Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (86)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் அன்புடன் இணைகிறேன்.

    “கலிகாலம்” எனும் இக்காலத்தில் கலாச்சாரம் சீரழியும், உலகில் உறவுமுறைகள் சீர்கெடும், மனித தர்மம் நிலைகுலையும் என்றெல்லாம் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது என்றெல்லாம் கேள்வியுற்றிருக்கிறோம் .

    சே என்ன இதெல்லாம் கட்டுக்கதை ! சுத்த ஹம்பக் ! ஏதோ வேலையற்ற முன்னோர்கள் எம்மைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லிப் போன மூடக் கதைகள் என்றெல்லாம் எமது பகுத்தறிவு அடிப்படையில் நாம் அனைத்தையும் தள்ளி வைத்து வாழப் பழகிக் கொண்டோம்.

    ஆனால் இன்று நாகாரீக உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மை இவ்வாழ்க்கை எங்கே இழுத்துப் போய்க் கொண்டிருக்கிறது ?

    என்னடா? எதற்காக சக்தி இந்தப் பீடிகை போடுகிறான் ? எனும் எண்ணம் உங்களுக்குள் எழுவது இயற்கை.

    நேற்றைய இங்கிலாந்து தொலைக்காட்சிச் செய்திகளில் தலைப்புச் செய்தியாக வாசிக்கப்பட்ட செய்திகளில் ஒன்று,

    கடந்த 2012 ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் நீச்சல் தடாகத்தில் பாய்ந்து அதிகதூரம் ஊடுருவும் போட்டியில் வெற்றியீட்டி இங்கிலாந்து நாட்டிற்குப் பதக்கம் வாங்கிக் கொடுத்த “டாம் டேலி((Tom daley)” எனும்19 வயது நிரம்பிய இளவலின் அறிவித்தலாகும்.

    அது என்ன அப்படியான அறிவித்தல் ?

    ss1தான் மற்றொரு ஆணுடன் காதல் வயப்பட்டிருப்பதான செய்தியே அது. அதற்கு இத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னனியில் இருத்திய காரணம் என்ன ? எனும் கேள்வி நெஞ்சை உருத்தத்தான் செய்கிறது.

    நாட்டின் இளவல்களுக்கு இரு முன்னுதாரணமாக விளங்க வேண்டியவர், மற்றைய இளம் சிறார்களுக்கு வாழ்வில் நம்பிக்கை ஒளியூட்டக்கூடிய ஒருவர் தான் இயற்கைக்குப் புறம்பான ( இதை இயற்கை என்று எண்ணுபவர் என்னை மன்னிக்கவும்) வகையில் வாழ்வை அமைத்துக் கொண்டார் என்பது வளரும் தலைமுறைக்கு ஒரு தவறான எடுத்துக்காட்டாக அமைந்து விடும் எனும் வாதிடும் சாராரும், இல்லை இவ்வாழ்க்கைமுறை இன்றைய காலகட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று ஆகையால் இத்தகைய முன்னனி விளையாட்டுவீரர் வெளிப்படையாக அறிவித்தல் விடுத்தது சரியே என வாதிடுவோருக்கும் இடையிலான கருத்து மோதலை பகிரங்கமாக நடத்தவே இவ்வறிவித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    நாம் இவ்வுலகில் வாழும் வாழ்க்கைக்கு எல்லைக்கோடுகள் மனிததர்மத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இப்படித்தான் வாழவேண்டும் என்று காட்டப்பட்ட உதாரணங்கள் நம் மத நம்பிக்கைகளின் வழியாக எமது மனங்களிலே மனிதநீதிகளாகக் காட்டப்பட்டன.

    இம்மனிதநீதிகளின் அடித்தளத்தில் தான் மானிட சட்டங்கள் இயற்றப்பட்டன.. அதிலிருந்து நழுவி நாம் எப்படியும் வாழலாம் எனும் வழிக்குள் அனைவரும் வந்து விட்டால் பின்னால் மனித தர்மங்களின் நிலைதான் என்ன ? எனும் கேள்வியால் எமது மனங்களை அச்சம் கவ்விக் கொள்ளத்தான் செய்கிறது..

    இத்தகைய வாழ்க்கை வழிமுறைகளுக்கு இதனை ஆதரிப்பவர்கள் தமது வாதத்திற்கு துணையாக பகுத்தறிவு எனும் போர்வையில் நாத்திகத்தை துணைக்கிழுப்பதை பார்க்கும் போது மனம் வேதனை கொள்ளத்தான் செய்கிறது.

    பெரியாரின் நாத்திகக் கொள்கை என்பது மூடநம்பிக்கைகளின் பெயரில் மனிதர்களின் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுவதை எதிர்த்ததே தவிர மானிட வாழ்க்கையின் அடிப்படை வாழ்க்கை முறையை மாற்றியமைத்து ஆணும், ஆணும் அன்றிப் பெண்ணும், பெண்ணும் தம்பதிகளாக வாழுவதற்கு நியாயம் கற்பிக்கவில்லை.

    இன்று நாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் இவ்வோரினத் திருமணங்கள் என்பது இயற்கையான ஒரு நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அதிகாரத்திலிருக்கும் கூட்டரசாங்கமும், எதிர்கட்சி ஸ்தானத்திலிருக்கும் தொழில் கட்சியும் இவ்வாழ்க்கை முறைக்குத் தமது பூரண ஆதரவை வழங்கியிருப்பது கட்டுப்பாடற்ற சமுதாய வரம்புகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதே உண்மை.

    மனித நாகரீகத்தின் அதி உச்சமான வாழ்க்கைமுறை எனும் போர்வையில் இயற்கைக்குப் புறம்பான வாழ்க்கை முறைகளைச் தனிமனிதச் சுதந்திரம் எனும் பெயாரால் ஆதரிப்பது எவ்வகையில் மக்கள் நலனை முன்னேடுப்பதாகும் என்று வாதிடுகிறார்கள் பலர்,

    மனிதனை மனிதனாக மதித்து பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரே சந்தர்ப்பங்களை வழங்குவதே நாகரீகம் என்பதன் முழு அடையாளமாக இருக்க வேண்டுமே ஒழிய அம்மாவை, மம்மி என்றழைப்பதை வேண்டுமானால் நாகரீகமாக ஏற்றுக் கொள்ளலாமே தவிர மாமி என்றழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா ?

    அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நாகரீகம் என்று பெயர் சூட்டிவிட்டு ஜயோ எமது நாட்டில் சட்டம், ஒழுங்கு முறை சீர்குலைந்து விட்டதே என்று புலம்புவதால் என்ன பயன் ?

    சட்டம் ஒழுங்கு என்பனவற்றின் அமுலாக்கல் மனித தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் இருந்தே நடைமுறுத்தப்படுகிறது. அதை விடுத்து சமுதாயத்தில் வெற்றி பெற்றவர்கள் எனபவர்கள் எப்படியும் வாழலாம் எனும் உதாரணத்தை முன்னெடுப்பதன் மூலம் வளரும் தலைமுறையின் மனதில் சட்டத்திற்கும் ஒழுங்குக்கும் எவ்வகையான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது ? என்பது அனைவராலும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றே.

    இது ஒன்றும் புதிதல்ல இத்தகைய உறவுமுறைகள் அன்றைய காலத்திலும் இருந்தன ஆனால் அவை திரைமறைவில் அரங்கேறின என்றொரு வாதம் ஒரு மூலையில் இருந்து ஒலிக்கத்தான் செய்கிறது.

    கொலைகள் அன்றும் இன்றும் திரைமரைவில் நிகழ்கின்றன,. அதற்காக கொலையை இயற்கை என்று நாகரீகத்தின் பெயரால் நியாயப்படுத்தி விட்டால் கொலை கூட மனிததர்மமாகி விடுமா?

    இதுதான் எம் கண்முன்னால் அரங்கேறும் கலிகால வாழ்க்கைமுறையோ ?

    வருங்காலச் சரித்திரம் விடை பகரும் என நம்புவோம்

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…85

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் !

    இங்கிலாந்து குளிர்காலம் எனும் உறைபனிக் காலத்திற்குள் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கும் வேளையிலே உள்ளம் கதகதப்பாக உங்களுடன் மடல் மூலம் ஒரு உரையாடல்.

    இன்றைய காலை தொலைக்காட்சிச் செய்தியிலே கேட்ட ஒரு தகவல் என் நெஞ்சை உறைய வைத்தது.

    இங்கிலாந்து அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சிருவர்களுக்கான திகாரியை பி.பி.சி காலநேர நிகழ்ச்சியில் பேட்டி கண்ட பழுது அவர் கூறினார் இங்கிலாந்தின் ஒரு கணக்கெடுப்பின் படி இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகெங்கும் அதிக அளவில் சிறுவர்கள் பாலியல் சம்பந்தப்பட்ட இணையத்தளங்களை அதிக அளவில் பார்வையிடுகிறார்கள் என்று.

    அப்போது அவ்ரைப் பேட்டி கண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் கேட்ட கேள்வி , சிறுவர்கள் கணிணியில் இவ்விணையத்தளங்களைப் பார்வையிடுகிறார்கள் என்றால் பெற்றோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுவே !

    காலம் மாறுகிறது, காலாச்சார அடையாளங்களில் மாற்றம் ஏற்படுகிறது, தகவல் தொழில் நுட்ப பரிமாற்றங்கள் துரித அள்வில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இம்மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து எமது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொள்வது யதார்த்தத் தேவையாகிறது.

    ஆனாலும் ,

    மனிதர்மத்தின் அடிப்படைகளில் மாற்றம் ஏற்பட முடியுமா? விஞ்ஞானம் த்தனை தூரம் முன்னேறினாலும், காலம் எத்துணை அளவில் மாற்றம் கண்டிருந்தாலும், நாகரீகம் எவ்வளவோ வகையில் மாறியிருந்தாலும், தாய் தாய் என்பதும், தந்தை தந்தை என்பதும், தாரம் தாரம் என்பதும், சகோதரர்கள் சகோதரர்கள் என்பதும் மாற்றம் கண்டிட முடியுமா?

    நாம் எமது மனதின் கட்டுப்பாட்டை மனித தர்மத்தின் தார்மீக எல்லைகளைக் கடக்க அனுமதித்து விட்டு அதற்கு காலத்தின் மாற்றத்தைக் காரணமாகக் கூறி நியாயம் கற்பிக்க முயல்வது நகைக்கப்பட வேண்டிய விடயமாகும்.

    குழந்தைகளை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தி விட்டதும் எமது கடமைகள் முடிந்து போய் விடுகின்றனவா?

    இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயத்தைத் தூக்கி நிறுத்தப் போகும் தூண்கள். அவர்கள் மனிதன் எனும் தர்மத்தின் அடிப்படை நியாயங்களைக் கற்ரிருந்தால் தான் அமைதியான ஒரு அகிலத்திற்கு அவர்களால் துணை போக முடியும்.

    இன்றைய இந்த அவசரமான காலகட்டத்திலே நாமனைவரும் வாழ்வாதரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எம்மை பணம் சம்பாதிப்பதன் வழிகளுக்குள் முழுமையாகப் புதைத்துக் கொண்டுள்ளோம்..

    நவீன கால தேவைகளின் அடிப்படியில் வாழ்வில் வசதிகளைப் பெருக்கிக் க்லொள்கிரோம் எனும் பெயரில் பெருகும் வசதிகளை அனுபவிக்கக்கூட முடியாத வகையில் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

    வருங்காலத் தலைமுறைகளுடன் வாழ்வின் முக்கிய தார்மீக விதிகளை விளக்ககூடிய வகையில் எமது நேரத்தைச் செலவிட முடிவதில்லை. இதற்கு விதிவிலக்காக சிலர் இருக்கிறார்கள் என்பதனை மறுக்க முடியாது. ஆனாலும் பெரும்பான்மையான்வர்கள் தமது குழந்தைகளுடன் தாம் விரும்பிய அளவில் நேரத்தைச் செலவிட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

    இத்தகைய சீழலில் தற்காலக் குழந்தைகளின் கைகளில் கணிணிஎன்பது ஒரு விளையாட்டுப் பொருளாகி விட்டது. பதின்ம வயதுகளில் தாம் ஒரு மடிக்கணனிக்கோ அல்லது கயடக்கக் கணணிக்கோ சொந்தக்காரர்கள் இல்லையென்றால் அது ஏதோ தாம் குறைவானவர்கள் என்று கருதுமளவிற்கு இவைகள் அவர்கள் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது.

    பெரும்பான்மையானவர்கள் மத்தியில் இது அவர்களது அறிவை விஸ்தரிப்பதற்கு பயன்பட்டால் கூட அவர்களின் பாவனையைத் தொடர்ந்து கண்காணிக்குமளவிற்கு அதிகமான பெற்றோருக்கு நேரம் கிடைப்பதில்லை.

    இத்தகைய சூழலினால் இக்கணிணிகளின் மூலம் தவரான இணையத்தளங்களை தற்செயலாகவோ அன்றி வேண்டுமென்றோ பதின்ம வயதுச் சிறுவர்கள் பார்வையிடுவதைத் தவிர்க்க முடியாது போய்விடக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது..

    எமது நாடுகளின் வருங்கால வரலாற்றைச் சிறப்பு மிக்கதானதாக மாற்றுவதில் எமது சந்ததியும் பங்குபெற வேண்டுமானால் மனித வாழ்கையின் தார்மீக பொறுப்புகளின் பெருமைகளை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு சரியான வாழி முறையை பெற்றோர்கள் கற்றுத் தரவேண்டும்..

    பாடசாலைகளுக்கு ஒழுங்காகப் போகிறார்கள் தானே ஒழுக்கத்தின் போதனையை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கவனயீனமாக இருந்து விட்டுப் பின்னால் புலம்புவதால் எவ்விதப் பயனுமில்லை

    இன்றைய உலகில் தமிழர்களாகிய நாம் பரந்து பட்டு உலகின் பல பாகங்களிலும் வாழ்கிறோம். தாம் வாழும் நாடுகளில் எமது இளைய தலைமுறை பலதரப்பட்ட கலாச்சாரங்களுக்குட்பட்ட பல்வேறு இனத்தினருடன் பழக வேண்டிடி ஏற்படுகிறது. இந்தச் சந்திப்புகளில் எமது அடிப்படை வாழ்க்கைத் தார்ர்மீக நெறிகள் தொலைந்து போய்விடாமல் இருப்பதர்கான பொருப்பு பெற்றவர்கள் வசமே இருக்கிறது.

    கலாச்சாரம், பழகும் பண்பு, ஒழுக்கமான வாழ்க்கை என்பவனவற்றை முன்னேற்ரத்து தடையான கால்விலங்காக மாற்றாமல் உள்ளத்தின் உணர்ச்சி வேகத்தை சரியான திசையில் செலுத்தக்கூடிய ஒரு கடிவாளமாக்குவது ஒன்றே எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வை உயர்ந்ததாக்கும்.

    அடுத்த மடலில் சந்திக்கும்வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…84

    சக்தி சக்திதாசன்

     

    epickels immig1

     

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    ஒரு நாட்டின் மக்கள் இன்னொரு நாட்டிற்கு பல்வேறு காரணக்களினால் இடம் பெயர்கிறார்கள்.

    நானும் இத்தகிய ஒரு இடப்பெயற்சிக்கு உள்லானவன் எனும் காரணத்தினால் இப்பக்கத்தின் இன்னல்களை உணர்ந்தவன்.

    தாய், தந்தை , சுற்றம், சூழல் என நாம் வாழ்ந்த பாதுகாப்பான வலயத்தை விட்டு வெளியேறுவது என்பது சுலபமான செயல் அல்ல.

    புத்தம் ப்துச்சூழல், புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை முறைகள் எவர்ரின் மத்தியில் வந்து விழும்போது தொட்டி மீன் ஆழிக்குள் விழுந்த கதை தான்.

    ஆனால் அதேசம்யம் என்ன காரணக்களுக்காக இவ்விடப்பெயர்வு நிகழ்கிறது என்பதைப் பொறுத்தே இவ்விடப் பெயர்விற்கு உள்ளானவர்களின் மனதின் உணர்வுகளும் அமைகிறது.

    உதாரணமாக ஈழத்து போர்ச்சூழலினால் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த அகதிகளின் மனநிலையில் அவர்கள் பாதுகாப்பான சூழலன்றி பாதுகாப்பின்மையை விட்டு வெளியேறியதால் அவர்களின் மனம் ஓரளவு ஆறுதலான உணர்வை வெளிப்படுத்தலாம்..

    ஆயினும் தாம் பிறந்து வழளர்ந்த தாய்மண்ணை விட்டு வெளியேறும் வேதனை மனதினை வாட்டுவதையும் சகிக்க முடியாது.

    அதேசமயம் தமது நாட்டில் தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வழியின்றி வசதி மிக்க நாடொன்றிற்கு இடம்பெயர்ந்து அதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தும் வழியைச் தேடிக் கொள்பவர்கள் மனதில் இவ்விடப்பெயர்ச்சி நிச்சயம் ஓரளவு மகிழ்ச்சியத் தோற்றுவிக்கத்தான் செய்யும்.

    ஆனால் அதேசமயம் இவ்விடப்பெயர்ச்சிக்குள்ளாகும் மக்களைத் தாங்கிக் கொள்ளும் அந்த மாற்ராந்தாய்மண்னைச் சார்ந்தவர்களை இவ்வெளிநாட்டு மக்களின் வருகை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் ஆழ்ந்து கவனிக்கும் தேவையுள்ளது.

    நான் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த காலம் ஒரு மூன்று தாசாப்தங்களுக்கு மேலானது ஆனால் எனக்கு முன்னால் இங்கே வந்து கால்பதித்தவர்களில் ஏராளம்.

    நான் வந்த காலத்திற்கும் இன்றைய காலத்திற்குமான இடைவெளியில் இங்கிலாந்து பலவிதமான சமூக மாற்றங்களுக்குள்ளாகியுள்ளது.

    இம்மாற்றங்க|ள் கொடுத்த தாக்கம் இந்நாட்டின் மக்களின் மனக்களில் வெளிநாட்டவரின் குடியேற்றங்களை நோக்கிய பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மையே !

    ஆனால் இவ்வாறு இந்நாட்டு மக்கள் வெளிநாட்டவரின் குடியேற்றத்தை நோக்கிக் கொண்டுள்ள கருத்து ஓரளவு இக்குடியேற்றங்களுக்கு எதிராகத் திரும்புவது சரியா ?

    இக்கேள்விக்கு விடை நாம் வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் வகையிலேயே உள்ளது.

    நான் வாழும் ஊரில் அடுத்தடுத்து பேரூந்துகளில் அடுத்த ஊரைச் சேர்ந்தவர்கள் வந்து இறங்கும் போது எம் மனநிலை எப்படியிருக்கும் ?

    ஜயையோ ! இத்தனை பேர் எம்மூரில் வந்து தங்கி விட்டால் எனது வசதிகள் அனைத்தையும் இவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டி வந்து விடுமே ! என்று எண்ணுவதுதான் அடிப்படை மனித இயல்பு. இதற்கு நானும் விதிவிலக்கானவல்ல.

    இப்படி ஒரே நாட்டிற்குள் இருந்தும் வேற்றூர் மக்களின் மீது நாம் வேறுபட்ட பார்வை கொண்டுள்ளோம் . பின் எப்படி வேறிரு நாட்டிலிருந்து தம் நாட்டிற்குள் இலட்சக் கணக்கில் வந்திறங்கும் வெளிநாட்டவர் மீது இந்நாட்டு மக்கள் அபிமானமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் ?

    சரி இது ஒருபுறமிருக்க இங்கே வந்து இறங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இனிவரும் மக்களின் வருகைக்கு இந்நாட்டு மக்கள் ஆதரவளிக்கும் வகையில் நடந்து கொள்கிறோமா?

    இல்லை என்பதே பொதுப்படையான வாதம்.

    அதற்காக அனைவருமே அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் என்று கூற நான் விளையவில்லை.

    குறிப்பாக நாம் வாழும் சமுதாயத்துடன் எம்மை இணைத்துக் கொள்வதற்கான வழிமுறையில் மிகவும் அடிப்படையான மொழியையே நாம் கடைப்பிடிப்பதில்லை.

    இங்கு வந்திறங்கும் பல வேற்ரு நாட்டவர்கள் ஆங்கிலம் அறவே பேசத் தெரியாத்வர்களாக வந்திறங்குகிறார்கள் அதில் தவறொன்றுமில்லை ஆனால் இங்கு வாழத் தொடங்கியதும் இம்மொழியக் கர்ருக் கொள்வதர்கான முயற்சிகளில் இறங்குகிறார்களா?

    இல்லையானல் ஆங்கில மக்களுடன் சக நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசிப்பழகி தமது ஆங்கில மொழித்திறனை விரிவாக்கும் நடவடிக்கைகளில் இறங்குகிறார்களா ?

    பொதுவாக தமது சமூகத்தினிடையே தம்மைப் புதைத்துக் கொள்ளும் பலரைத்தான் காண்கிறோம்.

    இன்றைய காலத்தில் இங்கிலாந்தில் வேற்ரு நாட்டினர் பலர் வியாபார ஸ்தலங்களை நடத்தி வருகிறார்கள் அதனால் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் அமைப்புகளுக்குள் தம்மை முடக்கி விஉவதனால் தாம் ஆங்கிலம் தெரியாமலும் பிழைப்பை நடத்தி விடக்கூடிய ஒரு நிலையில் தம்மைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

    இது அவர்களின் வாழ்வின் காலத்தை ஓட்டுவதர்கு ஏதுவாகலாம் ஆனால் அவர்களின் அடுத்த தலைமுறையின் வாழ்வைச் சிக்கலுக்குள் தள்ளத்தான் செய்கிறார்கள்.

    அதற்காக தமது சமூகத்தைச் சார்ந்த காலாச்சாரங்களைத் தூக்கி எறிய வேண்டும் என்பதல்ல எனது கருத்து. அக்காலாச்சார அடையாளங்களை தமது முகவரிகளாக வைத்துக் கொள்ள வேண்டுமேயல்லாது அவற்ரை தமது முன்னேற்றத்தைத் தடுக்கும் கால் விலங்காக மாற்றிக் கொள்ளக்கூடாது.

    இத்தகைய ஒரு முடக்கமே இந்நாட்டு மக்களின் அவர்கள் மீதான பார்வையில் ஒரு வித்தியாசத்தைத் தோற்றுவிக்கிறது.

    எரிக் பிக்கில்ஸ் எனும் சமூகங்களுக்கான மைச்சர் சமீபத்தில் ஒரு கொள்கையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். .

    இங்கிலாந்தில் இயங்க்கும் பல்வேறு சூப்பர் மார்க்கெட் எனப்படும் பல்ப்பொருள் அங்காடிகளுக்கு அரசாங்கம் நிதியளிப்பதன் மூலம் அந்நிலையங்களில் வேற்ரு நாட்டவர் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்வதர்கான பயிற்றுனர்களின் சேவையை அந்நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அளிப்பது எனபதே இக்கொள்கை.

    இதன் பிரதிகூலங்கள் அனுகூலங்க:ளைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் ஊடகங்களில் எழுந்துள்ளன.

    இக்கொள்கை பயனுள்ளதா ? இல்லையா ? என்பதல்ல எனது கருத்து. ஒரு அடிப்படை உண்மையின் மீதான வாதத்தை சமூகத்தின் மத்த்கியில் அமைச்சரின் இந்த கொள்கைப்பிரகடனம் ஏற்படுத்தியுள்ளது ஒரு பயனுள்ள விடயமே !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (83)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    ஒரு நாடு நல்ல முறையில் வழி நடத்தப்படுவதற்கு அந்நாட்டின் அரசியல் நிர்வாகம் நியாயமான முறையில் அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

    அரசியல்வாதிகள் எனப்படுவோர் ஏதோ அதற்காகவே பிறப்பெடுத்தவர்களோ அன்றி அதற்காகத் தனியாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்களோ இல்லை.

    தன்னைப் போல மற்றவர்களையும் நேசிக்கும் பண்பை அடிப்படையாகக் கொண்டு எதுவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் தனக்கும், தான் சார்ந்த சமூகத்திற்கும் நல்ல பல திட்டங்களை அமுலாக்க வேண்டி சுயநலத்தைப் புறந்தள்ளி உழைப்பவர்கள் அனைவருமே நல்ல அரசியல்வாதிகளாக மாற்றமடைவதற்கு ஏற்றவர்களாகிறார்கள்.

    மக்களைக் கவரும் வகையில் அற்புதமான பேச்சாற்றல் கொண்டமையால் பதவிக்கு வந்து விட்டு பின்பு அக்கதரியில் அமர்ந்து இருபதற்குரிய அனைத்துத் தகமைகளையும் காற்றில் பறக்க விட்டு விடும் பல தலைவர்களின் வழிநடத்தல்கள் நாட்டின் நல்ல செயற்பாடுகளை முடக்கும் வல்லமை படைத்தது என்பதே உண்மையான கூற்றாகும்.

    என்னடா இது ? சக்தி என்ன அரசியல் பாடமா நடத்த வருகிறான் என்று நீங்கள் கொஞ்சம் கலக்கமடைவது புரிகிறது.

    உங்களுடன் நான் இம்மடலின் வாயிலாக பகிர்ந்து கொள்வது அரசியல் பாடமல்ல ஆனால் அரசியலின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகாரம் கொண்டவர்களின் நடத்தைகளின் வெளிப்பாடு மக்களுக்கு அரசியலையும் அதை முன்னெடுப்பவர்கள் மீது எத்தகைய வெறுப்புணர்வைத் தோற்றுவிக்கும் எனும் யதார்த்தத்தை சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளும் நோக்கத்திற்காகவே !

    ஒரு நகரத்தின் மேயர் பதவி என்பது நகரபிதா எனும் பதத்திற்கு நிகரானதாகும். அந்நகர பிதாவின் ஸ்தானத்திலிருக்கும் ஒருவர் அந்நகர மக்களுக்கும் நாட்டிற்கும் முன்னுதாரணமாகத் திகழ்வது இன்றியமையாததாகும்.

    இந்நாட்களில் பல நாடுகளில் இளைய சமூகத்தினர் அரசியலில் நாட்டம் கொள்ளாது தமது நாட்டின் முன்னேற்றங்களில் அக்கறை காட்டாமல் நடந்து கொள்வது எமக்குக் கண்கூடாகத் தெரிகிறது. அதுவும் இங்கிலாந்தில் இன்று அரசியல் நாட்டமின்மை என்பது மக்களிடையே அதிக அளவில் பரவி வருகிறது.

    இதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகளின் நடத்தையே ! அரசியல்வாதிகளை நாட்டின் தலைவர்களாகவும் நாட்டை வழிநடத்துபவர்களாகவும் பார்த்த மக்கள் அவர்களின் நடத்தையின் பால் கொண்ட வெறுப்பே இத்தகைய ஒரு நிலைக்குக் காரணம் என்றால் மிகையாகாது.

    கனேடிய நாட்டில் உள்ள டோராண்டோ நகரத்தின் மேயரின் நடவடிக்கை இன்று மக்கள் மனதில் மிகவும் வேதனையான விசனத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம் ?

    ஆமாம் அவர் அப்படி என்னதான் செய்து விட்டார் என்று கேட்கிறீர்களா ?

    போதைப் பொருட்களில் மிகவும் பாரதூரமான “கோக்கெயின்” எனப்படும் போதை மருந்தை இவர் உட்கொண்டது அம்பலத்திற்கு வந்துள்ளது.

    அதை அவர் செய்தது மட்டுமல்ல அதைப்பற்றி பிரஸ்தாபித்த ஊடகங்களுக்கு ஆமாம் நான் போதைப் பொருளை உட்கொண்டேன் அது ஒரேயொருமுறைதானே செய்தேன் அதற்கென்ன இத்தனை ஆரவாரம் என்பது போல உதாசீனமான வகையில் அவர் பதிலிறுத்திருக்கிறார்.

    தமது நகரத்திற்கும் நாட்டிற்கும் நன்மை புரிந்து முன்னோடியாகத் திகழ்வார் என எதிர்பார்த்து மக்கள் அளித்த வாக்குகளின் மூலம் பதவிக்குக் வந்த இவரின் இத்தகைய நடவடிக்கை ஜனநாயக நீரோட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் நெஞ்சத்தை நலிவடைய வைத்திருக்கிறது என்பதுவே கவலைக்கிடமான விடயமாகும்.

    அது ஒருபுறமிருக்க இங்கிலாந்து பாரளுமன்ற அங்கத்தவரும் கன்சர்வேடிவ் கட்சியைத் சேர்ந்தவர் ஒருவர் தனது பராளுமன்ற சலுகையைப் பிரயோகித்து தனியார் கம்பெனி ஒன்றுக்கு அதன் வியாபாரத்திற்கான உதவியைப் பணம் பெற்றுக் கொண்டு செய்துள்ளார் எனும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார்.

    இத்தகைய பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ளோர் தமது சுயலாபத்திற்காக பொதுமக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததை பராளுமன்றத்திற்கான துஷ்பிரயோகத்தை விசாரிக்கும் குழு சில நாட்களுக்கு முன்னால் விசாரணை செய்தது குறிப்பிடப்பட வேண்டியதொன்று.

    இலஞ்சம், ஊழல் என்பது போன்றன எமது பின்புல நாடுகளுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல தம்மை மேலைநாடுகள் என வர்ணித்துக் கொள்ளும் நாடுகளிலும் இந்த இலஞ்ச ஊழல்கள் நாகரீகமான போர்வைகளின் கீழ் நிகழ்த்தப்படுகிறது என்பதே கசப்பான உண்மை.

    வருங்காலச் சந்ததி ஒரு வலிமை மிக்க பொதுநலத்தை மையப்படுத்தும் ஜனநாயகத்தைத் தட்டி எழுப்ப வேண்டுமானல் அரசியல் எனும் புனிதமான சேவையில் தம்மை ஈடுபடுத்துவோர் அனைவரும் உளத்தூய்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டியது அவசியமாகிறது.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • தீபங்கள் ஒளிரட்டும்

     
    தீபத்தின் ஒளி கண்டுbuss
    தீமைகள் விலகட்டும்
    தித்திக்கும் இன்பங்கள்
    திக்கெட்டும் எட்டட்டும்

    ஆசைகள் வழி ஓடி
    ஆபத்தைத் தேடிடாமல்
    அமைதி வழி கண்டு
    அகிலம் சிறக்கட்டும்

    சீரிய சிந்தனைகள்
    சிறப்பாக ஓங்கட்டும்
    சிந்தித்து செயலாற்றி
    சீலமாய் வாழட்டும்

    ஆறுதல் தனைத் தேடி
    ஆழகாக இல்லந்தோறும்
    ஆனந்தத் தீபங்கள்
    அணையாமல் ஒளிரட்டும்

    வேதத்தின் வழி தன்னில்
    விவேகத்தின் துணையுடன்
    வாழும் வகைகள் எல்லாம்
    வையத்தில் செழிக்கட்டும்

    நேற்றைகளின் அனுபவங்கள்
    இன்றைகளின் வழியாக
    நாளைகளின் விடிவை நோக்கி
    நானிலமே ஒளிரட்டும்

    நாளெல்லாம் உழைத்து விட்டு
    நலிவொன்றே பரிசாக
    நடமாடும் உழைப்பாளர்
    நன்மைக்காய் தீபங்கள் ஒளிரட்டும்

    அன்பினிய உள்ளங்கள் அனைத்திற்கும்
    அன்புடன் கூடிய என் வாழ்த்துக்கள்
    அனைத்து வளங்களும் பெற்று வாழ
    ஆயிரம் கோடி தீபாவளி வாழ்த்துக்கள்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்! …81

    சக்தி சக்திதாசன்

    scl3 scl2 scl1

     

     

     

     

    அன்பினியவர்களே !

     

    வாயுபகவானின் சீற்றத்துக்கு இலக்காகி சூறாவளியினுள் சுழன்றடித்து விட்டு ஓரளவு நிலையாக நிற்கின்ற இங்கிலாந்தின் தென்பகுதியில் இருந்து மீண்டும் ஒரு மடலின் வாயிலாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இல்லங்கள் அனைத்தும் ஒளிமயமாக தீபாவளி எனும் இத்திருநாள் இதோ மிக அருகில் நெருங்கி விட்டது.

    இல்லங்களின் சூழ்ந்துள்ள கருமையை மட்டுமல்ல மனித உள்ளங்களின் கருமையையும் ஓட்டிவிட அனைத்து உள்ளங்களும் ஒளிமயமாக மனிதாபிமானம் எனும் இனிய உணர்வின் அடித்தளத்தில் அனைவரது வாழ்விலும் இனிய நிகழ்வுகள் பொங்கட்டும்.

    சமீபத்தில் இங்கிலாந்து தொலைக்காட்சியில் பார்த்த ஒரு நிகழ்ச்சி மனதில் பல எண்ணங்களை அலை மோதப் பண்ணியது.

    சுகாதாரம் ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. இச்சுகாதாரத்தைச் சரியாகப் பேணாததினால் நோய்வாய்ப்ப்படுவோர் பலர்.

    நாமும் நாம் சார்ந்த இடமும் மட்டுமே எமது வாழ்க்கைக்குப் போதுமானது என்று எண்ணும் மனப்பான்மையே இன்றைய அவசர உலகத்தில் நிலவுவது போலத் தெரிகிறது.

    என்னருகில் இருக்கும் குப்பையை அப்புறப் படுத்தி விட்டால் போதும் அக்குப்பை மற்றொருவர் அருகில் போய் விழுந்து அவர் அதனால் அருவருப்படைவதைப் பற்றிய கவலை எமக்கில்லை என்னும் மனப்பாங்கிலேயே பலர் நடந்து கொள்வது போன்று தென்படுகிறது.

    இன்றைய இங்கிலாந்தின் தெருக்களில் காணப்படும் குப்பைகள் எப்படி அங்கே வருகின்றன ? அதற்குக் காரணம் யார்?  எனும் கேள்விகள் எழும்போது அதற்கான விடையும் தயராக எமது மனங்களினுள் இருக்கிறது.

    இத்தகைய தெரு அசுத்தங்களின் பொறுப்பும் எமது தலைகளிலேயே விழுகிறது. நாம் ஒவ்வொருவரும் இந்நாட்டின் பிரஜைகள் நாம் வாழும் நாடு மிகவும் சுத்தமான நாடாக இருப்பது நாம் வாழும் வீட்டின் சுத்தத்தினால் நாம் எத்தனை பெருமையடைகிறோமோ அத்தகிய பெருமையை எமக்கு அளிக்க வேண்டும்.

    ஆனால் அப்படி பெருமை கொள்பவர்கள் எத்தனை பேர் எனும் கேள்வி எழுந்தால் அதற்கான பதில் வேதனையைத்தான் தரும்.

    இதன் காரணம் என்ன ?

    சொந்த வீட்டில் வசிப்பதற்கும் வாடகை வீட்டில் வசிப்பதற்கும் இடையிலான வேறுபாடே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது.

    தமது சொந்த வீடுகளில் வாழ்பவர்கள் அவ்வீட்டை சுத்தமாக எடுக்கும் முயற்சிகளை தாம் வாடகைக்கு இருக்கும் வீட்டைச் சுத்தப்படுத்துவதில் எடுப்பார்களா ?

    சந்தேகமே !

    இதற்கு விதிவிலக்காக பலர் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையானோர்தாம் வாழும் நாட்டை தமக்கு உரிமையுள்ள ஒரு நாடாக எண்ணிப்பார்பதில்லை.

    இம்மனப்பான்மையை நான் பல புலம் பெயர்ந்த மக்களிடையே காண்கிறேன். தமக்கு வாழ்விடமும், வாழ்வாதரத்திற்கான வசதிகளையும் செய்து தந்த இப்புகலிட நாட்டிற்கு தமது தாய்நாட்டை விட அதிக கெள்ரவமளிக்க வேண்டிய தேவையிருந்தும் ஏதோ வாடகை வீட்டில் வாழ்வது போன்ற ஒரு மனப்பான்மையில் வாழ்வதைக் காணும்போது உள்ளத்தில் கொஞ்சம் வேதனை எழத்தான் செய்கிறது.

    இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பிரதான சாலையில் ஒரு பக்க நடைபாதையை சாலையைத் துப்பரவு செய்யும் மாநகரத் தொழிலாளிகள் துப்பரவு செய்த அதேநேரத்தில் மறுபக்கத்தை 24 மணி நேரம் துப்பரவு செய்யாமலே விட்டு விட்டார்கள்.

    விளைவு !

    துப்பரவு செய்யப்படாத நடைபாதையோரம் குப்பை கூழங்களால் நிறைந்து காணப்பட்டது.

    அருகில் குப்பைத் தொட்டிகள் இருக்கக்கூடியதாக குப்பைகளை நடைபாதையில் போட்டு விட்டு எதுவித அக்கறையுமில்லாமல் நடக்கும் பலரைக் காணக்கூடியதாக இருந்தது.

    இச்சாலை துப்பரவிற்காக வருடமொன்றுக்கு ஒரு பில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் வரையில் செலவு செய்யப்படுகிறது.

    இதர்காகச் செலவிடப்படும் பணத்தில் சுகாதாரச் சேவையில் மேலும் எத்த்னையோ ஆயிரம் தாதிகளையும், டாக்கடர்களையும் நியமிக்கலாம்.

    பாடசாலைகளின் தரத்தை உயர்த்தப் பயன்படுத்தலாம். வேலையர்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பை உயர்த்தக்கூடிய வகையில் அவர்களுக்குப் பயிற்சியளிக்க இப்பணத்தை உபயோகிக்கலாம்.

    ஆனால் பொறுப்பர்ர தன்மையில் நாம் நடந்து கொள்வதால் எமது குப்பைகளை அகர்றுவதர்காக இப்பணம் செலவிடப்படுவது மிகவும் பரதூரமான கண்டனத்துக்குரியது என்றார் அந்நிகழ்ச்சியை நடத்தியவர்.

    இதைத்தான் அழகாக எமது புரட்சித் தலைவர் தனது பாடல் ஒன்றில்,

    “நாடென்ன செய்தது நமக்கு

    எனக் கேள்விகள் கேட்பது எதற்கு

    நீயென்ன செய்தாய் அதற்கு என

    நினைத்தால் நன்மை உனக்கு ” என்றார்.

    ஒரு நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் அந்நாட்டின் பாராமரிப்பில் பங்குண்டு. குறிப்பாக தமது நாட்டின் சுத்தத்தைப் பேணுவதில் நாம் ஒவ்வொருவருமே பலவிதமான் பங்களிப்புகளைச் செய்யலாம். செய்ய வேண்டியது எமது தார்மீகப் பொறுப்பு.

    அனைத்து இல்லங்களிலும் ஒளிரும் தீபாவளித் தீபங்கள் அவ்வில்லங்களின் கருமையை மட்டுமல்ல மனித மனங்களில் உள்ள கருமைகளையும் விரட்டட்டும்.

    என் இனிய வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (80)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிமையான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களோடு கலப்பதில் மகிழ்கிறேன்.

    இன்றைய உலகம் அவசரமான வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சமூக விஞ்ஞான முன்னேற்றங்கள் கன வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

    இவைகளில் எத்தனை மனித வாழ்க்கையை மேம்படச் செய்வதற்கு உதவுகின்றன என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    பேருந்திலே பிரயாணம் செய்து கொண்டிருப்பவர்கள், புகையிரதங்களில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள், ஆகாயவிமானத்திலே மிதந்து கொண்டிருப்பவர்கள் ஏன் சாலையோரமாக நடந்து கொண்டு பயணிப்பவர்கள் என பலவகையான பிரயாணிகளின் கைகளில் பெரும்பான்மையாக நாம் காண்பது கைத்தொலைபேசிகளோ அன்றி சிறிய அளவிலான “ஜ பாட்(I Pad)” அன்றி “டாப்லெட்(Tablet)” எனப்படும் கையளவிலான கனிணிகளேயாகும்.

    இன்றைய தொடர்பு சாதனங்களில் முன்னணியில் இருப்பவை இவைகளாகும். இதன் மூலம் இன்றைய இளைய தலைமுறை ஏன் முதிய தலைமுறை கூட சமூகத்தில் மற்றையோர்களுடனான தொடர்புகளைப் பேணி வருவது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

    இச்சமூகத்துடனான தொடர்பு சாதனங்கள் இளைய தலைமுறையின் அபிப்பிராயங்களில் , கருத்துக்களில் பல மாற்றங்களுக்குக் காரணமாகின்றன என்பதுவும் மறுக்கப்பட முடியாத உண்மையே

    இவற்றில் சில நன்மைகளை நோக்கியும், சில தீமைகளை நோக்கியும் இத்தலைமுறையை வழிநடத்துவதற்குக் காரணங்களாகின்றன என்பதுவும் உண்மையே.

    ஆனால் இவைகளின் இயக்கத்தை அதற்காக முற்று முழுவதுமாக ஒதுக்கி வைத்து விட்டு வாழ்ந்து விட முடியுமா?

    இம்முன்னேற்றங்கள் பலரின் வாழ்வில் பலரது முன்னேற்றங்களுக்கு வழிகோலியுள்ளது என்பதை மறுத்து விட முடியாது.

    இத்தொடர்பு சாதனங்கள் வழங்கும் இருபத்திநாலு மணிநேர சேவையினால் இன்று அரசியல் உலகில் கூட பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் மக்களின் முன்னே நிறுத்தி அலசப்படுவதற்கு மிகக் குறைந்த நேரமே தேவைப்படுகிறது.

    பல முன்னனி நாடுகளின் அரசியல் தலைவர்கள் இன்று சமூக வலைத்தளங்களின் மூலமாகவே தமது கொள்கைப் பிரகடனங்களைச் செய்வதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

    அது மட்டுமின்றி என்னையே ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது எழுத்துலகில் நான் காலூன்றி நிற்பதற்கு மூலகாரணமே இணையத்தளங்களும், இணையமுமே காரணம்.

    அது தவிர இளம் படைப்பாளிகள் பலர் பெயர் பெற்ற எழுத்தாளர்களோடு ஒரே தளத்தில் எழுதுவதன் மூலம் தமது கலையை வளர்த்துக் கொள்கிறார்கள்.

    இதை நான் பகிர்ந்து கொள்வதன் பிரதான நோக்கம் சமீபத்தில் முகநூல் வலையத்தளத்தின் மீது எழுந்துள்ள ஒரு சர்ச்சைக்குரிய செய்தியே.

    சிறிது காலத்தின் முன்னால் முகநூல் தம்முடைய இணைய தளத்தில் ” பயங்கரவாதிகளாலும், மத்திய கிழக்கு நாடுகளின் சில அரசுகளினாலும் நடத்தப்படும் கழுத்து வெட்டி நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளின் வீடியோக் காட்சிகளைப் பகிர்ந்து கொள்வதைத் தடை செய்திருந்தது.

    ஆனால் சமீபத்தில் சில நாட்களின் முன்னால் இக்காட்சிகள் அதைப்பற்றிப் பீற்றிக் கொள்வதற்கல்லாமல் அதன் கொடூரத்தைச் சித்தரிக்கும் நோக்கத்திற்காகப் பகிரப் படுமானால் அதைத் தடைசெய்யப் போவதில்லை என்று அறிவித்தது.

    இது சமூகத்தில் பலவிதமான சர்சைகளைக் கிளப்பி விட்டிருக்கிறது .

    முகநூல் வலைத்தளம் இளையோர் மத்தியிலும், முதியோர் மத்தியிலும் மிகவும் பரவலாக தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஒரு இன்றியமையாத தொடர்பு சாதனம். இதிலே இத்தகைய விளம்பரங்களுக்கு இடம் கொடுப்பது ஒரு பொறுப்பற்ற தன்மை என்று சமூகத் தலைவர்கள் பலர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

    எது எக்காரணத்திற்காக நடத்தப்பட்டாலும் இவை மனிதக் கொலைகளே இவைகளைப் பகிரங்கமாக இணைய தளங்களிலே பகிர்ந்து கொள்வது மனித தர்மத்திற்குப் புறம்பானது என்கிறார்கள்.

    fb3

    மார்புப் புற்றுநோய் காரணமாக மார்பகங்களைச் சத்திர சிகிச்சைக்குள்ளாக்கி அப்புற்று நோயிலிருந்து பூரண குணமடைந்த பெண்கள் தமது அறுவை சிகிச்சையின் ரணங்களின் படங்களை தமது இணைய தளத்தில் முகநூல் தடை செய்திருக்கிறது.

    மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் படங்களைத் தடை செய்து விட்டு இப்படியான மனிதக் கொலைகளின் வீடியோக்களை அனுமதித்திருப்பது எப்படி நியாயமாகலாம் எனச் சில பெண்ணுரிமை வாதிகள் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

    இது மிகவும் விவாதிக்கப்பட வேண்டிய விடயமே ! முகநூல் வலைத்தளம் ஒரு பிரத்தியேகமான வலைத்தளம். தமது வலைத்தளத்தில் எவற்றை அனுமதிப்பது, எவர்றை அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.

    ஆனால் சமுதாயத்தில் பல இளவயதினரின் மனதில் தீவிரமான் கருத்தோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு முன்னனி சமூகத் தொடர்பு இணைய தளம் தாம் தமக்கு சமுதாயத்தில் உள்ள பொறுப்பை உணர்ந்து தமது கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டியது அவர்களது தார்மீகக் கடமையாகும் .

    சமுதாயம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல பல வேறுபட்ட கருத்துகள் கொண்டவர்கள் மனித நலனை முன்வைத்து இணைந்து உருவாக்கும் ஒரு கட்டமைப்பே சமுதாயமாகும்.

    இங்கு நாம் ஒவ்வொருவரும் எமது கடமையை உணர்ந்து செயலாற்றத் தவறினால் ? . . . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…79

    சக்தி சக்திதாசன்

     

    Begonia Tiger-Jul 13 09 Begonia_tiger

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

     

    மற்றொரு மடல், மற்றொரு வாரம். இணைவதில் ஈடில்லா மகிழ்ச்சி,

    இதோ மாறுதலுக்காக போகோனியா டைகர் ( Bogonia Tiger) எனும் ஒரு கட்டுரையுடன் உங்கள் முன்னே.

    என்ன இது புதுவிதமான சமாச்சாரம் ? எதைப் பற்றிய அலசலாகவிருக்கும் என்னும் எண்ணம் உங்கள் மனங்களில் ஓடுவது இயற்கை.

    ஆமாம் இது புதுவிதமான தலையங்கம் தான் ஏனெனில் எனது விழிகளினூடக நான் பார்த்த ஒரு காட்சியின் புதிய பரிணாமம் என் மனதினுள் ஏற்படுத்திய உணர்ச்சிப் பிரவாகங்களின் வடிப்பு இது எனலாம்.

    சில தினங்களுக்கு முன்னால் எமது இல்லத்திலுள்ள கன்சர்வேட்டரி (conservatory) அதாவது சூரியஒளியின் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் அறையினை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தேன்.

    அந்த அறையினுள் பொதுவாக வீட்டினுள் அதாவது வெப்பத்தை விரும்பும் சிறிய செடிகளை வைத்து வளர்ப்பது வழக்கம்.அப்படியான செடிகளில் ஒன்றின் மீது என் பார்வை பட்டது. அதன் பெயர் ஆங்கிலத்தில் போகொனியா டைகர் என்பதாகும்.

    என்ன அந்தச் செடியில் அப்படி என்ன பிரமாதத்தைக் கண்டு விட்டாய் என்று நீங்கள் புதிராக என்னை நோக்குவது தெரிகிறது.

    ஆத்திரப்படாதீங்க, அவசரப்படாதீங்க சொல்றேன் கொஞ்சம் பொறுங்க . .. .

    மனித வாழ்க்கையின் சுழற்சியை, காலத்தின் வேக ஓட்டத்தை அச்செடியின் உருவம் ஏனோ என் மனதில் உருட்ட ஆரம்பித்தது. அந்தச் செடியை அதே இடத்தில் இதன் முன்னால் எத்தனையோ தடவைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் முன்பொருபோதுமில்லாதவாறு என் மனதின் சிந்தனைச் சக்கரத்தை புதுவிதமான திசையில் உருட்ட ஆரம்பித்தது.

     சுமார் 28 வருடங்களுக்கு முன்னால் அப்போது எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்களிருக்கும், என் மகனுக்கு வயது ஒன்று கூட ஆகவில்லை ( ஓ. . . இப்போது நான் அவனை அண்ணாந்து பார்க்கும்படி வளர்ந்து விட்டானோ ?).

     இரும்பையே கடித்து ஜீரணமாக்கிவிடுவேன் என்னும் மூடத்தனமான தைரியம் அறிவுத்திறனை மறைத்து நிற்கும் இளரத்தம் துடித்து நிற்கும் வேளை.

     எனக்கு நானே முதலாளியாக இருப்பதே உலகத்தில் அதிசிறந்த பணி என்னும் ஒரு பிடிவாதம் மனதில் ஓங்கி வளர்ந்ததினால் சொந்தத்தொழில் நடத்துவதாக எண்ணி பணத்தை விரயம் பண்ணிக்கொண்டிருந்த நேரம்.

     ஒருநாள் காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வீட்டினுள் வளர்க்கும் செடிகள் விற்பனையாகும் கடை ஒன்றின் முன் நிற்கும் போது அங்கிருந்த ஒரு தாவரத்தின் மீது என் பார்வை பதிந்தது. ஏனோ அதை வாங்கி விட வேண்டும் என்னும் அவாவில் அதை வீடு கொண்டு வந்து சேர்த்து விட்டேன்.

    எதற்காக இந்தக் கஷ்டமான நிலையில் இந்த அனாவசியச் செலவு என்று என் மனைவி கடிந்து கொண்டாலும் அதை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தாள்.

    அதே “போகோனியா டைகர்” என்னும் அந்தச் செடிதான் ஏறத்தாழ 28 வருடங்களின் பின்னர் என் பார்வையில் பட்டது.

    28 வருடகாலம் என்பது மனிதவாழ்க்கையைப் பொறுத்தவரை பல மாற்றங்களை உள்லடக்கியதாக இருக்கும். அந்தச் செடியின் பார்வையில் எனது வாழ்க்கையில் இவ்விருபத்தைந்து வருடகால வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் எப்படி இருந்திருக்கும் என்று நான் எண்ணத் தலைப்பட்டமையே என்னெஞ்சில் ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகங்கள்.

    ஒரு குழந்தையின் தந்தையாக, ஒரு பதின்ம வயதுக் குழந்தையின் தந்தையாக இன்று ஒரு இளம் டாக்டரின் தந்தையாக மாற்றமடைந்த என்னைப்பற்றிய அச்செடியின் பார்வை எத்தகையதாக இருந்திருக்கும்?

    அதே சூழலில் எனது மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து முழுநேர வேலை பார்த்துக் கொண்டு என் மகனின் அன்புத்தாயாக தனது பணியையும் கவனித்துக் கொண்டு , மாலைநேர வகுப்புகளின் தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட எனத்ஹு மனைவியின் மீதான அச்செடியின் பார்வை எவ்வாறு இருந்திருக்கும் ?

    அதுமட்டுமா? ஒரு இருபத்திஜந்து வருடகாலம் மனிதன் வாழ்வதென்பதே கடினமாக இருக்கையில் அச்செடி எவ்வாறு இவ்விருபத்தைந்து வருடகாலம் உயிர்தப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே அதிசயம்தான்.

    அச்செடி தனது வாழ்வி அந்திமகாலத்தை அடைகின்றது போலத் தெரிந்தவுடன் அதன் ஒரு கிளையைக் கிள்ளி வேறொரு சிறு தொட்டியில் நாட்டி அதன் அதன் வாழ்வை நீட்டி வைத்த என் மனைவியின் விடாமுயற்சி என்னைத் திகைப்பினுள் ஆழ்த்துகிறது.

    என் வாழ்க்கையில் பொறுப்புக்களின் கனத்தைப் புரியாதவனாக கண்மூடித்தனமாகச் செலவு செய்து கொண்ட காணும் புதுவிதமான சாதனங்களை எனதுடையதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற நப்பாசை கொண்டு அலைந்த என்னுள் நிகழ்ந்த மாற்றங்களை அச்செடியின் பார்வையின் கோணத்திலிருந்து நோக்கினால் எவ்வாறு இருக்கும் என்று எண்ணிப்பார்க்கையில் மனமே ஒருமுறை சிலிர்த்துப் போகிறது.

    அன்றிலிருந்து இன்றுவரை மூன்று இல்லங்களை மாறி, மாறி வந்த அந்தச் செடியின் மனதில் வித்தியாசமான இல்லங்களில் வித்தியாசமான இடங்களில் தான் தரித்திருந்த நினைவுகள் பதிந்திருக்குமா?

    விந்தை மிகு உலகத்தில் விசித்திர வினாக்கள்!…

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம்

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினிய ​நெஞ்சங்க​ளே!

     

    தமிழன்​​னையின் தவப்புதல்வன் என் இதயம் வாழ் இனிய ​நேசன் எந்தன் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நி​னைவு தினம் இன்று.

     

    காலமகள் தந்த கவி​தைப் ​பெட்டகம், க​லையுலகம் கண்ட தத்துவப் பாடலாசிரியன், தமிழுலகம் ஈந்த தா​னைத்தமிழன்; ஆம் அவர்தான் எம் உள்ளங்க​ளை​யெல்லாம் தன் கானங்களினாலும் கவி​தைகளினாலும் அற்புத எழுத்துக்களினாலும் கவர்ந்திழுத்த காவியத் த​லைமகன்.

     

    இன்று அவர்தம் திருப்பாதங்க​ளைப் பணிந்து இக்கவி​தை மா​லை​யை அவருக்காய்ச் சாத்துகி​றேன்.

    6340880822_44dbd43f3f

    அண்ண​லே!

    அன்​னைத் தமிழ் தந்த

    அருந்தவப் புதல்வ​னே!

     

    இள​மையின் ​வேகத்தில்

    இதயத்தின் ஓட்டத்​தோடு

    காற்றாக அ​லைந்த எந்தன்

    கா​ளை மன​தைத் தமிழால்

    கட்டிப் ​போட்ட கவியர​சே!

     

    வாழ்க்​தை தூக்கிப் ​போட்ட

    வி​னைகளுக்​கெல்லாம் மருந்தாக

    தத்துவப் பாடல்களாய் அள்ளித்

    தந்த தங்கத் தமிழ்க் கவி​யே!

     

    இதயத்தின் வலிக​ளெல்லாம் ஐயன்

    ஈந்த பாடல்களினால் ஒரு ​நொடியில்

    காற்​றோடு க​ரைந்திடும் விந்​தை

    கண்டு நான் வியந்திடாப் ​பொழுதுகளில்​லை

     

    இலக்கிய ​மே​தைகள் தான் எமக்கு

    இயற்றுவர் அருங் கவி​தைகள் என்ப​தை

    இற்றுப் ​போகச் ​செய்த ஒரு உன்னத

    இயற்​கைக் கவிஞனாய் இகத்தில் உதித்தவ​னே!

     

    பூஜ்ஜியத்துக்குள் ஒரு ராஜ்ஜியத்​தை

    பூட்டி ​வைத்த பரம் ​பொருளின்

    தத்துவத்​தை எளி​மையாக்கி எமக்க​தை

    தீந்தமிழ்ப் பாடலாக்கிய கவி​வேந்த​னே!

     

    கண்ண​னை நீ மனதில் யாசித்து ஓர்

    கண்ணனின் தாசனாகி வ​கையாக

    புல்லாங்குழல் க​தையில் ஒரு இனிய

    புதுச் சூட்சுமத்​தைப் பு​தைத்தவ​னே!

     

    நான் யார்? நீ யார்? என்று

    நயமான ​கேள்விகளினால் எமக்கு

    நாம் யார் எனும் எண்ணத்​தைத் தந்து

    தன்​னைத் தானறியும் வ​கை ​சொன்ன

    தத்துவக் கவிஞன் ஐயா நீ

     

    இன்றுனது நி​னைவு தினம் ஆனாலும்

    இவன் உன்​னை மறந்தால் தா​னே நி​னைப்பதற்கு

    எப்​போது என் விரல்கள் வ​ளைந்தாலும்

    அப்​போது நீதா​னே அங்கு மூலமாவாய்

     

    கவியரசர் கண்ணதாசன் தன் அ​வையில்

    கவிஞனாக ​வேண்டு​மென்​றே அவ்வி​றைவன்

    இத்தினத்தில் உன்​னைத் தன்​னோடு

    இ​ணைத்துக் ​கொண்டான்? ​சொல்லய்யா

     

    உன் பாதம் தன்னில் இன்று இப்​பொழுதில்

    என் சிரம் பதித்து வணங்குகி​றேன்

    நான் வாழும் காலம் மட்டும் எழுத்துக்கு

    உந்தன் ஆசி ​வேண்டி வணங்குகி​றேன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…78

    சக்தி சக்திதாசன்

     

     அன்பினியவர்களே !

    அடுத்தொரு மடலில் உங்களோடு இணைவதில் மகிழ்கிறேன்.

    இந்த வாழ்க்கை எமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் எம்மைச் சூந்துள்ள அகப்புறச் சூழல்கள் வேறுபட்டவை..

    சில சமயங்களில் இந்த வாழ்க்கை எமக்கு இனிப்பாகவும் சில சமயங்களில் கசப்பாகவும் இருக்கிறது.

    பல சமயங்களில், பல சந்தர்ப்பங்களில் எமக்கு ஒன்று புரிவதில்லை. அதாவது இது ஒன்ரும் நாம் வேண்டிப் பெறப்பட்ட வாழ்க்கை அல்ல எம்மீது திணிக்கப்பட்ட வாழ்க்கை.

    இந்தப் பெற்றோர்களுக்கு, இத்தனையாவது சேயாக வேண்டும் என்று நாம் கேட்டுக் கொண்டல்ல எமது வாழ்க்கை எமக்குக் கிடைக்கிறது.

    ஆனால் கிடைத்த இவ்வாழ்க்கையில் எம்மில் எத்தனைபேர் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது கிலவும் சிக்கலான கேள்வி.

    மகிழ்ச்சி என்பதன் அர்த்தத்தையே நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமாக விளங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுவே உண்மை.

    ஆனால் இவ்வித்தியாசங்களினால் தான் இவ்வாழ்க்கையே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுவே உண்மை.

    எமக்குக் கிடைக்காதவற்றைத் தேடி ஓடிப்போவது தான் இவ்வாழ்க்கையில் பலரது வாழ்வில் சகஜமாக நிகழ்கிறது.

    அது தவரென்றும் கூறமுடியாது. ஏனெனில் இத்தேடலின் விளைவுகளாய்த்தான் இலட்சியங்கள் பரிமணிக்கின்றன..

    ஆனால் இத்தெடல்கள் நியாயம் எனும் வரம்பினைக் கடக்கும் போதுதான் பலரது வாழ்வில் நிம்மதி பறி போகிறது.

    என்னடா இது ! சக்தி என்ன ஒரே ததுவ மார்க்கத்தில் இம்மடலை வரைந்து கொண்டு போகிறானே என்றுறு எண்ணி அங்கலாய்க்காதீர்கள்.

    விடயத்திற்கு வருகிறேன்.

    உலகில் பலர் விபத்துக்களின் நிமித்தம் தமது அங்க அவயங்களைப் பறிகொடுப்பது உண்டு. ஆனால் சிலரோ பிறக்கும் போதே அங்கவீனர்களாக பிறக்கும் துர்பாக்கியத்தை அடைகிறார்கள்.

    இதுகூட அவர்கள் கேட்டுப் பெறுவது அவர்களின் மீது திணிக்கப்படுவது ஒன்றே. விபத்தின் மூலம் அங்கத்தைப் பரி கொடுப்பவர்களின் துரதிர்ஷ்டத்தில் வேண்டுமானால் சில சமயங்களி அவர்களின் பங்கு ஒரு பகுதியாக இருக்கலாம்.

    ஆனால் பிறப்பின் போதே அங்கத்தைப் பறிகொடுத்துப் பிறப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது.

    அப்படியாக முழங்காலுக்கு கீழாக இரு கால்களையும் இழந்த நிலையில் பிறந்தவர் தான் ரிச்சார்ட் வைட்கெட் (Richard Whitehead) .

    இவருக்கிருந்த அங்கக் குறைபாடுகளைப் பற்றி இவரது பெற்றோர் மனமுடைந்து மூலையில் இருந்து விடவில்லை.

    சிறுவயதிலேயே முழங்காலுக்குக் கீழ் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட இவர் தனது வாழ்வைஇல் வெற்றியடைய ஒரேவழி விளையாட்டுத்துறை என்று இவரது பெற்றோர் இவருக்கு விளையாட்டுக்கள் மீது இருந்த ஆர்வத்தினால் தீர்மானித்தனர்,

    தாய்தந்தையர் இவரை விளையாட்டுக் கழகங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஓட்டப் போட்டியில் மிகவும் தேர்ச்சி பெற்றார்.

    பாடசாலைப் போட்டிகளில் பல பரிசில்கள் பெற்றார்.

    இவ்வரது முதலாவது பணி 27 வயதில் அவர் வாழ்ந்த நகரத்தின் நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்றுவிக்கும் பயிற்சியாளரானார்.

    இலண்டனில் நடந்த 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மாற்றுத் திறளாளிக்களுக்கான பந்தயங்களில் அதீத வெற்றியீட்டினார்.

    அவருக்கு இப்போ இங்கிலாந்து மகாராணியார் வழங்கும் விருதுகளில் ஒன்றான “மெம்மர் ஒவ் பிரிட்டிஷ் எம்பயர்”; எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

    38 வயதான இவர் ஒரு பெண்குழந்தைக்குத் தந்தையாவார். தன்னுடைய குழந்தையின் நல்வாழ்க்கையே தனக்கு அதீத முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுகிறார்.

    அனைவரையும் போல என்னாலும் அனைத்தையும் புரிய முடியும் ஆனால் என்ன கொஞ்ச நேரம் அதிகமாகும் என்கிறார் மிகவும் சாதாரணமாக.

    ஒரு சாதாரண தலைவலியோ அன்றிக் காய்ச்சலோ வந்து விட்டால் ஓடிப்போய் படுக்கையில் விழுந்து விடுகிறோம். பிறவியிலே தனக்கு இயற்கை கொடுத்த குறைபாட்டை ஒரு குறைபாடாகவே கருதாமல் வாழ்க்கையில் போராடி வெற்றியடைந்த இவரின் வாழ்வு . . . . . .

    எமக்கெல்லாம் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கவில்லையா?

    கிளம்புங்கள் சாதிக்க இன்னும் பலவுண்டு

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…77

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

     

    இனிமையான வணக்கங்களுடன் உங்களுடன் மீண்டும் இணைகிறேன்.

    சத்தியத்தை தன் வாழ்வாக்கி, தன் வாழ்வின் சோதனைகளைச் சாதனையாக்கிய உலகம் போற்றும் உன்னதத் தலைவர் மகாத்மா காந்தி அவர்களின் ஜயந்தித் தினத்தன்று இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன்.

    எந்தவொரு நாட்டின் அதிகாரத்திலிருந்து தமது நாட்டை விடுவிக்க பாரதத் தந்தை காந்தி போராடினாரோ அந்த நாட்டின் ஒரு பிரஜையாக இன்று இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன்.

    மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழி இன்று உலகெல்லாம் ஒரு உன்னத வழியாகப் போற்றப்படுவது வெள்ளிடை மலையாகத் தெரியாது போனாலும் இந்நாட்டின் பல ஆங்கிலேய நண்பர்களுடன் பேசும் போது அவர்மீது அவர்கள் கொண்டிருக்கும் மதிப்பை உணர முடிகிறது.

    இன்று உலகின் பல பாகங்களில்லும் பல வழிகளில் பலநாடுகளில் யுத்தங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. யுத்தங்களின் வழி அழிந்து கொண்டிருக்கும் உயிர்களின் அவலங்களைப் பார்க்கும் போதுதான் மகாத்மா காந்தி பயணித்த பாதையின் காரணம் புரிகிறது.

    அவர் நாட்டின் விடுதலைக்காய் செய்த சேவை ஒருபுறமிருக்க அவரது சொந்த வாழ்க்கையின் எளிமை உலகுவாழ் மக்களுக்கே ஒரு எடுத்துக் காட்டாக அமைகிறது.

    ஆனால் இன்று காந்தி காட்டியவழி இன்றைய காலகட்டத்தில் எத்தகைய வகையில் மக்களால் பார்க்கப்படுகிறது என்று சிந்தித்துப் பார்க்கும் போது விடை மிகவும் கலங்களாகத்தான் இருக்கிறது.

    மகாத்மா காந்தி எனும் தனிமனிதனின் வாழ்க்கையை இந்தியச் சுதந்திரப் போராட்டம் எனும் நிகழ்விலிருந்து அந்நியப்படுத்திப் பார்க்க முடியாது.

    ஆனால் வாழ்வில் அவர் கற்றுக்கொண்ட அனுபவப் பாடங்களே தென்னாபிரிக்காவில் வக்கீலாக இருந்த அவரை இந்தியச் சுதந்திரப் போராட்டப் பாதைக்குத் திருப்பியது.

    அவரது வாழ்க்கைச் சுயசரிதமான சத்திய சோதனையிலிருந்து ஒவ்வொரு மனிதனும் எடுத்துக் கொள்ள வேண்டிய பல அரிய அனுபவப் பாடங்கள் உண்டு ஆனால் அதை எத்தனை பேர் இன்றைய கால கட்டத்தில் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    அவசரமான இன்றைய உலக்த்திலே நாம் மனிதம் பெரியதோர் வலயத்தை விட்டு எமது இனம், எமது நாடு, எமது மொழி எனும் குறுகிய வலயத்தை வரித்துக் கொண்டுள்ளோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    மொழி, கலை, கலாச்சாரம் என்பனவற்றைக் கைவிட்டு விட வேண்டும் என்பதல்ல எனது வாதம். என்ன மொழி பேசுபவராக இருந்தாலும், எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அனைவரும் மனிதர் எனும் உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கிக் கொண்டு போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    ஈழத்தில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி அவர்களுக்கு ஏன் புகழாரம் சாத்துகிறேன் எனும் பாணியில் முகநூலில் நான் எழுதிய பதிவிற்கு ஒரு நண்பர் குறிப்பெழுதியிருந்தது என்னை ஆச்சரியத்திலாழ்த்தியது.

    உண்மை எங்கிருந்தாலும், நல்லவை எங்கு நடந்தாலும், அதை இனம், மொழி, நாடு எனும் எல்லைகளுக்குட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ளுவதே ஒரு மனிதனின் மனிதத்தன்மையான செய்கை என்பதே என் எண்ணம்.

    கூட்டிக் கழித்துப் பெருக்கிப் பிரித்துப் பார்த்தால் மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை எமக்குப் போதிப்பதும் இதுவேதான்.

    ஈழத்தில் எமது வீட்டு வரவேற்பறையில் ஆளுயர மகாத்மா காந்தி அவர்களின் உருவப் படம் ஒன்றை என் தந்தை மாட்டி வைத்திருந்தார்.

    சிறுவனாயிருந்த நான் அவரிடம் ஏன் இப்படம் இங்கு மாட்டியிருக்கிறீர்கள் என்று வினவும் போது” மனிதாபிமானத்தின் அடையாளம் இது ” என்றார் என் தந்தை.

    அன்றைய இளம் பிராயத்தில் இக்கூற்றின் கனம் எனக்குப் புரியவில்லை ஆனால் இன்று வயோதிபத்தின் வாசலில் நிற்கும் எனக்கு அதன் உள்ளார்த்தம் தெளிவாகப் புரிகிறது.

    இந்த காந்தி ஜயந்தி தினத்தன்று நான் வரையும் இம்மடல் கூட அம்மாமனிதனுக்கு ஒரு ஆராதனையாகவே கொள்கிறேன்.

    அன்பு வழி நடப்போம், அனைவரையும் நேசிப்போம்

    மீண்டும் அடுத்தமடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    லண்டன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(76)

     

    சக்தி சக்திதாசன்

    sakthi

     

     

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    வாரம் ஒன்று ஓடி விட்டது. வாழ்வின் நீளம் கூடி விட்டது. இதோ உங்களுடன் அடுத்த மடலில் கலப்பது மகிழ்வைத் தருகிறது.

    காலத்தின் நீரோட்டத்தோடு மக்களின் வாழ்வின் தேவைகளும் மாறுதலடைந்து கொண்டு வருகிறது.

    உலகப் பொருளாதார மாற்றம், சர்வதேச வியாபாரத் தொடர்புகள். நாடுகளுக்கிடையேயான பயண இலகுவாக்கல் என்பன மக்களின் தேவைகளையும் திரிபடையப் பண்ணி இருக்கிறதே இன்றைய யதார்த்தமாக இருக்கிறது.

    மக்களின் தேவைகளை மையப்படுத்தியே நாட்டின் அரசியல் களம் வகுக்கப்படுகிறது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளின் பூர்த்திகளை வெவ்வேறு அரசியல் கட்சிகள் தாம் எவ்வகையில் கையாளப் போகின்றன என்பதை எவ்வகையில் அம்மக்களுக்குத் தெளிவு படுத்துகிறார்கள் என்பதிலும், அவ்வரசியல் விஞ்ஞாபனத்தை மக்கள் எவ்வளவு தூரம் நம்புகிறார்கள் என்பதிலும்இவ்வரசியல் கட்ச்சிகள் தம் பிரச்சாரத்தை மையப்படுத்துகிறார்கள்.

    இங்கிலாந்தில் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் இங்கிலாந்துப் பிரதான அரசியல் கட்சிகளின் வருடாந்த மகாநாடு நடைபெறும். அம்மகாநாட்டில் அக்கட்ச்சிகள் தாம் தமது கட்ச்சிகளின் கொள்கைப் பிரகடனங்கள் செய்வது வழக்கம்.

    அவ்வாறே ஈவருடமும் லிபரல் டெமகிரட்ஸ் கட்சி தனது அரசியல் மகாநாட்டை நடத்தி இதனை ஆரம்பித்து வைத்தது.

    தற்போதைய இங்கிலாந்து அரசு கன்சர்வெடிவ் கட்சியும், லிபரல் டெமகிரட்ஸ் கட்சியும் இணைந்து நடத்தும் ஒரு கூட்டரசாங்கம் என்பது யாவரும் அறிந்ததே.

    இக்கூட்டரசாங்கம் பதவியேற்று ஏறத்தாழ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. பொருளாதார இக்கட்டான சூழலில் உலகப் பொருளாடஹரம் ஆட்டம் கண்டிருந்த நிலையில் பதவிக்கு வந்த இவ்வரசாங்கம் மக்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டிய பல சிக்கலான சட்டங்களை அமுல்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.

    தர்போது ஓரளவு சீரடைந்து வரும் இங்கிலாந்துப் பொருளாதார நிலை இன்னமும் மக்களின் வாழ்க்கைத் தர்த்தை உயர்த்தக்கூடிய ஒரு நிலைக்குத் திரும்பவில்லை.

    இந்த நிலைமையானது எதிர்க்கட்சியான லேபர் கட்ச்சியை மிகவும் முன்னோக்கித் தள்ளக்கூடிய ஒரு கட்டமாகும். இருப்பினும் அரசியல் அவதானிகளின் எதிர்பார்ப்புகளின் நிமித்தம் லேபர் கட்ச்சி இந்நிலைமையத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்லத் தவரி விட்டதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

    கருத்துக் கணிப்பில் ஆளும் அரசியல் கட்சிகளின் கூட்டில் முக்கியமான் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விட ஒரு சிறிய அளவிலேயே லேபர் கட்சி முன்னிலை வகிக்கிறது..

    இதற்குக் காரணம் லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் என்பதே பலருடைய கணிப்பாகும். இவர் பலரின் எதிர்பார்ப்பிற்கு எதிராக தனது மூத்த சகோதரரை எதிர்த்து இத்தலைமைப் பதவியை இவர் பெற்றுக் கொண்டது பலருக்கு இவரின் மீது ஒரு தப்பபிப்பிராயத்தைத் தோற்றுவித்திருந்தது என்பது உண்மையே.

    அது மட்டுமின்றி ஆளும் கூட்டரசாங்கத்தின் பல இக்கட்டான சூழல்களில் இவர் தனது திறமையினால் அதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் தவறி விட்டார் என்பதுவும் இவர் மீதுள்ள மற்றுமோர் குற்றச் சாட்டாகும்.

    இத்தகைய ஒரு இக்கட்டான நிலையில் லேபர் கட்சி தனது முன்னில்லையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், அதன் தலைவரது பதவியை நியாயப்படுத்திக் கொள்ளவும் தனது வருடாந்த மகாநாட்டை மிகவும் எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தது.

    ஆனால் இம்மகாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே அம்மகாநாட்டின் முக்கியத்துவத்தைத் திசை திருப்பும் வகையிலே ஒரு நிகழ்வு நடந்தேறியது.

    அப்படி என்ன நிகழ்வு என்று எண்ணுகிறீர்களா?

    விஷயத்திற்கு வருகிறேன். கடந்த லேபர் அரசாங்கத்தில் இறுதியாக பதவி வகித்த பிரதமர் கோர்டன் பிறவுண் என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இவர் தனது அரசியல் ஆலொசகராகவும், ஊடகத் தொடர்பாளராகவும் நியமித்து பின்னர் 2009ம் ஆண்டு பதவி நீக்கம் செய்த டாமியன் மக்பிறைட் என்பவர் வெளியிட்ட நூலே லேபர் கட்ச்சிக்கு தலையிடியைக் கொடுத்தது.

    ஆமாம் இந்நூலிலே இவர் தான் எவ்வாறு அன்றைய பிரதமர் கோர்டன் பிறவுண் அவர்களது பிரதமர் பதவிக்கு இடையூறு விளைவிப்பவர்களை வீழ்த்தினார் என்பதையும் அதற்குத் தான் எடுத்த அடிகளையும், பின்னிய சீழ்ச்சி வலைகளையும் பற்றி மிகவும் விளக்கமாக குறிப்பிடிருக்கிறார்.

    இந்நூலில் இவர் தனது செய்கைகளுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த இவர் தான் இந்நூலை வெளியிட்ட காரணம் அரசியலில் நிகழும் முறையற்ற செயல்களை வெளிக்கொணர்வதன் மூலம் இந்நாட்டின் அரசியல்வாதிகளைச் சுத்தப்படுத்துவதே என்று கூறியிருக்கிறார்.

    இந்நூலில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் படி இத்தகைய நடவடிக்கைகளில் தற்போதைய லேபர் கட்ச்சித் தலைவர், மற்றும் நிதித்துறை பேச்சாளர் ஆகியவர்களுக்கு இருந்த பங்கினைப் பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அப்படியே அவர்களுக்கு நேரடியாக பங்கு இருந்திருக்காவிட்டாலும் இதுபற்றி எந்த அளவிற்கு அவர்களுக்குத் தெரிந்திருந்தது, அப்படித் தெரிந்திருந்தால் அவர்கள் ஏன் அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்னும் கேள்விகளே தற்போதைய லேபர் கட்ச்சித் தலைமைத்துவத்துவதற்கு தலையிடியைக் கொடுத்துள்ளன.

    சாதாரண வாக்காளப் பொதுமக்கள், எந்தக் கட்சியிலும் அங்கத்துவம் வகிக்காதவர்கள் ம்னங்களில் இது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கும் என்தில் எதுவித ஜயமுமில்லை.

    அரசியல்வாதிக்க்க்கள் மக்களுக்குச் சேவை வெய்ய மக்களிடையே இருந்து புறப்பட்டவர்கள் என்னும் வகையில் அவர்கள் மீது மக்களுக்கு பெரும் மதிப்பு இருந்து வந்தது உண்மையே.

    ஆனால் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அது மேலைத்தேசமாகட்டும் அன்றிக் கீழைத் தேசமாகட்டும் தாங்கள் மக்களுக்காக என்பதை மறந்து அரசியல்வாதிகள் மக்கள் தங்களுக்காக எனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்று எண்ணவே தோன்றுகிறது.

    தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் எத்தகைய மட்டத்திற்கும் கீழிறங்கிச் செல்லத் தயங்க மாட்டார்கள் எனபது போலத் தென்படுகிறது.

    ஒவ்வொரு அரசியல் கட்ச்சியும் தாம் மக்களின் நன்மை கருதி கொண்டுள்ள கொள்கைகளை வழிநடத்த தமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. அதுதான் யதார்த்தமும் கூட.

    ஆனால் அவ்வதிகாரத்தை அடைய அன்றி அடைந்த அவ்வதிகாரத்தைத் தக்க்க்க வைத்துக் கொள்ள அவர்கள் எத்தகிய கீழான செய்கைகளையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்று எண்ணும் போது நெஞ்சம் கொஞ்சம் பதறத்தான் செய்கிறது.

    காலம் அரசியலைச் சுத்தம் செய்யுமா?… இளம் நெஞ்சங்கள், எமது அடுத்த தலைமுறைதான் இதற்கு விடையளிக்க வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (75)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    அன்பினிய உங்களோடு அடுத்தொரு மடலில் இ​ணைவதில் மகிழ்கிறேன்.

    பசி, பஞ்சம், பட்டினி என்பன எமது பின்புல நாடுகளிலே அன்றாடம் ஒலிக்கும் அவலக்குரல்கள்.

    வறுமையின் நிமித்தம் அன்றாடம் உண்ண வழியின்றி உயிர் துறப்போர் எமது தாய்நாடுகளில் ஏராளம்.

    ஆனால் இன்று நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மேலைநாடுகளில் இப்பசி, பஞ்சம், பட்டினி எனும் வார்த்தைகளைக் கேட்பது மிகவும் அருமை.

    வாழ வழியின்றித் தவிப்போரை வாழ வைக்க அரசாங்கம் அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான உதவிப்பணத்தை வழங்கி வருவது ஒரு சாதாரண நிகழ்வாகி விட்டது.

    ஆனால் இத்தகைய ஒரு சமூகத்திலே அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளை வழங்க அரசாங்கம் இருக்கிறது எனும் காரணம் அவர்களின் தாய் தந்தையரின் கடமைகளிலிருந்து அவர்களுக்கு விதி விலக்களிக்கிறதா?

    எம்முடைய தாய் மண்ணிலே ஒரு குழந்தை இம்மண்ணில் விழுந்த நாள் முதல் அக்குழந்தை மண்ணோடு மண்ணாகிப் போகும் காலம் வரை அக்குழந்​தையின் பாதுகாப்பு ஒன்றே அக்குழந்தையின் பெற்​றோரின் கடமைகளில் முன்நிற்கிறது..

    ஆனால் அதற்காக மேலைநாடுகளில் பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளைப் பராமரிக்கும் தமது கடமைகளில் இருந்து வழுவி நிற்கிறார்கள் என்று பொருளல்ல. தமது குழந்தைகளுக்காக தமது உயிரைக்கூட தியாகம் செய்யக்கூடிய உணர்வு படைத்த பெற்றோர்களே பெரும்பான்மையாக காணக்கூடியதாக உள்ளது.

    ஆனால் சமூகத்தில் சமயங்களில் நடைபெறும் மனிதாபிமானமற்ற நிகழ்வுகளினால் எம் சமுதாய மக்களின் நடவடிக்கைகள் மனிதர்களின் குணாபாவங்களைப் பற்றிய அச்சத்தை உள்ளத்தில் ஏற்படுத்தி விடுகிறது என்பதும் உண்மையே.

    சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு வழக்கொன்றின் சாரம் எம்மை இத்தகைய மனக்குழப்பத்தினுள் ஆழ்த்தி விட்டது.

    இங்கிலாந்தின் வடபகுதியில் அமைந்துள்ள கவென்ரி (Coventry) எனும் இடத்தில் வசிக்கும் மக்டெலினா லூசாக் ( Magdelena Luczak ) என்பவருக்கும் எரிக் பெல்க்கா (Eryk Pelka) என்பவருக்கும் பிறந்த குழந்தை டானியெல் எனும் மூன்று வயதுக் குழந்தையாகும்.

    _69049801_pelka

    இவரது தந்தையான எரிக் பெல்க்கா இவர்களை விட்டுப் பிரிந்து தனது நாடான போலந்துக்குப் போய் விட்டார்.

    தாயாரான மக்டெலினா லூசாக் என்பவர் மரியூஸ் கிரிஸ்லொக் (Mariusz Krezolek ) என்பவரோடு வாழ்ந்து வந்தார்.

    இவ்வருடம் மார்ச் மாதம் மூன்றாம் ​தேதி இக்குழந்தை வைத்தியசாலையில் மரணமடைந்தது.

    மரண விசாரணையின் போது இக்குழந்தையின் உடலில் பல காயங்கள் காணப்பட்டது. அத்துடன் இக்குழந்தை சரியான முறையில் உணவு ஊட்டப்படாமலும் பராமரிக்கப்படாமலும் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

    பெற்றோரினால் பலவகையான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டதும் தெரிய வந்தது.

    இக்குழந்தையின் தாயோடு வசித்திருந்த அம்மனிதன் மிகவும் வன்மு​றைகளுக்குட்படுத்தக்கூடிய மனோநிலை படைத்திருந்தான் என்பதும் தெரிய வந்தது.

    _69871485_dpelkaபல தடவைகள் அயலவர்களின் முறையீட்டைத் தொடர்ந்து ​போலீசாரும், குழந்தை நலன்களைக் கவனிக்கும் அரசாங்க இலாகாவைச் சேர்ந்தவர்களும் விசாரணைகள் மேற்கொண்டதும் தெரிய வந்தது.

    இதைத்தவிர இக்குழந்தை சென்று வந்த குழந்தைகளுக்கான பாடசாலை அதிபர் பல தடவைகள் இக்குழந்தை வளர்ச்சி குறைந்த நிலையில் காணப்படுவதை அவதானித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

    இத்தகைய பொருளாதார வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் இத்தனை அறிகுறிகள் தென்பட்ட போதும் இக்குழந்தையை அரசாங்கத் திணைக்களங்களினால் ஏன் காப்பாற்ற முடியாமல் போனது எனும் ​கேள்வி ஒரு பக்கம் மிகவும் பலமாக எழுந்துள்ளது.

    அதே சமயம் அரசாங்கத் திணைக்களங்கள் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரித்தெடுப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்கள் எனும் பரவலான கருத்து விளங்கிய காரணத்தினால் இத்திணைக்களங்கள் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டின எனும் விளக்கம் மறுபுறத்திலிருந்து வருகிறது.

    பசி, பஞ்சம், பட்டினி என்பனவற்றிலிருந்து குழந்தைகளைக் காப்பது மட்டும் ஒரு அரசாங்கத்தின் கடமையல்ல. அக்குழந்தைகளை முறையற்ற வகையில் நடத்தும் உறவினர்கள் அவர்கள் பெற்றோர்களாயிருந்தாலும் அவர்களிடமிருந்து காப்பதும் அவர்களது கடமை என்பதை மறக்காமல் செயற்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (74)

    சக்தி சக்திதாசன்doctorlaw sym

    அன்பினியவர்களே !

    அடுத்த மடலில் உங்களோடு இணையும் போதுதான் வாரத்தின் கால்களின் வலிமை புரிகிறது.

    குழந்தை  இறைவனது வரப்பிரசாதம். குழந்தைப் பேறு எனும் மகத்துவம் கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் தாய்மார்கள் இவ்வகிலத்தில் எத்தனையோ ஆயிரம். .

    மற்றொருபுறத்தில் கிடைத்த குழந்தையைப் பறிகொடுத்துத் தவிக்கும் பெற்றோர் பலர். ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு சமுதாயமும் தம்மைப் அடையாளப்படுத்திக் கொள்ள தமது வருங்காலத்தை வளப்படுத்திக் கொள்ள அவர்களது சந்ததியிலேயே தங்கியுள்ளனர்.

    உலகத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்பதை எடுத்துக்காட்ட புராண இதிகாசங்களில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எந்த மதமும் , எந்த கலாச்சாரமும் வெளிப்படையாக ஆணுக்குப் பெண் சளைத்தவள் என்று சொல்லுவதில்லை, போதிப்பதில்லை அத்தகைய போதனைகள் சட்டவிரோதமாகப் பலநாடுகளில் பார்க்கப்படுகின்றன.

    எமது பின்புல நாடுகளிலே தமது வயோதிப கால வாழ்க்கைக்கு ஓய்வூதியமோ அன்றி காப்புறிச் சாசனங்களோ அந்த நாட்களில் இருந்திருக்கவில்லை. பெற்றோர்கள் தம் கையிருப்புகளை எல்லாம் தம் குழந்தைகளின்ன்ன்ன் முன்னேற்றத்துக்காக செல்வழித்து விடுவார்கள்.

    பின் தமது வயோதிப கால வாழ்க்கைக்கு .. . . . . ?

    தம்முடைய பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி தம்மைப் பார்த்துக் கொள்வார்கள் எனும் நம்பிக்கையே அவர்களை வாழ வைத்தது.

    அந்தக் காலங்களிலே பெண்கள் வேலைக்குப் போவது அரிது, ஆண்களே உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் நிலை இருந்தது.

    எனவே பெற்றோரின் கனவு தமது முதலாவது குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் எனும் வகையில் அமைந்தது.

    இதன்  தேவை காலப்போக்கில் ஒரு சமுதாய கெளரவமாக மாறுதலடைந்து விட்டது. இதனால் மிகவும் மோசமாக,  பெண் குழந்தைகளை வெறுக்கும் நிலைகூடத் தென்பட்டது.

    என்ன எதற்காக சக்தியின் இம்மடல் இந்தத் திக்கு நோக்கிப் பயணிக்கிறது என்று எண்ணுகிறீர்களா?

    சமீபத்தில் இங்கிலாந்துச் செய்திகளில் மிகவும் பிரபலமாக வலம் வரும் ஒரு செய்தியைப் பற்றிக் கூறவே இவ்விளக்கத்தினூடாகப் பயணித்தேன்.

    பத்திரிகைகள் சம்யங்களில் “விசாரணை ஊடகவியல் (Investigative Journalism)” எனும் ஒருவகை ஊடக விசாரணையை நடத்துவதுண்டு.
    அவ்வழியில் இங்கிலாந்தின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான “த டெய்லி டெலிகிராப் (The Daily Telegraph) “ எனும் பத்திரிகையின் ஒரு செய்தியாளர் இரு டாக்டர்களின் எதிர்காலத்தையே சின்னாபின்னமாக்கி விட்டுள்ளார். அந்த டாக்டர்களே தாம் வெட்டிய குழிக்குள் தாமே விழுந்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும்.

    இங்கிலாந்தில் கருவுற்று இருக்கும் ஒரு பெண்ணின் கருவை தகுந்த வைத்திய காரணங்கள் இல்லாமல் கலைப்பது சட்டப்படி குற்றமாகும்.

    ஆனால் இவ்விரு டாக்டர்களும்,  வேடமிட்டு வந்த பத்திரிகைச் செய்தியாளரிடம் தாம் “பெண் சிசு” எனும் காரணத்திற்காக அவரின் கருவைக் கலைக்கச் சம்மதித்துள்ளதை, அவர்களுக்கு  தெரியாமல் மறைத்து வைத்திருந்த வீடியோ கேமேரா மூலம் படம் பிடித்துள்ளார்.

    இது அனைத்துத் தரப்பிலிருந்தும் பயங்கரமான் எதிர்ப்பலைகளையும் , காரசாரமான விமர்சனங்களையும் கிளப்பி விட்டுள்ளன.

    அனைத்திற்கும் மேலாக இவ்விரு டாக்டர்களையும் சட்டத்தின் முன்னால் நிறுத்த எடுத்த முயற்சிகள்,  அரசு தரப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் மக்களின் நலனுக்கு எவ்வகையிலும் உதவ மாட்டா எனும் காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இச்செய்தி வெளிவந்ததும் இது பொதுமக்களிடையிலே இவ்விவாதத்தின் மீது மேலும் சூட்டைக் கிளைப்பி விட்டுள்ளது.

    இவையனைத்திற்கும் முடிசூட்டுவது போல இவ்விரு டாக்டர்களும் ஆசியர்கள், அதுவும் தமிழர்கள் என்பது மேலும் அதிக கவனயீர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டாக்டர்கள் பணி என்பது பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டும் கொண்ட ஒரு பணி அல்ல. இது சமுதாய நலனை முன்னெடுக்கும் பணியாகும். ஒரு டாக்டர் உயிர்களைக் காப்பாற்றுவதையே தனது தலையாய பணியாகக் கொண்டிருப்பது அவசியம். தர்க்கரீதியான “பெண் குழந்தை” வேண்டாம் எனும் காரணத்திற்காக ஒரு உயிரை அழிக்கும் செய்கையானது டாக்டர் எனும் அந்தப் புனிதமான பணியையே கொச்சைப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைகிறது.

    முக்கியமாக அந்த டாக்டர்கள் ஆசியக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டிருப்பவர்கள் என்றால் அவர்களது செய்கை ஆசியப் பின்னணியைக் கொண்ட எம் அனைவருக்குமே ஒரு ஏற்க முடியாத வெட்கித் தலைகுனியப் பண்ணும் செய்கையாகத் தென்படுகிறது.

    “பணம் பாதாளம் வரை பாயும்” என்று எம்முன்னோர்கள் இதற்காகத்தான் சொல்லி வைத்தார்களோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(71)

    சக்தி சக்திதாசன்

     

    images

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    அடுத்தொரு மடலில் அன்பு வணக்கங்களுடன்.

    அவசர வாழ்க்கையில் அர்த்தத்தைத் தேடி ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    நாகரீகம் எனும் பெயரில் பல கலாச்சாரச் சீரழிவுகள் நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    அதே சமயம் தாம் தமது காலாச்சார மையங்களைப் பாதுகாத்துக் கொள்கிறோம் எனும் பெயரில் சமுதாயங்கள் தம்மைத் தாமே அந்நியப்படுத்திக் கொண்டு வாழ்கின்றன.

    தீவிரவாதம் பல பெயர்களில் குறிப்பாக மதங்களின் பெயரால் பலவகைகளில் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன.

    இத்தகைய ஒரு சூழல் இங்கிலாந்தைப் போன்ற ஒரு பல்லினக் கலாச்சார மக்கள் நிறைந்த சமுதாய அமைப்பினைக் கொண்ட நாட்டின் அரசாங்கங்களை பலவகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டியுள்ளன.

    அது மட்டுமில்லாமல் இயந்திரவியல் தொழில் நுட்பம் அதிகரிக்கும் அதே வேகத்தில் சமுதாயத்தில் நிகழும் குற்றச் செயல்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

    இவைகள் அனைத்துக்கும் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அரசாங்கம் கையாளும் விஞ்ஞான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமே நிகழ்வுகளைக் கண்காணிக்கும் தானியங்கி கமெராக்கள்.

    இத்தகைய இயந்திரங்கள் பல பொது இடங்கள் பலவற்றில் பொருத்தப்பட்டுள்ளன.

    இவற்றின் உதவியுடன் பல குற்றச்செயல்கள் தடுக்கப்படுவது உண்மையெனினும் இவற்றினால் மக்களின் பிரத்தியேக உரிமைகள் மீறப்படுகின்றன என்பது பொதுப்படையான சில அமைப்புக்களினாலும், பல பொதுமக்களினாலும் அரசாங்கத்தின் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.

    இத்தகைய தெருவோரக் கமிராக்களினாலும், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கமிராக்களினாலும் எடுக்கப்படும் படங்கள் எத்தகைய வகையில் உபயோகிக்கப்படுகின்றன என்பதுவே பலரின் அச்சத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

    இத்தகய நடவடிக்கைகளை ஆங்கிலத்தில் “Big brother watch” என்பார்கள். அதாவது ஒரு குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினரால் ஏனையோர்களின் நடவடிக்கை கண்காணிக்கப்படுவதான அர்த்தத்தில் கூறப்படுகிறது.

    சரி அதிலென்ன தவறு ?

    கேள்வி எழுகிறது அல்லவா? நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட நபர்கள் இந்நாட்டின் பிரஜைகள் எமக்கு அதற்கான பொறுப்புணர்வு இருக்கிறது அதி நம்பிக்கையில்லாமல் எமது ஒவ்வொரு செய்கையையும் கண்காணிப்பது எவ்வகையில் நியாயமாகும் ? என்பதுவே இதன் எதிர்ப்பாளர்களின் வாதம்.

    ஒன்றும் புரியாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று போய்க் கொண்டிருப்போருக்கு என்ன பயம்? மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயமிருக்கும் ? நியாயமாக சட்டத்தை மதித்து வாழ்வொருக்கு இத்தகிய கமிராக்கள் இருப்பதால் ஒன்றும் நேரப் போவதில்லையே பின் எதற்காக இந்த எதிர்ப்பு என்கிறார்கள் அரசாங்கமும் இந்தக் கமிராக்கள் இருப்பதனை ஆதரிப்பவர்களும்.

    தனிமனித உரிமைகளைப் பாதிப்பது மட்டுமல்ல இனரீதியான பாகுபாட்டையும் மக்களிடையே பிரிவு உணர்ச்சிகளையும் தூண்ட வழிவகுக்கும் பல நடவடிக்கைகளுக்கு இத்தகிய செயல்பாடுகள் காரணமாகின்றன என்கிறார்கள் புலம் பெயர்ந்து இந்நாட்டில் வாழும் பல வேற்று சமூகத்தினர்.

    உதாரணமாக 2010ம் ஆண்டு இங்கிலாந்தின் “வெஸ்ட் மிட்லண்ட்ஸ்(West Midlands)” போலிஸ் பிரிவு மன்னிப்புக் கோர வேண்டிய நிலைக்குத் தள்லப்பட்டது. ஏனெனில் இவர்கள் பொருத்திய 200 கமிராக்கள் பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் வாழும் பகுதிகளை தனது பார்வையில் கொண்டிருந்த காரணத்தினால்.

    2007ம் ஆண்டு நடைபெற்ற இலண்டன் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னனியில் பார்க்கும் போது இத்தகைய கண்காணிப்பு அவசியம் தான் என்கிறார்கள் இதனை ஆதரிப்பவர்கள்.

    இவ்வகையான நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்பு எனும் போர்வையில் மக்களை இனரீதியகாப் பிரித்துப்பார்க்கப் பயன்படுகிறது என்று வாதிடுகிறார்கள் இதன் எதிர்ப்பாளர்கள்.

    அது மட்டுமின்றி பாதுகாப்பு எனும் போர்வையில் பாடசாலைகளில் இக்கமிராக்கள் பொருத்தப்படும் போது அங்கே சிறுவர்களின் பிரத்தியேக உரிமைகள் மீறப்படுகின்றன என்பது ஒருசாராரின் வாதம்.

    இத்தகிய கமிராக்களின் செயர்பாடுகள் குற்றச் செயல்களைத் தடுக்கும் வீதம் இதன் செயர்பாட்டை நியாயப்படுதுகிறது என்கிறார்கள் மற்றொரு அறிக்கையைச் சுட்டிக் காட்டி வாதிடும் அரசாங்கத் தரப்பு ஆதரவாளர்கள்.

    இந்த நிலைமையைச் சாளிக்கும் முகமாக அரசாங்கம் புதிய இக்கமிராக்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை அறிமுகம் செய்தார்கள்.

    இந்தச் சட்டம் இப்போது அமுலிக்கு வந்துள்ளது.

    அது என்ன சட்டம் ?

    “Surveillance camera code of practice “ அதாவது கன்காணிப்புக் கமிராக்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்.

    “இத்தகைய கமிராக்கள் ஒரு நியாயபூர்வமான சட்டத்திற்கு உட்படும் வகையில் கன்காணிப்பதை நியாஇப்படுத்தும் வகையிலேயே இயக்கப்பட வேண்டும் அத்துடன் இத்தகைய அத்தாட்சி பெறப்படுவதற்கு மிக அழுத்தமான, அவசியமான தேவை இருக்க வேண்டும் ” இதுவே இச்சட்டத்தின் சாரம்சமாகும்.

    இந்தச் சட்டம் தாம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை என்பது இக்காமிராக்களின் இயக்கத்தை எதிர்ப்போரின் வாதம் இருக்கிறது.

    தம் நாட்டின் பிரஜைகளின் பாதுகாப்பை ஊர்ஜிதப்படுத்துவது ஒரு அரசாங்கத்திற்கு எத்த்னை முக்கியமோ அத்தனை முக்கியம் தமது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது.

    நாட்டின் குற்றச்செயல்களில் மலரும் பயங்கரவாதச் செயல்கள் என்பனவற்றை அரசாங்கம் கட்டுப்படுத்த எடுக்கும் நடவ்டிக்கைகளுக்கு தமது ஆதரவை நல்காமல் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜையின் கடமையாகவும் இருக்க முடியாது.

    இரண்டு தரப்பு வாதப் பிரதிவாதங்களையும் எடுத்துப் பார்க்கையில் எதற்கும் ஒரு சமநிலை பேணப்பட வேண்டியதன் அவசியம் புரிகிறது.

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share