Author: கிரேசி மோகன்

  • பெருமாள் திருப் புகழ்….!

     

    தனனா தனத்த தனனா தனத்த
    தனனா தனத்த -தனதான
    ————————————————–
    பெருமாள் திருப் புகழ்….!
    “சிவனார் கொடுத்த சிலைநா ணிழுத்து
    சிலைஜா னகிக்கு -மணமாலை
    இடுரா மபத்ர ரகுவீ ரகத்ய
    மறைதே சிகர்க்கு -பரிவான,
    அவமா னமுற்று அரியே யெனக்கை
    அணிசே லைவிட்டு-அவள்கூவ
    சரணா கதிக்கு பதிலாய் உடுத்த
    வளர்சே லைகொட்டி -அருள்வோனே
    கவணால் விரட்ட பரண்மேல் இருக்கும்
    குறமா தணைக்க -மயலேறி
    கிழவே டமுற்று வருவே லவர்க்கு
    முறைமா மசக்தி -அபிராமி
    சிவகா மிசுத்த பரிபூ ரணிக்கு
    வெகுநே சமுற்ற -முதியோனே
    அலைபாற் கடற்குள் விடசே டமெத்தை
    வளர்யோ கநித்ரை -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    வாவ் பிரில்லியண்ட் கேசவ்….!
    ——————————————————————
    ”தூண்பிளந்த சிங்கம், தொடையில் இரணியன்
    நானகந்தை நீவிடும் நாரணர் -ஆண்குழந்தை
    உத்தமர் சேவடி ஊறுகின்ற மாடாக
    நித்தம் இருந்திடுவாய் நீ’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”சபரி கிழமவர் சத்வக் கனியை
    அபரிமித அன்பை அயோத்தி -நபரவர்
    ராமரின் பின்வந்தோன்(கண்ணன்) ராப்பகலாய் கீதமாம்
    சாமரஸம்(சாம கானம்) மாட்டின் செவிக்கு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180424 -Trivikrama-Universe in three steps-lr-27.9×35.6 (11×14”) Jambavan circumambulates. Brahma hails Vamana.

    ”ஜாம்பவான் சுற்றுகிறார் ஜாண்பிள்ளை வாமனனை
    தாம்பில் பிணைந்த திருமாலை -மாம்பழ
    வாயனின்(பாரதியார் பிரயோகம்) காலை வணங்குகிறார் அன்னத்தன்,
    ஆயரா கொக்கா அரி(றி)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180423 – Tvameva -A4 -icam -lr

    ’’கன்றுபோல் என்றுமே கண்ணனே காப்பாக,
    சென்றவர் சேவடியில் சேர்ந்திடு-நன்றிதைச்,
    சொன்னது கேசவ், சரண்புகு சென்னியால்,:
    ஒண்ணது ஒண்ணாக்கும் ஒண்ணு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180422 -RAgasudhArasa – icam -27.9×35.6 (11×14”) watercolour -Krishna philharmonic lr

    ”ராக சுதாஅரசன் யோகப்பா லாழியெண்ணி
    தாகமாய் ஆடுகிறார் தாண்டவம் -ராகமாய்
    புல்லாங் குழலின்றி பாடுகிறார் கண்ணபிரான்
    பில்ஹார்ம னிக்கிலோர் பாட்டு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180421— Mahavishwas- Draupadi -lr – (Surrender) A4

    ’பாஞ்சாலி மானத்தை போர்துணியால் காத்தனை
    ஏஞ்சாமி யானையாய் எத்தினாய்(உதைத்தல்), -காஞ்சாலும்(ஏழ்மையால்)
    கம்பீரம் காட்டும் கவியென்(று) இளப்பமா!
    நம்பீஸர்(மயிலாப்பூர் ஃபேமஸ் வெண்ணைக் கடை) வெண்ணை(பாரதியார்) நினக்கு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180420 -Rukmani Satyabhama Tulasi-lr A4

    பாங்கி முதற்கொண்டு பாமாக்கள் ருக்மணிகள்
    தாங்கிய திண்தோளா, தாமோதரா, -தூங்கிடும்
    போதும் துளஸிப் ப்ரியா, அறி(ரி)வாயோ
    ஆதி ஹரப்ப்ரியா ஊது’’(கரகரப்ப்ரியா போல் ஹரஹரப்ப்ரியா ராகம் குழலில் ஊது)’’….கிரேசி மோகன்…..!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    I had simply to go to the meeting and make NAMASKAR to the audience as NARAYAN and wait and speech would come to me from some other source than the mind, as though it were dictated….And ever since all speech, writing ,thought, and outward activity have to come to me from the same source above the brain -SRI AUROBIDO….!

    ’’வாக்கும், எழுத்தும்.வரும்பார்,உனக்கது
    காகும்நா ராயணர்தம் கைங்கர்யம், -பாக்கொடு,
    சுண்ணாம்பும்,பச்சையும்(வெற்றிலை) சேர சிவப்பாகும்,
    கண்ணாம்பாள்(கண்ணன் & அம்பாள்-காளி) மேனி கலர்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180416 Tulasi priyam -watercolour-lr-A4

    சீதக் களபமும், ஸ்ரீவத்ஸ மச்சமும்.
    போதமர்(போது -மலர்) மங்கையும், பூந்துழாயும்(துளஸிப் பிரியர்), -வாதிடும்
    வண்ணம் இடமின்றி ,வாய்த்தமணி மார்பனை
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    ”மாடத் திலேதுளஸி மாடத் திலேகண்ணன்
    மாடத்தன் கால்மேய, மன்னனவன் -சூடி
    திரியாய் மணந்தாள், திருவில்லிப் புத்தூராள்
    பிரியத்தில் உட்கார்ந்தார் பார்’’….கிரேசி மோகன்….!

    ஆண்டாள் ‘’திருத்துழாய்(துளஸி) வனத்தில்’’ பெரியாழ்வாரால்
    கண்டெடுக்கப் பட்டவள்…..!
    சுகந்த துளசி சிலிர்க்க வலிமை
    மிகுந்த இருதோளில் பூணும் -முகுந்தன்
    நிதர்ஸனம் என்று நடப்போர் வழியை
    சுதர்ஸனம் காக்கும் சுழன்று….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180415 Tvameva sharanam-watercolour -A4 lr

     

    ’’காலைக் கடன்திரு மாலைக் கடனாக்கி,(வெண்பா எழுதுதல்….!)
    காளை(கண்ணன்) யுடன்கன்றைக் காட்டுவோய், -பாலிலே(பாற்கடலில்)
    நித்ரை புரிந்திடும் நீலமேகம் தொட்டிடும்
    சித்ரா பவுர்ணமிகே சவ்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180414 New forever lr 27×35 cms watercolour| sketched Nov 2017

    ”விளம்பி வருடம் வழிபிறக்கும் பாராய்,
    அலம்பு மனதின் அழுக்கை -குளம்பதில்(கண்ணன் திருவடியில்)
    மேய்ந்தே வருடுடிடும் மாடாக பூமியில்
    ஆய்ந்தே(ஆராய்ந்து) கிடப்பாய்’நான் ஆர்’(யார்)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180413 Arjuna Dhruva-DWA series A4 -icam -lr
    “Just as Krishna caressed his conch on Dhruva’s cheek…”

    உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
    துருவன் விழிகள் திறக்க -அருவமது(திருமால் அலயஸ் கண்ணபிரான்)
    கூரியமூக் கர்புள்ளை(கருடனை) காண்டீபர்க் கா(ய்)இறங்கித்(இரங்கி)
    தேரேறி கீதை தொடுப்பு(வகுப்பு)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180412 Inspiration DWA lr – A4

     

    ‘விண்ணில் பறக்கின்றார் வீரர் ஹனுமான்பார்,

    மண்ணில் வெற்றியுண்டு மைந்தனே , -கண்ணன்என்

    INSCRIPTION(இன்ஸ்க்ரிப்ஷன்) கீதைகேள், இப்ரெஸ்ப்பி ரேஷனேன்(PERSPIRATION)

    INSPIRATION(இன்ஸ்பிரேஷன்(INSPIRATION) நானுனக்காய்  இங்கு’’….கிரேசி மோகன்….!
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180411 -Controlling the mind-DWA -lr watercolour A4

    நெஞ்சறையில் ஐம்புலன்கள் நானகந்தை மீட்டான்ம
    அஞ்சறைப் பெட்டியில் இட்டிடு -வெஞ்சிறையில்
    போட்டாலும் வைகுண்டம் போயும், மனதுக்கு
    மாட்டாது மாரீஸ மான்’’….!
    அடியேன் உவாச….!
    ——————————————–

    மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக
    கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்
    அந்திம நாளேனும் அய்யகோ குந்திசேயே(குந்திமகன் -குந்திமவன்)
    நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….!

    Share