இசைகவி ரமணன்

நட்டநடுவில் – சுவைத்து மகிழுங்கள்

நட்ட நடுவில் பொட்டுவைத்து
நட்சத்திரங்களை நட்டுவைத்து
கோள்களினைச் சுழலவைத்து கோளங்களை அலையவைத்து
வெள்ளம்வடிந்து நாணல்புல்லை நிமிரவைத்தவள்! அந்த
வானத்திலே முகம்துடைத்துச் சுருட்டி எறிந்தவள்!
 அவள்தான் என்னையும் படைத்தவள்!
 எனக்குள் தன்னையும் அடைத்தவள்!!
தர்மங்களும் நியாயங்களும் அவள் மனத்தின் இட்டம், நம்
தர்க்கமெல்லாம் தாழ்வாரத்தில் குழந்தை அடிக்கும் கொட்டம்!
மர்மமாக இருப்பதிலும் அவளுக்கில்லை திட்டம்
மனம்தொறந்தா மல்லிகைஉதிர்ந்து மணக்குமவள் கொற்றம்!

தக்கைபோல மெதந்திடாமல்
தாயை அறிய முடிந்திடுமா?
கட்டிப்பிடிக்கவும் முடியாது விட்டுவிலகவும் வழியேது?
தொட்டுப் பார்க்க முடியாத தொலைவில் ராணி, என்னைத்
தொட்டுத் தொட்டு வார்த்தைசெல்லும் தோழமை வாணி
 அவள்தான் தொலைவில் ராணி
 அவளே தோழமை வாணி

 
சாதனையும் வேதனையும் கானலிலே நீரு, அவ
சோதனையே வைப்பதில்லே தேறுவது யாரு?
இன்பம் பதநி துன்பம் கள்ளு இப்படிப் பாருநீ
சரியும் தவறும் அவள்வீணையில் சரிகமபதநி

பேரைச் சொல்லி அழைத்தாலும்
பேந்தப் பேந்த முழித்தாலும்
ஊரைக்கூட்டித் தொழுதாலும் உருண்டு புரண்டு விழுந்தாலும்
ஒண்ணும்லாபம் இல்லேநானும் சொல்வதைக் கேளு, அவளை
உயிர்க்குயிரா அம்மான்னு ஒரு தரம் கூவு
 உண்மையைச் சொல்லுறேன் கேளு
 அம்மான்னு ஒருதரம் கூவு

படத்திற்கு நன்றி :

https://ramanan50.wordpress.com/2012/09/01/for-childless-couplethirukkarukaavoor-details/

நட்டநடுவில் – செவி குளிர!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *