வீணையா (பாடல்)

 

இசைக்கவி ரமணன்

வீணையா – கேட்டு மகிழுங்கள்

வீணையா? விதியினைச் சரிசெய்யும் இதயத்தின்
ஆணையா?
விரல்களா? விண்ணுக்கும் மண்ணுக்கும் வாழ்வுதரும்
சுரங்களா? ஒரு
வீணையை ஏந்திய திருமகள் என்
விழியினில் வந்துநின்றாள் அவள்
செந்தாமரையில் கலைமகள், புதுச்
சிரிப்புடன் வந்துநின்றாள்
அலைமகளும் கலைமகளும் வந்து குலவுகின்ற தருணம்
மலைமகளும் இதைக்கண்டு தன் மனது குளிரும் தருணம்

பார்க்கப் பார்க்கப் பரவசம் அம்மா பார்க்க முடியவில்லையே
பால்மழையில் குழந்தையம்மா பருகத் தெரியவில்லையே
சேர்த்துப் பிடித்த மணல்மேடெல்லாம் தேன்மழையில் கரைந்ததுவே!
செல்லுமிடம் நானேயாகி சிலையாய் உயிர் நிலைத்ததுவே!
நேரில் நின்ற சிறுமியின் கண்ணில் கோடிமின்னல் தெறித்ததுவே, அவள்
நெஞ்சின் ஒளியில் நீண்ட நிழலில் அலையும் கலையும் தோன்றியதே
கண்ணில் மறைந்து நெஞ்சில் நுழைந்து கமலமாக விரிந்ததுவே                     

(வீணையா)

 

நாணம்வந்து சிவந்ததிதயம் அதிலெழுந்தாள் திருமகளே
நாள்:விடிந்து வெளுத்தபோது அங்குவந்தாள் கலைமகளே
காணக்காண எங்கும்தோன்றிக் கலகலத்தாள் மலைமகளே
கண்கள்கூச உயிரின் உள்ளே ஒன்றானாள் ஒருமகளே
மாறிமாறித் தோன்றினாலும் மர்மமொன்றும் இல்லையே
ஒளியும் இருளும் ஒன்றே என்றால் மாயமொன்றும் இல்லையே
மாயம் மர்மம் தீர்ந்துவிட்டாலும் மலைப்பு தீரவில்லையே! (வீணையா)

வீணையா – ஆம் கேட்டு மகிழுங்கள்!

 படத்திற்கு நன்றி :

http://www.brass-handicrafts.com/saraswati-statue.html

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *