வாக்காளர்களே சற்றே நினையுங்கள்
ரா.பார்த்தசாரதி
தேர்தல் வந்தால் மாறுதல் உண்டு
சூழ்ச்சிகளில் சிறந்த வேட்பாளர் உண்டு
மக்களிடையே பல வாக்குறுதிகள் கொடுப்பதுண்டு
தேர்தல் என்பதே ஒரு நாடக மேடை என சொல்வதுண்டு !
கட்சிக்கு செய்ததை விட தொகுதிக்கு என்ன செய்வாய்
மாதம் ஒரு முறை மக்களை நேரில் சந்திப்பாயா
மக்கள் குறைக் கேட்டு தீர்ப்பாயா
இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுவாயா !
மக்களே வாக்கினை அட்சயப் பாத்திரமாக நினையுங்கள்
அதை பிச்சை இட்டு பிச்சைக்காரனாக நிற்காதீர்கள்
பணம் கொடுப்பவர்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள்
படித்த நற்பண்போடு உள்ளவர்களுக்கே வாக்களியுங்கள் !
அரசியல் ஆதாயம் தேடுபவர்களை புறக்கணியுங்கள்
மக்களை பலிகடா ஆக்கும் வேட்பாளரை எதிர்த்திடுங்கள்
வாக்கினை பொன்னாகக் கருதி வாக்கு அளித்திடுங்கள்
நல்ல தலைவனை நியமித்து நாட்டிற்கு நலம் சேர்த்திடுங்கள் !
