைக் கசக்கியபோது தோன்றிய வெண்பா….மாவீரன் அருச்சுனன் பேரில்….எண்ணங்களின் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்வதை ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி ‘’சேஷ்டை’’ என்கிறார்….வாழ்வதே சும்மா இருக்கத் தெரியாத ‘’சேஷ்டைதான்’’….’’சேஷ்டை’’ வெண்பாவைப் பார்ப்போம்….!

‘’தோள்வலி மிக்கவன், தீரன் தனஞ்ஜெயன்
கேள்விக் கணைதொடுத்துக் கீதையை, -வேள்வியாய்,
தேரில் அமர்ந்தவன் தாஸனாய்ப்(சீடனாய்ப்) பெற்றதால்,
போரில் பழுத்த பலா’’….கிரேசி மோகன்….!

”மதிய உதயம்”….
———————————

சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு….!
பகவானுக்கு மிகவும் பிடித்த நூல்கள், ”யோக வாசிஷ்டம்”,
”ரிபு கீதை”, ”திரிபுரா ரஹஸ்யம்”…..!

”பூத,வர்த்த மான, பவிஷ்யத், இவைமூன்றும்,
ஈதனை ஒத்த இடையூறாம், -சாதகனை,
மொய்த்து மொசுக்கிடும், முக்திப் பழம்தனை,
வைத்தியம்”வா சிஷ்ட வகுப்பு”….கிரேசி மோகன்….!

வகுப்பு என்று முடித்தமைக்கு காரணம், ”என்னதான் புத்தகத்தில்
படித்தாலும், குருமூலம்(TEACHER) அறிந்து கொள்வதே சிலாக்கியம்….பூதப் பிரதிபந்தம்-இறந்தகால பந்தங்களினால் ஏற்படும் இடையூறு….வர்த்தமான, பவிஷ்யத்-முறையே -நிகழ்கால,
எதிர்கால இடையூறுகள்….வாசிக்கவும் வித்யாரண்யர் எழுதிய ”பஞ்சதசீ”….இதை உறுதி செய்வது ”வாசுதேவ மனனம்”….!

AVM RAAJU வுக்கு பதில் மெயில் வழி….!
—————————————————————————–

.ராஜு, இந்தக் குழப்பம்(திருக்கு) எனக்கும் உண்டு….இதை நான் வேடிக்கையாக எழுதியுள்ளேன்….!
குரு எத்துனை அவசியமோ, குருவை சீடன் தேடிக் கண்டு பிடித்தல் அத்துனை முக்யம் என்பார் ஸ்ரீ ரமண மஹரிஷி அவர்கள்….!இதை நான் வேடிக்கையாக எழுதியுள்ளேன்….!
ZENபா….!
—————————-
ஒரு சீடன் குருவைத் தேடிப் போனான்…குருவைக் கண்டதும் சீடன்….
சீடன் -குருவே எனக்கு வழி காட்டுங்கள்….
குரு -என்னைத் தொடர்ந்து வா….
(சீடன் குருவைத் தொடர்ந்து செல்ல….திடீரென்று நரகம் வந்தது….சீடன் அதிர்ந்து போய்….)

சீடன் -குருவே தாங்கள் ZEN தானே….(கேட்க)
குரு -(பயங்கரமாய் சிரித்து…) நான் YAMAHA டா குருமுட்டை….(என்றார்)….

ரமணர் சொல்லுவார் யாருடைய சன்னிதியில் உனக்கு நிம்மதி ஏற்படுகிறதோ(எந்த உபதேசமும் இல்லாமல்)அவரே குரு….

”சன்னிதி மாத்திரத்தில் சத்குருவைக் கண்டறிவாய்
அன்நிதி கண்டபின் ஐம்புலனை, -கொன்னுதீர்:
யாதுஊ ரேதான் யாவரும் கேளிர்தான்
தீதொடு நன்றும் திருக்கு’’….கிரேசி மோகன்….

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *