கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

சீதக் களபமும், ஸ்ரீவத்ஸ மச்சமும்.
போதமர்(போது -மலர்) மங்கையும், பூந்துழாயும்(துளஸிப் பிரியர்), -வாதிடும்
வண்ணம் இடமின்றி ,வாய்த்தமணி மார்பனை
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!
”மாடத் திலேதுளஸி மாடத் திலேகண்ணன்
மாடத்தன் கால்மேய, மன்னனவன் -சூடி
திரியாய் மணந்தாள், திருவில்லிப் புத்தூராள்
பிரியத்தில் உட்கார்ந்தார் பார்’’….கிரேசி மோகன்….!
ஆண்டாள் ‘’திருத்துழாய்(துளஸி) வனத்தில்’’ பெரியாழ்வாரால்
கண்டெடுக்கப் பட்டவள்…..!
சுகந்த துளசி சிலிர்க்க வலிமை
மிகுந்த இருதோளில் பூணும் -முகுந்தன்
நிதர்ஸனம் என்று நடப்போர் வழியை
சுதர்ஸனம் காக்கும் சுழன்று….!