-ரா. பார்த்தசாரதி

இசைக்கு  உருகாதார்  யாரும் இல்லை
இசையை வாழ்வோடு இணைத்து  வாழ்ந்த மனிதன்
இசையை  வாழ்கையாய்க்  கொண்ட இசை மன்னன்
அவரே மெல்லிசை மன்னன் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் !  msv

ஏழு  ஸ்வரங்களில் எத்தனைப் பாடல்கள் இசை அமைத்தாய் !
பாட்டிற்காக  இசையா,  இசைக்காகப்  பாட்டா ?
மெட்டுக்காகப்  பாட்டா ,  பாட்டுக்காக  மெட்டா ?
ஒன்றோடுஒன்று கலந்து வரும் திரு. எம்.எஸ். வியின் விளையாட  !

கவிஞனின்  பாடல்கள்  இன்னிசையாய்  உருமாறி,
சந்தத்துடன் பாடல்கள்  இனிதே மெருகேறி,
பாடல்களும்  இன்னிசையால் புகழப் பெற்றதே !
கவிஞனின் புகழும் அதனால் நிலைபெற்றதே !

கண்ணதாசன் பாட்டுக்களைக் காலமெலாம் கேட்கச் செய்தாய்
வாலிக்கும் மற்ற  கவிஞர்களுக்கும் இசை அமைத்துக் கொடுத்தாய்
திரை உலகில் மெல்லிசை  மன்னனாய்த்  திகழ்ந்தாய்
நீ மறைந்தாலும் உன் இசையை மக்கள் மனதிலே கலந்தாய் !

நல்ல இசை கேட்டாலே மனிதனுக்கு மனநிறைவு
அந்த இசையே  மனிதனுக்குத் தரும் மன நெகிழ்வு
காலங்கள் மாறினாலும்  பாடலின் இசை  நம்மை நினைவுபடுத்தும்
திரு. எம்.எஸ். வி. மறைந்தாலும் அவரது இசை நெஞ்சிலே நிற்கும் !

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மெல்லிசை மன்னன்

  1. aagaa.. well said.
    i think i know yu well. pl. contact me in my pte emailid.
    If yu use these lines in correct grammar(being a Tamil scholar!)- i will be very much pleased. pl. write.
    but yur words r fantastic.
    thanks,
    yogiyar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *