ராமன் எத்தனை ராமனடி!
-ரா.பார்த்தசாரதி
ராமன் பிறந்ததும் நவமியிலே
கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே
இரண்டும் கடவுளின் அவதாரங்களே
இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை நாயகர்களே!
ராமாயணயத்தின் காவியத் தலைவன் ராமனே
பிறன்மனை நோக்குபவனைத் தண்டித்தவனும் ராமனே
நட்புக்கு இலக்கணமாய் இருந்தவனும் ராமனே
ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே!
ராம நாமமே நலம் தரும் நாமமே
அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே!
யாவருக்கும் நன்மை அளிக்கும் நாமமே
ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே!
பங்குனி உத்திரத்து வரும் ராம நவமியே
பானகமும், பருப்பும், மோரும் நிவேதனமே
ராமன் எத்தனை ராமனாய் இருந்தாலும்
அவரது கல்யாணகுணங்கள் சிறப்புடையதே!