பொங்கல் பண்டிகை!
-ரா.பார்த்தசாரதி
உத்தராயணம் உதித்துவரும் காலம்
உதய சூரியனை வழிபடும் காலம்
உழவர்கள் விளைச்சலைக் கொண்டாடும் காலம்
தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக்காலம்!
உழவர்கள் உவகையுடன் கொண்டாடும் பண்டிகை
விவசாயமும், உழவர்களும் பாதிப்பு அடைந்தது வெள்ளத்தாலே,
திறமும், உறுதியும் கொண்டு வெற்றி காண்போம் உழைப்பாலே,
இயற்கை உரமும், புதுமை புகுத்தி வெற்றி காண்போம் விவசாயத்திலே!
உழவன் சேற்றினிலே இறங்கினால்தான் நமக்குச் சோறு!
நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு!
விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு என நினைத்திடுவோமே,
விவசாயி நலனில் அக்கறை கொண்டு உதவி செய்திடுவோமே!
கரும்பின் கணுவில் கரும்பு துளிர்த்து வளர்ந்திடுமே!
உழவன் உழைப்பாலே விவசாயம் வளர்ச்சி அடைந்திடுமே!
விவசாயிக்கு முக்கியப் பண்டிகை பொங்கல் திருவிழா!
சூரிய பகவனை நினைந்து கொண்டாடும் திருவிழா!
பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகிப்பண்டிகை
பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கனுப் பொங்கல்
கால்நடைகளுக்காகக் கொண்டாடும் மாட்டுப் பொங்கல்
உறவும், நட்பும் பரிமாற்றம் கொள்ளக் காணும் பொங்கல்!
எத்துயர் வரினும் துவளுதல் கூடாது!
உழவன் மனம் என்றும் தளர்ச்சியுறக்கூடாது!
கரும்பும், பொங்கலும் இறைவனுக்குப் படைப்போமே!
குடும்பத்துடன் ’பொங்கலோ பொங்கல்’ எனக் கொண்டாடுவோமே!