-ரா.பார்த்தசாரதி

திருவிழாவில் மாவிலைத் தோரணம் கட்டி
அழகாக அலங்கரிக்கக் கண்டேனே,
வானம்  எனும் வீதியிலே நிலவும்,
நட்சத்திரங்களும் மின்ன
அவைகள் என்னைக் கவர்ந்ததே!

தோரணத்தில் ஆங்காங்கே  பூக்களும்,
இலைகளும் செருகியதே ஓர்  அழகு,
உனது நறுமணமிக்க பார்வை என்னை விழுங்கியதே
நீ நீர்தெளித்துக் கோலமிடும் பெண்களுடன் நின்றேன்,
கோலத்தை ஒளிப்படம் எடுக்கும்போது என்னை ரசித்தாய்!

ஆடி மாத அம்மனுக்குப் பொங்கல் இட
சுள்ளிகளைப் பெண்களுடன் சேர்ந்து தீயில் இட்டேன்
அந்த வெயிலில்  தூரத்துச் சூரியனாய் ஒளிர்ந்து நின்றாய்!
சாமிக்குப் படைக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலைக் கொடுக்கும்போது
என் இதயம் இனிக்கிறது என்றாய்
உன் சொல்லால் உலகமே இனித்தது எனக்கு!

மறுநாள் ஊருக்குக் கிளம்புகையில்
திரும்ப எப்ப வருவே  எனும் ஏக்க
விழியாலும், பார்வையாலும் என்னை நோக்கினாய்!
பிரியமானவளே, அப்போதுதான் புரிந்துகொண்டேன்
என் உடலை விட்டு என் உயிரை எடுத்துச் செல்கிறாய் என்று!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *