நட்பும் உறவும்!
-ரா. பார்த்தசாரதி
நட்பையும் உறவையும் உதறிவிடாதே !
மனிதனே! நட்பையும் உறவையும் உதறிவிடாதே !
பழகும் விதத்தில் பழகினால் பகையும் நட்பாகும் !
சொந்தம் என வாழ்ந்தால் என்றும் சுகமாகும் !
மண் எனப் பிரித்தால் மனிதநேயம் மறைந்துபோகும் !
இனம் எனப் பிரித்தால் இனிமை இல்லாமல்போகும் !
மனித நேயத்துடன் வாழ்ந்தால், என்றும் நலமாகும் !
பாசத்தையும் நேசத்தையும், பாலமாக அமைத்துடு !
சாதிமத பேதத்தை வேரோடு அழித்துவிடு !
வயதிற்கும் படிப்பிற்கும் என்றும் மரியாதைக் கொடுத்திடு !
நட்பும் உறவும் உன் உடன்பிறப்பு என நினைத்திடு !
மன்னிக்கத் தெரிந்த மனிதனே நல்லவன் எனக் கருதிடு !
கோபத்தையும் ஆணவத்தையும் அடக்கி உறவினைக் காத்திடு !
மனிதனே! உறவும் நட்பும் ஓர் இருசக்கர வண்டிதானோ ?
இரண்டுமே, ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள்தானோ ?
நட்பையும் உறவையும் நீ பணத்தினால் மதிக்காததும் ஏனோ ?