கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

நெஞ்சறையில் ஐம்புலன்கள் நானகந்தை மீட்டான்ம
அஞ்சறைப் பெட்டியில் இட்டிடு -வெஞ்சிறையில்
போட்டாலும் வைகுண்டம் போயும், மனதுக்கு
மாட்டாது மாரீஸ மான்’’….!
அடியேன் உவாச….!
——————————————–
மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக
கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்
அந்திம நாளேனும் அய்யகோ குந்திசேயே(குந்திமகன் -குந்திமவன்)
நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….!
