-துஷ்யந்தி, இலங்கை

தீயென்று தெரிந்தும்
தொட்டுப் பார்க்கும் வயது
கல்லூரி வாழ்வில்
எல்லோர்க்குமான துடிப்பு!

வீணான எண்ணங்களை                          kanja
வாசல் வரை வந்து
தேனாகக் காட்டுவதில்
தீயோர்க்கு இன்பம்!

சரியென்றும் பிழையென்றும்
தேடிப் பார்க்காது
பிழைகளில் நுழைவது
பலரது பழக்கம்!

நோயாகப் போதையை
நுழைவித்து வாசலில்
நோக்கத்தை ஈடேற்றும்
சதிகாரர் எண்ணம்!

சிலந்தி வலையிலே
மாட்டிக்கொண்ட வண்டாய்
வெளிவர வழியில்லா
மாணவர் எத்தனை?

விழிப்பொன்றை ஏற்படுத்தி
விளக்கத்தைச் சொன்னால்
கல்லூரி வாசலும்
பூங்காவனமாய் மாறிடுமே!

பெற்றோரின் பொறுப்பும்
ஆசிரியரின் போதனையும்
மாணவப்பூக்களை வழிதவற
நிச்சயம் விடுவதில்லை!

அறிவைத் தேடும்
சிறியோர் மனதில்
அபாயத்தை விதைக்கத்
தடையென்று மொழிவோம்!

சட்டங்கள் இயற்றுவோம்
சதிகாரரை வெல்லுவோம்
சமுதாயச் சீர்கேடுகளை
வளர விடாது தடுப்போம்!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.