Tag: காயத்ரி பூபதி

  • நடை பயில்வாய் மகளே !

    காயத்ரி பூபதி

    baby-walk-small

    சிந்தை முழுக்க நிறைந்தவள்

    சின்னஞ் சிறு குழந்தை யவள்

    சிறு நுதல் பேரொளியாய்

    குவி இதழ் குறு நகையாய்

    பூப் போன்ற புன்னகையால்

    அன்றலர்ந்த மலர் போல

    வான் முகம் சிவக்க

    இசைந்தாடும் சலங்கை ஒலிக்க

    அசைந்தாடும் தென்ற லென

    குறுநடையே கலை யென

    நடை பயிலும் சிலையழகே

    என் மகளே! என் மகளே!

    குவளை செவ்வாய் முத்தழகே!

    புவி சிறக்க நடைபயில்வாய்

    மகளே நடை பயில்வாய்!

    தத்தி தத்தி தடுமாறினாலும்

    தடம் மாறாமல் நடை பயில்வாய்!

    தடுமாறி விழுந்தாலும் திரும்ப

    எழும் திடம் மறவாமல் நடை பயில்வாய்!

    தடம் நிறைந்த இடர் நீக்க

    உன் திறம் உணர்ந்து

    கலங்காமல் நடை பயில்வாய்!

    புவி போற்ற நடை பயில்வாய்!

    நடை பயில்வாய் மகளே! நடை பயில்வாய் !

    Share
  • படக்கவிதைப் போட்டி 73 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13734582_1050429538344578_1049135032_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் ஷாமினி. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    இந்த ஒளி படத்தில் இடம் பெற்றிருப்பவர் பறை கொட்டி இசைக்கும் தொழிலாளி. இவர் கொட்டும் பறைக்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம் இனி,

    பறையின் பயன்பாடு ஆதிகாலம் தொட்டு இருந்துவந்துள்ளதை சங்க இலக்கியத்தால் அறிய முடிகின்றது. பறை நிலத்தைக் குறிக்கும் குறியீடாக சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. பறை கொட்டி முரசறைவிக்கும் வழக்கமும், விலங்கை விரட்டும் வழக்கமும் இருந்து வந்துள்ளதை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

    ஆதி காலம் தொட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழரின் பறை, இன்று ஏழை எளிய மக்கள் விரும்பும் பறையாகவே உள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார் ராதா விஸ்வநாதன்.

    செந்தமிழ் நாட்டுக் கலையாகவும், இந்த நாட்டு இசையாகவும் விளங்கிய பறையின் ஓசை நயத்தை நடையழகுடன் சொல்லியிருக்கின்றார் செண்பக ஜெகதீசன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    பறையின் தொன்மை வரலாற்றையும், பறை இசையின் பயன்பாட்டையும் இசை கருவியிலிருந்து எழும் ஒசை பற்றியும் எடுத்து கூறும் சரஸ்வதி ராசேந்திரன், இசைக்குள் புகுந்து விட்ட சாதிய பார்வையையும் சுட்டிக் காட்டியுள்ளார். கவிஞருக்கு பாராட்டுகள்.

    தமிழின அடையாளம்

    ஆதித்தமிழன் ஆரம்பித்த இசைமொழி

    அச்சம் மகிழ்வென கொண்டாடிய குலத்திற்கு

    விலங்கின அச்சத்தை விலக்கிட்ட பறை

    கலங்கின நெஞ்சத்தை கரம் உயர்த்திய பறை

    காலவெள்ளத்திலும் நிலைத்த இசைக்கலை

    பறையாட்டமே தப்பாட்டமாய்………

    இறவாப் புகழ்தரும் அஃறிணையின் தோல்

    இளைஞா்களுக்கு எழுச்சியூட்டும்

    இறந்தும் பாடம் சொல்லும்

    இசைக்க எத்தனையோ கருவியிருக்க

    இன்றளவும் பறை மனச்சிம்மாசனத்தில்

    படித்தவனோ பாமரனோ

    பாட்டாலே புரியவைப்பான்

    தேங்கிய உணர்வுகள் வெடித்தெழ

    வாங்கிய கரங்களில்

    ஓங்கியே ஒலிக்கும்

    ஒங்கிய இசையால் உலகளக்கும்

    தன்னை உருமாற்றி

    நாகரிகக் கரங்களில் இசைத்தாலும்

    பறைமொழி தான் இன்றளவும்

    புதுமொழியாய்………..

    பட்டிதொட்டியெல்லாம் பரவிய பறையாட்டம்

    தமிழர் கலையென தப்பாமல் முழக்கமிடும் தப்பாட்டம்

    சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற பறையை எடுத்துக் கூறி, அதன் தொன்மை தன்மையையும், கால வெள்ளத்தில் நிலைத்து, இன்றுவரை நம் வாழ்வியல் கூறுகளில்  இடம் பெற்றுவரும் தன்மையையும், நாகரிக வளர்ச்சியில் உரு மாற்றத்துடன் பல்வேறு பெயரில் வழங்கப்பட்டுவந்தாலும், தமிழர் கலையான பறை தான் அடிப்படையான இசையாக அமைந்துள்ளதை எளிமையாகவும், நடையழகோடும் எடுத்துக் காட்டியுள்ள மா. பத்ம ப்ரியாவின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தேடுக்கின்றேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 72 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13652649_1046331315421067_1817652577_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் பிரபு வெங்கட்ராமன். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    இந்த ஒளிப்படத்தில் இடம்பெற்றிருப்பவர் உடன்பிறப்பை தூக்கிச்சுமந்து நிற்கும் சிறுமி. சுமையல்ல சுகம் என்று புன்னகையுடன் இச்சிறுமி எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பயணம் குறித்து, கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,

    வறுமை ஒருபுறம், வறுமையில் காணும் இன்பமாய் குழந்தைகள் ஒருபுறம் என்று அவதியுறும் மக்களின் நிலைக்கு தீர்வாய் குழந்தை தொழிலாளிகள் உருவாவதை தம் கவிதையில் எடுத்துக்காட்டியுள்ளார் மா. பத்மப்ரியா. கவிஞருக்கு பாராட்டுகள்.

    தாய் தந்தை இல்லாமல் தவிக்கும் குழந்தைகள், இளைய உடன்பிறப்பை தாய்மை உணர்வோடு தூக்கிச் சுமக்கும் மூத்தவளான இச்சிறுமி நாளை சமுதாயத்தின் ஏளனப் பார்வைக்கு ஆளாகி விடக்கூடாது என்று சமுக பார்வை கொண்டு எடுத்துரைத்துள்ளார் செண்பக ஜெகதீசன்.

    கிராம வாழ்க்கை வயலுக்கு வேலைக்குச் செல்லும் தாய், இளையவனை சுமக்கும் மூத்தப்பிள்ளை , மூத்தவள் உழைக்க, இளையவன் கல்வி கற்க என வறுமையிலும் செம்மையாக வாழும் குடும்ப நிலையை எடுத்துக்காட்டும் சரஸ்வதி இராசேந்திரன், நகர மக்களை போல் மனிதநேயத்தினை மறந்து விடக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றார்.

    பல தடைகளைத் தாண்டி, ஏற்ற இறக்கங்களுக்கு ஈடு கொடுத்து விழித்தெழுந்த பெண் கல்வி குறித்து பேசுகின்றது  இக்கவிதை ,

    காலன் இட்ட பிச்சையா இல்லை

    கள்ளிப்பாலில் கூட கலப்படமா

    கடவுளின் கருணை மனுவில்

    கருச்சிதையை எழூச்சியுடன்

    காலால் எட்டி உதைத்த வெற்றிச் சிரிப்பு

    கால் வயிற்றிற்காக‌

    கடுமையாக உழைக்க அச்சமில்லை

    கஞ்சியோ கூழோ கிடைத்தால் போதும்

    காற்று மழை வெய்யில் கண்டு பயமில்லை

    கல்வி கற்க வழி செய்வீர்களா

    கன்னியாக நான் வளர்வதற்குள்

    கழுத்தில் தாலி ஏற்றி விடாதீர்கள்

    கண்களில் ஆயிரமாயிரம்

    கனவுகளோடு காத்திருக்கிறேன்

    கல்வி கற்க வழி செய்வீர்களா

    கலுடைக்க மட்டும் அனுப்பிடாதீர்கள்

    கையில் என்னுடன் பிறந்தவருடன்

    கனவுகளையும் சுமந்து நிற்கிறேன்

    கல்வி கற்க வழி செய்யுங்கள் இல்லை

    கனவு காண மட்டும் வழி செய்யுங்கள்

    (ராதா விஸ்வநாதன்)

    கள்ளிப்பாலாலும், கருச்சிதைவாலும், குழந்தை மணத்தாலும் சிதைவுற்ற பெண்ணின் வாழ்வு கல்வியால் மட்டுமே ஏற்றமடைய முடியும்  என்று அறிஞர்கள் வலியுறுத்திய பெண் கல்வி குறித்த கருத்தினை வெளியிட்டுள்ள ராதா விஸ்வநாதனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக  தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (73)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    13734582_1050429538344578_1049135032_n

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • படக்கவிதைப் போட்டி 71 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13599462_1042198989167633_571495808_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் சாந்தி வீ ஜே. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    இந்த வார படக்கவிதைக்கான ஒளிப்படத்தில்  நம் கருத்திற்கு விருந்தாக காக்கையோடு ஒன்றாக கூடி உண்ணும் பசுவும், கன்றும் இடம் பெற்றுள்ளன. இவ் வொளிப்படத்திற்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,

    இங்கு இடம் பெற்றுள்ள கவிதைகள் பொதுவாக பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை வலியுறுத்துவனவாக அமைந்துள்ளன.

                    சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்

                     பெற்றத்தாற் பெற்ற பயன்.

    என்ற குறள் கருத்தினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது செண்பக ஜெகதீசனின் கவிதை.  மனிதன் உயர்வு பெற விலங்குகளிடமிருந்தாவது சுற்றம் பேணுதலை கற்க வேண்டும் என்று கூறுகின்றார் கவிஞர்.

    பாலைக் கொடுத்தாலும் பசுக்கள் பராமரிப்பு இல்லாமல் உணவிற்காக வீதியில் அலையும்  நிலையையும், பகுத்துண்டு உயிர் ஒம்பும் நிலை மற்ந்த மனித மனத்தின் அவல நிலையையும் எடுத்துக்காட்டுகின்றார் சரஸ்வதி இராசேந்திரன்.

    ஐந்தறிவுடைய  உயிரினங்கள் கூட ஒற்றுமையுடன் ஒன்று கூடி உண்டு, எந்த வித பேதமின்றி, எங்கு சென்றாலும் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவ்வாறிருக்க மனிதன் பேதம் கொண்டு வாழ்ந்தால் ஆறறிவு இருந்தும் என்ன பயன்  என்கின்றார் ராதா விஸ்வநாதன்.

    கோமாதாவாகவும், குலமாதாவாகவும் போற்றப்படும் பசுக்களின் இன்றைய நிலையை எடுத்துக்காட்டுகின்றது இக்கவிதை,

    பசுக்கள் உணவிற்காக வீதியையும், குப்பை தொட்டியையும் நாடும் நிலையையும், ஊசி போட்டு பால் கரந்தும், அடிமாடாகவும் வதைக்கப்படும் நிலையையும்  எடுத்துக்காட்டி, பசுக்களுக்கு  எதிராக நடக்கும் உயிர் வதைச் சட்டப்படி குற்றம் என்பதை அறிவுறுத்தியுள்ளார்  கவிஞர். உயிரோம்பல் குறித்த கருத்தினை எளிமையான வரிகளில் வெளியிட்டுள்ள  ரா.  பார்த்தசாரதியின்  கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (72)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    13652649_1046331315421067_1817652577_n

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    100914400@N08_rபிரபு வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • படக்கவிதைப் போட்டி 70 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் கோகுல்நாத். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    13563176_1038235166230682_1340979644_n

    இந்த வார  படக் கவிதைப் போட்டிக்கான  ஒளிபடத்தில் கிராம தேவதையும், அதை வணங்கும் பெண்மணியும் இடம் பெற்றுள்ளனர். இவ் வொளிப்படத்திற்கு கவிஞர்கள் வரைந்த கவிதைகளைப் பார்ப்போம். இனி,

    கிராம தேவதைகள் கிராமத்தின் குறியீடாகும். கிராமம் என்ற உடனே நம் நினைவுக்கு வருபவை  சிறு தெய்வ வழிபாடும், மக்கள் கூட்டமாக கூட்டமாக சேர்ந்து கொண்டாடும் திருவிழாக்களும் தான். இன்றும் கூட பலர் நகரங்களில் வாழ்ந்தாலும் தன் சொந்த கிராமங்களுக்குச் செல்வதற்கு கூட இது போன்ற திருவிழாக்களே காரணமாக  இருக்கின்றன.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடி மகிழ்ந்து கொண்டாடும்  திருவிழாவை கண்முன் கொண்டு வந்து காட்டுகின்றது ராதா விசுவநாதனின் கவிதை. இவ் வுலகம் அனைத்தையும் காசுக்கு  விலை பேசும். அதற்கு கோயில்களும் கூட விதிவிலக்கல்ல என்று கோயில்களின் இன்றைய நிலை குறித்து வருந்தியுள்ளார்  கவிஞர்.

    எல்லைச்சாமி, காவல் தெய்வம் என்று தெய்வங்கள் பல இருந்தாலும், நாட்டில் கொலையும், கொள்ளையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நடந்த வண்ணம் உள்ளனவே. காவல் தெய்வமே கடமை மறந்து நீயும் லஞ்சம் வாங்கி விட்டாயோ? என்று நாட்டின் உண்மை நிலை குறித்த கருத்தினை எடுத்துக் கூறியுள்ளார் சரஸ்வதி இராசேந்திரன்.

    உழவுத் தொழில் நிலை குன்ற கிராமத்தை விடுத்து நகரத்தை நாடும் மக்களின் நிலையையும், உலகம் செழிப்பதற்கு கிராமம் செழிப்படைய வேண்டும் என்பதையும் மக்கள் உணர வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளார் செண்பக ஜெகதீசன். சிதைந்து வரும் கிராமமும், சிறு தெய்வ வழிபாடும் மீட்டெடுக்கும் சூழலில் உள்ளதை அறிவுறுத்தியுள்ள கவிஞருக்கு பாராட்டுகள்.

    குலசாமி எல்லைச் சாமி

    காக்க வேணும் மண்ணுயிர

    சொல்லவேணும் உண்மைகள

    புறம்போக்கு இடமெங்கும்

    நீ

    சுயம்புவாய் தோன்றினாயா – சிலர்

    சுயநலத்தால் தோன்றினாயா

    உண்மை சொல்ல வேணும் – இந்த

    உழைப்பாளி ஜனங்களுக்கு,

    வானம் பார்த்த பூமியாக

    பாவிமக நிக்கிறேன்

    பட்டா போட்ட வீடு

    வெறும் கனவா

    உன்னைக் கேட்கிறேன்

    புறம்போக்கு நிலத்த

    பட்டா போட நினைச்சு

    படுபாவிக் கூட்டம்

    கோயில் கட்டி வைக்குது,

    ரோட்டோர இடத்தை

    அபகரிச்சு நிக்குது…………..

    மூடநம்பிக்கை சாயம் பூசி

    முதலாளி வா்க்கத்தின் நிலஅபகரிப்பு

    ஒய்யாரமாய் இருக்குது

    சாயம் வெளுக்க வேணும்

    சாமியே! துணை இருக்க வேணும் ……

    கிராமத்தின் குறியீடாக விளங்கும் சிறு தெய்வ வழிபாடு மக்களின் மூட நம்பிக்கைகள் அரங்கேறுவதற்கும் இடம் தருகின்றது. புறம்போக்கு நிலத்தை அபகரிக்கவும், ரோட்டோர இடத்தை அபகரிக்கவும் நினைப்போர் மக்களின் தெய்வ வழிபாட்டையும், மூட நம்பிக்கையையும் தனக்கு சாதகமாக பயன் படுத்தும் சமூக அவலத்தை எடுத்துக் காட்டியுள்ள முனைவர் மா பத்ம ப்ரியாவின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 71

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13599462_1042198989167633_571495808_n

    107291507@N03_rசாந்தி வீஜே  எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • படக்கவிதைப் போட்டி 69 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி:

    13493059_1033652313355634_1587480765_n

     

     

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு. வெங்கட் சிவா. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    படக் கவிதைப் போட்டிக்கான ஒளிபடத்தில் இருப்பவர்கள் மணலில் வீடு கட்டி விளையாடும் சிறுவர்கள். இவர்கள் கட்டிய வீட்டிற்கு கவிஞர்கள் தீட்டிய பா வண்ணத்தைப் பார்ப்போம். இனி,

    சிறுபிள்ளை பருவத்தில் குழந்தைகள் மனம் விரும்பியவாறு விளையாடுதற்கு பெற்றோர்கள் தடையாக இருக்கக் கூடாது. நல்ல எண்ணத்தை விளையாட்டோடு விளையாட்டாக எடுத்துக் கூறினால், அது அவர்களின் உயர்வுக்கு வழி வகுக்கும் என்று அறுவுறுத்துகின்றார் கவிஞர் செண்பக ஜெகதீசன்.

    விளையாட்டு உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மனப்பயிற்சியும் கூட. ஒவ்வொரு விளையாட்டிலும் ஏதாவதொரு வாழ்க்கைக்கேற்ற பாடம் இருக்கும். அந்த வகையில் எவ்வளவு தான் அலைகள் வந்து அலைக்கழித்தாலும் சளைக்காமல் மணலில் வீட்டைக் கட்டும் சிறுவர்களின் விளையாட்டில் கடமையுணர்வும், விடாமுயற்சியும் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார் சரஸ்வதி இராசேந்திரன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    நகரமயமான வாழ்க்கைச் சூழலில் குழந்தைகள் ஓடி விளையாடுதற்கு இடமேது? ரியல் எஸ்டேட்காரர்களைத் தாண்டி தனியாக வீடு கட்டும் விருப்பமுடையவரின் எண்ணம், சிறுவர்கள் கட்டும் மணல் வீடு போல், அலை வந்து அலைக்கழிக்க கலைந்து போகும் நிலையாகும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார் முனைவர். பத்ம பிரியா.

    சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இயற்கை வளங்களைப் பேண வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது இக்கவிதை.

    குருவிகளின் கூடு மரத்தினிலே-இந்த‌
    குழந்தைகளின் வீடு ஈர மணலிலே

    மணல் மாயமாய் மறையும் முன்னே
    மணல் வீடு கட்டி மகிழட்டுமே

    காற்று வீசி கலைக்கும் முன்னே
    கோட்டைகள் மணலில் பல கட்டட்டுமே

    மாடி வீடு கட்டி அங்கே-நம்
    கொடியினை நட்டு வணங்கட்டுமே

    ஈரமண்ணில் ஆடிய ஆட்டம் என்றும்
    இதயத்தில் உலரா வண்ணம் இருக்கட்டுமே

    காடுகள் யாவும் ஆயின வீடுகளே
    காணாமல் போனது ஆற்று மணலுமே

    மார்பிள் வீடு கட்டி வாழ்ந்தாலுமே
    மணல் வீடு போல்தான் வந்திடுமா

    மண் வாசனை போனது எங்கே
    மரஙகளும் போனது எங்கே

    குருவிகளுக்கும் கூடு கட்ட மரமில்லை
    குழ்ந்தைகள் வீடு கட்ட மண்ணில்லை

    காற்றும் கடலும் வந்து அழிதாலும்-இவரின்
    கனவினை மட்டும் அழிக்காது காத்திடுவீர் (ராதா விஸ்வநாதன்)

    வீட்டிற்காகவும், மாளிகைக்காகவும்  காடுகள் அழிக்கப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார் கவிஞர்.மழை இன்மையையும், மணற் கொள்ளையையும் சுட்ட, மண்வாசனை போனது எங்கே மரங்களும் போனது எங்கே என்று கவிஞர் எடுத்தாண்டிருப்பது அருமை. எளிமையான வரிகளில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தினை வெளியிட்டிருக்கும் ராதா விஸ்வநாதனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி … (70)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13563176_1038235166230682_1340979644_n

    கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • படக்கவிதைப் போட்டி .. 69

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13493059_1033652313355634_1587480765_n
    95475568@N05_rவெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.06.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • படக்கவிதைப் போட்டி 68 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13444181_1029839340403598_905366858_n

     

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் புதுவை சரவணன். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    மலைப் பாதையில் மழை வரும் முன்பே குடை பிடித்துச் செல்லும் இச்சிறுவன் தான் யாரோ?

     

    
    

    விளையாடும் பருவம் இது

    விளையாட நேரம் ஏது

    சின்னத் திரையில் சிறு பிள்ளைப் பருவமும்

    வெள்ளித் திரையில் விடலைப் பருவமும்

    களி கொள்ளும் காலம் இது.

    திரைக்குள் காணும் உலகை விடுத்து

    திரைக்குள் அப்பால் உள்ள

    வசந்த உலகைக் காண

    எண்ணச் சிறகை விரித்து

    வண்ணக் கனவுகளை

    வகையுற அமைத்து

    வாகை சூடும்

    நாள் இது !

    என்று வானவில் குடை விரித்து ஒய்யாரமாய் அடி எடுத்து வைக்கும் இச்சிறுவனுக்கு கவிஞர்கள் எழுதிய பாக்களைப் பார்ப்போம். இனி,

    இளைய தலைமுறைக்கு பெற்றோர்களே வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றது இக்கவிதை,

    வெயிலும் மழையும் இலையெனிலும்
    வேடிக்கைக் காகக் குடைபிடிப்பான்,
    பயிலும் பள்ளி விடுமுறையில்
    பறக்கச் சிறகுகள் வந்துவிடும்,
    துயிலும் பொழுதைத் தவிரதினம்
    துடிப்பா யிருக்கும் பருவமிது,
    இயல்பிதை வளர்த்தே நல்வழியில்
    இவனைச் செதுக்குவீர் பெற்றோரே…! – செண்பக ஜெகதீசன்…

    சின்னஞ் சிறு வயதில் துடிப்பாய் இருக்கும் சிறுவர்களின் இயல்பினை உணர்ந்து அவர்களை அரவணைப்பதும், நிலைப் பிறழாமல் நடக்க நல்வழி காட்டுவதும், பெற்றோரின் கடமை என்கிறார் கவிஞர்.

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (68)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13444181_1029839340403598_905366858_n

    95494202@N04_rபுதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.06.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • படக்கவிதைப் போட்டி 67 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13315611_1025713060816226_4364786465585856721_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் ஆதித்ய நாகராஜ். இதனைப் போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள். இங்கு படக்கவிதைப் போட்டிக்கான படத்தில் இருப்பவர் குரங்காட்டி. கோல் கொண்டு குரங்கை ஆட்டுவிக்கும் இவருக்கு, எழுதுகோலால் கவிஞர்கள் ஆக்கிய கவிதைகளைப் பார்ப்போம் இனி,

    வயிற்றுப் பசிக்காக குரங்கை வைத்து வித்தைக் காட்டிப் பிழைப்பு நடத்தும் குரங்காட்டி தன் பசியை மறந்து மக்களின் கவலையை மறக்கச் செய்வதாகப் பாடியுள்ளார நாமக்கல் முருகேசன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    குரங்காய் குனிந்தே வாழாமல் வாய்ப்புக் கிடைத்ததும் மனிதன் தோள்மீதமர்ந்து தன் வித்தையைக் காட்டும் குரங்கின் திறம் கூட மனிதனுக்கு இல்லையே என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் செண்பக ஜெகதீசன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    குரங்கின் உழைப்பே

    குரங்காட்டியின் பிழைப்பு

    குரங்கை விட்டால்

    அவனுக்குபிழைப்பில்லை

    அவனை விட்டால்

    குரங்கிற்கிற்கும் கதியில்லை

    அடிக்குப்பயந்தும்

    ஆகாரத்திற்காகவும்

    அவன்

    ஆணைப்படி ஆடும்

    அந்தரத்திலும் தொங்கும்

    வித்தைகாட்டியின் விரலசைவுக்கு

    இன்றைய பெற்றோர்களுமே

    வித்தை காட்டிகள்தான்

    பிள்ளைகளை

    அதைப்படி இதைப்படி

    டான்ஸ் ஆடு பாட்டுப்பாடுன்னு

    கோலில்லாமல்

    ஆட்டி வைக்கின்றனர்

    குரங்கு எப்படி குரங்காட்டியின்

    சொல்லுக்கு உடன் படுகிறதோ

    அதேபோல் பிள்ளைகளும்

    பெற்றோரின் செயலாக

    வெளிப்படுமேயன்றி

    தானாக எதுவும் செய்வதில்லை

    என்பதே தெளிவு

    சூழ் நிலையும் சந்தர்ப்பங்களும்

    மக்களையும் குரங்காட்டியாகத்தான்

    காட்டுகின்றன இன்றைய

    அரசியலுக்கும் இது பொருந்தும்

    எல்லாமே வயத்து பாட்டுக்குத்தான்

    எல்லாருமே குரங்காட்டித்தான் – சரஸ்வதி இராசேந்திரன்

    குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதால் என்னவோ குரங்கின் செயலுடன் மனிதன் செயலை ஒப்பிட்டுக் கூறும் மரபு உள்ளது. மரம் விட்டு மரம் தாவும் குரங்கின் செயல், எதிலிலும் நிலையில்லாத மனமுடைய மனிதனுக்கு உவமையாக வந்துள்ளது. மனம் ஒரு குரங்கு என்று கூறும் வழக்கமும் உண்டு. இங்கு குச்சியை எடுத்து குரங்கை ஆட்டுவிக்கும் குரங்காட்டியை, பிள்ளையைத் தன் விருப்பத்திற்கேற்ப கோலில்லாமல் ஆட்டிவைக்கும் பெற்றோர்களுக்கு உவமையாக சுட்டிக் காட்டியுள்ளார் கவிஞர். `கோலில்லாமல்’ என்று கூறுவதன் மூலம் பெற்றோர் குறிக்கோளில்லாமல் செயல்படுவதையும் எளிய வரிகளில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ள சரஸ்வதி இராசேந்திரனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு என்  பாராட்டுகள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 66 – இன் முடிவுகள்!

    காயத்ரி பூபதி

    13318513_1022161434504722_554123272_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் இராமலெஷ்மி. இதனைப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

    மலர்கள் என்றுமே கவிஞர்களின் எண்ண ஊற்றுகளின் பிறப்பிடமாகும். இலக்கியத்தில் மலர்கள் நிலத்தை, காலத்தைக் குறிக்கும் குறியீடாகவும், கருத்துச் செறிவான செய்திகளைச் சுட்டும் உவமையாகவும் சூழலைக் குறிக்கும் பின்னணியாகவும் இடம் பெற்றுள்ளன.

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து.

    என்று விருந்து பற்றிய கருத்துச் செறிவான செய்தியைச் சுட்ட(,) அனிச்ச மலர் உவமையாக வந்துள்ளது.

    பூக்களிலே நானும் ஓர்
    பூவாய்(த்)தான் பிறப்பெடுத்தேன்
    பொன் விரல்கள் தீண்டலையே
    நான் பூமாலை ஆகலையே

    என்ற புதுக் கவிதை வரிகளில் முதிர் கன்னிக்கு(ப்) பின்னணியாகிறது பூமாலை. இங்கு படக் கவிதைப் போட்டிக்கானப் படத்தில் இருக்கும் பெண்மணி, பூ விற்கும் தொழிலாளி. இவள்,

    கொளுத்தும் வெயிலில் வாடும் பூவை
    வறுமை வாட்ட விற்க வந்தாள்
    வாடா மலரை, வாடும் முன்னே!

    இப்பூவைத் தொடுத்த பூமாலைக்குக் கவிஞர்கள் தொடுத்த பாமாலைகளைப் பார்ப்போம்.

    படக் கவிதைப் போட்டிக்கு வெளிவந்திருக்கும் கவிதைகள் பொதுவாக(,) பொறுப்பில்லாத குடும்பத் தலைவனையும், குடும்பப் பொறுப்புகளைச் சுமந்து கொண்டு போராடும் குடும்பத் தலைவியையும் எடுத்துக் காட்டும் விதமாக அமைந்துள்ளன.

    பூவைத் தொடுப்பவள் தலையினிலே
    பாரமாய் வறுமை வதைக்கையிலே,
    சாவைத் தேடிடக் கணவன்தான்
    சாரா யத்தைத் நாடுகிறான்,
    தேவைக் கான பொருள்சேர்க்கத்
    தேடிப் பிள்ளைகள் வெளிநாட்டில்,
    பூவைத் தலையில் தக்கவைக்க
    பூவை தொடுக்கிறாள் பூக்களையே… (செண்பக ஜெகதீசன்)

    மதுவுக்கு அடிமையான கணவனால் வறுமையில் வாடும் குடும்பத்தையும், அதைச் சீர்தூக்கப் போராடும் மனைவியையும் எடுத்துக் காட்டியுள்ளார். மதுவினால் பெண்கள் அடையும் துயர நிலையை சுட்டிக் காட்டியுள்ள கவிஞருக்குப் பாராட்டுகள்.

    இயற்கை அளித்த பூவை
    இடையில் வந்த கணவன்
    இறப்பில் பறிகொடுக்கும் நிலை…..
    பூத்தொடுக்கும் நேர்த்தியில்
    உள்ள அழகைக் கூட
    இறைவன உனக்களித்த
    படைப்பில் மறந்தானோ….
    விதவை விற்றாலே.
    வீணெனப் பூவை
    வாங்க,மறுக்கும்
    வாழ்க்கை உலகமிது.
    பூவிழந்ததை மறைத்துப்
    பூவைத்துக் கொண்டு
    பூவையர்க்குப்
    பூவை விற்கப்
    பொய்வேடம் புனைகதையை
    என் சொல்ல..என் சொல்ல… (இளவல் ஹரிஹரன்)

    பூவைச் சூடா பூவையின் நிலைக் குறித்த தன் வருத்தத்தை வெளியிட்டிருக்கிறார் கவிஞர். பூவைத் தொடுத்த மல்லிகைப் பூமாலையின் வாசனையைவிட அவளிடமிருந்து வரும் உழைப்பின் வாசனையைப் பார்க்கின்றது வல்லமை. தொழிலைப் போற்றுவோம், தொழிலாளிகளைப் போற்றுவோம்.

    உழைப்பால் வந்த ஊதியத்தை
    கவர்ந்து கொண்டு
    உல்லாசமாய் வாழும்
    கணவன்மார்கள்
    இருக்கும் வரை
    ஜான் ஏறனால்
    முழம் சறுக்கும்
    என்பதை உணர்த்தியது
    இந்த பூவின் வாசம் ! (ஹிஷாலி)

    என்னதான் உழைத்தாலும் உழைப்புக்கேற்ற பலனை அடைய முடியாமல் தவிக்கும் பூக்காரியின் நிலையைக் காட்டுகின்றன, ஹிஷாலியின் கவிதை வரிகள்.

    நாளை மறுநாள் திருநாள்.
    மூத்தவளின் பிள்ளை
    பெரிசாகி நாளாச்சு
    முந்தானை நீளமாய் தாவணி.
    நடுவிலி பெத்தது
    முளைக்கு முன்னர் தனக்குமாம்.
    இளையவளின் கடைக்குட்டி
    கேளான் எதுவும்
    நீளக்கை சேட் கட்டைக் களிசான்
    புத்தகம் சுமக்க முதுகுப்பை.
    கட்டம் போட்ட நீலக்கைத்தறி
    அம்மாவுக்கு
    மாமிக்கொரு நல்ல வொயில்
    இயலாமல் படுக்கும் கண்ணாளனுக்கு
    கதர் வேட்டியும் கம்பளியும்.
    நாதன் கடைக்கணக்கு
    சந்திக்கடை பாக்கி
    கிழமைச் சீட்டுக்காசு
    கோயில் உண்டியல்
    இருமல் மருந்தும் தடவும் தயிலமும்.
    கொய்த மல்லிகையை
    குந்தியிருந்து கோர்க்கும் நாருடன்
    வியர்த்த முகத்தில்
    இளையோடும் எண்ணங்கள்
    சரப் பின்னலில்
    நாளைய நம்பிக்கையாய்
    முடிச்சுக்களுடன். (களப்பூரான் தங்கா)

    குடும்பச் சுமையையும் குடும்பத்திலுள்ளோரின் தேவைகளையும் வரவுக்கு அதிகமான செலவுகளையும் நாளைய கனவுகள் குறித்த எண்ணங்களையும் முடிச்சுகளாக்கி, முடிச்சுகளை அவிழ்க்கும் நாளை எண்ணி(க்) காத்திருக்கும் பூக்காரியைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது களப்பூரான் தங்கா அவர்களின் கவிதை.

    வறுமை பெண்களிற்குத் தன்னம்பிக்கை
    திறமை தருகிறதென்பது உண்மை.
    பொறுமையான சுய சம்பாத்தியம்.
    பொறுப்பான குடும்பக் கவனிப்பு.
    நிறம் மாறி வாடுவதாய்
    நிலை மாறாத பூக்காரியிவள்.
    தான் சூடி விரயமாக்காது
    தாரளமாய் கூவிக்கூவி விற்பவள்.
    மன்மதக் கணையாம் பூமாலை.
    புன்னகைத் திரையில் வேதனை.
    மாலைக்குள் விற்றுத் தீராவிடில்
    பாலையாய் வயிறு காயும்.
    மருக்கொழுந்தாள் முல்லைச் சிரிப்பழகி
    தாமரை இதழ் செண்பகமே
    மல்லிகையே சம்பங்கிப் பூவையே (பூக்காரியே)
    தமிழ் பூவின் கதம்பமே! (வேதா. இலங்காதிலகம்)

    வெயிலில் நிறம் மாறி வாடினாலும் நிலைப் பிறழாது உழைக்கும் பூக்காரியின் தன்னம்பிக்கையும் உழைப்பையும் வெகுவாகப் பாராட்டுகின்றது வேதா. இலங்கா திலகம் அவர்களின் கவிதை. கவிஞருக்குப் பாராட்டுகள்.

    குடிகார கணவன்
    ஒரு புறம்
    படிக்கும் பிள்ளைகள்
    ஒரு புறம்
    வீட்டு வருமானம்
    போதாத குறை
    ஒருபுறம்
    வறுமையை ஓட்ட
    வகையாய்தேர்ந்தெடுத்த
    வளமான தொழில் இந்த
    தொழிலுக்கு
    மூலதனம் தேவையில்லை
    வேண்டியது உழைப்பே
    லட்சியங்கள் எல்லாம்
    உயிர்பெறுவது
    நடுத்தர வர்க்கத்து
    மக்களால்தான்
    வீடெல்லாம் பூவாசம்
    வறுமைபோக்க
    வீட்டு வேலை முடிந்து
    பூக்கட்டும் வேலை
    தினமும் நூறு ரூபாய்
    தினக்கூலி தீர்ந்திடும்
    தினப்படி கவலை
    ஆனால் பூகட்டும்
    பொன்னமாவின் கவலையெல்லாம்
    பெண்கள் இன்று
    அவிழ்த்த கூந்தலை
    முடித்தால்தானே பூவைக்கமுடியும்
    பூவைப்பது அநாகரீகமாய்
    கருதும் காலமாகிவிட்டது
    பூகட்டி வறுமைதீர்த்தகாலமும்
    போய் விடும் போலிருக்கிறது
    ரிலையன்ஸ் நிறுவனமும்
    பூக்களுக்கு வேர்ஹவுஸ்
    அமைச்சுட்டால் எங்க பிழைப்பிலே
    மண்தான் போங்க (சரஸ்வதிராசேந்திரன்)

    பூத் தொழில் புரிவோரின் குடும்பச் சூழலையும் பூத்தொழில் முறையையும் எடுத்துக் காட்டியுள்ளார். பெண்கள் அவிழ்த்த கூந்தலை முடிந்தால் தானே பூ வைக்க முடியும் என்று, இன்று பெண்களிடம் குறைந்து வரும் பூச் சூடும் பழக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள்(,) கூந்தலில் முல்லை மலர்ச் சரத்திற்கு நடுவில் கனகாம்பரத்தை வைத்துக்கொண்டு சென்றது ஒரு காலம். இன்று கனகாம்பரம் என்ற மலரைப் பெண்கள் கூந்தலில் பார்ப்பது அரிதாகிவிட்டது. பூத் தொழிலின் இன்றைய நிலை(,) எதிர்கால நிலைக் குறித்த சிந்தனையையும் எழுப்பி நம் எண்ண அலைகளைக் கீறிவிட்டிருக்கும் சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கிறோம். கவிஞருக்குப் பாராட்டுகள்.

    பி.கு. மேகலா இராமமூர்த்தி விடுமுறையில் இருப்பதால் சில வாரங்களுக்கு காயத்ரி பூபதி போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கவுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் அனைத்து கவிஞர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகள். புதிய கவிஞர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம். நன்றி நண்பர்களே.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share