மெல்லிசை மன்னன்
-ரா. பார்த்தசாரதி
இசைக்கு உருகாதார் யாரும் இல்லை
இசையை வாழ்வோடு இணைத்து வாழ்ந்த மனிதன்
இசையை வாழ்கையாய்க் கொண்ட இசை மன்னன்
அவரே மெல்லிசை மன்னன் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் !
ஏழு ஸ்வரங்களில் எத்தனைப் பாடல்கள் இசை அமைத்தாய் !
பாட்டிற்காக இசையா, இசைக்காகப் பாட்டா ?
மெட்டுக்காகப் பாட்டா , பாட்டுக்காக மெட்டா ?
ஒன்றோடுஒன்று கலந்து வரும் திரு. எம்.எஸ். வியின் விளையாட !
கவிஞனின் பாடல்கள் இன்னிசையாய் உருமாறி,
சந்தத்துடன் பாடல்கள் இனிதே மெருகேறி,
பாடல்களும் இன்னிசையால் புகழப் பெற்றதே !
கவிஞனின் புகழும் அதனால் நிலைபெற்றதே !
கண்ணதாசன் பாட்டுக்களைக் காலமெலாம் கேட்கச் செய்தாய்
வாலிக்கும் மற்ற கவிஞர்களுக்கும் இசை அமைத்துக் கொடுத்தாய்
திரை உலகில் மெல்லிசை மன்னனாய்த் திகழ்ந்தாய்
நீ மறைந்தாலும் உன் இசையை மக்கள் மனதிலே கலந்தாய் !
நல்ல இசை கேட்டாலே மனிதனுக்கு மனநிறைவு
அந்த இசையே மனிதனுக்குத் தரும் மன நெகிழ்வு
காலங்கள் மாறினாலும் பாடலின் இசை நம்மை நினைவுபடுத்தும்
திரு. எம்.எஸ். வி. மறைந்தாலும் அவரது இசை நெஞ்சிலே நிற்கும் !
aagaa.. well said.
i think i know yu well. pl. contact me in my pte emailid.
If yu use these lines in correct grammar(being a Tamil scholar!)- i will be very much pleased. pl. write.
but yur words r fantastic.
thanks,
yogiyar