கிரேசி மோகன்
—————————————

images (3)

”அவனியின் கர்வம், அருணையாம் பர்வம்
சிவனிதய மர்ம ஸ்தலமாம்: -புவனத்தின்,
ஆன்மீக நெஞ்சமாம் , அண்ணா மலைதீபம்,
‘’நான்’’மோகம் நீக்கும் நெருப்பு”….

”ஆரூர் பிறந்தோர்க்கும், அக்காசி மாய்ந்தோர்க்கும்
பாரில் சிதம்பரம் பார்த்தோர்க்கும், -நேரும்,
திருநாளாம் முக்தி அருணா சலத்தை
ஒருநாள் நினைத்தாலே உண்டு”….
”பூசை புரியாது , ஈசன் திருநாமம்
ஓசை செவியில் ஒலிக்காது, -ஆசை
பலவசம் போயும், மலைவலம் செய்ய,
இலவசம் முக்தி இணைப்பு”….

”மின்னிடும் பொன்னாய் , மிளிரும் வயிரமாய்,
திண்ணிரும்பாய், பாறையில் தத்துவமாய், -மண்ணில்,
யுகந்தோறும் மாறும், முகங்கொண்ட ஈசன்
புகுந்திருக்கும் ஜோதிப் பிழம்பு”….

”அருணா சலத்தோன், அடிமுடி தேடி,
திருமால் அயனன்று தோற்க, -உருவாய்
உயர்ந்து விசும்படைந்து ஊன்றி உலகைப்
பெயர்ந்த பரமே பொருப்பு”….

”சம்பந்தாண் டானன்பில் ,சிக்கியதால் தம்மகனை
அம்பிகை தன்ணைப்பில் ஆட்கொண்டும், -கம்பத்தில்,
கந்தனொடு காளி, கடவுள்கள் ஆடினர்,
சந்தம் அருணகிரி சொல்….

”சந்திரன் வெண்குடையாய், சூரியன் கைவிளக்காய்,
இந்திரன் பூக்களை இறைத்திட, -வந்து,
கரவலம் தந்து கயிலாயம் சேர்க்கும்
கிரிவலம் வந்தோர்க்(கு) அறம்”….

 

images (8)

அண்ணாமலை கிரிவல மகிமை….
————————————————————————

”ஒருமுறை யேனும், அருணா சலத்தை,
கிரிவலம் செய்யப் பெறுவாய், -கருவினில்,
தோன்றி இடுகாட்டில், தூங்கும் பரிட்சையைத்,
தாண்டி கயிலாயத் தேர்வு”….

”குளித்து மடியாய், வெளுத்த நுதலாய்,
உளத்தில் அரனை உடுத்தி, -களைத்த
நிறைகர் பிணியாய், நிதானம் காத்து,
வரைசுற்ற வாழ்வில் வளம்”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *