ரா.பார்த்தசாரதி

பசி,  தூக்கம்  வந்தால்  எங்களுக்கு  அழத்  தெரியும் !
உங்கள்  கஷ்டங்கள் பற்றியும், வரவு செலவு பற்றியும் எங்களுக்குத் தெரியாது !

நாங்கள் கேட்டதை உடனே வாங்கிக் கொடுக்கவேண்டும் !
எங்களுக்குச் சாப்பிடும் பொருளின் விலை பற்றித் தெரியாது !

எங்களுடைய  சிரிப்பினைத் தானமாகக் கொடுக்கத்தெரியும் !
எங்களுக்குப் பயம் கவலை என்பது என்னவென்று தெரியாது !

எங்களுக்கு எந்தப் பொருளையும் கடிக்கவும் உடைக்கவும்  தெரியும் !
நாங்கள் உடைக்கும் பொருளின் மதிப்பும் விலையும் தெரியாது !

உங்கள்  வேலையே  உங்களுக்கு  முக்கியம் !
எங்கள்  விளையாட்டே  எங்களுக்கு முக்கியம் !

வேலைக்குச் செல்லாத அம்மாவே  ’நல்ல அம்மா’ என்று தெரியும் !
டிவியிலும், செல்போனிலும் நேரம் கழிப்பது எங்களுக்குத் தெரியாது !

எல்லாக்  குழந்தைகளும் மண்ணில் பிறக்கையில் நல்லகுழந்தைகளே !
அவர்கள் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் தாய், தந்தை  வளர்ப்பினிலே !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.