-ரா. பார்த்தசாரதி 

நட்பையும்  உறவையும்   உதறிவிடாதே !
மனிதனே!  நட்பையும்  உறவையும்   உதறிவிடாதே !
பழகும்  விதத்தில்  பழகினால்  பகையும் நட்பாகும்  !
சொந்தம்  என  வாழ்ந்தால்  என்றும்  சுகமாகும் !

மண்  எனப்  பிரித்தால்  மனிதநேயம்  மறைந்துபோகும் !
இனம்  எனப்  பிரித்தால்  இனிமை இல்லாமல்போகும்  !
மனித  நேயத்துடன்  வாழ்ந்தால், என்றும்  நலமாகும் !
பாசத்தையும்   நேசத்தையும், பாலமாக  அமைத்துடு !

சாதிமத   பேதத்தை  வேரோடு அழித்துவிடு !
வயதிற்கும் படிப்பிற்கும் என்றும் மரியாதைக் கொடுத்திடு !
நட்பும் உறவும் உன் உடன்பிறப்பு என நினைத்திடு !
மன்னிக்கத் தெரிந்த  மனிதனே  நல்லவன்  எனக்  கருதிடு  !

கோபத்தையும் ஆணவத்தையும் அடக்கி உறவினைக் காத்திடு !
மனிதனே! உறவும் நட்பும் ஓர்  இருசக்கர  வண்டிதானோ ?
இரண்டுமே, ஓர்  நாணயத்தின்  இரு பக்கங்கள்தானோ ?
நட்பையும் உறவையும் நீ  பணத்தினால் மதிக்காததும் ஏனோ ?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *