-ரா. பார்த்தசாரதி

அன்புள்ள  அம்மா உன் அடிச்சுவட்டைப்  பின்பற்றுகிறேன்
அன்று உன் நிலைமை கண்டு பிரமிப்பு அடைந்தேன்
உன்னைப்போல் உழைக்கின்றேன் இன்று நானே
அன்று இளமையில் சுயநலமாக எதையும் சிந்தித்தேன்
இன்று திருமணம் ஆனதால் பிற(ர்) நலமாகச்  சிந்திக்கின்றேன்
என்  குழந்தை என் கணவன் என்கிற வட்டத்தில்  சுழலுகின்றேன்
ஏன் இந்த மாற்றம்  என்  நிலைமை  என்னை மாற்றியதா?
பெண் இனத்திற்கு இது இயற்கை என முடிவானதா?

பிறந்த வீட்டின் குலமும் புகுந்த வீட்டின் நலமே எனக்கொண்டாலும்
இரண்டையும் சமமாக நினைக்க வேண்டும் என நினைத்தாலும்
பெண்ணின் நிலைமை மதில்மேல் பூனையாக  அமைந்தாலும்
பெற்ற தாயும் தந்தையும் சற்றே தொலைவிலிருந்தாலும்
அன்று ’கல்’ ஆனாலும் கணவன்; ’புல்’ ஆனாலும் புருஷன்
இன்று ஒரு ஆண்,  மனைவிக்காக அனுசரித்து நடந்தும்
ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்கும் மனப்பாங்கே
வாழ்கையில் அன்பும், அமைதியும் என்றும் நிலவிடும்!

நீயும் என் வயதில் என்னை மாதிரி  உணர்ந்திருப்பாய்
உன் அன்பும் தியாகமும் எங்களுக்காக அளித்தாய்
நீ தந்த பாசத்தையும் அன்பையும் திருப்பி அளிக்க முடியுமா?
தாய்ப்பாசத்தையும் தந்தையின் அரவணைப்பையும் திருப்பித் தரமுடியுமா?
தாயின் பாசமும் அன்பும்  அவள் மடியிலிருந்து தொடக்கம்
பெண் அன்பில் ஒரு தாய், நட்பிற்கு  நேர்மை,  அறிவில் ஒரு மந்திரி
பெண்  கண்கண்ட ஆசான், பெண்ணே  வெற்றிக்கு மாலை
பல உருவினில் இருந்தாலும் இன்றும்  ஒரு புரியாத புதிர்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *