Author: ரா. பார்த்த சாரதி

  •  சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!

    ரா. பார்த்தசாரதி

    எழுபது  ஆண்டுகள் சுதந்திரக்  காற்றைச் சுவாசித்தோமா?
    இன்றைய நாட்டின் நிலைமை அறிந்து  செயல்படுகின்றோமா?
    எதிலே முன்னேற்றம் கண்டோம் என அறிந்தோமா?
    சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என உணர்ந்தோமா?!

    ஒரு பக்கம் மனித மேம்பாடு, தொழில் மற்றும் விஞ்ஞான  வளர்ச்சி
    மறுபக்கம்  காட்டையும்,  விளை நிலங்களையும் அழிக்கும் முயற்சி
    நிலங்களைக் கூறு போட்டு விற்கும் அவலத்தைத் தடுப்பாருண்டோ?
    அரசாங்கமே  இதற்குத் துணைபோனால் நீதி நிலைப்பதுண்டோ? 

    நடுநிசியில் பெண் பயமின்றி வருவதே உண்மைச் சுதந்திரம்
    பட்டப் பகலில் பெண் தனிமையில் வருவதே இன்று மிகக் கடினம்
    கொலையும், கொள்ளையும் பட்டப் பகலிலே நடக்கின்றதே
    சுதந்திரத்தின் பெயரில் நாடகம் நடத்தப்படுகின்றதே!

    பல தியாகிகளின் உயிர்  அர்ப்பணிப்பில்  சுதந்திரம் பெற்றோம்
    அந்தமான்மற்ற சிறைகளில் தியாகிகள்  பட்ட துன்பத்தை அறியோம்
    இதனை அறிந்தால் எல்லோர்க்கும் சுதந்திரத்தின் அருமை புரியும்
    சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை என உணர்ந்தாலே போதும்!

    சுதந்திரம் என்பது தந்திரமாகச் செயல்படுவது அல்ல
    பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது காகிதத்தில் மட்டும் அல்ல
    நாட்டின் உரிமைச் சாசனம் எழுதிவிட்டால் பெருமை அல்ல
    தனிமனிதனின் உரிமையும், மேம்பாட்டையும் கொண்டதாகும் அது!

    வேற்றுமையில் ஒற்றுமை மாநிலங்களிலே நிலவுகிறதா?
    ஜாதி, இனம் காட்டிச்  சலுகைகளைப்  பெற நினைப்பதா?
    நாட்டின் பொருளாதாரமும், நாணயத்தின் மதிப்பும் உயர்ந்ததா?
    நாட்டில் நதிநீர்ப் பிரச்சனையும், குடிநீர்ப் பிரச்சனையும் தீர்ந்ததா

    இளைஞர்களே!  உங்கள் கையில்தான் சுதந்திரத்தின் வளர்ச்சி
    கொடுமைகளையும், அநீதிகளையும் கண்டு  எழுகின்ற எழுச்சி
    தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவு கூருங்கள்!
    நாட்டினை நல்வழிப்பாதையில்  அழைத்துச் செல்லுங்கள்!

     

     

    Share
  • வெள்ளைப் பனி மலை

    ரா.பார்த்தசாரதி

    Mt Rainer

    பனிபடர்ந்த மலையின் மேலே

    அழகினை கண்டு நின்றேன் சிலைபோலே ,

    பச்சை வண்ணப்போர்வை மலைமகளை சுற்றிட,

    நடுவே சுற்றி, நெளிந்து வாகனங்கள் சென்றிட !

    பச்சைவண்ண என்றும் கண்களுக்கு குளிர்ச்சி 

    அதுவே மனிதனின் மனதிற்கு தரும் புத்துணர்ச்சி !

    இயற்கை அன்னையின் அழகினை ரசித்தோமே  

    மனமகிழ்ச்சி கொண்டு மனதினில் பூரிப்படைதோமே!

    மலைமேல் கதிரவன் ஒளி பட்டாலே 

    வெண்ணிற பனிமலை தன் வெண்ணிறாடை நீக்காமலே !

    ஒளிர்ந்து தென்றல் காற்று வீசியதே 

    அருவியும், சிற்றோடையும் நடனமாடி வந்ததே !

    இயற்க்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமே 

    எனது உனது என்பதெல்லாம்  இடையில் மாறும்  எண்ணமே ! 

    Share
  • நினைக்கத் தெரிந்த மனமே

    ரா.பார்த்தசாரதி

     

    ஆயிரம் எண்ணங்கள் உதயம் நம் மனதினிலே

    எண்ணங்களும், ஆசைகளும், தோன்றும் நம் நெஞ்சத்தினிலே,

    அலை பாயும், எண்ணங்களை  வடிகாலாய் வடித்து

    பழைய திண்ணை பேச்சையும் சற்றே மறந்தோமே !

     

    உழைத்து களைத்த  வேளையில் உறவுகள் சூழ

    உணர்வுகளை பகிர்ந்து  மனம் தெளிந்தபோது

    தொலை காட்சிக்கு முன், கணிணிக்கு பின்

    நேரத்தை பிறர்க்கென நல்ல நேரத்தை வீணடித்தோமே!

     

    நல்ல நேரத்தை வீணடித்து, குறிக்கோள்  இல்லா நிலைமை,

    நேரம் நம்மை விழுங்கச் செய்வதே இக்கால  கொடுமை,

    கைபேசியும், வலைதளமும், நம்மை கடத்தும்மே

    எதையும், நினைத்துப் பார்க்கும் தகைமை இழந்தோமே !

     

    இன்றைய நாகரிகத்தின் பொருள்  ஆடம்பரம்

    இது  எழுதா சட்டமாகி   நம் உடைமையாகியதே ,

    நேர்மையையும், உழைப்பின் மேன்மையையும் மதிப்பதில்லை,

    கசங்காமல் காசு பணம் சேர்க்கத் தவறுவதில்லை !

     

    இருப்பதைக்  கொண்டு  ஆனந்தம்  காண மறுக்கின்றோமே

    பேராசையால் நற்குணத்தை தீயிலிட்டு பொசுக்கின்றோமே

    நேசத்தையும், பாசத்தையும் வெளிப்படுத்த நேரமில்லையே

    சுகம் என்பது நமக்கு   வரமாய் என்றும் கிடைப்பதிலையே !

     

    மனித நேயத்தை இழந்தே வாழ்க்கையினை தொலைகின்றோம்,

    பகிர்தல், பாசம்,அரவணைப்பு,  பண்பின் அடித்தளம் என்கிறோம்

    உள்ளங்களால்   உயர்ந்த  சமூகமே வரலாற்றில் ஏற்படட்டுமே

    நமது  வாழ்க்கை முழுதும் இன்பமும்,உறவும் மிளிரட்டுமே !

     

    Share
  • உலக யோகா தினம்

     

     

    ஆய கலைகள் அறுபது நான்கு கலையே
    யோகாவும் இதனில் அடங்கும் கலையே
    யோகிகளும், துறவிகளும் வளர்த்த கலையே
    நமது நாட்டினில் தோன்றிய கலையே !
    அனுதினம் யோகாசனங்களை செய்ய பழகுங்கள்
    அது உடலினை உறுதி செய்து, நோய் நீக்கும் இடமாகும் 1

    உடற்பயிற்சியும், நடை பயிற்சியும் தினமும் மேற்கொள்ளுங்கள்
    அது இளமை என்னும் ரகசியம் தோன்றும் இடமாகும் !

    யோகாசனங்களில் பல வகைகள் உண்டு
    சில யோகாசனங்களே மிகுந்த சிறப்புண்டு
    சிறுவர் முதல், முதியோர்கள் வரை யோகா பழகலாம்
    அனுதினம் இதனை கடைபிடித்தால் நோய்யின்றி வாழலாம் !

    நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,
    யோகாசனங்களை செய்து உடல் நலனை பேணுங்கள்
    யோகாசனங்களின் நன்மையினை உலகிற்கு எடுத்துரையுங்கள்
    இதுவே உலக யோகா தினம் அறிவுறுத்தும் கருத்தென உணருங்கள் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • பொன்னான வாழ்வு

    ரா.பார்த்தசாரதி

     

    உண்மை உறவுகள் கிடைப்பது அறிதன்றோ !

    கிடைத்திட்ட உறவினை இழப்பது கொடிதன்றோ

     

    நிழலுக்கு ஒரு போதும் மதிப்புண்டோ

    நிஜமில்லா உறவுகள் என்றும் நிரந்தரமுண்டோ !

     

    சொல்லும், பேச்சும் என்றும் சொந்தமில்லை

    வில்லற்ற அம்பு எய்யப்படுவதில்லை !
    பொய்மைக்கு என்றும் புகழிடம் இல்லை

    பொறுப்பில்லா பிள்ளைக்கு என்றும் வாழ்க்கையில்லை !
    பொறுமையோடு இருப்பவனுக்கு என்றும் தொல்லை இல்லை

    செல்வத்துடன் வாழ்பவனுக்கு இரக்கம் என்பதில்லை!
    வெகுளியாய் திரிபவனுக்கு வாழ்வில் வளமில்லை

    வளமோடு வாழ்ந்திட தகுதியான மனிதன் கிடைப்பதில்லை!
    தோல்வி ஒன்றே சந்தித்தவன் என்றும் சோர்வதில்லை

    வெற்றி கண்டவன் தலைகனத்தால் அழிவு உண்டாகாமலில்லை !

     

    சொல்லொன்றும் செயலொன்றும் என வாழ்வது,

    பிறர்சொல் படாமல் மடிவது பெரிது !

     

    பிறர் மனம் நோகாமல் வாழ்க்கை நடத்துவது நல்லது

    பிறர் வளம் செழிக்க பாடுபடுவதே நல்லது !
    பின் நாளில் எந்நாளும் பொன்னாக மாறிடுமே

    உந்தன் வாழ்வும் சீரும், சிறப்புடன் இருந்திடுமே !

    Share
  • கோடை மழை

     

    கடுங்கோபம் கொண்டு கதிரவன் சினந்து எழுந்தான்

    தன் வெப்பத்தை கடுமையாய் உமிழ்ந்தான்

    சில இடங்களிலே முகில் சூழ்ந்து மழை பொழியும்

    வீதிகள் தோறும் மழை நீரோடும் !

    கோடை மழை வெப்பத்தை தணிக்கும்

    மக்களின் தாகத்தை சற்றே தீர்க்கும்,

    கோடை காலத்திலே குற்றால அருவிலே

    நீராடும் போது மனம் மகிழும் வேளையிலே !

    வெய்யிலில் அலைபவனுக்குத்தான் நிழலின் அருமை தெரியும்

    குளிர் பானங்கள் எல்லாம் தாகம் தீர்க்கும்,

    கோடை மழை வந்தாலும் சுகமாய் நனைவேனே

    மழை வந்தாலே உள்ளத்தில் மகிழ்ச்சி கொள்வேனே !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • ஒரு தாயின் நினைவு!  

    -ரா.பார்த்தசாரதி

    பண்டிகை நாட்களில் யாரோ
    உணவு கொடுத்து உதவுகிறார்கள்! 
    தலைவாழையில் விதவிதமான 
    உணவு வகைகள் பல… 

    வடையைப் பார்த்ததும்  பெரிய 
    மகனுக்குப் பிடிக்குமே என்றது மனசு! 

    மெல்லிய பூரியும், சப்பாத்தியும்
    மகளுக்குப் பிடிக்கும் என்றது மனசு! 

    இலையில் போட்ட பருப்பும், நெய்யும்
    பேரனுக்குப் பிடிக்கும் என நினைத்தது! 

    அப்பளம்  இளைய மகளுக்குப் பிடிக்குமே 
    என எண்ணியது  மனசு! 

    பால்பாயசம் மறைந்த கணவனுக்கு 
    மிகவும் பிடிக்குமே என்றது உள்ளம்! 

    இப்படி எல்லாவற்றையும் பார்த்துச் 
    சாப்பிடப்  பிடிக்காமல் தன் விருப்பங்களைத் தள்ளிவைத்து 
    நினைவலையில் நீந்திக்கொண்டு, தன்னலமற்ற தனிமரமாய் 
    முதியோர் இல்லத்தில்  வசிக்கிறாள்  ஓர்  தாய்! 

    தாய்மனம்  பித்து, பிள்ளைகள் மனம் கல்லு 
    யாவரும் அறிந்த  பழமொழியன்றோ!

     

     

    Share
  • தொழிலாளர் தினம்

     

    ரா.பார்த்தசாரதி

     
    தொழில்கள் சிறக்க தொழிலாளர்கள் தேவை

    பொருட்கள் செய்யவும் தொழிலாளர்கள் தேவை

    எந்திரங்கள் செய்தாலும் தொழிலாளி தேவை

    அதனை இயக்கவும் ஒரு தொழிலாளி தேவை !

     

    தொழில் வளர்ச்சிக்கு தொழிலாளி முக்கியம்

    அவர்கள் இல்லை எனில் உற்பத்தி குறையும்.

    அவர்களை நல்ல முறையில் நடத்துங்கள்

    அவர்கள் நலனில் அக்கறைக் காட்டுங்கள் !

     

    தொழிலாளியும் சாதிமதமற்ற மனிதன்தான்

    அவனுக்கும் வீடு வாசல்என்பதுண்டு

    முதலாளிகள் பலர் கசக்கிப் பிழிவதுண்டு

    நியாத்தை கேட்க அவர்களுக்கு உரிமையுண்டு

     

    தொழிலாளி மெச்சிய ஒரு முதலாளி இல்லை

    முதலாளி மெச்சிய ஒரு தொழிலாளி இல்லை

    என்றும் முதலாளி, தொழிலாளி முரண்பாடு

    கோரிக்கைகள் ஏற்க தொழிலாளி போடும் கூப்பாடு

     

    கார்ல்மார்க்ஸ் தொழிலாளர் இனத்தை மேம்படுத்தினார்

    தொழிலாளர்க் கென தனி கொள்கைகளை வகுத்தார்

    மே முதல்தேதி தொழிலாளர் தினமாய் கொண்டாடுகிறோம்

    தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற பாடுபடுவோம்

     

    Share
  • வாக்காளர்களே சற்றே நினையுங்கள்

     

    ரா.பார்த்தசாரதி

     
    தேர்தல் வந்தால் மாறுதல் உண்டு

    சூழ்ச்சிகளில் சிறந்த வேட்பாளர் உண்டு

    மக்களிடையே பல வாக்குறுதிகள் கொடுப்பதுண்டு

    தேர்தல் என்பதே ஒரு நாடக மேடை என சொல்வதுண்டு !

     
    கட்சிக்கு செய்ததை விட தொகுதிக்கு என்ன செய்வாய்

    மாதம் ஒரு முறை மக்களை நேரில் சந்திப்பாயா

    மக்கள் குறைக் கேட்டு தீர்ப்பாயா

    இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுவாயா !

     
    மக்களே வாக்கினை அட்சயப் பாத்திரமாக நினையுங்கள்

    அதை பிச்சை இட்டு பிச்சைக்காரனாக நிற்காதீர்கள்

    பணம் கொடுப்பவர்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள்

    படித்த நற்பண்போடு உள்ளவர்களுக்கே வாக்களியுங்கள் !

     
    அரசியல் ஆதாயம் தேடுபவர்களை புறக்கணியுங்கள்

    மக்களை பலிகடா ஆக்கும் வேட்பாளரை எதிர்த்திடுங்கள்

    வாக்கினை பொன்னாகக் கருதி வாக்கு அளித்திடுங்கள்

    நல்ல தலைவனை நியமித்து நாட்டிற்கு நலம் சேர்த்திடுங்கள் !

    Share
  • இந்தியக் குடியரசு!

    -ராபார்த்தசாரதி

    அறுபத்தாராம்  ஆண்டு   குடியரசு தினத்தைக்  கொண்டாடுதே,
    இந்திய    நாடும்   உலகளவில்     வல்லரசு    ஆனதே ,
    உலகளவில்  நாம்   இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறோமே
    வேற்றுமையில்  ஒற்றுமை  என்பதைக்  காண்கிறோமே! 

    இயற்கைச்  சீற்றம்  அடைந்து   வெள்ளம்  பெருகியதே Republic-Day
    நாட்டுக்கு  நாடு  உதவிக்கரம்  நீட்டியதே,
    இந்தியன்  என்று  பெருமிதம் கொள்வோமே
    நாட்டு  நலனில்  அக்கறை கொள்வோமே! 

    குடியரசு நாடாய் திகழ்ந்து, பல திட்டங்கள் தீட் டுதே
    நாட்டின் முன்னேற்றதிற்கும் , அக்கறை காட்டுதே
    ஒற்றுமை எனும் பாலம் மாநிலங்களிடையே வளர்கின்றதே,
    மொழிகள் பலவாயினும் ஒற்றுமை   ஓங்குதே ! 

    நாடு  உனக்கு என்ன செய்தது எனக்  கேட்காதிர்கள்
    நீங்கள் நாட்டிற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள்,
    நாடு வளம்பெற  ஒற்றுமையுடன்  பாடுபடுவோமே,
    பிற  நாட்டிற்கு  எடுத்துகாட்டா ய் என்றும் விளங்குவோமே! 

    ஜனநாயகத்தின்  குடைக்கீழ்   வளரும்  நாடு,
    கலாசாரத்திலும்ஆன்மிகத்திலும்  சிறந்த நாடு,
    பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடு,
    ணையற்ற  ந்ததியுடன் திகழும்  இந்தியா  எனும் நாடு!

     

     

    Share
  • பொங்கல் பண்டிகை! 

    -ரா.பார்த்தசாரதி 

    உத்தராயணம்  உதித்துவரும் காலம்
    உதய சூரியனை வழிபடும்  காலம்
    உழவர்கள் விளைச்சலைக் கொண்டாடும் காலம்
    தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக்காலம்! pongal

    உழவர்கள்  உவகையுடன் கொண்டாடும் பண்டிகை
    விவசாயமும், உழவர்களும் பாதிப்பு அடைந்தது வெள்ளத்தாலே,
    திறமும், உறுதியும் கொண்டு வெற்றி காண்போம் உழைப்பாலே,
    இயற்கை உரமும், புதுமை புகுத்தி வெற்றி காண்போம் விவசாயத்திலே!

    உழவன் சேற்றினிலே இறங்கினால்தான் நமக்குச் சோறு!
    நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு!
    விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு  என நினைத்திடுவோமே,
    விவசாயி  நலனில் அக்கறை கொண்டு  உதவி செய்திடுவோமே!

    கரும்பின் கணுவில் கரும்பு  துளிர்த்து  வளர்ந்திடுமே!
    உழவன் உழைப்பாலே விவசாயம் வளர்ச்சி அடைந்திடுமே!
    விவசாயிக்கு முக்கியப் பண்டிகை பொங்கல் திருவிழா!
    சூரிய பகவனை நினைந்து கொண்டாடும் திருவிழா!

    பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகிப்பண்டிகை
    பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கனுப் பொங்கல்
    கால்நடைகளுக்காகக்  கொண்டாடும்   மாட்டுப் பொங்கல்
    உறவும், நட்பும் பரிமாற்றம் கொள்ளக்  காணும் பொங்கல்!

    எத்துயர் வரினும் துவளுதல் கூடாது!
    உழவன் மனம் என்றும் தளர்ச்சியுறக்கூடாது!
    கரும்பும், பொங்கலும் இறைவனுக்குப் படைப்போமே!
    குடும்பத்துடன் ’பொங்கலோ பொங்கல்’ எனக் கொண்டாடுவோமே!

     

     

    Share
  • மக்களைப் பெற்ற மகராசி!

    -ரா. பார்த்தசாரதி

    வாழ்வின் ஏட்டினைத் திருப்பிப்  பார்த்தேன்
    வலிதாங்கா இளமைபருவத்தை  எண்ணிப் பார்த்தேன்
    எழுதுகோலைத்  துணிவுகொண்டு கையில் எடுத்தேன்
    அன்னை சரோஜாவின் அருமையினை எழுதத் துணிந்தேன்!

    மக்களைப் பெற்ற மகராசியே  தாய்தான்
    குடும்பத்தின் ஆணிவேராய் இருப்பதும் தாய்தான்
    ஞானியும், துறவியும் போற்றும் தெய்வம்
    ஞாலம்  புகழ்ந்திடும் சிறந்த தெய்வம்!

    ஏழு பிறவி எடுத்து ஏழு பிள்ளைகள் பெற்றாய்
    ஏழு ஏழு ஜென்மத்திற்கு ஓர்  தொடர்பு வைத்தாய்
    ஏழிலே ஒன்றே ஒன்று  பெண் ஆனாலும்
    எல்லோரிடத்திலும் மாறா அன்பும் பாசமும் வைத்தாய்!

    ஓய்வின்றி உறக்கம்மின்றி  உன்உயிரைக் கூட
    ஒவ்வோர்  பிறவிக்கும் பணயம் வைத்தாய்
    உன்னை வையகம் எந்நாளும் போற்றுமே
    உன்அருமை அறியாப் பிள்ளைகளைத்  தூற்றுமே!

    பாசமுள்ள வேளையிலே காசு பணம்  கூடலியே
    காசுவந்த   வேளையிலே பாசம் வந்து சேரலியே
    பருவத்திலே நாங்கள் பட்டவலி தாங்கலியே
    வார்த்தையிலே வடிப்பதற்கு வார்த்தைகள் இல்லையே!

    பாசத்தோடு வாழ்வதுதான் தாயின் குணமே
    பாசத்துடன்  இருப்பதுதன் பிள்ளைகளுக்கும்  நலமே
    எனக்கென்று துன்பம்வந்தால் உனக்கென்று வேறு பிள்ளையுண்டு
    உனக்கென்று துன்பம் வந்தால் எனக்கென்று வேறு தாயுண்டோ?

    தாயைவிடச்  சிறந்த தெய்வம் இல்லை
    திசை நான்கும்  அவள்போல் எவரும் இல்லை
    தாயின் பெருமையினைச் சொல்ல வார்த்தையில்லை
    தியாகச்சுடரே  தாயுருவம் மனதினின்றும் மறைவதில்லை!

    இளமையில் ஸ்பரிசம்  முதுமையில் பாசம்,
    என்றும் உறவின்  சிறந்த பந்தபாசம்
    இளமையில்  நான் உனக்கொரு குழந்தை
    முதுமையில் எனக்கு    நீயொரு   குழந்தை!

    வாழ்க்கைப்  படகினிலே  நீயொரு  துடுப்பு
    எங்கள்  பிறப்பே  உன் படைப்பு
    எங்கள்  வளமே உன் சிறப்பு
    எங்கள்  நினைவே  பாசத்தின் பிணைப்பு!

    பூமியைவிடச் சிறந்தவள் தாய்
    ஆகாயத்தைவிடச்  சிறந்தவர்  தந்தை
    பூவிலே சிறந்தது  மல்லிகை ரோஜா
    எங்கள் தாயின் பெயரோ சரோஜா!

     

    Share
  • நீங்கள் எப்படி இருப்பீர்கள்?

    –ரா. பார்த்தசாரதி.

     

    நீங்கள் எப்படி இருப்பீர்கள், நீங்கள் எதை இழப்பீர்கள்!!

    who

     

     

    அறிவு ஆற்றலுடன் பேசினால், அறிவாளியாக இருப்பீர்கள்!
    சிந்தித்துப் பேசினால், சிறப்புடன் இருப்பீர்கள்!
    நயம்பட பேசினால், நல்லவனாக இருப்பீர்கள்!
    பண்புடன் பேசினால், பயன் அடைபவனாக இருப்பீர்கள்!
    பொருத்தமாகப் பேசினால், பாரட்டத்தக்கவராக இருப்பீர்கள்
    பொறுமையாகப் பேசினால், போற்றப்படுவராக இருப்பீர்கள்!

    அதிகமாகப் பேசினால், தன் மதிப்பை இழப்பீர்கள்!
    ஆணவமாய் பேசினால், அன்பை இழப்பீர்கள்!
    கடுமையாகப் பேசினால், நட்பை இழப்பீர்கள்!
    கோபமாகப் பேசினால், குணத்தை இழப்பீர்கள்!
    வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பீர்கள்!
    பொய் பேசினால், நற்பெயரையே இழப்பீர்கள்!

    நல்லதே பேசுங்கள், நல்லதே செய்யுங்கள் … நன்மை அடைவீர்கள்!

    Share
  • பிரியமானவளே!

    -ரா.பார்த்தசாரதி

    திருவிழாவில் மாவிலைத் தோரணம் கட்டி
    அழகாக அலங்கரிக்கக் கண்டேனே,
    வானம்  எனும் வீதியிலே நிலவும்,
    நட்சத்திரங்களும் மின்ன
    அவைகள் என்னைக் கவர்ந்ததே!

    தோரணத்தில் ஆங்காங்கே  பூக்களும்,
    இலைகளும் செருகியதே ஓர்  அழகு,
    உனது நறுமணமிக்க பார்வை என்னை விழுங்கியதே
    நீ நீர்தெளித்துக் கோலமிடும் பெண்களுடன் நின்றேன்,
    கோலத்தை ஒளிப்படம் எடுக்கும்போது என்னை ரசித்தாய்!

    ஆடி மாத அம்மனுக்குப் பொங்கல் இட
    சுள்ளிகளைப் பெண்களுடன் சேர்ந்து தீயில் இட்டேன்
    அந்த வெயிலில்  தூரத்துச் சூரியனாய் ஒளிர்ந்து நின்றாய்!
    சாமிக்குப் படைக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலைக் கொடுக்கும்போது
    என் இதயம் இனிக்கிறது என்றாய்
    உன் சொல்லால் உலகமே இனித்தது எனக்கு!

    மறுநாள் ஊருக்குக் கிளம்புகையில்
    திரும்ப எப்ப வருவே  எனும் ஏக்க
    விழியாலும், பார்வையாலும் என்னை நோக்கினாய்!
    பிரியமானவளே, அப்போதுதான் புரிந்துகொண்டேன்
    என் உடலை விட்டு என் உயிரை எடுத்துச் செல்கிறாய் என்று!

     

    Share
  • சுதந்திரம் எங்கே?

    -ரா. பார்த்தசாரதி 

    நள்ளிரவில்  சுதந்திரம் பெற்றோம்
    வெள்ளையனே வெள்ளியேறு  எனச் சொன்னோம்!

    அரசியல்வாதிகள்  ஊழலை மறைப்பதற்குச் சுதந்திரம்
    ஏன்  என்று கேட்பவர்களுக்குச் சிறையே  அடைக்கலம்!

    நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கித்தந்தவர்கள்  தியாகம்
    இன்று கெடுதல் நடக்காமலிருக்க ஓர் யாகம்!

    ஆன்மிகவாதிகளுக்கும் அரசியல்வாதிக்கும் சுதந்திரம்
    நல்லதைச் செய்பவர்களைத்   தடைசெய்யுதே  சுதந்திரம்!

    பறவைகள்  பறப்பதற்கு  என்றும்  சுதந்திரம்
    பாவைகளுக்கு  எதிலே  இன்று சுதந்திரம்?

    அறுபத்தொன்பது  ஆண்டுகள் ஆயினும்  வறுமைக்கோடு
    இன்றோ ஏழை  கூக்குரலின்  கூப்பாடு !

    கவிஞர்கள் முழக்கிய  சுதந்திரம்  எங்கே?
    இன்றும் பெயரளவில் இயங்குது இங்கே!

    இளைஞர்களே நீங்கள் சுதந்திரத்தை நெஞ்சினிலே நிறுத்துங்கள் !
    தாய்நாட்டின் முன்னேற்றத்திற்குக் கடினமாய் உழைத்திடுங்கள் !

    ஊழலையும் கொடுமைகளையும்  எதிர்த்துப் போராடுங்கள் !
    ஊக்கத்துடன் போராடி வெற்றி காணுங்கள் !

    சுதந்திரம் சும்மா வந்துவிடவில்லை  என நினையுங்கள் !
    அதுவே  பல தியாகிகளின்  தியாகம் என நினைந்திடுங்கள் !

    இன்று சுதந்திரத்தின்  உள்ளுணர்வு உங்களைத் தூண்டட்டும் !
    இன்றைய பாரத இளைஞர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் !

     

    Share