தாயும், தாய்மையும் !
-ரா.பார்த்தசாரதி
ஆணிற்குக் கிடைக்காத ஓர் பரிசு
பெண்ணிற்கு மட்டும் கிடைக்கும் பரிசு
தன் வயிற்றில் ஓர் உயிரை வளர்கின்றாள் 
கவள உணவையும் குழந்தைக்காக உண்கின்றாள் !
என்னதான் விஞ்ஞானம், வசதிகள் வளர்ந்தாலும்
ஆண் தன்னைப் பற்றியே நினைத்திருந்தாலும்
பத்து நிமிடங்கள் நின்றாலும் கால் கனத்து வலிக்கும்
பத்து மாதம் சுமந்தாலும் கருவறைச்சுமை வலிப்பதில்லை!
வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்
இந்த வலியால் மற்றொரு உயிர் வருவதைக் காண்பார்கள்
குழந்தை, சிறுமி, குமரி,மனைவி என்கிற பல உறவானதே
தாய்மையில்தான் ஒரு பெண் தன்னிறைவு பெறுகின்றதே!
குழந்தையைக் கொஞ்சுவது ஆணுக்கும் பெண்ணுக்கும் பேரின்பம்
குழந்தையைக் கட்டி அணைப்பதில்தான் தாய்க்குத் தனி இன்பம்
தாய்மையின் மகத்துவம் என்பது பெண்ணின் பெருமை
தத்ரூபமாகவும் தத்துவமாகவும் இருப்பதே உண்மை!
