அம்பிகையின் அழகு

 

இசைக்கவி ரமணன்

அம்பிகையின் அழகைக் கேட்டு மகிழுங்கள்!

ஜூலை 1976. பாரதி கலைக்கழக அன்பர்கள் ஒரு திருக்கோயிலில் ”தெய்வக் கவியரங்கம்” என்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அது எந்தக் கோயில் என்பது இப்போது நினைவில் இல்லை. ஐந்தாறு கவிஞர்கள் – இளையவன், மதிவண்ணன் போன்றோர், ஆளுக்கொரு தெய்வத்தைப் பாடவேண்டும் என்பதாக ஏற்பாடு.

“நீ அம்பிகையின் அழகு என்ற தலைப்பில் பாட முடியுமா?” என்று கேட்டார்கள். நான் மிக அலட்சியமாகவும் ஆணவத்தோடும், அது ரொம்ப சுலபம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
 
அந்தக் கணத்திலிருந்து என்னில் கவிதையைக் காண இயலவில்லை…நான் சொல்வது உங்களுக்கு நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். இருந்தாலும் சொல்கிறேன். ஒரு வார்த்தை கூட எனக்கு வரவில்லை! பேசிக்கொண்டே இருந்தவன் தீடீரென்று நட்ட நடு அவையில் ஊமையாகிப்போனால் எப்படி இருக்கும்? அப்படி, எனக்குத் தமிழே மறந்துவிட்டதுபோல் மனது சூனியமாகி விட்டது.

யாரிடமும் இதைப் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு துக்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. ஒருநாள் பகற்பொழுது முழுவதும் எனக்குத் தமிழே மறந்ததுபோல், சொல்லே இல்லாமல் துடித்தேன்.

விளக்கேற்றி வைத்து, பராசக்தியிடம் மன்னிப்புக் கேட்டேன். ஜீவித்திருக்கும் உயிர்களுக்கு எப்படி அடுத்த மூச்சு நிச்சயம் இல்லையோ, அதுபோல் அடுத்த சொல்லுக்கான உத்தரவாதம் இல்லாத கவிஞன்தான் நான்; அவளிட்ட பிச்சையே தவிர என் திறமை என்று ஏதுமில்லை; என்று புரிந்துகொண்டேன்.

 
பிறகு வந்தன வார்த்தைகள். அதுதான் “அம்பிகையின் அழகு” என்னும் கவிதை. அதை என் குரலில் ஒலிப்பதிவு செய்து இத்துடன் இணைத்துள்ளேன். இதில் இலக்கியம், கவிதை நயம் எதுவும் கிடையாது. ஆனால், எனக்கு இது அம்பிகையுடனான அந்தரங்க அனுபவம். 36 ஆண்டுகளுக்குப் பிறகு இதை ஏன் பொதுவில் கொண்டு வருகிறேன்?

அவளைத்தான் கேட்கவேண்டும்!

அம்பிகையின் அழகை செவியாலும் பருகலாம்!

படத்திற்கு நன்றி :

http://www.starsai.com/garbarakshambigai-photos/

Share

Comments

One response to “அம்பிகையின் அழகு”

  1. Shruthilaya

    அப்ப்பா!!! என்னமா இருக்கு சார் உங்க கவிதை! வார்த்தைகளே இல்லை சார்!
    பாரதி போல உங்களுக்கும் அன்னை திலகமிட்டாளோ என்று தோன்றுகிறது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *