சக்தி சக்திதாசன்

 

அன்பினிய ​நெஞ்சங்க​ளே!

 

தமிழன்​​னையின் தவப்புதல்வன் என் இதயம் வாழ் இனிய ​நேசன் எந்தன் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நி​னைவு தினம் இன்று.

 

காலமகள் தந்த கவி​தைப் ​பெட்டகம், க​லையுலகம் கண்ட தத்துவப் பாடலாசிரியன், தமிழுலகம் ஈந்த தா​னைத்தமிழன்; ஆம் அவர்தான் எம் உள்ளங்க​ளை​யெல்லாம் தன் கானங்களினாலும் கவி​தைகளினாலும் அற்புத எழுத்துக்களினாலும் கவர்ந்திழுத்த காவியத் த​லைமகன்.

 

இன்று அவர்தம் திருப்பாதங்க​ளைப் பணிந்து இக்கவி​தை மா​லை​யை அவருக்காய்ச் சாத்துகி​றேன்.

6340880822_44dbd43f3f

அண்ண​லே!

அன்​னைத் தமிழ் தந்த

அருந்தவப் புதல்வ​னே!

 

இள​மையின் ​வேகத்தில்

இதயத்தின் ஓட்டத்​தோடு

காற்றாக அ​லைந்த எந்தன்

கா​ளை மன​தைத் தமிழால்

கட்டிப் ​போட்ட கவியர​சே!

 

வாழ்க்​தை தூக்கிப் ​போட்ட

வி​னைகளுக்​கெல்லாம் மருந்தாக

தத்துவப் பாடல்களாய் அள்ளித்

தந்த தங்கத் தமிழ்க் கவி​யே!

 

இதயத்தின் வலிக​ளெல்லாம் ஐயன்

ஈந்த பாடல்களினால் ஒரு ​நொடியில்

காற்​றோடு க​ரைந்திடும் விந்​தை

கண்டு நான் வியந்திடாப் ​பொழுதுகளில்​லை

 

இலக்கிய ​மே​தைகள் தான் எமக்கு

இயற்றுவர் அருங் கவி​தைகள் என்ப​தை

இற்றுப் ​போகச் ​செய்த ஒரு உன்னத

இயற்​கைக் கவிஞனாய் இகத்தில் உதித்தவ​னே!

 

பூஜ்ஜியத்துக்குள் ஒரு ராஜ்ஜியத்​தை

பூட்டி ​வைத்த பரம் ​பொருளின்

தத்துவத்​தை எளி​மையாக்கி எமக்க​தை

தீந்தமிழ்ப் பாடலாக்கிய கவி​வேந்த​னே!

 

கண்ண​னை நீ மனதில் யாசித்து ஓர்

கண்ணனின் தாசனாகி வ​கையாக

புல்லாங்குழல் க​தையில் ஒரு இனிய

புதுச் சூட்சுமத்​தைப் பு​தைத்தவ​னே!

 

நான் யார்? நீ யார்? என்று

நயமான ​கேள்விகளினால் எமக்கு

நாம் யார் எனும் எண்ணத்​தைத் தந்து

தன்​னைத் தானறியும் வ​கை ​சொன்ன

தத்துவக் கவிஞன் ஐயா நீ

 

இன்றுனது நி​னைவு தினம் ஆனாலும்

இவன் உன்​னை மறந்தால் தா​னே நி​னைப்பதற்கு

எப்​போது என் விரல்கள் வ​ளைந்தாலும்

அப்​போது நீதா​னே அங்கு மூலமாவாய்

 

கவியரசர் கண்ணதாசன் தன் அ​வையில்

கவிஞனாக ​வேண்டு​மென்​றே அவ்வி​றைவன்

இத்தினத்தில் உன்​னைத் தன்​னோடு

இ​ணைத்துக் ​கொண்டான்? ​சொல்லய்யா

 

உன் பாதம் தன்னில் இன்று இப்​பொழுதில்

என் சிரம் பதித்து வணங்குகி​றேன்

நான் வாழும் காலம் மட்டும் எழுத்துக்கு

உந்தன் ஆசி ​வேண்டி வணங்குகி​றேன்

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம்

  1. தமிழ்த் தாயின் மணிமகுடத்தில் நிரந்திரமாய் அமர்ந்திருக்கும் கவியரசு கண்ணதாசன் அவர்களை நாம் அனைவரும் நன்றியுடன் நினைவு கொள்வோம்.
    கவிதைக்கு நன்றி ஐயா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *