மதுவின் கேடு
-ரா.பார்த்தசாரதி
மதுவினைக் குடித்தால் உடலும் அறிவும் மயங்கும்
மது உண்பவன் தன் நிலை அறிந்து பேசமாட்டான்
உடலுக்கும் அறிவுக்கும் கேடு விளையும் என அறிவான்
விட்டில் பூச்சி போல் மதுக்கடையைத்தானே அடைவான்!
மதுவினால் மக்கள் நல்வாழ்விற்குக் கேடு நமது அரசாங்கம் அறிந்ததே
மதுவினால் அரசாங்கம் பலகோடி வருமானம் என்றும் பெறுகிறதே
பலகோடி வருமானம் ஈட்ட பல நல்லத் திட்டங்கள் நாட்டிலே உள்ளதே
இதனைச் செய்ய அரசாங்கம் முயற்சி செய்யத் தயங்குதே!
மது உண்பவன் பகைவர்களுக்கும் அஞ்சமாட்டான்
பிறரைக் கண்டால் மதிக்கமாட்டான்; தன்னை மறைத்துக்கொள்வான்
பெற்றோர், மனைவி, குழந்தைகளால் இகழப்படுவான்
உற்றார், உறவினர் கண்டால் மறைந்து செல்வான்!
பிறரிடம் தன்மானத்தை விட்டுப் பணத்திற்காகக் கையேந்துவான்
சம்பாதிக்கும் பணத்தை நேர்வழியில் செலவிடமாட்டான்
தன் உடம்பு பாதிக்கப்படுவதை என்றும் உணரமாட்டான்
கடைசியில் அவனே பூமிக்குப் பாரமாக இருந்திடுவான்!
மதுவினால் ஏற்படும் தீயனவற்றை தடுக்கக் கூடாதா?
மக்கள் நல்வாழ்வில் அரசாங்கம் அக்கறை செலுத்தாதா?
மதுவினால் வருமானம் இருந்தாலும் வேறு நல்ல வழிகள் இருக்கின்றதே
இதனைக் கண்டுகொள்ளாமல் அடக்குமுறையினைக் கையாளுக்கின்றதே!
மதுவினை ஒழிக்கவேண்டும்; கூக்குரல் கொடுத்து உதவ வேண்டும்
பெண்களும், மாணவர்களும் காந்தியின் வழியில் போராடவேண்டும்
மதுக்கடைகளை மூடுவதற்கு எல்லா இடங்களிலும் மக்கள் திரள வேண்டும்
நல்வாழ்விற்கு உகந்த கடைகளாய் பொது நூலகமாய் மாற்ற வேண்டும்!
