Author: ரா. பார்த்த சாரதி

  • தாயும், தாய்மையும் !

    -ரா.பார்த்தசாரதி

    ஆணிற்குக் கிடைக்காத  ஓர்  பரிசு
    பெண்ணிற்கு மட்டும் கிடைக்கும் பரிசு
    தன் வயிற்றில் ஓர் உயிரை வளர்கின்றாள் Picture 1551
    கவள உணவையும் குழந்தைக்காக  உண்கின்றாள் !

    என்னதான்  விஞ்ஞானம், வசதிகள் வளர்ந்தாலும்
    ஆண்  தன்னைப் பற்றியே  நினைத்திருந்தாலும்
    பத்து நிமிடங்கள் நின்றாலும் கால் கனத்து வலிக்கும்
    பத்து மாதம் சுமந்தாலும் கருவறைச்சுமை வலிப்பதில்லை!

    வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்
    இந்த வலியால் மற்றொரு உயிர் வருவதைக் காண்பார்கள்
    குழந்தை, சிறுமி, குமரி,மனைவி என்கிற பல உறவானதே
    தாய்மையில்தான்  ஒரு பெண் தன்னிறைவு பெறுகின்றதே!

    குழந்தையைக் கொஞ்சுவது ஆணுக்கும் பெண்ணுக்கும் பேரின்பம்
    குழந்தையைக்  கட்டி அணைப்பதில்தான் தாய்க்குத் தனி இன்பம்
    தாய்மையின் மகத்துவம் என்பது பெண்ணின்  பெருமை
    தத்ரூபமாகவும் தத்துவமாகவும் இருப்பதே உண்மை!

     

    Share
  • சொல்லும் செயலும்!

    -ரா.பார்த்தசாரதி

    எழுதுக்களின்  சேர்க்கையே  சொல்  எனப்படும்
    சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன்  சத்தியவான்
    சொல்லும் சொற்களில் இரட்டை அர்த்தங்கள்
    துச்சமாய் அசிங்கமாய் நினைக்க வைக்கின்றதே !

    சொன்ன சொற்களை என்றும் அரசியில்வாதிகள் காப்பதில்லை
    அவர்கள் கவரிமான் என்று நினைக்கத் தேவையில்லை
    சொற்களை அலங்கரித்து மக்களை மயக்கும் அரசியல்வாதிகள்
    தன் முன்னேற்றத்தையே கருதுபவர்கள் பிறர் நலத்தைக் கருதமாட்டார்கள்!

    வாழ்விற்கு  வழிகாட்டும் சொல்லைச் சொல்பவர்கள் ஞானிகள்
    அர்த்தமற்ற  சொற்களைச் சொல்பவர்களே அஞ்ஞானிகள்
    சொன்ன சொல்லைத் திரும்பத்திரும்பச் சொல்பவன்  பித்தன்
    சொல்லின்  அர்த்தம் தெரியாமல் சிரிப்பவன்  முட்டாள் !

    சொற்களை அலங்கரித்துக்  கவிதைபாடும்  கவிஞன்
    ஒரு சொல் ஒரு செயல் செய்பவன் சராசரி மனிதன்
    சொற்களைக் கொண்டு பணம் சம்பாதிப்பவன் வியாபாரி
    சொல்லின் வல்லமை கொண்டு வாதாடும் வழக்கறிஞர்கள் !

    சொல்லிலே கலைவண்ணம் காண்பவன் கலைஞன்
    கல்லிலே கலைவண்ணம் காண்பவன்  சிற்பக் கலைஞன்
    காண்பதைத் தத்ரூபமாக வரைபவன்  ஓவியக் கலைஞன்
    காதலில்  ஈடுபடும்  காதலனும் ஒரு காதல் கலைஞன்!

     

    Share
  • விவசாயியும் ஒரு தொழிலாளி!

    -ரா.பார்த்தசாரதி

    நமது நாட்டின் முதுகெலும்பே   விவசாயம்
    அதனைத் தொழிலாகச் செய்பவன் விவசாயி
    இறைவன் கண்டெடுத்த சிறந்த உழைப்பாளி
    மக்கள் பசிதீர்க்கும் உலகின்  பாட்டாளி !

    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
    விவசாயியை  ஏமாற்றுபவர்களை  நிந்தனை செய்வோம்
    நிலத்தில் வியர்வை சிந்திப் பாடுபடும் விவசாயி,
    அவர்கள் நலம்கெட வழி செய்தல் நியாயமா?

    விவசாயம் செய்யமுடியாமல் வெறுத்துத் தற்கொலை
    இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அவலநிலை
    பேருக்காக உதவித் தொகை என்ற  மான்யம்,
    அரசாங்கமும் அரசியல்வாதிகளும் நடத்தும் நாடகம்!

    விவசாயம்  பாடுபட்டுப் பலன்பெறாமல் இருக்கின்றதே
    கூறுபோட்டு வீடுகட்டும் நிலைமை மாறிவிட்டதே!
    அரசாங்கமும் அரசியலும் இதற்கு ஒத்துழைக்கின்றதே
    விவசாய நிலங்கள் முழுதும் அழிக்கப்படுகின்றதே!

    சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றார் வள்ளுவர்
    விவசாயையும் தொழிலாளர்களையும் முன்னேறச் செய்வோம்
    உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுப்போம்
    நல்மனம்கொண்டுப் பறைசாற்றிடுவோம் உலகத் தொழிலாளர் தினத்தில்!

     

    Share
  • ஒரு பேருந்தின் கதறல்!

    -ரா. பார்த்தசாரதி

    மூலை  முடுக்கெல்லாம் ஏற்றிச் செல்கின்றேன்
    ஏழைக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் சிறந்த வாகனம்   bus-blue
    ஓய்வின்றி எந்நாளும் உங்களுக்கு உதவுகிறேன்
    மாணவர்களை இலவசமாக ஏற்றிச்செல்கின்றேன்!

    நான் சுமக்கும்போது  ஜாதி மதம் பார்ப்பதில்லை
    தடவழிப் பலகையும் திருக்குறளையும் சுமக்கின்றேன்
    நடத்துனரும், ஓட்டுனரும்  என்னை  ஆளுபவர்களே
    இடை இடையே ஏறி இறங்கும் பயணிகளும் நண்பர்களே !

    என் அருமையும் சிறப்பும் பொது மக்களுக்குத் தெரிவதில்லை
    பொதுநலப்  போராட்டத்திலும் மொழிப் போராட்டத்திலும்
    உங்கள் நண்பன் என்று நான் கூறிக் கொண்டாலும்
    கோபம் கொண்டு உடைத்துத் தீயும் வைக்கிறார்கள் !

    உங்கள் சொத்தினை  நீங்களே  அழிக்கலாமா?
    நான் கதறினாலும் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா?
    என்னை உங்கள் நண்பனாய்க்  கருதுங்கள் !
    நான் உங்கள் நாட்டின்  சொத்தென நினையுங்கள் !

     

    Share
  • இன்றும் உலகம் மாறவில்லை!

    -ரா.பார்த்தசாரதி

    பிள்ளை  பிறந்தால் என்றும் பேரின்பம்
    குலம் தழைக்க வந்தத்  திருமகன்
    பெண் பிறந்தால்  ஏனோ பெருமூச்சு
    பெற்றோர்கள் வெளிபடுத்தும் ஓர் தனிப்பேச்சு!

    இன்றும் பெண் சிசுவதை நடக்கின்றது
    இதனை அரங்கேற்றுவதும்  பெண் இனமே!
    குழந்தையும் தெய்வமும்  ஒன்றுதானே…
    பெண் குழந்தைகளைப் புறக்கணிப்பதும் ஏனோ?

    தன்னைப்போல் பிறரையும்  நினை
    ஆண், பெண் பாகுபாடின்றி  நினை
    பெண்ணே  உன்வீட்டின் செல்வம்
    உன் குடும்பத்தில் அவளொரு சேமக்கலம்!

    பெண்ணை  ஆணுக்கு நிகர் என நினை
    தங்கமெனத்  தன்பெண்ணை வளர்த்தான்
    தங்கத்தைத் திருமண பந்தத்தில் தொலைத்தான்
    பிறந்த வீடு விட்டு புகுந்தவீடு புகுந்தாள்!

    பிரித்துப் பாகுபடுத்தும் பெண்ணின் வாழ்க்கை,
    எதிர்காலம் எப்படியோ என நினைக்கும் வாழ்க்கை
    தன்னலமின்றிப்  பிறர் நலனுக்காகப் புகுந்தாள்
    தன் முன்னேற்றத்தைக் காணத் துடித்தாள்!

    பிறந்த வீட்டில் கொடிகட்டிப்   பறந்தாள்
    கொம்பைச் சுற்றிப் படரும் கொடியானாள்
    இன்று உரிமைக்காகச் சிலவற்றை விட்டுக்கொடுக்கிறாள்
    விட்டுகொடுக்கும் வாழ்க்கையே உயர்வென நினைக்கிறாள்!

    பிள்ளை வீட்டில் பிச்சை எடுக்கும்  பெற்றோர்
    பெண் வீட்டில் மரியாதையாக நடத்தப்பட்டாலும்
    பழமை பேசி, தன்னுக்குள் போட்டுக்கொண்ட வேலி
    என்று மாறுமோ இந்தத் தேவையற்ற வேலி?

    மருமகனை, மகனாக நினைக்கத் தெரிந்தாலும்
    மருமகளை, மகளாக நினைக்கத் தெரிந்தாலும்
    பழமை நீக்கி, காலத்திற்கேற்ப வாழத் தெரிந்தாலும்
    பெண்ணே! இன்றும் உலகம் மாறவில்லை!

     

    Share
  • தாய்மை என்னும் தூய்மை!

    -ரா.பார்த்தசாரதி

    மலையிலிருந்து நதிகள்  பல  பிறக்கின்றன
    நதிகளை  அன்னைக்கு  நிகர்  எனச் சொல்கிறோம்!
    நன்முறையில் அணை போடுவது நல்லதே
    கழிவுநீரைக் கலக்குவது என்றும் தீமையானதே!

    வாழும் உயிரினம்  வாழா  வேண்டுமே
    நீரைக் குடிபவர்களுக்கும் கேடு விளையுமே
    பயிர்களை  அழிப்பதா? மக்கள்நலம்கெட வைப்பதா?
    தெரிந்தும்  தண்ணீரை அசுத்தபடுத்துவதா?

    இன்று நதி நீரை மனசாட்சியின்றி களங்கப்படுத்துகிறோம்
    தூய்மை  என்பது  தாய்மையின்  வடிவமே!
    தாய்மை  என்னும் தூய்மை  காக்கப்படவேண்டுமே
    இதனை நன்முறையில் அரசாங்கமே  நிறைவேற்றவேண்டுமே!

     

    Share
  • ஆரோக்கிய தினம்!

    -ரா.பார்த்தசாரதி

    உலகில் அனைவரும் ஆரோக்கியத்தைப் பேணுவது மிகவும் நல்லது
    நல்ல உணவும் உடற்பயிற்சியும் ஆரோக்கியத்திற்கு நல்லது
    சோம்பேறித்தனமும், முயற்சியின்மையும் ஆரோக்கியத்திற்குக் கேடாகும்
    தீய பழக்கங்கள் என்றும் ஆரோக்கியத்திற்குக்  கேடாகும்!

    உடலில் ஆயிரம் வியாதி பெயரோ ஆரோக்கியசாமி!
    நோயின்றி வாழ நல்ல ஆரோக்கியம்  தேவை
    உடல்  ஆரோக்கியம் பெறச் சத்துணவு  தேவை
    உடல் வலிமை பெற  நல்ல உடற்பயிற்சி  தேவை!

    சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத  முடியும்
    ஆரோக்கியமாய் இருந்தால் வாழ்க்கை வளர்ச்சியடையுமே
    நல்ல உணவும் உடற்பயிற்சியும் மேற்கொள்வோமே
    மனதில் இறுக்கம்இன்றி ஆரோக்கியத்தைப் பேணுவோமே!

     

    Share
  • இப்படியும் ஏமாற்றுவாளா !

    ரா. பார்த்தசாரதி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    நளினி எப்பொழுதும் எந்தக் கலர் புடவையில்சென்றாளோ அதே கலர் புடவையுடன் திரும்புவாள். எல்லா சேல்ஸ் மேனும் அவள் கையாள். வரும்போது சலவை புடவையுடன் வருவாள் …புதுப் புடவையை எடுப்பாள். அலங்கார அறைக்குள் சென்று உடுத்திய புடவையை அழகாக மடிப்பாள், விலை லேபிளை ஒட்டிவிட்டு, புதுப் புடவையை உடுத்துவாள். அக்கடை ஆட்களை வைத்தே உடுத்தியதை கலைக்கப்பட்ட புடவை குவியலில் கலந்திடுவாள்.. காமேராக்களும் பார்த்துக்கொண்டு இருந்தன.

    Share
  • ராமன் எத்தனை ராமனடி!

    -ரா.பார்த்தசாரதி

    ராமன் பிறந்ததும்  நவமியிலே
    கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே       Rama
    இரண்டும் கடவுளின் அவதாரங்களே
    இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை  நாயகர்களே!

    ராமாயணயத்தின் காவியத் தலைவன் ராமனே
    பிறன்மனை நோக்குபவனைத் தண்டித்தவனும் ராமனே
    நட்புக்கு இலக்கணமாய்  இருந்தவனும்  ராமனே
    ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே!

    ராம நாமமே  நலம் தரும் நாமமே
    அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே!
    யாவருக்கும்  நன்மை அளிக்கும்  நாமமே
    ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே!

    பங்குனி உத்திரத்து  வரும்  ராம நவமியே
    பானகமும், பருப்பும், மோரும் நிவேதனமே
    ராமன் எத்தனை  ராமனாய்  இருந்தாலும்
    அவரது  கல்யாணகுணங்கள் சிறப்புடையதே!

     

    Share
  • நினைக்கத் தெரியாத மனமே

    – ரா.பார்த்தசாரதி.

     

    ராகவன் மும்பையில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தின் பொது மேலாளர். அவருக்கும் அவர் பிள்ளைக்கும் வலது கையில் ஆறு விரல்கள். அவருக்கு அதிர்ஷ்டமாகவே எல்லாம் நடந்தது. அவர் பிள்ளை முரளி இவருக்கு நேர்மாறாக ஓர் ஊதாரி. ஒரே பிள்ளையாக இருந்ததால் அவன் அம்மா நிர்மலா அவனுக்குச் செல்லம் கொடுத்து, கணவனுக்குத் தெரியாமல் பணம் கொடுத்து அவனைக் கெடுத்தாள். ஒரு நாள் ராகவன் கோபமாக பேசிவிட, முரளி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தான். ஒரு கம்பெனியில் காப்பி, டீ சப்பிளையராக மூன்று வருடங்களாக வேலை செய்து அவனால் மும்பையில் கைவிடப்பட்ட வடநாட்டுப் பெண்ணிற்கும், தனது மகனிற்கும் மாதம் ஒரு சிறுதொகை அனுப்புவான். அவனுக்கு அவன் அம்மாவிடம் ரொம்ப பாசம். அவளை நினைக்காத நாள் இல்லை. ஆனாலும் வீட்டிற்கு நாள் கிழமையில் கூட செல்வதில்லை. வருடா வருடம் ஐய்யப்பன் கோவிலுக்கு மட்டும் போய்வருவான்.

    ஒரு நாள் ராகவன் சென்னையில் உள்ள தன் கம்பெனியின் இன்ஸ்பெக்க்ஷனுக்கு வந்தார். அவரது மேனேஜரும் அவருக்கு காப்பி வரவழைத்தார். காப்பியுடன் வந்தவன் முரளி. தாடியுடன் வந்த முரளியை ராகவனுக்கு அடையாளம் தெரியவில்லை. முரளி ராகவனுக்கு காப்பி கொடுக்கும் போது கை நடுங்கி அவரது காலில் கொட்டிவிட்டான். உடனே தனது கைகுட்டையால் அதைத்  துடைக்கும் போது ராகவன் அவனது கையில் இருந்த  ஆறாவது விரலை பார்த்துவிட்டார். உடன் இருந்த மேனேஜர் முரளியை முட்டாள் என்று திட்டி அன்றைக்கே வேலையை விட்டுப் போகச் சொன்னார்.

    தாடி இருந்ததால் முரளியை ராகவனுக்கு அடையாளம் தெரியாவிட்டாலும் மேனேஜர் முரளி என்று அவன் பெயரைச் சொல்லி திட்டியதால்அவனை தனது மகன் எனத் தீர்மானித்தார். ராகவன் மேனேஜரிடம் நல்ல டெஷிஷன் எடுத்திங்க அன்றார். பிறகு முரளியை தனிமையில் அழைத்து கம்பெனிக்கு வெளியே நிற்கச் சொன்னார். அவனை தனது காரில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ரூமிற்குச் சென்றதும் முரளி அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். அப்பா உங்களுக்கு காப்பி கொடுக்கும் போதே உங்க விரலை பார்த்தேன். ராகவனும் தானும் முரளி அவரது காலை துடைக்கும்போதே பார்த்துவிட்டதாகச் சொன்னார்.

    அன்று இரவே அவனை மும்பைக்கு அழைத்துச் சென்றார். முரளி அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று அவரிடம் கேட்டான். நீயே வந்து பார் என்றார் ராகவன் தனது மனதின் துக்கத்தை வெளிக்காட்டாமல். மும்பை சென்றதும் அம்மா என்று ஆசையுடன் அழைத்தவாறு உள்ளே நுழைந்த முரளி அதிர்ச்சி அடைந்தான். அவனது அம்மாவின் படத்திற்கு மாலை போடப்பட்டு இருந்தது. மிகவும் கண்கலங்கினான். கடைசி காலத்தில் என்னையும், உங்க அம்மாவையும் மதுமிதாதான் கவனித்தாள். நானும் என் மகளைப் போல அவளைப் பார்த்துக் கொள்கிறேன். மதுமிதாவின் பையனும் நல்லா படிக்கின்றான். அவன் நம்ம வீட்டில் சின்ன, சின்ன வேலை செய்கின்றான் என்றார். மது காப்பி கொண்டுவா என்று உள்நோக்கி குரல் கொடுத்தார். முரளி காபியுடன் வந்தவளைப் பார்த்ததும் அவன் மனைவியே அங்கிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். ராகவனிடம் அப்பா மன்னித்து விடுங்க, இவள் உங்க மகள் இல்ல, மருமகள் என்றான். அத்துடன், இவளை என் மனம் ஒரு நாள் கூட நினைக்கத் தெரியாமல் இருந்து விட்டதே. எல்லாம் ஐய்யப்பன் அருள் என்று மனதில் நினைத்து கொண்டான்.

    Share
  • அந்தமானைக் காண வாருங்கள்!

    -ரா. பார்த்தசாரதி

    அந்தமானின்  அழகே  அழகு அதன் இயற்கை அழகைப் பருகு
    தென்னையும், கமுகும் ஒன்றோடுஒன்று கைகோர்த்து நிற்கும்
    கடலின் நடுவே நிற்கும் தீவாய்  நமக்குக் காட்சி  அளிக்கும்
    மனிதனின்   மனஅமைதிக்கு ஓர் உறைவிடமாய் இருக்கும்!   andaman

    வெள்ளி அலை மேலே  துள்ளி விளையாடும் கயல்கள்
    கடல் அடியில் சென்று  கடல் இனங்களைக் காணும் மக்கள்
    நீச்சல் தெரியாதவன் கூடக் கடல் அடியில் நடை போடுகிறான்
    அங்கே தன்னைச் சுற்றி வரும் மீன்களைக் கண்டு களிக்கின்றான்!

    சிறு படகும் இயந்திரப் படகும் பயணிக்கும் மக்கள்  கூட்டம்
    மனிதனுக்கு இயற்கை அழகை  மகிழ்வுடன் காண ஓர்  நாட்டம்
    கடலோரக் கவிதைகள் எழுத  மனிதனுக்கோர்  கண்ணோட்டம்
    காண்பதைக் கவிதை ஆக்குவதே  கவிஞனுக்குக் கொண்டாட்டம்!

    அந்தமான்  சிறையில் நமது தியாகிகள் பட்ட துன்பம்
    இதனைப் பொருட்காட்சியாக அமைத்த  விதம்
    சுதந்திரத்திற்காக அவர்கள்  சிந்திய ரத்தமும், தியாகமும்
    இன்று அதனை நினைக்காவிட்டால் நம் மனம் கலக்கமுறும்!

    சுற்றுலாப்  பயணிகள் கடற்கரையினைக் கண்டு களிக்கும் தீவு
    இரு தீவானாலும் ஒன்றில் பழங்குடியினர் வாழும் தீவு
    தேசத் தியாகிகள் பட்ட துன்பங்களைச் சித்தரிக்கும் தீவு
    நாட்டைவிட்டுத் தள்ளி இருப்பினும் தனித்தன்மை கொண்ட தீவு!

     

    Share
  • எதிர்பார்க்கும் நட்பு!

    ரா. பார்த்தசாரதி

    குறையில்லாத  மனிதன்  இவ்வுலகில்  உண்டா?
    குறையினைச் சுட்டிக் காண்பிக்காத மனிதர்கள் உண்டா?
    குறையினைக் களைய நல்வார்த்தைகளை  எடுத்துரைப்பதுண்டா?
    இனிய சொல்கொண்டுதான்  அதனைத் தீர்ப்பதுண்டா?

    உலகமே  என்னை  ஒதுக்கி  வைத்தாலும்
    என்னைப்  பாதுகாத்து   நிழல் கொடுப்பாயா?
    நாளுக்கு நாள்  கணக்குப்  பார்க்கும் மனிதர்கள் இடையே
    தன்மையுடன் பழகும் உன் நட்பை எதிர்பார்க்கலாமா?

    நான் வெல்லும்போது  வாழ்த்துவதைவிட,
    நான் வீழும்போது  என்னைத் தாங்குவாயா?
    எதிர்பார்ப்பினால் ஏமாற்றம் அடைவது தெரிந்திருந்தும்
    எதிர்பார்ப்பு இல்லாத உன் நட்பை அளிப்பாயா?

    Share
  • பெண்ணே நீதான்!

    -ரா.பார்த்தசாரதி

    ஒரு உயிரைப்  படைத்த  கடவுளும்  நீதான்
    பாலூட்டி, சீராட்டி  வளர்த்தவளும் நீதான்
    என்னோடு விளையாடி அன்புகாட்டியவளும் நீதான்
    திருமணப் பந்தலில் கைபிடித்த மனைவியாய் இருப்பவளும் நீதான்
    நான் வாழ்வில் கலக்கம் அடைந்தால்  ஆலோசனை கூறுபவளும் நீதான்
    நான் மூப்பு அடைந்தால் என்னை மடியில் சுமப்பவளும் நீதான்
    மானிட சக்தியின் மறு அவதாரமாய்ப் பராசக்தியாய்  இருப்பவளும் நீதான்
    குடும்பத்தில்  மந்திரி தாய் மனைவி ஆகிய பல பதவிகளும் நீதான்
    குடும்பத்தின் பல்கலைக்கழகமாய்த் திகழ்பவளும்  நீதான்
    பாரதிகண்ட  புதுமைப்பெண்ணும்  நீதான்!

    Share
  • இமெயில் காதல் …

    –ரா. பார்த்தசாரதி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    Love-Emailசுமதியும், சுரேஷும் ஒரே தெருவில் வசிப்பவர்கள். இருவரும் வெவ்வேறு கல்லூரி. அவர்களின் சந்திப்பே பஸ்சில்தான்.

    தினம் இருவரும் இமெயில் மூலமே தொடர்பு கொண்டு அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வர். நாளடைவில் இமெயில் நட்பு காதலில் முடிந்தது.

    சுரேஷ் படிப்பை முடித்து அயல்நாட்டு வங்கியில் பணியில் சேர்ந்தான். சுமதியின் சம்மதம் பெற அன்புடன் அவன் அனுப்பிய வார்த்தைகள்.

    Ennodu-Mattum Anbudan Iniya Life-ல் இணைவாயா !

    Share
  • திருமலை தெய்வம்!

    -ரா.பார்த்தசாரதி

    திருவருள்  தரும்  தெய்வம்  திருமலை தெய்வம் !
    தீராத  வினை எல்லாம் தீர்த்திடும்  தெய்வம் !

    வரும்துயர் பகையையும் போக்கிடும் தெய்வம்!         balaji
    வாய்திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !

    தாயாரைத்  தரிசித்து  வேங்கடவனைத் தரிசிப்போம் !
    தரணியில்  யாவரும் நலம்பெற  யாசிப்போம் !

    மனிதனைப்  புனிதம்  ஆக்குவது தெய்வ தரிசனம் !
    மனதில்  சலனம்  போக்குவது தெய்வ தரிசனம் !

    திருமலைவாசா  என்று அழைத்தாலே  குறைதீர்க்கும் தெய்வம் !
    தினமும்  நினைத்தாலே நல்வழி காட்டும் தெய்வம் !

    கோவிந்தா கோவிந்தா என்றாலே பரவசம் !
    கோவிந்தன்  அருளும் கிடைத்திடுமே  நம்வசம் !

    என்றும் நினைப்போம் பணிவோம் அவன்தாள் !
    எல்லார்க்கும் உகந்த தெய்வம்  திருமலை தெய்வம் !

     

    Share