’’கிரகணம்’’….!
”சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
கவர்ந்திடு மோவாயால் கவ்வி!, -சிவந்ததுமூன்(BLOOD MOON)
போக்கில் தடம்மாற, பூமி புகுந்ததால்
காக்காஊஷ் ஆச்சு கலை(சந்திரன்)’’….!
(அல்லது)
‘சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
கவர்ந்திடு மோவாயால் கவ்வி!,-உவந்திடும்,
அஞ்ஞானக் கேள்விக்(கு) அட!பதில் என்னவோ!,
விஞ்ஞானம் விட்ட வழி’’….!
’’அகந்தை கிரகணம் ஆன்ம நிலவுள்
புகுந்து பிடிக்கும் பளிச்சை, -உகந்துன்னுள்,
நானார் விசாரிக்க நம்மைவிட்(டு) ஓடுமே:
சோணா சலரமணன் சொல்’’….கிரேசி மோகன்….!