சொல்லும் செயலும்!
-ரா.பார்த்தசாரதி
எழுதுக்களின் சேர்க்கையே சொல் எனப்படும்
சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன் சத்தியவான்
சொல்லும் சொற்களில் இரட்டை அர்த்தங்கள்
துச்சமாய் அசிங்கமாய் நினைக்க வைக்கின்றதே !
சொன்ன சொற்களை என்றும் அரசியில்வாதிகள் காப்பதில்லை
அவர்கள் கவரிமான் என்று நினைக்கத் தேவையில்லை
சொற்களை அலங்கரித்து மக்களை மயக்கும் அரசியல்வாதிகள்
தன் முன்னேற்றத்தையே கருதுபவர்கள் பிறர் நலத்தைக் கருதமாட்டார்கள்!
வாழ்விற்கு வழிகாட்டும் சொல்லைச் சொல்பவர்கள் ஞானிகள்
அர்த்தமற்ற சொற்களைச் சொல்பவர்களே அஞ்ஞானிகள்
சொன்ன சொல்லைத் திரும்பத்திரும்பச் சொல்பவன் பித்தன்
சொல்லின் அர்த்தம் தெரியாமல் சிரிப்பவன் முட்டாள் !
சொற்களை அலங்கரித்துக் கவிதைபாடும் கவிஞன்
ஒரு சொல் ஒரு செயல் செய்பவன் சராசரி மனிதன்
சொற்களைக் கொண்டு பணம் சம்பாதிப்பவன் வியாபாரி
சொல்லின் வல்லமை கொண்டு வாதாடும் வழக்கறிஞர்கள் !
சொல்லிலே கலைவண்ணம் காண்பவன் கலைஞன்
கல்லிலே கலைவண்ணம் காண்பவன் சிற்பக் கலைஞன்
காண்பதைத் தத்ரூபமாக வரைபவன் ஓவியக் கலைஞன்
காதலில் ஈடுபடும் காதலனும் ஒரு காதல் கலைஞன்!