Author: ரா. பார்த்த சாரதி

  • வாஷிங்டனில் வசந்தம் !

    -ரா. பார்த்தசாரதி

    எங்களை வரவேற்றது வாஷிங்டன் விமான நிலையம்
    பன்னீர்த்துளியெனத்  தெளித்தது  பனித்துளி
    சற்றே தயக்கமும் நடுக்கமும் அடைந்தோம்
    அமெரிக்காவின் மழைத்துளிக்கா? பனித்துளிக்கா?

    இன்று வசந்தத்தின் வாசலில் நிற்கின்றோம்
    மலர்கள் பல நிறங்களில்  மிளிர்வதைக் காண்கின்றோம்
    மனிதர்கள்முகமலர்ச்சியுடன் வரவேற்பதைக்  கண்டோம்
    எங்கள் எண்ணத்தில் புத்துணர்ச்சி கொண்டோம்!

    பூத்துக் குலுங்கும்  புதுமலர்கள் அசையப்
    புதிதாய்த்  தளிர்த்துப்  புன்னகை புரிய
    மகிழ்ச்சியில்   நாங்கள்  பூரிப்பு அடைய
    வரவேற்றதே   வசந்தமே  வருக  வருக  என!

     

    Share
  • உலகத் தாய்ப்பால் தினம்!

    -ரா. பார்த்தசாரதி

    தாய்க்கு  மிஞ்சிய  தெய்வமில்லை
    தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமில்லை                   breastfeeding
    பிறந்த குழந்தைக்கு இதுவே  உணவு
    மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட உணவு !

    தாய்ப்பால் கொடுத்தால் பாசம் மிகும்
    தாய்ப்பால் இல்லாத குழந்தைக்கு நோய் மிகும்
    புட்டிப்பாலை அதிகம்  கொடுக்காதீர்
    குழந்தையின்  வளர்ச்சியினைத் தடுக்காதீர் !

    தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையும்
    என நினைப்பது தாய்க்கு அழகல்ல!
    குழந்தையின் வளர்ச்சியினை மனதிற் கொள்ளவும்
    குழந்தையின் நலமே தன் நலம் எனத் தெளியவும் !

    பெண்மையையும் தாய்மையையும்  போற்றிடுவோம்
    தாய்ப்பாலின்   சிறப்பினைத் தாய்மார்களுக்கு எடுத்துரைப்போம்
    தாய்மார்களுக்கு மருத்துவர்களால் எடுத்துரைக்கப்பட்ட  தினம்
    தாய்ப்பால்  ஊட்டும் தினத்தை எல்லோரும் போற்றுவோம் !

     

    Share
  • மதுவின் கேடு

    -ரா.பார்த்தசாரதி

    மதுவினைக் குடித்தால் உடலும் அறிவும் மயங்கும்
    மது உண்பவன் தன் நிலை அறிந்து பேசமாட்டான்
    உடலுக்கும் அறிவுக்கும் கேடு விளையும் என அறிவான்
    விட்டில் பூச்சி போல் மதுக்கடையைத்தானே அடைவான்!

    மதுவினால்  மக்கள் நல்வாழ்விற்குக் கேடு  நமது அரசாங்கம் அறிந்ததே
    மதுவினால் அரசாங்கம் பலகோடி வருமானம் என்றும்  பெறுகிறதே
    பலகோடி வருமானம்  ஈட்ட பல நல்லத்  திட்டங்கள்  நாட்டிலே உள்ளதே
    இதனைச்  செய்ய அரசாங்கம்  முயற்சி செய்யத் தயங்குதே!

    மது  உண்பவன் பகைவர்களுக்கும்  அஞ்சமாட்டான்
    பிறரைக் கண்டால் மதிக்கமாட்டான்; தன்னை மறைத்துக்கொள்வான்
    பெற்றோர், மனைவி, குழந்தைகளால்  இகழப்படுவான்
    உற்றார், உறவினர்  கண்டால் மறைந்து செல்வான்!

    பிறரிடம்  தன்மானத்தை விட்டுப் பணத்திற்காகக்  கையேந்துவான்
    சம்பாதிக்கும்  பணத்தை நேர்வழியில்  செலவிடமாட்டான்
    தன் உடம்பு   பாதிக்கப்படுவதை  என்றும்  உணரமாட்டான்
    கடைசியில்  அவனே  பூமிக்குப்  பாரமாக  இருந்திடுவான்!

    மதுவினால் ஏற்படும் தீயனவற்றை தடுக்கக்  கூடாதா?
    மக்கள் நல்வாழ்வில் அரசாங்கம் அக்கறை செலுத்தாதா?
    மதுவினால் வருமானம் இருந்தாலும் வேறு நல்ல வழிகள் இருக்கின்றதே
    இதனைக் கண்டுகொள்ளாமல் அடக்குமுறையினைக் கையாளுக்கின்றதே!

    மதுவினை ஒழிக்கவேண்டும்; கூக்குரல் கொடுத்து உதவ வேண்டும்
    பெண்களும், மாணவர்களும்  காந்தியின் வழியில்  போராடவேண்டும்
    மதுக்கடைகளை மூடுவதற்கு எல்லா இடங்களிலும் மக்கள் திரள வேண்டும்
    நல்வாழ்விற்கு உகந்த கடைகளாய் பொது நூலகமாய்  மாற்ற வேண்டும்!

     

    Share
  • மாமனிதர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

    -ரா. பார்த்தசாரதி

     

    kalam

     

     

     

     

     

     

     

    வையகம் போற்றும் சிறந்த விஞ்ஞானியே !
    தன்னலம் கருதாத  தலைவனும் நீயே !
    விருதுகள் பல பெற்ற  மாமேதையே !
    தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த ஜனாதிபதியே !

    இளைய சமுதாயத்தைக்  கனவு கொண்டு இலட்சியத்தை அறிவுறுத்தினாய் !
    இந்தியா வல்லரசு  ஆகும் என மக்களிடையே  எடுத்துரைத்தாய் !
    மாற்றுத் திறனாளிக்கு  எடை குறைவான காலணி  செய்துகொடுத்தாய்!
    மெய்ஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் திறம்படத் தெளியவைத்தாய் !

    அரசியலையும், விஞ்ஞானத்தையும் ஒருங்கே போற்றினாய் !
    ஏவுகணைகளின்  நாயகன் எனப் போற்றப்பட்டாய் !
    யாதும் ஊரே  யாவரும் கேளிர் என்பதை அகிலத்தில் உரைத்தாய் !
    எளிமையும் பணிவும்  கொண்டு  பதவி வகித்தாய் !

    தமிழினமே  உன்  இழப்பால்  கலங்கியதே !
    நரம்பிழந்த வீணையாக  இன்று காணப்பட்டதே !
    உன்  பிறப்பு  ஓர்  சம்பவமாக  இருந்ததே !
    உன் இறப்பு  ஓர்  சரித்திரமாய் மாறியதே !

     

     

    Share
  • மெல்லிசை மன்னன்

    -ரா. பார்த்தசாரதி

    இசைக்கு  உருகாதார்  யாரும் இல்லை
    இசையை வாழ்வோடு இணைத்து  வாழ்ந்த மனிதன்
    இசையை  வாழ்கையாய்க்  கொண்ட இசை மன்னன்
    அவரே மெல்லிசை மன்னன் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் !  msv

    ஏழு  ஸ்வரங்களில் எத்தனைப் பாடல்கள் இசை அமைத்தாய் !
    பாட்டிற்காக  இசையா,  இசைக்காகப்  பாட்டா ?
    மெட்டுக்காகப்  பாட்டா ,  பாட்டுக்காக  மெட்டா ?
    ஒன்றோடுஒன்று கலந்து வரும் திரு. எம்.எஸ். வியின் விளையாட  !

    கவிஞனின்  பாடல்கள்  இன்னிசையாய்  உருமாறி,
    சந்தத்துடன் பாடல்கள்  இனிதே மெருகேறி,
    பாடல்களும்  இன்னிசையால் புகழப் பெற்றதே !
    கவிஞனின் புகழும் அதனால் நிலைபெற்றதே !

    கண்ணதாசன் பாட்டுக்களைக் காலமெலாம் கேட்கச் செய்தாய்
    வாலிக்கும் மற்ற  கவிஞர்களுக்கும் இசை அமைத்துக் கொடுத்தாய்
    திரை உலகில் மெல்லிசை  மன்னனாய்த்  திகழ்ந்தாய்
    நீ மறைந்தாலும் உன் இசையை மக்கள் மனதிலே கலந்தாய் !

    நல்ல இசை கேட்டாலே மனிதனுக்கு மனநிறைவு
    அந்த இசையே  மனிதனுக்குத் தரும் மன நெகிழ்வு
    காலங்கள் மாறினாலும்  பாடலின் இசை  நம்மை நினைவுபடுத்தும்
    திரு. எம்.எஸ். வி. மறைந்தாலும் அவரது இசை நெஞ்சிலே நிற்கும் !

     

    Share
  • புரியாத புதிர்!

    -ரா. பார்த்தசாரதி

    அன்புள்ள  அம்மா உன் அடிச்சுவட்டைப்  பின்பற்றுகிறேன்
    அன்று உன் நிலைமை கண்டு பிரமிப்பு அடைந்தேன்
    உன்னைப்போல் உழைக்கின்றேன் இன்று நானே
    அன்று இளமையில் சுயநலமாக எதையும் சிந்தித்தேன்
    இன்று திருமணம் ஆனதால் பிற(ர்) நலமாகச்  சிந்திக்கின்றேன்
    என்  குழந்தை என் கணவன் என்கிற வட்டத்தில்  சுழலுகின்றேன்
    ஏன் இந்த மாற்றம்  என்  நிலைமை  என்னை மாற்றியதா?
    பெண் இனத்திற்கு இது இயற்கை என முடிவானதா?

    பிறந்த வீட்டின் குலமும் புகுந்த வீட்டின் நலமே எனக்கொண்டாலும்
    இரண்டையும் சமமாக நினைக்க வேண்டும் என நினைத்தாலும்
    பெண்ணின் நிலைமை மதில்மேல் பூனையாக  அமைந்தாலும்
    பெற்ற தாயும் தந்தையும் சற்றே தொலைவிலிருந்தாலும்
    அன்று ’கல்’ ஆனாலும் கணவன்; ’புல்’ ஆனாலும் புருஷன்
    இன்று ஒரு ஆண்,  மனைவிக்காக அனுசரித்து நடந்தும்
    ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்கும் மனப்பாங்கே
    வாழ்கையில் அன்பும், அமைதியும் என்றும் நிலவிடும்!

    நீயும் என் வயதில் என்னை மாதிரி  உணர்ந்திருப்பாய்
    உன் அன்பும் தியாகமும் எங்களுக்காக அளித்தாய்
    நீ தந்த பாசத்தையும் அன்பையும் திருப்பி அளிக்க முடியுமா?
    தாய்ப்பாசத்தையும் தந்தையின் அரவணைப்பையும் திருப்பித் தரமுடியுமா?
    தாயின் பாசமும் அன்பும்  அவள் மடியிலிருந்து தொடக்கம்
    பெண் அன்பில் ஒரு தாய், நட்பிற்கு  நேர்மை,  அறிவில் ஒரு மந்திரி
    பெண்  கண்கண்ட ஆசான், பெண்ணே  வெற்றிக்கு மாலை
    பல உருவினில் இருந்தாலும் இன்றும்  ஒரு புரியாத புதிர்!

     

    Share
  • காலம் பொன் போன்றது!

    -ரா.பார்த்தசாரதி

    காலம்  நம்மை  வாழ  வைக்கும்
    காலம் நம்மைச் சிந்திக்க வைக்கும்
    காலம் கருதி  செயலாற்றத் துவங்கு
    அதுவே உன் வெற்றிக்கு  இலக்கு!

    காலம் என்பது கடிவாளமில்லாக் குதிரை
    கடிவாளமிட்டு  அடக்குவது நம் திறமை
    காலம்  எனும் கண்ணாடியில் முகம் காணுங்கள்
    கண்ணாடியைப்  பார்த்தே வெற்றி காணுங்கள்!

    காலத்தின் அருமை அறிந்து செய்தால் வெற்றி தேடி வரும்
    காலத்தைச்  சரிவரப்  பயன்படுத்தினால் மகத்தான வெற்றி
    காலம் என்பது  யானை  போன்றது
    அதனை அடக்கும் அங்குசம் நம்மிடம் உள்ளது !

    காலம் மதியாதவனை மிதித்துவிட்டுப் போகும்
    காலத்தின் அருமை உணர்ந்தவனை வெற்றி சேரும்
    காலமும் கடல் அலையும்  மனிதனுக்காகக் காத்திருக்காது
    காலம் கடந்த செயல்கள் என்றும்  பலன்  தராது !

    நமது லட்சியத்தைக்  காலத்தோடு கைகோத்துச்
    சந்தர்ப்பத்தையும் நேரத்தையும் ஒருங்கே சேர்த்து
    எத்தொழிலையும் தொடங்கினால் வெற்றி நமதே
    நாம் நினைக்க  வேண்டியதுகாலம் பொன் போன்றதே !

     

    Share
  • அயல்நாட்டு மோகம்!

    -ரா.பார்த்தசாரதி

    வானுர்தி மேலேறி  அயல்நாட்டு வாசம்
    புதிய தேசம் புதிய மனிதர்களின் நேசம்
    மொழி, குணம் உணர்ந்து செயல்பட வேண்டுமே
    உறுதிகொண்டு கண்விழித்து உழைக்க வேண்டுமே !

    அங்கே அன்னையின்  அரவணைப்பு இல்லை
    ஆசை மனைவியின் இன்முகம் காண்பதில்லை
    பெற்ற மகன் மகளின் ஸ்பரிசம் இல்லை
    அன்புடன் உறவாடும் நண்பனும் இல்லை !

    அன்னமில்லை நேரத்திற்கு நமக்கு ஆகாரமில்லை
    பண்டிகை இல்லை அன்புகாட்ட  யாருமில்லை
    உணர்வுகள் வெறுமையுடன்  மாறிவரும் நிலை
    வேதனையையும் துன்பத்தையும் வெளிக்காட்டாத நிலை !

    பணமிருக்கும் நாட்டில் நல்ல மனதிற்கு இடமில்லை
    குணமிருக்கும் நாட்டில் பணத்திற்கு வழிஇல்லை
    வாழ்க்கை எனும் ஓடத்தில் வந்து சேரும் தடைகள்
    வந்தனவற்றை ஏற்றுக்கொள்ளும் இக்கால மனிதர்கள் !

    கல்வி, கலைகள் எல்லாம் நன்கு கற்றோம்
    வேலை கிடைத்து  வெளிநாட்டில் நன்கு உழைக்கின்றோம்
    காரணம், இவை எல்லாம் பெற்றோரின்  ஆசையே
    கலைமகளை ஒதுக்கிக் காசினைப் பூஜிக்கின்றாயே !

    பணத்திற்காக  வெளிநாடு  விரைந்து  சென்றாய்
    பெற்றோர்களை நினைந்து நிம்மதி இழக்கின்றாய்
    நம் நாட்டு  உணவின் சுவையை  மறந்தாய்
    மேல்நாட்டு உணவிற்கு மயங்கி அடிமைப்பட்டாய் !

    வெளிநாட்டில் இருக்கும்போது நம் நாட்டின் அருமை தெரியும்
    பண்பு கலாசாரம் இவற்றின் மதிப்பு தெரியும்
    பணத்திற்காகப் பிள்ளைகளை அனுப்புகிறோம் என அறிவோம்
    அறிவாளிகள் வெளியேற்றம் என்பதை நாமே நடத்துகின்றோம் !

    பிள்ளைகளைப் பணத்திற்காகப் புதைகுழியில் தள்ளுகின்றோம்
    பாசத்தையும் அன்பையும் தள்ளிவைத்துத் துயரப்படுகின்றோம்
    பிள்ளைகளின் அறிவை அடமானம் வைக்கின்றோம்
    தாய்நாட்டின்  வளர்ச்சியைத் தடை செய்கின்றோம் !

    பணம் எட்டிப் பார்க்கும் பாசம் பக்கத்தில் இருக்காதே
    பணத்திற்காக ஆசைப்பட்டு உறவுகள் துரத்தப்படுகிறதே
    தவறினை உணர்கின்ற நேரத்தில் காலங்கள் கழிக்கப்படுகிறதே
    எண்ணியே வாழ்க்கை  இருதலைக் கொள்ளியாய் இருக்கிறதே!

    என்றும் காலங்கள் மாறித்  தன்னிறைவு  பெற்றாலும்
    பணம் இருந்தாலும் வசதிகள்  இருந்தாலும்
    மனம் பாசத்திற்காக  ஏங்கும்  காலமாய் இருந்தாலும்
    என்று மாறுமோ  இந்த அயல் நாட்டு  மோகம்?!

     

    Share
  • எல்.கே. ஜி மாணவன்

    ரா.பார்த்தசாரதி

    பசி,  தூக்கம்  வந்தால்  எங்களுக்கு  அழத்  தெரியும் !
    உங்கள்  கஷ்டங்கள் பற்றியும், வரவு செலவு பற்றியும் எங்களுக்குத் தெரியாது !

    நாங்கள் கேட்டதை உடனே வாங்கிக் கொடுக்கவேண்டும் !
    எங்களுக்குச் சாப்பிடும் பொருளின் விலை பற்றித் தெரியாது !

    எங்களுடைய  சிரிப்பினைத் தானமாகக் கொடுக்கத்தெரியும் !
    எங்களுக்குப் பயம் கவலை என்பது என்னவென்று தெரியாது !

    எங்களுக்கு எந்தப் பொருளையும் கடிக்கவும் உடைக்கவும்  தெரியும் !
    நாங்கள் உடைக்கும் பொருளின் மதிப்பும் விலையும் தெரியாது !

    உங்கள்  வேலையே  உங்களுக்கு  முக்கியம் !
    எங்கள்  விளையாட்டே  எங்களுக்கு முக்கியம் !

    வேலைக்குச் செல்லாத அம்மாவே  ’நல்ல அம்மா’ என்று தெரியும் !
    டிவியிலும், செல்போனிலும் நேரம் கழிப்பது எங்களுக்குத் தெரியாது !

    எல்லாக்  குழந்தைகளும் மண்ணில் பிறக்கையில் நல்லகுழந்தைகளே !
    அவர்கள் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் தாய், தந்தை  வளர்ப்பினிலே !

     

    Share
  • பெண்ணே பொங்கி எழு!

    -ரா.பார்த்தசாரதி 

    வயது  வந்த  பெண் அவள்,
    வரதட்சணை  இன்றி அழுகிறாள் !
    வரதட்சணை  தந்து  மணப்பவளோ
    வரட்டி  போலங்கு  எரிகிறாள் !

    நங்கை எனும் பெண்  அழுகிறாள்,
    கண்ணீரை ஏனோ கங்கையாகக் கொட்டுகிறாள்
    ஏனோ இவ்வுலகில் ஆயிரம் பொன் தந்தாலும்
    இவ்வுலகில் மங்கை மண்ணெண்ணெய்க்குள்   மறைகிறாள்!

    மண்ணாய் என்றும் இருந்துவிடாதே  கண்ணே!
    புதுமைப்  பெண்ணாய் மாறிட வேண்டும்
    பொன் பொருள் ஊதியம் தந்து வாழ்கின்றாய்
    என்றுதான் உன் சுதந்திரத்தை  நிலைப்படுத்துவாய்?

    ஆணுக்கு நிகராய்ப் படித்து பட்டம் பெற்றாய்
    உன் பெற்றோரைத் திருமணத்தோடு  மறந்தாய்
    உனக்கு உயிரும் உருவமும்  தந்தவளை
    உதாசீனம்  செய்ய  எண்ணி விடாதே!

    மதிப்பும் மரியாதையும் மனதிலே மட்டும்தானா?
    பிறந்த வீட்டையும் சற்றே  நினைக்க வேண்டாமா?
    பல்லாயிரம்  தொலைவில் இருந்தாலும்  தாய்ப்பாசம் மாறுமா?
    அவள் நிலைமை என்றும் உயர்த்த வேண்டமா?

    ஆணுக்கு  நிகராய் என்றும் இருந்திடுவாய்
    தர்மத்தையும் நியாயத்தையும் என்றும் நிலைநாட்டிடுவாய்
    பெண்ணடிமை   என்பதை  வேரோடு அறுத்திடுவாய்
    ஞாலத்தில்  புதுமைப் பெண் என்பதைப் பறைசாற்றிடுவாய்!

     

    Share
  • நட்பும் உறவும்!

    -ரா. பார்த்தசாரதி 

    நட்பையும்  உறவையும்   உதறிவிடாதே !
    மனிதனே!  நட்பையும்  உறவையும்   உதறிவிடாதே !
    பழகும்  விதத்தில்  பழகினால்  பகையும் நட்பாகும்  !
    சொந்தம்  என  வாழ்ந்தால்  என்றும்  சுகமாகும் !

    மண்  எனப்  பிரித்தால்  மனிதநேயம்  மறைந்துபோகும் !
    இனம்  எனப்  பிரித்தால்  இனிமை இல்லாமல்போகும்  !
    மனித  நேயத்துடன்  வாழ்ந்தால், என்றும்  நலமாகும் !
    பாசத்தையும்   நேசத்தையும், பாலமாக  அமைத்துடு !

    சாதிமத   பேதத்தை  வேரோடு அழித்துவிடு !
    வயதிற்கும் படிப்பிற்கும் என்றும் மரியாதைக் கொடுத்திடு !
    நட்பும் உறவும் உன் உடன்பிறப்பு என நினைத்திடு !
    மன்னிக்கத் தெரிந்த  மனிதனே  நல்லவன்  எனக்  கருதிடு  !

    கோபத்தையும் ஆணவத்தையும் அடக்கி உறவினைக் காத்திடு !
    மனிதனே! உறவும் நட்பும் ஓர்  இருசக்கர  வண்டிதானோ ?
    இரண்டுமே, ஓர்  நாணயத்தின்  இரு பக்கங்கள்தானோ ?
    நட்பையும் உறவையும் நீ  பணத்தினால் மதிக்காததும் ஏனோ ?

     

    Share
  • முதுமை

    -ரா. பார்த்தசாரதி 

    முதுமை என்பதே மனிதனின் அனுபவ முதிர்ச்சி
    உடலும் உள்ளமும் சற்றே  அடையும் தளர்ச்சி
    துணை  தடுமாறினாலும் மனம் கொள்ளும் எழுச்சி
    வீ ழ்ந்தாலும்  கைகொடுத்துத் தூக்கிவிடும் முயற்சி!

    அனுபவத்திற்கும் வயதிற்கும் மதிப்பு  இல்லை
    பெற்றதும்  உடன்பிறந்ததும் உதவ நினைப்பதில்லை
    ஏனோ கடனுக்காக  உதவும் நிலைமை  இங்கே
    உள்ளத்தில் கலங்கும் முதுமைக்கு நிம்மதி எங்கே?

    அடிபட்டு இடம் தேடித் தட்டுத்தடுமாறும் நெஞ்சங்கள்
    பாசத்தினால் விடுபட முடியாத  முதியோரின்  எண்ணங்கள்
    இளம் ஜோடிகள் போல் காதலும் காமமும்  இல்லை
    முதிர்ந்த காதல்தான் ஆனால்  காமம் இங்கில்லை!

    முதுமைக் காதல் என்பது தாஜ்மஹாலின்  நினைவு
    இளமைக் காதல் என்பது மனக் கோட்டையின் வளைவு
    இன்றுமுதுமையின் அடைக்கலம் முதியோர் இல்லங்கள்
    இதனை மாற்றாதோ  இளமையின்  எண்ணங்கள்?

    தனக்காக  வாழாது  பிறருக்காக வாழும்  முதுமை
    என்றும் உறவுக்கும் பாசத்திற்கும் ஏங்கும் தனிமை
    இளமையின்  முதிர்ச்சியே  மனித இனத்தின்  முதுமை
    தன் வினை தன்னைச் சுடும் என்பதுதான் பொதுவுடைமை!

     

    Share
  • அயல்நாட்டு நிச்சயதார்த்தம்!

    -ரா.பார்த்தசாரதி

    தாயும் தந்தையும்  ஜாதகம் பார்த்தார்கள்
    உன்னை எனக்கு  முடிவு  செய்கிறார்கள்
    ஆம் உன்னை ஸ்கைப்பில் காண விரும்பினேன்
    உன் பெற்றோர் அனுமதியுடன் தொடர்பு கொண்டேன்!

    நான்  கடின உழைப்பால் முன்னேறினேன்
    பிறர் உதவி கொண்டு முன்னேறமாட்டேன்
    நீயும் என்னைப்போல் இருக்கவேண்டும் என நினைப்பேன்
    எதையும் தனித்து நின்று சமாளிக்க வேண்டுமென  எதிர்பார்ப்பேன்!

    உரையாடும்போது  உன் குடும்ப நிலையைக் கூறுகின்றாய்
    உன் எதிர்காலப் படிப்பிக்கும் அடி போடுகின்றாய்
    உன் குடும்பத்திற்கு ஒரு பங்கு அளிக்க வேண்டுகிறாய்
    நீயும் நானும் வாழ்கையில் சரிபாதி என்கிறாய்!

    வரும் முன்னே பல எதிர்பார்ப்புக்கள், கட்டளைகள்
    இதற்கெல்லாம்  ஒத்துக்கொண்டால்தான்  திருமணம்
    நிச்சயிக்கப்பட்டும்  நின்றுபோன திருமணங்கள்
    எதையும் சாதரணமாகக் கருதும் இக்காலத் திருமணங்கள்!

    திருமணம் என்பது சொர்க்கத்தில்  நிச்சயிக்கப்படுகிறதா?
    தாய் தந்தையர் பார்த்து  நிச்சயிக்கப்படுகிறதா?
    ஆண், பெண்  நேரிடை    சந்திப்பில் முடிவாகிறதா?
    ஜாதகத்தால்  நல்ல ஜோடிகள் புறக்கணிக்கப்படுகிறதா?

    திருமண  வயது வந்தாலே  ஆண், பெண்ணிற்குப் பல எண்ணங்கள்
    எதையும் பிறர் நிலையில் நின்று நினைக்காத  மனிதர்கள்
    இரு கைகள் இணைந்தால்தான் வாழ்க்கை என உணர்ந்தவர்கள்
    வரதட்சணை இல்லாத திருமணங்களே சிறந்த திருமணங்கள் !

     

    Share
  • ஆறாம் ஆண்டு தொடக்கம்

     
    நான்கு எழுத்திற்கு ஓர் சிறப்புண்டு,
    வல்லமை என்கிற பெயருண்டு

    ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைத்து,
    ஒப்பற்ற மின்னிதழாய் தரணியில் நிலைத்து ,

    கவிஞர்களும், எழுத்தாளர்களும் ஒத்துழைப்பினை நல்கட்டும்
    நற்றமிழின் நல்லிதழாய், என்றும் திகழட்டும் ,

    ரா.பார்த்தசாரதி

    Share
  • அன்னையே தெய்வம்!

    –ரா.பார்த்தசாரதி

    தாயே விளைநிலமாம் தந்தையே  வித்தாம்
    குலம் தழைக்க வந்ததோர் சொத்தாம்!
    பெண்முழுமை அடைவதும்  தாய்மையாலே
    தாயாக  மாறுவதும்  அந்தத்  தாய்மையாலே!

    கருவறையில் உன்னை  வைத்துக்   காக்கின்றாள்
    தனக்கென்று உண்ணாது  உனக்காக உண்கிறாள்
    பெண்ணிற்குப் பிரசவம்  என்பதே மறுபிறப்பு
    இதனை  அறியாத  மானிடப்  பிறப்பு !

    பிறந்த மேனியுடன்  வெளிஉலகிற்கு  வந்தாய்
    தாய், தந்தைக்கு  மட்டற்ற மகிழ்ச்சி தந்தாய்!
    உனக்காகக்  கண்விழித்துத் தூக்கத்தை மறந்தேன்
    உனக்காக  என் குருதியைப்  பாலாக பொழிந்தேன் !

    தோளையே  தூளியாக்கி உன்னைச் சுமந்து செல்கின்றேன்
    நீ பிறக்கும்போது  நான் சுமந்த  வலியை  விடவா?
    நீ    பசி தூக்கத்தை  அழுது வெளிப்படுத்துகின்றாய்
    உன் கள்ளமில்லச் சிரிப்பாலே கவலைகள்  போக்குகின்றாய் !

    உன் அன்னைக்கு ஆயிரம் பிரச்சனை  இருப்பு
    உன்னைக் கட்டியணைப்பதில்தான் ஆனந்தக் களிப்பு !
    உன் வளமே  எங்கள்  சிறப்பு
    உன் நினைவே பாசத்தின் பிணைப்பு !

    குழந்தையின்  வளர்ப்பு தாய் தந்தையின் கடமையே
    அன்னையின்  வார்த்தைகள் குழந்தைக்கு இனிமையே
    அன்னையைப்  போல்  ஒரு தெய்வம் இல்லை
    திசை நான்கும்  அவள் போல்  எவருமில்லை !

     

    Share